Tuesday, 10 March 2026

ஏன் இதை இப்போது இப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் == நீங்கள் ரசிகர் என்று நம்பவைக்கப்படுகிறீர்களா ? == பிம்பமே போலிதான் அதில் போலி பிம்பமா ?

 போரின் சப்தம் நம்வீட்டு அடுப்பங்கரை வரை எதிரொலிக்கிறது. பொருளாதார பிரச்சினைகள் விலைவாசி ஏற்றத்தின் மூலம் நாம் வீட்டிற்க்கு வெளியே காலிங் பெல் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் விஜயை எல்லாம் ஒரு பொருட்டாக எழுத வேண்டுமா ? என்று 1000 முறை யோசித்திருக்கிறேன்,  ஒரு வேளை  யோசித்துப்பார்த்தால்  இதுவும் ஒரு elite  மனநிலை தான். சமூகத்தை டாக்ஸிக் ஆக மாற்றவேண்டுமா ,  ஒரு அரசியலற்ற ஒரு அறமற்ற அடுத்தத் தலைமுறையை உருவாக்கினால் போதுமானது,  அதுவே விஜய் விடயத்தில்  நடந்துகொண்டிருக்கிறது.


விஜய் அரசியலுக்கு வருவதால் பயம் என்று "கதறு கதறு "  என்று தனக்குத் தெரிந்த ஒரு வார்த்தையை இரண்டு வார்த்தையாகப் போட்டுவிட்டுச்செல்வார்கள்,  அவர்களிடம் உரையாடக்கூட மொழி இல்லை என்பதே விடயம்.

அவர்களால்  கெட்டவார்த்தைகள் , ஆபாச வார்த்தைகள் பேசிவிட முடியும்.. பின் "கதறு கதறு " , " பதறு  பதறு " 

என்பதைத்தாண்டி மொழி ஆளுமை கூட இல்லாத மக்களாக இருக்கிறார்கள்.  இத்தனைக்கும்  இவர்கள் எல்லாம் நன்றாகப் படித்தவர்கள் , படித்துக்கொண்டிருப்பவர்கள் தான்.


மொழிப்புலமை  இருக்கும் பார்த்திபன்கள் என்ன சொல்கிறார்கள்?  "குந்தவை ", "குந்த வை " என்று பேசிவிட்டு பிரச்சினையின்   தன்மையை தனது அடுக்குமொழியால் நீர்த்துபோகச்  செய்கிறார்கள். தனக்கு உதவி  இயக்குநராக  வருவதற்கு 1000 கண்டிஷன் போடும் இவர்கள் ,  முதல்வர் ஆவதற்கு கண்டிஷன் போடுவதில்லை.  ஒரு உதவி இயக்குநர்   வாசிப்பு அதிகம் இருக்க வேண்டும் , field work வேண்டும்,  உலக சினிமா  பற்றிய புரிதல் இருந்திருக்க வேண்டும்  என்று ஒவ்வொரு இயக்குநருக்கும்  ஒவ்வொரு தேர்வு  முறை  இருக்கும் .  அது சரியும் கூடத்தான்  ,  ஆனால் அரசியலென்று வரும்போது சொல்லிவைத்தார் போல 200 கோடி  விட்டுட்டு  வருகிறார் என்று எப்படி இவர்கள் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள்.


200 கோடி விட்டுவிட்டு வருவது இங்கு பிரச்சினை அல்ல , யார் வேண்டுமானாலும் வரலாம் தான் ஆனால் நேராக  முதல்வர் நாற்காலி தான், தன்னுடன் உரையாட முதல்வர் மட்டுமே தகுதியானவர் அதற்குகுறைந்த  யாரிடமும்  விவாதிக்கமாட்டார் , அது ஒரு aura ,  அவர் ஒரு தேவதூதன்  என்பதெல்லாம் என்ன மாதிரி மனநிலை .   ஏன் ஓரளவு இலக்கியம் படித்த மிஸ்கின் கூட லியோ படவிழாவில் அவர் மைக்கேல் ஜாக்சனைத்  தாண்டி  இப்படி ஒருவரைப் பார்க்கிறேன் என்று வானளாவ புகழ்ந்தார். அப்படி பேசிவிட்டு இந்தப் பக்கம்  

குரோசோவா , தாஸ்தாவெஸ்கி  என்று பேசிவிட்டுச் செல்வார் என்றால் கலையைப் பற்றி என்ன புரிதல்  இயக்குநர்களுக்கு  உள்ளது என்ற கேள்வி மனதில் தொக்கி நிற்கிறது.



இந்த 200 கோடி விட்டுவிட்டு வருகிறார் என்பதை பார்த்திபன் முதல் சமுத்திரக்கனி வரை பேசியுள்ளார்கள். 

அமீர் கூட விஜய் வருவதை ஆதரிக்கவே செய்தார்.   நான் சொல்லும் இயக்குநர்கள் எல்லாம் intellectual என்ற தளத்தில்  அறியப்பட்டவர்கள்.  200 கோடியை விட்டுவருகிறார் என்று சொல்லும் சமுத்திரக்கனியிடம் ,  நாம் வேலையை  விட்டு வருகிறேன் என்னை associate director ஆக நேரடியாகச் சேர்த்துக்கொள்ளுங்கள் assistant எல்லாம்  வேலை  செய்யமாட்டேன் என்று சொன்னால் ஒத்துக்கொள்வாரா ? assistant என்றால் கூட  தேர்வு  வைக்கவே  செய்வார் அல்லவா . assistant என்றால் இயக்குநருக்கு அடுத்த position,  நான் வேறு துறையில் பெரிய  வேலையில் இருந்துள்ளேன் , அதனால் நேரடியாக associate ஆகிவிடுவேன் என்று சொன்னால் கேட்பார்களா இவர்கள்.


