என் நண்பர் ஒருவர் அவர் நண்பரிடம் போபால் தீர்ப்பை பற்றி பேசி இருக்கிறார் , மேலும் உலகமயமாக்கலின் தாக்கங்களை எடுத்து சொல்லி இருக்கிறார் .அதற்க்கு இன்னொரு நண்பர் " சமூகத்துக்கு நீ என்ன பண்ண ????" என்று கேட்டு இருக்கிறார் . "உன்னால ஒன்னும் பண்ண முடியாதுள்ள , யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது இப்படி வெட்டித்தனமா பேசாம பொழப்ப பாரு " என்று இன்னொரு நண்பர் இவரை கடித்து இருக்கிறார் .இருவரின் பொழப்பு திரைத்துறை , பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் . சரி அப்படி கடித்த நண்பர் போல தான் பொது புத்தி உள்ளது , எடுத்துவுடனே பிள்ளை பெற முடியுமா என்ன ????? அந்த உதவி ஒளிப்பதிவாளர் முதலில் தரமணி கல்லூரியில் படித்து இருக்கிறார் , பின்பு இப்பொழுது ஒரு பெரிய ஒளிப்பதிவாளரிடம் உதவி ஒளிப்பதிவாளர் , பின்பு ஒரு ஐந்து வருடம் கிடைத்து ஒரு படம் கிடைக்கும் , இப்படி படிப்படியாக தானே செய்ய முடியும் .தனக்கு என்று வரும்பொழுது அக்கறையாய் செய்யும் மக்கள் , சமூகம் என்று வரும்பொழுது ஒதுங்கிக்கொள்கின்றனர்.ஒதுங்குவதற்கு சாக்காய் நம்மால் எதுவும் பண்ண முடியாது என்ன பண்ண முடியும் என்று சொல்கின்றனர் .
ஒரு குழந்தை எழுந்து நடக்கிறது தட்டு தடுமாறி விழுகிறது மறுபடியும் எழுந்து நடக்கிறது . இப்படி தான் ஒவ்வொரு செயலிலும் இருக்க முடியும் ,முதலில் படிக்கும் பொழுது புரியாது படிக்க படிக்க மட்டுமே புரியும் . முதலில் ஒரு பெண் பார்க்க மாட்டாள் மூன்று நாட்கள் நாம் பின்தொடர்ந்தால் யாரோ ஒருவன் பார்க்கிறானே என்று திரும்பி பார்ப்பாள் . மேலும் அரை கூட விழுக வாய்ப்பு உள்ளது , அதற்காய் காதாலிக்காமல் இருப்போமா
என்ன ???? ஒரு வேலைக்கு INTERVIEW செல்கிறோம் கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடுவோமா ????? ஒரு மகன் படிக்கவில்லை என்றாலும் அப்பா படிக்க வைக்கத்தான் செய்வார் . இப்படி தனித்தனியாய் நம் வாழ்க்கைக்கு போராடும் நாம் , சமூகம் என்று வரும்பொழுது "அது எல்லாம் வேலைக்கு ஆகாது வெட்டி வேல " என்று சொல்கிறோம் . மேலும் பொதுஉடைமை என்றால் "ரஷ்ய சீனா தோற்றுவிட்டதே " என்கிறோம் , ஆனால் பரிட்சையில் தோற்றுவிட்டோம் என்பதற்காய் நாம் மறுபடியும் எழுதாமல் இருக்கிறோமா என்ன ??????
சரி சமூகத்திற்கான போராட்டங்களில் இறங்க வேண்டும் என்று நினைக்கும் பலர் , அதை நடைமுறைபடுத்தும் பொழுது பாதியிலேயே வேண்டாம் இது நம்மால் முடியாது என்று விலகுகிறார்கள் . மேலும் இவரை போன்றவர்களை பார்த்தால் இது நடைமுறையில் சாத்தியம் அல்ல , என்று தனக்கு நடந்த விடயங்களை வைத்து விளக்குகிறார்கள் . இவர்களால் மட்டுமே தனக்கு நடந்ததை வைத்து சமூக சிந்தனை வேண்டாம் என்று மற்றவர்களுக்கு
விளக்க முடியும் . ஆனால் இவர்கள் குடும்பம் என்றால் , இவர்கள் வேலை என்றால் தோல்வி கண்டாலும் விடுவதில்லை . தன் தங்கையை கிண்டல் செய்யும் ஒருவனை முறைக்கும் அண்ணன் தான் , இலங்கையில் சகோதரிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பொழுதும் கூட , அதே நேரத்தில் நடந்த மட்டை பந்து விளையாட்டை அவனால் ரசிக்க முடிகிறது . தான் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் ,சமூகம் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் .
