
தமிழர்களாய் இருப்பவர்கள் மாநாட்டிற்கு வந்துள்ளனர் , இதை போல வாக்கியத்தை விஷத்தனமாய் யார் சொல்ல முடியும் ???? மாண்புமிகு செம்மொழிகொண்டான் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டுமே சொல்ல முடியும் .
கலைஞர் குடும்பத்தில் மட்டும் 2000 பேருக்கு மேல் வந்தததாக கேள்வி , அதனால் அவர் நாளை தமிழர்கள் என்றால் என் குடும்பத்தவர்கள் என்று சொல்லக்கூடும்
சில கேள்விகள்
1 . ஈழத்தில் முள் வேலியில் இருந்தே வர முடியாத தமிழர்கள் எப்படி கோவை வருவார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லையா ?????
2 . லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்திலே உயிர் உடமை இழந்த பொழுது , இந்த துக்கத்திலே செம்மொழி என்று கொண்டாடுவது அருவருப்பாய் கருதும் மக்கள் தமிழர்கள் இல்லையா ??????
3. பாமரனுக்கு கூட சட்டம் புரிய வேண்டும் , ஆங்கிலம் படிக்காத பாமரன் ஒரு ஒருவர் மீது வழக்கு போடுகிறான் என்றால் அவனுக்கு வழக்குரைஞர் என்ன வாதிடுகிறார் என்பது கூட புரியாது . அப்படி
நீதி மன்றத்தில் கூட தமிழை கொண்டு வர முடியமால் என்ன செம்மொழி விழா .அப்படி நீதி தமிழிலே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தோழர்கள் இல்லையா ????
4.இவ்வளவு நடந்து தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் தமிழர்கள்
இல்லையா ??
செம்மொழி மாநாட்டிற்கு வந்தவர்கள் இரண்டு பிரிவினர்
1 ஒன்று உங்களின் குடும்பம் அரங்கையே நிரப்பியவர்கள்
2 இன்னொன்று உங்களுக்கு ஜால்ரா போட்ட பானபத்திர ஓணான்டிகள் இவர்கள் பின்வருசைக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . ஏன் என்றால் முன்வருசையில் உங்கள் வீட்டு கவின்கர்கள் கனிமொழி , கயல்விழி உட்க்கார்ந்து இருப்பார்கள் , பின்பு தமிழ் தொண்டு ஆற்றும் பேரன்கள் RED GIANT MOVIES , மற்றும் CLOUD NINE MOVIES அதிபர்கள் உட்கார்ந்து இருப்பார்கள் .
இப்படி இருப்பவர்கள் மட்டுமே தமிழர்களா???????????வைரமுத்துவும் வாலியும் நீங்களும் தமிழிலே நன்றாய் எழுதுவீர்கள் . தமிழ் நன்றாய் எழுதவதால் மட்டும் தமிழனா என்ன ??????? உணர்வு வேண்டும் தலைவரே ??? நீரோ மன்னனை நான் பார்த்ததில்லை , ஆனால் உங்களை பார்த்த பின்பு தெரிகிறது
நிலைமை இப்படி இருக்கும் பொழுது ஒரு அமெரிக்க பத்திரிகை தமிழ் நாடு தான் தொழில் துடங்க
சிறந்த இடம் என்று சொல்லி உள்ளது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் . அதற்க்கு அர்த்தம் இங்கே தான்
குறைந்த கூலி என்பதே மறைமுக அர்த்தம் , என்பது தாய் காவியம் படித்த கலைங்கருக்கு தெரியாதா .
"எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா ???" என்பதை போல ......ஈழம் பத்தி எறிந்த வேளையில் கொதிக்காத தமிழன் தான் சிறந்த அடிமை , எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் செம்மொழியை மாநாடு நடத்துபவனே சிறந்த அடிமை என்று அமெரிக்க பத்திரிகையும் Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM) போன்றவர்கள் நினைக்கிறார்கள் போலும் . "நல்ல அடிமை சிக்கிடாண்டா " என்று வடிவேலு சொல்வது காதில் கேட்கிறதா ?????