த்ரிஷாவை கேள்வி கேட்கும் பார்த்திபன்கள்  ஏன் விஜயைக் கேள்வி கேட்பதில்லை?  சினிமாவில் கேரியர் உச்சத்தில் விஜய் இருக்கிறார் என்பதா ? இல்லை அந்த பிம்பம் ஏற்படுத்திய பிரமிப்பா ?  இல்லை "ரூட் " நிறுவனம்  திரும்பித் தாக்கும் என்ற விடயமா  எல்லாமும் சேர்ந்த பிழைப்புவாதமா ?   ஒரு பெரிய இயக்குநர்கள் என்று அறியப்பட்டவர்களே  விஜயைப் பார்த்து பயப்படுவது ஏன்?  அந்த பிம்பத்தில் பின்னிருக்கும் அரசியல் என்ன?


விஜயின் பிம்பம்  எம் ஜி ஆர்  போல organic ஆனதா?  பிம்பம் என்பதே organic இல்லை கட்டமைக்கப்படுவது  தான்.  ஆனால் விஜயின் பிம்பம் என்பது போலிகளிலேயே போலிப்  பிம்பம்.  பிம்பம் என்பதே  போலி அதில் போலிப்  பிம்பம்  என்பதை  ஒரு மொழியால் எப்படிச் சொல்லவேண்டுமென்று  தெரியவில்லை. எம் ஜி ஆர்  ஆகப்பெரிய  வெற்றிகளைத் தொடர்ந்து கொடுத்தவர்,  மக்கள் கூட்டம் கூட்டமாக எம் ஜி ஆர் படத்துக்குச் செல்வார்கள்.



சினிமாவில் எம் ஜி ஆர் எப்படி வருவார் நல்லவராக வருவார் , குடிக்க மாட்டார் , உழைப்பாளிகளின்  பின்னால்  நிற்பார், புரட்சிகர பாடல்களைப் பாடுவார் , அம்மாவுக்கு , தங்கைக்கென்றால் எம் ஜி ஆர்  அன்பைக் கொட்டிக்கொடுப்பார். அவர் படத்தில் என்றுமே தோற்கவே மாட்டார் , மூன்று அடி வாங்கிவிட்டு அடுத்து அடிகொடுப்பது  தான் எம் ஜி ஆர்.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இடதுசாரிப் பாடல்கள்  எல்லாம் அவருக்குப்  பொருந்திப்போயின,  பின் கண்ணதாசன் முதல் வாலி வரை எம் ஜி ஆருக்கு எழுதிய  பாடல்களில்  அவர்  பிம்பம் உயர்ந்தது.  அது சுதந்திர இந்தியா காலகட்டம், லட்சியவாதம் பிரதானமாக   முன்னிநின்ற  போது. களத்தில் திராவிட அரசியலும் , கம்யூனிச அரசியலும் பிரதிபலிக்கும் போது  அதன்  திரை வடிவமாக  எம்  ஜி ஆர் என்னும் பிம்பம்  மேலே  வந்தது.  சிவாஜியை போல வெவ்வேறு பாத்திரங்களில்  நடித்திருந்தால்  எம்  ஜி ஆரால் இவ்வளவு உயரத்துக்குச் செல்ல முடியாது. திரையில் ஒரு larger than life பாத்திரத்தைச் சித்தரிப்பது  அதை வளர்த்துவிட்டு வருவது என்பது தான் எம் ஜி ஆர்.



அந்தப் பிம்பம் சினிமாவில் ஒரு ஏழை பங்காளன் என்ற விடயத்தை கட்டமைத்தது .  சினிமாவைத் தாண்டி  அரசியலில்  அவர் வேறொரு ஆளாக இருந்திருக்கிறார் .  ஆனால் ஒரு திரைப் பிம்பமாக எம் ஜி ஆர் பிம்பம் பிரமாண்டமானது .



அடுத்த வந்த ரஜினிகாந்த் விஜயகாந்த் பிம்பங்கள் சற்று மாறுபட்டது,  ரஜினிகாந்த் அனைத்து ஒழுங்குகளையும்  கட்டுடைக்கும் இளைஞராக  யாருக்கும் அடங்காதவராக , குடிகாரராக , பொறுக்கியாக, 

ரவுடியாக , வீட்டிற்கு அடங்காத துடுக்கான இளைஞராக வருவார்.   அவர் காமெடி படங்களான  "தில்லு முள்ளு " முதல்  "தம்பிக்கு எந்த ஊரு " வரை   சொல்பேச்சு கேட்காத இளைஞராக வருவார். ரஜினியும் பெரிதாக  எந்த ஒரு  மாறுபாடையும் காட்டியதில்லை , ரஜினிக்கு ஆகப்பெரிய உலக அளவில் நடிக்கக்கூடிய  திறமை  இருக்கிறது  என்றாலும். ஒரு பக்கம் சிவாஜியின் நடிப்பை ஸ்டைலாக செய்துவிட்டு , நடிப்பை சிவாஜியிடனும் ,  

image ஐ  வளர்த்துக்கொள்வதை எம் ஜி ஆரிடமும்  எடுத்துக்கொண்டது அவரை உற்று கவனித்தால் பார்க்கலாம்.


"ஆடு புலி ஆட்டம் " படத்தில் ரஜினி, கமல் இருவரும் திருடர்களாக ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  ரஜினி கமலைத் தூக்கி சாப்பிட்டுவிட்டு செல்வார். ஒரு வண்டி ஓட்டும்போது கூட  shave பண்ணிக்கொண்டே  வண்டி ஓட்டுவார். கமல் அதில் நாயகன் , ஆனால் ரஜினி வசனங்கள் அனல் பறக்கும்.

"கல்யாணம் பண்ணுவதற்கு திருடுவதே மேல் " என்பது போன்ற வசனங்கள் . "நினைத்தாலே இனிக்கும் " படத்தில்  "அப்பாக்கள் தாத்தாக்கள்  வந்தார்கள் போனார்கள் "   என்ற வசனம் இன்று வரை ட்ரெண்ட்.

ரஜினி கமலுடன் நடிக்கும்போது கம்ல் என்ன தான் நடித்தாலும் ரஜினி out of focus  இல் வந்தாலும் ஒரே ஒரு ஸ்டைலான  லுக்கில்  ரஜினி ரசிகர்களை தன் பக்கம் கொண்டுவந்துவிடும் நடிப்பும் ஆற்றலும் ரஜினிக்கு உண்டு.


