Thursday 29 December 2011

பச்சை மஞ்ச வைட் தமிழன் டா

"தமிழா தமிழா நாளை நம் நாளே " ,
"தமிழ் என்றால் நானொரு தமிழன் டா "
"அழகிய தமிழ்மகன் நீ தானே "
என்னும் சொல்லும் பச்சை மஞ்ச வைட் தமிழர்கள் நிஜத்தில் அட்டை கத்தி வீரர்களாகவே இருக்கிறார்கள் .
முல்லைப்பெரியார் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள விவசாய வாழ்வாதாரமே அழிந்து கொண்டிருக்கிறது அதற்கு குரல் கொடுக்காத தலைவர்,
இப்பொழுது முற்ப்போக்கு முகமுடிக்கு சூப்பர் ஸ்டார் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறார் .
தேனீ, மதுரை பக்கம் தலைக்கு ரசிகர்கள் அதிகம், மக்கள் பணம் மட்டுமே முக்கியம் எக்கேடு கேட்டால் என்ன என்று தல சிங்கபூர் சென்றுள்ளார்
புத்தாண்டு கொண்டாட.விளம்பர வியாபாரி சூர்யா, அன்னா ஹசாரே அவர்கட்கு ஆதரவு தெரிவிக்கும் சூர்யா ,"உலக தமிழர்களின் வெற்றி" என்று ஆர்பரிக்கும் சூர்யா , இதற்கு குரல் கொடுக்கவில்லை. நாளைய முதலவர் விஜய் அவர்கட்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் அவர் வாய் திறக்க மாட்டார்
கொஞ்சம் மேலோட்டமாய் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தமிழர்கள் வெளிநாட்டிலே பார்த்தால் மட்டுமே படம் ஓடும் , அதனால் அங்கே தமிழனுக்கு ஆதரவு , இங்கு கேரளாவில் படம் ஓட வேண்டும் , கேரளா ரசிகனை பகைத்து கொள்ள முடியாது அதனால் இங்கே வாய் திறக்க கூடாது.இப்படி
பிழைப்புவாதியாய் இருக்கும் நடிகர்களுக்கு CUT OUT தோரணம் , பால் அபிஷேகம் .நீங்க கேட்கலாம்
அவங்க அவங்க வேலைய பார்க்குறாங்க படத்த மட்டும் பாருங்கன்னு ?
கலைத்துறை என்பது வியாபாரம் சார்ந்ததல்ல மக்கள் சார்ந்தது,மக்களின் பிரச்னையை மைய்யபடுத்தி பேசுவதே
கலை, அவனே கலைஞன்.

Wednesday 21 December 2011

கீதா சாரம் வாழ்வின் சாரமா

ரஷ்யாவில் கீதையை தடை செய்யவேண்டும் என்று ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. கீதையை தடைசெய்யகூடாது
என்று இங்குள்ள RSS பா ஜா க கும்பல் கூச்சல் போடுகிறது.அப்படி என்ன கீதையில் கருத்து உள்ளது.
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்."

இவ்வாசகம் பகவத் கீதையின் சாரம் .இவ்வாசகத்தை சமகாலத்துடன் பொருத்தி பார்ப்போம் .
ஈழத்தின் போரிலே மக்கள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது,பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டது
நன்றாகவே நடந்தது,குழந்தைகள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது,பஸ் பால் விலை ஏற்றப்பட்டது
நன்றாகவே நடத்தது,பரமக்குடியில் தலித்துகள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது.நாளை கூடங்குளம்
அணுமின்நிலையம் வரப்போகிறது அதுவும் நன்றாகவே நடக்கும்.இப்படி போராடும் மக்களுக்கு
எதிராய் உள்ளது கீதை வாசகம்."எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?"
அதாவது வாழ்க்கையையே , அமைதியையே இழக்கலாம் , ஆனால் மக்கள் போராட்ட உணர்வு மங்கிப்போய்
இந்த கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டு,கடவுள் இருக்கிறார் நாம் எதையும் இழக்கவில்லை என்று மனதை
தேற்றி கொண்டு, போராட்ட உணர்வையும் நீர்த்து போக செய்ய வேண்டும். கடவுள் என்ற உணர்வு வெறும் மூட நம்பிக்கையாய் இருப்பது கூட பிரச்சனை அல்ல,அது போராடும் மக்களை நீர்த்து போக செய்வதால் பிரச்சனையே. பிரச்சனைகள் சூழ்ந்த மக்களை போராட வழிசெய்யாமல் அவர்களை நீர்த்துப்போக செய்வதால் இது சுரண்டுபவனுக்கு ஆதரவாய் இருக்கின்றன. கடவுள் என்ற பாத்திரமும்,கடவுளின் கருத்துக்களும் என்றுமே ஆளும் சுரண்டும் மக்களுக்கு பேராதரவாய் இருந்திருக்கின்றன.இறுதியாய் இறைவன் மனித ரூபத்தில் வந்து இறுதியாய் காப்பான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது, மக்கள் போராடாமல் இறைவனுக்காய் காத்து கொண்டிருக்க வேண்டும்.

