Sunday, 9 May 2010

போபால் விஷ வாயு தாக்குதல்

யார் தீவிரவாதி - பகுதி ஒன்று
















நாம் கசாபை தீவிரவாதி என்கிறோம் சரி அவனால் பல பேர் இறந்திருக்கிறார்கள் அவன் தீவிரவாதி என்றே வைத்துக்கொள்வோம் இன்னும் எத்தனையோ தீவிரவாதிகள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. மக்கள் ஊடகங்கள் என்ன சொல்கிறதோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறார்கள் அவர்களை சொல்லி குற்றம் இங்கு உள்ள ஊடகங்கள் சிந்திக்க விடாத வேலையே தொடர்ச்சியாய் செய்துகொண்டே இருக்கின்றன. இந்தியா என்னமோ ஜனநாயக நாடு போல ஊடகங்கள் மக்களுக்கு கட்டமைக்கின்றன. இந்தியாவை சேர்ந்த உளவு அமைப்பான ரா வை சேர்ந்தவர் சர்பஜத் சிங்க்,அவர் பாகிஸ்தானில் குண்டு வைத்ததற்காக கைது செய்யப்பட்ட தூக்கு தண்டனைகைதி. இதன் பெயர் தீவிரவாதம் இல்லையா?? இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் போன்ற நாடுகளில் மேலாதிக்கம் செய்கின்றது என்பதே உண்மை.














டிசம்பர் 2 இரவு 1984 போபாலின் துக்க தினம். MIC மெத்தில் ஐசோ சயனட் என்னும் விஷ வாயு கசிந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும்
அந்த விஷ வாயு தாக்குதலின் அதிர்வு போபாலை விடுவதாய் இல்லை. இன்னும் தண்ணீர் பாதிக்கப்பட்டு இருக்கிறது . அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாய் பிறக்கிறது . இதை செய்தது Union Carbide India Limited (UCIL ) என்னும் நிறுவனம். ஆனால் அரசாங்கம் அந்த மக்களை காப்பாற்றுவதை விட அவர்களை காப்பதிலே குறியாய் இருந்தது . அரசுகம்மியான நபர்கள்பாதிக்க பட்டதாய் கணக்கு காட்டியதன் உண்மை என்ன ???இன்னும் அதன் CEO warren anderson கைது செய்யப்படவில்லை. ஏன் நஷ்ட ஈடு கூட கொடுக்கப்படவில்லை.












இதில் ஒரு விஷமத் தனம் உள்ளது தெரிகிறதா . போபால் விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் செய்தது ஒரு பெரிய முதாலாளி வர்க்கம். 100 பேர் கொன்ற காசாப் தீவிரவாதி என்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற Warren Anderson இந்நேரம் தூக்கில் போட்டிருக்க வேண்டுமே ??? சரி இங்கு ஒரு முரண்பாட்டை காணலாம் , முதலாளிகள் உயிர் மலிவானதல்ல அதனால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் முதாலாளி காப்பாற்ற படுகிறார் காசாப் விடயத்தில் அவன் குறிவைத்தது தாஜ் ஒபேரா போன்ற முதலாளிகள் தாங்கும் இடம் அந்த உயிர் தான் மலிவானது இல்லையே அதனால் இந்த ஊடகங்கள் அதை கவர் செய்யும், மக்களும் அதை கிளிப்பிள்ளை போல நம்புவார்கள். சரி மும்பையை போபாலை விடுங்கள் சம காலத்தில் இருக்கும் விதர்பா விடயம் என்ன ஆயிற்று அங்கே தினம் தினம் விவாசாயி செத்துக்கொண்டிருக்கிறான் இந்த ஊடகம் அதை காட்டுவதாய் இல்லை. ஏன் பதிவர்கள் கூட IPL மற்றும் சுறா படத்திற்கு பேசும் பதிவர்கள் விதர்பா பற்றி பேசுவதில்லை, இதே ஊடகம் என்ன சொல்கிறதோ அதையே சொல்கின்றனர் என்பது வேதனையிலும் வேதனை. ஊடகம் தூக்கில் போட வேண்டுமென்றால் இவர்களும் அதையே வழி மொழிவார்கள் ,ஊடகங்கள் முதாலாளிக்கான ஊடகங்கள் இந்த பதிவுலகமும் அதையே பிரதிபலிக்கிறது.