சமூக அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டிய கட்டுரை தோழர் மருதையனின் "மகிழ்ச்சியின் தருணங்கள் " சமூக செயல்களால் உந்தப்பட்டாலும், நடைமுறை படுத்தமுடியாமல் இருக்கும் தவித்து போய் இதெல்லாம் சாத்தியம் அல்ல என்று மனம் வெதும்பி பாதியிலேயே திரும்பும் மக்களுக்காய் எழுதப்பட்ட கட்டுரை . ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் உற்சாகமாய் மாற்றக்கூடிய கட்டுரை என்றே சொல்வேன் . ஒரு செய்ய முடியாத செயலை செய்து அடுத்த கட்டத்திற்கு போவது , சமூக வேலைகள் செய்யும் பொழுது தன் மனதிற்குள் ஏற்ப்படும் முரண்பாடு , குடும்பத்திற்குள் ஏற்ப்படும் முரண்பாடு இதை எல்லாம் தாண்டி தன் சொல்லிற்கும் செயலிற்கும் இடைவெளி இல்லாமல் போராடும் தருணங்களே "மகிழ்ச்சியின் தருணங்கள் " என்று சொல்வார் . "போராட்டமே மகிழ்ச்சி " என்பது காதில் ஒளித்து கொண்டே இருக்கிறது .கட்டுரையை படிக்க நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும் .
http://www.vinavu.com/2010/07/30/momemts-of-joy/
Thursday, 12 August 2010
Tuesday, 10 August 2010
டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை
ஏகதிபத்தியம் ஆட்சி செய்கிறது , உயிர்கள் மயிர்களை போல மதிக்கபடுகின்றன ???? போபால் விடயம் நமக்கு உரைக்கும் உண்மை என்ன . நாம் சுதந்திரம் அடையவில்லை , ஏகாதிபத்தியங்களும் உலக வங்கியும் ஆட்சி செய்கிறது இந்தியாவை , இந்நிலையில் சுதந்திர தினம் வருகிறது , நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்ன ????? சுதந்திரதினத்தன்று போபால் விடயத்திற்காக டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை நடைபெற போகிறது அனைவரும் வருக .மேலும் தெரிந்து கொள்ள இதை சொடுக்கவும் .
http://www.vinavu.com/2010/08/11/dow-blockade/
http://www.vinavu.com/2010/08/11/dow-blockade/
Thursday, 5 August 2010
போபால் படுகொலையும் ஒரு விவாகரத்தும்
சம்பவம் 1 :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடக்கிறது ,ஹிந்து முறைப்படி நடக்கிறது , மனைவி இந்தியாவில் விவாகரத்து கேட்கிறாள் .திருமணம் அமெரிக்காவில் நடந்ததால் விவாகரத்து வழக்கை இந்திய நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது என்கிறார் கணவர் , ஆனால் திருமணத்தில் எப்பொழுது தாலி கட்டப்பட்டதோ அப்பொழுதே அது ஹிந்து திருமணம் என்று சொல்கிறது நீதிமன்றம் . விவாகரத்து கேட்டவர் நடிகை சுகன்யா , சரி ஒரு திருமணம் இந்திய முறைப்படி நடந்ததால் மட்டுமே இந்திய சட்டத்திற்குள் வரும் என்று நீதிமன்றம் சொல்கிறது .
சம்பவம் 2 :
1969 ஒரு நிறுவனத்திற்கு அனுமதி கேட்கிறார்கள் , அந்த நிறுவனம் வந்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் . சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் , அந்த நிறுவனம் உபயோக படுத்துவது பழைய ஆபத்தான தொழிற் நுட்பம் . சில திருகுதாளங்கள் செய்து அந்த நிறுவனம் அனுமதி வாங்குகிறது . 1975 முதல் இயங்குகிறது , பல சின்ன சின்ன விபத்துக்கள் நடக்கிறது . அந்த விடத்தால்
பிரச்சனை என்பது தெரியும் , ஆனாலும் இயங்குகிறது . சின்ன சின்ன விபத்துகளுக்கு பிறகு , நிபுணர் குழு வருகிறது , முப்பது மாற்றங்கள் செய்ய சொல்கிறது அதையும் அவர்கள் செய்யவில்லை . 1984 விட வாயு கசிகிறது ஆயிற கணக்கான பேரை விழுங்குகிறது , இந்த முதலாளித்துவம் அதன் இரைக்காக ஒரு ஊரையே சாப்பிடுகிறது . விபத்து என்று முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் கூற்று , ஆனால் அது படுகொலை .
நூறு பேரை கொலை செய்த காசாபை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று சொல்வார்கள் , வெளிநாட்டுகாரனை தண்டிக்க முடியாது என்றால் , காசபை விட்டுவிடலாமே . கசாபிற்கு ஒரு நீதி முதலாளி என்று வந்தால் ஒரு நீதியா .. ஆனால் இன்னும் போபாலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பொழுது , இருபது ஆயிரம் மக்கள் இறந்த பொழுதும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்டேர்சன் கைது செய்யப்படாமல் பத்திரபடுத்தி விமானத்தில் அனுப்பினர். இது துரோக வரலாறு .
