சில்லறை வணிகத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் , அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .KRP செந்தில் போன்ற படித்தவர்களே , அந்நிய முதலீடு வந்தால் என்ன தவறு அவர்கள் வரி கட்டுவார்கள் , இங்கே சரவணா ஸ்டோர்ஸ் போல சொந்த ஜாதியிலேயே மக்களை வேலைக்கு அமர்த்தி கொத்தடிமை போல நடத்துகிறார்கள் ,இது அன்னியர்கள் முதலீடு செய்வதால் குறையும் என்று சொல்கிறார்கள் .சரி உண்மையில் வால் மார்ட் என்னும் நிறுவனத்தில் என்ன தான் நடக்கிறது . வால் மார்ட் உலகில் உள்ள நாற்பத்து ஆறு நாடுகளின் வறுமையை வைத்து தனது பசியை போக்கிகொள்கிறதாம். உதாரணமாய் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளை அதிக நேரம் வேலை செய்ய வைப்பது , கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் வேலை வாங்குவது , மாசமாய் இருக்கும் பெண்கள் வேலைக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று கருகலைக்க சொல்வது . ஒரு தொழிலாளி அவன் உரிமை வேண்டி எதிர்த்தால் அவனை கட்டம் கட்டுவது இப்படி நாற்பத்தாறு நாடுகளில் தன் கொடுங்கோல் ஆட்சியை நிறுவுகிறது வால் மார்ட் .
வால் மார்ட் மொத்தம் 102 டாலர் மில்லியன் கம்பெனி . அனைத்து பொருட்களையும் நம்ம ஊரு சரவணா ஸ்டோர்ஸ் போல மலிவான விலையில் கிடைக்கும் இடம் ,இது எப்படி சாத்திய படுகிறது , ஊழியர்களின் கடுமையான உழைப்பு , ஒரு நாளில் குறைந்தது பதினான்கு மணி நேர உழைப்பு , சில குழந்தைகள் 18 மணி நேரம் வேலை செய்வதினால் அங்கேயே படுத்து உறங்குகிறார்கள் . இது தான் இவர்கள் தரும் வேலையின் லட்சணம். 48 நாடுகளில் வால் மார்ட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளன . அத்தனை நாடுகளும் ஏழை நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் . அந்நாடுகளில் வறுமை தலைவிரித்து ஆடும் ,வேலை வாய்ப்பு மிகக்குறைவாய் இருக்கும் , அத்தகைய நாடுகளில் புகுந்தால் வேலை தருகிறேன் என்று சொல்லிவிட்டு கம்மியான கூலிக்கு சுரண்ட முடியும் , கம்மியான விலைக்கு விற்க முடியும் , சந்தையை காப்பாற்ற முடியும் இது தான் வால் மார்டின் தாரக மந்திரம் , வெற்றியின் மூலதனம் .
வால் மார்டில் வேலைசெய்வோறது வருட சம்பளம் 400 டாலராம் . அதாவது தோரையமாய் 20000 ரூபாய் . வால் மார்டில் அதிகமாய் பெண்களையும் குழந்தைகளையும் வேலைக்கு வைக்கிறார்கள். அவர்களை தானே மலிவான விலைக்கு வேலை வாங்க முடியும் . குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதில் வால் மார்ட் பங்களாதேஷிலும் , சீனாவிலும் மாட்டி உள்ளது . குற்றசாட்டு என்ன வென்றால் , மற்றவர்கள் வேலை செய்வதை விட அதிக வேலை குறைந்த கூலி கொடுக்கப்பட்டதாம் . சீனாவில் நாள் ஒன்றிற்கு இருபது மணி நேர வேலை , ஏழு நாட்கள் வேலை , குறைந்த கூலி , வேலை செய்தது குழந்தைகள் , கேட்கவே ரணமாய் தான் உள்ளது அல்லவா ????
நாமெல்லாம் அங்காடி தெரு பார்த்து விட்டு சரவணா ஸ்டோர்ஸ் கடையை திட்டிகிறோம் , உண்மையில் வால் மார்ட் கடையில் என்ன நடக்கிறது , சீனாவில் NIKE சூ தயாரிக்க குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் . கண்டிப்பாய் நூறு சூ தயாரிக்க வேண்டும் ,அதில் ஒரு சூ தவறாய் இருந்தாலும் அன்றைய
கூலி குழந்தைகளுக்கு கிடையாது இதுவே வால் மார்ட் நிலை . மூன்றாம் உலக நாடுகளில் வால் மார்ட் தொழிற்சாலைகள் ஆபத்தான தொழில்நுட்பத்துடன் தான் இருக்குமாம் , தண்ணீர் குடிக்க , ஒன்றுக்கு போக , இரண்டுக்கு போக கூட வழி இல்லாமல் தான் தொழிலாளர்கள் , கொத்தடிமையாய் இருப்பார்கள் .
படிக்கும் பொழுதே நம் அங்காடி தெரு போல நூறு மடங்கு பிரச்சனை இருக்கும் என்று தெரிகிறது .
இத்தனை பிரச்சனைகள் வால் மார்ட் என்ற ஒரு நிறுவனத்துக்கே இருக்கிறது , இப்படி சில்லறை வணிகத்தில் ஐம்பத்தி ஒரு சதவிகிதம் வந்தால் , இந்திய மக்கள் தொகை ஐம்பத்தி ஒரு சதவிகிதம் குறையும் என்பதில் ஐயமில்லை .நான் சொல்வதில் பிழை இருந்ததாக நினைத்தால் , WALL MART என்று இணையத்தில் அடித்து தேடிப்பாருங்கள் . நம்மிடம் இன்று பொருட்களை வால் மார்ட் எவ்வளவுக்கு விற்றாலும் காசு கொடுத்து வாங்க கூடிய வசதி இருக்கலாம் . அதனால்
நாம் HIPPY ஆங்கிலம் பேசிவிட்டு "IF FOREIGN INVESTORS COME ,SO வாட்" என்று கேட்கலாம் . பிணங்களின் மீது அமர்ந்து உண்ண முடியுமா???????