Tuesday, 4 May 2010

குஷ்பூ வழக்கு ஒரு தீர்ப்பு ஒரு கொலை














நிரூபமா பதக் இந்தியாவை உலுக்கும் கொலை செய்தி. நிரூபமா பதக் உயர் ஜாதி பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர் ப்ரியாபான்சு ரஞ்சன் என்ற கீழ் ஜாதி இளைஞனை காதலித்து இருக்கிறாள். மூன்று மாதம் கர்ப்பம் வேறு , இந்த காரணத்தினாலேயே தன் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் .

இத்தனைக்கும் அவர் பெண் நிருபர் அவள் காதலித்த பையனோ ஆண் நிருபர். டெல்லி INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION இருவரும் படித்த இடம். அப்பொழுது காதல் மலர்ந்து இருக்கிறது .நிரூபமா ஜார்க்ஹன்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தந்தையார் பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பெண்ணை MASS COMMUNICATION படிக்க வைக்கிறார்கள் வேறு ஊருக்கு சென்று படித்து இருக்கிறாள் , ஓரளவு படித்த குடும்பமாய் தான் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட குடும்பத்திலேயே கல்யாணம் செய்தால் ஒரு ஜாதியில் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நிரூபமா கல்யாணம் பண்ண வேண்டும் அதற்க்கு முன்னால் கடைசியாய் ஒரு வாய்ப்பு கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து இருக்கிறார். வந்த இடத்தில் குலை செய்யப்பட்டு இருக்கிறாள். இரண்டு விடயங்கள் ஒன்று அவர் காதலித்தது கீழ் ஜாதி பையன் இன்னொரு விடயம் காதலித்து கர்ப்பம் ஆகி இருக்கிறாள். இந்தியா போன்ற பழமை ஊறி இருக்கும் தேசத்தில் குஷ்பூவும் உச்ச நீதி மன்றம் சொல்வது போல் கல்யாணத்திற்கு முன்பு உறவு ஆபத்து ஆனது. அது குஷ்பூ போன்ற மேட்டுக்குடி வர்க்கத்திற்கு வேண்டுமானால் பொருந்தும் என்று இந்த கொலை நிருபித்து உள்ளது.

சரி குஷ்பூ சொல்வது ஏன் தவறு என்று பார்ப்போம். இதுவே காதலித்தது மேல் ஜாதி பையன் காதலிக்க பட்டது கீழ் ஜாதி பெண் என்று வைத்து நிலைமை வைத்துக்கொண்டாலும் மேல் ஜாதிப்பையன் உறவை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எளிதாய் பெண்ணை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது . அப்பொழுதும் தற்கொலையோ இல்லை கொலை செய்யப்படுவது பெண் மட்டுமே.

சரி இன்னொருவனிடம் காதலிக்கும் பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கும். ஒரு பையன் சுற்றினால் வயது பையன் அப்படி தான் இருப்பான் என்று சொல்லும் சமூகம்,ஒரு பெண் காதலித்தால் ஏற்றுக்கொள்ளுமா என்ன ????? இப்படிப்பட்ட பின்தங்கிய சமூகம் இருக்கும் பொழுது கல்யாணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது என்பது

குஷ்பூ போன்ற மேட்டுக்குடி பெண்களுக்கும் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நீதிபதி போன்ற மேட்டுக்குடி வர்க்க பெண்களுக்கு மிகச்சரியான தீர்ப்பை இருக்கும்ஆனால் இந்த தீர்ப்பை பார்த்து படிக்காத பாமர பெண்கள் உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.























ஜாதிகளும் பெண் அடிமைத்தனம் இருக்கும் தேசத்தில் இப்படி ஒரு பொறுப்பில்லாத தீர்ப்பை படித்து ஒரு கிராமத்து பெண் ஏமாந்து போக வாய்ப்பு உள்ளது.மேட்டுக்குடி வர்கத்தில் இருக்கும் பெண்களோ இல்லை பொறுப்பில் உள்ள நீதிபதிகளோ தங்கள் குடும்பத்தை மட்டும் வைத்து தீர்ப்பு அளிப்பது வேதனையாய் இருக்கிறது.

