Wednesday 30 June 2010

பதிவுலக சந்தேகங்களும் அதற்க்கு உண்டான பதில்களும்

"படைப்புகள் நிரம்பி வழிந்தாலும் குப்பைத்தொட்டி நூலகம் ஆகாது. ஒரு நூலகம் போல ஆக வேண்டும் என்று கண்டதை எல்லாம் நிரப்பி என்மனம் குப்பைதொட்டி ஆனதுதான் மிச்சம். முதலிலேயே கூறிகொள்கிறேன் இவை என் வாதங்கள் அல்ல. சந்தேகங்கள்தான்." இவர் விவாதங்களே வேண்டாம் என்கிறார் விவாதங்களை குப்பத்தொட்டி என்கிறார் . இது தான் திமிர் பிடித்த கருத்து , உங்களுக்கு ஒரு கருத்து பிடிக்கவில்லையா விவாதம் செய்யுங்கள்
விவாதம் செய்ய முடியாமல் குப்பை தொட்டி என்று சொல்கிறீர்கள் ...............சரி விவாதம் இல்லாமல் , மணிரத்தனம் சிறந்தவர் , பார்பனர்கள் நல்லவர்கள் , பெண்கள் அடங்கி தான் இருக்கவேண்டும் . முதலாளிக்கு அடங்கி போக வேண்டும் , கடவுள் இருக்கிறார் , இது எல்லாம் நீங்கள் சொல்ல வரும் கருத்து இதன் பெயரே பார்பனீயம்பாலா


புலிகேசியின் பதிவு படித்தேன் அதில் பால பக்கங்கள் என்பவர் தன் மனக்குமுறலை தெரிவித்து உள்ளார் . சரி அவருக்கு பதில் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .
1 "ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா?" நண்பரே ஆண்கள் தண்ணி அடிக்கும் பொழுது ஏன் பெண்கள் தண்ணி அடிக்கக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார் . பெண்களுக்கு வசதியான உடையை உடுத்துகிறார்கள் ....அதை உடுத்த கூடாது என்றுசொல்வது ஆணாதிக்கம் தானே ,உங்கள் ஆடையை பெண்ணா தெரிவு செய்கிறாள் நீங்கள் தானே தெரிவு செய்கிறீர்கள் நண்பரே .அப்பொழுது பெண்களுக்கும் அவர்களுக்கு பிடித்த உடையை தேர்வு செய்ய முடியும்


























2 " இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? "
பெண்கள் படிப்பை மறுக்கிறீர்களா ......... அது என்ன படித்த பின்பா வேலைக்கு போன பின்பா ................... எத்தனையோ உழைக்கும் பெண்கள் அப்பா அம்மாக்கு சோறுபோடுவது
எனக்கு தெரியும் ......... நீங்கள் தவறை சுட்டிக்காட்டுவது தவறில்லை .........ஆனால் பெண் படித்த திமிர் , வேலைக்கு போகிறாள் அதனால் என்கிறீர்கள் பெண்கள் வேலைக்குபோக கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் படிந்து இருக்கிறது .... இது கூட பார்பநீயமே .........

3 பார்பனீயம் ஏன் கண்டிப்பாய் எதிர்க்க படவேண்டும் . இவர் இவர் இந்த வேலையை தான் செய்ய வேண்டும் என்று பார்பனீயம் சொல்கிறது . உலகத்தில் எந்தமதத்திலும் தன் மதத்தை சேர்ந்தவர்களை தொடக்கூடாது என்று இல்லை , ஆனால் பார்பனீயம் சொல்கிறது தீண்டாமை. அருந்ததி இன மக்கள் தான் இன்றும் மலங்களை எடுக்கிறார்கள் அது ஏன் என்று விளக்கம் சொல்லுங்கள் , பார்பனர்கள் தான் இந்த அமைப்பை கொண்டு வந்ததே . நாங்கள் மட்டுமே இறை தூதர்கள் நீங்கள் எல்லாம் தீண்ட தகாதவர்கள் என்று சொன்னவர்கள் பார்பனர்கள் . தலித் மக்கள் துன்புறும் பொழுது கோபம் கொள்ளாத நீங்கள் , பார்பனரை திட்டும் பொழுது மட்டும் கோபம் கொள்வது கூட பார்பனீயம் பார்பனர்கள் என்றால் ஏன் திட்டுகிறார்கள் என்று நான் விளக்கம் சொல்கிறேன் .

4 ///ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி கொண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா? "மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி." என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா? "நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் /////

ஐயா பாலா அவர்களே மணிரத்னம் சம்பாதிப்பதும் , சாதாரண தொழிலாளி முதலாளியிடம் சம்பாதிப்பதும் ஒண்ணா ???????? சாதாரண தொழிலாளி தன் வாழ்க்கை ஓட்ட முதலாளியிடம் வேலை செய்கிறான் . ஆனால் மணிரத்னம் போல நூறு கோடி சம்பாதிக்க , தாக்ரே அவர்கட்க்கு கூல கும்பிடு போட்டு , வரலாற்றை திரித்து சொல்பவர்கள் இல்லை நாங்கள் . அம்பானி அவர்களால் இறந்த சிறு முதலீட்டளர்கள் உண்டு , முதலாளி அயோக்யனே , அம்பானி அவர்களை பணத்திற்காக திருட்டுதனைத்தை ஹீரோ போல நாங்கள் காட்ட வில்லை . மணிரத்னம் காட்டுகிறார் . நூறு கோடி சம்பாதிப்பதையும் , வேறு வழி இல்லாமல் மாதம் ஐந்து முதல் பத்தாராயம் சம்பாதிப்பதும் ஒன்று அல்ல .

எனக்கு தெரிந்து தோழர்கள் MANAGER பதவி வந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை , நீங்கள் விருப்பப்பட்டால் நன் அவர்களை காண்பிக்கிறேன் , உங்கள் மணிரத்னத்தால் அதுமுடியுமா MANAGER பதிவி என்றால் முதலாளிக்கு ஜால்ரா போட வேண்டியது வரும் என்பதால் . உங்களை போல் அவர்கள் புலம்பவில்லை , களத்திலே மக்களுக்காய் இருக்கிறார்கள் . இது எப்படி தெரியுமா உள்ளது ......தண்ணீர் தனியார் மாயம் ஆகிறது என்றால் , எல்லாரும் KINLEY தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று காலச்சூழல் இருக்கிறது , நீங்கள் தண்ணீர் குடிக்கும் பாமரனையும் , KINLEY கம்பெனி இரண்டையும் ஒரே தராசில் வைப்பது எவ்வளவு அயோக்ய தனமோ அவ்வளவு அயோக்யத்தனம் உங்கள் மணிரத்னத்தையும் தன் குடும்பம் வாழ அதிகம் ஆசை படாமல் சிறு வேலைகள் பார்க்கும் தொழிலாளியையும் compare செய்வது .

5 உங்கள் கடவுள் நம்பிக்கைக்கு நாளை பதில் சொல்கிறேன் ..................
bala pakkangal

நீ பார்க்காத நிமிடம் ......



















நீ பார்த்து
நான் பார்க்காத நிமிடம் ,
நான் பார்த்து
நீ பார்க்காத நிமிடம் ......
உண்மையில் நாம் பார்த்துக்கொண்ட நிமிடங்கள் ...!!!
பேசிய நிமிடங்களை
விட பேசாத நிமிடங்களே
அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம் ......................!!!!!
காதல் திருமணத்தில் முடிய வேண்டுமாம் !!!!
முடிகிற காதலுக்கு மட்டுமே திருமணம்

Tuesday 29 June 2010

வழக்கு மொழி கொச்சையானதா சிதம்பரத்தின் மேட்டிமை திமிர்















சிதம்பரம் நேற்று கோவை செம்மொழி மாநாட்டில் பேசினார் அதில் "வட்டார வழக்கு என்பது எல்லா நடுகளிலும் இருக்கிறது. அதில் பல நல்ல சொற்கள் உள்ளன. ஆனால் வட்டார வழக்கு என்கிற பெயரில் இல்லாத சொற்களையோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தினால், அது மொழியை சிதைத்து விடும். ஒரு மொழியை சிதைக்கக்கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்று வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வழக்கு மொழி இழுக்கு மொழியாகிவிடுமோ என்கிற கவலை இருக்கிறது." இந்த புள்ளியில் அவர் என்ன சொல்ல வருகிறார் வட்டார வழக்கே இருக்க கூடாது என்கிறாரா , மதுரை என்றால் ஒரு மொழி , திருநெல்வேலி என்றால் ஒரு தமிழ் , கோவை என்றால் ஒரு தமிழ் என்று வட்டாரரீதியாய் ஒரு மொழி இருக்கும் பொழுதே அம்மொழி வளரும் .

இப்பொழுது செம்மொழி என்கிறார்களே அது என்னது என்று அலசி பார்ப்போம் . அச்சு ஊடகங்கள் மட்டுமே ஒரு அளவு மொழிக்கு அத்தாட்சி . சிதம்பரம் சொல்லும் செம்மொழி என்பது அது தான் . அதாவது அச்சு ஊடங்கங்களில் தினமணி தினமலர் ஆனந்த விகடன் போன்ற ஊடகங்களில் வேலை செய்பர்வகள் மேட்டுக்குடி பார்பனர்கள் .
பழைய விகடன் எடுத்துப்பாருங்கள் அதில் அந்த வடக்கு மொழி கலப்பு இயல்பாய் தெரியும் அந்த ஊடகங்களை படிக்கும் பொழுது . அந்த காலம் முதல் அச்சு ஊடகங்களில்இருப்பது தஞ்சை பார்ப்பனீய மொழி . அதை மட்டுமே பேச சொல்கிறாரா சிதம்பரம் . வழக்கு மொழி என்றால் எல்லாம் இருக்க தான் செய்யும் , வழக்கு மொழிக்களே வளரக்கூடாது என்கிறாரா இதை ஏன் யாரும் கண்டிக்க வில்லை .

ஒரு மொழி என்பது பேசப்பேச மட்டுமே வளரும் இயல்பு உடையது . மதுரை தமிழிலே "கோளாறா போ பா " என்றால் பார்த்து போ என்று அர்த்தம் . இது எல்லாம் கொச்சையாய் இருக்கிறது என்று அந்த மக்கள் பேசும் மொழியை தூக்கி எரிய முடியாது . கலை என்பதே பயன்பாட்டை பொருத்தது , சென்னையை பொறுத்த வரை
"கலாய்த்தல்" என்பது ஒரு கலாச்சார வார்த்தை , இந்த வார்த்தை இருந்தால் தான் சென்னை , இப்படி உழைக்கும் மக்கள் இயல்பாய் பேசும் வார்த்தையை கொச்சை என்கிறார் . தூய தமிழ் என்பது எது , ஏன் வட்டார வழக்கில் இருந்து ஒரு வார்த்தை மொழியில் ஒரு இடத்தை பிடிக்க கூடாத என்ன ????? இது மேட்டிமை திமிரை காட்டுகிறது , இது தான் மொழி மதுரை என்றால் தனியாய் பேசக்கொடது , தூத்துக்குடி என்றால் தனியாய் பேசக்கூடாது , நீங்கள் எல்லாம் மேட்டுக்குடி தமிழை தான் பேச வேண்டும் என்பது ஒரு விதத்தில் பார்ப்பனீயம் அடக்கு முறை , உழைக்கும் மக்களின் மொழி எப்படி வளரலாம் என்ற பயம் .

