Monday 28 November 2011

"பிச்சை எடுப்பதில் " அந்நிய முதலீடு


ஒரு ஊரு இருந்துச்சு , அங்க ஒரு சைக்கிள் கடை இருந்துச்சு ,அது ஊருக்காக இருக்கிற பொது மக்களுக்கான சைக்கிள் கடை . சைக்கிள் கடை நட்டத்துல போகுது ,அதனால அத நடத்த முடியலன்னு சொன்னாரு ஊர் பெரியவர்,அதனால ஒரு மணி நேரத்துக்கு சைக்கிள் வாடகையை பத்து மடங்கு ஏத்திட்டாரு. மக்கள் எல்லாம் கொதிச்சு போய் இருந்தாங்க .அந்த நேரத்துல பட்டணத்துல இருந்து ஒரு சைக்கிள் கடை வந்துச்சு ,அதுக்கு மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க .அப்புறம் ஊருக்குள்ள அந்த மக்கள் நிறைய பால் குடிப்பாங்க .பாலும் நட்டத்துல ஓடுதுன்னு பட்டணத்து காரங்கட்ட விட்டாரு . அப்புறம் வெளியூரிலிருந்து ஒரு பேங்க் ,ஊரு முன்னேற்றத்திற்காக கடன் தரேன்னு சொல்றான்னு சொன்னாரு ஊர் பெரியவர் . ஆனா ஒரு கண்டிஷன் போடறான் , ஊர்ல இருக்கற மலிக கடைக்கு போட்டியா மலிக கடை ஓபன் பண்ணனும்னு சொன்னாரு . மக்களும் கொஞ்சம் கடுப்போட ஏத்துக்கிட்டாங்க .
அந்த கோவில இருக்கிற பிச்சக்காரங்க பயத்துல இருந்தாங்க அவங்களுக்குள்ள என்ன பேசிக்கிட்டாங்கனா "ஏதோ பட்டணத்து வங்கி நம்ம ஊரு தலைவருக்கு காசு தருதாம் ,ஆனா இங்க பிச்சை எடுப்பதற்கு , அவங்க ஆளுகள
சேத்துகனுமாம்" அப்படினான் ஒருத்தன் . "அப்படியா இவங்க பேழரதுக்கு கூட போட்டிக்கு வருவாங்களா " அப்படினான் இன்னொருத்தன் .

Wednesday 23 November 2011

தல அமெரிக்காவின் கை கூலியா - நண்பர் பாலவுக்கு எதிர்வினை

"கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!

முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது....."

"தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே."

"கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்"


இது எல்லாம் என் நண்பர் பாலா பக்கங்கள் இணையத்தில் , சமீபத்தில் வந்த தல பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் .முதலில் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் , நான் 'தலையின்' தீவிரமான ரசிகன் ஒரு காலத்தில், தலையும் எனக்கு எதிரி அல்ல நண்பர் பாலாவும் எனக்கு எதிரி அல்ல , என் பதிவுகளை பத்து பேர் மட்டும் பார்த்த காலத்தில் கூட அதில் ஒருவர் பாலாவாக இருப்பார் . தொடர்ந்து மறு மொழி எழுதுவார் . அதனால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது , பாலாவை தூற்றுவதற்கு அல்ல , விமர்சனம் அவ்வளவே .

எனக்கு தலபடத்தில் உதவியாளர்களாய் வேலை செய்தவர்களை தெரியும் . தினமும் நூறு
ரூபாய் பாட்டா கூட கிடைக்காத தொழிலாளி . அனைவருக்கும் பிரியாணி போட்ட தல ,
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் தல , சினிமா உதவி இயக்குனர் அல்ல உதவி கேமரா
மென் என்றால் ,பாட்டா ஒழுங்காய் கிடைக்காது , அதை அவர்களுக்கு தல வாங்கிக்கொடுக்கலாமே அப்படி வாங்கிக்கொடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம் .நடிகருக்கு பதினைத்து கோடி தரும் சினிமா உலகம் , தொழிலாளியின் நூறு ரூபாய் பாட்டவில் தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிக்கும் பொழுது. இத்தனை கோடி ரூபாயில் ஒரு ஒரு லட்சம் செலவு செய்து , நாய்க்கு போடும் பிஸ்கட் போல போடுவதும் , அதை "தல போல வருமா " என்று புகழ்வதும் கண்டிப்பாய் அருவருப்பாய் தானே உள்ளது .

அந்த கட்டுரையில் நுட்பமாய் பார்த்தால் , ஒன்று புலப்படும் , தலையை விமர்சனம் செய்யவில்லை ,அதை மிகையாய் காட்டும் பதிவுலகத்தையும் , அந்த போலி மனிதாபிமானமே சிறந்தது என்று ரசிக்கும் ரசிக மனப்பான்மையே விமர்சிக்கப்பட்டது. நேற்று மாலை மலர் என்று நினைக்கிறேன் , அதில் ஒரு செய்தி 'விமான நிலையத்தில் அனைவரையும் கவர்ந்த தல '. அதாவது கணக்கெடுப்புகள் சொல்கிறது போல்
எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில் . பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் ஒருவர் மட்டுமே படுத்துறங்க முடியும் என்ற தேசத்தில் , ஒருவர் விமானத்தில் போக வசதியுடைய ஒருவர் வருசையில் நிற்கிறார் என்று பாராட்டினால் ,இயல்பாய் இருப்பவருக்கு கோபம் வரத்தான் செய்யும் . இதற்க்கு
முன்பு இப்படி தான் தல வாக்களிக்க வருசையில் நின்றார் . வருசையில் நிற்பது நல்ல விடயம் தான் , அவர் தலையாய் இருந்தால் " SO வாட்" ,அவரும் மனிதர் தானே , அதை வியந்தோதும் ரசிகன் "தலே லால லாலா " என்றும் "தல போல வருமா"
என்றும் கொக்கரிக்கும் பொழுது , அவன் ரசிக மனத்தை விமர்சிக்க வேண்டாமா , இது அஜித் பற்றி விமர்சனம் அல்ல , அந்த ரசிக மனத்தை , போலி மனிதாபிமானத்தை பற்றிய விமர்சனம் அவ்வளவே . அஜித் பற்றிய வினவு கட்டுரையை மீள் வாசிப்பு செய்யவும் .

நண்பர் எப்பூடி அவர்கள் தீவிர தல பேன் என்று நினைக்கிறேன் , அவர் முன்பு அஜித் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் . நானும் அஜித் வெறியனாக இருந்த காலத்தில் நண்பரின் கட்டுரையை AFE (AJITH FANS இயக்கம்) யாஹூ க்ரூப்ஸ் அதில் நண்பர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது நானும் என் நண்பர் ஊடகனும் , ஆனால் காலப்போக்கில் நான்
அரசியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் . நீங்களும் எப்புடியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி வாழ்க்கை வரலாற்றை படித்ததாக சொன்னீர்கள் . மார்க்ஸ் இயல்பிலேயே அனைவரிடமும் விவாதம் செய்யக்கூடியவர் ,எங்கெல்சும் அப்படியே .அவர்கள் நடுத்தர்வர்கத்தை "குட்டி பூஸ்வா" என்கிறார்கள் . இன்று வினவு தளம் அனைவரிடமும் விவாதம் (உங்கள் மொழியில்
சண்டை ) செய்வதை போல அவர்கள் அவர்கள் காலகட்டத்தில் ,நக்கலும் நையாண்டியும் அனைவரையும் விமர்சனமும் செய்தார்கள் .இன்று வினவு தளம் ஆயிரம் பேரிடம் விவாதம் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால் . மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களுக்கு
எதிராய் இருந்த அனைத்து கருத்துக்களுடன் போரிட்டனர் .பிற்போக்கு தனங்களை கடுமையாய் விமர்சனம் செய்தனர் .பெர்க்லி பாதரியாருடன் அவர்கள் விவாதம் செய்கின்றனர் , எனக்கு தெரிந்த உதாரணம் கருத்துமுதல் வாதத்தை விட பொருள் முத வாதமே சிறந்தது என்பதை நிறுவ, கடவுள் இல்லை என்பதை நிறுவ , விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வைத்து , என் பொதுவுடைமை சிறந்தது என்று லெனின் ஒரு புத்தகம் எழுதுகிறார் .

