தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதி சாகித்ய அகாடெமி விருது பெற்ற " தமிழ்ச்சிறுகதையின் தடங்கள் " படிக்கத் தொடங்கியுள்ளேன். இது முதல் ஐம்பது ஆண்டுகளின் வரலாறு தான். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு ஒரு ஆகச்சிறந்த தத்துவ பின்புலம் இருக்க வேண்டும், சிறுகதைகளை உதாரணமாக எடுத்து நுட்பமாக எழுதக்கூடியவர்கள் பலர் இருக்கலாம் , மேடைகளில் கதாபாத்திரங்கள் பற்றி விரிவாக நுட்பமாக எழுத்தாளர்கள் பேசலாம் அதெல்லாம் வேறு விடயம்.
ஒரு எழுத்தை அந்தக் காலகட்ட வரலாற்றோடு பொருத்திப்பார்த்து இதெல்லாம் தரம் , இதெல்லாம் தூரமில்லை என்று பிரிப்பதற்கு ஒரு வரலாற்று உணர்ச்சியும் , தத்துவ உணர்ச்சியும், அரசியல் புரிதலும் வேண்டும். சிலர் தோழராக இருக்கலாம் அப்படியிருந்தால் வரலாற்று உணர்வு கிடைக்கும் அது பெருங்கதையாடல் , சிலர் நுட்பமான எழுத்தாளராக இருக்கலாம் மனதின் நுட்பத்தின் உள்ளே சென்று வெளிவரக்கூடியவராக இருக்கலாம். தோழர் இரண்டுமாக இருக்கிறார் என்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
தோழர் ஒரே நேரம் வரலாற்று உணர்விருப்பவராக இருக்கிறார் அதே நேரம் நுட்பமான சிறுகதை வடிவங்களைத் தெரிந்த தேர்ந்த வாசகராகவும் அவரே எழுத்தாளராகவும் இருக்கிறார். தோழர் தமிழ்ச் சிறுகதை எழுதுபவர்களை ஏழு விதமாய் பிரிக்கிறார்
1. கலை கலைக்காக எழுதுகிறேன் என்கிற மரபு
2. கலை மக்களுக்காக என்ற இடதுசாரி மரபு
3. திராவிட மரபைச் சேர்ந்த எழுத்தாளர்கள்
4. தலித்திய எழுச்சியால் உருவான எழுத்துக்கள்
5. பெண் எழுத்தாளர்கள்
6. கட்டற்ற பாலியலை எழுதக்கூடியவர்கள்
7. கஷ்டப்பட்டு புதிய திசையில் எழுதுபவர்கள் அவர்கள் எழுத்தை படிப்பதற்கே கொஞ்சம் முயற்சி வேண்டும்
வெளியில் இருக்கும் புறமே கலையைத் தீர்மானிக்கும் திராவிட எழுத்து எப்போது வந்திருக்க முடியும் , இங்கே திராவிட கொள்கைகளும் மரபும் போராட்டக்களமும் வரும்போது அது அப்படியே கலையில் பிரதிபலிக்கும் தானே. அந்தக் கண்ணோட்டத்துடன் ஒரு சிறுகதையின் வரலாறு வரும்போது அதை வரலாற்றுத் தடமென்று சொல்லலாம் .
இப்படி ஒவ்வொரு சிறுகதைக்கு பின்பும் இருக்கும் வரலாற்றுச் சூழலை அந்த எழுத்தாளர் ஏன் அதை எழுதுகிறார் என்று அவர் சொல்கிறார். இப்படி வரலாற்றுடன் இணைத்து புரிந்துகொள்ளும் போது ஒரு முழுமைக் கிடைக்கிறது. தமிழ்ச்செல்வன் போன்ற தோழர்கள் நமக்கு ஒரு பொக்கிஷமாய்த் தெரிகிறார்கள்.
இனி நாங்களுமே ஒரு எழுத்தாளர் அந்த சிறுகதையை எழுதுவதற்கான காரணம் என்ன ? வரலாற்றிலிருந்து அந்தப் படைப்பை அணுக புரிந்துகொள்வோம். இது மாதிரி பெரிய புத்தகங்களுக்கு நோட்ஸ்கள் தேவைப்படும் அது நாளை நாம் எடுத்துபடிக்க உதவும். இந்தப் புத்தகத்துக்கு நிறைய கட்டுரைகள் எழுதலாம் என்று திட்டம் வைத்திருக்கிறேன். குறைவாகக் காண்க

No comments:
Post a Comment