நேற்று சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடு பற்றி கலைஞர் குறிப்பிடும் பொழுது " பொருளாதாரம் சுனாமீக்குள் சிக்கிக்கொள்ளும் " என்று சொல்லிவிட்டு ,இன்று கூட்டணி கட்சி அதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பேன் என்று தி மு க சொல்லி உள்ளது.அப்படி என்றால் கலைஞர் கூற்றின் படி மக்கள் முக்கியம் அல்ல கூட்டணி கட்சியான காங்கிரஸ் முக்கியம் , தேவை பட்டால் நாட்டையே கூட்டிக்கொடுக்கலாம் .
இப்படி வோட்டு கட்சிகள் மக்கள் முன்பு அம்மனமாய் இருக்கின்றனர் . அதில் இன்று தி நகரில் விலைவாசி உயர்வை பற்றி கூட்டம் போடப்போகிறார்கள் .விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குஷ்பு அதில் வீர உரை ஆற்ற உள்ளார் . இங்கு சிறு வணிகர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு , அங்கே விலைவாசி உயர்வை பற்றி பேசினால் தமிழக மக்களுக்கு புரியவா போகிறது . இருக்கவே இருக்கிறது இலவசங்கள் என்று கலைஞர் நினைத்து இருக்க கூடும் .
சில்லறை வணிகத்தை பற்றி நண்பர்களுடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ,அவர்கள் அதை வரவேற்றார்கள் .இதில் என்ன தவறு உள்ளது , வந்தா நல்லது தானே என்ற தொனியில் பேச்சுக்களை கொடுத்தார்கள் . நான் எனக்கு தெரிந்த அரசியல் மூலமாய் விளக்க முற்ப்பட்டேன் , பெப்சி கோக் இருவரும் எப்படி நாட்டில் உள்ள , பன்னீர் சோடா காளிமார்க் போன்ற வற்றை அழித்தார்கள் என்று விளக்கினேன் . பெப்சி கோக் வைத்து இருக்கும் கடைகளில் ஒரு FRIDGE இருக்கும் அதில் அவர்கள் பொருட்களே விற்பனை செய்யப்படும் , இவர்கள் கடைக்கு கொடுக்கும் பொழுது அந்த குளிரூட்டி இலவசமாய் கொடுக்கப்படும்
பின்பு அவர்கள் கடைக்காரர்களை மிரட்டுவார்கள் , எங்கள் பொருட்களை மட்டுமே விற்க வேண்டுமென்று . அந்த குளிரூட்டியில் பன்னீர் சோடா , போன்ற ஏனைய
பொருட்களை விற்க கூடாது என்று கடைக்காரர்கள் மிரட்டப்படுவார்கள் . அப்படி மற்ற குளிர்பானங்கள் அழிக்கப்படும் . நான் நாகப்பட்டினம் சென்ற பொழுது ஒரு கடையில் பன்னீர் சோடா கேட்டேன் அங்கு இல்லை ஆனால் பெப்சி இருந்தது என்பதே உண்மை நிலை .
மாப்பிளை விநாயகர் திரையரங்கிலே அவர்கள் சோடா விற்க முடியாது இதுவே இன்றைய நிலை , என்பதை விளக்கினேன் . மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் தண்ணீர் இலவசமாய் வழங்கப்படும் இல்லை குறைந்த விலைக்கு கொடுக்கப்படும் , மின்சாரமும் அப்படியே . ஆனால் அச்செலவுகள் சாமனிய மக்களின் சட்டை பையிலிருந்து உருவப்படும் .
இதனால் தான் நடக்கிறது விலைவாசி ஏற்றம் . இப்படி பெப்சி கோக் இவ்வளவு வேலை செய்தால் , வால் மார்ட் நம் சந்தையில் நுழைந்தால் ,சந்தை கைப்பற்றிவிட்டால் , அவர்கள் வைப்பது தான் விலை , அரசும் அவர்களுக்கு துணை புரியும் , விலைவாசி ஏற்றத்தை மக்கள் தலையில் கட்டும் .
இப்படி விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து , அதே நேரத்தில் சில்லறை வியாபாரத்தையும் ஆதரித்து வாக்களிக்க முடியுமா . அதை தான்
தி மு க செய்கிறது . அதிலும் குஷ்பு போன்ற வறுமையில் வாடுபவர் , தி மு க கட்சியில் இருந்து ஆரம்பம் முதல் போஸ்டர் ஒட்டிய தொண்டர் குஷ்பு பேசப்போகிறார் நானும் பார்க்க போகிறேன் .