Thursday, 29 October 2009

மேகம்,மழை,ரயில்,மேகலா
















ச்சோ என்ற மழையில் ரயில் நகர துடங்கியது.செல்வத்திற்கு மழையும் ரயிலும் அவன் காதலின் குறியீடு.ஒரு மழை நாளில் அவளை சந்தித்தான்.தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் அவன் அவளை பார்த்தது ஒரு மழைகள் நாளில் மின்சார ரயிலில்.ரயில் காதலானது ரயில் பயணம் போல பாதியிலேயே நின்று விட்டது. ஆம் மனித வாழ்க்கையே ரயில் பயணம் தானே என்று மனதிருக்குள் நினைத்துக்கொண்டான். பக்கத்தில் மனைவி குழந்தைகள் இருப்பதால் கண்களில் நீர் வராமல் அழுது கொண்டான்.
ரயில் தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.மதுரை வந்த போது, ஏனோ இனம் புரியாத வலி. மேகலா மதுரையில் அல்லவா இருக்கிறாள். ஒரு மேகம் சூழ்ந்த நாளில் மேகலாவை ரயிலில் பார்த்தேன் சென்னையில். இன்று மழை பெய்கிறது ரயில் மதுரையில் நிற்கிறது. மேகலா வருவாளா மேகங்கள் வந்துவிட்டன மேகலா ஒரு முறை என் வாழ்கையில் வா...இப்பொழுதெல்லாம் சென்னையில் மழை பார்க்க முடிகிறது என் மேகலாவை பார்க்க முடிய வில்லை.....மேகங்கள் இல்லாமல் கண்களில் மழை நீர் சுரந்தன.
மதுரையிலிருந்து ரயில் புறப்பட்டு இருந்தது. கண்ணை திறக்கையில் அவனுக்கு அதிர்ச்சி , மேகலா தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் எதிர் இருக்கையில். இயற்கை என்றும் பொய் சொல்லாது, மேகம்,மழை,ரயில்,மேகலா.

"மேகலா" என்றான் ....

"செல்வம்" என்றாள்.........

அவள் கணவருக்கும் குழந்தைக்களுக்கும் அறிமுகம் செய்தாள் தன் நண்பன் என்று.
"பார்த்தியா உனக்கும் ஒரு மகன் ஒரு மகள் எனக்கும் ஒரு மகன் ஒரு மகள்" என்று சிரித்தாள்.
"என் மகள் பெயர் கூட மேகலா தான்".அவன் மனைவி கவனித்து இருக்க கூடும்.அவள் மகன் மகள் பெயரை கேட்டேன்.மகன் பெயர் செல்வமாம்,மகள் பெயர் சௌந்தர்யா.அவன் கணவன் இதை கவனித்திருக்க கூடும்.அதை அவன் மனைவியும் அவள் கணவனும் பெருந்தன்மையாக கண்டு கொல்லாமல் இருந்தார்கள்
அவன் மகன் பெயர் தினேஷ் அவன் மனைவியின் பழைய காதலனாய் இருக்குமோ.அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாளே அது அவள் கணவருடைய காதலியாய் இருக்குமோ........மனைவியின் காதலை மதிக்க வேண்டும் .ஒரு நாள் அவள் காதலித்தாளா என்று கேட்க வேண்டும்.
சென்னை ரயில் நிலையம் வந்தது. மழை நின்றது மேகலா சென்றுவிட்டாள்.ரயில் மழை மேகலா மூவரையும் பிரிந்து வந்தேன்

Wednesday, 28 October 2009

புகைப்படமும் புகை பிடிப்பவனும்














உனது புகைபடத்தை
வைத்துக்கொண்டு ......
புகை பிடித்து கொண்டு இருந்தேன்...!

காலத்தின் அந்த நொடியை
கவிதையாய் பதிவு செய்திருந்தது
அந்த புகை படம் ...!

அந்த புகைப்படம் எடுக்க பட்டது போல்
நீயும் நானும்
நம் காதலும் இல்லை
இத்தருணத்தில் .......!

என் வீட்டுசாளரங்களில் இருந்து
உள்ளே வருகிறது
உன் நினைவு ..!

சினிமா டிக்கெட் ,
உன் கைக்குட்டை,
போன்ற உயிர் அற்ற பொருட்கள்
உயிர் உள்ளவை ஆகின ......!