முரண் :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடந்தால் கூட இந்திய சட்டத்திற்கு உட்ப்பட்டதாம் . ஆனால் ஒரு அமெரிக்கன் இந்திய மக்களை சேரி போல உபயோகம் செய்து . கழிவு நிறுவனத்தை , கம்மியான கூலியுடன் இந்தியாவில் பெற்று . பல லட்சம் உயிரை தன் லாப நோக்கத்திற்கு கொலை செய்த அன்டேர்சன்னை விசாரிக்க கூட முடியாதாம். இதுவல்லவா முரண் . இம்முரண்ணுக்கு சட்டம் மட்டும் காரணமா . மக்கள் அதிகம் பாதிக்கபட்டாலும் அதை பற்றி எழுதாமல் "போபால் என்றால் சரோஜா தேவி சொல்கிற மாதிரி கோபால் கோபால் " என்றிருக்கிறது என்று சொல்பவர்களும் . மேலும் இந்த விடயம் மக்களிடம் செல்ல நிறைய பேரை எழுத கேட்டு இருந்தேன் அவர்கள் நன்றாய் எழுதிவிட்டனர் .அந்த நண்பர்களும் இத்தகைய முரண்களுக்கு காரணம்.
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடக்கிறது ,ஹிந்து முறைப்படி நடக்கிறது , மனைவி இந்தியாவில் விவாகரத்து கேட்கிறாள் .திருமணம் அமெரிக்காவில் நடந்ததால் விவாகரத்து வழக்கை இந்திய நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது என்கிறார் கணவர் , ஆனால் திருமணத்தில் எப்பொழுது தாலி கட்டப்பட்டதோ அப்பொழுதே அது ஹிந்து திருமணம் என்று சொல்கிறது நீதிமன்றம் . விவாகரத்து கேட்டவர் நடிகை சுகன்யா , சரி ஒரு திருமணம் இந்திய முறைப்படி நடந்ததால் மட்டுமே இந்திய சட்டத்திற்குள் வரும் என்று நீதிமன்றம் சொல்கிறது .
சம்பவம் 2 :
1969 ஒரு நிறுவனத்திற்கு அனுமதி கேட்கிறார்கள் , அந்த நிறுவனம் வந்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் . சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் , அந்த நிறுவனம் உபயோக படுத்துவது பழைய ஆபத்தான தொழிற் நுட்பம் . சில திருகுதாளங்கள் செய்து அந்த நிறுவனம் அனுமதி வாங்குகிறது . 1975 முதல் இயங்குகிறது , பல சின்ன சின்ன விபத்துக்கள் நடக்கிறது . அந்த விடத்தால்
பிரச்சனை என்பது தெரியும் , ஆனாலும் இயங்குகிறது . சின்ன சின்ன விபத்துகளுக்கு பிறகு , நிபுணர் குழு வருகிறது , முப்பது மாற்றங்கள் செய்ய சொல்கிறது அதையும் அவர்கள் செய்யவில்லை . 1984 விட வாயு கசிகிறது ஆயிற கணக்கான பேரை விழுங்குகிறது , இந்த முதலாளித்துவம் அதன் இரைக்காக ஒரு ஊரையே சாப்பிடுகிறது . விபத்து என்று முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் கூற்று , ஆனால் அது படுகொலை .
நூறு பேரை கொலை செய்த காசாபை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று சொல்வார்கள் , வெளிநாட்டுகாரனை தண்டிக்க முடியாது என்றால் , காசபை விட்டுவிடலாமே . கசாபிற்கு ஒரு நீதி முதலாளி என்று வந்தால் ஒரு நீதியா .. ஆனால் இன்னும் போபாலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பொழுது , இருபது ஆயிரம் மக்கள் இறந்த பொழுதும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்டேர்சன் கைது செய்யப்படாமல் பத்திரபடுத்தி விமானத்தில் அனுப்பினர். இது துரோக வரலாறு .
முரண் :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடந்தால் கூட இந்திய சட்டத்திற்கு உட்ப்பட்டதாம் . ஆனால் ஒரு அமெரிக்கன் இந்திய மக்களை சேரி போல உபயோகம் செய்து . கழிவு நிறுவனத்தை , கம்மியான கூலியுடன் இந்தியாவில் பெற்று . பல லட்சம் உயிரை தன் லாப நோக்கத்திற்கு கொலை செய்த அன்டேர்சன்னை விசாரிக்க கூட முடியாதாம். இதுவல்லவா முரண் . இம்முரண்ணுக்கு சட்டம் மட்டும் காரணமா . மக்கள் அதிகம் பாதிக்கபட்டாலும் அதை பற்றி எழுதாமல் "போபால் என்றால் சரோஜா தேவி சொல்கிற மாதிரி கோபால் கோபால் " என்றிருக்கிறது என்று சொல்பவர்களும் . மேலும் இந்த விடயம் மக்களிடம் செல்ல நிறைய பேரை எழுத கேட்டு இருந்தேன் அவர்கள் நன்றாய் எழுதிவிட்டனர் .அந்த நண்பர்களும் இத்தகைய முரண்களுக்கு காரணம்.
Wednesday, 4 August 2010
மந்திரனும் அப்பாவி ரசிகனும்

மந்திரன் ஒரு படம் வெளிவருதாம் , மலேசியலா தான் தமிழர்கள் அதிகம் இருக்காங்காலாம் அதனால்
அங்க தான் விழா எடுத்தாங்கலாம். இங்க ரசிகனுக ஒரே ஆர்ப்பாட்டமாம் , ஏன் நா தமிழ்நாட்டுல தலைவிதியே (தலைவிதி) இந்த சூப்பர் (தாத்தாவாம்) ச்டாராம் . வேற வேல வெட்டி இல்லாததாலா பாடல் வெளியீட்டு விழாவிற்கே CUT OUT எல்லாம் வச்சுருக்காங்க . இந்த தீபாவளிக்கு படம் வரலைனா துக்க தீபாவளி என்று போஸ்டர் வொட்டுவோம்னு மதுரை ரசிகர்கள் சொல்றாங்களாம் . ஏன் அப்படி சொல்றாங்கனா சும்மா இல்ல , தலைவர் நடிக்கற படத்துல லாபத்துல பங்கு கொடுக்கற மாதிரி சின்ன விஷயம் எல்லாம் பண்றதில்ல மாறா , தன் படத்திற்கு நூறு ரூபா ticketnaa 1000 ரூபாய்க்கு விக்க சொல்லி ரசிகர்கள குஷி படுத்தராராம் தலைவர் . ஆனா படத்துல லஞ்சத்த ஒழிக்கரது என்ன , கருப்பு பணம் பத்தி பேசறது என்ன ???? கௌண்டர் சொல்ற மாதரி ஒரே டகால்ட்டி தான் .மேலும் படம் வந்தா , இப்படி பணம் செலவழித்த பேரன்களின் தாத்தா வாழ்கன்னு பாராட்டுவிழா
அமெரிக்கால நடக்க போகுதாம் . ஏன் அமெரிக்கால தமில்நாடவிட மூன்று மடங்கு தமிழர்கள் இருக்காங்கனு ஆய்வு சொல்லுதாம்.படம் வெளிவரப்ப பால் , பீர் எல்லாம் நல்லா விற்பனை ஆகுமாம் ??? கடன் வாங்கி தண்ணி அடிக்கறவன் ஒரு மாற்றா கடன் வாங்கி படம் பார்ப்பானாம் , என்ன முன்னேற்றம் அன்னிக்கு தான் தண்ணி அடிக்கலையே . எப்பொழுதுமே பேரன் பேத்திகள் ஆட தாத்தா பாட்டி ரசிப்பாங்க . ஆனா மந்திரன் படம் வரப்ப தாத்தா பாட்டி ஆட பேரன் பேத்திகள் எல்லாம் கை தட்டறாங்க பிரபு சொல்ற மாதிரி என்ன கொடுமை சரவணன் .
Tuesday, 3 August 2010
நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ????
என் பெயர் பெயாரா முக்கியம் , நான் மாவட்ட ஆட்சியாளர் இப்போ எதோ கௌரவமா இருக்கேன் , ஆனா நான் பிறந்தது ஆதி திராவிட வகுப்பு , சின்ன வயசில் இருந்து தீண்டாமை , நான் ஒரு பொண்ண காதலிச்சேன் , அந்த பொண்ணு வீட்ல எதிர்ப்பு அடிச்சு ஊர விட்டே துரத்திடாங்க . சரி IAS படிச்சேன் மாவட்ட ஆட்சியாளர் ஆனேன் , ஆனா கூட மேல் சாதி வீட்ல தண்ணி கொடுக்க யோசிப்பாங்க , இப்ப மதம் மாறினேன் , ஆனாலும் கேவலமா தான் பார்க்குறாங்க , அரசாங்கம் மதம் மாறினதால் IAS செல்லாதுன்னு சொல்லுது . மதம் மாறினா சமூகத்துல என் அந்தஸ்த்து உயர்ந்துச்சா . சில பிரபலங்கள் கேக்குறாங்க , ஜாதி இல்லாத மதங்கள்ல ஜாதி பாக்குறது தவறுன்னு , மத ரீதியா ஒதுக்கீடு கொடுக்கணும்னு . அப்படினா நாடார் ஜாதியில் இருந்து மதம் மாறினவனும், தேவரில் இருந்து மதம் மாறினவனும் , மீனவனை இருந்து மதம் மாறரவனும் ஒண்ணா ?????? எல்லாரும் கேக்கலாம் மதம் தான்
மாறியாச்சே அப்புறம் என்ன ஜாதின்னு ????? நான் ஜாதி பாக்கள சாமி ஆனா என்னைய கேவலமா தானே பாக்குறாங்க சரி தானே ????? அப்ப இட ஒதுக்கேடு வேணும்ல ????மதம் மாறிட்டேன் என்பதற்காய் நான் கேவலப்பட்டது இல்லாமல் போய்டுமா என்ன ?????இடஒதுக்கீடு தேவை ஆனா அது அனைத்து மதத்திலும் இருக்கும் தலித்துக்களுக்கு மட்டுமே .சரி மதத்தினால அந்தஸ்த்து உயர்ந்து இருக்குனு சொல்றாங்க , அது மட்டும் உண்மைனா நான் அன்னிக்கே மதம் மாறி காதலிய கை பிடுச்சு இருப்பேன்ல????
