Tuesday 29 September 2009

கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..!















வானம் தரையையும் தரை வானத்தையும் பார்த்து கொண்டிருந்தன.அனைத்து இடத்திலும் மௌனத்தின் இசை கேட்டுக் கொண்டிருந்தது.அந்த இடத்தில் வலியுடன் கூடிய அமைதி அப்பிக்கொண்டிருந்தது.ஒரு தனி மனிதனின் மரணத்தின் போது வலி ஒட்டி கொண்டிருக்கும்,ஒரு இனமே மரண படுக்கையில் இருக்கும் போது ஏற்படும் வலி அமைதியில் நிரம்பிக்கடந்தது.அழுவதற்கு யாரவது இருந்தால் அழுகலாம்,யாருமே உயிருடன் இல்லை.அமைதி மட்டுமே மௌன சாட்சியாய் இருந்தது.அமைதி அமைதி இல்லாமல் மௌனமாய் அழுது கொண்டிருந்தது.இது தான் மயான அமைதியோ?மழையும் அழ தொடங்கியது.
ஆம் இது 2011 , காலன் பேசுகிறேன்! .ஒரு இனமே அழிந்ததால் அவர்கள் சார்பாக பேசுகிறேன்.சகோதரிகள் கற்பழிக்க பட்டார்கள் .குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டார்கள்.முள் வேலிகள் மயானம் ஆகின.2011 ஜூன் 23 முள் வேலிக்குள் அனைத்து தமிழர்களும் கொல்லப்பட்டனர்.முள் வேலிக்குள் முழுவதும் பிண வாடைகள்.இறந்து கிடந்த பெண் பிணங்களை புணர்ந்தான் ராணுவ கோழை(வீரன்). யாவரும் இறந்து விட்டனர்.தமிழன் என்று சொல்லிக் கொள்ள கொள்ள ஒருவன் இல்லை.
இலங்கை ராணுவ அதிகாரிகள் மூவர் மற்றும் அதிபர் பிணங்களை பார்வை இட்டனர்."அனைவரும் இறந்து விட்டனர் தானே" அதிபர்.
"ஆம்" அதிகாரி தோரணையுடன்.
கண் மூடி இருந்த திலீபன் கண் முழித்து பார்த்தான்.பிண குவியலாக சகோதர சகோதரிகள்.அவன் அப்பா வீரசேகரன் மாவீரன் திலீபன் பெயரை மகனுக்கு வைத்தார்.தாயார் யாழினி கற்பழிக்கப்பட்டு இறந்தார்.அக்காவின் பெயர் மதிவதனி,அந்த பெயருக்காகவே நான்கு பேர் புணர்ந்து கொன்றனர்..தம்பி பிரபாகரன் அவனும் படுகொலை செய்யப்பட்டான்.அனைவரையும் கொல்லும் போதுஅவன் கழிவறைக்குள் சென்றதால் தப்பித்தான்.அவன் கண்மூடி படுத்துக்கொண்டிருந்தான்.
அவன் பக்கத்தில் சென்ற அதிகாரியின் துப்பாக்கி அவன் பிடுங்குவதற்கு தோதாக இருந்தது.கண் இமைக்கும் நேரத்தில் அதை பிடுங்கி அதிபர் மற்றும் மூன்று அதிகாரிகளை சுட்டான் கடைசி தமிழன்.
காலன் உறைந்து போய் பார்த்து கொண்டிருந்தது.கடைசி தமிழன் வேலியில் இருந்து வெளியே வந்தான்.அவன் கண்ணுக்குள் உக்கரம்.
அவன் காலடியில் வீதிகள் மண்டி இட்டு வீர வணக்கம் சொன்னது.இடிகள் முழக்கம் இட்டு கொண்டிருந்தது.மழை அவன் மேல் பூக்கள் தூவிக்கொண்டிருந்தது.கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..........முடிந்தால் மோதிப் பாருங்கள்.

Friday 25 September 2009

துர்கனவு

"அண்ணாதுரை அப்பா மலம் அல்லரப்ப மூச்சு முட்டி போய்ட்டாரு டா"

ஓடி வந்து சொன்னாள் எதிர் வீட்டு ஆயா.என் அப்பனின் பெயர் மதியழகன்,மலம் அள்ளுபவர், திராவிட கொள்கைகள் உடையவர்.


அதனால் என் பெயர் அண்ணாதுரை என்றும், அக்காவின் பெயர் கண்ணகி என்று வைத்தார்,ஆளும் கட்சிகாரர் .