ஆனாலுமே ரஜினியின் பிம்பமும் கட்டமைக்கப்பட்ட பிம்பம் தான்.  எதற்கும் அடங்காத அடக்கமுடியாத  ஒரு ஒழுங்கற்ற  கட்டற்ற ஒரு பிம்பம். இதை ரஜினி தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா என்பதெல்லாம்  இங்கு  விடயமல்ல. ரஜினியின் பலம் வேகம் , காமெடி மற்றும் என்னவேண்டுமானாலும் செய்தாலும்  ரசிகர்கள்  ஒத்துக்கொள்வார்கள்  என்ற பிம்பம். 87 க்கு பின் 99 வரை ரஜினியின் படங்கள் பெரும்பாலும்  ஒரே கதை  தான்  

சொல்லப்போனால் சொத்தைக் காப்பாற்றும் கதைகள் தான்."""வேலைக்காரன் ", "பணக்காரன் ", "உழைப்பாளி ",  "முத்து ", "அருணாச்சலம் ", "படையப்பா "   போன்ற படங்கள்.  


போக்கிரித்தனமா யாருக்கும் அடங்காத இளைஞர் முதல்பாதி என்றால் , பின் தனது நடுத்தறவயதில் ரஜினி நடித்தது  எல்லாமே சொத்தைக் காப்பாற்றும் ஆண்டைகள் , முதலாளிகள் கதை தான். இல்லை தளபதி போன்ற  ரவுடித்தனத்தை கதாநாயக பிம்பமாக கொண்டாடும் படங்களும்  "பாட்ஷா " போன்ற யாருமே  ஒன்றுமே  செய்யமுடியாத டான் கதைகளும்  வந்து போகும்.. 


ரஜினியின் பிம்பம்  கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்றாலும் சினிமாவில் ரஜினியின் நடிப்பு ஸ்டைல் எல்லாம்  வேறு  ரகம்.  சினிமாவில் எம் ஜி ஆர் ரஜினி  போன்றவர்கள்  ஆகத் திறமையானவர்கள்.  அவர்கள் காலகட்டத்தில்   எத்தனையோ  போட்டிகள் வந்தாலும் அவர்கள் உயரம் என்பது வேறு. அவர்களை நெருங்க  முடியாத  வண்ணமே அவர்கள் "பிம்பம் " இருந்தது. ஓரிருமுறை  கமல் , விஜயகாந்த் படங்கள் ரஜினி படங்களைத் தாண்டி இருக்கலாம்  ஆனால் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 50 வருட கேரியர் ரஜினிக்கு உண்டென்றால்  அதில் கிட்டத்தட்ட 46 47 வருடமாக ரஜினி சூப்பர் ஸ்டார். 


ரஜினி  ஒரு மேடையில் இப்படிச்சொல்கிறார் " ராஜாதி ராஜா "  ஓடாது என்று ரஜினிக்கு தோன்றியிருக்கிறது.

ராஜாதி ராஜா ஓடவில்லை என்றால் சில சென்டர்களில் காசு கொடுத்து 175 நாள் ஒட்டிவிடுவோம்  என்று நினைத்தாராம்.  அதை மேடையில் ஓப்பனாக  சொல்கிறார் ரஜினி.  அதாவது நாம் நினைப்பதைப்  போல  

ரஜினி போன்ற உச்ச உச்சா உண்மையிலேயே கேரியர் உச்சம் தொட்ட நடிகருக்குக்  கூட தனது பிம்பத்தைத்  தக்க  வைக்க சில்லறைத்தனங்கள் செய்யவேண்டியதாக  உள்ளது.


சரி  விஜய்க்கு வருவோம் விஜய் எப்போது கேரியர்  உச்சத்தில்  இருந்தார்?   விஜய் நடித்தது மொத்தமே 69 படங்கள்  தான் . ரஜினி, கமல் , விஜயகாந்த் எல்லாருமே 150 பிளஸ் படங்கள் நடித்தவர்கள் என்பதை கவனத்தில்  கொள்ளவேண்டும்.  விஜயகாந்த் படங்கள் மொத்தம் 35 படங்கள் வெள்ளிவிழா ஓடியிருக்கும் , அதவாது  175 நாட்கள் படங்கள் எத்தனை படங்கள் இருக்கிறதோ அதுபொருத்தே நட்சத்திர அந்தஸ்து  மாறும். 

ரஜினி , கமல் கொடுத்த வெற்றிகள் எல்லாம் அதைவிட பெரிய வெற்றிகள் தான்.  இந்த உயரங்களை எல்லாம் விஜய்  தொட்டதே இல்லை.


ரஜினி ,கமல் , விஜயகாந்த் எத்தனை விதமான பாத்திரங்களை நடித்திருப்பார்கள் , அதற்குண்டான மெனக்கெடல்  இருக்கும். அடுத்த லேயரில்  உள்ள கார்த்திக், சத்யராஜ் , பிரபு , சரத்குமார் , அர்ஜுன் இவர்கள்  எல்லாருமே   100 படங்கள் நடித்த நடிகர்கள்.  பட எண்ணிக்கை பாத்திரங்களில் வித்யாசம்    இதில் எந்த இடத்தில்  விஜய் கேரியர் உச்சம்  எதிலும் இல்லை.


விஜய் 69 படங்களில் விஜய்க்கு சொல்லிக்கொள்ளும் படங்கள் என்றால் என்ன ?  பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, லவ் டுடே, நண்பன் ,துள்ளாத மனமும் துள்ளும்,  குஷி , friends,  கில்லி, போக்கிரி , துப்பாக்கி , கத்தி, தெறி, பிகில் , மெர்சல் , மாஸ்டர் , லியோ, சர்க்கார், திருப்பாச்சி ,சிவகாசி , திருமலை .  இதில் கூட சிலப்படங்களை சேர்க்கவேண்டும் என்று சேர்த்திருக்கிறேன் , ஏனென்றால்   விஜய் நண்பாஸ் நண்பீஸ்  போலி வசூல்களைத் தூக்கிக்கொண்டு வருவார்கள்.  அதைத்தாண்டி  பிரியமானவளே, பத்ரி  என்று சிலப்படங்களை  சேர்த்துக்கொண்டாலும்  கூட விஜய் வெற்றிப்படங்கள்எண்ணிக்கை இருபத்தைந்தை  தாண்டாது.