நடைமுறை என்ன , ஒரு தலித்த் மதம் மாறறாரு அதுக்காகவே சமூக அந்தஸ்த்து உதவுமா ??????அவர் BC அதற்காய் மற்ற BC அவரை சமமா நினைச்சு பொண்ணு தருவாங்களா ??? அதனால சமூக அந்தஸ்த்து உயருமா ?? இல்லைல , அதனால இடஒதுக்கீடு ஒரு அளவிற்கு வேணும்னா உபயோகப்படும் சமூக நீதி எல்லாம் அதுல இல்லை??? தர்க்காலிக தீர்வு நிரந்தர தீர்வு ஆகாது .
இப்போ உங்களுக்கு உடம்பு சரி இல்ல டாக்டர்ட போறீங்க , தல வலி தானு வச்சுக்குவோம் , டாக்டர் ஒரு மருந்து தராரு , நாமளும் சாபிட்றோம் அது தலைவலியா நிக்க வைக்குது வயத்த வலி வருத்துன்னு வச்சுக்குவோம் , அந்த மருந்து நமக்கு சேரல ??? அதனால தலைவலி நின்னுடுச்சு அப்படின்னு அந்த மருந்த உபயோகபடுத்த முடியுமா ????? அப்ப டாக்டர் எப்படி இருக்கணும் அந்த மருந்து நமக்கு சேருமா இல்லையா , அந்த தலைவலி எங்கிருந்து தோணிச்சுன்னு ஆராய்ச்சி பண்ணி தான் மருந்து கொடுக்கணும்ல , அது தானே நிரந்தர தீர்வு . எந்த ஒரு பிரச்சனைக்குமே நிரந்தர தீர்வு தான் இருக்கணும் , இல்லேன்னா எப்பவுமே தலைவலி தான் . அப்படி பார்த்தா நிரந்தர தீர்வு எப்ப வரும்னா ???புரட்சி செய்யறதுல தான் வரும் . புரட்சினா உடனே துப்பாக்கி அது இதுன்னு நினைக்க வேணாம் , ஒரு மற்றம் வரணும் . அதாவது சொத்த வச்சுதான் கிராமங்கள்ல ஜாதி நிர்ணயிக்கபடுது அந்த சொத்துடமைய ஒழிக்கறது மூலமா தான் சாதியின் வேர்கள புடுங்கலாம் . அப்புறம் அகமண முறை ஒழிக்க படனும் , யாரும் யாரையும் கல்யாணம் செய்யலாம் , அப்படி பெற்றோகள் ஜாதிக்காரர்கள் தடுத்தால் அவர்களை உள்ளே வைக்க சட்டம் போடலாம் . இப்படி நிறையா இருக்கு , அது எல்லாம் விவாதத்தின் மூலமா பல கருத்துகள கேட்கலாம்.சரி முதலாளித்துவ உற்பத்தி முறை இருக்குனு சொல்றாங்க சில முற்ப்போக்காளர்கள், ஆனா பிற்ப்போக்கா தான் இருக்காங்க மக்கள்
சரி முற்ப்போக்கு சிந்தனையாளருக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? இப்ப நான் மதம் மாறிட்டேன் , அப்புறம் நாத்திகம் ஆகறேன் . நாத்திகனா இருக்கறேன் அதுக்காக எங்க அப்பா அம்மாவெல்லாம் பள்ளில படிக்க அனுமதிசாங்களா இல்லை அவங்க குடிக்கற க்ளாஸ் நாங்க குடிக்க முடியுமா , இன்னும் கிராமத்துல ரெட்டை கப் முறை இருக்குலா ???? நாத்திகனு சொன்னா எல்லா மக்களும் எனக்கு மரியாதையை தந்துட போறாங்களா ??? ஐயா நான் ஜாதி பாக்கல ஒக்காளி ஊருக்குள்ள அப்படி பாக்குரைங்க சரி தானே . நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? அப்ப மதம் இருந்தா தான் ஒதுக்கீடா ???? அப்ப மதத்தை கட்டிக்காக்குதா இப்ப உள்ள இடஒதுக்கீடு , இடஒதுக்கீடு மதத்தை ஜாதியை ஒழிக்கவேண்டுமே தவிர கட்டிக்காக்க கூடாது .
மாறியாச்சே அப்புறம் என்ன ஜாதின்னு ????? நான் ஜாதி பாக்கள சாமி ஆனா என்னைய கேவலமா தானே பாக்குறாங்க சரி தானே ????? அப்ப இட ஒதுக்கேடு வேணும்ல ????மதம் மாறிட்டேன் என்பதற்காய் நான் கேவலப்பட்டது இல்லாமல் போய்டுமா என்ன ?????இடஒதுக்கீடு தேவை ஆனா அது அனைத்து மதத்திலும் இருக்கும் தலித்துக்களுக்கு மட்டுமே .சரி மதத்தினால அந்தஸ்த்து உயர்ந்து இருக்குனு சொல்றாங்க , அது மட்டும் உண்மைனா நான் அன்னிக்கே மதம் மாறி காதலிய கை பிடுச்சு இருப்பேன்ல????