கசாபை தூக்கில் போடவேண்டும் என்பவர்களுக்கு ஒரு கேள்வி நூற்று கணக்கில் மக்களை கொன்ற கசாபே தூக்கில் தொங்க வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் கொன்ற கொன்ற Warren Andersonஉயிரோடு இருக்கிறாரே என்ன செய்ய ????

Thursday, 6 May 2010

கசாப் மட்டும் தான் குற்றவாளியா













மும்பை தாக்குதலுக்கு கசாப் மட்டுமே காரணமா என்ற ரீதியில் வினவு கட்டுரை அமைத்து இருக்கின்றது ..........பழைய ஆறு கட்டுரைகளை மீள் பதிவு செய்துள்ளது .இப்பொழுது அலறும் லதா மங்கேஷ்கர் மற்றும் ஊடகங்கள் 92 இனக்கலவரம் பொழுது அழுக வில்லையே . ஏன் தாஜ் ஹோட்டல் என்றால் ஒரு நீதி சராசரி மக்கள் என்றால் ஊடகங்களுக்கு ஒரு நீதியா. மேலும் குஜராத் கலவரத்திற்கு காரணமான மோடியை ஏன் தூக்கில் போடவில்லை , பாபர் மசூதி இடிப்பை செய்த அத்வானியை என்ன செய்தார்கள் அது எல்லாம் தீவிரவாதம் இல்லையா என்ற கோணத்தில் பல அரசியல் விடயங்களை முன்வைக்கிறது கட்டுரைகள் .சரி தவறு என்று ஒரு புறம் இருந்தாலும் விவாதித்தால் ஆழமாய் போனால் நமக்கே சில விடயங்கள் புரியும் என்பதே உண்மை ஆர்வமுள்ளவர்கள் வினாவில் விவாதியுங்கள் .

என்னை பொறுத்த வரை பக்கத்துக்கு ஊரான விதர்பா என்னும் ஊரில் கடந்த 20 வருடங்களாய் லட்சக்கணக்கான விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இந்த ஊடகங்கள் என்ன செய்தன . தாஜ் ஹோட்டல் என்ற ஒரே காரணம் முதலாளிகள் கூடும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு இவ்வளவு மரியாதையா ..
கசாப் மட்டுமே இதை செய்திருப்பாரா , மகேஷ் படத் மகனின் பெயர் அடிப்பட்டதே அது என்ன ஆச்சு ????? ஏன் மும்பை குண்டு வெடிப்புகளில் சஞ்சய் தத் பெயர் அடிப்பட்டதே என்ன ஆச்சு ???? கடை நிலையில் இருக்கும் தீவிரவாதி மாட்டுமே கண்ணில் படுவாரா.

சரி இந்தியா இலங்கையில் என்ன பண்ணி கொண்டிருக்கிறது அது தீவிரவாதம் இல்லையா ???? இந்தியாவிற்கு ஏன் இந்த ஜனநாயக வேடம் . சரி மும்பையில் முஸ்லிம்கள் பாதுக்காப்பாய் வாழத்தான் முடிகிறதா???? இதை எல்லாம் ஆராய்ந்து விட்டு தீவிரவாதம் என்னும் விடயத்திற்குள் செல்ல வேண்டும். உண்மையிலேயே தீவிரவாதிகள் யார் , அமெரிக்க ஈராக்கிலும் ஆப்கானிலும் செய்ததே அது தீவிரவாதம் இல்லையா????? ஒசாமாவை ரஷ்யாவை எதிப்பதற்க்காய் வளர்த்தது அமெரிக்க இது உலக வரலாறு...எது தீவிரவாதம் நாமெல்லாம் தேசியம் என்னும் மாயையில் இருக்கிறோமா ??? ஏன் இந்த விடயத்தை மட்டும் பற்றி எழுதும் ஊடகங்கள் விதர்பா என்னும் விடயத்தை விட்டுவிட்டார்கள் ????தாஜ் ஹோடேலில் உயிர் என்றால் அது நாட்டை உலுக்கும் பிரச்சனை என்று சித்தரிக்க படுகிறதா .....