சில தோல்விப்படங்களில் கூட விஜய் நடிப்பு நன்றாக இருக்கும் என்பது வேறு விடயம். வசீகரா, சச்சின்  போன்ற படங்களில் நகைச்சுவை சிறப்பாகவே இருக்கும்.


ஆனால் இளையராஜா  போட்ட பாடல்களின் எண்ணிக்கை ,  வடிவேலு கவுண்டமணி நடித்த காமெடி எண்ணிக்கை போல  விஜய் மக்களிடம் ரீச் ஆனாரா என்றால் இல்லை.  industry Hit என்று  சொல்வார்கள்  அதாவது  அப்போதுவரை  அதிக வசூலான படங்களில் அதிக வசூல் .  அது பெரும்பாலும்  ரஜினி கமல் விஜயகாந்திடம்  இருந்தது. பெரும்பாலும் ரஜினி  அபூர்வ சகோதரர்கள் வந்த போது அந்தப் படம்  

கேப்டன் பிரபாகரன் வந்த போது அந்தப் படம்   பின் தேவர் மகன் , பின் பாட்ஷா வந்த பிறகு  அந்த சாதனை  ரஜினி படங்களின் சாதனையை ரஜினி படங்கள் முறியடிக்கும் இன்று வரை. இப்போது 2.o  படத்தில்   அந்த   record உள்ளது.  இரண்டாவது இடத்தில் ஜெயிலர் ,   அதிகம் ஊதிப்பெருக்கப்பட்ட லியோ கூட ஜெயிலர் வசூலைத்  தொடவில்லை என்பது தான் உண்மை. 


விஜயின் ஆரம்பப்படங்கள் எப்படி இருந்தது?  ரஜினிகாந்த் ரசிகன் , விஜயகாந்த் தம்பி என்று ரசிகன் படத்தில்  ஒரு வசனமொன்று வரும் அது தான் ஆரம்பக்கால பிம்பம். "செந்தூரப் பாண்டி" படத்தில் விஜயகாந்த் தம்பியாக நடித்தது அவரை பட்டிதொட்டியெல்லாம் சேர்த்தது.  அதைத்தாண்டி விஜய் படங்களில் சோப்பு போடும்  காட்சி, கபடி ஆடும் காட்சி,  குத்து பாடல்கள் என்பதே விஜய் ஆரம்ப காலகட்ட திரைவாழ்க்கை.  



தான் நடித்த 69 படங்களில் ஒன்பதாவது படமாக  வந்த "பூவே உனக்காக " படத்திலேயே  விஜய் தனது  அதிகாரபூர்வ  வெற்றியைப் பெறுகிறார். விஜய் பெரிய அளவு வெளியே தெரிந்திருந்தாலும்,  அப்போது பிரபுதேவா , பிரசாந்த் படங்களுக்கு பெரிய முதலீடு இருக்கும் . ரகுமான் போன்றவர்கள் இசையமைப்பார்கள்  பி சி ஸ்ரீராம் கேமரா என்றிருக்கும்.  இசையமைப்பாளர்களில்  விஜய்க்கு பெரும்பாலும் இசையமைத்தவர்  தேவா  மற்றும் எஸ்  ஏ ராஜ்குமார் இல்லை வித்யாசாகர்.  ஒரு நடிகனின் மார்க்கெட்டை  வைத்தே  technician கள்  கேமராமேன் முடிவு செய்யபடுபார்கள்.


முதலில் "பூவே உனக்காக"  படத்தில் விஜய் நடித்ததே ஒரு இமேஜ் இல்லாத புதுமுகம் நடித்தால் இந்தக் கதை ஓடும்  என்பதால் தான் , தயாரிப்பாளரின் முதல் சாய்ஸ் அன்று முரளி , விக்ரமன் அவர்களே விஜய் நடித்தால் நன்றாக  இருக்கும் இது இளைஞர்களுக்கான கதை என்று சொல்லியிருக்கிறார்.  விஜயின் முதல் பெரிய  இசையமைப்பாளர்  இளையராஜா தான் அதுவும் அது பாசில் படமென்பதால் . பாசில் படங்களுக்கு இளையராஜாவே  இசையமைப்பார்.


அன்று வளரும் இளைஞர்களில் பிரபுதேவா, அரவிந்த் சாமி , பிரசாந்த்   இவர்கள் தான் பெரிய ஹீரோக்கள்  அடுத்த  கட்டத்தில் விஜய் , அஜித்தெல்லாம் இருந்தார்கள் பூவே உனக்காகவுக்கு முன்பே  அஜித் ஆசை வந்துவிட்டது. அதற்கு முன்பே பிரசாந்த் அறிமுகமாகி ஹாட்ரிக் வெற்றிகள் குமித்துவிட்டார் . ஒரு பக்கம் பாலு  மகேந்திரா இன்னொரு பக்கம் மணிரத்னம் சங்கர் என்று பெரிய மார்க்கெட் . பிரபுதேவா காதலன் படத்தின்   பட்ஜெட்  9 கோடி. ரகுமான் இசை இந்தியாவெங்கும் கலக்கி , பிரபுதேவாவுக்கு PAN இந்தியன் மார்க்கெட் உருவானது.. பெரிய பெரிய பட்ஜெட் பெரிய பெரிய படங்கள். ரகுமான் பெரும்பாலும் இசைமைப்பார். 


அந்தப் படங்கள் ஓடுகிறது பிரபுதேவா வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டாரா , இல்லை பிரசாந்த் தக்கவைத்துக்கொண்டாரா  என்பதெல்லாம் வேறு விடயம். 95 க்கு முன் அப்படிதான் இருந்தது.   அஜித்துக்கு காதல்  கோட்டை பட்டிதொட்டியெல்லாம் ஓடி தேசிய விருது இயக்குநருக்கு வாங்கிக்கொடுக்கிறது  , 97  காதலுக்கு  மரியாதை வருகிறது.  விஜய் ஹிட் கொடுப்பதற்கு முன்பே அஜித் ஹிட்  தொடங்கியிருப்பார்  என்பதற்க்காக  சொல்கிறேன்.


அன்று விஜய் அஜித் மட்டும் சினிமா அல்ல  உச்சத்தில் 7 நடிகர்கள் இருப்பார்கள்  , ரஜினி , கமல் , விஜயகாந்த் , கார்த்திக் , சத்யராஜ் , பிரபு  ஏழாவது இடம் சிலநேரம் சரத்குமாரிடம் இருக்கும் பின் சில நேரம் அர்ஜுன் அங்கு இருப்பார். பின் ராம்கி ,முரளி , ரகுமான்  , சிவகுமார் போன்றவர்களும் நடுவில் இருப்பார்கள் விஜய் ,அஜித், பிரபுதேவா , அரவிந்த் சாமி , பிரசாந்த் , விக்ரம்  , செல்வா , விக்னேஷ் கரண்  என்று பலரும்  இருப்பார்கள்.

பாக்யராஜ் , டி ஆர் , பாண்டியராஜன் போன்றவர்களும் இருப்பார்கள் . அதில் அங்கொன்றும் இங்கொன்றும் விஜய்  அஜித் எல்லாம் ஹிட் கொடுப்பார்கள். காதலுக்கு மரியாதை வரை விஜய் இடமெல்லாம் 15 முதல் 20 வரை இருக்கலாம்.  


நான் எதற்கு சொல்லவருகிறேன் என்றால் விஜய் அன்றெல்லாம் நம்பர் ஒன் இல்லை.   பின் 97 க்கு பிறகு  விஜய்  அஜித்  படங்கள் தொடர்ந்து ஓடுகின்றன விநியோகஸ்தர்களை திருப்தி படுத்துகின்றன. படையப்பாவுக்கு  பிறகு  ரஜினி எடுத்த பெரிய இடைவெளியில்  இருவரும் பெரிய ஹீரோவான இடத்தை பிடிக்கிறார்கள்.  ஆனாலும்  நம்பர் ஒன் இடமெல்லாம் இல்லை. CD யால் சினிமா அழிந்துகொண்டிருந்த போது   ரஜினி விஜயகாந்த் கமல் அஜித் விஜய் இவர்கள் படங்களே திரையரங்குள்  ரசிகர்களைக் கூட்டிக்கொண்டு  வந்தன என்பது உண்மை தான் என்ராலும்.  2002 காலகட்டங்களில் விக்ரம் , சூர்யா  எல்லாம் நிலையான  இடத்தை பிடித்துவிட்டார்கள்.



தனுஷ் , சிம்பு , விஷால் , ஜீவா ,  ஜெயம் ரவி  என்ற வரிசையும் வரத்தொடங்கியது.   தமிழ் சினிமா  பார்ப்பதற்கு  ஹீரோயிச  சினிமாவாகத் தோன்றினாலும்  அந்த அந்த காலகட்டங்களில் ஒரு இயக்குநர் வருவார்  அவருக்கென்று  மார்க்கெட் ஒரு பத்து இருபது வருடங்கள் இருக்கும்.  பின் இன்னொரு இயக்குநர் வருவார்.

வருடத்துக்கு  150 படங்கள் வருமென்றால் 2000 களுக்கு பிறகு ஒரு 20 படங்களே திரையரங்கில்  ஓடும். அதில்  விஜய்  படங்களும்  இருக்கும் அவ்வளவே.


விஜய் விநியோகஸ்தர்களுக்கான நாயகன் தான் மாற்றுக்கருத்து இல்லை ,  ஆனால் "ஜனநாயகன் பிம்பச்சிறை "  என்ற புத்தகத்தில் சொல்வதைப்  போல விஜய் தனியான உயரத்தில் எல்லாம் என்றுமே  இருந்ததில்லை.  விஜய் வசீகரா படமும் சாமி படமும் ஒரே நாளில் வந்தது , சாமி வசீகரா படத்தை தடம்  தெரியாமல்   ஆக்கியது.  தீனா , friends இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும்  friends படத்தில் விஜயும் ஒரு  ஹீரோ  அதைத்தாண்டி மலையாள இயக்குநர் வடிவேலு இளையராஜா  என்று அதன் வெற்றி கூட்டு வெற்றி.



friends படத்தயாரிப்பாளர்  ஒரு பேட்டியில் இப்படிச்சொல்கிறார் தீனா படம் friends ஐ விட இரண்டு மடங்கு   திரையரங்கில்  கலெக்ட் ஆனதாகச் சொல்கிறார். விஜயின்  ஆக்ஷன் ஹீரோ அவதாரம்  திருமலை படத்திலிருந்தே  தொடங்குகிறது . அதெல்லாம் ஏற்கனவே ரஜினி செய்தது தான்.  விஜய் முத்திரை, துள்ளல், நடனம் , காமெடி  என்று விஜய் முழுத்திறமையைக் காட்டி ஆக்ஷன்  ஹீரோ என்று அங்கீகரிக்கப்பட்ட படம் 

"கில்லி ".  அது வந்தது 2004 .   கில்லி வருவதற்கு முன் 1999 க்கு வந்த படையப்பா தான் industry hit ,  கில்லி  பெரிய வெற்றிபெற்றிருக்கலாம்  ஆனால் படையப்பாவை எல்லாம் தாண்டவில்லை.