உயிர் உள்ள
நானும் நீயும் .....
உயிர் அற்ற பிணம் ஆனோம் ....!

காதலில் நீ பார்த்த பார்வை ...........
இப்போது கிடைக்குமா ...?
ஒரு புகைப்படம் உன்னை பதிவு செய்து வைத்திருக்கிறது .....!
நான் ...?

காலங்கள் நம்மை விழிங்கி கொண்டிருகின்றன .......!
இறந்த பிறகு ......
நம் காதலை
ஒரு திரைப்படம் போல் பார்க்க ஆசை.....!

அதில் மட்டுமே
நீ வெட்கப்பட்டு
என்னை பார்க்கும் தருணம் ......
மீண்டும் மீண்டும் வரும் ...!

ஆம் நான்
அந்த காட்சியை மட்டும்
ஓட்டி விட்டு
மறுபடி மறுபடி பார்ப்பேன் .......!

காலங்கள்
உயிரற்ற புகைப்படத்தை
உயிருள்ளவை ஆக்குகின்றன
உயிருள்ள புகை பிடிபவனை ...
உயிரற்ற புகைப்படம் ஆக்குகின்றன

Tuesday, 27 October 2009

வேதம் புதிது













சுப்பு பாட்டி சாப்பிடவில்லை .....தினமும் ராதிகா சீரியல் பார்க்கும் பாட்டி அன்று NDTV பார்த்துக்கொண்டிருந்தாள்."என்னடா சொல்றா சங்கரர விடுவிச்சுருவால..." "இல்லை கேஸ் stronga இருக்கு,கஷ்டம் தான்..,, மேலும் நடிகையோட எல்லாம் தொடர்ப்பு இருக்காம் ...கேவலம் இனிமே நம்மலவால யாரும் மதிக்க மாட்டான் "
சுப்பு பாட்டி இரவு கண்ணீருடன் படுத்துக்கொண்டிருந்தாள்.கடவுள் என்பது உண்மையானால் சங்கரர் என்பது உண்மையானால் எப்படி தரம் கெட்டவர்கள் மடத்தின் அதிபதி ஆகி இருப்பார்கள்.கடவுள் என்பது இல்லையா அவள் மனது அடைத்தது.ஜாதி மதம் தீட்டு மடி என்று நிறைய பேரை தொடாமல் இருந்திருக்கிறோமே,இப்படி நினைத்து போலியாக வாழ்ந்து இருக்கிறோமே நானெல்லாம் ஒரு பிறப்பா??????அந்த ஹரிஜன குழந்தை என்ன செய்தது அதை தூக்க கூட சங்கட பட்டோமே.அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் அவளை துளைத்து எடுத்தன.
கடவுள் என்று ஒன்று இருந்தால் அது எப்படி தப்பு செய்பவனை அவனுடைய மடத்திற்கு அதிபதி ஆக்கும்.நெஞ்சு வெடித்து பாட்டிக்கு.கண்களில் நீர் வழிந்து அவள் பாவங்களை கழுவியது,எந்த பிறப்பும் பிறப்பு மட்டுமே தெய்வ பிறப்பல்ல.அப்படியே கடவுள் இருந்தாலும் நடுவில் எதற்கு ஒருவன் ,நடுவில் எதற்கு மடம்.கடவுளுக்கு ஊடகம் தேவையா என்ன....
அவன் அம்மாவாக இருந்திருந்தால் அனைத்து படைப்புமே ஒன்று தானே எப்படி ஏற்ற தாழ்வுகள்...அவள் மனது வலித்தது.
கடவுள் இல்லையா இல்லை இருக்கிறாரா....பாட்டி மன உளைச்சலுக்கு உள்ளானால்....
அவள் நம்பிக்கை சிதைந்து,உண்மை உணர்ந்து ஒரு ஞான நிலையை எட்டினால்.காலை விடிந்தது சுப்பு பாட்டிக்கும். பாட்டி எழுந்தவுடன், கடவுளை சேவிக்க வில்லை.எதிர் வீடு அரிஜன சென்றால் அது அரிஜன வீடு.கதவை திறந்த எதிர் வீட்டு பெண் அதிர்ச்சி அடைந்தாள்.
"ஏன் டீ மா நான் எல்லாம் உங்க ஆத்துக்கு வரப்டதா ???" "இல்ல பாட்டி வரலாம் ".
"ஒரு காபி தா டீ..." அந்த காபி குடித்த போது அவளுக்கு புனித நீரில் நீராடியதை போல் இருந்தது. அவள் குழந்தைக்கு பாட்டி முத்தம் கொடுத்தாள் .அதில் மனிதன் என்னும் ஈரம் இருந்தது .பாட்டி அன்று குளிக்க வில்லை ஆனாள் சுத்தமாக இருந்தாள்.