அம்மாவின் இறந்த நாள் எனக்கு பிறந்த நாள். நான் ஒன்பதாவது படிக்கிறேன், என் அக்கா +2.

அப்பா ஒருவரே சம்பாதிப்பவர் ."பொணத்த பத்தி கவலைப்படாத, என் கையில காசு இருக்கு டா" என்றான் ஏரியா வட்ட செயலாளர்.

பொணத்தை எரித்து விட்டு வரும் போதே என் அக்காவை படுக்கைக்கு அழைத்தான்."காசு நிறைய தரேன் பாப்பா" என்றான்.

என் அக்காவும் கதறினாள்."இல்லை என்றால் நாளைக்கே துட்ட வை" என்றான்.பொணத்தை வைத்து அரசியல் பண்ணும் பொணம் தின்னி அவன் ஒரு சுன்......................! என் அக்காவும் அவன் காமத்திற்கு பலி ஆனாள்.

பள்ளி சென்றேன்,எனக்கும் ஒருவனுக்கும் பிரச்சனை ஏற்பட அவன் "உங்க அக்கா தேவடியா தான டா".......என்று சொல்ல அவன் மண்டையை உடைத்து, இனி வீட்டில் இருக்க கூடாது என்று கிளம்பினேன்.

பசித்தது பசிக்கும் போது பகுத்தறிவாவது மயிராவது....பகுத்தறிவு பேசியவன் எனக்கு சோறு போடவில்லை,அவன் தமிழ் நாட்டின் முதல்வன், அவர் மகன்கள் அமைச்சர்கள்.


அவர் பொண்ணு MP,என் அக்கா தேவடியா....கதறினேன் அழுதேன்...யாரோ கடபாறையை நெஞ்சில் குத்தியது போல வலித்தது . பாவம் என் அக்கா அவளை விட்டுவிட்டு வந்திருக்க கூடாது.


இந்த சமுதாயம் என் மேல் காறி உமிழ்ந்தது.எனக்கு சோறு போட்டது ஒரு
purse,பகுத்தறிவல்ல.


பிச்சை எடுத்தேன், T nagar madley subway நான் படுத்து கொண்டிருக்கும் இடம்.


ஒரு பிச்சை காரன் என் பக்கத்தில் படுத்தான்

எனக்கு கூசியது .அவன் காமத்திற்கு

வடிகால் ஆனேன்.நாங்கள் எல்லாம் அழுகி

போனவர்கள்.


மறு நாள் காலையில் ahobali madam பள்ளியில் abdul kalaam பேசி கொண்டிருந்தது கேட்டது.

"கனவு காணுங்கள்" கூட்டத்தில் கர ஒலி "எனக்கு வாழ்கையே கனவாகி விட்டது.அவர் கூட உயர் தர பள்ளிக்கு செல்கிறார் ,நான் படித்த காசிமேடு பள்ளிக்கு வந்ததில்லை.

அவர் car என்னை கடந்து போனது "கனவு கூட உயர் ஜாதி குழந்தைகளுக்கே சொந்தமா".

பக்கத்தில் சிலர் வேதம் சொல்லி கொண்டிருந்தனர். யார் எப்படி போனாலும் நான் வேதம் சொல்வேன்???

அந்தப் பக்கம் கட்சி மாநாடு "கடவுள் இருக்கிறாரா?" என்று speaker அலறிகொண்டிருந்தது முதலில் மனிதன்
இருக்கிறானா ....?

Wednesday 23 September 2009

இதயம் முரளி போல ஒரு காதல் கதை


என் வீட்டில் எனக்கு பிடித்த இடம் மாடி.என் எதிர் வீட்டில் இருக்கும் பூங்குழலி,இரவு பத்து மணி வரை படித்து கொண்டிருப்பாள் அவள் வீட்டு மாடியில்.நான் அவளை படித்துக்கொண்டிருப்பேன்.

என் பெயர்.....கதாநயகன் என்றால் பெயரை சொல்லி தான் ஆக வேண்டுமா ? எத்தனயோ பூங்குழளிகளை காதல் பண்ணி சொல்லாமல் காதலித்து கொண்டு இருக்கும் எதிர் வீட்டு பையன்களுக்குள் நானும் ஒருவன்.

ஒரு நாள் என் உயிர் நண்பனிடம் "நான் முக்கியமா ஒண்ணு சொல்லணும் டா goverment girls college கிட்ட வந்திடு"."அங்க தான் டா என் ஆளும் படிக்கறா என்ன டா love தானே சொல்லு டா மாப்ள" புன்னகைத்தேன்.

