"கிரிக்கெட் மதம் சச்சின் அதன் கடவுள் " என்பது மைதானங்களில் அடிக்கடி இருக்கும் வாசகம் . ஆம் இந்தியாவில் மின்சாரம் நுழையாத இடங்களில் கூட மட்டை பந்து நுழைந்துள்ளது . மதுரை மாநகரிலே ஒரு கிராமத்தில் சச்சின் 194 அடித்தபொழுது டிராவிட் declare செய்து விட்டார் , அப்பொழுது ஒரு சுவரொட்டி அதில் "கங்குலி கைக்கூலி திராவிடே பதவி விலகு " கீழே இவண் இரண்டாம் ப்ரட்மான் சச்சின் ரசிகர் மன்றம் புலியான்குலம்விலக்கு நேதாஜி நகர் . இப்படி தினசரி வாழ்வோடு தினசரிக்களுடன் கிரிக்கெட் மரபாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஊருக்குள் விக்கி பந்து tournament நடக்கும் பொழுது கைலிகட்டிக்கொண்டு ஒற்றைக்காலில் pad மாட்டிக்கொண்டு விளையாடும் அளவிற்கு கிரிக்கெட் கிராமங்களை கூட தொட்டு உள்ளது .
இங்கு சென்னையில் கேட்கவே தேவை இல்லை கல்லி கிரிக்கெட் பிரசித்தம் . கலைஞர் முதல் புரட்சிக்கலைஞர் பிறந்த நாள் முதற்கொண்டு கல்லி கிரிக்கெட் tournament நடக்கும் . தெருவில் இருந்து பீச்சில் இருந்து மின்ராசா ரயில் போகும் பாதைகளில் எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் விளையாட்டு கொடி கட்டி பறக்கிறது . உலகக்கோப்பை பொழுது எல்லாம் கிரிக்கெட் ஒரு தேசியத்தை எழுப்பக்கூடிய செயலாய் இருக்கும் . தேனீர் கடை முன்பு நின்று கொண்டு கடைசி ஓவரை மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்துக்கொண்டு பார்ப்பான் ரசிகன் .
இன்று பாக்கிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் மாட்டியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது . கிரிக்கெட் என்பது மதரீதியான வெறி போல் மக்களிடம் இருக்கும் சூழலில் , கொடிக்கட்டி பறக்கும் விளையாட்டு கோடிகளில் புரளும் பொழுது இது தவிர்க்க இயலாதது . இப்பொழுது இந்திய அணிக்கு கோக் sponser செய்வது என்று வைத்துக்கொண்டால் , இந்தியா ஜெயித்தால் தான் அவன் பண்டத்தை விற்க முடியும் , அப்பொழுது எதிர் அணிகளை நாடுவது , பிட்ச் மாற்றுவது , போன்ற முக்கிய வேலைகலை நிறுவனமே பார்த்துக்கொள்ளும் . இப்படி விளையாட்டு என்பதை தாண்டி வணிக பொருளாய் இருக்கும் விளையாட்டு எப்படி விளையாட்டாய் இருக்க முடியும் . இந்தியா இலங்கையில் தோற்றவுடன் , ஒரு பையன்
அழுது கொண்டிருந்தான் , சின்ன வயதில் சச்சின் அவுட் ஆனவுடன் நான் அழுதது நியாபகம் வருகிறது . அன்று எனக்கு விதர்பா விவசாயப்படுகொலைகள் எல்லாம் தெரியாது , கிரிகெட் என்பது வணிகம் என்பது தெரியாது . இப்படி தெரியாமலேயே அடுத்த தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது . விளையாட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து யார் ஜெய்க்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்கள் . ரசனையை பன்னாட்டு நிறுவனங்கள் பணமாக அறுவடை செய்கிறது . ஜெயிப்பது யார் என்று தெரியாது தோற்பது பாமர ரசிகன் .
Sunday, 29 August 2010
Thursday, 26 August 2010
மொக்கை
பாரதியின் பார்ப்பனீயம்
பற்றி எழுதினேன் மொக்கை என்றார்கள் .
உமாசங்கர் பற்றி
எழுதினேன் மொக்கை என்றார்கள் ...
போபால் பற்றி
அதுவும் மொக்கை .............!!!
கருத்துக்கள் தவறா
வடிவங்கள் தவறா .........!!!!
கருத்துக்கள் தவறு என்றால் விவாதிக்கலாம்
வடிவங்கள் தவறு என்றால் ...