சரி ஒரு மொழி புது புது வடிவம் எடுத்தால் தான் வளர முடியும் . தமிழ் கண்டுபிடித்த காலத்தில் கணினி இல்லை , அதற்காய் அதை ஏற்றுக்கொலாமல் இருக்க முடியும் .கணினி என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மொழி , ஏன் வட்டார வழக்கை ஏற்றுக்கொள்ள கூடாது , இது மேட்டிமை திமிர் இல்லாமல் வேறு என்ன ??????
"கவிப்பேரரசு போன்ற ஒருவர் பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கிறோம் அல்லவா, அதுதான் இனிய தமிழ். அப்படிப் பேசி எழுதப் பழக வேண்டும்" என்று சிதம்பரம் சொல்கிறார் . கவிபேரரசு தமிழ் அழகாய் இருக்கலாம் , ஆனால் கலைஞரை துதி பாடுகிறாரே அது அருவருப்பாய் உள்ளதே .உழைக்கும் மக்கள் தமிழ் கொச்சையாய் இருக்கிறது என்கிறாரே , கவிபேரரசின் தமிழை விட நன்றாய் தான் உள்ளது என்பேன் ஏன் எனில் அதில் உண்மை இருக்கிறது ."வருடம் " என்ற வார்த்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் , அச்சு ஊடகங்களும் ஏற்றுக்கொள்கின்றன ஆனால் அது வாடா மொழி திணிப்பு , ஏன் இப்படி பல வார்த்தைகள் sanskrit வார்த்தைகள் ஊடகங்கள் திணிக்கலாம் , வழக்கு மொழி பேசினால் அழிந்து விடுமா என்ன ????????? சிதம்பரம் போன்ற மக்கள் மொழியை காப்பது இல்லை , அதை போன்ற மேட்டுக்குடி மக்கள் அயல் நாட்டிலே வேலை ,ஆங்கிலம் பேசுவது என்று எங்கெங்கோ செல்கிறார்கள் . மொழியை காப்பது வழக்கு மொழி பேசும் உழைக்கும் மக்கள் . அப்படி பேசக்கூடாது செம்மொழியில் தான் பேசவேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .

Monday 28 June 2010

படங்களை பார்க்கும் பொழுது ஏன் விமர்சனப்பார்வை தேவை


"பம்பாய்" படம் விமர்சனம் குறித்து நண்பர்கள் விமர்சனம் சொன்னார்கள் , அதில் நிறைய பேரினுடைய பொது புத்தி ஒரே போலவே உள்ளது .அதாவது எங்களுக்கு படம் முற்போக்காய் தான் பட்டது என்கிறார்கள் . மேலும் ஹிந்து மதம் முஸ்லிம்களின் ஒற்றுமையை தான் படம் காட்டுகிறது என்கிறார்கள் .நான் சொல்லுகின்ற விளக்கங்களை ஏற்றுக்கொண்டாலும் , ஒரு பாமரனுக்கு படம் இப்படி தான் புரிகிறது என்கிறார்கள் . அவர்களுக்கு வரலாற்று திருபுவாதம் புரியவில்லை . சரி அப்படி என்றால் ரசனை முறையில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் . யாரும் முற்போக்கு என்ற பெயரிலே அவர்களை ஏமாற்றி விடலாம் என்பது தானே உண்மை .

"உன்னை போல் ஒருவன்" "பம்பாய் " "ரோஜா " போன்ற படங்களை முற்போக்கு என்று கருதுகிறான் ரசிகன் . சரி இறந்த ரசனை சார்ந்த விமர்சனம் தேவையா என்றால் தேவை ????? ஒரு தப்பான விடயத்தை முற்போக்கு என்று என்னும் மனிதன் தான் வாக்களிக்கிறான் ,நாட்டின் முதல்வர் , பிரதமமந்திரி போன்றவர்களை நிர்ணயம் செய்கிறான். பிற்போக்கான விடயங்களை முற்போக்கு என்று நினைக்கும் மனப்பான்மை , அங்கும் வெளிப்படும் . என் மனது இப்பொழுதெல்லாம் பேரரசு விஜய் படங்களை ஏற்றுக்கொள்கிறது , மணிரத்னம் மற்றும் கமல் போன்ற போலி முற்ப்போக்கு வாதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .

ஒரு நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டுமா , அது வேறு எங்கும் இல்லை அந்த சூழலில் இருக்கும் கலை இலக்கியங்களை தெரிந்து கொண்டாலே போதும் . எப்படி ஒரு ரசனை முறை அல்லது கலை இருக்கிறதோ , அது அந்த நாட்டின் மக்களின் மனதை பிரதிபலிக்கும் . வணிக ரீதியான மசாலா படங்களை குப்பைகள் என்று சொல்லும் மக்கள் , மணிரத்னம் கமல் போன்றவர்களை தலையில் தூக்கி கொண்டாடுகின்றன . மேட்டுக்குடி மக்களின்
சிந்தனை முறை பாமரனுக்கும் திணிக்கப்படுக்கிறது, அவன் படம் பிடிக்கவில்லை என்றாலும் ஏதோ பெருசா சொல்றாங்க பா நமக்கு தான் புரியல என்ற பிம்பத்தை வளர்த்துக்கொள்கிறான் , ஊடகங்களும் வளர்த்து விடுகின்றன.

ராவணன் படம் வந்த பொழுது ஊடகங்கள் எப்படி திசைதிருப்புகின்றன , "சீதையை கொச்சை படுத்தி விட்டார்கள் தமிழ் இயக்கங்கள் கோபம் ",என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது . சீதை என்ன தமிழ் பெண்ணா , ஒரு ஹிந்துத்துவா முகத்திரையை தமிழர்கள் என்ற பெயரிலே செய்கிறார்கள் . மேலும் மைய்ய பிரச்சனையான தண்டகாரண்யா பிரச்னையை ஒரு பிரச்சனையாக கருதாமல் , சீதை என்னும் பிரச்னையை பெரும் பிரச்சனையாக எடுத்து மைய்ய பிரச்னையை மறைக்கும் எட்டப்பன் வேலையை பார்க்கின்றனர் .

ஆனந்த விகடனில் தலையங்கம் பார்த்தேன் "அமிதாப் மார்க் போட நான் படங்கள் இயக்கவில்லை " என்கிறார் மணி சார் ,அப்பொழுது ராவணனுக்கு பிரச்சனை என்பது திரைக்கதை சரி இல்லை , இல்லை சீதையை கொச்சை படுத்திவிட்டார்கள் , அமிதாப் சொன்னது என்று கருத்துக்களை பரப்பிவிட்டு தண்ட காரண்யா பிரச்னையை தொடாமல் மணி சார் அவருக்கு பல்லக்கு தூக்குகின்றன ஊடகங்கள் . இதை எல்லாம் உற்று கவனிக்க வேண்டாமா ???கவனித்தால் தான் தெரியும் எது முற்போக்கு என்று , விழிப்புடன் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் நம்மை ஏமாற்றலாம் .

அதனால் ஒரு படம் பார்த்து எனக்கு அப்படி தோன்றவில்லை அதனால் அது சரியான படம் என்று சொல்ல முடியாது . இது அனைத்து ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளுக்கும் பொருந்தும் . அப்பொழுது தான் முற்ப்போக்கு என்று சொல்லிக்கொண்டு நஞ்சுகளை விதைப்பவர்களை அடையலாம் காண முடியும் . ஒரு கலையின் போக்கே சமூகத்தின் போக்கு . நிறைய பேருக்கு பிடிக்கின்ற கலை சரியானதாய் இல்லாதது , சமூகம் சரியாக இல்லாததை காட்டுகிறது . அதனால் அதன் விமர்சனம் முக்கியமானது .

Sunday 27 June 2010

யாரோ ஒருவன் யாரோ ஒருத்திக்காக ஏதொ ஒரு தெருவில்

மழை பெய்யும்
பொழுதெல்லாம் நினைத்துக்கொள்வேன்
உன் தெருவில் நான் நீந்தி நடந்த
நாட்களை ..............
இப்பொழுதும் மழை
பெய்கிறது ...........
நீ இல்லை ............
நீந்த நான் இல்லை
யாரோ ஒருவன் யாரோ
ஒருத்திக்காக ஏதொ ஒரு தெருவில்
மழையில் நீந்திக்கொண்டே இருக்கிறான் ..............

Saturday 26 June 2010

வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்


















தரவு என்னும் தளத்தில் பார்த்தேன் , செம்மொழி மாநாட்டின் வரலாறு இருந்தது ,செம்மொழி மாநாட்டை ஆரம்பித்தவர் தனநாயகம் என்னும் ஈழ தமிழர் . மேடையில் அவர் படமே இல்லையாம் , தமிழ் என்றால் கலைஞர் என்ற பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள் .மேலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்கிறார்கள் . சுவரொட்டி கூட ஓட்ட முடியாது என்பதே நிலை , மேலும் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு வடுக்கள் கூட இன்னும் ஆறவில்லை நிலைமை இப்படி இருக்க , பழமை பேசி அவர்களின் கட்டுரை மிகவும் எரிச்சல் ஏற்படுவதை இருந்தது ,அவர் காவலர் பணிகள் மாநாட்டிலே நல்லதாக உள்ளது , அரசிற்கு நன்றி என்கிறார் . எதற்கு நன்றி எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்து கொள்வதற்க்கா ........??????

அந்த மாநாடு கட்சி மாநாடு என்று சொல்ல கூட முடியாது , கலைஞரின் குடும்ப மாநாடு . கலைஞரை புகழ்ந்தால் மட்டுமே கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் . கனிமொழி எல்லாம் தமிழிற்கு என்ன செய்தார் என்று கேள்விக்கேட்க கூடாது , கலைஞரின் மகள் அதனால் அவர் கவிஞர் . இப்படி தான் இருக்கிறது நிலைமை , நேற்று கவியரங்கத்தில் என்ன நடந்துள்ளது , தமிழ் பற்றி பேசாமல் தமிழர்கள் பற்றி பேசாமல் இந்த ஓணாண்டி புலவர்கள் கலைஞர் மட்டும் பற்றி பேசுவது எரிச்சலாய் இருந்தது


வாலி சொல்கிறார்
விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம் பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !எய்த இடம் வேடம்போல் ஆவேன் !நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிடஅடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிடஅன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது அது குரல் அல்ல, குறள்,பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால் புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !அது ஈர்த்தது வையநோக்கு ! சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐயர் நோக்கு !காது கொடுத்து கேட்டேன் பாட்டை அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்புல்லரிக்காதா கேட்டு !இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கலைஞர்தான் காவல் !அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !இதற்கு காரணம் இரு மாமிகள்!பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ? (குஷ்பூ) கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !



வைரமுத்து :-
மேற்கு மலை தொடர்ச்சி மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுங்கள். தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள். ஏ ஆகாயமே உன் நட்சத்திரங்களை காணோம் என்று இரவோடு முறை இடாதே, எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடிவிட்டன. நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,யாருக்கு? முத்தமிழ் அறிஞரே, மூத்த முதல் அமைச்சரே, செம்மொழி தங்கமே, எங்கள் செல்ல சிங்கமே, தாய் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்.உங்கள் உயரத்தை நீங்கள் தாண்டுக்றீர்கள். வள்ளுவர் கோட்டம் வரைந்தீர்கள், அன்னை தமிழ்நாடே அண்ணாந்து பார்த்தது. வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அணைத்து இந்தியா அண்ணாந்து பார்த்தது.செம்மொழி மாநாடு கண்டீர்கள், அணைத்து உலகமே அண்ணாந்து பார்க்கிறது.
எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் நீங்கள் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்து உள்ளீர்கள்.உங்கள் உள்ளங்கை விரிந்தால் சூரியன். குவிந்தால் கூட்டணி.கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்.
தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்.ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை. நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது ஆறு, காவிரி ஆறு. உங்கள் தந்தை முத்துவேலரை எண்ணி பார்த்தால் எழுத்துக்கள் ஆறு. முதல் எழுத்தோடு சேர்த்தால் உங்கள் முழு பெயரின் மொத்த எழுத்து ஆறு. நீங்கள் பிறந்த மாதம் ஆறு.பெற்ற பிள்ளைகள் ஆறு. இது வரலாறு.
வீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா?, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்


நாம் நினைத்து விடக்கூடாது இவர்கள் மட்டும் பிழைப்பு வாதிகள் , நாமெல்லாம் ஒழுங்கு என்று . இங்கே ஈழத்தில் முள் வேலி பற்றி கவிதை போட்டவர்கள் எல்லாம் மாநாட்டிற்கு முதல் ஆளாய் செல்கிறார்கள் , அதற்க்கு சில பேர் வாழ்த்து வேறு , அவர்களுக்குள்ளும் பிழைப்புவாதி இருக்கிறான் .வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்

செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் கைது

செம்மொழி மாநாடு நடந்துக்கொண்டிருக்கிறது , நீதிமன்றத்தில் தமிழ் இல்லை , ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் இன்னும் முள்வேலியில் தமிழர்கள் இருக்கிறார்கள் இந்த நேரத்தில் மாநாடு தேவையா ???வழக்காடும் மொழியாக கூட தமிழை கொண்டு வரமுடியவில்லை . மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்றால்
தள்ளாத வயதிலும் easy chair வைத்துக்கொண்டு போகிறாரே பெரியவர் அவர் தமிழ் பற்றை என்ன சொல்வது . சரி இவ்வளவு இருந்தும் எதிர்ப்புகள் மனப்புகைச்சலாய் இருந்தாலும் , யாரும் தைரியமாய் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . பதிவர்கள் கூட சில பேர் பல் இளித்துக்கொண்டு மாநாட்டிற்கு சென்றனர் . ஆனால் உண்மையில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது, எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்தனர் மா கா இ க தோழர்கள் , "அவர் தான் கலைஞர்" என்ற பெயரில் செம்மொழி மாநாடு
தேவையா என்பது போல் போஸ்டர் இருந்தது , போலீசார் தோழர்களை போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள் என்ற முறையில் கைது செய்து உள்ளனர் , என்ன ஜனநாயகவாதி கலைஞர் ??????????சில தோழர்கள் தாக்கப்பட்டுள்ளனர் ..........இந்த உள்ளடி
அரசியல் எல்லாம் தெரியாமல் தன் புகழ் மட்டுமே பிரதானம் என்று பதிவர்கள் செம்மொழி மானதிற்கு போவது வெட்கமாய் உள்ளது ,. தமிழிலே அதிகமாய் கோர்வையாய் எழுத தெரிந்து என்ன பயன் , கலைஞர் கூட தமிழை நன்றாகத்தான் எழுதுவார் ,
ஆனால் அவர் ஜனநாயகம் . அஞ்சா நெஞ்சர் இருக்கும் மதுரையில் யாரும் இந்த கருத்துக்கள் கொண்ட போஸ்டரை பிரிண்ட் செய்யவில்லை என்பது கொடுமை . ஏன் அஞ்சா நெஞ்சர் என்பது உண்மையானால் எதிர்ப்புகள் வந்தால் சந்தித்து தக்க பதில் சொல்ல வேண்டியது தானே . எதிர்க்கும் தோழர்கள் தாக்கப்படுவது கொடுமை , இங்கே மன்னராட்சி நடக்கிறது ????
மன்னரை மாநாட்டிலே பாராட்டும் "பானபத்திர ஓணாண்டி" புலவர் செல்வந்தராக மாறுவார் இதைதவிர மாநாடு என்ன சாதித்து இருக்கிறது.....ஜனநாயக எதிர்ப்பு கூட சொல்ல முடியாமல் பார்த்துக்கொள்ளும் அரசிற்கு ஆழ்ந்த கண்டனங்கள் . வினவு தோழர்கள் தளத்தில் எந்த எந்த இடத்தில் தோழர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் இருக்கிறது
படித்து பாருங்கள்

http://www.vinavu.com/2010/06/26/semmozhi-maanadu-prison/#comment-25419

Friday 25 June 2010

பார்த்திருந்தால் ரசித்திருப்பேன்






















பானா காத்தடிக்கும்
அதை பிடித்துக்கொண்டிருப்பவனுக்கும்
உண்டான உறவு காதலுக்கும்
எனக்கும் .........!
காத்தாடி உயரப்பறந்தாலும்
அதன் நூற்கள் நம் கைக்குள்ளே ...........!!!!
காதல் விட்டுசென்றாலும்
பூமராங் போல திரும்ப வந்து ஒட்டிக்கொள்கிறது .........!!!!
எதிர் திசையில் இருக்கும் காந்தம்
போல ஈர்த்துக்கொண்டு வருகிறது ............!!!!!!!
நான் மறக்க நினைக்கும் பொழுது
கண்டிப்பாய் வருகிறாள் ............வேறு நாட்டில் இருந்து ........,
நான் உயிரோடு தான் இருக்கேன் என்று நியாபகப்படுத்துக்கிறாள் ................!!!
சங்கடப்படுவாள் என்று
அவள் வந்த மாதம் சந்துப்பக்கம் அதிகம்
போகவில்லை ..........!!!
"அவ எல்லாம் வாழ்க்கைல இல்ல டா" என்று நண்பர்களிடம்
வீராப்பு பேசிக்கொண்டிருந்தேன் .....................
எனக்கும் அவளுக்கும் தெரிந்த
சிறு பெண்ணிடம்
கேட்டேன் ................!!! "அமெரிகாக்காரங்க போயட்டங்கலானு"
" போய் ஒருவாரம் ஆச்சு நா " என்றாள்
சிறிதாய் வலித்தது ...............
இருக்கும் வரை பார்க்கக்கூடாது என்ற எண்ணம்
போன பிறகு பார்த்திருக்கலாமோ
என்றது

Thursday 24 June 2010

ஈழத்தின் செந்நீரிலே எழுதப்பட்ட செம்மொழி






















ஈழ சாகோதரி
சேலைகள் கிழிக்கப்பட்டு
தோரணம் கட்டினர் ........!!!!
முள்வேலிக்குள் தமிழர் இருக்க ....
அதை கொண்டாட மாநாடாம்
மாநாடு நடத்துகிறார்
"மானாட மயிலாட " பெயர் வைத்தவர் ....!
"பெண் சிங்கம்"
சோனியா என்று கர்ஜிக்கிறார்
"செம்மொழி கண்டான் "
ஈழத்தமிழரின்
செந்நீரிலே எழுதப்பட்ட மொழி
கண்ணீரிலே எழுதப்பட்ட மொழி
செம்மொழி

Wednesday 23 June 2010

சிவராமனின் விமர்சனமும் சில பின்னூட்டங்களும்

பைத்தியக்காரன் ராவணன் விமர்சனம் படித்தேன் , விமர்சனம் அற்புதமாய் இருந்தது என்றே நினைக்கிறேன் . ஆனால் அதில் பின்னூட்டங்கள் மிகவும் பாதித்தது ,பதிவர்கள் அவர் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார் என்ற வண்ணத்தில் பின்னூட்டம் செய்திருந்தார்கள் . வால் பையன் கூட இஸ்லாமிற்கு சொம்பு தூக்குகிறார் என்கிறார் பாம்பே பற்றி குறிப்பிடும் பொழுது .சரி அப்படி என்றால் பாம்பே படத்தின் வரும் காட்சிகளை வால் ஒத்துக்கொள்கிறாரா ???????அந்த பாபர் மசூதி விடயம் மறைக்கப்பட்டு , வெறும் முஸ்லிம் தீவிரவாதம் போல் காட்டி உள்ளாரே மணி சார் . அப்பொழுது வால் மணி சார் அவர்களுக்கு சொம்பு தூக்குகிறாரா.சும்மா சொம்பு தூக்குகிறார் என்பதை சொல்வதை விட்டுவிட்டு சிவராமன் சொல்வதில் என்ன நியாயம் என்பதை பார்க்க வேண்டும் . பம்பாய் படத்தில் முஸ்லிம் மக்களே தீவிரவாதத்தை ஆரம்பிப்பது போல் காட்சி துடங்குகிறது, ஆனால் உண்மை என்ன பாபர் மசூதி இடிக்கப்பட்டது தான் பிரச்சனையின் மையப்புள்ளி மணி சார் எந்தகாட்சியை முதலில் காண்பித்திருக்க வேண்டும் .