MATERIALISM and EMPIRIO-கிரிட்டிசிசம்இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அனைவரிடமும் விவாதம் செய்கிறது . இது எங்கெல்ஸ் சயின்ஸ் பற்றி எழுதியதன் தொடர்ச்சி .
இவர்கள் எதற்காய் இந்த புத்தகங்களை எழுதுகிறார்கள் , அக்காலத்தில் இருக்கும் மத குருமார்கள் , மக்களை திசை திருப்ப . இவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி , பொதுவுடமையை விஞ்ஞான பூர்வமாய் நிறுவுகிறார்கள் .

அதே மார்க்ஸ் லெனின் மாவோ எங்கெல்ஸ் , அனைவருமே அவர்கள் கால கட்டத்தில் எதிரிகளை விமர்சனம் செய்யும் பொழுது நக்கல் நையாண்டி செய்கிறார்கள் . அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள் . மார்க்சின் குரு ஹெகெல் கூட இதில் இருந்து தப்பவில்லை .
விமர்சனமே செய்யாமல் எப்படி வளர முடியும் நண்பா .

அதில் நண்பர் பாலா கருத்துக்களை சொல்லலாம் ஆனால் கடுமையாக வசை பாடக்கூடாது என்கிறார். ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி பார்ப்பான் , டான்சே ஆடதேரியாது , குரல் நல்ல இருக்காது , நடந்துகிட்டே இருப்பான் , தொப்பை என்பது வசையா . இவ்வளவு மனிதநேயம் என்று சொல்லிக்கொள்ளும் அஜித் ஏன் சமூக பிரச்சனை என்றால் ஒதுங்குகிறார் , தன் படத்தில் வேலை பார்த்த சக ஊழியனுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அந்த கர்ண பிரபு கொதித்து இருக்க வேண்டாமா ????? அப்படி ஒண்ணுக்கும் ஆகாத வாழ்கையில் ,அந்த தொழிலாளியின் சம்பளம் பற்றி கேட்காமல் , பிரியாணி போடுவதை மட்டும் பாராட்டினால் , அந்த பாராட்டையும் , அந்த ரசிப்புத்தன்மையும் மட்டுமே விமர்சிக்கிறோம் .

பொதுவுடமையை எந்த புத்தகத்திலும் கற்க முடியாது , அது களவேலை . அதுவும் நண்பர்கள் இந்த பஸ் விலை ஏறின நேரத்தில் , மாதம் ௨௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ,வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால் நாமே நடுத்தர வர்க்கம்.முரண்பாட்டு தத்துவத்தில் தான் பொது உடமை தத்துவமே இருக்கிறது .

சுரண்டும் வர்க்கம் என்றால் ,சுரண்டப்படும் வர்க்கம் இருக்கும் . அதற்க்கு ஆதரவாய் இருக்கும் நடுத்தரவர்கத்தை வலிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது . நண்பா நான் எந்த கழிவிரக்க வார்த்தைகளையும் பிரயோகம் செய்யவில்லை . இது என் விமர்சனம் அவ்வளவே.
Bala pakkangal
vinavu

Sunday 20 November 2011

பஸ் பால் விலை ஏற்றம் குறித்து கார்ல் மார்க்ஸ்

இன்று விலைவாசி ஏறி இருக்கிறது . பேருந்துகளில் போக இரண்டு ரூபாய் வர இரண்டு ரூபாய் என்ற காலம் மலை ஏறி விட்டது . குறைந்தது இருபது ரூபாய் இல்லாமல் நாம் பேருந்தில் பயணம் செய்வதை நினைத்து கூட பார்க்க முடியாது . நான் மதுரையில் இருந்த நாட்களில் கூடையில் பழம் காய்கறி விற்கும் கிழவிகள் , LSS பஸ் ரேட் ஐம்பது பைசா கூட என்பதற்காய் , வெள்ளை போர்டு பேருந்துகளுக்கு கால் கடுக்க காத்திருப்பார்கள் .அப்படி இருந்த மதுரையில் இன்று இருப்பது வெறும் கதவு போட்ட வண்டிகளே . வெள்ளை போர்டு வண்டிகள் பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு எப்பொழுதாவது ஒரு பேருந்து வரும் . அடுத்த நிறுத்தத்திற்கு செல்லவேண்டும் என்றாலும் குறைந்த பஸ் கட்டணம் ஐந்து ரூபாய் என்ற நிலைமைக்கு வந்தாயிற்று .

என் தம்பி ஒருவன் வேலை தேடிக்கொண்டிருக்கிறான் , மாதம் 6௦௦ ரூபாய் பாஸ் வைத்துக்கொண்டு , சென்னையை சுற்றிவருவான் . அவனுக்காவது இங்கே வீடு உள்ளது . ஆனால் இங்கே தங்கி வேலை தேடும் எண்ணற்ற கீழ் நடுத்தர குடும்பத்தை
சேர்ந்தவர்கள் , பொருளாதார பின்னணி இல்லாதவர்கள் எப்படி மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்து பாஸ் எடுப்பார்கள் . ஒரு அனுபவதிற்காய் சென்னையில் பட்டினபாக்கத்தை சுற்றி திருந்தேன் , வீடுகள் எல்லாம் குடிசைகள் ,நடுதரகுடும்பங்கள் கோமான்கள் அங்கே சென்று பார்த்தால் உண்மையான வாழ்க்கை புரியவரும் , இந்த பக்கம் மரினா கடற்கரை அங்கு ஒரு விதமான வாழ்க்கை , அப்படியே கொஞ்சம் காலாற நடந்து போனால் வேறு ஒரு உலகம் . அப்படி இருக்கும் பின்னணியில் ஒருவன் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செலவாகிவிடுகிறது .


சரி ரூமில் இருக்கும் நண்பர்கள் இவ்விடயத்தை பற்றி விவாதிக்கும் பொழுது , அம்மா ரசிகர்கள் ஆகிய அவர்களால் அம்மாவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . "மக்கள் கொந்தளிக்கிறார்கள் " என்று கலைஞர் டிவி சொன்ன உடன் , "அப்படி ஒன்னும் வெளில தெரியல , இவங்களா அடிச்சு விடுறாங்க " என்று
சொன்னான் வருடம் லட்சகணக்கில் வாங்கும் கார் வைத்து இருக்கிற நண்பன் . அவன் பேருந்துகளில் செல்வதில்லை .வேறு மாநிலங்களில் விலை ஏற்றி இருக்கிறார்கள் , அவர்களும் அரசை நடத்த வேண்டாமா என்று சொன்னான் மாதம்
அறுபதாயிரம் வாங்கும் நண்பன் . இன்னொரு நண்பர் வருஷத்துக்கு BONUS கேட்கிறீங்க அப்ப போக்குவரத்து துறை நட்டத்தில் தான் போகும் , முதல்ல அதெல்லாம் கட் செய்ய வேண்டும் . என்று அரசியல் விளக்கம் கொடுத்தார் .

அவர்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை ,போக்குவரத்து கழகம் நட்டத்தில் செல்லவில்லை , விசிலடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகும் மாணவர்களே அதற்கு சாட்சி .அதே போல் SEZ சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கீழ் இருக்கும் தொழிற்சாலைகள் பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது ,அதுவும்
அடிமாட்டு விலையில் (எவ்வளவு என்ற புள்ளி விவரம் தெரியாது ) . நோக்கியா FOXCONN அந்த பிளான்டின் மொத்த செலவு 600 கோடி ரூபாய் , அதற்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் 750 கோடிகள். சாதாரண மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுக்கப்படவில்லை ஆனால் இவர்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது மின்சாரமும் தடையின்றி கிடைக்கிறது . இம்முரணை புரிந்து கொண்டால் , அரசு ஏன் இப்படி செய்ய முடிகறது என்பது புரியும் . லாபக்கணக்கை பன்னாட்டு முதலாளிகளிடம் கட்டும் அரசு நட்டக்கணக்கை மக்களின் தலையில் எழுதுகிறது .