நான்கு மணி பெண்கள் கல்லூரி கூட்டம் கூட்டமாய் வெளியேறினர்.என்னை போல நண்பர்களிடம் காதலியை அறிமுகம் படுத்த டி கடை முன்பாக நின்று கொண்டு இருந்தனர்.

"மாப்ள அவ தான் டா என் ஆளு" என்று காட்டி குண்டை போட்டான் என் நண்பன்.

பொறுங்கள் என்னடா சினிமா தனமாக உள்ளதே.

"இதை எல்லாம் காதல் தேசத்திலேயே பார்த்தாச்சு என்ன முக்கோண காதலா?"

நீங்கள் சொல்வது கேட்கிறது.....!

நான் சொல்லா காதலை என் நண்பனுக்காக விட்டு கொடுத்தேன் அன்று இரவு beer அடித்தேன்.

"உன் ஆள் யாருடா?"

"அவள் வரலை டா".

" நீ காட்டின பொண்ணு அது எங்க வீட்டு எதிர் வீட்டு பொண்ணு ஆச்சே" நான் சொன்னேன்.

"உங்க வீட்டு மாடிக்கு வரப்ப தான் டா பாத்தேன்" .

நான் அவளை மட்டும் பார்த்து கொண்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை.

அவன் சொன்னது என் மனதிற்குள் cinema editing போல் வந்து கொண்டிருந்தது.

தினமும் மாடிக்கு போவதால் அவள் என் friend ஆகிவிட்டாள்.

ஒரு நாள் ரோட்டில் அழுது கொண்டிருந்தாள் .

"என்ன ஆச்சு?"

"MLA பையன் என்னை கிண்டல் செஞ்சுட்டான்"

"சரி வா எவனு காட்டு" என் நண்பனின் காதலியாச்சே ,அந்த பையன் இவள் உறவு வேற.

அவனை போய் பளாரென் அறைந்தேன்.அவன் கட்சிகாரர்கள் என்னை மிரட்டினர்.என் தந்தை அந்தக்கட்சியில் இருப்பதால் தப்பித்தேன்.

"சண்டியர் தனம் பண்றியோ?" என் தந்தை.நான் முறைப்பையே பதிலாக சொன்னேன் கண்களால்.

அவள் மாடியில் எனக்கு கல்யாண பத்திரிகையை தந்தாள்
என் நண்பனும் என்னை போலவே சொல்லாமல் காதலித்து இருக்கிறான்.....நானாவது
சொல்லி இருப்பேனே ? கல்யாணத்திற்கு அவனிடம் சொல்லாமல் சென்றேன்.

கல்யாண மண்டபத்தில் speakar "ஆனந்தம் ஆனந்தம் பாடும் " பாடல் பாடிக்கொண்டிருந்தது. நான் சாப்பாடு போட்டு கொண்டு இருந்தேன். நான் ரசத்தை ஊற்றி கொண்டிருக்க, என் நண்பன் பாயாசம் ஊற்றி கொண்டிருந்தான்.....!

இருவரும் பக்கத்தில் பக்கத்தில் பரிமாறி கொண்டிருந்தோம். நாங்கள் பரிமாறி கொண்டிருந்தது நான் அந்த பெண்ணிற்க்காக அடித்த MLA மகனுக்கு. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தோம்.



அடுத்த scene wine shop .....பீர் பாட்டிலும் சோகத்தை sorry எங்கள் சோகத்தை பீர் பாட்டிலிடம் எங்கள் வாயால் சொன்னோம் .

"மாப்ள sorry உனைய அந்த பிள்ளைக்காக அடிச்சதுக்கு" நான் MLA மகனிடம்.

"பரவைல டா..."

"நண்பா முதல்ல அந்த பிள்ளைய பார்த்தது நானு" நான்....................

"அது எல்லாம் infactuation மச்சி................."

ஒரு பீர்ற நம்பற அளவு கூட figura நம்ப முடியல டா"

எங்கள் உளறல்கள் ஒரு novel போல வரும் ...........அதனால் so

"டேய் கேளு டா"

"I LOVE HER" என் நண்பன் "நானும் தான்" MLA மகன் ............

"இதுக்கு தானே அடிச்சேன்" நான்

மூவரும் half boil சாபிட்டு ஒரு "full boil" வெளியே எடுத்து .............

வீட்டுக்கு கிளம்பினோம்.........

இப்பொழுது எல்லாம் எதிர் வீட்டு மாடியை பார்ப்பதே இல்லை ....................

பக்கத்துக்கு வீட்டில் புது பெண் வந்திருக்கிறாள் பெயர் கயல்விழி .............