http://www.vinavu.com/2010/05/06/kasab/

மேலும் விவாதங்களுக்கு வினவு தளத்திலே அரசியல் ரீதியாய் பல விவாதம் நடந்துகொண்டிருக்கிறது கட்டுரைகள் ஆழ அரசியல் பார்வை உள்ளன . அது சரி என்று சொல்லவில்லை தவறு என்று தோன்றினாலும் விவாதியுங்கள்.விவாதங்கள் நமக்கே பல உண்மைகளை கற்றுக்கொடுக்கும்

நிலக் கருத்தடை















ஊர் முழுக்க
நிலங்களை கருத்தடை செய்தது கோகோ கோலா.....!
கிராமத்து கிழவனுக்கு மார்க்ஸ் தெரியாது
போராட்டம் தெரியாது .............
கடையில் சென்று கோக் வாங்கினான்
கிழவன் ............
கழிவு நீரை கழிவறையில் ஊற்றி விட்டு ......
பாட்டில் நசுங்க காலில் ஏறி மிதித்து
அதன் மேல் காரி உமிழ்ந்து எதிர்ப்பை பதிவு
செய்தான் கிழவன் ...................!

Wednesday, 5 May 2010

கடற்கரையில் கடவுள்


















கடற்கரை ஓரம்
ஒரு கோவில் இருந்தது
"கடவுள் மண்ணை காப்பார்" என்று மக்கள் நம்பினார்
சுனாமி வந்தது கோவிலுக்குள்
கடவுள் இழுத்து செல்லப்பட்டார்
புதிய கடவுள் சிற்பியால் உருவாக்கப்பட்டார் .......................................
மணல் மேடுகள் உருவாக்கப்பட்டன ..............
மண்ணால் ஆனா கற்கள் கொண்டு உயர்ந்த மதில்கள் எழுப்ப பட்டன .............
"கடவுள் மண்ணை காத்தாரா ?????
மண் கடவுளை காத்ததா

Tuesday, 4 May 2010

குஷ்பூ வழக்கு ஒரு தீர்ப்பு ஒரு கொலை














நிரூபமா பதக் இந்தியாவை உலுக்கும் கொலை செய்தி. நிரூபமா பதக் உயர் ஜாதி பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர் ப்ரியாபான்சு ரஞ்சன் என்ற கீழ் ஜாதி இளைஞனை காதலித்து இருக்கிறாள். மூன்று மாதம் கர்ப்பம் வேறு , இந்த காரணத்தினாலேயே தன் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் .

இத்தனைக்கும் அவர் பெண் நிருபர் அவள் காதலித்த பையனோ ஆண் நிருபர். டெல்லி INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION இருவரும் படித்த இடம். அப்பொழுது காதல் மலர்ந்து இருக்கிறது .நிரூபமா ஜார்க்ஹன்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தந்தையார் பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பெண்ணை MASS COMMUNICATION படிக்க வைக்கிறார்கள் வேறு ஊருக்கு சென்று படித்து இருக்கிறாள் , ஓரளவு படித்த குடும்பமாய் தான் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட குடும்பத்திலேயே கல்யாணம் செய்தால் ஒரு ஜாதியில் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நிரூபமா கல்யாணம் பண்ண வேண்டும் அதற்க்கு முன்னால் கடைசியாய் ஒரு வாய்ப்பு கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து இருக்கிறார். வந்த இடத்தில் குலை செய்யப்பட்டு இருக்கிறாள். இரண்டு விடயங்கள் ஒன்று அவர் காதலித்தது கீழ் ஜாதி பையன் இன்னொரு விடயம் காதலித்து கர்ப்பம் ஆகி இருக்கிறாள். இந்தியா போன்ற பழமை ஊறி இருக்கும் தேசத்தில் குஷ்பூவும் உச்ச நீதி மன்றம் சொல்வது போல் கல்யாணத்திற்கு முன்பு உறவு ஆபத்து ஆனது. அது குஷ்பூ போன்ற மேட்டுக்குடி வர்க்கத்திற்கு வேண்டுமானால் பொருந்தும் என்று இந்த கொலை நிருபித்து உள்ளது.

