Monday, 23 August 2010

நான் மாகான் அல்ல

நான்கு ஏழை பசங்க கால்பந்து ஆக்ரோஷமா விளையாடறாங்க , ஒருவன் ஆவேசமா பீலே போல கோல் அடிக்கிறான் , அடுத்த காட்சியில் கஞ்சா அடிக்கிறாங்க அப்புறம் பீச் ஓரம் போற காதலர்கள மடக்கி பொண்ண கற்பழிக்கிறாங்க , இப்படி பண்றவங்கள தட்டி கேக்குறாரு கார்த்தி இது தான் நான் மகான் அல்ல . பார்ட்டி கலாச்சாரம் , weekend டேடிங் பப் போன்ற சமாச்சாரங்களில் ஈடுபட்டு ,பீச்சுக்கு தள்ளிட்டு வந்து உக்காந்து
தடவிக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் நல்லவங்க .ஆனா அந்த சேரி பசங்க கெட்டவங்க , அவங்க இந்தியால பணக்கார ,நடுத்தரவர்க்க மக்கள் விளையாடுற கிரிக்கெட் கூட விளயாடரதில்ல விளையாடறது கால் பந்து தான் . மேலும் அவங்களோட மாமன் ஆட்டோ ஓட்டும் ஒரு தொழிலாளி அவரு கொலை பண்ண ஸ்கெட்ச் போடுவாரு , கத்தி எல்லாம் வச்சுருப்பாரு . ஏழை மக்கள் மீது இயக்குனரோட வன்மமே இதுல தெரியுது . பொதுவா
காதலர்களுக்கு அவர்கள கூட்டிட்டு வர மேட்டுக்குடி பையனைவிட , அங்க இருக்கிற ஏழை உழைக்கும் மக்கள் , மீனவ நாண்பர்கள் தான் பாதுகாப்பு . அதுல ஒரு நண்பர் கொள்ளப்படறான் ,அவன் முஸ்லிமாக காட்டப்படரான் , இவங்க எல்லாம் இருக்கிற ஏரியா மேட்டுக்குடி மாம்பலம் மயிலாப்பூர் அல்ல அவங்க எல்லாம் இருக்கிற இடம் சைதாபேட்டை . அவங்க கலைக்கலூரியில் தான் படிக்கிறாங்க ஏன் நா மேட்டுக்குடி மக்கள் எல்லாம் நல்லவங்க
பாருங்க , அதனால தான் ஒரு கால் செண்டர்ல அத்தனை காண்டம் எடுத்தாங்களாம் ????மேலும் பீச்ல லவ் பண்றேன்னு அசிங்கம் பண்றது யாரு . நாயகன் "இவங்கள எல்லாம் சுட்டுக்கொல்லன்னும்னு " சொல்றான் கை தட்டறாங்க அடித்தட்டு மக்கள் அரசியல் புரியாம ???? இது எல்லாம் பாராட்ட "நான் மாகான் அல்ல " ,அழாகான தமிழுல எழுத தெரியாத சாமனியன் .

Friday, 20 August 2010

அது சரி, முகிலனை காணவில்லை























இணையம் முழுவது புரட்சியை பற்றியே சிந்தித்து, புரட்சிக்குள்ளாகவே வாழும், புரட்சியை பாடமாக ஆன்-லைனில் நடத்தும் புரட்சிகர பேராசிரியரை காணவில்லை. கண்டுபிடிப்பவர்கள் பின்னூட்டத்தில் வந்து தெரிவிக்கவும். புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் மனித‌ இனத்தை தாங்கள் உடனடியாக வந்து காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

பி.கு. - அது சரி, முகிலன் சரியாக தெரியாதத‍ற்கு நான் காரணமில்லை. தன்னைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்து தனக்காகவே வாழ்ந்து தனது சிந்தனைகளையே மோகித்து, தனக்கு மாத்திரமே (சுயமோக) புரட்சி செய்பவர்கள் இப்படித்தான் தெரிவார்கள். இல்லை என மறுப்பவர்கள் கண்ணாடியில் பாருங்கள்.

Thursday, 19 August 2010

மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன்

"மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன் " என்று இருபத்தி மூணாம் புலிகேசியில் ஒரு வசனம் வரும் , அப்படி இருக்கிறது பதிவர்கள் எந்திரன் பற்றி எழுதியவுடன் எதிர்வினை ஆற்றியது . மாற்றம் என்பது தவறா என்ன ????????ஒருவனுக்கு துன்பம் வருகிறது கோவிலுக்கு போகிறான் , துன்பம் தீர்கிறதா என்ன ???? கோவில் என்ன செய்கிறது மூளை சலவை செய்து அவன் துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும்வகையில் செய்கிறது ....அதனால் கோவில் சரியா என்ன .......சரி ஒருவன் TASMAC செல்கிறான் TASAMAC அதே வேலையை செய்கிறது . அப்படி தான் எந்திரன் போன்ற படங்கள் ஏற்ப்படுத்தும் தாக்கம் மக்களை மூளை சலவை செய்வதால் ,
கடுமையாக மக்களை பாதிப்பதால் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும் .சரி மக்களின் பொது புத்தி எப்படி உள்ளது NO BALL விடயம் பெரிய விடயமாய் போயிற்ரு ............பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டபொழுது தமிழனுக்கு வராத கோபம் , இனப்படுகொலை செய்த பொழுது வராத கோபம் , போபால் விட வாயு தீர்ப்பை கேட்டு வராத கோபம், எந்திரனை எதிர்த்து போட்ட பொழுது வருகிறது . இதை புரிந்து கொள்ள தோழராய்
இருப்பது அவசியம் அல்ல , சாதாரண மனநிலையில் இருந்து யோசித்தாலே போதும் . இரண்டாவது தோழர் என்ற வார்த்தையை கண்டவர்கள் கண்டவர்களுக்கும் உபயோக படுத்தகூடாது . உதாரணமாய் கொஞ்சம் உண்மையை
எழுதினால் தோழர் என்கிறார்கள் ...........தோழர் என்பது சமூகத்திற்கான வேலையை செய்பவர்கள் .........அந்த தகுதி எனக்கு வந்ததா என்பது தெரியவில்லை .. இரும்புத்திரை போன்றவர்கள் தோழர் , புரட்சி வார்த்தைகளை அவ்வளவு எளிமையாய் உபயோகம் செய்கிறார்கள் அது கொச்சையாக இல்லையா ???? எங்களை பற்றி எழுதினால் எங்களை பற்றி எழுதுங்கள் ஏன் புரட்சி தோழர் என்ற வார்த்தையை தவறாய் பிரயோகம் செய்ய வேண்டும் ....முகிலன் போன்றவர்கள் ஹிட்ஸ் பற்றி எழுதி இருந்தார்கள் . தமிளிஷ் தளத்தில் ரஜினி ,அஜித் , விஜய் படங்கள் வந்தால் தனியாய் ஒரு COLUMN ஒதுக்குவார்கள் போபால் ,ஈழ பிரச்சனைக்கு தனியாக ஒதுக்கினார்களா ????? வினவு தோழர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் ....களப்பணி செய்பவர்கள் அவர்களின் alexa ரேங்க் பாருங்கள் கேபிள் சங்கர் alexa ரேங்க் பாருங்கள் ..............எதை பற்றி எழுதும் பொழுது ஹிட்ஸ் ஆதரவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும் ............ ????நான் புலிகேசி எல்லாம் புரட்சி என்று சொல்லும் அளவில் இருந்து எல்லாம் எழுதுவதில்லை முதலில் எங்களை பக்குவபடுத்துககொள்கிறோம் , ஆனால் நீங்கள் எங்களை பார்த்து என்ன சொல்கிறீர்கள் "மாற்றங்களை விரும்பாத மாமன் " என்கிறீர்கள் .............

Tuesday, 17 August 2010

உமா சங்கருக்காக ஒரு கண்டனம்













உமாசங்கர் ஒரு நேர்மையான அதிகாரி . போன ஆட்சியில் சுடுக்காட்டு கூரை ஊழலில் சிக்கியவர்களுக்கெல்லாம் MP பதவி ..............அதை சட்டம் முன் கொண்டுவந்த உமா சங்கருக்கு தண்டனை வேதனையான விடயம் .........என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்

Monday, 16 August 2010

காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்



















Commen Wealth விளையாட்டுகளுக்கு ரெஹ்மான் சொம்பு தூக்கி உள்ளார் , எதிர்மறையான செய்திகளை மீடியா தவிர்க்க வேண்டும் என்ற மாபெரும் கருத்தை உதிர்த்து உள்ளார் .அதாவது ஊழல் பற்றி பேசக்கூடாது , மேலும் இந்திய இவ்வளவு ஏழ்மையாக இருக்கும் பொழுது இப்போட்டிகள் எல்லாம் தேவையா என்று யாரும் கேள்விக்கேட்க கூடாது ????? ஏழை மக்களை துரத்தி டெல்லியை அழகுப்படுத்தும் வேலையை செய்கிறார்களே அதை பற்றி யாரும் வாயை திறக்க கூடாது என்று சொல்கிறார் இந்த தேசபக்தியாளர் ????? அமெரிக்கனை நல்லவனாய் காண்பித்து அவனை வள்ளலாய் காண்பித்து இந்தியனை திருடனாய் காட்டி "this is india " என்று சொன்ன "SLUM DOG MILLIANORE " படத்தில் வராத தேசபக்தி இப்பொழுது வந்துள்ளது .ஒரு வேலை அப்படி அந்த படம் காட்டியதால் தான் ஆஸ்கார் கிடைத்ததோ .

ஒரு ஏழை தேசத்தில் மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்க படவேண்டுமா என்ன ????? இந்த மாதிரி போட்டிகள் நடத்துவதால் சாமனியன் வீட்டில் அடுப்பு எரியுமா , ஊரில் ஒரு பழமொழி உண்டு "பெருமைக்கு எருமை மேய்ப்பது " அதை போல தான் உள்ளது ???சாமனிய திரைப்பட தயாரிப்பாளர்களே அணுக முடியாத ரெஹ்மான் , எப்படி சாமனிய மக்கள் பற்றி யோசிப்பார் ??? அவர் வேலை செய்யும் படங்களை பாருங்கள் "ராவணன்" "எந்திரன்" . 180 கோடி படத்தில் வேலை செய்யும் ஆஸ்கார் நாயகன் எப்படி தெருக்கோடியில் இருப்பவனை ஆதரிப்பார் .

தண்டக்காரன்யாவில் மலை வாழ் மக்கள் துரத்தப்படும் பொழுது அவர்களை கேவலப்படுத்தும் விதமாய் வந்த "ராவணன் " படம் ரெஹ்மானுக்கு அவப்பெயராய் தெரியவில்லை ??? எத்தனையோ சிறு முதலீட்டாளர்களை அழித்து பங்கு சந்தையை கைக்குள் வைத்து இருந்த அம்பானியை கதாநாயகனாய் ஆக்கி வெளிவந்த "குரு" படத்திற்கு இசை அமைத்தது அவப்பெயராய் தெரியவில்லை .இந்தியாவை கேவலமாய் சித்தரித்த "SLUM DOG " படம் அவப்பெயராய் தெரியவில்லை???? தமிழ் மொழியில் வழக்காட முடியாது , அங்கே ஈழத்தமிழன் செத்துக்கொண்டு இருந்தபொழுது , நம் சாகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்த பட்ட பொழுது செம்மொழி மாநாடு நடந்தது அதற்க்கு
அடித்தொண்டையில் இருந்து பாடிய ரெஹ்மான் ,அது எல்லாம் அவப்பெயராய் தெரியவில்லை . ஆனால் ஊடகங்கள் COMMEN WEALTH விளையாட்டு பற்றி வெளி வந்த செய்திகளால் வருத்தப்படுகிறார் ஆஸ்கார் நாயகன் .முதலாளிகளின் குரலுக்கு பின்னணி இசை அமைக்கும் ரெஹ்மான் அடுத்த ஆஸ்கார் உங்களுக்கு தான் ,
காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்???

Sunday, 15 August 2010

சுதந்திரம்

22000 மக்களை
"சுதந்திரமாய் " பிணம் தின்ற
அன்டேர்சன் ..............!!!
நம் தண்ணீர்
எடுத்து நமக்கே "சுதந்திரமாய் "
தண்ணீர் காட்டும் கோக் .......!!!!
மலை காடுகள்
கணிமவலங்களுக்காய் "சுதந்திரமாய்"
மக்களை விரட்டும் வேதாந்தா .......!!!!
சுதந்திரம்
தரகு முதலாளிக்கு மட்டும் .........!

Saturday, 14 August 2010

அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தினமாம் சொல்றைங்க .......கலைஞர் TVLA , கலைஞர் கொடுத்த டிவி ல "தமிழ் படம்" போட்ரைங்க ....... நம்ம தல சிவா நடிச்சது .......அந்த படத்த சுதந்திரமா பாக்குரோம்ல அப்பா சுதந்திர நாடு தானே ..........................!!! சரி அங்கன தண்டக்காரன்யாள வேந்தாந்தா கம்பனி சுதந்திரமா இருக்க ............பா சிதம்பரம் அண்ணாச்சி ரொம்ப பாடுபடராராம் ....ஏன் நா சுதந்திரம் முக்கியமல அதனால சுதந்திரதிற்க்காக அங்க பிரச்சனையா இருக்கிற மக்களை விரட்டி பாடுபடரைங்க ................ஆமா முதலாளி பெரிய மனுசங்க சுதந்திரமா இருக்கணும்லா .....சரி தானே ........ இப்படி பல பேர் யார் ஆட்சிக்கு வந்தாலும் சுதந்திரத்த கட்டி காப்பாதுரைங்க ??????அந்த அன்டேர்சன் பாவம்
பா போபால இருபத்தி ரெண்டைய்ரம் பேர் தான் செத்தாங்க , லட்சக்கணக்கு மக்கள் தான் பாதிக்கப்பட்டாங்க ஆனா அதுக்கு இந்த தீவிரவாதிக்க ஆவூனு குதிக்கறாங்க ,அன்டேர்சன் எப்படி சுதந்திரமா இருப்பாரு , நம்ம ராஜீவ் ஒன்னு
பான்னாரு நாம எல்லாரும் சிலுத்து போறமாதிரி ஒரு விஷயம் பண்ணாரு ..........அவர் சுதந்திரமா இருக்க சொகுசா FLIGHT ஏத்தி விட்டாரு .............எப்படி இருந்தாலும் சுதந்திரம் முக்கியமல CAPTAIN சொல்லற மாதிரி இந்த தீவிரவாதிகள ஒழிச்சா தானே நாடு உருப்படும் ..........................அப்புறம் இப்ப கூட FOXCONNLA விஷவாயு தான்பா லீக் ஆச்சு 100 பேர் மட்டுமே மயக்கம் ஆனாங்க ????????அதுக்கு போய் போஸ்டர் போராட்டம்னு இந்த தோழர்னு சொல்றவங்களே இப்படி தான் ...........இப்படி இருந்த முதலாளி எப்படி சுதந்திரமா இருக்க முடியும் ..........................................நாம தாகம் தீரனும்னா கோக் குடிக்கிறோம் ,சந்தோஷமா இருக்கோம் , உலகமே சந்தோஷமா இருக்கறப்ப ஒரு ஊரு அழிஞ்சா தப்பு இல்ல சரி தானே பிளாச்சிமடா அப்படின்னு ஒரு ஊரு பாழ் ஆயய்டுசாம் அந்த கோக் கம்பெனி வெளிய போகணுமாம் . இப்படியே இருந்தா கோக் எப்படி சுதந்திரமா தொழில் நடத்த சொல்லுங்க ???????அதுக்காக அந்த சுதந்தர்த்திர்க்காக தான் அரசாங்கம் போராடுது ,,,,,,, அரசாங்கத்த அடிச்சுக்க முடியாதுள்ள ..........

விஜய் சூர்யா எல்லாம் விளம்பரத்துல நடிக்காறாங்க , அவங்க என்ன தப்பாவா நடிப்பாங்க சொல்லுங்க ????மக்களுக்காக எவ்வளவு நடிக்கறாங்க சே பஞ்ச் எல்லாம் பெசராங்காபா ??????????அவங்க சொன்ன கோக் குடிக்கனும்ல அப்புறம் எப்படி சுதந்திர நாடுன்னு சொல்ல முடியும் , எல்லாத்துக்கும் கொடி ஆர்ப்பாட்டம் வேற வேலையே இல்ல சரிதானே ????

இந்து மதம் தெய்வீக மதம் லா ...பாவம் அந்த ஜெயந்திர சாமி ஒரு கொலை தான் பண்ணாரு .............நாம கூட கொசுவ கொல்றதில்ல சரிதானே .....ஆனா அவங்க சுதந்திரமா இருந்தா தானே நாடு நல்ல இருக்கும் அப்புறம் பார்த்தீங்கன பங்காரு பாவம் என்ன தப்பு பண்ணாரு சொல்லுங்க , நித்யா எந்த வித்யா கிடைப்பாலானு பாப்பாரு , கால் வலிக்குதுனு ரஞ்சிதா மேல கால் போட்டாரு ???? உடனே ஆ வூ நு எழுதரைங்க இப்படி இருந்தா
எப்படி ஆன்மீகத்த வளர்க்க முடியும் . அதனாலதான் இவங்க எல்லாத்தையும் வெளிய விட்டு ஆன்மீகத்த காப்பாத்துது அரசாங்கம் சரி தானே ......சுதந்திரம் முக்கியமல .........முக்கியமா இத பத்தி எழுதற வால் பையன உள்ள வைக்க பேசிக்கிறாங்களாம் ????சும்மா சும்மா சாமி தப்புங்கராறு வால் பைய்யன் ......சாமி ஒருநாள் கண் குத்த போகுது ஏன் நா சுதந்திரம் முக்கியமல ???????????சரி தானே ..........

அப்புறம் விதர்பால ரெண்டு லட்சம் விவசாயி தான் செத்தாங்க பா ?????? ஆனா மும்பைல பக்கத்து ஊர்ல IPL சுதந்திரமா விளயாடரோம்ல ???? இப்ப கூட COMMEN WEALTH கேம்ஸ் எல்லாம் விளையாடி இந்தியா வளர்ந்த நாடு ஆயக்கிட்டு இருக்கு .............என்ன பா நூறுல 95 பேர் தானே கஷ்டப்படறாங்க அஞ்சு பேர் சுதந்திரமா இருக்காங்களா ???சுதந்திரம் முக்கியமல .......அந்த 95 பேர் கஷ்டப்படமா இருக்கணும்னு மானாட மயிலாட நிகழ்ச்சி போடறாங்க wine ஷாப் இருக்கு , கிரிக்கெட் இருக்கு , கோவில் எல்லாம் திறந்து வச்சுருக்காங்க யாருக்கு என்ன விருப்பமோ அங்க போய்டா கஷ்டம் தீருது ..............இந்தியா சுதந்திர நாடு பா நம்ம நண்டு சொல்றாரு ...நம்ம சீனா அண்ணா கூட அத சொல்றாரு ..........................?????சுதந்திரமா தானே இருக்கோம்
அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல