Wednesday, 14 December 2011

அடுத்த முதல்வர் ரஜினிகாந்த்

முல்லைபெரியார் பிரச்சன எல்லாம் ஒரு பிரச்சனையா அதுக்கு போய் இவ்வளவு பேரு கூடிக்கிட்டு .எங்க தானை தலைவன் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழால கூடிச்சே அது கூட்டம் . முல்லை பெரியார் பிரச்சன தீரனும்னா எங்க தலைவன் ரஜினி முத்துராமன் சார் ,தாணு சார் சொன்ன மாதிரி முதல்வர் ஆகணும் , ஏற்க்கனவே ஷங்கர் முதல்வன் படம் நடிக்க கூப்பிடப்ப நடிக்க முடியல , அடுத்த முதல்வர் நு ஒரு படம் ஷங்கர் வச்சு பண்ணலாம் , கேமிராக்கு ரத்னவேலு மியூசிக் ரெஹ்மான் தம்பின்னு போட்டுடுலாம் , ரெலீசுக்கு இமய மல போய்டலாம் . நீயா நானல்ல கூட ஏன் முல்லை பெரியார் பிரச்சன பத்தி பேசாம ரஜினி பத்தி பேசறாங்க , ஏன் நா அடுத்த முதல்வர் தலைவர் தானே .


நாட்ல நடக்குற எந்த பிரச்சனைக்கு தலைவர் குரல் கொடுக்கல சொல்லுங்க . ஈழத்தமிழன்
சோகமா இருக்க கூடாதுன்னு தலைவர் லண்டன் பிரான்ஸ் கனடா எல்லா இடத்துலையும் படத்த ரிலீஸ் பண்ணி மக்களை சந்தோஷ படுத்துவாறு . அதே மாதிரி ஹொகேனக்கல் திட்டம் பிரச்சன வந்தப்ப ஏன் மன்னிப்பு கேட்டாரு , கர்நாடகால இருக்கற தமிழன் படம் பாக்குனும்ல அந்த நல்ல எண்ணத்துக்காக தான் மன்னிப்பு கேட்டாரு . அதே மாதிரி நாட்டுல மற்றம் வரும்னு வோட் போட்டுட்டு பேட்டி கொடுத்தாரு . அவர் வோட் போட்ட அம்மா , மக்களுக்காக பஸ் பால் வில எல்லாம் கூட்டிருக்காங்க , கரண்ட் இல்லாததால வீட்ட்ல எல்லாரும் மனம் விட்டு பேச முடியுது . பஸ் வில னாலா அல்லாரும் நடந்து போறாங்க ஹெல்தியா இருக்காங்க , இந்த மாதிரி அம்மாவ சொல்லிக்கிட்டே போகலாம் , இத அன்னிக்கே கனிச்ச சூப்பர் ஸ்டார் , நாட்ல ஒரு நல்ல மாற்றம் வரும்னார் , வந்திச்சா இல்லையா ? இப்படி அரசியல கனிச்ச சூப்பர் ,"அடுத்த முதல்வர் " படம் நடிச்ச மட்டும் பத்தாது , அடுத்த முதல்வராகவே ஆகணும் . எங்க அண்ணன் இளைய தளபதி எதிர்க்கட்சி தலைவர் ஆகணும் .

டென்னிஸ் போட்டி நடத்தும் ஏழை , WHITE BOARD பஸ்ஸில் பணக்காரன் புரட்சி தலைவியின் புரட்சி பாதை

கலை வேறு
----------------

'"உன் வாழ்கை உன் கையில் " உங்க கவித படிச்சேன் சார் ரொம்ப சூப்பர்
சார் ,ஜோசியம் ஜாதகத்த கிழி கிழின்னு கிழிசுருக்கீங்க சார் , உங்களுக்கு பாரதின்னு
பேர் வச்சது கரெக்ட் தான் சார் ' . என்று தனக்கு வந்த இன்கமிங் காலில் வாசகனின்
பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான் கவிஞன் பாரதி போனை வைத்த உடன் , உள்ளே இருந்து அவன் அம்மா "டேய் அந்த பொண்ணோட ஜாதகம் பக்காவா பொருந்தி இருக்காம் , என்ன டா சொல்ற " என்று கேட்டாள் ."ஜாதகம் பொருந்தி இருந்தா முடிச்சிடலாமா "என்றான் . பக்கத்தில் இருந்த நண்பன் "என்ன மாப்ள கவிதைக்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்ல " என்று கூறிய மறுநொடி "மாப்ள கலைய பாரு கலைங்கன பாக்காத " என்றான் புரட்சி கவி .