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும்
சுரண்டல் பற்றி எழுதினேன்
மொக்கை
சொல்லும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் ........
எது மொக்கை ?????
பற்றி எழுதினேன் மொக்கை என்றார்கள் .
உமாசங்கர் பற்றி
எழுதினேன் மொக்கை என்றார்கள் ...
போபால் பற்றி
அதுவும் மொக்கை .............!!!
கருத்துக்கள் தவறா
வடிவங்கள் தவறா .........!!!!
கருத்துக்கள் தவறு என்றால் விவாதிக்கலாம்
வடிவங்கள் தவறு என்றால் ...
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும்
சுரண்டல் பற்றி எழுதினேன்
மொக்கை
சொல்லும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் ........
எது மொக்கை ?????
Monday, 23 August 2010
நான் மாகான் அல்ல
நான்கு ஏழை பசங்க கால்பந்து ஆக்ரோஷமா விளையாடறாங்க , ஒருவன் ஆவேசமா பீலே போல கோல் அடிக்கிறான் , அடுத்த காட்சியில் கஞ்சா அடிக்கிறாங்க அப்புறம் பீச் ஓரம் போற காதலர்கள மடக்கி பொண்ண கற்பழிக்கிறாங்க , இப்படி பண்றவங்கள தட்டி கேக்குறாரு கார்த்தி இது தான் நான் மகான் அல்ல . பார்ட்டி கலாச்சாரம் , weekend டேடிங் பப் போன்ற சமாச்சாரங்களில் ஈடுபட்டு ,பீச்சுக்கு தள்ளிட்டு வந்து உக்காந்து
தடவிக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் நல்லவங்க .ஆனா அந்த சேரி பசங்க கெட்டவங்க , அவங்க இந்தியால பணக்கார ,நடுத்தரவர்க்க மக்கள் விளையாடுற கிரிக்கெட் கூட விளயாடரதில்ல விளையாடறது கால் பந்து தான் . மேலும் அவங்களோட மாமன் ஆட்டோ ஓட்டும் ஒரு தொழிலாளி அவரு கொலை பண்ண ஸ்கெட்ச் போடுவாரு , கத்தி எல்லாம் வச்சுருப்பாரு . ஏழை மக்கள் மீது இயக்குனரோட வன்மமே இதுல தெரியுது . பொதுவா
காதலர்களுக்கு அவர்கள கூட்டிட்டு வர மேட்டுக்குடி பையனைவிட , அங்க இருக்கிற ஏழை உழைக்கும் மக்கள் , மீனவ நாண்பர்கள் தான் பாதுகாப்பு . அதுல ஒரு நண்பர் கொள்ளப்படறான் ,அவன் முஸ்லிமாக காட்டப்படரான் , இவங்க எல்லாம் இருக்கிற ஏரியா மேட்டுக்குடி மாம்பலம் மயிலாப்பூர் அல்ல அவங்க எல்லாம் இருக்கிற இடம் சைதாபேட்டை . அவங்க கலைக்கலூரியில் தான் படிக்கிறாங்க ஏன் நா மேட்டுக்குடி மக்கள் எல்லாம் நல்லவங்க
பாருங்க , அதனால தான் ஒரு கால் செண்டர்ல அத்தனை காண்டம் எடுத்தாங்களாம் ????மேலும் பீச்ல லவ் பண்றேன்னு அசிங்கம் பண்றது யாரு . நாயகன் "இவங்கள எல்லாம் சுட்டுக்கொல்லன்னும்னு " சொல்றான் கை தட்டறாங்க அடித்தட்டு மக்கள் அரசியல் புரியாம ???? இது எல்லாம் பாராட்ட "நான் மாகான் அல்ல " ,அழாகான தமிழுல எழுத தெரியாத சாமனியன் .
தடவிக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் நல்லவங்க .ஆனா அந்த சேரி பசங்க கெட்டவங்க , அவங்க இந்தியால பணக்கார ,நடுத்தரவர்க்க மக்கள் விளையாடுற கிரிக்கெட் கூட விளயாடரதில்ல விளையாடறது கால் பந்து தான் . மேலும் அவங்களோட மாமன் ஆட்டோ ஓட்டும் ஒரு தொழிலாளி அவரு கொலை பண்ண ஸ்கெட்ச் போடுவாரு , கத்தி எல்லாம் வச்சுருப்பாரு . ஏழை மக்கள் மீது இயக்குனரோட வன்மமே இதுல தெரியுது . பொதுவா
காதலர்களுக்கு அவர்கள கூட்டிட்டு வர மேட்டுக்குடி பையனைவிட , அங்க இருக்கிற ஏழை உழைக்கும் மக்கள் , மீனவ நாண்பர்கள் தான் பாதுகாப்பு . அதுல ஒரு நண்பர் கொள்ளப்படறான் ,அவன் முஸ்லிமாக காட்டப்படரான் , இவங்க எல்லாம் இருக்கிற ஏரியா மேட்டுக்குடி மாம்பலம் மயிலாப்பூர் அல்ல அவங்க எல்லாம் இருக்கிற இடம் சைதாபேட்டை . அவங்க கலைக்கலூரியில் தான் படிக்கிறாங்க ஏன் நா மேட்டுக்குடி மக்கள் எல்லாம் நல்லவங்க
பாருங்க , அதனால தான் ஒரு கால் செண்டர்ல அத்தனை காண்டம் எடுத்தாங்களாம் ????மேலும் பீச்ல லவ் பண்றேன்னு அசிங்கம் பண்றது யாரு . நாயகன் "இவங்கள எல்லாம் சுட்டுக்கொல்லன்னும்னு " சொல்றான் கை தட்டறாங்க அடித்தட்டு மக்கள் அரசியல் புரியாம ???? இது எல்லாம் பாராட்ட "நான் மாகான் அல்ல " ,அழாகான தமிழுல எழுத தெரியாத சாமனியன் .
Friday, 20 August 2010
அது சரி, முகிலனை காணவில்லை

இணையம் முழுவது புரட்சியை பற்றியே சிந்தித்து, புரட்சிக்குள்ளாகவே வாழும், புரட்சியை பாடமாக ஆன்-லைனில் நடத்தும் புரட்சிகர பேராசிரியரை காணவில்லை. கண்டுபிடிப்பவர்கள் பின்னூட்டத்தில் வந்து தெரிவிக்கவும். புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் மனித இனத்தை தாங்கள் உடனடியாக வந்து காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
பி.கு. - அது சரி, முகிலன் சரியாக தெரியாததற்கு நான் காரணமில்லை. தன்னைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்து தனக்காகவே வாழ்ந்து தனது சிந்தனைகளையே மோகித்து, தனக்கு மாத்திரமே (சுயமோக) புரட்சி செய்பவர்கள் இப்படித்தான் தெரிவார்கள். இல்லை என மறுப்பவர்கள் கண்ணாடியில் பாருங்கள்.
Thursday, 19 August 2010
மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன்
"மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன் " என்று இருபத்தி மூணாம் புலிகேசியில் ஒரு வசனம் வரும் , அப்படி இருக்கிறது பதிவர்கள் எந்திரன் பற்றி எழுதியவுடன் எதிர்வினை ஆற்றியது . மாற்றம் என்பது தவறா என்ன ????????ஒருவனுக்கு துன்பம் வருகிறது கோவிலுக்கு போகிறான் , துன்பம் தீர்கிறதா என்ன ???? கோவில் என்ன செய்கிறது மூளை சலவை செய்து அவன் துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும்வகையில் செய்கிறது ....அதனால் கோவில் சரியா என்ன .......சரி ஒருவன் TASMAC செல்கிறான் TASAMAC அதே வேலையை செய்கிறது . அப்படி தான் எந்திரன் போன்ற படங்கள் ஏற்ப்படுத்தும் தாக்கம் மக்களை மூளை சலவை செய்வதால் ,
கடுமையாக மக்களை பாதிப்பதால் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும் .சரி மக்களின் பொது புத்தி எப்படி உள்ளது NO BALL விடயம் பெரிய விடயமாய் போயிற்ரு ............பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டபொழுது தமிழனுக்கு வராத கோபம் , இனப்படுகொலை செய்த பொழுது வராத கோபம் , போபால் விட வாயு தீர்ப்பை கேட்டு வராத கோபம், எந்திரனை எதிர்த்து போட்ட பொழுது வருகிறது . இதை புரிந்து கொள்ள தோழராய்
இருப்பது அவசியம் அல்ல , சாதாரண மனநிலையில் இருந்து யோசித்தாலே போதும் . இரண்டாவது தோழர் என்ற வார்த்தையை கண்டவர்கள் கண்டவர்களுக்கும் உபயோக படுத்தகூடாது . உதாரணமாய் கொஞ்சம் உண்மையை
எழுதினால் தோழர் என்கிறார்கள் ...........தோழர் என்பது சமூகத்திற்கான வேலையை செய்பவர்கள் .........அந்த தகுதி எனக்கு வந்ததா என்பது தெரியவில்லை .. இரும்புத்திரை போன்றவர்கள் தோழர் , புரட்சி வார்த்தைகளை அவ்வளவு எளிமையாய் உபயோகம் செய்கிறார்கள் அது கொச்சையாக இல்லையா ???? எங்களை பற்றி எழுதினால் எங்களை பற்றி எழுதுங்கள் ஏன் புரட்சி தோழர் என்ற வார்த்தையை தவறாய் பிரயோகம் செய்ய வேண்டும் ....முகிலன் போன்றவர்கள் ஹிட்ஸ் பற்றி எழுதி இருந்தார்கள் . தமிளிஷ் தளத்தில் ரஜினி ,அஜித் , விஜய் படங்கள் வந்தால் தனியாய் ஒரு COLUMN ஒதுக்குவார்கள் போபால் ,ஈழ பிரச்சனைக்கு தனியாக ஒதுக்கினார்களா ????? வினவு தோழர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் ....களப்பணி செய்பவர்கள் அவர்களின் alexa ரேங்க் பாருங்கள் கேபிள் சங்கர் alexa ரேங்க் பாருங்கள் ..............எதை பற்றி எழுதும் பொழுது ஹிட்ஸ் ஆதரவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும் ............ ????நான் புலிகேசி எல்லாம் புரட்சி என்று சொல்லும் அளவில் இருந்து எல்லாம் எழுதுவதில்லை முதலில் எங்களை பக்குவபடுத்துககொள்கிறோம் , ஆனால் நீங்கள் எங்களை பார்த்து என்ன சொல்கிறீர்கள் "மாற்றங்களை விரும்பாத மாமன் " என்கிறீர்கள் .............
கடுமையாக மக்களை பாதிப்பதால் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும் .சரி மக்களின் பொது புத்தி எப்படி உள்ளது NO BALL விடயம் பெரிய விடயமாய் போயிற்ரு ............பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டபொழுது தமிழனுக்கு வராத கோபம் , இனப்படுகொலை செய்த பொழுது வராத கோபம் , போபால் விட வாயு தீர்ப்பை கேட்டு வராத கோபம், எந்திரனை எதிர்த்து போட்ட பொழுது வருகிறது . இதை புரிந்து கொள்ள தோழராய்
இருப்பது அவசியம் அல்ல , சாதாரண மனநிலையில் இருந்து யோசித்தாலே போதும் . இரண்டாவது தோழர் என்ற வார்த்தையை கண்டவர்கள் கண்டவர்களுக்கும் உபயோக படுத்தகூடாது . உதாரணமாய் கொஞ்சம் உண்மையை
எழுதினால் தோழர் என்கிறார்கள் ...........தோழர் என்பது சமூகத்திற்கான வேலையை செய்பவர்கள் .........அந்த தகுதி எனக்கு வந்ததா என்பது தெரியவில்லை .. இரும்புத்திரை போன்றவர்கள் தோழர் , புரட்சி வார்த்தைகளை அவ்வளவு எளிமையாய் உபயோகம் செய்கிறார்கள் அது கொச்சையாக இல்லையா ???? எங்களை பற்றி எழுதினால் எங்களை பற்றி எழுதுங்கள் ஏன் புரட்சி தோழர் என்ற வார்த்தையை தவறாய் பிரயோகம் செய்ய வேண்டும் ....முகிலன் போன்றவர்கள் ஹிட்ஸ் பற்றி எழுதி இருந்தார்கள் . தமிளிஷ் தளத்தில் ரஜினி ,அஜித் , விஜய் படங்கள் வந்தால் தனியாய் ஒரு COLUMN ஒதுக்குவார்கள் போபால் ,ஈழ பிரச்சனைக்கு தனியாக ஒதுக்கினார்களா ????? வினவு தோழர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் ....களப்பணி செய்பவர்கள் அவர்களின் alexa ரேங்க் பாருங்கள் கேபிள் சங்கர் alexa ரேங்க் பாருங்கள் ..............எதை பற்றி எழுதும் பொழுது ஹிட்ஸ் ஆதரவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும் ............ ????நான் புலிகேசி எல்லாம் புரட்சி என்று சொல்லும் அளவில் இருந்து எல்லாம் எழுதுவதில்லை முதலில் எங்களை பக்குவபடுத்துககொள்கிறோம் , ஆனால் நீங்கள் எங்களை பார்த்து என்ன சொல்கிறீர்கள் "மாற்றங்களை விரும்பாத மாமன் " என்கிறீர்கள் .............
Tuesday, 17 August 2010
உமா சங்கருக்காக ஒரு கண்டனம்
Monday, 16 August 2010
காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்

Commen Wealth விளையாட்டுகளுக்கு ரெஹ்மான் சொம்பு தூக்கி உள்ளார் , எதிர்மறையான செய்திகளை மீடியா தவிர்க்க வேண்டும் என்ற மாபெரும் கருத்தை உதிர்த்து உள்ளார் .அதாவது ஊழல் பற்றி பேசக்கூடாது , மேலும் இந்திய இவ்வளவு ஏழ்மையாக இருக்கும் பொழுது இப்போட்டிகள் எல்லாம் தேவையா என்று யாரும் கேள்விக்கேட்க கூடாது ????? ஏழை மக்களை துரத்தி டெல்லியை அழகுப்படுத்தும் வேலையை செய்கிறார்களே அதை பற்றி யாரும் வாயை திறக்க கூடாது என்று சொல்கிறார் இந்த தேசபக்தியாளர் ????? அமெரிக்கனை நல்லவனாய் காண்பித்து அவனை வள்ளலாய் காண்பித்து இந்தியனை திருடனாய் காட்டி "this is india " என்று சொன்ன "SLUM DOG MILLIANORE " படத்தில் வராத தேசபக்தி இப்பொழுது வந்துள்ளது .ஒரு வேலை அப்படி அந்த படம் காட்டியதால் தான் ஆஸ்கார் கிடைத்ததோ .
ஒரு ஏழை தேசத்தில் மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்க படவேண்டுமா என்ன ????? இந்த மாதிரி போட்டிகள் நடத்துவதால் சாமனியன் வீட்டில் அடுப்பு எரியுமா , ஊரில் ஒரு பழமொழி உண்டு "பெருமைக்கு எருமை மேய்ப்பது " அதை போல தான் உள்ளது ???சாமனிய திரைப்பட தயாரிப்பாளர்களே அணுக முடியாத ரெஹ்மான் , எப்படி சாமனிய மக்கள் பற்றி யோசிப்பார் ??? அவர் வேலை செய்யும் படங்களை பாருங்கள் "ராவணன்" "எந்திரன்" . 180 கோடி படத்தில் வேலை செய்யும் ஆஸ்கார் நாயகன் எப்படி தெருக்கோடியில் இருப்பவனை ஆதரிப்பார் .
தண்டக்காரன்யாவில் மலை வாழ் மக்கள் துரத்தப்படும் பொழுது அவர்களை கேவலப்படுத்தும் விதமாய் வந்த "ராவணன் " படம் ரெஹ்மானுக்கு அவப்பெயராய் தெரியவில்லை ??? எத்தனையோ சிறு முதலீட்டாளர்களை அழித்து பங்கு சந்தையை கைக்குள் வைத்து இருந்த அம்பானியை கதாநாயகனாய் ஆக்கி வெளிவந்த "குரு" படத்திற்கு இசை அமைத்தது அவப்பெயராய் தெரியவில்லை .இந்தியாவை கேவலமாய் சித்தரித்த "SLUM DOG " படம் அவப்பெயராய் தெரியவில்லை???? தமிழ் மொழியில் வழக்காட முடியாது , அங்கே ஈழத்தமிழன் செத்துக்கொண்டு இருந்தபொழுது , நம் சாகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்த பட்ட பொழுது செம்மொழி மாநாடு நடந்தது அதற்க்கு
அடித்தொண்டையில் இருந்து பாடிய ரெஹ்மான் ,அது எல்லாம் அவப்பெயராய் தெரியவில்லை . ஆனால் ஊடகங்கள் COMMEN WEALTH விளையாட்டு பற்றி வெளி வந்த செய்திகளால் வருத்தப்படுகிறார் ஆஸ்கார் நாயகன் .முதலாளிகளின் குரலுக்கு பின்னணி இசை அமைக்கும் ரெஹ்மான் அடுத்த ஆஸ்கார் உங்களுக்கு தான் ,
காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்???
Subscribe to:
Posts (Atom)