சரி ரூம் நண்பர்கள் ஏன் அப்படி சிந்திக்கிறார்கள் , அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் இதை எல்லாம் சமாளித்து விடலாம் அதனால் அவர்களால் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியவில்லை . ஆனால் காலச்சுழற்சியில் நம் நடுத்தர குடும்பங்களும் , ஏழைகள் ஆகும் ,சுரண்டல் அதிகமாய் இருக்கும் ,அடக்குமுறை அதிகமாய் இருக்கும் இன்று பத்தாயிரம் ,இருபது ஆயிரம் வாங்குபவர்களை கூட ஏழை ஆக்கும் அரசு , நாளை அறுபது ஆயிரம்
வாங்குபவனை ஆக்கும் பொழுது , இவர்களால் இதே கருத்தை சொல்ல முடியாது . அமெரிக்காவில் WALL ஸ்ட்ரீட் மக்கள் இறங்கி போராடுகிறார்கள் . இது எப்படி சாத்தியம் ஆயிற்று . புத்தகங்கள் சொல்லிக்கொடுக்காத அரசியலை புறநிலை எதார்த்தம் சொல்லிக்கொடுக்கும் . அதுவே அங்கு நடந்தது .

சரி இம்மாதிரி அனுபவங்கள் நமக்கு சூழல் கற்றுக்கொடுக்கிறது , ஆனால் இதே விடயங்களை ௧௮௪௮
வந்த ஒரு அரசியல் புத்தகம் சொல்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அந்த புத்தகத்தின் பெயர்
மார்க்ஸ் எங்கெல்ஸ் அளித்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை " . அந்த புத்தகத்தில் இருந்து சில வரிகள்

* வரலாற்றில் முந்திய சாகப்தங்களில் அநேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைவு இருக்க காண்கிறோம் (இந்த பன்மடிப்படிநிலை இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பு ,கிராம வாழ்கையில் இருக்கும் அந்தஸ்து , அனைவருக்கும்
மேலே நிலப்பிரபு .முதலில் பார்ப்பனர்கள் ,அதற்கு அடுத்த நிலை ஆதிக்க சாதியினர் , அதற்கு அடுத்த நிலை பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் ,


கிராம வாழ்க்கையிலிருந்து முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறும் பொழுது .
இங்கு சென்னையிலே சாதி என்பதை பார்க்காமல் அனைவரும் ஒரே தொழிற்சாலையில்
வேலை செய்ய வேண்டும் ,சாதியால் பிளவு படும் வர்க்க அமைப்பு , தொழில் முறையால் வாழ்க்கை முறையால் ஒன்று படுகிறது . இன்று அம்மா தனி தனியாய் சாதி பார்த்து வேலை ஏற்றம் செய்ய முடியாது , நாளுக்கு நாளாய் வாழ்க்கை தரம் குறைய குறைய , தொழிலாளி உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் ஒரே விதமான சிக்கல் வருகிறது , விஞ்ஞான ரீதியாகவே அவர்கள் ஒன்று கூடுகிறார்கள் .

வாழ்க்கை முறை மாறும்பொழுது , நடுத்தர வர்க்கம் கூட ஏழை ஆகிறது , ஒரு தொழிலாளி வாழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . பணம் ஒரு பக்கமே குவிகிறது ,அதனால் UPPER MIDDLE CLASS MIDDLE CLASS ஆகிறது middlE CLASS ஏழைகள் ஆகின்றனர் . இப்படி நடக்க நடக்க , அனைவரும் ஒரு சமநிலைக்கு வருகின்றனர் .இதையே தான் மார்க்ஸ்

"ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவெனில் வர்கப்பகமைகளை இது சுருக்கி எளிமையாக்கி உள்ளது .சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாய் ,எதிரும் புதிருமான இரு வர்கங்களாய்- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாய் -பிளவுண்டு வருகிறது "



ஒரு நேரத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில் , அனைவரும் ஏழை ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் சாதிகள் ஒழிக்கப்பட்டு ,அனைவரும் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வார்கள் .

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முத்திரையை கிழிதெறிந்து ,குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுற செய்தது .


எவ்வளவு ஆத்ரசமான வரிகள் . இப்படி அந்தப்புத்தகத்தை சொல்லிக்கொண்டே போகலாம் . கழிசடை புத்தகங்கள் எல்லாம் அதிக விலையில் விற்கும் பொழுது இதன் விலை பதினைந்து ரூபாய் தான் . சென்னையில் கீழை காற்று மட்டும் NCBH இல் கிடைக்கிறது . வரிக்கு வரி இக்கால சூழலோடு பொருத்தி பார்த்து சொல்ல முடிகறது , அது தான் மார்க்ஸ் அவர்களின் பலம் , மார்க்சியத்தின் பலமும் அதுவே .