ஆனால் வரலாற்றை திரிக்கும் வேலையை பால் தாக்கரே ஆசியுடன் செய்கிறார் மணி சார் . முதலில் முஸ்லிம்கள் வன்முறையை ஆரம்பிப்பது போல் காட்டுகிறார் , பின்பு முஸ்லிம்களுக்கு close UP காட்சிகள் , அவர்கள் வன்முறையாளர்கள் என்று மனதில் பதிய வேண்டும் , ஹிந்துக்களுக்கு wide அவர்கள் தவறு செய்தாலும் பரவாயில்லை .அப்புறம் ஒரு பேரன் ஹிந்து தாத்தாவின் விபூதியை அழிப்பான் , ஏன் என்றால் முஸ்லிம் மக்கள் ஹிந்து விபூதியை கூட ஏற்க மாட்டார்கள் , ஆனால் ஒரு ஹிந்து தாத்தா வீட்டை எரிக்கும் பொழுது , உள்ளே புகுந்து இஸ்லாமின் புனித நூலான குரானை காப்பாற்றுவார் , என்பது போல காட்சி அமைப்பு . இது என்ன ஹிந்து வெறியா , இதை சிவராமன் சொன்னால் சொம்பு தூக்குவது என்று சொல்வதா ??? வரலாறு ஒன்று சொல்லும் , மணி சார் ஒன்றை சொல்வார் அதை விமர்சனம் செய்யாமல் ஒரு CORPERATE முதலாளிகளுக்கும் , மத வெறியர்களுக்கும் சொம்பு தூக்கும் மணி சார் அவர்க்களுக்கு சொம்பு தூக்க வேண்டுமா .

அப்பொழுது பாபர் மாசூதி பிரச்சனை அதை திசை திருப்பும் எட்டப்பன் வேலையை பார்த்தார் மணி , இப்பொழுது "OPERATION GREEN HUNT "பசுமை வேட்டை , கனிம வளங்கள் அதிகம் இருக்கும் பகுதி தண்டக்காரண்யா , அதன் மீது பண முதலைக்களுக்கு ஒரு கண் , வேதாந்தா நிறுவனத்திற்கு மலையை விற்பதற்கு பூர்விக மக்களை துரத்தப்பார்க்கிறார் சிதம்பரம் , அவரும் அந்த நிறுவனத்தின் வேலை செய்து இருக்கிறார் . இப்பொழுது மக்களை
துரத்தப்பார்க்கிறார் .அங்கே போராளிகள் என்பவர் வேறு யாரும் அல்ல அந்த உழைக்கும் மக்கள் . அந்த வடக்கிழக்கு ஏழு மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடப்பதே இல்லை . அங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் , சட்டங்கள் உண்டு . போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம் , பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள் . அங்கு மக்கள் naxal ஆனதே அந்த அடக்குமுறை காரணமாய் தானே தவிர தனிமனித விருப்பு வெறுப்புகளால் அல்ல ,ஆனால் இப்பொழுது பசுமை வேட்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது , இப்படி ஒரு படம் எடுத்தால் அது எட்டப்பன் வேலை , அதாவது ஒரு போராளி என்பவன் தனிப்பட்ட கோபத்தால் நாயகியை கடத்துகிறான் , அதுவும் காதல் கொள்கிறான் .


ஒரு இனம் அடிக்கப்படும் பொழுது , தன் மக்கள் துன்பப்படும் பொழுது , பெண்கள் கற்பழிக்க படும் பொழுது , எப்படி அந்த மேட்டுக்குடி பெண்ணை காதலிக்க முடியும் . அதை விட தையிரியாமான பெண்கள் போராடும் மக்களிடம் அல்லவா இருப்பார்கள் . எதோ ஒரு SOFTWARE ENGINEER காதல் செய்வதை போல "உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே " என்று காதல் செய்வானா ஒரு போராளி , மசுரைப்போல்
இருந்தது அந்த காட்சி . எதனால் அவன் இப்படி ஆனான் என்ற சமூக விளக்கத்தை தந்திரமாய் தவிர்த்து அவன் காதல் தாபம் போன்றவைகளை பிரதானப்படுத்தி போராளிகளை அசிங்கப்படுத்துகிறார் இந்த CORPERATE அறிவாளி . அதுவும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப படம் செய்கிறார் , அவர் எந்த காலத்தில் அந்த படத்தை எடுத்தார் என்பது கட்டாயம் விவாததிற்கு உட்பட்டது. அவருடைய கொள்கைகளை அவர் காட்சி அமைப்பை வைத்தே விமர்சனம் செய்யலாம். இதற்கும் பின்லேடனுக்கும் சம்பந்தம் இல்லை , ஆனால் மணி சார் படத்திற்கு கட்டாயம் தாக்ரே , வேதந்தா , சிதம்பரம் , அம்பானி போன்றவர்களின் ஆசி உள்ளது . "குரு" எடுத்தார் என்று தானே அவைக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்து உள்ளது , உண்மை தானே ???

Tuesday 22 June 2010

ராவணன் என்னை கவர்ந்த விமர்சனங்கள்

















ராவணன் பற்றி விமர்சனம் எழுதி இருந்தேன் , நெருங்கிய நண்பர் சக பதிவர் திரைத்துறை சார்ந்தவர் எனக்கு போன் செய்து இருந்தார் , இந்திய தணிக்கை துறையை பற்றி விளக்கினார் . இந்த அளவே காட்டியதே பெரிது என்று சொன்னார் ,"காற்றுக்கு என்ன வேலி" என்ற சிறந்த படம் வரவே இல்லை என்று ஆதங்கப்பட்டார் . சரி அப்பொழுது திரைப்படம் என்பது இந்திய சூழலில் சரியான திரைவடிவமாய் இல்லை என்று தானே பொருள் . அப்படி
இருக்கும் பொழுது , படம் எடுப்பது எல்லாம் ஒரு பிழைப்பிற்க்கான பிழைப்புவாதம் மட்டுமே என்பது உண்மை சரியா. தெரு கூத்து, வீதி நாடகங்கள் போடலாமே . சினிமா என்பது கலையின் வடிவம் , ஆனால் சினிமா மட்டுமே கலை ஆகாது , ஏன் வேறு வடிவத்திற்கு அந்த மணிரத்னம் போன்றோர் செல்வதில்லை , ஏன் என்றால் சினிமா என்ற வடிவத்திலே மட்டுமே பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதே உண்மை . ஒரு கலைஞன் தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்றால் என்ன கலை வடிவம் அது ??? அது முதலாளித்துவத்தின் கைப்பாவை என்பதை தவிர அந்த கலையில் என்ன இருக்கிறது . அப்படி உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞன் இந்த கலைவடிவத்தை தேர்ந்து எடுப்பானா ??????தணிக்கை இருக்கிறது , தணிக்கை யாருக்கு சாதகமாய் இருக்கும் அரசிற்கும் முதலாளிகளுக்கும் ???? உண்மையான கலைஞன் என்றால் தன்னை வெளிப்படுத்த வீதி நாடகம் போதும் என்றே நினைக்கிறேன் .

ஒரு விமர்சனம் படித்தேன் ராவணன் பற்றி மிக அற்புதமாய் இருந்தது , படத்தில் உள்ள காட்சிகளை அரசியல் பார்வையுடன் அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேய்ந்து இருந்தது விமர்சனம் என்றால் இது அல்லவா விமர்சனம் என்று சொல்வது போல் இருந்தது
http://tamilkatturaigal.blogspot.com/2010/06/blog-post_22.html

மேலும் சில கட்டுரைகளும் என்னை ஈர்த்தன
http://naayakan.blogspot.com/2010/06/master-piece-of-money.html
புதிதாய் இப்பொழுது படித்த அண்ணன் பைத்தியக்காரன் கட்டுரை மார்க்சிய பார்வை உள்ள கட்டுரை


http://skaamaraj.blogspot.com/2010/06/blog-post_20.html


http://pulavanpulikesi.blogspot.com/2010/06/blog-post_19.html



http://agnipaarvai.blogspot.com/2010/06/blog-post_20.html

பதிவுலகம் உலக அரசியலை புரிந்து கொண்டு எழுந்து கொண்டிருக்கிறது என்பது ஆறுதலான விடயம் .ஆனால் நான் வருந்தும் சம்பவம் ஒன்று நடந்தது , பதிவர் கதிர் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கிறார் .அதற்க்கு பாராட்டுகளும் வணக்கங்களும் செய்கின்றனர் . கதிர் நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார் ,உங்களுக்கு தெரியாதா மாநாடு எந்த ஈழத்தின் குருதியில் நடக்கிறது என்று , வேதையான விடயம் , நான் என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்.

Saturday 19 June 2010

ராவணனும் அருந்ததி ராயும்

















நேற்று நண்பன் புலிகேசியின் ராவணன் விமர்சனம் பார்த்தேன் நன்றாய் இருந்தது , அதில் அழகிய அனானி என்று ஒருவர் பின்னூட்டம் செய்திருந்தார் ,வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்ததில் இருந்து உங்கள் போக்கு சரி இல்லை என்று . அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் புலிகேசி பதிவுலகம் வரும் முன்பே எனக்கு நண்பன் என்று , இரண்டாவது அப்படி என்ன அவர் கெட்டுப்போய்விட்டார் , இப்பொழுது அவர் எழுதும் பதிவுகள் மிக ஆழமாய் இருக்கின்றது , சரி அந்த விமர்சனத்தில் என்ன குற்றம் கண்டீர்கள் , அதை பற்றி பேசாமல் வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்து கெட்டுப்போய்விட்டார் என்று சொல்வதில் என்ன நியாயம் நண்பரே.

சரி ராவணன் கதாப்பாத்திரம் , எங்கு இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா , நக்சல் தலைவர் kobad ghandy என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது . அப்படி நக்சல் தலைவன் விக்ரம் என்று காட்டும் பொழுது , அவன் ஏன் அப்படி ஆனான் அவனை மக்கள் ஏன் தலைவனாய் கடுவுளாய் நினைக்கிறார்கள் என்று சொல்லி இருக்கவேண்டாமா ????? இது ஒரு பாமரனக்கு கூட தெரியும் ஆனால் மணி சார் இயல்பாகவே அதை தவிர்த்தான் உள் நோக்கம் என்ன .மணி சார் ஒன்றும் இதெல்லாம் தெரியாதவர் அல்ல ,corporate கம்பனியுடன் கூட்டணி போட்டு எப்படி உழைக்கும் மக்களுக்கான படம் எடுக்கமுடியும் நண்பரே .

சரி வடக்கிழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா ?????????? 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்..


இதை போல் இருக்கும் பொழுது என்ன நடக்கும் ஒரு பெண் அழகாய் இருந்தால், அவள் அண்ணனை உள்ளே போட்டுவிட்டு , அதிரடி படை அனுபவிப்பார்கள் . இந்த மாதிரி அடக்கு முறை நம் தமிழ்நாட்டில் உள்ளதா ???? மணி சார் போல சத்யம் திரையரங்கு மக்களுக்கு படம் எடுப்பவர்களுக்கு இது புரியாது என்றே நினைக்கிறேன் . அங்கே சட்டம் எப்படி உள்ளது , அந்த சமூகம் எவ்வளவு அடக்குமுறை உள்ளது , மக்கள் ஏன் அங்கு நக்சலாய் மாறுகின்றனர் ,என்பதை தவிர்த்து விட்டு , அது என்னமோ பழிவாங்கும் கதை
போல , நாயகன் நாயகி விக்ரம் மூவருக்குள் நடக்கும் தாப போராட்டம் போல சித்தரித்தது உள்ளடக்கத்தில் எந்த விதத்தில் நியாயம் . மணி சார் சொல்வதை போல வெறும் நாயகனின் தங்கை மட்டுமா கற்பழிக்க படுவார் . இது பிரச்னையை எளிமை படுத்துவதை போல் உள்ளது அல்லவா?????

மக்கள் பிரச்னையை பலவீன படுத்திவிட்டு , நாயகன் தங்கை கெடுக்கப்படுகிறாள் , அதனால் அவர் போராடுகிறார் என்று காட்டுவது சிறு பிள்ளைத்தனம் , இது எல்லாம் மணி சார் அவருக்கு புரியாதா ????? ஆனால் கைகோர்த்திருப்பது முதலாளிகளுடன் , எப்படி அவரால் இதை செய்ய முடியும் . சரி வடகிழக்கில் தண்டகாரண்யாவில் மலையை "வேதாந்தா" என்னும் கம்பெனி வாங்க நினைக்கிறது , அது கனிம வளம் உள்ள பகுதி , உண்மையில் மக்களை விரட்டினால் தான் அந்த இடத்தை கைப்பற்ற முடியும் என்பதே உண்மை , அதனால் மக்களை விரட்டும் பணி, "OPERATION GREEN ஹன்ட்" என்னும் பெயரில் , நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் பொதுமக்களை வேட்டையாடுகின்றன. சரி அந்த மக்கள் ஒடுக்கப்படாமல் இருந்தால் அவர்கள் ஏன் தீவிரவாதியாய் சித்தரிக்க படவேண்டும் , அவர்கள் மண்ணிற்காக போராடுகிறார்கள் .
இதில் என்ன தவறு , இதை எல்லாம் துளிக்கூட காத்த மணி சார் , இதை பூசி மொழுகுகிறார் , அவன் மக்கள் தலைவன் என்று எளிமையாய் மறைத்து விட்டார் .இது தான் மணி டச் முக்கியமான விடயங்களை மணி தொடுவதில்லை .

ஐரோம் சர்மிளா என்ற கவிஞர் பத்து வருடமாய் உண்ணா விரதம் இருக்கிறார் , அவரை பற்றி ஏற்க்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் . சாமானியன் எனக்கே அந்த விடயம் தெரியும் பொழுது மணி சார் அவருக்கு தெரியாதா .ஒரு தலைவனது தங்கை மட்டுமே கெடுக்கபடுவாளா????? ஈழத்தில் எத்தனை சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர் , ஒரு சமூக பிரச்னையை தனிமனித பிரச்சனையாக சித்தரித்து , அவர்களுக்கு ஏற்படும் கோபதாபத்தை காட்டியதில் முக்கிய
பிரச்சனைகளை மறைக்கப்பார்க்கிறார் மணி .

சில ரசிகர்களுக்கு ஒரு பொது புத்தி உண்டு பேரரசு படம் பார்த்தால் அவனை எள்ளி நகையாடுவர் , நாங்க பார்த்தா மணிரத்னம் படம் மட்டுமே பார்ப்பேன் என்கிறார்கள் . ஒருவர் புலிகேசி பதிவில் பதில் போடுகிறார் படத்தின் தொழில் நுட்ப விடயங்களை நீங்கள் பாராட்டி இருக்கலாம் . ஒரு மயானம் அழகாய் இருக்கிறது என்பதற்காக நாம் எல்லாம் பிணமாய்
படுத்துக்கொள்வோமா ........ ஒரு அழகான ஒரு அழகான கிண்ணத்தில் விடம் இருந்தால் குடிப்பீர்களா ???? என்ன .......நான் ஒரு சாமனியன் என்னிடம் வந்து மணி சார்
படம் நன்றாய் இருக்கிறது என்றால் , நான் திருப்பதி , திருப்பாச்சி பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டு கலாய்ப்பது உண்டு . குளிர் சாதன அறையில் உட்க்கார்ந்து கொண்டு ஈழத்தை பற்றியும் , தண்டகாரண்யா பற்றியும் படம் எடுக்க முடியாது . அப்படி உண்மையிலேயே அப்படி அதை பற்றி கலை மக்களுக்காய் இருக்கவேண்டும் என்றால் அந்த மக்களிடம் கலக்க வேண்டும் .
அந்த மக்களிடம் பேசவேண்டும் . அவர்கள் சொல்வதில் தான் உண்மை நிலைமை தெரியும் பின்பு படம் பிடிக்கவேண்டும் நேர்மையாய் . மணி சார் ஏன் இந்த கதைக்களம் எடுத்தார் , ஏன் இதே ராமாயண புனைவை ஒரு SOFTWARE கம்பெனி வைத்துக்கொண்டு எடுக்கலாமே , ஏன் என்றால் இப்பொழுது அவர் வணிகம் அதிகம் , அதனால் இந்தி மக்களின் ஒட்டு மொத்த மக்களுக்கும் புரியும் படி ஒரு கதைக்களம் வேண்டும் , ஏன் என்றால் அப்பொழுது தான் கல்லா கட்ட முடியும் . தமிழிற்கு விக்ரம் , ஹிந்தி பச்சன் குடும்பம் , மலையாளம் பிரிதிவிராஜ்
என்று கணக்கு போடுக்கிறார் மணி , ஏன் இந்த புனைவை வேறு ஒரு கதைகளத்தில் சொல்லலாமே . இடம் திருநெல்வேலி என்கிறார் , திருநெல்வேலி இப்படி தான் இருக்கிறாதா என்ன ????? அவருக்கு தேவை இரண்டு மக்களுக்கும் புரியும் கதைக்களம் , அதனால் தான்
அவர் தேசிய பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு படம் செய்கிறார் .

















அருந்ததி ராய் எழுத்தாளர் , அவர் எழுத்துக்கள் எங்கு இருந்து வருகிறது ,அருந்ததி ராய் காட்டிற்குள் செல்கிறார் , மக்களை சந்திக்கிறார் எழுதுகிறார் , அதுவே உண்மையான கலைக்கு அழகு .மக்கள் பிரச்னையை தனிமனித கோபதாபம் என்று சிறுமை படுத்தி அப்பகுதி மக்களை கேவலப்படுத்திருக்கிறார் மணி சார் . இப்பொழுது சொல்லுங்கள் புலிகேசி என்னிடம் சேர்ந்து என்ன கேட்டுப்போயவிட்டார், சரி உங்களுடன் எல்லாம் சேர்ந்து என்ன உபயோகமாய் இருந்து விட்டார் . கட்டம் கட்டுவதெல்லாம் ஒன்றும் புதிதல்ல . நான்
இப்பொழுது பல பேருக்கு வாக்கு அளித்தால் பின்னூட்டம் போட்டால் எனக்கும் வாக்குகள் வரும் . அதில் என்ன இருக்கிறது நண்பா . நான் கட்டம் கட்ட பட்டவனாகவே இருக்கட்டும் . என்னுடைய கடைசி இருபது பதிவுகளில் , ஒன்று இரண்டு பிரபலமாயின , அதற்காய் நான் வருந்தவில்லை . இருந்தாலும் நான் நேர்மையாய் எழுதுகிறேன் என்பதில் கர்வம் உண்டு , அந்த நேர்மை புலிகேசிக்கும் வந்து கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு பெருமை .

என்னை ஐஸ்வர்யா ராய் வசீகரிக்க வில்லை , அருந்ததி ராய் மட்டுமே வசீகரம் செய்கிறார் .

நிர்மூலமான நிர்மலா

விழுப்புரம் அருகே ஒரு திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . மணப்பெண் காதலனை கைப்பிடிக்க, எதிர்வீட்டு பெண் மணமகள் ஆகி இருக்கிறாள் என்பதே செய்தி . அந்த எதிர்வீட்டு பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்க இல்லையா என்று கூட கேட்டு இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது .திருமணங்கள் என்னும் ஒரு சடங்குகள் , பெண்ணை சொத்து உரிமை ஆக்குகிறது . பெண்களால் தனியாக இயங்கமுடிவதில்லை . "வீட்டோட மாப்பிளை " என்றசொற்பதம் கேலி செய்வதற்காய் இருக்கிறது , எந்த சமூகத்தில் கேலி பொருளாய் இருக்கிறதோ அது ஆணாதிக்க சமூகமாய் தான் இருக்க முடியும். ஏன் "வீட்டோடு மருமகள் " இருக்கும் பொழுது வீட்டோடு மருமகன் இருக்க கூடாதா என்ன???? அதுவும் இந்த வேலைக்கு போகிற சமூகத்தில் தான் பெண்கள் அதிகமாய் சுரண்டப்படுகிறார்கள் . வீட்டிலும்வேலை வெளியிலும் வேலை , வேறொரு வீட்டில் அட்ஜஸ்ட் செய்து இருக்க வேண்டும் , என்ற நெருக்கடிகள் அவளுக்கு இயல்பாகவே இருக்கின்றன . இன்று காலை அந்த செய்தியை படித்தவுடன் எனக்கு நிர்மலா நினைப்பாகவே இருந்தது . அவளும் யாரையாவது காதலித்து இருப்பாளா??? அவளுக்கு எதிர் வீட்டு பையன் பிடித்து இருக்குமா ????????? திடீர் என்று திருமணம் என்று சொல்கிறார்களே எப்படி அவள் மனம் ஏற்றுக்கொள்ளும் ?????? பெண் என்ன சந்தை பொருளா ???????? இது இல்லை என்றால் அது என்று மாற்றிக்கொள்ள???இந்த ஊடகங்கள் நிர்மலா பற்றி எழுதாமல் ....... சினிமா பாணியில் விறுவிறுப்பாய் நடந்த திருமணம் என்று எழுதியது மனஉளைச்சலை ஏற்படுத்தியது . அடுத்தவர் வாழ்க்கை பரபரப்பான படமா என்ன ????? நிர்மலா மனதில் தற்பொழுது என்ன ஓடி கொண்டிருக்கும் .

Thursday 17 June 2010

ரத்த சரித்திரம்















நேற்று இரவு குமுதம் reporter படித்துக்கொண்டிருந்தேன் , சீமானின் பேட்டி கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது "தம்பி சூர்யவிற்க்காக விட்டுதருகிறேன்" என்று ஒரு பேட்டி , சரி உள்ளே என்ன விடயம் என்று பார்த்தால் , சூர்யாவின் "ரத்த சரித்திரம்" என்ற ஹிந்தி படம் வருகிறதாம் , அதிலே இலங்கை படவிழாவிற்கு ஆதரவு தந்த விவேக் ஓபராய் நடிக்கிறார் , அவருடன் சூர்யா நடிக்கிறார் . "அந்த படம் வந்தால் எதிர்ப்பு சொல்வீர்களா " என்று கேட்டதற்கு சீமான் அப்படி சொல்கிறார் , படத்தில் சூர்யா நடிக்கிறாராம் "அவர் தமிழ் உணர்வு மிக்கவராம் " . அதை சீமான் மதிக்கிறாராம் அதனால் இப்படத்தை மட்டும் வெளியிட தடை சொல்லப்போவதில்லயாம் . என்ன கொடுமை , சீமான் அவர்களே உங்கள் கொள்கையில் மாற்று கருத்து உண்டு , ஆனால் ஒரு நடிகரின் படம் என்பதற்காக , கொள்கைகளை நீர்த்து போக செய்யும் உங்களை போன்ற தலைமையை என்ன சொல்வது என்றே தெரியவில்லை . என் சூர்யா உங்கள் தம்பி என்பீர்கள் ,அதனால் படம் வரும் அந்த படத்தை ஒன்னும் செய்ய மாட்டோம் என்கிறீர்கள் . "அதுவும் சூர்யாவின் தமிழ் உணர்வை மதிக்கிறேன் " என்கிறீர்கள்.

அப்படி என்ன தமிழ் உணர்வை கண்டீர்கள் , "பெப்சி ,சன் குழுமம் ,ரெட் giant , cloud Nine " போன்ற ஏகதிபத்தியத்தோடு கூட்டணி போட்டு விளம்பரத்தில் நடிப்பதை விட என்ன செய்துவிட்டார் . சரி அவர் நல்ல மனிதர் என்று நீங்கள் சொல்லலாம் , அகரம் foudation வைத்து இருக்கிறார் என்று சொல்லலாம் . இது எல்லாம் NGO வேலைகள் , இரண்டாம் கட்ட தீர்வு , இது ஒரு பிரச்னையை முழுமையாய் தீர்பதில்லை நான் சொல்லவில்லை
மார்க்ஸ் சொல்லி இருக்கிறார் . சரி அப்படி பார்த்தால் நான் கூட நல்லவன் , எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு காசு விடயத்தில் உதவிகள் செய்து உள்ளேன் , சில பிச்சைக்காரர்களுக்கு காசு போடுகிறேன் . இன்று பிச்சைக்காரனுக்கு காசு போடுகிறேன் , நாளை என்னிடம் காசு இல்லை அப்பொழுது முடியாது என்று சொல்லிவிட்டு போவேன் . இது தான் எதார்த்தம் . இதன் பேர் தான் NGO வேலை , உலகத்திலே மிகப்பெரிய அரசியல் "முடிந்ததை செய்வேன்"
என்பது , அகரம் foundation என்பது கூட இதை போல செயலே . ஒரு தனிமனிதனிடம் இருந்து தீர்வு எப்பொழுதுமே வருவதில்லை என்பது மட்டும் நிதர்சனம் .

சரி உங்கள் கொள்கைகளை தம்பிக்காய் விட்டுகொடுப்பீர்கள் என்றால் என்ன கொடுமை . நீங்கள் இவர்களை எதிர்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று நானே சொல்லுவேன் .நீங்கள் அமிதாப் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை , ஆனால் கொண்ட கொள்கை தவறாக இருந்தாலும் உங்களிடம் ஒருநேர்மையை எதிர்ப்பார்த்தேன் , ஆனால் அது கூட இல்லை . எனக்கு தெரிந்து இதிலும் சகபதிவர்கள் வருவார்க minus வாகுகளை குத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் . ஏன் என்றால் இங்கே தமிழ் உணர்வு என்பது ஒருவருக்கு கொடிப்பிடிப்பதாய் ஆகி விட்டது என்ன செய்ய .

உங்கள் உணர்வை விட , உங்கள் தம்பியின் தொழில் தான் முக்கியாமா . இந்த படம் தமிழ் நாட்டில் ஓட வில்லை என்றால் , சூர்யா வீட்டில் அடுப்பு எரியாதா . தனி மனிதர்களுக்காய் கொள்கைகள் தகர்த்த படலமா ?????? "ரத்த சரித்திரம் " படம் பற்றி கவலை படுகிறீர்களே , ஈழத்தின் "ரத்த சரித்திரம்" தெரிந்த பின்பும் .

Sunday 13 June 2010

பிரபா அண்ணாவிற்கு

நேற்று இரவு நண்பன் புலிகேசியுடன் பேசிக்கொண்டிருந்தேன் , அப்பொழுது அவன் ஒரு அதிர்ச்சியான விடயத்தை சொன்னான் , பிரபாகர் அண்ணனின் தம்பிதிவாகர் இறந்து விட்டார் என்று கலங்கி போய்விட்டேன் . பிரபாகர் அண்ணா பதிவுலகில் பல பேருடன் நெருக்கமாய் இருப்பவர் . எனக்கு முன்பெல்லாம் அடிக்கடி போன்செய்து
பேசுபவர், தம்பி அப்படி எழுதாத இப்படி எழுது என்று கையை பிடித்து சொல்லிக்கொடுப்பவர் . கடைசியாய் நான் சச்சின் பதிவு போட்டபொழுது கண்டித்துவிட்டு சென்றார் மறுபடியும் நான் ஒரு எதிர்வினை செய்தேன் , அன்று முதல் நானும் அவரும் பேசுவதில்லை . ஆனால் நேற்று இச்செய்தியை கேட்டு அதிர்ந்து தான் போனேன் . எத்தனையோசோகங்கள் இருக்க மரணம் மட்டும் ஏன் இவ்வளவு வலியை கொடுக்கிறது , ஏன் உலகம் இத்தனை சோகங்களை புதைத்து கொண்டுள்ளது . எப்படியும் ஒரு நாள் அனைவரும் போகக்கூடியவரே ,
ஆனால் மரணம் என்று வரும்பொழுது இனிமேல் அந்த நபரை நம்மால் பார்க்கவே முடியாது என்பது மிகப்பெரிய வேதனை .அவரை நம்மால் பார்க்க முடியாது , அவரால் நம்மைபற்றி நினைக்க முடியாது "HE IS NO MORE " என்பது எவ்வளவு வேதனை . அண்ணா உங்கள் வருத்தம் புரிகிறது , நான் இதற்க்கு முன்னால் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் .உங்கள் தம்பியின் இழப்பை ஈடு செய்ய முடியாத தம்பிகளாய் இருக்கிறோம் , ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா.

Saturday 12 June 2010

தண்டவாளம் தகர்ப்பும் சில அரசியல் சூழ்ச்சிகளும்

தமிழகத்தில் நேற்று விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட குண்டு வைத்தார்கள் , ரயில் அதிர்ஷ்ட வசமாய் தப்பியது.சரி குண்டு வைத்தது , ராஜபக்க்ஷே வருவதை எதிர்ப்பு தெரிவிக்க , ஈழம் விரும்பும் ஏதோ ஒரு தமிழர் இயக்கம் தான் செய்திருக்க வேண்டும் , என்று செய்திகள் கசிகிறது . ஊடகங்களும் செய்திதாள்களும் ஆதிக்க வர்க்கம் , மற்றும் ஆளும் வர்க்கத்தின் குரல் என்பதை மறந்து விடக்கூடாது .இந்த மாதிரி செய்திகள் வருவதால் யாருக்கு லாபம் , கொஞ்சம் யோசித்து பாருங்கள் . இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழர் இயக்கங்கள் இதை செய்யுமா ??? என்பது தான் கேள்வி . அவர்களுக்கு இங்கு பொதுமக்கள் உபயோகபடுத்தும் தண்டவாளத்தை தகர்ப்பதால் யாருக்கு லாபம் , இது அவர்களுக்கு தெரியாதா??? அப்படியே குண்டு வைக்க வேண்டுமென்றாலும் அவர்களுக்கு பொது மக்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் எதிரிகள் இந்தியாவை ஆளும் , தமிழகத்தை ஆளும் மற்றும் வாக்கிற்காக ஈழத்தை ஆதரித்து பேசினாலும் ஈழத்திற்கு எதிரான கட்சிகள் ,
இவர்கள் தான் இவர்களது இலக்காய் இருக்க முடியும்.


இதை வெறும் செய்தியாய் மட்டும் பார்க்காமல் ஆய்வு செய்து பாருங்கள். ஈழம் ஓரளவு தமிழகத்திலே அலையை ஏற்படுத்துகிறது , சீமான் போன்றோர் 'நம் தமிழர்' இயக்கம் என்ற பெயரிலே இயக்கங்கள் ஆதரிக்க படுகிறது .அவர்கள் செய்யும் வேலைகளில் என் அரசியல் நிலைப்பாடு வேறு. ஆனால் இங்கே இவர்களை போன்ற ஏதோ ஒரு இயக்கமே தண்டவாளத்தை தகர்த்து இருக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது . ஏன் என்றால் மக்களை நேசிக்கும் இயக்கங்கள் ,அரசியல் ரீதியான தவறான முடிவுகள் எடுத்தாலும் , இதை போல வேலைகள் செய்யமாட்டார்கள் என்பதே என் கருத்து .

சரி அப்பொழுது இந்த விடயங்களை யார் செய்திருக்க முடியும். ராஜபக்க்ஷே வந்துள்ளார் , AIRTEL நிறுவனம் IIFA விழாவிற்கு sponser செய்தது என்று அங்கங்கே எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது . கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துகிறார் , ஈழம் பிணவறையில் இருக்கும் பொழுது , ஏன் சோனியா காந்தியை காட்டாயம் அழைப்பார் , சோனியா இத்தாலியின் வேலுநாச்சியார் என்று கூட அடுக்கு தொடரிலே பேசுவார் . மக்கள் இதை பார்த்து எரிச்சல் அடைய வாய்ப்பு இருக்கிறது . இந்த நேரத்தில் தமிழர் இயக்கங்கள் எழுச்சி அடையவும் இது ஒரு வாய்ப்பாய் இருக்கும் . பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டும் , இந்த தமிழர் இயக்கங்களையும் மக்களையும் அந்நிய படுத்தவேண்டும் . மக்களுக்கு இவர்கள் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படவேண்டும் . இல்லை என்றால் அரசியல் ரீதியாய் அவர்கள் வளர ஒரு வாய்ப்பு உண்டு .

அதனால் இது நடந்த அரசியல் சூழலை பார்க்கும் பொழுது யார் செய்து இருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது . மக்களுக்கான போராடும் இயக்கங்களை ஒடுக்க , மக்களையே எதிராய் ஆக்கும் வேலையை அதிகாரம் செய்தவர்கள் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள் . மக்கள் கிளிப்பிள்ளை போல ஊடகம் யாரை எல்லாம் தீவிரவாதி என்று சொல்கிறதோ அவர்களை பற்றி ஆராயாமல் , கட்டாயம் இவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு கிரிக்கெட் பார்க்க செல்கிறது நடுத்தரவர்க்கம் . வட இந்தியாவில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது கூட இதை ஒட்டி தான் என்பது அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு புரியும் . என்றுமே போராளிக்களுக்கு மக்கள் எதிரி அல்ல , மக்களை கொல்வதால் எதிர்ப்பு தான் வரும் என்ற புரிதல் அவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் . அவர்கள் அப்படி குண்டு வைக்க வேண்டுமென்றாலும்
அவர்களுக்கு எதிராய் இருப்பவரை தான் கொள்ளவேண்டும் என்று நினைப்பார்களே தவிர மக்களை அல்ல . அவர்களை தீவிரவாதியை சித்தரித்து மக்களிடம் இருந்து தனிமைபடுத்த வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது .


பின்குறிப்பு:

பிச்சைக்காரன் என்ற பதிவரின் பதிவுகளை படித்தேன் நன்றாய் எழுதிகொண்டிருக்கிறார் .
ஆனால் தமிழ்மணத்திலே அவர் வாக்கை கூட செலுத்தாமல் இருக்கிறார் . பாராட்டுபவர்கள் கூட அவருக்கு வாக்கு அளிக்க வில்லை என்பது வேதனை. krp செந்தில் என்பவரும் மிகச்சிறப்பாய் எழுதிகிறார் . இருவருமே சமூகப்ரச்சனைகளை நன்றாய் எழுதுகிறார்கள் , சில விடயங்களில்
அரசியல் மாற்றுக்கருத்து இருந்தாலும் , சமூக அக்கறையான பதிவர்கள் , அவர்கள்
பார்வை விசாலமாய் இருக்கிறது என்று நினைக்கிறான் படித்துவிட்டு சொல்லுங்கள்

KRP செந்தில்
பிச்சைக்காரன்

Wednesday 9 June 2010

பார்த்துப்போ


அவளை பார்த்துக்கொண்டே
போனேன் ..........
"பார்த்துப்போ "
அம்மா சொல்லி இருக்கிறாளே ...........!

பார்த்து போகும் பொழுதே
கல் தடுக்கி விழுந்தேன்
"பார்த்து போ பா "
பெயர் தெரியாத பெரியவர் சொன்னார்......!

என்ன செய்ய அவளை பார்த்துக்கொண்டே
போகும் பொழுது ....எதையும் பார்த்து போக
முடியவில்லை ......!

Tuesday 8 June 2010

தனிமையின் இசை






















வாழ்க்கை முழுவதும் தனிமை கவ்விக்கொண்டிருக்கிறது , ஏதேதோ சொல்ல முடியாத வலிகள் ரணங்கள் . மார்க்ஸ் சொன்ன இயக்கவியல் உயிருடன் இருக்கும் மனிதனுக்கு ,இறந்த மனிதன் எங்கே செல்வான். நாம் இறந்தவர்களை எல்லாம் சந்திக்கவே முடியாதா????? எத்தனை காதல்களை இந்த உலகம் பதிவு செய்திருக்கும் , எத்தனை பார்வை
பரிமாற்றங்களை பதிவு செய்திருக்கும். இருந்தும் ஒரு நேரத்தில் இறந்து தானே ஆக வேண்டும் , இல்லை நமக்கு பிடித்தவர் நம்மை விட்டு இறந்து தானே ஆக வேண்டும்என்பது மனதின் ஆழமான துயரத்தை ஏற்ப்படுதிக்கொண்டே இருக்கிறது . இதை எல்லாம் நினைத்து நினைத்து இரவு கவ்வி கொள்ளும் வேளையில் , விளக்கிற்கு வேலை இல்லாத
வேலையில் குலுங்கி குலுங்கி அழுததுண்டு . நான் மரணங்கள் ஏற்ப்படும் பொழுது அழுவதில்லை , அழுது புலம்பும் மற்ற நண்பர்கள் , உறவினர்களை தேற்றும் வேலையே செய்து கொண்டே இருப்பேன் , ஆனால் இறந்த அந்த நபரை என்னால் மறக்க முடியாது , தொடர்ச்சியாய் பல நாட்கள் நினைத்து நினைத்து அழுவேன் , இதை எல்லாம்நினைக்கும்
பொழுது என்ன வாழ்க்கை என்ன காதல் , என்ன குடும்பம் என்று தோன்றுகிறது . தனிமையின் இசை கொடூரமாய் இருக்கிறது , நீ தனியானவன் என்று ஆணித்தனமாய் சொல்கிறது . எந்த இசை கோர்வை உடன் சேராத இசையை வாசித்துக்கொண்டிருக்கிறது . ஒரு நேரத்தில் அந்த ஒற்றை இசை கூட காற்றில் கலந்து விடுகிறது , பேரமைதி மட்டும் இருக்கிறது . அப்பேரமைதியில் ஒரு அமைதி இல்லாத அமைதி இருக்கிறது . இறந்தவர்கள் எங்கே போய் இருப்பார்கள் , அந்த மன நிலையில் ஒரே ஒரு பாடலை மட்டும் கேட்பேன் , புதுப்பேட்டையில் வரும் " ஒரு நாளில் வாழ்கை " என்ற பாடல் . " தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை" " இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் " ....போன்ற வரிகள் , தனிமையின் இசை கொடூரமானது , நாம் எங்கெங்கோ ஓடி கொண்டிருக்கிறோம் , கடைசியில் பார்த்தால் ஒன்னுமிள்ளததர்க்கு ஓடிக்கொண்டிருப்பது போல் உள்ளது , துக்கம் பீரிட்டு வருகிறது எதற்கு இந்த உலகம் . சில நேரம் மார்க்ஸ் போல இருக்க வேண்டும் என்று இயக்கவியல் மற்றும் மனிதர்களை கூர்ந்து படிக்க வேண்டும் , போராட வேண்டும் என்று சொல்லும் மனம் , பல நேரம் dostovesky போல தனிமைக்கு தாவுகிறது , அது அர்ப்பவாதமே ஆனால் அதை நோக்கியே மனம் போகிறது .

Monday 7 June 2010

விடத்தை கக்கிய சட்டம் போபால்
















இன்று காலையில் தேனீர் கடையில் செய்தித்தாளை புரட்டியவுடன் எனக்கு பேரதிர்ச்சி என்று சொன்னால் அது மிகை , நான் என்ன தீர்ப்பு வரும் என்று நினைத்தேனோ அதைபோலவே போபால் விடவாயு வழக்கில் நம் சட்டம் நடந்து கொண்டிருக்கிறது . நமக்கு சரி தவறு என்று விமர்சனம் செய்ய தகுதி இல்லை என்று வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்பட்டஅந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன என்பது கண்கூடாய் தெரிகிறது . அதிலும் ஏழு பேருக்கு மட்டுமே தண்டனை இரண்டு ஆண்டுகள் , முதாலாளி வாரேன் அன்டேர்சன் சொகுசாய் உள்ளார் . அதுவும் அந்த தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொகை இருபத்தி ஐயாரிரம் கட்டிவிட்டு ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டார்களாம் . என்ன கொடுமை???? தீர்ப்பே இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து தான் என்றால் , என்ன கொடுமை . இந்திய அரசு, அமெரிக்கா அண்டேர்சென்னை விசாரணைக்கு அனுமதிக்க வில்லை என்று சப்பை கட்டுகட்டுகிறது . ஆனால் காசாப் கூட பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் , அவன் வழக்கு என்றால் ஒரு ஆண்டில் தீர்ப்பு வரும் , தூக்கில் போடப்படுவான் ஏன் என்றால் அங்கு அவன் கலகம் செய்த இடம் முதலாளிகளின் கூடாரம் தாஜ் ஹோட்டல் ஓபராய் ஹோட்டல் போன்ற இடங்கள் . ஆனால் இங்கு போபால் விடயத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கபட்டாலும் இங்கு மாட்டிக்கொண்டது முதலாளி, சட்டம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. BSNL NETWORK வைத்து சுமார் 1500 கோடி ஏமாற்றிய அம்பானி வெறும் 90 லட்சம் அபராதம் கட்டிவிட்டு வெளியே வருவார்கள் , இதை 100 ரூபாய் திருடிய திருடன் ஐம்பது பைசா மட்டும் அபராதம் கட்டி அடிவாங்காமல் வெளியே வரமுடியுமா என்ன??? விட வாயு கொன்றதை விட , சட்டம் விடவாயுவை கக்கிகொண்டிருக்கிறது.


ஏன் அன்டேர்சன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை , குறைந்தபட்ச தண்டனை கூட கொடுக்க முடியாதா ????? உங்கள் சட்டம் எல்லாம் பஸ்சில் டிக்கெட்எடுகாதவன் , பிக் பக்கெட் போன்ற இடங்களில் தான் செல்லுபடி ஆகுமா???????? ஏன் உங்கள் சட்டம் மேட்டுக்குடி மக்களிடம் செல்லுபடி ஆக வில்லை . சரி போபால் விடயத்திற்கு வருவோம், 100 பேரை கொன்ற கசாப் தீவிரவாதி என்றால் , 1000 கணக்கில் கொன்ற இன்னும் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் போபால் போன்ற இடத்தில் எப்படி இருக்க வேண்டும் தண்டனை . வெறும் ரெண்டு ஆண்டு தண்டனையாம் அதுவும் முதலாளி அன்டேர்சன் அவருக்கு
கிடையாது , ஏன் என்றால் அவரை விசாரிக்க அமெரிக்க அனுமதிக்கவில்லையாம். அப்படி அனுமதிக்கவில்லை என்றால் உலகத்தின் முன் இந்திய ஊடகங்கள் இதை கவனத்திற்கு கொண்டு போய் சேர்த்து இருக்க வேண்டுமே . உலகமே அன்டேர்சன் எதிராய் குரல் கொடுக்க வைத்திருக்க வேண்டுமே . கசாப் விடயத்தில் வீரத்தை காட்டிய ஊடகங்கள் இதில் ஏன் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை . ஏன் என்றால் இவர்கள் நோக்கமே முதலாளியை காப்பாற்றுவது . முதலாளிக்கு ஓபராய் ஹோடேலில் தீங்கு நேர்ந்தால் உலகத்தின் முன் தீவிரவாதம் என்று கூச்சலிடு . ஆனால் போபாலில் செத்து இருப்பது வெறும் பத்தாயிரம் பேர் தானாம் அதுவும் சாமானியர்கள் , போய் சாகட்டும் , அன்டேர்சன் பாதுக்காபாய் இருக்கிறாரா என்று பாதுகாக்கிறது சட்டம் . இந்திய அரசு அவரை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காது என்பதே உண்மை ,மனித உயிர் என்பது முதலாளிகளின் எச்சமா ????? பணம் உள்ளவனே வாழ தகுதி உள்ளவனா?????

Sunday 6 June 2010

நடுநிலை என்னும் அயோக்கியத்தனம்

ஒரு பிரச்சனை என்று வந்தால் நடுநிலையாக இருக்கிறோம் என்று சிலர் வாயை திறப்பது இல்லை , இதன் பெயர் நடுநிலையா ? இந்த விடயங்கள் தான் நம் அரசியல் சமூகத்தை நிர்ணயம் செய்கிறது என்று நினைக்கிறேன் . ஒரு பிரச்சனை என்று வந்தால் நமக்கு ஏன் வம்பு என்று போகிறவனை, இந்த சமூகம் வம்பு தும்பிர்க்கு போகாதவன் நல்ல பையன் என்கிறது ???? அதாவது ஊர் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் நான் நல்ல இருந்தால் போகும் என்ற நினைப்பு . தப்பான அணியில் இருப்பவர்களை கூட ஏற்றுக்கொள்ளலாம் அவர்களிடம் கருத்து என்பது உண்டு , ஆனால் இந்த புறமும் சேர மாட்டேன் அந்த புறமும் சேர மாட்டேன் நான் நடுநிலைவாதி என்று சொல்பவனை ஏற்றுக்கொள்ளவே முடியாது .

நடுநிலை என்பது அதாவது இவர்கள் சொல்லும் நடுநிலை என்பது என்னவென்றால் யாருக்கும் குரல் கொடுக்கமால் நான் உங்களுக்கும் நல்ல பிள்ளை எங்களுக்கும் நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க நினைப்பது , இவை எல்லாமே பிழைப்புவாதம் , இந்திய நடுத்தரவர்க்கத்தின் மனநிலை . இந்த உப்பு சப்பு இல்லாதநடுத்தரவாதிகள்
ஆபத்தானவர்கள் .......!!!!!இவர்கள் நடுத்தரம் என்ற பெயரிலே தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறுகளுக்கு ஒரு விதத்தில் துணையாய் இருக்கிறது என்பதே உண்மை நிலவரம் ..............!!!!!ஏன் இதை எழுதுகிறேன் என்று குழப்பமாய் இருக்கிறதா .....கட்டாயமாய் முல்லை நரிசிம் விடயத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

Wednesday 2 June 2010

பதிவுலக மனஉளைச்சல் மற்றும் புரிதல்











நான்கு நாட்களாய் ஒரே மன உளைச்சல் , பதிவுலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று . நிறைய பதிவர்கள் நரசிம் செய்தது ஆணாதிக்கம் ஆனால் இங்கே ஜாதி எங்கே வந்ததது என்று கேள்வி கேட்கிறார்கள் . சரி தனிமனிதன் சமூகத்தின் விலை பொருளே அன்றி அவன் சிந்தனையும் செயலும் தனிப்பட்டதல்ல . உதாரணமாய் நம்முடைய பொருளாதாரம் வைத்து , நம் ஜாதி வைத்து நாம் சாப்பிடும் ஹோட்டல் முதல் திரையரங்கு வரை மாறும் . சத்யம் திரையரங்களில் பார்க்கும் மக்கள் வேறு , சைதை ராஜ் திரையரங்கில் பார்க்கும் மக்கள் வேறு என்றே நினைக்கிறேன்.

நாம் வாழும் சுழல் நம் மதம் நம் ஜாதி வைத்து சிந்தனைகள் மாறும் என்பதே உண்மை . சரி ஆணாதிக்கத்தின் வேர் எங்கு இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்அது பார்ப்பனீயத்தில் இருந்தே தோன்றுகிறது . ராமன் இதற்க்கு சிறந்த உதாரணம், சீதை ஏன் தீ குளிக்க வேண்டும் , பெண்ணிற்கு மட்டும் தான் கற்பு என்ற விடயம் இருக்கிறதா.???????அப்படி பார்க்கும் பொழுது ஆணாதிக்க சிந்தனை பார்ப்பனீய முறையில் தான் அதன் வேர் . இன்று மற்ற ஜாத்களில் பார்பனீயம் இருந்தாலும் , ஆணி வேர் எங்கே உள்ளது . இன்றும்கூட மாதம் மூன்று நாள் என்றால் பெண்கள் வீட்டிற்கு வெளியே செருப்புடன் செருப்பை உட்கார்ந்து இருப்பார்கள் , இந்த நவீன காலத்திலும் சென்னையில் உள்ளது இதை மறுக்க முடியுமா .அந்த பெண் IT துறையிலே வேலை பார்த்து இருப்பாள் உழைத்து கலைத்து வந்தாலும் அவள் வெளியே உட்க்கார வைக்கப்பட்டு இருப்பாள் . பார்பனர்கள் என்ன சொல்கிறார்களோ , அதையே முறை என்று மற்ற மக்கள் நம்புவது உண்டு . இன்றும் கூட கிராமத்தில் ஒரு பர்பாணன் என்றால் சாமி என்று அழைப்பார்கள்.அதனால் நாம் வளர்ப்பு முறை சுழல் , சமூக சுழல் என்ற விடயம் தான் ஒரு மனிதனின் சிந்தனையை நிர்ணயிக்கிறது.

அதனால் ஆணாதிக்கம் என்று சொல்லும் பொழுதே பார்பனீயம் வருகிறது என்பதே என் விமர்சனம். மனிதன் தனிப்பொருள் அல்ல , அவன் சமூகத்தின் உற்பத்தி ,சமூகத்தின் உள்ள தவறுகள் திருத்தி அமைக்கப்படும்போழுது தனிமனிதன் சிந்தனையால் திருந்துவான் என்றே நினைக்கிறேன் . சரி வினாவிற்கு கட்டுரைஎழுதி
கொடுத்த சிவராமன் பார்பனர் இல்லையா என்பது கேள்வி ?? பிறப்பால் இருந்தாலும் என்றாவது அவர் பதிவுகளில் ஆணாதிக்க தொனி இருக்கிறதா ..... இல்லை பெண்களைவக்கிரமாய் திட்டி இருக்கிறாரா ???? பார்பதற்கு கேவலமாய் இருப்பா டா ???? என்றெல்லாம் எழுதியது உண்டா ????இல்லை ஆதிக்க மனநிலையுடன் பேசியது உண்டா .சரி நரசிம் சொல்வதை போல் பூக்காரி எல்லாம் விலைமாதுக்கள் என்ற பார்வை இருந்ததுண்டா. தினமும் ஒரு பூக்கார கிழவியை பார்ப்பேன் , மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு , அலுவல் முடிந்து வரும்பொழுது அந்த கிழவி பூக்கள் விற்க முடியாமல் விற்று கொண்டிருப்பாள் , அந்த கிழவியின் உழைப்பு மீது மரியாதை வரும் , பூக்காரி என்றால் கேவலாமா என்ன ??????என்ன சொல்வது இதை போல ஆதிக்கமாய் யார் யோசிக்க முடியும் ஆதிக்க சாதியினரே , நரசிம் பூக்காரிகள் பற்றி கேவலாமாய் எழுதும் பொழுது ஏன் அவர் ஜாதி மட்டும்
விமர்சனம் செய்யக்கூடாது . எத்தனை பூக்காரிகளை அவருக்கு தெரியும் .

பூக்காரியை திட்டுவதன் மூலம் ஆதிக்க ஜாதி தெரிகிறது இல்லையா ???? அப்பொழுது விமர்சனம் அதை ஒட்டி தான் இருக்கும் . நாம் தெரிந்தோ தெரியாமலோ நம் ஜாதி நம் பொருளாதாரம் சார்ந்தே நம் யோசனை முறை இருக்கும். இதற்க்கு நரசிம் மட்டும் அல்ல எல்லாருக்குமே இது பொருந்தும் , ஒரு மனிதன் தவறு செய்வது என்பது அவன் தவறல்ல அந்த சமூகத்தில் இருந்த மனிதன் அப்படி தான் பேச முடியும் . காலையில் இதை பற்றி ஒரு இடுகை படித்தேன் , பெண்ணை திட்டுவதென்றால் தேவடியா ??? ஆணை திட்டுவதென்றால் தேவடியா மகன் .எப்படி பார்த்தாலும் பெண்களுக்கே வசவு . இந்த தவறை எல்லாரும் செய்கிறார்கள் , அப்பொழுது இது தனிமனித பிரச்சனையா, எதை விமர்சனம் செய்யவேண்டும் முதலில் அதன் வேர் சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும் , அதவாது இவிடயத்தில் ஜாதியை விமர்சனம் செய்து விட்டு தான் தனிமனிதனை விமர்சனம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.

சிவராமன் பதிவில் இதெல்லாம் தெரிந்ததா என்றால் தெரியவில்லை , நரசிம் பதிவில் தெரிந்தது . அவர் பூணல் போட்டுக்கொண்டிருக்கிறாரா என்பது பிரச்சனை அல்ல ???? என்ன எழுதினார் , அவர் அப்படி பார்பனீயத்தை குடை பிடித்து இருந்தால் நர்சிமை அம்பலப்படுத்தி இருப்பாரா ????? சரி சிவராமன் எழுதினார் என்ற ஒரே காரணத்திற்காக நரசிம் செய்தது சரி என்று நிருவுகிரீர்களா . உயிர் நண்பனாய் இருப்பது தனிப்பட்ட பிரச்சனை ,ஆனால் உன் உயிர் நண்பனால் சமூகத்திற்கு தீங்கு என்றால் தலையை துண்டிக்க தானே வேண்டும் . அதை தானே செய்தார் சிவராமன் . சிவராமனின் பின் புலம் வேண்டாமா என்கிறீர்கள் , நண்பர்களே அவர் எழுதும் தொனியில் பார்ப்பனர் என்பதே தெரியவில்லை என்பதே உண்மை . ஒரு மனிதன் பொது வெளியில் எப்படி இருக்கிறான் என்பதே கணக்கு.

சரி விடுங்கள் இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது , ஏதொ மனதில் பட்டதை எழுதுகிறேன். எல்லா கேள்விக்கும் என்னால் பதில் அளிக்க முடியும் ஆனால் பிரச்சனை எங்கு எங்கோ செல்வதை நான் விரும்பவில்லை . இந்த பிரச்சனையில் எனக்கு இழப்புகள் அதிகம் , என் நண்பர்களை இழந்துள்ளேன் ,அதிக மன உளைச்சல் , என் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் எதிர் திசையில் , அவனுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே நினைத்ததை பேசுவோம் ,அது என் மன உளைச்சலை அதிக படுத்துக்கிறது . மன்னித்துவிடு நண்பா இப்பொழுதும் நான் சரி என்று பட்டதையே செய்கிறேன் .