காதல் GATE
அவன் கல்லூரியிலேயே சிறந்த PROGRAMMER . ஜாவாவில் எட்டு போட்டு லைசென்ஸ் வைத்து இருந்தவன் ."டேய் பில் கேட்ஸ் எப்படி டா , I LOVE U டா " என்று எப்பொழுதுமே விரட்டிக் கொண்டிருப்பாள் அவன் பணக்கார வீட்டு மாமா பெண் . "FRESHERA இருக்கறப்பவே FIVE LAKH PER ANNUM கலக்கு டா பில் கேட்ஸ் I LOVE U " என்பாள் .

சில நாட்களுக்கு பிறகு
----------------------
"எனக்கு வேல போச்சு டீ , RECISSION அமெரிக்கால CLIENT BANK மூடிட்டாங்க ,வேலைய விட்டு தூக்கிட்டாங்க , கொஞ்சம் ரெண்டு மாசம் பொறு வேற COMPANIYA பாத்துக்கலாம் " என்றான் . அவள் பதில் எதுவும் பேசவில்லை ,வீட்டிற்கு வந்து தன் PROFILAI BHARATH MATRIMONIYIL பதிந்தாள் , குறிப்பாக " SOFTWARE ENGINEERS STRICTLY DONT APPLY " என்ற வாசகத்துடன் . அவன் காதலன் BILL GATESAI வீட்டின் GATE வரை கூட அனுமதிப்பதில்லையாம் .
ஜெய் அம்மா
----------------------------------------------------
அம்மா நட்டத்தில் உள்ளதால் பஸ் பால் விலை ஏறி இருப்பதாய் சொன்னார்கள் . ஆனால் சென்னையில் நடக்கும் டென்னிஸ் போட்டிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி , உலக திரைப்பட விழாவிற்கு இருபத்தி ஐந்து லட்ச நிதி . டென்னிஸ் போட்டி நடத்துபவனும் ,உலக திரைப்பட விழா நடத்துபவனும் மிகவும் ஏழை அதனால் தான் ஏழைகள் மீது பாரத்தை சுமத்தாமல் , பணக்காரர்களாகிய WHITE BOARD பஸ்ஸில் போபவர்களிடம் அம்மா பறிக்கிறார் , "நாலு பேரு நல்லா இருக்கணும்னா நாலு கோடி பேர் நாசமா போனா தப்பில்ல ", என்ன நான் சொல்றது

Thursday, 1 December 2011

வால் மார்ட் ,பிணவறையில் உட்க்கார்ந்து சாப்பிட முடியுமா

சில்லறை வணிகத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் , அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .KRP செந்தில் போன்ற படித்தவர்களே , அந்நிய முதலீடு வந்தால் என்ன தவறு அவர்கள் வரி கட்டுவார்கள் , இங்கே சரவணா ஸ்டோர்ஸ் போல சொந்த ஜாதியிலேயே மக்களை வேலைக்கு அமர்த்தி கொத்தடிமை போல நடத்துகிறார்கள் ,இது அன்னியர்கள் முதலீடு செய்வதால் குறையும் என்று சொல்கிறார்கள் .சரி உண்மையில் வால் மார்ட் என்னும் நிறுவனத்தில் என்ன தான் நடக்கிறது . வால் மார்ட் உலகில் உள்ள நாற்பத்து ஆறு நாடுகளின் வறுமையை வைத்து தனது பசியை போக்கிகொள்கிறதாம். உதாரணமாய் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளை அதிக நேரம் வேலை செய்ய வைப்பது , கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் வேலை வாங்குவது , மாசமாய் இருக்கும் பெண்கள் வேலைக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று கருகலைக்க சொல்வது . ஒரு தொழிலாளி அவன் உரிமை வேண்டி எதிர்த்தால் அவனை கட்டம் கட்டுவது இப்படி நாற்பத்தாறு நாடுகளில் தன் கொடுங்கோல் ஆட்சியை நிறுவுகிறது வால் மார்ட் .

வால் மார்ட் மொத்தம் 102 டாலர் மில்லியன் கம்பெனி . அனைத்து பொருட்களையும் நம்ம ஊரு சரவணா ஸ்டோர்ஸ் போல மலிவான விலையில் கிடைக்கும் இடம் ,இது எப்படி சாத்திய படுகிறது , ஊழியர்களின் கடுமையான உழைப்பு , ஒரு நாளில் குறைந்தது பதினான்கு மணி நேர உழைப்பு , சில குழந்தைகள் 18 மணி நேரம் வேலை செய்வதினால் அங்கேயே படுத்து உறங்குகிறார்கள் . இது தான் இவர்கள் தரும் வேலையின் லட்சணம். 48 நாடுகளில் வால் மார்ட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளன . அத்தனை நாடுகளும் ஏழை நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் . அந்நாடுகளில் வறுமை தலைவிரித்து ஆடும் ,வேலை வாய்ப்பு மிகக்குறைவாய் இருக்கும் , அத்தகைய நாடுகளில் புகுந்தால் வேலை தருகிறேன் என்று சொல்லிவிட்டு கம்மியான கூலிக்கு சுரண்ட முடியும் , கம்மியான விலைக்கு விற்க முடியும் , சந்தையை காப்பாற்ற முடியும் இது தான் வால் மார்டின் தாரக மந்திரம் , வெற்றியின் மூலதனம் .

வால் மார்டில் வேலைசெய்வோறது வருட சம்பளம் 400 டாலராம் . அதாவது தோரையமாய் 20000 ரூபாய் . வால் மார்டில் அதிகமாய் பெண்களையும் குழந்தைகளையும் வேலைக்கு வைக்கிறார்கள். அவர்களை தானே மலிவான விலைக்கு வேலை வாங்க முடியும் . குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதில் வால் மார்ட் பங்களாதேஷிலும் , சீனாவிலும் மாட்டி உள்ளது . குற்றசாட்டு என்ன வென்றால் , மற்றவர்கள் வேலை செய்வதை விட அதிக வேலை குறைந்த கூலி கொடுக்கப்பட்டதாம் . சீனாவில் நாள் ஒன்றிற்கு இருபது மணி நேர வேலை , ஏழு நாட்கள் வேலை , குறைந்த கூலி , வேலை செய்தது குழந்தைகள் , கேட்கவே ரணமாய் தான் உள்ளது அல்லவா ????

நாமெல்லாம் அங்காடி தெரு பார்த்து விட்டு சரவணா ஸ்டோர்ஸ் கடையை திட்டிகிறோம் , உண்மையில் வால் மார்ட் கடையில் என்ன நடக்கிறது , சீனாவில் NIKE சூ தயாரிக்க குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் . கண்டிப்பாய் நூறு சூ தயாரிக்க வேண்டும் ,அதில் ஒரு சூ தவறாய் இருந்தாலும் அன்றைய
கூலி குழந்தைகளுக்கு கிடையாது இதுவே வால் மார்ட் நிலை . மூன்றாம் உலக நாடுகளில் வால் மார்ட் தொழிற்சாலைகள் ஆபத்தான தொழில்நுட்பத்துடன் தான் இருக்குமாம் , தண்ணீர் குடிக்க , ஒன்றுக்கு போக , இரண்டுக்கு போக கூட வழி இல்லாமல் தான் தொழிலாளர்கள் , கொத்தடிமையாய் இருப்பார்கள் .
படிக்கும் பொழுதே நம் அங்காடி தெரு போல நூறு மடங்கு பிரச்சனை இருக்கும் என்று தெரிகிறது .

இத்தனை பிரச்சனைகள் வால் மார்ட் என்ற ஒரு நிறுவனத்துக்கே இருக்கிறது , இப்படி சில்லறை வணிகத்தில் ஐம்பத்தி ஒரு சதவிகிதம் வந்தால் , இந்திய மக்கள் தொகை ஐம்பத்தி ஒரு சதவிகிதம் குறையும் என்பதில் ஐயமில்லை .நான் சொல்வதில் பிழை இருந்ததாக நினைத்தால் , WALL MART என்று இணையத்தில் அடித்து தேடிப்பாருங்கள் . நம்மிடம் இன்று பொருட்களை வால் மார்ட் எவ்வளவுக்கு விற்றாலும் காசு கொடுத்து வாங்க கூடிய வசதி இருக்கலாம் . அதனால்
நாம் HIPPY ஆங்கிலம் பேசிவிட்டு "IF FOREIGN INVESTORS COME ,SO வாட்" என்று கேட்கலாம் . பிணங்களின் மீது அமர்ந்து உண்ண முடியுமா???????

சில்லறை வியாபாரமும் , குஸ்புவின் விலைவாசி பற்றிய கூட்டமும்

நேற்று சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடு பற்றி கலைஞர் குறிப்பிடும் பொழுது " பொருளாதாரம் சுனாமீக்குள் சிக்கிக்கொள்ளும் " என்று சொல்லிவிட்டு ,இன்று கூட்டணி கட்சி அதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பேன் என்று தி மு க சொல்லி உள்ளது.அப்படி என்றால் கலைஞர் கூற்றின் படி மக்கள் முக்கியம் அல்ல கூட்டணி கட்சியான காங்கிரஸ் முக்கியம் , தேவை பட்டால் நாட்டையே கூட்டிக்கொடுக்கலாம் .
இப்படி வோட்டு கட்சிகள் மக்கள் முன்பு அம்மனமாய் இருக்கின்றனர் . அதில் இன்று தி நகரில் விலைவாசி உயர்வை பற்றி கூட்டம் போடப்போகிறார்கள் .விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குஷ்பு அதில் வீர உரை ஆற்ற உள்ளார் . இங்கு சிறு வணிகர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு , அங்கே விலைவாசி உயர்வை பற்றி பேசினால் தமிழக மக்களுக்கு புரியவா போகிறது . இருக்கவே இருக்கிறது இலவசங்கள் என்று கலைஞர் நினைத்து இருக்க கூடும் .

சில்லறை வணிகத்தை பற்றி நண்பர்களுடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ,அவர்கள் அதை வரவேற்றார்கள் .இதில் என்ன தவறு உள்ளது , வந்தா நல்லது தானே என்ற தொனியில் பேச்சுக்களை கொடுத்தார்கள் . நான் எனக்கு தெரிந்த அரசியல் மூலமாய் விளக்க முற்ப்பட்டேன் , பெப்சி கோக் இருவரும் எப்படி நாட்டில் உள்ள , பன்னீர் சோடா காளிமார்க் போன்ற வற்றை அழித்தார்கள் என்று விளக்கினேன் . பெப்சி கோக் வைத்து இருக்கும் கடைகளில் ஒரு FRIDGE இருக்கும் அதில் அவர்கள் பொருட்களே விற்பனை செய்யப்படும் , இவர்கள் கடைக்கு கொடுக்கும் பொழுது அந்த குளிரூட்டி இலவசமாய் கொடுக்கப்படும்
பின்பு அவர்கள் கடைக்காரர்களை மிரட்டுவார்கள் , எங்கள் பொருட்களை மட்டுமே விற்க வேண்டுமென்று . அந்த குளிரூட்டியில் பன்னீர் சோடா , போன்ற ஏனைய
பொருட்களை விற்க கூடாது என்று கடைக்காரர்கள் மிரட்டப்படுவார்கள் . அப்படி மற்ற குளிர்பானங்கள் அழிக்கப்படும் . நான் நாகப்பட்டினம் சென்ற பொழுது ஒரு கடையில் பன்னீர் சோடா கேட்டேன் அங்கு இல்லை ஆனால் பெப்சி இருந்தது என்பதே உண்மை நிலை .

மாப்பிளை விநாயகர் திரையரங்கிலே அவர்கள் சோடா விற்க முடியாது இதுவே இன்றைய நிலை , என்பதை விளக்கினேன் . மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் தண்ணீர் இலவசமாய் வழங்கப்படும் இல்லை குறைந்த விலைக்கு கொடுக்கப்படும் , மின்சாரமும் அப்படியே . ஆனால் அச்செலவுகள் சாமனிய மக்களின் சட்டை பையிலிருந்து உருவப்படும் .
இதனால் தான் நடக்கிறது விலைவாசி ஏற்றம் . இப்படி பெப்சி கோக் இவ்வளவு வேலை செய்தால் , வால் மார்ட் நம் சந்தையில் நுழைந்தால் ,சந்தை கைப்பற்றிவிட்டால் , அவர்கள் வைப்பது தான் விலை , அரசும் அவர்களுக்கு துணை புரியும் , விலைவாசி ஏற்றத்தை மக்கள் தலையில் கட்டும் .
இப்படி விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து , அதே நேரத்தில் சில்லறை வியாபாரத்தையும் ஆதரித்து வாக்களிக்க முடியுமா . அதை தான்
தி மு க செய்கிறது . அதிலும் குஷ்பு போன்ற வறுமையில் வாடுபவர் , தி மு க கட்சியில் இருந்து ஆரம்பம் முதல் போஸ்டர் ஒட்டிய தொண்டர் குஷ்பு பேசப்போகிறார் நானும் பார்க்க போகிறேன் .

Monday, 28 November 2011

"பிச்சை எடுப்பதில் " அந்நிய முதலீடு


ஒரு ஊரு இருந்துச்சு , அங்க ஒரு சைக்கிள் கடை இருந்துச்சு ,அது ஊருக்காக இருக்கிற பொது மக்களுக்கான சைக்கிள் கடை . சைக்கிள் கடை நட்டத்துல போகுது ,அதனால அத நடத்த முடியலன்னு சொன்னாரு ஊர் பெரியவர்,அதனால ஒரு மணி நேரத்துக்கு சைக்கிள் வாடகையை பத்து மடங்கு ஏத்திட்டாரு. மக்கள் எல்லாம் கொதிச்சு போய் இருந்தாங்க .அந்த நேரத்துல பட்டணத்துல இருந்து ஒரு சைக்கிள் கடை வந்துச்சு ,அதுக்கு மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க .அப்புறம் ஊருக்குள்ள அந்த மக்கள் நிறைய பால் குடிப்பாங்க .பாலும் நட்டத்துல ஓடுதுன்னு பட்டணத்து காரங்கட்ட விட்டாரு . அப்புறம் வெளியூரிலிருந்து ஒரு பேங்க் ,ஊரு முன்னேற்றத்திற்காக கடன் தரேன்னு சொல்றான்னு சொன்னாரு ஊர் பெரியவர் . ஆனா ஒரு கண்டிஷன் போடறான் , ஊர்ல இருக்கற மலிக கடைக்கு போட்டியா மலிக கடை ஓபன் பண்ணனும்னு சொன்னாரு . மக்களும் கொஞ்சம் கடுப்போட ஏத்துக்கிட்டாங்க .
அந்த கோவில இருக்கிற பிச்சக்காரங்க பயத்துல இருந்தாங்க அவங்களுக்குள்ள என்ன பேசிக்கிட்டாங்கனா "ஏதோ பட்டணத்து வங்கி நம்ம ஊரு தலைவருக்கு காசு தருதாம் ,ஆனா இங்க பிச்சை எடுப்பதற்கு , அவங்க ஆளுகள
சேத்துகனுமாம்" அப்படினான் ஒருத்தன் . "அப்படியா இவங்க பேழரதுக்கு கூட போட்டிக்கு வருவாங்களா " அப்படினான் இன்னொருத்தன் .

Wednesday, 23 November 2011

தல அமெரிக்காவின் கை கூலியா - நண்பர் பாலவுக்கு எதிர்வினை

"கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!

முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது....."

"தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே."

"கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்"


இது எல்லாம் என் நண்பர் பாலா பக்கங்கள் இணையத்தில் , சமீபத்தில் வந்த தல பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் .முதலில் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் , நான் 'தலையின்' தீவிரமான ரசிகன் ஒரு காலத்தில், தலையும் எனக்கு எதிரி அல்ல நண்பர் பாலாவும் எனக்கு எதிரி அல்ல , என் பதிவுகளை பத்து பேர் மட்டும் பார்த்த காலத்தில் கூட அதில் ஒருவர் பாலாவாக இருப்பார் . தொடர்ந்து மறு மொழி எழுதுவார் . அதனால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது , பாலாவை தூற்றுவதற்கு அல்ல , விமர்சனம் அவ்வளவே .

எனக்கு தலபடத்தில் உதவியாளர்களாய் வேலை செய்தவர்களை தெரியும் . தினமும் நூறு
ரூபாய் பாட்டா கூட கிடைக்காத தொழிலாளி . அனைவருக்கும் பிரியாணி போட்ட தல ,
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் தல , சினிமா உதவி இயக்குனர் அல்ல உதவி கேமரா
மென் என்றால் ,பாட்டா ஒழுங்காய் கிடைக்காது , அதை அவர்களுக்கு தல வாங்கிக்கொடுக்கலாமே அப்படி வாங்கிக்கொடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம் .நடிகருக்கு பதினைத்து கோடி தரும் சினிமா உலகம் , தொழிலாளியின் நூறு ரூபாய் பாட்டவில் தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிக்கும் பொழுது. இத்தனை கோடி ரூபாயில் ஒரு ஒரு லட்சம் செலவு செய்து , நாய்க்கு போடும் பிஸ்கட் போல போடுவதும் , அதை "தல போல வருமா " என்று புகழ்வதும் கண்டிப்பாய் அருவருப்பாய் தானே உள்ளது .

அந்த கட்டுரையில் நுட்பமாய் பார்த்தால் , ஒன்று புலப்படும் , தலையை விமர்சனம் செய்யவில்லை ,அதை மிகையாய் காட்டும் பதிவுலகத்தையும் , அந்த போலி மனிதாபிமானமே சிறந்தது என்று ரசிக்கும் ரசிக மனப்பான்மையே விமர்சிக்கப்பட்டது. நேற்று மாலை மலர் என்று நினைக்கிறேன் , அதில் ஒரு செய்தி 'விமான நிலையத்தில் அனைவரையும் கவர்ந்த தல '. அதாவது கணக்கெடுப்புகள் சொல்கிறது போல்
எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில் . பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் ஒருவர் மட்டுமே படுத்துறங்க முடியும் என்ற தேசத்தில் , ஒருவர் விமானத்தில் போக வசதியுடைய ஒருவர் வருசையில் நிற்கிறார் என்று பாராட்டினால் ,இயல்பாய் இருப்பவருக்கு கோபம் வரத்தான் செய்யும் . இதற்க்கு
முன்பு இப்படி தான் தல வாக்களிக்க வருசையில் நின்றார் . வருசையில் நிற்பது நல்ல விடயம் தான் , அவர் தலையாய் இருந்தால் " SO வாட்" ,அவரும் மனிதர் தானே , அதை வியந்தோதும் ரசிகன் "தலே லால லாலா " என்றும் "தல போல வருமா"
என்றும் கொக்கரிக்கும் பொழுது , அவன் ரசிக மனத்தை விமர்சிக்க வேண்டாமா , இது அஜித் பற்றி விமர்சனம் அல்ல , அந்த ரசிக மனத்தை , போலி மனிதாபிமானத்தை பற்றிய விமர்சனம் அவ்வளவே . அஜித் பற்றிய வினவு கட்டுரையை மீள் வாசிப்பு செய்யவும் .

நண்பர் எப்பூடி அவர்கள் தீவிர தல பேன் என்று நினைக்கிறேன் , அவர் முன்பு அஜித் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் . நானும் அஜித் வெறியனாக இருந்த காலத்தில் நண்பரின் கட்டுரையை AFE (AJITH FANS இயக்கம்) யாஹூ க்ரூப்ஸ் அதில் நண்பர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது நானும் என் நண்பர் ஊடகனும் , ஆனால் காலப்போக்கில் நான்
அரசியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் . நீங்களும் எப்புடியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி வாழ்க்கை வரலாற்றை படித்ததாக சொன்னீர்கள் . மார்க்ஸ் இயல்பிலேயே அனைவரிடமும் விவாதம் செய்யக்கூடியவர் ,எங்கெல்சும் அப்படியே .அவர்கள் நடுத்தர்வர்கத்தை "குட்டி பூஸ்வா" என்கிறார்கள் . இன்று வினவு தளம் அனைவரிடமும் விவாதம் (உங்கள் மொழியில்
சண்டை ) செய்வதை போல அவர்கள் அவர்கள் காலகட்டத்தில் ,நக்கலும் நையாண்டியும் அனைவரையும் விமர்சனமும் செய்தார்கள் .இன்று வினவு தளம் ஆயிரம் பேரிடம் விவாதம் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால் . மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களுக்கு
எதிராய் இருந்த அனைத்து கருத்துக்களுடன் போரிட்டனர் .பிற்போக்கு தனங்களை கடுமையாய் விமர்சனம் செய்தனர் .பெர்க்லி பாதரியாருடன் அவர்கள் விவாதம் செய்கின்றனர் , எனக்கு தெரிந்த உதாரணம் கருத்துமுதல் வாதத்தை விட பொருள் முத வாதமே சிறந்தது என்பதை நிறுவ, கடவுள் இல்லை என்பதை நிறுவ , விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வைத்து , என் பொதுவுடைமை சிறந்தது என்று லெனின் ஒரு புத்தகம் எழுதுகிறார் .

MATERIALISM and EMPIRIO-கிரிட்டிசிசம்இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அனைவரிடமும் விவாதம் செய்கிறது . இது எங்கெல்ஸ் சயின்ஸ் பற்றி எழுதியதன் தொடர்ச்சி .
இவர்கள் எதற்காய் இந்த புத்தகங்களை எழுதுகிறார்கள் , அக்காலத்தில் இருக்கும் மத குருமார்கள் , மக்களை திசை திருப்ப . இவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி , பொதுவுடமையை விஞ்ஞான பூர்வமாய் நிறுவுகிறார்கள் .

அதே மார்க்ஸ் லெனின் மாவோ எங்கெல்ஸ் , அனைவருமே அவர்கள் கால கட்டத்தில் எதிரிகளை விமர்சனம் செய்யும் பொழுது நக்கல் நையாண்டி செய்கிறார்கள் . அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள் . மார்க்சின் குரு ஹெகெல் கூட இதில் இருந்து தப்பவில்லை .
விமர்சனமே செய்யாமல் எப்படி வளர முடியும் நண்பா .

அதில் நண்பர் பாலா கருத்துக்களை சொல்லலாம் ஆனால் கடுமையாக வசை பாடக்கூடாது என்கிறார். ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி பார்ப்பான் , டான்சே ஆடதேரியாது , குரல் நல்ல இருக்காது , நடந்துகிட்டே இருப்பான் , தொப்பை என்பது வசையா . இவ்வளவு மனிதநேயம் என்று சொல்லிக்கொள்ளும் அஜித் ஏன் சமூக பிரச்சனை என்றால் ஒதுங்குகிறார் , தன் படத்தில் வேலை பார்த்த சக ஊழியனுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அந்த கர்ண பிரபு கொதித்து இருக்க வேண்டாமா ????? அப்படி ஒண்ணுக்கும் ஆகாத வாழ்கையில் ,அந்த தொழிலாளியின் சம்பளம் பற்றி கேட்காமல் , பிரியாணி போடுவதை மட்டும் பாராட்டினால் , அந்த பாராட்டையும் , அந்த ரசிப்புத்தன்மையும் மட்டுமே விமர்சிக்கிறோம் .

பொதுவுடமையை எந்த புத்தகத்திலும் கற்க முடியாது , அது களவேலை . அதுவும் நண்பர்கள் இந்த பஸ் விலை ஏறின நேரத்தில் , மாதம் ௨௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ,வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால் நாமே நடுத்தர வர்க்கம்.முரண்பாட்டு தத்துவத்தில் தான் பொது உடமை தத்துவமே இருக்கிறது .

சுரண்டும் வர்க்கம் என்றால் ,சுரண்டப்படும் வர்க்கம் இருக்கும் . அதற்க்கு ஆதரவாய் இருக்கும் நடுத்தரவர்கத்தை வலிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது . நண்பா நான் எந்த கழிவிரக்க வார்த்தைகளையும் பிரயோகம் செய்யவில்லை . இது என் விமர்சனம் அவ்வளவே.
Bala pakkangal
vinavu

Sunday, 20 November 2011

பஸ் பால் விலை ஏற்றம் குறித்து கார்ல் மார்க்ஸ்

இன்று விலைவாசி ஏறி இருக்கிறது . பேருந்துகளில் போக இரண்டு ரூபாய் வர இரண்டு ரூபாய் என்ற காலம் மலை ஏறி விட்டது . குறைந்தது இருபது ரூபாய் இல்லாமல் நாம் பேருந்தில் பயணம் செய்வதை நினைத்து கூட பார்க்க முடியாது . நான் மதுரையில் இருந்த நாட்களில் கூடையில் பழம் காய்கறி விற்கும் கிழவிகள் , LSS பஸ் ரேட் ஐம்பது பைசா கூட என்பதற்காய் , வெள்ளை போர்டு பேருந்துகளுக்கு கால் கடுக்க காத்திருப்பார்கள் .அப்படி இருந்த மதுரையில் இன்று இருப்பது வெறும் கதவு போட்ட வண்டிகளே . வெள்ளை போர்டு வண்டிகள் பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு எப்பொழுதாவது ஒரு பேருந்து வரும் . அடுத்த நிறுத்தத்திற்கு செல்லவேண்டும் என்றாலும் குறைந்த பஸ் கட்டணம் ஐந்து ரூபாய் என்ற நிலைமைக்கு வந்தாயிற்று .

என் தம்பி ஒருவன் வேலை தேடிக்கொண்டிருக்கிறான் , மாதம் 6௦௦ ரூபாய் பாஸ் வைத்துக்கொண்டு , சென்னையை சுற்றிவருவான் . அவனுக்காவது இங்கே வீடு உள்ளது . ஆனால் இங்கே தங்கி வேலை தேடும் எண்ணற்ற கீழ் நடுத்தர குடும்பத்தை
சேர்ந்தவர்கள் , பொருளாதார பின்னணி இல்லாதவர்கள் எப்படி மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்து பாஸ் எடுப்பார்கள் . ஒரு அனுபவதிற்காய் சென்னையில் பட்டினபாக்கத்தை சுற்றி திருந்தேன் , வீடுகள் எல்லாம் குடிசைகள் ,நடுதரகுடும்பங்கள் கோமான்கள் அங்கே சென்று பார்த்தால் உண்மையான வாழ்க்கை புரியவரும் , இந்த பக்கம் மரினா கடற்கரை அங்கு ஒரு விதமான வாழ்க்கை , அப்படியே கொஞ்சம் காலாற நடந்து போனால் வேறு ஒரு உலகம் . அப்படி இருக்கும் பின்னணியில் ஒருவன் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செலவாகிவிடுகிறது .


சரி ரூமில் இருக்கும் நண்பர்கள் இவ்விடயத்தை பற்றி விவாதிக்கும் பொழுது , அம்மா ரசிகர்கள் ஆகிய அவர்களால் அம்மாவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . "மக்கள் கொந்தளிக்கிறார்கள் " என்று கலைஞர் டிவி சொன்ன உடன் , "அப்படி ஒன்னும் வெளில தெரியல , இவங்களா அடிச்சு விடுறாங்க " என்று
சொன்னான் வருடம் லட்சகணக்கில் வாங்கும் கார் வைத்து இருக்கிற நண்பன் . அவன் பேருந்துகளில் செல்வதில்லை .வேறு மாநிலங்களில் விலை ஏற்றி இருக்கிறார்கள் , அவர்களும் அரசை நடத்த வேண்டாமா என்று சொன்னான் மாதம்
அறுபதாயிரம் வாங்கும் நண்பன் . இன்னொரு நண்பர் வருஷத்துக்கு BONUS கேட்கிறீங்க அப்ப போக்குவரத்து துறை நட்டத்தில் தான் போகும் , முதல்ல அதெல்லாம் கட் செய்ய வேண்டும் . என்று அரசியல் விளக்கம் கொடுத்தார் .

அவர்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை ,போக்குவரத்து கழகம் நட்டத்தில் செல்லவில்லை , விசிலடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகும் மாணவர்களே அதற்கு சாட்சி .அதே போல் SEZ சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கீழ் இருக்கும் தொழிற்சாலைகள் பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது ,அதுவும்
அடிமாட்டு விலையில் (எவ்வளவு என்ற புள்ளி விவரம் தெரியாது ) . நோக்கியா FOXCONN அந்த பிளான்டின் மொத்த செலவு 600 கோடி ரூபாய் , அதற்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் 750 கோடிகள். சாதாரண மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுக்கப்படவில்லை ஆனால் இவர்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது மின்சாரமும் தடையின்றி கிடைக்கிறது . இம்முரணை புரிந்து கொண்டால் , அரசு ஏன் இப்படி செய்ய முடிகறது என்பது புரியும் . லாபக்கணக்கை பன்னாட்டு முதலாளிகளிடம் கட்டும் அரசு நட்டக்கணக்கை மக்களின் தலையில் எழுதுகிறது .

சரி ரூம் நண்பர்கள் ஏன் அப்படி சிந்திக்கிறார்கள் , அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் இதை எல்லாம் சமாளித்து விடலாம் அதனால் அவர்களால் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியவில்லை . ஆனால் காலச்சுழற்சியில் நம் நடுத்தர குடும்பங்களும் , ஏழைகள் ஆகும் ,சுரண்டல் அதிகமாய் இருக்கும் ,அடக்குமுறை அதிகமாய் இருக்கும் இன்று பத்தாயிரம் ,இருபது ஆயிரம் வாங்குபவர்களை கூட ஏழை ஆக்கும் அரசு , நாளை அறுபது ஆயிரம்
வாங்குபவனை ஆக்கும் பொழுது , இவர்களால் இதே கருத்தை சொல்ல முடியாது . அமெரிக்காவில் WALL ஸ்ட்ரீட் மக்கள் இறங்கி போராடுகிறார்கள் . இது எப்படி சாத்தியம் ஆயிற்று . புத்தகங்கள் சொல்லிக்கொடுக்காத அரசியலை புறநிலை எதார்த்தம் சொல்லிக்கொடுக்கும் . அதுவே அங்கு நடந்தது .

சரி இம்மாதிரி அனுபவங்கள் நமக்கு சூழல் கற்றுக்கொடுக்கிறது , ஆனால் இதே விடயங்களை ௧௮௪௮
வந்த ஒரு அரசியல் புத்தகம் சொல்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அந்த புத்தகத்தின் பெயர்
மார்க்ஸ் எங்கெல்ஸ் அளித்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை " . அந்த புத்தகத்தில் இருந்து சில வரிகள்

* வரலாற்றில் முந்திய சாகப்தங்களில் அநேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைவு இருக்க காண்கிறோம் (இந்த பன்மடிப்படிநிலை இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பு ,கிராம வாழ்கையில் இருக்கும் அந்தஸ்து , அனைவருக்கும்
மேலே நிலப்பிரபு .முதலில் பார்ப்பனர்கள் ,அதற்கு அடுத்த நிலை ஆதிக்க சாதியினர் , அதற்கு அடுத்த நிலை பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் ,


கிராம வாழ்க்கையிலிருந்து முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறும் பொழுது .
இங்கு சென்னையிலே சாதி என்பதை பார்க்காமல் அனைவரும் ஒரே தொழிற்சாலையில்
வேலை செய்ய வேண்டும் ,சாதியால் பிளவு படும் வர்க்க அமைப்பு , தொழில் முறையால் வாழ்க்கை முறையால் ஒன்று படுகிறது . இன்று அம்மா தனி தனியாய் சாதி பார்த்து வேலை ஏற்றம் செய்ய முடியாது , நாளுக்கு நாளாய் வாழ்க்கை தரம் குறைய குறைய , தொழிலாளி உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் ஒரே விதமான சிக்கல் வருகிறது , விஞ்ஞான ரீதியாகவே அவர்கள் ஒன்று கூடுகிறார்கள் .

வாழ்க்கை முறை மாறும்பொழுது , நடுத்தர வர்க்கம் கூட ஏழை ஆகிறது , ஒரு தொழிலாளி வாழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . பணம் ஒரு பக்கமே குவிகிறது ,அதனால் UPPER MIDDLE CLASS MIDDLE CLASS ஆகிறது middlE CLASS ஏழைகள் ஆகின்றனர் . இப்படி நடக்க நடக்க , அனைவரும் ஒரு சமநிலைக்கு வருகின்றனர் .இதையே தான் மார்க்ஸ்

"ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவெனில் வர்கப்பகமைகளை இது சுருக்கி எளிமையாக்கி உள்ளது .சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாய் ,எதிரும் புதிருமான இரு வர்கங்களாய்- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாய் -பிளவுண்டு வருகிறது "



ஒரு நேரத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில் , அனைவரும் ஏழை ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் சாதிகள் ஒழிக்கப்பட்டு ,அனைவரும் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வார்கள் .

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முத்திரையை கிழிதெறிந்து ,குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுற செய்தது .


எவ்வளவு ஆத்ரசமான வரிகள் . இப்படி அந்தப்புத்தகத்தை சொல்லிக்கொண்டே போகலாம் . கழிசடை புத்தகங்கள் எல்லாம் அதிக விலையில் விற்கும் பொழுது இதன் விலை பதினைந்து ரூபாய் தான் . சென்னையில் கீழை காற்று மட்டும் NCBH இல் கிடைக்கிறது . வரிக்கு வரி இக்கால சூழலோடு பொருத்தி பார்த்து சொல்ல முடிகறது , அது தான் மார்க்ஸ் அவர்களின் பலம் , மார்க்சியத்தின் பலமும் அதுவே .