Sunday, 25 October 2009

நடமாடும் ராணுவமே



நாட்டின் எல்லைக்குள் தீவிரவாதிகள் ,போருக்கு தயாரானான் ராணுவ வீரன் மதுரைக்காரன் மாரி.லே பகுதி லடாக்கின் தலை நகரம் ,வடக்கு காஷ்மீர் .சில பாகிஸ்தானிய வரைபடங்களில் அவர்கள் நாட்டில் அதை சேர்த்து உள்ளதாக தகவல்.மொத்தமாக சொல்ல போனால் POK Pakisthan occupid kashmir.


ஆம் கடும் குளிர் ,நாமெல்லாம் IPL வீரர்களை போர் வீரர்களாக பார்த்து கொண்டிருந்த சமயம்.அவர்கள் battalion சேர்ந்த வீரர்களில் அவனது உயிர் நண்பன் சரண்தீப் சிங்க் தற்போது தான் கல்யாணம் ஆனவன் . M14 ரக கன்னி வெடியில் காலடி வைத்து சிதறி போனான் .குருதி மாரியின் முகத்தில் தெறித்தது.உடல் சிதறி போக மாரியின் மனமும் சிதறியது....சிங் கடைசி நேரத்தில் யாரை நினைத்து இருப்பான் ,மனைவியை அல்லது அம்மாவை.மனது அவனை உலுக்கியது.


எது சண்டை இட சொல்கிறது.எவனுடைய மண்ணாசை??????எதற்கு அதிகாரம்????பல அப்பாவி மக்கள் சாவதை தவிர சண்டையால் எதை சாதித்தோம்.நான் மண் ஆசையோடு இல்லை என்றாலும் .எதிரி நம்மை கொன்று விட்டு மண்ணை பிடிப்பான். மண் தின்னும் உடலுக்குள் மண் திங்க ஆசையோ......இப்படி யோசித்து கொண்டிருக்கும் போதே, அவனை குண்டு ஒன்று துளைத்தது.ஆம் சண்டை முடியாமல் போனால் அவன் உடல் கூட மிஞ்சாது .கழுகிற்கு இரையாக போகிறதா உடல் ?????


ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....அவர்கள் வீரர்கள் ஆச்சே .....................


உள்துறை அமைச்சருக்கு பத்திரிகைகள் பாராட்டு, இந்தியா சண்டையில் வெற்றி பெற்று விட்டதாம் ......"RAW,MOZART போன்ற உளவு அமைப்புகள் ஏற்கனவே ஊடுருவல் பற்றி சொன்னதாமே .நீங்கள் தாமதமாக நடவடிக்கைகள் எடுத்தீர்கலாமே ? " என்று ஒரு பத்திரிகையாளன் ....."அது தான் election வருதே அதை வைத்து தான் வோட்டு வாங்க வேண்டும் " என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார் அமைச்சர் "No questions" என்று கோபமாக கத்தினார் .......


அவர் தமிழகத்தை சேர்ந்தவர் .கட்சி அல்லகைகள் "நடமாடும் ராணுவமே " என்று சுவரொட்டிகள் வைத்தனர் .அடுத்த முறை MP யும் அவரே .ஒரு ராணுவ வீரனின் உயிரின் மதிப்பு அமைச்சரின் வோட்டுக்கள் .


ஒரு தனி மனிதனின் சுயநலம் கோபம் அதிகாரம் மனித படுகொலைகள் செய்கின்றன

Friday, 23 October 2009

ஏவுகணை மேல் ஒரு பறவை















போர் நடந்து கொண்டு இருந்தது ,


இந்தியா பாகிஸ்தான் சண்டை இட்டுக்கொண்டனர் .............எல்லை பிரச்சனை


ஏவுகணைகள் வான் நோக்கி பறந்தன ..........................................


அந்த ஏவுகணை மேல் ஒரு பறவை அழகாய் பறந்து கொண்டிருந்தது .......


இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ............
எல்லைகள் இல்லாமல் தொல்லைகள் இல்லாமல் ...........


மனிதன் மட்டுமே மனிதம் பேசி விட்டு .........மனிதனை திண்பவன்


நான் 'இந்தியன்' என்று சொல்வது கூட ஜாதி வெறியே ...........
நான் 'மனிதன்' மட்டுமே


Wednesday, 21 October 2009

3

first வரணும்


















"வீட்ல எல்லாம் நல்ல தான் ஒப்பிச்சான் அப்புறம் எப்படி மார்க் கம்மி ஆச்சு "
அம்மா ..........
"ஸ்கூல நல்ல தான் படிச்சான் " டீச்சர் ..........
அம்மா " ஏன் டா மார்க் கம்மியா ஆச்சு "........
என்று கேட்க ..............
"நீ தான first வரணும்னு சொன்ன ..."
அப்பாவியாய் சொன்னது pre KG குழந்தை
அதனால்தான் வேகமாய் பரீட்சை எழுதி முடிததாம் ..........
வேகமாய் போகும் வேகாத வாழ்க்கை

வாழ்கை சுருக்கம்

















கிராமத்து கிழவி பக்கத்து வீட்டிற்கு சென்றாள் ..........
பக்கத்து வீட்டு கிழவன் ......................அவளிடம்
"இங்க பாரு கிழவி cell phonu.....என் dubai பையன்ட்ட பேசுவேன் "
"இது தான் web camera என் பேரன் விளையாடறத பார்பேன் அவன்ட
பேசலாம் எப்படி இருக்கு???" என்று பந்தாவாக கேட்க ........
"என் பசங்க பேரங்க தான் கூடவே இருக்காங்களே " என்றால் கம்பீரமாக
கிழவன் கண்ணிலே வலி மனதில் ரணம் .........
உலகம் சுருங்கி விட்டதாம் ....தகவல் தொழில் நுட்பம் ...........
கிழவனின் முகத்தில் தெரிந்தது வாழ்கை சுருக்கம்

ஜாதகம்














பள்ளி பற்றி எரிந்தது ..............
37 குழந்தைகள் இறந்து போயினர் ...............
கருகினர் ............
அந்த குழந்தைகள் அனைத்திற்குமே வேறு வேறு பிறந்த தேதி
ஒரே இறந்த தேதி .............................
வேறு வேறு பிறந்த தேதி என்றால் ....ஜாதகம் வேறு தானே ..........
அப்புறம் எப்படி ஒரே மரணம் ..........
இலங்கையில் இறக்கும் தமிழன் எல்லாருமே ஒரே நொடியில் பிறந்தானா??
சுனாமியில் இறப்பவர்கள் ........பூகம்பம் ..................
ஜாதக புலிகளே கொஞ்சம் விளக்குங்கள்

Tuesday, 13 October 2009

குருதியால் எழுதுதிறேன் .

















நான் இந்த கவிதை
எழுதி கொண்டிருக்கும் போது........
ஒரு ஈழ குழந்தை இறந்திருக்கும் ........
ஒரு தங்கை கற்பு இழந்திருப்பாள்.......!

எங்களுக்கு வெடி சத்தம்
புதிதல்ல....ஈழ குழந்தை சொல்கிறது ..........
இங்கே வெடிகள் கீழிருந்து மேலே பொய் வெடிக்கும் ...
அங்கே குண்டுகள் மேலிருந்து கீழே வந்து வெடிக்கும் ....!

ஒரு தாயை சிங்களன் சுட்டு விட்டன்
மார்பிலிருந்து குருதி வருகிறது ...
குழந்தைக்கு பசி ................
தவழ்ந்து வந்து அந்த தாயின் முலையிலிருந்து ...
குருதி குடிக்கிறது ..........

ஈழ கவிதை
எழுதும் போது மட்டும் .....
என் சகோதரன் குருதியால்
எழுதுதிறேன் ....!

இங்கே நான் தீபாவளிக்கு
இனிப்பு சாப்பிடும் பொழுது..........
சிங்களன் மனித கரி
சாப்பிட்டு கொண்டிருக்கிறான் ....!