
நேற்று நண்பன் புலிகேசியின் ராவணன் விமர்சனம் பார்த்தேன் நன்றாய் இருந்தது , அதில் அழகிய அனானி என்று ஒருவர் பின்னூட்டம் செய்திருந்தார் ,வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்ததில் இருந்து உங்கள் போக்கு சரி இல்லை என்று . அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் புலிகேசி பதிவுலகம் வரும் முன்பே எனக்கு நண்பன் என்று , இரண்டாவது அப்படி என்ன அவர் கெட்டுப்போய்விட்டார் , இப்பொழுது அவர் எழுதும் பதிவுகள் மிக ஆழமாய் இருக்கின்றது , சரி அந்த விமர்சனத்தில் என்ன குற்றம் கண்டீர்கள் , அதை பற்றி பேசாமல் வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்து கெட்டுப்போய்விட்டார் என்று சொல்வதில் என்ன நியாயம் நண்பரே.
சரி ராவணன் கதாப்பாத்திரம் , எங்கு இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா , நக்சல் தலைவர் kobad ghandy என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது . அப்படி நக்சல் தலைவன் விக்ரம் என்று காட்டும் பொழுது , அவன் ஏன் அப்படி ஆனான் அவனை மக்கள் ஏன் தலைவனாய் கடுவுளாய் நினைக்கிறார்கள் என்று சொல்லி இருக்கவேண்டாமா ????? இது ஒரு பாமரனக்கு கூட தெரியும் ஆனால் மணி சார் இயல்பாகவே அதை தவிர்த்தான் உள் நோக்கம் என்ன .மணி சார் ஒன்றும் இதெல்லாம் தெரியாதவர் அல்ல ,corporate கம்பனியுடன் கூட்டணி போட்டு எப்படி உழைக்கும் மக்களுக்கான படம் எடுக்கமுடியும் நண்பரே .
சரி வடக்கிழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா ?????????? 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்..
இதை போல் இருக்கும் பொழுது என்ன நடக்கும் ஒரு பெண் அழகாய் இருந்தால், அவள் அண்ணனை உள்ளே போட்டுவிட்டு , அதிரடி படை அனுபவிப்பார்கள் . இந்த மாதிரி அடக்கு முறை நம் தமிழ்நாட்டில் உள்ளதா ???? மணி சார் போல சத்யம் திரையரங்கு மக்களுக்கு படம் எடுப்பவர்களுக்கு இது புரியாது என்றே நினைக்கிறேன் . அங்கே சட்டம் எப்படி உள்ளது , அந்த சமூகம் எவ்வளவு அடக்குமுறை உள்ளது , மக்கள் ஏன் அங்கு நக்சலாய் மாறுகின்றனர் ,என்பதை தவிர்த்து விட்டு , அது என்னமோ பழிவாங்கும் கதை
போல , நாயகன் நாயகி விக்ரம் மூவருக்குள் நடக்கும் தாப போராட்டம் போல சித்தரித்தது உள்ளடக்கத்தில் எந்த விதத்தில் நியாயம் . மணி சார் சொல்வதை போல வெறும் நாயகனின் தங்கை மட்டுமா கற்பழிக்க படுவார் . இது பிரச்னையை எளிமை படுத்துவதை போல் உள்ளது அல்லவா?????
மக்கள் பிரச்னையை பலவீன படுத்திவிட்டு , நாயகன் தங்கை கெடுக்கப்படுகிறாள் , அதனால் அவர் போராடுகிறார் என்று காட்டுவது சிறு பிள்ளைத்தனம் , இது எல்லாம் மணி சார் அவருக்கு புரியாதா ????? ஆனால் கைகோர்த்திருப்பது முதலாளிகளுடன் , எப்படி அவரால் இதை செய்ய முடியும் . சரி வடகிழக்கில் தண்டகாரண்யாவில் மலையை "வேதாந்தா" என்னும் கம்பெனி வாங்க நினைக்கிறது , அது கனிம வளம் உள்ள பகுதி , உண்மையில் மக்களை விரட்டினால் தான் அந்த இடத்தை கைப்பற்ற முடியும் என்பதே உண்மை , அதனால் மக்களை விரட்டும் பணி, "OPERATION GREEN ஹன்ட்" என்னும் பெயரில் , நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் பொதுமக்களை வேட்டையாடுகின்றன. சரி அந்த மக்கள் ஒடுக்கப்படாமல் இருந்தால் அவர்கள் ஏன் தீவிரவாதியாய் சித்தரிக்க படவேண்டும் , அவர்கள் மண்ணிற்காக போராடுகிறார்கள் .
இதில் என்ன தவறு , இதை எல்லாம் துளிக்கூட காத்த மணி சார் , இதை பூசி மொழுகுகிறார் , அவன் மக்கள் தலைவன் என்று எளிமையாய் மறைத்து விட்டார் .இது தான் மணி டச் முக்கியமான விடயங்களை மணி தொடுவதில்லை .