இப்பொழுது எல்லாம் என் நண்பர்களை வீட்டிற்குள் சேர்ப்பதில்லை ............

Monday 21 September 2009

தொரட்டி கண்ணு கருவாச்சியே




மழை நாட்களில் குடை கொண்டு செல்லாமல் இருப்பது கூட வசதி தான் அவள் தாவணி குடைக்குள் ஒளிந்து கொண்டு கடை ஓரமாய் உரசி கொண்டு நின்றோம்."ஏய் அழகி கருப்பா இருந்தாலும் கலையா தாண்டி இருக்க???" "போடா கருவாயா". என் பெயர் பாஸ்கர சேதுபதி என் அம்மாவின் அண்ணன் மகள் முத்தழகி நான் பனிரெண்டாம் வகுப்பு அவள் என்னை விட ஒரு வயது இளையவள் என் முறை பெண் என் மாமன் மகள்.
"ஏய் கருவாச்சி ஒரே ஒரு கிஸ்""போடாநாயே கிட்ட வராத செருப்பு" முத்தமிட முயற்சி செய்த போது கிழே படுத்திருந்த எங்க வீட்டு கிழவி மேல் விழுந்தேன்.......கனவு .......! "பொசங்கேட்ட பயலே" கிழவி அலறினாள் அப்பொழுது இரவு 12 .
"தொரட்டி கண்ணு கருவாச்சியே" பாடல் என் காதில் மட்டும் கேட்டது..."முத்தழகி முத்தழகி" என்று யாருக்குமே கேட்கமால் பருத்தி வீரன் கார்த்தி போல மனதிற்குள் சொல்லி கொண்டேன்.முத்தழகி என் அம்மாவின் அண்ணன் மகள் முறை இருக்கிறது நாளைக்கு எப்படியும் காதலை சொல்ல வேண்டும் பாஸ்கரா...!
மினி பஸ் நான் என் காதலியை பார்க்கும் இடம் இருவரும் ஒன்றாக பள்ளி செல்லும்
வாகனம் எனக்கு அது தேவதை பயணிக்கும் தேர்.நான் பேருந்திற்குள் தொங்கி கொண்டு வெளியில் இருந்து அவளை பார்த்து கொண்டே இருப்பேன்.அவளும் அடிக்கடி பார்ப்பாள். S A rajkumar பாடல்களை இசைத்து கொண்டிருக்கும் மினி பஸ். அன்று "காதல் என்ன கண்ணா மூச்சி ஆட்டமா" அவள் வருவாளா படத்தில் இருந்து பாடி கொண்டிருந்தது.நான் அஜித் அவள் சிம்ரன் போல் கற்பனை செய்து கொண்டேன்.
கிழே இறங்கியவுடம் அவள் அருகில் வந்தால் நான் சொல்வதற்கு முன்னாலேயே அவள் "நான் முக்கியமா ஒண்ணு சொல்லணும் கருவாயா" என்றால்.என் மனதிற்குள் பட்டாம் பூச்சி பறந்தது....இருந்தாலும் கெத்தாக "சொல்லுடி கருவாச்சி " என்றேன்."என்னைய பரிசம் போட தாய் மாமா வந்துட்டாரு டா அவர் மகனுக்கு பரிசம் போட வந்தாக அம்மாச்சி சொல்ல வேணாம்னு சொல்லிச்சு நீங்களும் என்னய்யா கேட்டுருவிகளாம் தப்பா நினைக்காத நீ என் நண்பன் உன்ட சொல்லாம இருக்க முடியல டா"
கல்யாணத்துக்கு அஜித் மன்றம் சார்பா flex வைக்கணும் கருவாயா தேவர் உட்கார்ந்திருந்து அஜித் பின்னால் நிற்பதை போன்ற ஸ்டில் வைப்பாயே அந்த flex வச்சு
வாழ்த்து சொல்லணும் டா கருவாபயலே......என்று சொல்லிவிட்டு போனால்.
போகும் போது சும்மா போனாளா திரும்பி ஒரு பார்வை பார்த்தால் தூரத்தில்
எனக்கு பிடித்த "கண்கள் இரண்டால்" பாட்டு ஓடி கொண்டிருந்தது என்னால் ரசிக்க முடியவில்லை....

Saturday 19 September 2009

மானம் கெட்ட தமிழன்





முள் வேளிக்குள் தமிழர்கள் ஆம் அங்கே முள் வேலியில் இருக்க நாம் cricket பார்த்து கொண்டிருக்கிறோம் போரின் உச்சகட்டத்தில் நாம் IPL பார்த்து கொண்டிருந்தோம் சகா.
DHONI LAKSHMIRAIYAI ஓத்.....என்ன ஊம்ப்---- என்ன நமக்கு தேவையா ஊடகங்கள் விபச்சாரம் செய்கின்றன.கலைஞர் கதை வசனம் எழுதி கொண்டிருக்கிறார் .அம்மா கோடா நாட்டில்.
CAPTAIN பெரிய பிரச்சனைகளை விட்டு விட்டு, barry card அவருடைய மண்டபம் பிரச்சனைகளை
பேசுவார்.

RAHUL GANDHIKU சால்வை போட்டு வரவேற்றோம்.படம் ஓட வேண்டும் என்பதற்காக "அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்னு" வசனம் பேசிவிட்டு. ராகுலின்
ஸு............நக்குவார் நம் தளபதி , அவர் படங்களை நாம் வெள்ளி விழா காண வைப்போம்
நான் மானமுள்ள தமிழன் ...............எனக்கு ஆயிரம் வேலை உள்ளது மானாட மயிலாடவில்
மார்பாட்டத்தை காண வேண்டும் கலைஞர் வைத்த தலைப்பு ஆகிற்றே .

"தமிழ் என்பது தலைப்பில் மட்டுமே உள்ளது"

நானும் கையாலாகத தமிழனே Che guvera வை போல் போட்டு தள்ளி விட்டு போகாமல்
பதிவு போட்டு கொண்டிருக்கிறேன்
லட்ச கணக்கான குழந்தைகள் போரில் இறந்தால் என்ன......அவள் வேறு நாடு, இலங்கை அவள் கற்பு போனால் என்ன எனக்கு! கலைஞர் இலவச தொலைகாட்சி வேண்டும்!.ஏய் தமிழா நீ தமிழன் என்பதை மறந்து விட்டாய்,
மனிதன் என்பதயையும் மறந்து கொண்டிருகிறாய்.
ஒரு உயிர் இறந்ததென்றால் நம்மால் மறுபடியும் கொண்டு வர முடியாது ஆனால் இழவு வீட்டில் பாட்டு கேப்போமா என்ன?
நம்மால் che guvera prabakaran மாதிரி போர் செய்ய முடியவில்லை என்றாலும் உன்னால்
என் இலங்கை தம்பிக்காக கற்பிழந்த தங்கைக்காக cricketai........பார்க்காமல் இருக்க முடியுமா...?

Friday 18 September 2009

petersburg நகரமும் மேற்கு மாம்பலமும்




என் இடுக்கைகளை படித்து யாரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டாம்.தனிமையை பகிர்ந்து கொள்ள முடியாதவர்களே இலக்கியவாதி ஆகிறார்கள்.என் மனதிற்கு ஏற்படும் வலிகளுக்கு வடிகாலாக இடுக்கைகளை பதிவு செய்கிறேன் வலி உள்ளவனே நல்ல படைப்பாளி உலக இலக்கியம் சொல்கிறது.


Fydor Dostovesky எழுதிய வெண்ணிற இரவுகள் ஒருவனின் தனிமையை தரிசனம் செய்கிறது. Maxim Gorky தாய் புதினம் சொல்வதும் வலி தான்.S.ராமகிருஷ்ணன் எழுதிய
உறுபசி ஒருவனின் மரணத்தை சொல்கிறது.உலக இலக்கியங்கள் வலியையும் அதனால் ஏற்படும் துயரத்தையும் தரிசனம் செய்கின்றன.


மனதுக்குள் வலி ஏற்படும் பொழுது மனிதனுக்கு கிடைக்கும் அன்பு அரவணைப்பில் தான் வாழ்கையின் ருசி இருக்கிறது.

உலக இலக்கியங்கள் யாவும் அழிவின் மௌன சாட்சியாக இருகின்றன.மனிதனின் வாழ்க்கை புல்லின் மேல் இருக்கும் பனி துளி போல உலர்ந்து கிடக்கின்றது.மனித படைப்பு மெழுகு வர்த்தி போல படைக்கும் போதே அதன் மரணம் எழுத படுகிறது.
என்னுடைய தனிமையை பதிவு செய்கிறேன்.


எனக்கும் Dostovesky நாயகனுக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு petersburg நகரம் எனக்கு சென்னை மேற்கு மாம்பலம்.என்னுடைய தூங்கா வெண்ணிற இரவுகளை பதிவு செய்கிறேன்.என்னுடைய தூங்காவெண்ணிற இரவுகள் தொடரும்.தூங்கதவனின் இரவும் துயரமும் நீளமானது.எனக்கு வலிஅதிகமானதால் நானும் படைப்பாளி