2005 களில் திருப்பாச்சி சிவகாசி என்று விஜய் கிராப்  ஏறிக்கொண்டிருக்கும்போது  அடுத்த வந்த படம் தான்  சச்சின்  , சந்திரமுகியுடன் வந்தது . படையப்பா IH வசூலை சந்திரமுகி முறியடித்தது. நான் யானை இல்லை குதிரை  என்று ரஜினி சொன்னார். ஓடாத சச்சின் படத்துக்கு 200 நாள் போஸ்டர் ஓட்டினார்கள்.  திருப்பாச்சி , சிவகாசிக்கு பிறகு  விஜய்க்கு கிடைத்த ஒரே வெற்றிப்படம் போக்கிரி. போக்கிரிக்கு பிறகு துப்பாக்கி வரை அவர் மார்க்கெட் நிலையானதாக  இல்லை.


விஜய் படங்கள் படுக்கும் போது இந்தப் பக்கம் அஜித் படங்களும்  ஒரு பக்கம் விக்ரம் படங்களும் சூர்யா படங்களும்  ஓடிக்கொண்டு தான் இருந்தன.  சூர்யா படங்கள் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்று ஆந்திராவில்  எல்லாம் ஓடியது. 100 கோடி வசூலானது விஜயோ அஜித்தோ அல்ல , ரஜினிக்கு பிறகு 100 கோடி  வசூலைப்  பார்த்தது  "ஏழாம் அறிவு " தான். 


விஜய் படங்களின் நிலைமை என்ன  குருவி , ATM , வில்லு, சுறா , வேட்டைக்காரன், வேலாயுதம்  என்று செல்லும் இடமெல்லாம் தோல்விப்படங்கள்    பொல்லாதவன் , வேல் படங்களுடன் வந்த அழகிய தமிழ் மகன் மதிய காட்சியிலேயே   ஆட்கள் இல்லை பொல்லாதவன் பெரிய வெற்றி ,  வேல் ஒரு ஆவேரேஜ் ஹிட் ,  ATM படம்  தோல்வி.



"ஏழாம் அறிவு " வந்தபோது கூட வந்த "வேலாயுதம் " படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை.  தேவி திரையரங்கில்  நான்கு  அரங்குகள் இருக்கும் தேவி ,தேவி பாரடைஸ்  இரண்டும் 1000, 1100 சீட் அரங்குகள்  , கடலுக்குள்  படம் பார்ப்பதைப் போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்,  இந்தப்பக்கம் தேவி கலா , தேவி பாலா  200 300 சீட்கள் அரங்கம் வேல்யுதம் படத்துக்கு இரண்டு சிறிய அரங்குகள் ஏழாம் அறிவு படத்துக்கு இரண்டு 1000 சீட் அரங்குகள் ஒதுக்கப்பட்டது.  இப்படித்தான் அனைத்து அரங்குகளும் ஒதுக்கப்பட்டபோது  விஜய் ரசிகர்கள்  பெரிய அரங்குகள் கொடுக்கச்சொல்லி போராட்டம் நடத்தினார்கள்.  அது அன்று செய்தியாக வந்தது.


சரி சூர்யா சமகால நடிகர் தான்.  ஆனால் பொல்லாதவன் படத்துடன் ATM வந்ததும் ,  சிறுத்தை , ஆடுகளம் படங்களுடன்  காவலன் படமும் தர்ம அடி வாங்கியது. சரி அவர் போட்டியாளரான  அஜித் படத்துடன்  விஜய் மோதும்  போது  என்ன நடந்திருக்கிறது வீரம் , ஜில்லா வீரம் வெற்றி .  துணிவு , வாரிசு  துணிவு வெற்றி . போக்கிரி , திருமலை படங்கள் அஜித் படங்களுடன் வந்து வெற்றி பெற்றிருக்கிறது.  பிகில்  , கைதி வந்தபோது  கைதி  பெரிய வெற்றி பெற்றது . KGF  பீஸ்ட் படத்தை விட நன்றாகவே ஓடியது.  


இந்தக் கணக்கெல்லாம்  நமக்கு ஏன் தேவை நாம் ரசிகர்மன்ற சண்டையில் ஈடுபடப்போகிறோமா இல்லை இல்லவே  இல்லை.  விஜய் ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பம் என்று சொல்வதற்க்கே இத்தனை தரவுகள்  "ஜனநாயகன்  பிம்பச் சிறை " புத்தகத்தில்  விஜய் மட்டுமே இண்டஸ்ட்ரியை  ஆதிக்கம்  செலுத்தினார் என்று சொல்வதைப்போல   களம்  இல்லை.  விஜய் சேதுபதி , சிவா கார்த்திகேயன்  முதல்  பிரதீப் ரங்கநாதன் , சூர்யா தம்பி  கார்த்தி என்று  100 கோடி கிளப்க்களில் பலர் தொடர்ச்சியாக சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள். 


விஜய் மட்டுமே பாக்ஸ் ஆபீசை  ரூல் செய்யவில்லை . பல ஹீரோக்களைப் போல விஜயும் இருக்கிறார் சொல்லப்போனால்  இன்னும் ரஜினி கமலே retire ஆகவில்லை. விஜய் படங்கள் சோலோவாக சிறப்பாக ஓடலாம்  ஆனால் competition  போது நம்பர் ஒண்ணாக  உள்ளதா என்றால் சில நேரங்களில் விஜய் படங்கள் மூன்று  நான்காம் இடங்களுக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. 


மெர்சல் , சர்க்கார் படங்கள் எல்லாம் நெகட்டிவ் பிம்பம் அதாவது படத்துக்கு பிரச்சினைகளை அரசியல் ரீதீயாக  ஏற்படுத்தியதால்  ஓடியது. அப்படி ஓடிய படங்களும் இருக்கவே செய்கின்றன. படம் ரிலீஸ் போது  எதாவது  பிரச்சினைகள் கிளப்பப்படும்  அந்தச் சூழலே படத்தைப் பிரபலப்படுத்தும்  அப்படியே படம் ஓடத்தொடங்கும். 