நடைமுறை என்ன , ஒரு தலித்த் மதம் மாறறாரு அதுக்காகவே சமூக அந்தஸ்த்து உதவுமா ??????அவர் BC அதற்காய் மற்ற BC அவரை சமமா நினைச்சு பொண்ணு தருவாங்களா ??? அதனால சமூக அந்தஸ்த்து உயருமா ?? இல்லைல , அதனால இடஒதுக்கீடு ஒரு அளவிற்கு வேணும்னா உபயோகப்படும் சமூக நீதி எல்லாம் அதுல இல்லை??? தர்க்காலிக தீர்வு நிரந்தர தீர்வு ஆகாது .
இப்போ உங்களுக்கு உடம்பு சரி இல்ல டாக்டர்ட போறீங்க , தல வலி தானு வச்சுக்குவோம் , டாக்டர் ஒரு மருந்து தராரு , நாமளும் சாபிட்றோம் அது தலைவலியா நிக்க வைக்குது வயத்த வலி வருத்துன்னு வச்சுக்குவோம் , அந்த மருந்து நமக்கு சேரல ??? அதனால தலைவலி நின்னுடுச்சு அப்படின்னு அந்த மருந்த உபயோகபடுத்த முடியுமா ????? அப்ப டாக்டர் எப்படி இருக்கணும் அந்த மருந்து நமக்கு சேருமா இல்லையா , அந்த தலைவலி எங்கிருந்து தோணிச்சுன்னு ஆராய்ச்சி பண்ணி தான் மருந்து கொடுக்கணும்ல , அது தானே நிரந்தர தீர்வு . எந்த ஒரு பிரச்சனைக்குமே நிரந்தர தீர்வு தான் இருக்கணும் , இல்லேன்னா எப்பவுமே தலைவலி தான் . அப்படி பார்த்தா நிரந்தர தீர்வு எப்ப வரும்னா ???புரட்சி செய்யறதுல தான் வரும் . புரட்சினா உடனே துப்பாக்கி அது இதுன்னு நினைக்க வேணாம் , ஒரு மற்றம் வரணும் . அதாவது சொத்த வச்சுதான் கிராமங்கள்ல ஜாதி நிர்ணயிக்கபடுது அந்த சொத்துடமைய ஒழிக்கறது மூலமா தான் சாதியின் வேர்கள புடுங்கலாம் . அப்புறம் அகமண முறை ஒழிக்க படனும் , யாரும் யாரையும் கல்யாணம் செய்யலாம் , அப்படி பெற்றோகள் ஜாதிக்காரர்கள் தடுத்தால் அவர்களை உள்ளே வைக்க சட்டம் போடலாம் . இப்படி நிறையா இருக்கு , அது எல்லாம் விவாதத்தின் மூலமா பல கருத்துகள கேட்கலாம்.சரி முதலாளித்துவ உற்பத்தி முறை இருக்குனு சொல்றாங்க சில முற்ப்போக்காளர்கள், ஆனா பிற்ப்போக்கா தான் இருக்காங்க மக்கள்
சரி முற்ப்போக்கு சிந்தனையாளருக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? இப்ப நான் மதம் மாறிட்டேன் , அப்புறம் நாத்திகம் ஆகறேன் . நாத்திகனா இருக்கறேன் அதுக்காக எங்க அப்பா அம்மாவெல்லாம் பள்ளில படிக்க அனுமதிசாங்களா இல்லை அவங்க குடிக்கற க்ளாஸ் நாங்க குடிக்க முடியுமா , இன்னும் கிராமத்துல ரெட்டை கப் முறை இருக்குலா ???? நாத்திகனு சொன்னா எல்லா மக்களும் எனக்கு மரியாதையை தந்துட போறாங்களா ??? ஐயா நான் ஜாதி பாக்கல ஒக்காளி ஊருக்குள்ள அப்படி பாக்குரைங்க சரி தானே . நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? அப்ப மதம் இருந்தா தான் ஒதுக்கீடா ???? அப்ப மதத்தை கட்டிக்காக்குதா இப்ப உள்ள இடஒதுக்கீடு , இடஒதுக்கீடு மதத்தை ஜாதியை ஒழிக்கவேண்டுமே தவிர கட்டிக்காக்க கூடாது .
Monday, 2 August 2010
அது இன்னா பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா -2
நேற்று இடஒதுக்கீடு பற்றி பதிவு போட்டு இருந்தேன் .அதில் கிறுத்துவ மதத்தில் சாதி இல்லை எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் , இந்து மதத்திலே தான் சாதி உள்ளது அதனால் அவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்று சிலர் விவாதம் செய்தனர் . இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் அப்பிரிவினர் எப்படி பார்க்க படுகிறார்கள் அவர்கள் அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா என்பதை வைத்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . இப்பொழுது ஒருவன் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த தலித்தாய் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் ,மதம் மாறுகிறான் அதனால் அவன் சமூகத்தில் அந்தஸ்த்து அடைவானா ??????? என்பதற்கு இல்லை என்ற பதிலே சரியாக இருக்கும் . அப்படி மதம் மாறினால் சமூக விடுதலை அடையும் என்பது சாத்தியம் ஆனால் , இப்படி இடஒதுக்கீடு எல்லாம் தேவை இல்லை அனைவரும் மதம் மாறியே சமூக விடுதலை அடைவார்களே , ஏன் அப்படி செய்வதில்லை ஏன் என்றால் மதம் மாறினால் மட்டும் சமூக விடுதலை அடைய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாய் தெரியும் .
சரி கிறுத்துவர்களில் சாதி இல்லை என்கிறார்கள் . அப்படி என்றால் நாடார் கிறுத்துவர் , தேவர் கிறுத்துவர் எல்லாம் எங்கு இருந்து வந்தார்கள் .ஒரு தேவர் கிறுத்துவராய் மாறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் , ஒரு தலித்தும் கிறுத்துவராய் இரண்டு பெரும் கிறுத்துவர் தானே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பார்களா ???? IAS கூட படித்து இருக்கட்டுமே , தலித்த் என்ற ஒற்றை காரணம் கொண்டு பெண் தர மறுப்பார்கள் , அப்பொழுது நடைமுறையில் சாதி என்பது இருக்கிறாது. அப்படி சமூக ரீதியாய் ஒடுக்கப்படும் பொழுது ஏன் இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க கூடாது இது மேல்சாதியின் குரலை போல அல்லவா இருக்கிறது . நடைமுறையில் சமூக அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா இல்லையா என்பது தான் கேள்வி ??????அதை பொறுத்தே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தானே நியாயம் .
இந்து மதமே சாதி என்ற அமைப்பை கட்டிக்காக்கிறது என்பது பெரியார் அவர்கள் சொல்கிறார் , அப்படி ஒடுக்குமுறையை தாண்டி வரவேண்டும் என்று நினைப்பவர்களை இல்லை நீ இந்து மதத்தின் அடிமை என்று சொல்வது போல் உள்ளது இந்த இடஒதுக்கீடு . இது இந்து மதத்தை மறைமுகமாய் கட்டிக்காக்கிறது , இப்படி ஒரு அரசியல் சட்டம் இருக்க எப்படி பெரியார் அவர்களும் , பார்ப்பன எதிர்ப்பாளர்களும் குரல் கொடுக்காமல் இருந்தார்கள்
என்பது வருத்தமாய் தான் உள்ளது .அம்மையார் மதம் மாற்று தடை சட்டம் கொண்டு வந்தாரே அதை போல அல்லவா இருக்கிறது மதம் மாறக்கூடாது ,நீ இந்துக்களின் அடிமை அப்படி மாறினால் உன் IAS பட்டம் கூட செல்லாது என்று தலித்த்களின் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கும் .IAS ஆனால் என்ன ??? அடிமை அடிமை தான் என்று சொல்வது வெட்கப்பட வேண்டிய விடயம் அல்லவா??
இந்த இடஒதுக்கீடு சாதி என்பதை ஒழிக்காமல், இந்து மதம் என்பதை கட்டிக்காக்கிறது ???? இடஒதுக்கீடு ஒரு அளவிற்குஉபயோகப்படுமே அன்றி , சமூக விடுதலைக்கு இது தீர்வு அல்ல .
சரி கிறுத்துவர்களில் சாதி இல்லை என்கிறார்கள் . அப்படி என்றால் நாடார் கிறுத்துவர் , தேவர் கிறுத்துவர் எல்லாம் எங்கு இருந்து வந்தார்கள் .ஒரு தேவர் கிறுத்துவராய் மாறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் , ஒரு தலித்தும் கிறுத்துவராய் இரண்டு பெரும் கிறுத்துவர் தானே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பார்களா ???? IAS கூட படித்து இருக்கட்டுமே , தலித்த் என்ற ஒற்றை காரணம் கொண்டு பெண் தர மறுப்பார்கள் , அப்பொழுது நடைமுறையில் சாதி என்பது இருக்கிறாது. அப்படி சமூக ரீதியாய் ஒடுக்கப்படும் பொழுது ஏன் இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க கூடாது இது மேல்சாதியின் குரலை போல அல்லவா இருக்கிறது . நடைமுறையில் சமூக அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா இல்லையா என்பது தான் கேள்வி ??????அதை பொறுத்தே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தானே நியாயம் .
இந்து மதமே சாதி என்ற அமைப்பை கட்டிக்காக்கிறது என்பது பெரியார் அவர்கள் சொல்கிறார் , அப்படி ஒடுக்குமுறையை தாண்டி வரவேண்டும் என்று நினைப்பவர்களை இல்லை நீ இந்து மதத்தின் அடிமை என்று சொல்வது போல் உள்ளது இந்த இடஒதுக்கீடு . இது இந்து மதத்தை மறைமுகமாய் கட்டிக்காக்கிறது , இப்படி ஒரு அரசியல் சட்டம் இருக்க எப்படி பெரியார் அவர்களும் , பார்ப்பன எதிர்ப்பாளர்களும் குரல் கொடுக்காமல் இருந்தார்கள்
என்பது வருத்தமாய் தான் உள்ளது .அம்மையார் மதம் மாற்று தடை சட்டம் கொண்டு வந்தாரே அதை போல அல்லவா இருக்கிறது மதம் மாறக்கூடாது ,நீ இந்துக்களின் அடிமை அப்படி மாறினால் உன் IAS பட்டம் கூட செல்லாது என்று தலித்த்களின் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கும் .IAS ஆனால் என்ன ??? அடிமை அடிமை தான் என்று சொல்வது வெட்கப்பட வேண்டிய விடயம் அல்லவா??
இந்த இடஒதுக்கீடு சாதி என்பதை ஒழிக்காமல், இந்து மதம் என்பதை கட்டிக்காக்கிறது ???? இடஒதுக்கீடு ஒரு அளவிற்குஉபயோகப்படுமே அன்றி , சமூக விடுதலைக்கு இது தீர்வு அல்ல .
Sunday, 1 August 2010
அது என்ன பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா ?????

அதாவது நைனா உமாசங்கர் உமாசங்கர் ஒருத்தர் இருந்தாரு அவர் ஆதி திராவிடர் இல்லைன்னு ஒரு உலக உண்மைய கண்டுபிடுசுட்டாங்க பா . அந்த அதிகாரிய தண்டிக்கனும்ல , அது தான் தருமம்ல அதனால பதவி நீக்கம் செஞ்சுட்டான்கலாம் . அதுக்கு என்ன சொல்றைங்கா நா அவரு கிறுத்துவராம் அந்த சான்றிதழ் செல்லாதுன்னு சொல்ற்ரைங்க . அது அவர் இன்னா சொல்றாரு நா , எங்க அப்பா அம்மா காதல் கல்யாணம் அம்மா கிறுத்துவர் அப்பா இந்து , சட்டப்படி நான் இந்துன்னு சொல்றாரு . சொல்றது கரக்ட்டு தானே தலிவா . ஆமாம் அரசும் என்ன பண்ணும் எதாவது சொல்லி பதவி நீக்கம் செய்யணும்ல இல்லைனா பேரன் கோவிப்பானே தாத்தா என்ன பண்ணுவாரு , ஒரு தாத்த ஸ்தானத்துல இருந்து யோசிக்கனும்ல . இப்ப பேரன் மிட்டாய் கேட்டால் தாத்தா வாங்கித்தருவார்ல , பேரனுக்கு வேலைக்காரன் பிடிக்கலைனா தாத்தா அவர நீக்கனும்ல அது தானே நியாயம் , தாத்தா அத தான் செஞ்சாரு . தமிழ் மக்கள் என்பது பேரன் பேத்தி மகன் மகள் தானே . இந்த உமா சங்கர நீக்கினதுக்கு சமூக நீதி கொண்டான் என்று தாத்தாவிற்கு பேரன்கள் பாராட்டு விழா நடத்துவாங்களாம் ஆனா எந்த சேனல் போடறது பேரன்க சேனலா அல்லது பிள்ளைங்க சேனலா அப்படின்னு போட்டில விழா கொஞ்சம் தள்ளி போயிருக்காம் .
சரி மெயின் மேட்டருக்கு வருவோம் . இந்த இட ஒதுக்கீடு பத்தி ஆ வூ நு பேசறவைங்களுக்கு ஒரு கேள்வி .??? ஏன் கிறுத்துவனா இல்ல முஸ்லிமா மாறினா இட ஒதுக்கீடு இல்லையா ???? அப்ப இட ஒதுக்கீடு மெய்யாலுமே இந்துவாவே இருக்க தான் சொல்லுதா . யாரோ ஒரு முஸ்லிம் அவருக்கு இதே மாதிரி பிரச்சன வந்தப்ப
ஆதீனத்துட்ட போய் சான்றிதழ் வாங்கினாராமே????? அப்ப நித்தி இல்ல ஜெயேந்திர சாமிட்டா உமா ஷங்கர் போய் சான்றிதழ் வாங்க சொல்லிடுவோமா ??? ஏனா ஆதி திராவிடர்னாளும் இந்து ஆதி திராவிடர்லா என்ன நான் சொல்றது ???? இடஒதுக்கீடு பேர கூட இந்து மத ஒதுக்கீடுனு மாத்திடலாம்னு நினைக்கறேன் .ஒரு பிற்படுத்த பட்டவன் முன்னேற வாய்ப்பாய் இருக்கணும் அது தானே ஒதுக்கீடு , அது என்ன கிறுத்துவனா மாறிட்டாலே அவன் முன்னேறியவனா ஆகா முடியுமா நைனா ???? இத ஏன் பெரியார் பேரன்களும் உடன் பிறப்புக்களும் கேக்க மாட்டாங்கள ?????அது என்ன பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா ?????
Subscribe to:
Posts (Atom)