ஐரோம் சர்மிளா என்ற கவிஞர் பத்து வருடமாய் உண்ணா விரதம் இருக்கிறார் , அவரை பற்றி ஏற்க்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் . சாமானியன் எனக்கே அந்த விடயம் தெரியும் பொழுது மணி சார் அவருக்கு தெரியாதா .ஒரு தலைவனது தங்கை மட்டுமே கெடுக்கபடுவாளா????? ஈழத்தில் எத்தனை சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர் , ஒரு சமூக பிரச்னையை தனிமனித பிரச்சனையாக சித்தரித்து , அவர்களுக்கு ஏற்படும் கோபதாபத்தை காட்டியதில் முக்கிய
பிரச்சனைகளை மறைக்கப்பார்க்கிறார் மணி .
சில ரசிகர்களுக்கு ஒரு பொது புத்தி உண்டு பேரரசு படம் பார்த்தால் அவனை எள்ளி நகையாடுவர் , நாங்க பார்த்தா மணிரத்னம் படம் மட்டுமே பார்ப்பேன் என்கிறார்கள் . ஒருவர் புலிகேசி பதிவில் பதில் போடுகிறார் படத்தின் தொழில் நுட்ப விடயங்களை நீங்கள் பாராட்டி இருக்கலாம் . ஒரு மயானம் அழகாய் இருக்கிறது என்பதற்காக நாம் எல்லாம் பிணமாய்
படுத்துக்கொள்வோமா ........ ஒரு அழகான ஒரு அழகான கிண்ணத்தில் விடம் இருந்தால் குடிப்பீர்களா ???? என்ன .......நான் ஒரு சாமனியன் என்னிடம் வந்து மணி சார்
படம் நன்றாய் இருக்கிறது என்றால் , நான் திருப்பதி , திருப்பாச்சி பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டு கலாய்ப்பது உண்டு . குளிர் சாதன அறையில் உட்க்கார்ந்து கொண்டு ஈழத்தை பற்றியும் , தண்டகாரண்யா பற்றியும் படம் எடுக்க முடியாது . அப்படி உண்மையிலேயே அப்படி அதை பற்றி கலை மக்களுக்காய் இருக்கவேண்டும் என்றால் அந்த மக்களிடம் கலக்க வேண்டும் .
அந்த மக்களிடம் பேசவேண்டும் . அவர்கள் சொல்வதில் தான் உண்மை நிலைமை தெரியும் பின்பு படம் பிடிக்கவேண்டும் நேர்மையாய் . மணி சார் ஏன் இந்த கதைக்களம் எடுத்தார் , ஏன் இதே ராமாயண புனைவை ஒரு SOFTWARE கம்பெனி வைத்துக்கொண்டு எடுக்கலாமே , ஏன் என்றால் இப்பொழுது அவர் வணிகம் அதிகம் , அதனால் இந்தி மக்களின் ஒட்டு மொத்த மக்களுக்கும் புரியும் படி ஒரு கதைக்களம் வேண்டும் , ஏன் என்றால் அப்பொழுது தான் கல்லா கட்ட முடியும் . தமிழிற்கு விக்ரம் , ஹிந்தி பச்சன் குடும்பம் , மலையாளம் பிரிதிவிராஜ்
என்று கணக்கு போடுக்கிறார் மணி , ஏன் இந்த புனைவை வேறு ஒரு கதைகளத்தில் சொல்லலாமே . இடம் திருநெல்வேலி என்கிறார் , திருநெல்வேலி இப்படி தான் இருக்கிறாதா என்ன ????? அவருக்கு தேவை இரண்டு மக்களுக்கும் புரியும் கதைக்களம் , அதனால் தான்
அவர் தேசிய பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு படம் செய்கிறார் .

அருந்ததி ராய் எழுத்தாளர் , அவர் எழுத்துக்கள் எங்கு இருந்து வருகிறது ,அருந்ததி ராய் காட்டிற்குள் செல்கிறார் , மக்களை சந்திக்கிறார் எழுதுகிறார் , அதுவே உண்மையான கலைக்கு அழகு .மக்கள் பிரச்னையை தனிமனித கோபதாபம் என்று சிறுமை படுத்தி அப்பகுதி மக்களை கேவலப்படுத்திருக்கிறார் மணி சார் . இப்பொழுது சொல்லுங்கள் புலிகேசி என்னிடம் சேர்ந்து என்ன கேட்டுப்போயவிட்டார், சரி உங்களுடன் எல்லாம் சேர்ந்து என்ன உபயோகமாய் இருந்து விட்டார் . கட்டம் கட்டுவதெல்லாம் ஒன்றும் புதிதல்ல . நான்
இப்பொழுது பல பேருக்கு வாக்கு அளித்தால் பின்னூட்டம் போட்டால் எனக்கும் வாக்குகள் வரும் . அதில் என்ன இருக்கிறது நண்பா . நான் கட்டம் கட்ட பட்டவனாகவே இருக்கட்டும் . என்னுடைய கடைசி இருபது பதிவுகளில் , ஒன்று இரண்டு பிரபலமாயின , அதற்காய் நான் வருந்தவில்லை . இருந்தாலும் நான் நேர்மையாய் எழுதுகிறேன் என்பதில் கர்வம் உண்டு , அந்த நேர்மை புலிகேசிக்கும் வந்து கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு பெருமை .
என்னை ஐஸ்வர்யா ராய் வசீகரிக்க வில்லை , அருந்ததி ராய் மட்டுமே வசீகரம் செய்கிறார் .