விஜயின் பிம்பம் எப்படி நம்பர் ஒன் என்று காட்டப்படுகிறது?  அதற்கு பின்னால் இருப்பவர்கள்  பி டி செல்வகுமார்  மற்றும் எஸ் ஏ சந்திரசேகர்.   பெரும்பாலும் பழைய 2000 களுக்கு முன்பு ஓடாத படத்துக்கு ஒரு ஷோ  100 நாள் காட்டி வெற்றிபடமென்று நம்பவைப்பார்கள்.  பின்பு பத்திரிகைகளில் பேட்டிகள். போட்டி நடிகர்களின்  வாய்ப்புகளை தட்டிப்பறித்து உள்ளே செல்வார்கள். போட்டி நடிகர்கள் படங்களுக்கு காசு கொடுத்து ஆள்  அனுப்பி படம் நல்லா இல்லை என்று சொல்லவைப்பது . பத்திரிகையில் பேட்டிகள் , போட்டி நடிகர்களை  தரக்குறைவாக பேசுவதற்கு பத்திரிகையாளர்களை பயன்படுத்துவது என்று பல வேலைகளை 

பார்த்துத்தான்  ஒரு சூப்பர் ஸ்டார் பிம்பம் கட்டப்படும். 


2010 களை ஒட்டி இருக்கலாம் குமுதத்தில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சர்வே எடுக்கிறார்கள் அஜித் முதலிடத்திலும்  விஜய் இரண்டாம் இடத்திலும் வருகிறார்கள். விஜய் ரசிகர்மன்றதுடன் சென்று எஸ் ஏ சந்திரசேகர்  மிரட்டி ரிசல்ட்டை மாற்றி அறிவிக்கச்சொன்னார்கள்.   இதைப்போன்று சில்லி வேலைகளை  ஓரளவு  எல்லா நடிகர்களும் பார்ப்பார்கள் தான்,  சூப்பர் ஸ்டார் என்னும் பிம்பம்  ஏன் ரஜினிக்கே கூட கட்டமைக்கப்பட்டது  தான் , "ராஜாதி ராஜா " படத்தை 175 நாட்கள் ஓடவைத்துவிடலாம் என்று ரஜினி திட்டத்தை  மேடையில் பேசியிருப்பார், பிம்பத்தில் உயரத்தில் நிற்க குரங்கு வித்தைகள் எல்லாம் தேவைப்படுகிறது  என்பது உண்மை. ராஜாதி ராஜா ஓடவில்லை என்றாலும்  ரஜினி தனக்கிருக்கும் திறமைக்கு  நம்பர்  ஒன்  தான்.


ஆனால் விஜயின் பிம்பம் வேறு. ரஜினி சினிமாவில் ஆவது பெரிய ஆள் தான், விஜய் சினிமாவில் கூட நம்பர் ஒன்  என்று போலியான தரவுகளைக் கொடுத்துக்கொடுத்து ஏமாற்றிக்கொண்டிருப்பவர். சினிமாவில் வடை சுடுவதென்றால்  விஜயை சொல்வார்கள். ரஜினிக்கும் , எம் ஜி ஆருக்கும் சினிமாவில் பிம்பத்தை கட்டமைப்பது  நடக்கிறது  என்றால்.  விஜய்யின் பிம்பம் சினிமாவுக்குள் இருந்து அல்ல , விஜய் பெரிய ஸ்டார் அவர் படங்கள் மட்டுமே  வசூலை வாரிக்குமிக்கும் என்று சினிமா நடிப்பைத்தாண்டி விஜயின் பிம்பம் வெளியில் அவர் ஆகச்சிறந்த   மாஸ் , அவருக்கு charisma உண்டு  என்று கட்டமைக்கப்படுகிறது. இதுதான் இருப்பதிலேயே  ஆபத்தான  விடயம்.


விஜய்க்கு ரசிகர்கள் உண்டு  மறுப்பதற்கு இல்லை , அதில் Genz  துப்பாக்கிக்கு பிறகு  உருவான  ரசிகர்கள்  organic  ஆக உருவாகவில்லை ,  திட்டமிட்டு உருவாக்கப்பட்டவர்கள்.  ரூட் என்ற நிறுவனம் PR டீம் வைத்து ,  அவர் படங்கள்  வானளாவ  வெற்றிபெற்றன என்று பொய் சொல்லி சொல்லி. உருவாக்கப்பட்டது. விஜய் PR டீம்  எப்படி  செயல்படும் ஒரு நேரத்தில் விஜயை கடவுள் பிம்பத்துக்கு உயர்த்திப்பிடிக்கும் pr நிறுவனம் விஜய் போட்டியாளர்களை  சகட்டுமேனிக்கு  troll செய்யத்தொடங்கும்.


விஜய் போட்டியாளர் அஜித் என்றால் அஜித் மனைவி மகள்  அனைவரையும் ட்ரோல்  செய்யத்தொடங்கும்.

பொதுவாக  அது போலியாக ட்ரோல் செய்யப்பட்டாலும் அதை ட்விட்டரில் பார்க்கும் விஜய் ரசிகன்  அந்த ட்ரோல் செய்யும் தற்குறி மனநிலைக்கு வருவான். இது ஒரு மாதிரி கஞ்சா போதையைப் போன்றது,  ட்விட்டரில்  முன்பெல்லாம் விஜய்  , அஜித் ரசிகர்கள் இருவரும் கண்டபடி திட்டிக்கொள்ண்டு ட்ரெண்டு செய்வார்கள் 2012 களுக்கு  பிறகு இந்தச் சண்டையை இன்டர்நெட்டில் பார்க்க முடியும்.


அது மேலிடத்திலிருந்து தலைவர்களில் இருந்து பெறப்பட்ட உத்தரவின் பெயரிலேயே அந்தச் சண்டைகள் நடைபெறும்.  முதல் ட்விட்ட் போட்டவர்கள் fake id யாக சம்பளம் வாங்கிக்கொண்டு போடுபவர்களாக  இருக்கலாம்,  ஆனால்  அதை உண்மை என்று நம்பி பங்கு பெரும் விஜய் அஜித் ரசிகர்கள் அதில் மனமுவந்து சண்டை  போடும் போது விழுமியங்கள் வீழ்கிறது.


