
அங்காடித் தெரு பார்த்தேன் முதலில் வாழ்க்கையை பதிவு செய்த வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் படத்தில் சில கேள்விகள் இருக்கிறது . படத்தின் மைய்ய கருத்து வந்த இடம் "யானை வாழ்ந்த இடத்தில தான் எறும்பும் வாழுது" என்ற ஒரு கருத்து வரும், அது சாத்தியாமா????? பெப்சி கோக் முன்னால் நம் நன்னாரி சர்பத் நிக்குமா ????? எனக்கு தெரிந்து ஒரு கடைக்காரர் ரிலையன்ஸ் பிரெஷ் வந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஏன் யானை இருக்கும் பொழுது எறும்பு வாழலாம் அடிமையாக மட்டுமே . ஏன் வெளியூர்க்காரர்களிடம் உள்ளூர் வியாபாரிகள் போட்டி போடமுடியவில்லை .
வேண்டுமென்றால் செல் போன் கவர் சீடீ கவர் எல்லாம் விற்பனை செய்யலாம் ஆனால் முதலாளிக்கு போட்டியாக கடை எல்லாம் வைக்க முடியாது என்பது தான் எதார்த்தம்.
சரி கதாநாயகியின் கால் ஊனம் ஆகிறதே அந்த காட்சி வலுக்கடயமாய் திணிக்கப்பட்டது போல் உள்ளது அந்த காட்சி அப்படி காட்டப்பட்டதால் இன்னொரு பிரச்சனை உள்ளது . கிராமத்தில் ஏன் மக்கள் புலம்பெயர்ந்து சிமெண்ட் தொழிலாளர்கள் ஆனார்கள் , ஏன் அவர்களுக்கு வீடில்லை என்ற கோணத்தில் காட்டாமல் அவர்கள் பிரச்சனை விளக்காமல் ,கதாநாயகி கனி அங்க தங்க நேர்கிறது அப்பொழுது கால் போகிறது என்ற இடத்தில் உண்மை நிலவரம் இரண்டாம் பட்சமாகி காதல் திணிக்கப்பட்ட அனுதாபம் பிரதனமாகிறது. ஏன் இயக்குனர் அந்த தெருவில் உழைத்தே முன்னேறும் படி காட்டி இருக்கலாமே???? ஏன் கால் போனால் தான் கதையில் அழுத்தம் வருமா என்ன????
இந்த அங்காடி தெருவில் நடப்பது ஓரளவு உண்மையே என்றாலும் அண்ணாச்சிகளை விட அம்பானிகள் மோசமானவர்கள் என்ற கண்ணோட்டம் படத்தில் இல்லை. சரி நாம் எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிராண்ட் சட்டை சூ தயாரிக்கும் எல்லா இடத்துலயும் இதே நிலைமை என்பதே உண்மை. உலெகெங்கும் எங்கெல்லாம் முதாலாளித்துவம் உள்ளதோ அங்கெல்லாம் இதே நிலைமை. nike Gap Walmart போன்ற நிறுவனங்களில் குழந்தைகள் அடிமைகள் போல நடத்த படுகிறார்கள். கடுமையான சுழல் குறைவான சம்பளம் அதிக நேரம் வேலை இவை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. வால்மார்டில் வேலை செய்யும் ஒரு பெண் சொல்கிறாள் வேலையில் சிறு தவறு இருந்தாலோ இல்லை வேலை செய்யும் இடத்தை பற்றி அந்த பெண் குறை சொன்னாலோ அவர் கடத்தப்படுவார் என்று மிரட்ட படுகிறாள். மேலும் ஒழுங்காக வேலை செய்யாதவர்களை இரும்பு கம்பியால் அடிக்கிறார்கள் என்று அந்த பெண் சொல்கிறாள்.
ஒரு பெண் கருவுற்றால் கட்டாயம் கலைக்க வேண்டும் இல்லை என்றால் அவள் கடத்த படுவாள். காசு கொடுத்து தான் வெளியே வர முடியும். எலித்தொல்லைகள் அதிகம் இருக்கும் வீடுகளில் மிக குறைந்த இடத்தில் அனைவரும் தங்கவைக்க படுவார்கள் . வால்மார்டிலே பத்திலிருந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டுமாம் , ஒரு நாள் கூட ஒய்வு என்பது இல்லை. ஒரு நாளுக்கு வெறும் 20 டாலர் சம்பளத்திற்கு. அங்கு வேலை செய்பவர்கள் காதல் கல்யாணம் என்றால் கடத்தப்பட்டு கொடுமை படுத்த படுவார்கள். 12 மணி நேரம் வேலை பார்த்தாலும் வெறும் 8 மணி நேரத்திற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும். அதிக நேரம் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது கட்டாயம் வேலை செய்யவேண்டும். அந்த பாக்டரி இடத்தில் 100 டிகிரி தட்பவெட்பம் இருக்கும் குறைந்த அளவே குடிநீர் இருக்கும்.
வேலையில் சிறுதவறு இருந்தால் அந்த பொருள் மூஞ்சியில் வீசப்படும். மேலும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்ப்படுத்தபடுவார்கள் , supervisor கூட படுக்கவில்லை என்றால் அவ்வளவுதான் . nike கம்பெனியிலும் இதே கதி தான் ஒரு பெண் ஒரே ஒரு நாள் தன் தங்கையை பார்க்க சென்றதால் துன்புறுத்தபட்டாள். வேலை செய்யும் பொழுது ஒரே ஒரு முறை தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் ஒரு நாளில். மேலும் வேலை செய்யும் இயந்திரங்களால் ஒருவர் இறந்துள்ளார் ஒருவர் கை போய் உள்ளது மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர்.
Honduras என்னும் இடத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் கையால் பாய் செய்ய கூட்டி வரப்படுகிறார்கள் Houndrasil கட்டாயம் கருக்கலைக்க பெண்கள் மாத்திரைகள் எடுக்க வேண்டும் ஏன் என்றால் maternity லீவ் தரவேண்டுமே. இன்னும் நமக்கு தெரியாத மிகபெரிய முதலாளிகள் எல்லாம் இருக்கிறார்கள். நமக்கு தெரியாமல் வரலாற்றில் பதியப்படாமல் எத்தனையோ தொழிலாளி கதைகள் இருக்கின்றன .வெற்றி பெற்றவர்களை பற்றி மட்டுமே உலகம் பேசுகிறது. அப்படி பார்க்கும் பொழுது அங்காடி தெரு குறைகள் இருந்தாலும் நல்ல பதிவே.