Monday, 3 May 2010

குட்டி தோழன்
















நண்பன் ஒருவன்
இருந்தான்.............!
மது அருந்திகொண்டே மார்க்ஸ் பற்றி
பேசுவான் .........!
குளிர்சாதன அறையில்
சில PDF படித்து விட்டு
சில பதிவுகள் போட்டு விட்டதாலேயே
தன்னை அறிவாளி என்று நினைப்பான் ...!
மே தினம் அன்று அவனை கூப்பிட்டேன்
"வெட்டி வேலை" என்றான் ...........
பரவாயில்லை வெட்டி வேலை பார்ப்போம்
என்றேன் ...........!!!!!
வந்தான் ...........................
கூட்டத்திலே ஓரமாய் நின்றுகொண்டிருந்தோம்
தோழர்கள் பறை விண்ணை முட்டியது
விசில் சத்தம் காதை பிளந்தது,
போலிஸ் அனைவரையும் வண்டியில் ஏற்றியது
ஒரு "குட்டி தோழன் " ஐந்து வயது இருக்கும்
வீரமாய் ஏறினான் ..............................!!!!!!!!
என் நண்பனிடம் சொன்னேன் .......................
நீ மார்சியத்தை எழுத்துக்களால் படித்தாய்
அந்த "குட்டி தோழன்" வாழ்ந்து கொண்டிருக்கிறான்
என்றேன் ....................!!!!
அவன் மூஞ்சியில் கலவரம்
"இதுனால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை" என்று
மீசையில் மண் ஒட்டாமல் போனான்

Sunday, 2 May 2010

உழைப்பாளர்கள் தின பேரணி வினவு தோழர்களுடன்


















மே தினம் அன்று வினவு தோழர்களுடன் புதுச்சேரி பேரணிக்கு சென்றேன். நான்கு மணிக்கு பேரணி என்று சொல்லி இருந்தார்கள் . பு ஜ தொ மு சார்பாக பேரணி அறிவித்து இருந்தார்கள்.தோழர்கள் வினவு தோழர் மேலும் மூன்று தோழர்களுடன் ஒரு அணியாய் சென்றோம் . பேரணிக்கு அனுமைதி மறுக்கப்பட்டு இருந்தது. CITU சங்கத்திற்கு அனுமதி வழங்கிய அரசு பு ஜ தோ மு சங்கத்திற்கு வழங்க வில்லை ஏன் என்றால் அவர்களுக்கே தெரிந்து உள்ளது யார் உண்மையாய் மக்களுக்காய் குரல் கொடுப்பார்கள் என்று தெரிகிறது .
ஒரு மே தின பேரணிக்கு தொழிலாளி வர்க்க தோழர்களுக்கு அனுமதி மறுக்கபடுகிறது என்றால் எந்த அளவு ஜனநாயக தேசத்தில் உள்ளோம்.

தோழர்கள் பேருந்து நிலையத்தில் மறியல் செய்தனர் 2000 தோழர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் செங்கொடி பறந்து கொண்டே இருந்தது. தோழர்களின் குடும்பத்தில் உள்ள 5 வயது குழந்தைகள் கூட குரல் கொடுத்தது மிகுந்த எழுச்சியாய் இருந்தது. சிறிது நேரம் போக போக எழுச்சி அதிகரித்து கொண்டே இருந்தது . தாரை தப்பட்டை வைத்து தோழர்கள் போட்ட தாளம் உற்சாகமாய் இருந்தது. விண்ணை தாண்டி உற்சாக குரல்கள் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன. மேலும் கிராஸ் செய்யப்படும் பாலம் மேலே தோழர்கள் பெரிய செங்கொடி வைத்து கொண்டிருந்தனர் .கீழே இருந்து பார்ப்பதற்கு மிகவும் எழுச்சிகரமாய் இருந்தது.

என்ன எனக்கு ஆச்சர்யம் அளித்தது என்றால் சிறு பிள்ளைகள் கூட போராட்டத்திலே களத்திலே இருக்கிறார்கள். போலீஸ் வாகனங்கள் வந்தது அனைவரையும் ஏற்றி கொண்டு சென்றனர் , குழந்தைகள் வயதிற்கு வந்த பெண்கள் அனைவரும் வீரத்துடன் ஏறினர் போராட்டம் அவர்கள் குருதியில் கலந்து இருக்கிறது என்றே சொல்வேன்.

பொதுவுடைமை அவர்களின் வாழ்க்கை தேவை. நம் நடுத்தர வர்க்கமோ அல்லது மேட்டுக்குடி வர்க்கம் போல அவர்கள் வாழ்க்கை சொகுசாய் இல்லை. நாமெல்லாம் பதிவுலகில் சவடால் பேசுவோம் களத்தில் இறங்க சொன்னால் வேலை இருக்கிறது என்போம். ஈழம் பற்றி எழுதுவோம் தெருவில் இறங்கி போரடுவோமானால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இந்த உழைக்கும் வர்க்க தோழர்களின் வாழ்கையே போரட்டாமாய் உள்ளது போராட்டம் என்பது அவர்கள் இயல்பு அவர்கள் வெகு இயல்பாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சரி நடுத்தரவர்க்கம் சொகுசாய் இருப்பது போல் மாயை இருந்தாலும் உண்மையில் அப்படி தான் இருக்கிறதா. மென் பொருள் வேலை செய்யும் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் பதிமூணு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட மணி நேரங்கள் உழைத்து அவர்கள் வாழ்க்கையே மிகுந்த மன நெருக்கடி உள்ளான வாழ்க்கை ஆகிறது. சரி மன அழுத்தத்தை குறைக்க I T துறையினர் டிஸ்கோதே பார்கள் செல்கின்றனர் மன நலன் உடல் நலன் பாதிக்க ஒருவிதத்தில் தான் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலேயே சுரண்டப்படும் வர்க்கம் நடுத்தர வர்க்கம் .

ஆனால் அடித்தட்டு மக்கள் போல் நேரடியாய் பாதிக்க படமால் இருப்பதால் போராட்டம் என்றால் நடுத்தர வர்க்கம் வருவதில்லை . ஹிந்து பேப்பர் படித்து கொண்டு இவர்களை அவர்களை குறை சொல்லிக்கொண்டு என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று ஆனதை ஆசிரமத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததை பெருமையாய் பேசிக்கொண்டிருக்கிறது நடுத்தர வர்க்கம். கேட்டால் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்கிறது நடுத்தர வர்க்கம். ஒரு பிச்சைக்காரன் வருகிறான் என்று வைத்துக்கொள்வோம் இன்று நம்மிடம் காசு உள்ளது ஐந்து ரூபாய் போடுகிறோம் நாளை காசு இல்லை என்றால் அந்த பிச்சைக்காரன் வேறு ஒருவனிடம் செல்வான், அதைப்போல் தான் உள்ளது இந்த NGO அமைப்புகள் மற்றும் பிச்சைக்காரனுக்கு 2 ருபாய் கொடுக்கும் நடுத்தர வர்க்க மனநிலை.இந்த மாதிரி தன்னால் முடிந்ததை செய்கிறேன் களத்தில் இறங்கி எல்லாம் போராட முடியாது என்கிறது நடுத்தர வர்க்கம். நான் நல்லவன் தான் ஆனால் கோழை என்கிறது. தவறு நடக்கும் பொழுது போரடதது கயமை தனம் அதனால் திருடன் என்று தான் சொல்ல முடியுமே தவிர போரடதவனை நல்லவன் என்று எப்படி சொல்ல முடியும்


நடுத்தர வர்க்கமும் களத்தில் இறங்கி போராடும் நாள் வரும் .அணுகுண்டு வெளியே வெடித்து சிதறவது போல மக்கள் எழுச்சி இருக்கத்தான் போகிறது . நடுத்தரவர்க்கம் தன்னை சுயநீக்கம் செய்துகொண்டு தொழிலாளிகளோடு போராடவேண்டும். IPL வெற்றிக்கும் உலகக்கோப்பை வெற்றிக்கும் கைதட்டும் இளைஞன் விதர்பா விவசாயப்படுகொலைக்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும் களத்தில் இறங்கி போராட வேண்டும். எனக்கு ஒரு மார்க்ஸ் புத்தகம் படித்தால் ஏற்ப்படும் எழுச்சியை விட அங்கு பல ஐந்து வயது சிறுவர்கள் போராட்ட களத்திலே குரல் கொடுத்தது மார்சியத்தை எனக்கு தெளிவாய் புரிய வைத்தது. என்னை விட அந்த சிறுவனுக்கு மார்சியம் என்றால் என்ன என்று தெரியும். மார்சியம் களப்பணி, மது அறிந்திகொண்டு பேசும் இலக்கியம் அல்ல, மக்களுக்கான பணியே மக்களுக்கான இலக்கியம் .

Friday, 30 April 2010

சுறவும் தல பிறந்த நாளும்












இன்று சுறா படம் வெளியாகி உள்ளது நாளை அஜித் பிறந்தநாள் வேறு . ஏற்கனவே IPL போதைகளில் பதிவுலகம் இருக்க இப்பொழுது அடுத்து சுறா . கொஞ்சம்
நேரம் இருந்தால் என்னுடைய போன பதிவை படியுங்கள் http://vennirairavugal.blogspot.com/2010/04/blog-post_29.html
இது உலக உழைப்பாளர் தின சிறப்பு பதிவு தோழர்களே

Thursday, 29 April 2010

உலக உழைப்பாளர்களே ஒன்று கூடுங்கள்






















நாளை உலக உழைப்பாளர்கள் தினம் . உழைக்கும் மக்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள் சுரண்டும் முதலாளி வர்க்கம் சுரண்டிக்கொண்டே இருக்கிறது. இது IT துறை முதல் கீழே இருக்கும் தொழிலாளிகள் வரை ஒன்றே ,சுரண்டும் முறை வேண்டுமென்றால் மாறுபடலாம். நாள் ஒன்றிற்கு பத்து மணி நேர வேலை , நாளை நிற்க வேண்டுமென்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மக்கள் சாரை சாரையாய் கிராமங்களை விட்டு விட்டு நகரங்களுக்கு புலம் பெயரும் சுழல் , நகரமயமாக்கல் இவை எல்லாம் கண் முன்னே அரங்கேறி கொண்டிருக்கிறது.

சரி இந்த உழைப்பு எல்லாம் சரியான பயன் இருக்கிறதா என்ன இல்லை என்றே சொல்ல வேண்டும் . முதாளித்துவ சமூகம் தமக்கு தேவை என்பதற்காக கீழே உள்ள மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறது. முன்பு TV வாஷிங் machine போன்ற ஆடம்பர செலவுகள் இப்பொழுது அடிப்படை தேவைகளாக இருக்கின்றன. ஒரு பொருளை தயாரிப்பது
அப்பொருளுக்கு சந்தை ஏற்படுத்துவது மக்களுக்கு ஆசையை தூண்டுவது விற்பனை செய்வது என்ற பாணியில் முதலாளித்துவம் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது . சென்னை போன்ற நகரங்களில் மாதம் பத்து ஆயிரம் ருபாய் இல்லை என்றால் காலம் தள்ள முடியாது என்கிற சூழலுக்கு கொண்டு செல்கிறது இந்த நுகர்வு கலாச்சாரம் . கட்டாயம் நீங்கள் பத்து மணி நேரமாவது உழைக்க வேண்டும் குறைந்தது சிலநேரங்களில் பனிரெண்டு பதினைந்து மணி நேரங்கள் கூட உழைக்க வேண்டி உள்ளது . குடும்பங்களில் அக்கறை செலுத்த முடியாமல் அன்பு குறைந்து உடல் நலம் குறைந்து போராட்டமான சூழல் இருக்கின்றது.

ஒருவரது வாழ்க்கையே சுரண்டப்படுகிறது. சரி நாம் சுரண்டப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பது வேதனை. என் நண்பர் முதலாளித்துவம் பற்றி எளிதாய் விளக்கினார் . நூறு சட்டை ஒரு ஊரிற்கு தேவைபட்டால் ஒவ்வொரு முதலாளியும் 1000 சட்டை தைத்தால் என்ன ஆகும் அதுவே இந்த சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது தேவைக்கு அடிக்கமான தயாரிப்பு ஊருக்கே நூறு சட்டை தான் தேவை படும் பொழுது 100 கம்பெனி அதிக லாபம் பெற 1000 சட்டை தைத்தால் உழைப்பு வீண் தானே இதை தான் உபரி மதிப்பு
என்கிறார்கள் எவ்வளவு உழைப்பு வீண் அது பந்தை போலவே சுற்றிக்கொண்டிருக்கும் அது தான் recission போன்றவைகளுக்கு காரணம்.

எவ்வளவு உழைப்பு நேரம் வீண் . தேவை இல்லாத வேலைக்கு ஆள் குறைப்பு சம்பள குறைப்பு . இப்படி உபரி மதிப்பு இருக்கும் வரை முதலாளித்துவத்தால் ஜெயிக்கவே முடியாது என்பதே உண்மை , ஆனால் எவ்வளவு மக்களின் உழைப்பு வீணடிக்க படுகிறது. முதலாளித்துவம் இல்லாத தேசத்தில் மூன்று அல்லது நான்கு மணிநேரம் மட்டுமே
வேலை இருக்கும் . மார்க்ஸ் சொல்வதை போல் உலக உழைப்பாளர்களே ஒன்று கூடுங்கள். அரசியல் ரீதியாக பார்த்தாலும் விஞ்ஞான ரீதியாய் பார்த்தாலும் முதலாளித்துவம் ஜெயிக்க வாய்ப்பு இல்லை. மார்க்ஸ் சொன்னது போல் உலக உழைப்பலர்களே ஒன்று கூடுங்கள்.

Wednesday, 28 April 2010

நூல் என்னும் பாதுகாப்பு வலையம்

வெடித்து சிதறியது வார்த்தைகள்
"சாமியாரை சிறையில் போட வேண்டும் " என்றான் ஒருவன்
" ஊரையே ஏமாத்தி இருக்கான் " என்றாள் பாட்டி
சட்டம் தன் வேலையே செய்தது
தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி போட்டது
அந்த வீட்டில் மேட்டுக்குடி பார்ப்பன சாமியார் படம் இருந்தது
மாட்டிக்கொண்ட சாமியார் மட்டும் நூல் என்ற பாதுக்காப்பான வலையத்திலே
இருந்திருந்தால் ......................!

Monday, 12 April 2010

உலக அங்காடித் தெரு















அங்காடித் தெரு பார்த்தேன் முதலில் வாழ்க்கையை பதிவு செய்த வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் படத்தில் சில கேள்விகள் இருக்கிறது . படத்தின் மைய்ய கருத்து வந்த இடம் "யானை வாழ்ந்த இடத்தில தான் எறும்பும் வாழுது" என்ற ஒரு கருத்து வரும், அது சாத்தியாமா????? பெப்சி கோக் முன்னால் நம் நன்னாரி சர்பத் நிக்குமா ????? எனக்கு தெரிந்து ஒரு கடைக்காரர் ரிலையன்ஸ் பிரெஷ் வந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஏன் யானை இருக்கும் பொழுது எறும்பு வாழலாம் அடிமையாக மட்டுமே . ஏன் வெளியூர்க்காரர்களிடம் உள்ளூர் வியாபாரிகள் போட்டி போடமுடியவில்லை .
வேண்டுமென்றால் செல் போன் கவர் சீடீ கவர் எல்லாம் விற்பனை செய்யலாம் ஆனால் முதலாளிக்கு போட்டியாக கடை எல்லாம் வைக்க முடியாது என்பது தான் எதார்த்தம்.

சரி கதாநாயகியின் கால் ஊனம் ஆகிறதே அந்த காட்சி வலுக்கடயமாய் திணிக்கப்பட்டது போல் உள்ளது அந்த காட்சி அப்படி காட்டப்பட்டதால் இன்னொரு பிரச்சனை உள்ளது . கிராமத்தில் ஏன் மக்கள் புலம்பெயர்ந்து சிமெண்ட் தொழிலாளர்கள் ஆனார்கள் , ஏன் அவர்களுக்கு வீடில்லை என்ற கோணத்தில் காட்டாமல் அவர்கள் பிரச்சனை விளக்காமல் ,கதாநாயகி கனி அங்க தங்க நேர்கிறது அப்பொழுது கால் போகிறது என்ற இடத்தில் உண்மை நிலவரம் இரண்டாம் பட்சமாகி காதல் திணிக்கப்பட்ட அனுதாபம் பிரதனமாகிறது. ஏன் இயக்குனர் அந்த தெருவில் உழைத்தே முன்னேறும் படி காட்டி இருக்கலாமே???? ஏன் கால் போனால் தான் கதையில் அழுத்தம் வருமா என்ன????


இந்த அங்காடி தெருவில் நடப்பது ஓரளவு உண்மையே என்றாலும் அண்ணாச்சிகளை விட அம்பானிகள் மோசமானவர்கள் என்ற கண்ணோட்டம் படத்தில் இல்லை. சரி நாம் எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிராண்ட் சட்டை சூ தயாரிக்கும் எல்லா இடத்துலயும் இதே நிலைமை என்பதே உண்மை. உலெகெங்கும் எங்கெல்லாம் முதாலாளித்துவம் உள்ளதோ அங்கெல்லாம் இதே நிலைமை. nike Gap Walmart போன்ற நிறுவனங்களில் குழந்தைகள் அடிமைகள் போல நடத்த படுகிறார்கள். கடுமையான சுழல் குறைவான சம்பளம் அதிக நேரம் வேலை இவை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. வால்மார்டில் வேலை செய்யும் ஒரு பெண் சொல்கிறாள் வேலையில் சிறு தவறு இருந்தாலோ இல்லை வேலை செய்யும் இடத்தை பற்றி அந்த பெண் குறை சொன்னாலோ அவர் கடத்தப்படுவார் என்று மிரட்ட படுகிறாள். மேலும் ஒழுங்காக வேலை செய்யாதவர்களை இரும்பு கம்பியால் அடிக்கிறார்கள் என்று அந்த பெண் சொல்கிறாள்.

ஒரு பெண் கருவுற்றால் கட்டாயம் கலைக்க வேண்டும் இல்லை என்றால் அவள் கடத்த படுவாள். காசு கொடுத்து தான் வெளியே வர முடியும். எலித்தொல்லைகள் அதிகம் இருக்கும் வீடுகளில் மிக குறைந்த இடத்தில் அனைவரும் தங்கவைக்க படுவார்கள் . வால்மார்டிலே பத்திலிருந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டுமாம் , ஒரு நாள் கூட ஒய்வு என்பது இல்லை. ஒரு நாளுக்கு வெறும் 20 டாலர் சம்பளத்திற்கு. அங்கு வேலை செய்பவர்கள் காதல் கல்யாணம் என்றால் கடத்தப்பட்டு கொடுமை படுத்த படுவார்கள். 12 மணி நேரம் வேலை பார்த்தாலும் வெறும் 8 மணி நேரத்திற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும். அதிக நேரம் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது கட்டாயம் வேலை செய்யவேண்டும். அந்த பாக்டரி இடத்தில் 100 டிகிரி தட்பவெட்பம் இருக்கும் குறைந்த அளவே குடிநீர் இருக்கும்.

வேலையில் சிறுதவறு இருந்தால் அந்த பொருள் மூஞ்சியில் வீசப்படும். மேலும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்ப்படுத்தபடுவார்கள் , supervisor கூட படுக்கவில்லை என்றால் அவ்வளவுதான் . nike கம்பெனியிலும் இதே கதி தான் ஒரு பெண் ஒரே ஒரு நாள் தன் தங்கையை பார்க்க சென்றதால் துன்புறுத்தபட்டாள். வேலை செய்யும் பொழுது ஒரே ஒரு முறை தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் ஒரு நாளில். மேலும் வேலை செய்யும் இயந்திரங்களால் ஒருவர் இறந்துள்ளார் ஒருவர் கை போய் உள்ளது மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

Honduras என்னும் இடத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் கையால் பாய் செய்ய கூட்டி வரப்படுகிறார்கள் Houndrasil கட்டாயம் கருக்கலைக்க பெண்கள் மாத்திரைகள் எடுக்க வேண்டும் ஏன் என்றால் maternity லீவ் தரவேண்டுமே. இன்னும் நமக்கு தெரியாத மிகபெரிய முதலாளிகள் எல்லாம் இருக்கிறார்கள். நமக்கு தெரியாமல் வரலாற்றில் பதியப்படாமல் எத்தனையோ தொழிலாளி கதைகள் இருக்கின்றன .வெற்றி பெற்றவர்களை பற்றி மட்டுமே உலகம் பேசுகிறது. அப்படி பார்க்கும் பொழுது அங்காடி தெரு குறைகள் இருந்தாலும் நல்ல பதிவே.