இதில் பெரிய சிக்கல் ஒன்றைப் பார்த்திருக்கிறேன் அஞ்சான் படம் பெரிய தோல்வியைச் சந்தித்தது அதற்கு காரணம்  விஜய் அஜித் ரசிகர்களே. சேர்ந்து  படத்தை  ட்ரோல் செய்து படத்தை காலி செய்தார்கள். ஒரு 15 வருடமாக  சூர்யா அவர்களுக்கு திரையரங்கில் பெரிய வெற்றி கிடைக்காமல் இருப்பதற்கு இந்த PR வேலைகள்   காரணம்.  


இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் இதெல்லாம் பிளான் செய்து  நடத்தப்படுகிறது  என்ற விடயம் ட்விட்டரில்  புதிதாக நுழையும் ரசிகனுக்குத் தெரியாது.  வாசிப்பும் இல்லை என்றால் அவனுக்குத் தெரிந்த ரெண்டு  பேர் விஜய் மற்றும் அஜித்.  அதிலிருந்து ஒரு ரசிகர் படை  உருவாகும்.    அங்கு இருக்கும் ட்ரெண்ட்களைப் பார்த்துவிட்டு இந்த இரண்டு பக்கம் தான் தரம் போல என்று ரசிகனும் பாதிபாதியாக பிரிந்து ஆதரவு  தெரிவிப்பார்கள்.


விஜய்க்கும் , அஜித்துக்கும் உண்டான opening இப்படி ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பத்தால் தானே தவிர ,  ரஜினி,எம் ஜி ஆர், விஜய்காந்த் போன்று அல்ல. ரஜினி என்பது பிம்பம் தான் ஆனால்  விஜய் என்பது ஒரு ஊதிப்பெருக்கப்பட்ட  போலி பிம்பம்.  விஜயின் கூட்டம் எப்படி கூட்டப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் அது வெறும் ரசனை சார்ந்து மட்டுமல்ல  அதற்கு பின்பு ஒருங்கிணைக்கப்பட்ட PR வேலைகள் உண்டு. 


விஜயின் PR வேலைகளை பார்த்து வளர்ந்த சிவ கார்த்திகேயன் இன்று "தாய் கிழவி " போன்ற பிற்போக்கான  படத்தைக் கூட முற்போக்கான தரமான படமென்று மக்களிடம் விதைக்கிறார். அனிருத் முதல் சாய் அப்யங்கர்  வரை  PR வேலைகளே அவர்களை மைக்கேல் ஜாக்சன் அளவுக்குக் காட்டுகின்றன.



இதைப்பற்றி ஏன் இப்போது எழுத வேண்டும்.  விஜய் டான்ஸ் நன்றாக ஆடுவாரா ஆடுவார் அதை ரசிக்கிறேன்  இல்லை  காமெடி சென்ஸ் ரஜினிக்கு பிறகு நன்றாக இருக்கும் ரசிக்கிறேன் என்று  சொல்வதில் பிரச்சினை  இல்லை.  ஆனால் விஜய் தேவ தூதர் , விஜய் charismatic தலைவர், விஜய்க்கு தங்கச்சியாக இருப்பேன் ஏன் மனைவியாகக் கூட இருப்பேன்  என்று பைத்தியக்காரத்தனம் அதிகமாக  இருக்கும்போது  அதைப்பற்றி  பேசவேண்டிய  தேவை இங்கு உள்ளது. 


கரூர் சம்பத்துக்கு பிறகும் கூட விஜய் காரணமில்லை என்று ஒரு கூட்டம் நம்புகிறது .  இன்னும மரணங்கள் மட்டுமே  ஒரு ஐம்பது நடந்திருக்கிறது . எதையும் விஜய் என்ற  மாமனிதரை அசைத்துப்பார்க்கவில்லை.  மனைவியைக்கூட  அந்த அளவு worth இல்லை என்று நகர்ந்துவிடுகிறார். அதற்கு விசிலடிக்கும் கூட்டமொன்று,  

விஜயைப் பார்க்கப்போய்  அந்த வண்டியில் தலையை விட்டால் முக்தி அடையலாம்  என்று பையித்தியம் முற்றும்  போது .  நாம் இடையில் புகுந்து அது அப்படியல்ல என்று சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது.


இதை எழுதுவதால் விஜய் ஜெய்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கவேண்டாம் . விஜய் டெபாசிட் கூட வாங்க  மாட்டார் என்பது எந்த அளவு உண்மையோ  விஜய்க்கு ஒரு 25 லட்சம் முதல் 30 லட்சம் பேர்  விஜய்க்கு   வாக்களிப்பார்கள்.  அதில் ஒரு 10 லட்சம் பேருக்காவது மனநலம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. 

அது தேர்தல்களை  பாதிக்காமல் இருக்கலாம் , ஆனால் ஒரே நேரத்தில் இவ்வளவு பேருக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுகிறது  என்றால் நாம் முன்னேறிய சமூகம் தானா ? என்ற கேள்விகள் உண்டு.


எல்லாருமே அரசியலுக்கு வரலாம் தவறில்லை , ஏன் பாஜக ,அதிமுக , நாம் தமிழர், பாமக  இவர்கள் மேல் எல்லாம்  கடுமையான  விமர்சனங்கள் உண்டு . விமர்சனம் இருந்தால் மட்டுமே வேறு வேறு கட்சிகள் . ஏன் விடுதலைச் சிறுத்தைகள் ,திமுக மீது கூட விமர்சனம் உண்டு தான்.  அது வேறு. ஆனால் எந்த ஒரு விழுமியமே  இல்லாமல்  ஒரு mob பைத்தியக்கார கூட்டம் , சோம்பிக் கூட்டத்தைப் பார்த்தால் பயமாகவே இருக்கிறது. 

இங்கு organised ஆக pr டீம் வைத்து இளைஞர்களின்  மூளை சலவைச் செய்யப்படுகிறது. அது சில ஆயிரக்கணக்கில்  இருந்தால் கூட ஆபத்து தானே?






 












No comments: