
மிக பெரிய நட்சத்திர பதிவர் நரசிம் என்னை அறிமுக படுத்தியதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்கிறேன்.முதலில் என் உயிர் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் என்னை அறிமுக படுத்தினான்.அரவிந்தும் சரி நர்சிமும் சரி சாருவின் வாரிசுகள். நரசிம் ஒரு புத்தகம் வெளியிட போகிறார் அய்யனார் கம்மா. தலைவர் சாரு போல மிகப்பெரிய ஆளுமையாக வர வாழ்த்துக்கள்.
நரசிம் புத்தக வெளியீடு பற்றி பார்க்க என்ன பெரிய விஷயம் என்றால் சாரு நரசிம் சங்க இலக்கியம் பற்றி எழுதியதை அவர் பதிவில் எழுதி இருந்தார் அன்று நரசிம் என்னைப் பற்றி எழுதி இருந்தார்.இதைப் போல் உயிர் நண்பன் அரவிந்த் யோகி பற்றி எழுதி இருந்தான். அந்த யோகி பதிவில் என் பெயர் இடம் பெற்று இருந்தது.
எனக்கு முன்பெல்லாம் சாரு என்றாலே பிடிக்காது அவருக்கு இளையராஜா பிடிக்காது அதனால் பிடிக்காமல் இருந்தது. போக போக சாரு மீது ஒரு இனம் புரியாத அன்பு. மனிதர் என்றால் நேர்மை போலி இல்லாத அன்பு அப்பா வியப்பாய் இருக்கிறது.கமல் என்றால் எல்லாரும் பாராட்டுவார்கள் சாரு திட்டுவார் வெறும் விளம்பரத்திற்கு அல்ல,கமலிடம் அவர் கேட்கும் ஒரு கேள்விக்கும் கமலால் பதில் சொல்ல முடியாது."தலைவன் இருக்கிறான்" என்ற படத் தலைப்பு "உன்னைப் போல் ஒருவன்" ஆனது .
அது தான் சாருவின் ஆளுமை. existentialism fancy baniyan புத்தகம் படித்தேன்.அது சாருவின் வாழ்க்கை வரலாறு என்று வாசகனுக்கு தெரியும்.இருந்தாலும் ஓரினச்சேர்க்கை பற்றி எழுதி இருப்பார்.
பதிவு எழுதும் நான் கூட நல்லவன் என்று தான் வேஷம் போடுவேன். தன் செக்ஸ் வாழ்க்கையை பற்றி எழுத யாருக்காவது தைரியம் உண்டா.கமல் சொன்னால் அப்படியே கேட்காமல் அது தவறு என்று சுட்டிக்காட்டும் ஆளுமை உண்டா. மனுஷியா புத்திரன் என்றாலும் அவரையும் கிழிப்பார் என் சாரு. தன் புத்தகம் வெளி ஆக வேண்டும் என்று ஜால்ரா போட மாட்டார். அவருக்கு ஜால்ரா அடியாள் என்றால் நானும் சேர்ந்து கொள்வேன்.
நரசிம் பதிவு பற்றி சாரு எழுதி இருந்த போது அதில் என் அதிர்ஷ்டமாக நரசிம் எழுதிய வேறு பதிவில் நான் இருந்தேன். அதே போல் அரவிந்த் எழுதிய பதிவில் சாரு சொல்லி இருந்த பதிவில் என் பெயர் உண்டு . சாரு சொல்லித் தான் dostovesky தெரியும் வெண்ணிற இரவுகள் என்று பெயர் வைத்தேன்.சாரு பார்க்காத சாருவிடம் விடயம் கற்றுக்கொண்ட 'ஏகலைவன்'.
எவ்வளவு பெரிய எழுத்தாளர் நான் எழுதினால் அழகாய் பதில் போடுவார்,ஆனால் எனக்கு பின்னூட்டம் எழுதியவருக்கு பதில் போட கூட நேரம் இல்லை,யார் பெரிய ஆள். சாரு ஒரு ஆளுமை,அவரின் புது அடியாள் அடியேனே. ஒரு தலைக்கு வாலாக இருப்பது தப்பில்லை.
எனக்கு ராமகிருஷ்ணன் கூட பிடிக்கும் ஆனால் அவர் படிக்கும் போது மிக நல்லவர் என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் சாரு ஒரு குழந்தை ஒரு காட்டாறு,சாருவை புரிந்து கொண்டாலே நீ அனைத்து இலக்கியம் படித்த மாதிரி.சாரு உலக இலக்கியத்தின் சாறு.அடியாளாக இருப்பதில் பெருமை.
சாருவை பிடிக்காதவர்கள் சாரு சொல்லும் உண்மையை ஜீரணிக்க முடியாதவர்கள் .இருந்தாலும் தினமும் அவர் வலை தளத்தை மேய்பவர்கள்.galileo வை பைத்தியம் என்று தான் சொன்னார்கள்.பாரதி அவர் சம காலத்தில் கோமாளியாகவே
பார்க்கப்பட்டார். சாரு கலியுக பாரதி. இலக்கியத்தில் அழகு என்பதை விட ஆணித்தனமான உண்மை இருக்கும்.ஒரு ஜால்ரா போட தெரியாதவனுக்கு ஜால்ரா போடுவது தப்பு இல்லை. அவரின் பெருமைக்குரிய அடி ஆள் வெண்ணிற இரவுகள் கார்த்திக்