Showing posts with label கீதை. Show all posts
Showing posts with label கீதை. Show all posts

Wednesday, 21 December 2011

கீதா சாரம் வாழ்வின் சாரமா

ரஷ்யாவில் கீதையை தடை செய்யவேண்டும் என்று ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. கீதையை தடைசெய்யகூடாது
என்று இங்குள்ள RSS பா ஜா க கும்பல் கூச்சல் போடுகிறது.அப்படி என்ன கீதையில் கருத்து உள்ளது.
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்."

இவ்வாசகம் பகவத் கீதையின் சாரம் .இவ்வாசகத்தை சமகாலத்துடன் பொருத்தி பார்ப்போம் .
ஈழத்தின் போரிலே மக்கள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது,பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டது
நன்றாகவே நடந்தது,குழந்தைகள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது,பஸ் பால் விலை ஏற்றப்பட்டது
நன்றாகவே நடத்தது,பரமக்குடியில் தலித்துகள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது.நாளை கூடங்குளம்
அணுமின்நிலையம் வரப்போகிறது அதுவும் நன்றாகவே நடக்கும்.இப்படி போராடும் மக்களுக்கு
எதிராய் உள்ளது கீதை வாசகம்."எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?"
அதாவது வாழ்க்கையையே , அமைதியையே இழக்கலாம் , ஆனால் மக்கள் போராட்ட உணர்வு மங்கிப்போய்
இந்த கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டு,கடவுள் இருக்கிறார் நாம் எதையும் இழக்கவில்லை என்று மனதை
தேற்றி கொண்டு, போராட்ட உணர்வையும் நீர்த்து போக செய்ய வேண்டும். கடவுள் என்ற உணர்வு வெறும் மூட நம்பிக்கையாய் இருப்பது கூட பிரச்சனை அல்ல,அது போராடும் மக்களை நீர்த்து போக செய்வதால் பிரச்சனையே. பிரச்சனைகள் சூழ்ந்த மக்களை போராட வழிசெய்யாமல் அவர்களை நீர்த்துப்போக செய்வதால் இது சுரண்டுபவனுக்கு ஆதரவாய் இருக்கின்றன. கடவுள் என்ற பாத்திரமும்,கடவுளின் கருத்துக்களும் என்றுமே ஆளும் சுரண்டும் மக்களுக்கு பேராதரவாய் இருந்திருக்கின்றன.இறுதியாய் இறைவன் மனித ரூபத்தில் வந்து இறுதியாய் காப்பான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது, மக்கள் போராடாமல் இறைவனுக்காய் காத்து கொண்டிருக்க வேண்டும்.