Wednesday 29 December 2010

நித்தியிடம் காட்டிய எதிர்ப்பை?

நித்தி தனது முப்பத்தி நாலாவது பிறந்தநாளை கொண்டாட திருவண்ணாமலை சென்று இருக்கிறார் . அங்கு அவருக்கு பலத்த வரவேற்ப்பு காத்துக்கிடந்தது . ‘திரும்பிப்போ திரும்பிப்போ.. நித்தியானந்தனே திரும்பிப்போ’ என்று என்று கோஷங்கள் பறந்தன . கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சரி ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்கட்டும் , இந்த ஆர்ப்பாட்டங்களை ஏன் பார்ப்பன ஜெயந்திரனிடம் காட்டவில்லை ? கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் தான் புகவேண்டும் என்பதை எதிர்த்து ஏன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை ? நித்தியிடம் நடத்தியதை அங்கே நடத்த முடியுமா ? காவி உடை என்றாலும் பார்ப்பனர்கள் போடும் காவி உடை வேறு அல்லவா ?

சரி பொதுபுத்தி எப்படி தான் உள்ளது நித்தி விடயத்தை கவனம் செலுத்திய ஊடகம் ஏன் ஜெயேந்திரன் விடயத்தை மறந்தது . "அகம் பிரம்மாஸ்மி " என்று அத்வைத்தம் சொல்கிறது " நானே கடவுள் " , மனதும் கடவுளும் ஒன்றே வெளியில் எதுவும் இல்லை எல்லாம் மாயை என்று அத்வைத்தம் சொல்கிறது . அதை ஏற்றுக்கொண்டு ஜெயேந்திரன் கொலை செய்யவில்லை , எல்லாமே மாயை என்பது போல் , ஊடகங்கள் மறக்கின்றனவா ? இல்லை அத்வைத்ததை ஏற்றுக்கொண்டு போராட்டக்காரர்களுக்கு ஜெயேந்திரன் செய்த கொலை மறந்துவிட்டதா ? ஆர்ப்பாட்டங்களிலும் காவிக்கறை படித்து இருக்கிறதா ?

Monday 27 December 2010

தினமலர் நடு(தெருவிற்கு) நிலை

2010 டாப் டென் நிகழ்ச்சிகளை தினமலர் போட்டுள்ளது , அதில் தண்டகாரண்யா நிகழ்வும் அடக்கம் .
மக்கள் போராட்டத்தை தீவிரவாத செயல்களாகவும் , அதனால் நாடே அதிர்ச்சி அடைந்ததாகவும்
அச்செய்தி சித்தரிக்கிறது .மக்கள் போராட்டம் தினமலருக்கும் மற்ற ஊடகங்களுக்கும் தீவிரவாத செயல்களாய் தெரிகிறது . பொது புத்தியில் மக்கள் போராட்டத்தை தீவிரவாத செயல்களாய் ஆணி அடிப்பதில் அதிகார வர்க்கத்திற்கு சொம்பு தூக்குகிறது தினமலர் . அங்கு ராணுவமும் , போலிசும் செய்யும் நாசவேலைகளை தட்டிக்கேட்க துப்பு இல்லை , அங்கு வாழ்வியல் ஆதாரத்தை கெடுக்கும் வேதாந்தா நிறுவனத்தை தட்டிக்கேட்க துப்பு இல்லை , அதற்க்கு எதிராய் மக்கள் போராடினால் தீவிரவாதாமா ?

அந்த டாப் டென் செய்திகளில் அலைக்கற்று ஊழலும் அடக்கம் . ஊடகங்கள் ராஜா தான் இதை செய்தார் என்று கொக்கரிக்கின்றன ? தினமலர் போன்றவர்களுக்கு அந்த ஊழலுக்கு காரணம் டாட்டா என்பது தெரியாது . ஒரு நாட்டின் அமைச்சரை ஒரு தரகு முதலாளி முடிவு செய்கிறார் , அதை கிடப்பில் போட்டுவிட்டு , அமைச்சரை மட்டும் கட்டம் கட்டுவதில் ஊடகங்கள் கவனம் செலுத்துவது ஏன்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் தினமலரின் நிலைப்பாடு என்ன ? இங்கு வேதாந்தா முதாலாளி காப்பாற்றப்படவேண்டும் அதனால் மக்கள் தீவிரவாதிகள் தண்டகாரண்யாவில் . அதே போல டாட்டா காப்பாற்றப்படவேண்டும் என்பதை போலவே இவர்கள் செய்திகள் உள்ளனர் . மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு போகும் நிலை தான் இந்த தினமலரின் நடுநிலை .

Tuesday 21 December 2010

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா

இலக்கியம் என்றால் ஏதோ விட்டத்தை பார்த்து கொண்டு தோன்றுவதை எல்லாம் எழுதுவது என்று வெகு காலம் நினைத்துக்கொண்டிருந்தேன் .
நான் படித்த தமிழ் இலக்கியம் அனைத்தும் தனிமை , வெறுமை , சமூகத்தால் பாதிக்கப்படும் தனிமனித வாழ்க்கை போன்றவற்றை பிரதிபலித்தன .
மனிதனை தனித்தனியாய் பிரிக்கும் வேலையை அவை செவ்வென செய்தன . இலக்கியம் என்றால் இயலாமையை எழுதுவது என்று நினைத்துக்கொண்டேன் .
என் வாசிப்பு எஸ் ரா இருந்து தொடங்கியது "துணை எழுத்து" வாசித்து பிரமித்து போனேன் , அப்புறம் கதா விலாசம் , விழித்திருப்பவனின் இரவு
என்று வாசிப்பு தொடர்ந்தது , இவை எல்லாம் என்னை நகரசெய்யாமல் பழமையை நோக்கி பின்னுக்கு அழைத்தன , ஒரு எழுத்தாளன் என்றால் சமூகத்தை வெளியில்
இருந்து பார்த்து இயலாமையை பதிவு செய்ய வேண்டும் போல என்று நினைத்துக்கொண்டேன் , அப்பொழுது "நினைவுநதி கனவு குட்டை " படிக்க நேர்ந்தது,
எனக்குள் இருக்கும் அற்பவாத சிந்தனை எல்லாவற்றையும் தவிடுபொடி ஆக்கியது . இலக்கியம் என்பது மக்களுக்கானது மக்களை பிரதிபலிக்க வேண்டும் ,
மக்கள் அந்த புத்தகம் படித்து ஒரு அடியாவது நகர வேண்டும் என்று என் மனதில் ஆணியாய் படிந்தது . அது இந்த புரிதல் அனைவருக்கும் செல்லவேண்டும்
என்று நினைக்கிறேன் . வினவு தளம் இத்தகைய மக்களுக்கான இலக்கியத்தை தருகிறது . அவர்களின் புத்தக வெளியீடு வரும் ஞாயிறு அன்று நடக்கிறது ,

புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிமனிதனுடைய வலிகளை , எழுத்தாளனது வலிகளை பதிவு செய்யும் இயல்பாய் . ஆணால் மனிதன் என்ற ஒட்டுமொத்த சமூகமாய்
பார்க்கும் இலக்கியம் நமக்கு அவசியம் உதாரணமாய் "தாய்" புதினம் , அப்படிப்பட்ட மாற்றம் தேவை என்று நினைக்கிறேன் .



கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!




கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.

1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்
விலை ரூ. 40.00
2. ஈராக்: வரலாறும் அரசியலும்
- பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 15.00
3. அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்
- வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
விலை ரூ. 10.00
4. விடுதலைப் போரின் வீர மரபு
- புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
விலை ரூ. 65
5. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
- உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
விலை ரூ. 55.00
6. நினைவின் குட்டை கனவு நதி
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
-சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும்
நூல்,புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 70.00
7. மீண்டும் தொழிலாளி வர்க்கம்

- வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 80.00
8.
நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

- வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 110.00

_____________________________________________________

நூல் வெளியீட்டு விழா
நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!


(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

___________________________________________________

Sunday 19 December 2010

ரொம்ப நல்லவன்

"ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது. ஊழல் அபாயத்தை ஒழிப்பதில், கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" இந்த பொன்னான வார்த்தைகளை உதிர்த்தவர் வேறு யாரும் அல்ல , எங்கு திரும்பினாலும் ஊழல்
என்ற செய்து எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கும்படி செய்த காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா . ஊழல் மற்றும் முறைகேடான நடவடிக்கைகள் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை. ஊழலை ஒழிப்பதில் கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி துணைபோகாது. ஊழல்வாதிகளையும் ஆதரிக்காது. அதாவது அன்னை என்ன சொல்கிறார் என்றால் , காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு துணை போகாது , ராஜா சுரேஷ் கல்மாடி போன்றவர்களுக்கு துணை போவதால் அவர்கள் ஊழல் செய்தவர்கள் அல்ல காங்கிரஸ் தான் ஊழலுக்கு துணை போகதே .

அரசுத் துறைகளில் நடைபெறும் ஒப்பந்தங்கள், கொள்முதல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக முறையான சட்டத்தையும் இயற்ற வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அதனால் தான் அணுஆயுத ஓப்பந்தம் வெளிப்படையாக நடந்தாதாம் . காங்கிரஸ்
போல வெளிப்படையாக இருக்க முடியுமா ?

பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் சந்தேகம் கொள்ள முடியாது. எனவே பிரதமரை பா.ஜ., விமர்சிப்பது கேவலமான செயல். பிரதமருக்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் காங்கிரஸ் கட்சி அளிக்கும். ஊழல் குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயேகூட, காங்கிரஸ் தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அசோக் சவான் உட்பட பலரும் ராஜினாமா செய்தனர். பிக்பாக்கெட் அடிப்பவன் கூட ஜெயிலில் தான் போடுவார்கள் , ஆனால் ராஜா , சவான் போன்றவர்கள் ராஜினாமவே செய்துவிட்டார்கள் இது அல்லவோ நேர்மை .அதனால் பிரதமர் மன்மோகன் சிங்க் மிகவும் நல்லவர் .

Tuesday 14 December 2010

நீயா நானா

இரவு ஒன்பது
விஜய்யில் "நீயா நானா"
"அந்த காலத்து காதலா , இந்த காலத்து காதலா "
தலைப்பு .
"84 விழுக்காடு மக்களின் ஒரு நாள் கூலி 20 ருபாய் "
"30 கோடி மக்கள் இரவு உணவில்லாமல் தூங்குகிறார்கள் ,அது எல்லாம் பிரச்சனை அல்ல இது தான் பிரச்சனையா என்றேன் ? "
"இந்த காதல் உன்னையும் என்னையும் போல நடுத்தரவர்க்கம்
கொள்ளும் போலி மயக்கம் , இதை எல்லாம் காதல் என்று சொல்லாதே "
"இந்த காலத்திலும் உண்மையான மனதை படிக்கும் காதல் இருக்கு" என்றான் நண்பன் .
"மனதை பார்க்கும் காதல் என்றால் , பிடித்திருக்கிறது என்பதற்காய் உன்னால் சித்தாள் வேலை செய்யும்
பெண்ணை காதலிக்க முடியுமா ?" என்று என் நண்பர் ஒருமுறை என்னிடம் கேட்டதை கேட்டேன்
"இல்லை என்றான் "
"அப்புறம் என்ன மயிறு காதல் " என்றேன்
"கல்யாணமோ காதலோ சொர்க்கத்தில் நிச்சயிக்க படவில்லை வர்கத்தில் நிச்சயிக்க படுகிறது " என்றேன் .
"நீயா நானா " கோபிநாத் பொய்யான விடயத்தை உண்மையை போல
அழகாய் பேசிக்கொண்டிருந்தார் .

Monday 13 December 2010

176000 கோடி முக்கியம் அல்ல ,டாடாவின் புகழே முக்கியம் நீதிமன்றம்

"நீரா ராடியாவும், மற்றவர்களும் பேசிய தொலைபேசிப் பேச்சுக்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில், புகழை சீர்குலைக்கும் வகையில் அதை வெளியிடக் கூடாது " . டேப் வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு தலையிடுவதாக உள்ளது என்று டாடா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது . நீதிமன்றம் எந்த சமூகத்தின் நலனுக்காய் உள்ளது என்பது இதில் இருந்து புலப்படும் .
டேப்பில் இருப்பது டாடாவின் குடும்ப விடயமா , இல்லை குடும்பச்சண்டையா? ஒரு நாட்டின் பிரச்சனை .ஒரு நாட்டின் அமைச்சரை ஒரு முதலாளி முடிவு செய்கிறார் என்றால் எவ்வளவு நகைப்புக்கு உரியது , எவ்வளவு கேவலாமான நிலைமையில் நாம் உள்ளோம் . ஊழல் என்னும் மைய்யப்புள்ளியே இது தான் . பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது , எலும்பு துண்டுகளை முதலாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் . நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையில் 1 76000 கோடி களவாடப்பட்டதே அது பிரச்சனை அல்ல , இந்த நட்டத்தை ஈடு கட்ட விலைவாசி எல்லாம் ஏறப்போக
சாமானியன் ஒரு வேலை சோற்றுக்கே திண்டாடுகிரானே அது பிரச்சனை அல்ல . ஆனால் சம்பந்தப்பட்ட முதலாளிகள் பெயர் , புகழ் கெடக்கூடாது .

அமைச்சர் யார் , ஆட்சியில் யார் என்று தீர்மானிக்கும் முதலாளிகளுக்கு அமைச்சரோ , ஆட்சியில் இருப்பவரோ விசுவாசமாய் தான் இருக்கமுடியும் .நீதித்துறை யார் சார்பாக உள்ளது , என்பதை இந்த தீர்ப்பின் சாராம்சம் விளக்கும் . இது ஜனநாயகமா ? தரகு முதலாளிகள் நாட்டை ஆளும் 'பணநாயகம்' .

Sunday 12 December 2010

சச்சினும் நீர்த்துப்போன எதிர்ப்பும்

சச்சின் டெண்டுல்கர் ஒரு மது அருந்தும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருப்பது ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு ஒரு தியாக நிகழ்வாய் சித்தரிக்கப்பட்டது. இந்த விளம்பரகளில் நடிக்காமல் போனதால் அவருக்கு 20 கோடி நட்டமாம் , என்று அவர் தியாக செயலை பார்த்து ஊடகங்கள் மூக்கின் மேல் விரல் வைக்கின்றன . அவர் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் வருகிறார் அதனால் அவரை எதிர்க்கிறேன் (பொதுவுடைமை போல இருக்கும் கருத்து ) ஆனால் அவர் விளையாட்டிற்கு ரசிகன் , பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவர் (பொதுவுடைமை நீர்த்து போகும் இடம்) என்கிறார்கள் . அதாவது அவர் நல்லவர் தான் ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிப்பதை மட்டும் நிறுத்திவிட்டால் ,அவர் பாரட்டுக்குறியவரே என்று எதிர்ப்பவர்கள் கூட சச்சின் ரசிகனாய் இருக்கிறார்கள் . இது ஏதோ கமல் அன்பே சிவத்தில் சொல்வதை போல , முதலாளித்துவ கோட்பாடு உள்ளவர்களை அன்பால் வெல்ல முடியும் என்ற சிந்தனை போல உள்ளது .

எதிர்ப்பை ஒரு விடயத்தில் மட்டும் காட்டிவிட்டு , மற்றபடி எல்லாம் சரி தான் என்று இவர்களை விட்டு விட முடியுமா . இவர் பெப்சி விளம்பரத்தில் நடிக்கும் சமகாலத்தில் இவர் மாநிலத்தை சேர்ந்த விதர்பா விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனரே தாஜ் ஹோடேலில் குண்டு வெடித்தபொழுது நீலி கண்ணீர் வடித்த சச்சின் , லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பொழுது , ஒரு பக்கம் மட்டையையும் இன்னொரு புறம் பெப்சியையும் தூக்கி வைத்துக்கொண்டிருந்தார் . சச்சின் என்ன அரசியல் வாதியா ? அவர் ஒரு விளையாட்டு வீரர் நல்லவர் , அவர் எல்லாவற்றிக்கும் குரல் கொடுக்க முடியாது என்று நீங்கள் சொல்வது கேட்க்கின்றது . சரி அந்த பெப்சி கோக் நிறுவனங்கள் நிலத்தடி நீரை சுரண்டுகிறது , கிராமங்களில் ஆலையை ஏற்ப்படுத்தி விட்டு , வேலை கொடுக்கிறோம் என்று ஏமாற்றி , நிலத்தடி நீரை சுரண்டி , விவசாயத்தையும் வாழ்வியல் ஆதாரத்தையும் கெடுக்கின்றது . அந்த பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்து மக்களை முட்டாளாக்கும் சச்சினுக்கு தேவை , போலி கண்டனம் மட்டுமா ?

ஒரு அமைச்சாராக யார் வர வேண்டும் என்று முடிவு செய்வது பன்னாட்டு முதலாளிகளும் , தரகு முதலாளிகளும் ராஜாவின் spectrum விவகாரம் சிறந்த உதாரணம் . அத்தகைய முதாலாளிகள் பக்கம் இருக்கும் சச்சினை விளையாட்டை ரசித்துவிட்டு , வெறும் விளம்பரத்தில் நடிப்பதை மட்டும் விமர்சனம் செய்யும் பக்குவம் எனக்கு இல்லை . உண்மையில் இந்த விமர்சனம் சச்சினுக்கு அல்ல , அவரை ரசிக்கும் ரசிகரின் மனநிலைக்கு .
இங்கு தேவை போலியான எதிர்ப்பு அல்ல , வெறும் போலியான எதிர்ப்பு ஒரு நீர்த்து போன மனநிலை .

Thursday 9 December 2010

ஊழல் ராஜா மட்டுமே பொறுப்பா

"ஊழல்" எங்கு பார்த்தாலும் ஊழல் , யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் " இவன் 100 கோடி அடிக்காரனு , அவனுக்கு வோட்டு போட்டா அவன் ஆயிரம் கோடி அடிக்கிறான் " என்னும் வார்த்தையை யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பார்கள் இந்த நொடியில் . நானும் கூட பொது புத்தியில் அப்படி தான் புரிந்து கொண்டு இருந்தேன் .ஊழலுக்கு காரணம் தனிநபர் , அவர் ஊழல் செய்கிறார் என்கிற நோக்கில் என் புரிதல்
இருந்தது . உதாரணமாய் இப்பொழுது அலைகற்று ஊழலை எடுத்துக்கொள்ளுங்கள் , ஏதோ ராஜா என்ற தனிநபர் மட்டும் ஊழல் செய்ததை போல சித்திரம் பொதுபுத்தியில் உள்ளது . "தவறு நிரூபிக்கப்பட்டால் ராஜா தண்டிக்கப்படுவார் " என்று கருணாநிதி சொல்கிறார் . இயல்பாகவே இந்த ஊழலுக்கு தனிநபர் மட்டுமே காரணம் போல சித்தரிக்கிறார் , ஊடகங்களும் அதையே சித்தரிக்கின்றன . ஊழலுக்கு தனிநபர் ஒழுக்கம் மட்டுமே காரணமா ???

பண்ணா , முக்தா என்ற எண்ணெய் 2000 கோடி மதிப்புள்ள எண்ணெய் வயல்களை ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் 12 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது . பொதுத்துறையை தனியாரிடமும் தரகு முதலாளிகளிடமும் விற்கும் போக்கு உள்ளது . இதை போன்ற ஊழலே ராஜா விடயத்தில் நடந்து இருந்தது . முதலாளிகள் முடிவு செய்கிறார்கள் யாரை அமைச்சராய் ஆக்க வேண்டுமென்று . பொது சொத்துக்கள் தனியார் வசம் போகின்றன , வளங்கள் தனியார் வசம் போகின்றன , தண்ணீர் தனியார்மயம் ஒரு சிறந்த உதாரணம் . இந்திய நாட்டை
யார் ஆள்கிறார்கள் ??? ஒரு அமைச்சரின் தலைவிதி தரகு முதாலளியிடமும் , பன்னாட்டு முதலாளியிடமும் உள்ளது . அப்படி என்றால் இந்தியாவை ஆள்வது தரகு முதலாளிகளா ??? வேதாந்தா என்னும் நிறுவனதிற்க்காக அங்கு உள்ள பழங்குடியினர் விரட்டப்படுகிறார்கள் . இப்படி இருக்கும் சூழலில் ராஜா மட்டும் தான் காரணம் என்று சொல்வது முழுபுசநிக்காயை சோற்றில் மறைப்பது .


இது தனிமனித ஊழல் அல்ல , பன்னாட்டு முதலாளிக்கும் தரகுமுதலாளிக்கும் குடைபிடிக்கும் அரசாங்கம் என்னும்
எந்திரத்தில் இருந்து ஊழல் தொடங்குகிறது . இங்கு ராஜா அல்லாமல் யார் இருந்தாலும் இந்த ஊழல் நடந்தே தீரும் . இங்கு ராஜாவை விட கவனிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களை ஆட்டுவிக்கும் தரகுமுதலாளிகளே . வில்லை விட்டு விட்டு நாம் அம்புகளை மட்டும் உடைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் .

இந்த வோட்டு கட்சி அரசியலும் , மறு காலனியாக்கம் இருக்கும் வரை இந்த ஊழல் இருந்து கொண்டே இருக்கும்

Tuesday 7 December 2010

அருந்ததி ராயும் ஜெயமோகனின் அதிகார வர்க்க குரலும்

நேற்று ஜெயமோகன் தளத்தில் அருந்ததிராய் பற்றிய கட்டுரை படித்தேன் .அருந்ததிராய் ஆழமான படைப்புகள் தந்ததில்லை , இந்தியாவை சிதிலப்படுத்தும் சக்திகளே அருந்ததிராயை தூக்கி பிடிக்கின்றன என்று ஜெயமோகன் சொல்கிறார் . ஜெயமோகனை பொறுத்தவரை இந்தியாவை சிதிலப்படுத்தும் சக்திகள் யார் என்பதை அவர் கட்டுரை படிக்கும்பொழுது புரிந்தது . அதில் சில வரிகள்

"சென்ற பதினைந்தாண்டுகளில் அருந்ததி ராய் மேலைநாடுகளின் பல தரப்புகளால் கொண்டாடப்படுகிறார். அவருக்கு எந்த இந்திய இலக்கியமேதைக்கும் அளிக்கப்படாத அங்கீகாரங்களும் விருதுகளும் அளிக்கப்படுகின்றன. பல்கலைகளில் அவர் பேருரைகள் ஆற்றுகிறார். இந்த பரிசுகளின் பின்புலங்கள் எல்லாமே ஆச்சரியத்துக்குரியவை. உதாரணமாக 2004ல் அருந்ததி ராய்க்கு ’சிட்னி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டது, அகிம்சையை பிரச்சாரம்செய்தமைக்காக! அவர் அப்போது நக்சலைட்டுகளையும் காஷ்மீர் ஆயுதப்போராட்டத்தையும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார்!"


அதாவது அவர் சிதிலப்படுத்தும் என்று சொல்லும் சக்திகள் நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீரில் போராடுபவர்கள் .
சரி நக்சலைட்டுகள் யாருக்காக போராடுகிறார்கள் யார் சார்பாகா நிற்கிறார்கள் , ஜெயமோகன் யார் சார்பாக நிற்கிறார் , அருந்ததிராய் யார் சார்பாக நிற்கிறார் என்பதை இலக்கிய ஆழம், நீளம் , அகலம் , உயரம் , தெரியாத மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும் . ஒரு ராணுவ வீரன் துப்பாக்கியை காண்பிக்கிறான் , ஒரு சிறுவன் கல்லை எடுத்து அவனிடம் காண்பிக்கிறான் , இது எதோ ஒரு படத்தில் வரும் காட்சி அல்ல , காஷ்மீரின் நிலை . அங்கே போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல , அங்கு உள்ள சாதாரண சாமனிய மக்கள் . அப்போரட்டதிற்க்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்மையில் அமைதியை எதிர்ப்பார்பவர்கள் .

உலகமயமாக்கல் காலனிஆதிக்கம் இவை மக்களிடம் செலுத்தும் தாக்கம் கொடூரமானது . அமைதி வேண்டுமென்றால்
கூட போராடவேண்டிய சூழல் , அப்படி போராடும் மக்களுக்கு ஆதரிக்கிறார் அருந்ததிராய், அமைதிக்கான விருது எப்படி அவரட்கு தரலாம் என்று ஜெயமோகன் கதறுகிறார் .

"அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்"

அருந்ததிராய் அதிகாரசக்திகளின் ஐந்தாம்படை என்கிறார் ஜெயமோகன் , அவரை பொறுத்தவரை தண்டகாரண்யாவில் போராடும் மக்கள் அதிகாரவர்க்கம் காஷ்மீரில் போராடும் மக்கள் அதிகாரவர்க்கம் . அவர்களை சுரண்டும் , வாழ்வியல் ஆதாரத்தை கூர்போடும் வேதந்தா நிறுவனம் , இந்திய ராணுவம் இவர்கள்
பாவப்பட்டவர்கள் . இந்தியா ஒருமைப்பாட்டை கெடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் அருந்ததி ராய் ஆதரவு அளிக்கிறாராம் . இந்திய ஒருமைப்பாடு என்பது யாதெனில் உழைக்கும் மக்களை விரட்டுவது , நாட்டை வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு விற்ப்பது , நாட்டின் சந்தை ஒரே சந்தையாக இருக்க வேண்டுமே . அதனால்
ஒருமைப்பாடான இந்தியாவை சந்தைக்காக கட்டிக்காப்பது.இந்த ஒருமைப்பாடு கெட்டுவிட்டது என்று ஜெயமோகன் சொல்கிறார்


மக்களுக்காக போராடுவதே இலக்கியப்பணி . இலக்கியம் என்று விட்டத்தை பார்த்து எதோ புரியாமல் சிலர் எழுதிக்கொண்டிருக்க , மக்களுக்கான இலக்கியம் என்பது , மக்களின் சார்பில் நின்று போராடுவது . அதிகாரவர்க்கத்தின் குரலாய் இருப்பது நீங்களா அருந்ததிராயா.

ஜெயமோகன் கட்டுரை