சரி குஷ்பூ சொல்வது ஏன் தவறு என்று பார்ப்போம். இதுவே காதலித்தது மேல் ஜாதி பையன் காதலிக்க பட்டது கீழ் ஜாதி பெண் என்று வைத்து நிலைமை வைத்துக்கொண்டாலும் மேல் ஜாதிப்பையன் உறவை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எளிதாய் பெண்ணை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது . அப்பொழுதும் தற்கொலையோ இல்லை கொலை செய்யப்படுவது பெண் மட்டுமே.

சரி இன்னொருவனிடம் காதலிக்கும் பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கும். ஒரு பையன் சுற்றினால் வயது பையன் அப்படி தான் இருப்பான் என்று சொல்லும் சமூகம்,ஒரு பெண் காதலித்தால் ஏற்றுக்கொள்ளுமா என்ன ????? இப்படிப்பட்ட பின்தங்கிய சமூகம் இருக்கும் பொழுது கல்யாணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது என்பது

குஷ்பூ போன்ற மேட்டுக்குடி பெண்களுக்கும் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நீதிபதி போன்ற மேட்டுக்குடி வர்க்க பெண்களுக்கு மிகச்சரியான தீர்ப்பை இருக்கும்ஆனால் இந்த தீர்ப்பை பார்த்து படிக்காத பாமர பெண்கள் உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.























ஜாதிகளும் பெண் அடிமைத்தனம் இருக்கும் தேசத்தில் இப்படி ஒரு பொறுப்பில்லாத தீர்ப்பை படித்து ஒரு கிராமத்து பெண் ஏமாந்து போக வாய்ப்பு உள்ளது.மேட்டுக்குடி வர்கத்தில் இருக்கும் பெண்களோ இல்லை பொறுப்பில் உள்ள நீதிபதிகளோ தங்கள் குடும்பத்தை மட்டும் வைத்து தீர்ப்பு அளிப்பது வேதனையாய் இருக்கிறது.

Monday, 3 May 2010

குட்டி தோழன்
















நண்பன் ஒருவன்
இருந்தான்.............!
மது அருந்திகொண்டே மார்க்ஸ் பற்றி
பேசுவான் .........!
குளிர்சாதன அறையில்
சில PDF படித்து விட்டு
சில பதிவுகள் போட்டு விட்டதாலேயே
தன்னை அறிவாளி என்று நினைப்பான் ...!
மே தினம் அன்று அவனை கூப்பிட்டேன்
"வெட்டி வேலை" என்றான் ...........
பரவாயில்லை வெட்டி வேலை பார்ப்போம்
என்றேன் ...........!!!!!
வந்தான் ...........................
கூட்டத்திலே ஓரமாய் நின்றுகொண்டிருந்தோம்
தோழர்கள் பறை விண்ணை முட்டியது
விசில் சத்தம் காதை பிளந்தது,
போலிஸ் அனைவரையும் வண்டியில் ஏற்றியது
ஒரு "குட்டி தோழன் " ஐந்து வயது இருக்கும்
வீரமாய் ஏறினான் ..............................!!!!!!!!
என் நண்பனிடம் சொன்னேன் .......................
நீ மார்சியத்தை எழுத்துக்களால் படித்தாய்
அந்த "குட்டி தோழன்" வாழ்ந்து கொண்டிருக்கிறான்
என்றேன் ....................!!!!
அவன் மூஞ்சியில் கலவரம்
"இதுனால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை" என்று
மீசையில் மண் ஒட்டாமல் போனான்

Sunday, 2 May 2010

உழைப்பாளர்கள் தின பேரணி வினவு தோழர்களுடன்


















மே தினம் அன்று வினவு தோழர்களுடன் புதுச்சேரி பேரணிக்கு சென்றேன். நான்கு மணிக்கு பேரணி என்று சொல்லி இருந்தார்கள் . பு ஜ தொ மு சார்பாக பேரணி அறிவித்து இருந்தார்கள்.தோழர்கள் வினவு தோழர் மேலும் மூன்று தோழர்களுடன் ஒரு அணியாய் சென்றோம் . பேரணிக்கு அனுமைதி மறுக்கப்பட்டு இருந்தது. CITU சங்கத்திற்கு அனுமதி வழங்கிய அரசு பு ஜ தோ மு சங்கத்திற்கு வழங்க வில்லை ஏன் என்றால் அவர்களுக்கே தெரிந்து உள்ளது யார் உண்மையாய் மக்களுக்காய் குரல் கொடுப்பார்கள் என்று தெரிகிறது .
ஒரு மே தின பேரணிக்கு தொழிலாளி வர்க்க தோழர்களுக்கு அனுமதி மறுக்கபடுகிறது என்றால் எந்த அளவு ஜனநாயக தேசத்தில் உள்ளோம்.

தோழர்கள் பேருந்து நிலையத்தில் மறியல் செய்தனர் 2000 தோழர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் செங்கொடி பறந்து கொண்டே இருந்தது. தோழர்களின் குடும்பத்தில் உள்ள 5 வயது குழந்தைகள் கூட குரல் கொடுத்தது மிகுந்த எழுச்சியாய் இருந்தது. சிறிது நேரம் போக போக எழுச்சி அதிகரித்து கொண்டே இருந்தது . தாரை தப்பட்டை வைத்து தோழர்கள் போட்ட தாளம் உற்சாகமாய் இருந்தது. விண்ணை தாண்டி உற்சாக குரல்கள் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன. மேலும் கிராஸ் செய்யப்படும் பாலம் மேலே தோழர்கள் பெரிய செங்கொடி வைத்து கொண்டிருந்தனர் .கீழே இருந்து பார்ப்பதற்கு மிகவும் எழுச்சிகரமாய் இருந்தது.

என்ன எனக்கு ஆச்சர்யம் அளித்தது என்றால் சிறு பிள்ளைகள் கூட போராட்டத்திலே களத்திலே இருக்கிறார்கள். போலீஸ் வாகனங்கள் வந்தது அனைவரையும் ஏற்றி கொண்டு சென்றனர் , குழந்தைகள் வயதிற்கு வந்த பெண்கள் அனைவரும் வீரத்துடன் ஏறினர் போராட்டம் அவர்கள் குருதியில் கலந்து இருக்கிறது என்றே சொல்வேன்.

பொதுவுடைமை அவர்களின் வாழ்க்கை தேவை. நம் நடுத்தர வர்க்கமோ அல்லது மேட்டுக்குடி வர்க்கம் போல அவர்கள் வாழ்க்கை சொகுசாய் இல்லை. நாமெல்லாம் பதிவுலகில் சவடால் பேசுவோம் களத்தில் இறங்க சொன்னால் வேலை இருக்கிறது என்போம். ஈழம் பற்றி எழுதுவோம் தெருவில் இறங்கி போரடுவோமானால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் இந்த உழைக்கும் வர்க்க தோழர்களின் வாழ்கையே போரட்டாமாய் உள்ளது போராட்டம் என்பது அவர்கள் இயல்பு அவர்கள் வெகு இயல்பாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சரி நடுத்தரவர்க்கம் சொகுசாய் இருப்பது போல் மாயை இருந்தாலும் உண்மையில் அப்படி தான் இருக்கிறதா. மென் பொருள் வேலை செய்யும் நடுத்தர வர்க்கம் சார்ந்தவர்கள் பதிமூணு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட மணி நேரங்கள் உழைத்து அவர்கள் வாழ்க்கையே மிகுந்த மன நெருக்கடி உள்ளான வாழ்க்கை ஆகிறது. சரி மன அழுத்தத்தை குறைக்க I T துறையினர் டிஸ்கோதே பார்கள் செல்கின்றனர் மன நலன் உடல் நலன் பாதிக்க ஒருவிதத்தில் தான் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலேயே சுரண்டப்படும் வர்க்கம் நடுத்தர வர்க்கம் .

ஆனால் அடித்தட்டு மக்கள் போல் நேரடியாய் பாதிக்க படமால் இருப்பதால் போராட்டம் என்றால் நடுத்தர வர்க்கம் வருவதில்லை . ஹிந்து பேப்பர் படித்து கொண்டு இவர்களை அவர்களை குறை சொல்லிக்கொண்டு என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று ஆனதை ஆசிரமத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததை பெருமையாய் பேசிக்கொண்டிருக்கிறது நடுத்தர வர்க்கம். கேட்டால் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்கிறது நடுத்தர வர்க்கம். ஒரு பிச்சைக்காரன் வருகிறான் என்று வைத்துக்கொள்வோம் இன்று நம்மிடம் காசு உள்ளது ஐந்து ரூபாய் போடுகிறோம் நாளை காசு இல்லை என்றால் அந்த பிச்சைக்காரன் வேறு ஒருவனிடம் செல்வான், அதைப்போல் தான் உள்ளது இந்த NGO அமைப்புகள் மற்றும் பிச்சைக்காரனுக்கு 2 ருபாய் கொடுக்கும் நடுத்தர வர்க்க மனநிலை.இந்த மாதிரி தன்னால் முடிந்ததை செய்கிறேன் களத்தில் இறங்கி எல்லாம் போராட முடியாது என்கிறது நடுத்தர வர்க்கம். நான் நல்லவன் தான் ஆனால் கோழை என்கிறது. தவறு நடக்கும் பொழுது போரடதது கயமை தனம் அதனால் திருடன் என்று தான் சொல்ல முடியுமே தவிர போரடதவனை நல்லவன் என்று எப்படி சொல்ல முடியும்


நடுத்தர வர்க்கமும் களத்தில் இறங்கி போராடும் நாள் வரும் .அணுகுண்டு வெளியே வெடித்து சிதறவது போல மக்கள் எழுச்சி இருக்கத்தான் போகிறது . நடுத்தரவர்க்கம் தன்னை சுயநீக்கம் செய்துகொண்டு தொழிலாளிகளோடு போராடவேண்டும். IPL வெற்றிக்கும் உலகக்கோப்பை வெற்றிக்கும் கைதட்டும் இளைஞன் விதர்பா விவசாயப்படுகொலைக்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும் களத்தில் இறங்கி போராட வேண்டும். எனக்கு ஒரு மார்க்ஸ் புத்தகம் படித்தால் ஏற்ப்படும் எழுச்சியை விட அங்கு பல ஐந்து வயது சிறுவர்கள் போராட்ட களத்திலே குரல் கொடுத்தது மார்சியத்தை எனக்கு தெளிவாய் புரிய வைத்தது. என்னை விட அந்த சிறுவனுக்கு மார்சியம் என்றால் என்ன என்று தெரியும். மார்சியம் களப்பணி, மது அறிந்திகொண்டு பேசும் இலக்கியம் அல்ல, மக்களுக்கான பணியே மக்களுக்கான இலக்கியம் .