Tuesday 20 December 2011

"ஏழாம் அறிவு" உணர்வுகளை கொன்று கல்லா கட்டுவது

"இது உலக தமிழர்களின் வெற்றி", "இது மக்களின் வெற்றி " இவ்வாக்கியங்களை பார்த்தவுடன் தமிழ்கள் ஏதோ ஈழம் கிடைத்து விட்டது, இல்லை முல்லைப்பெரியார் அணை பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று நினைத்து விடவேண்டாம். இது ஏழாம் அறிவின் விளம்பரங்கள். ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு IT துறையில் வேலை செய்த பெண் மற்றொரு பெண்ணிடம் "எந்த படம் டீ பார்த்த " என்று கேட்க மற்றொரு பெண் "வேலாயுதம்" என்று சொல்ல, அதற்கு இந்த பெண் கடும் சீற்றம் கொண்டாள் "போயும் போயும் விஜய் படமா பார்ப்ப,நான் ஏழாம் அறிவு பார்த்தேன் டீ செம மெசேஜ்,அப்படிப்பட்ட படம் தான் நான் பார்ப்பேன் "என்றாள். ஓரளவு இவர்கள் கொடுத்த விளம்பரங்கள் மக்களை சென்றடைந்து, இது தான் கலை இதை பார்க்காதவன் தமிழன் அல்ல,என்ற மாயை உருவாக்கபடுகிறது.

வலைபூக்களை மேய்ந்த பொழுது ,அனைவரும் தமிழ் பெருக்கெடுத்து கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் என்றார்கள்.முருகதாஸ் வரலாற்றை திரித்து சொல்லிவிட்டார் என்று சில விமர்சனங்கள் வந்தன. நமக்கு வராலாறு தெரியாது ,போதி தர்மர் யாரென்றே தெரியாது.ஆனால் புத்த மதம்,பார்பநீயதிற்கு எதிராய் இருந்தது,களப்பிரர் காலகட்டத்திலே மக்கள் முற்ப்போக்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள் என்பதை படித்ததுண்டு.ஆனால் வரலாற்றின் தொடர்ச்சியிலே பார்ப்பனர்கள் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள்
துணை கொண்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.அப்படி இருக்க போதி தர்மன் பல்லவ மன்னனாய் இருந்திருந்தால் கூட புத்த துறவியாய் மாறியிருக்க வேண்டும்.அதனாலேயே துரத்தப்பட்டு இருக்க வேண்டும்.போதி தர்மன் ஏன் தான் பிறந்த மண்ணில் அக்கலைகளை சொல்லித்தரவில்லை, என்பதையும் வரலாற்று காலகட்டத்தையும் கொஞ்சம் சேர்த்து பார்த்தாலே புரியும் .

இப்படி சமணர்களையும்,புத்த மதத்தை தழுவியவர்களையும் விரட்டி அடிக்கப்பட்ட
காலத்தில் போதி தர்மர் சீனாவுக்கு சென்று இருக்ககூடும்.போதி தருமர் பற்றி இணையத்தை
புரட்டும் பொழுது அவர் ஒரு ஜென் துறவி என்று தெரிந்தது .அப்படி படம் எந்த ஜென் தத்துவத்தையும் சொல்லாமல்,அவர் ஜென் துறவி என்று கூட சொல்லாமல்?அவரை வெறும் கனல் கண்ணன் போல குங்குபு மாஸ்டர் போல காட்ட வேண்டிய அவசியம்?இயக்குனருக்கு எதை காட்டினால் கல்லா கட்டமுடியும் என்று தெரிந்திருக்கிறது .மேலும் புத்த தத்துவத்தை பார்பநீயத்துக்கு எதிராய் காட்ட முடியாது?என்ன டா எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம் என்று சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்?என் விமர்சனத்தை காப்பாற்றவே இயக்குனர் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீடு என்கிறார்.இப்படி அடிவருடியாய் இருக்கும் இயக்குனரால் ஜென் தத்துவத்தை காட்ட முடியாது.


ஈழ பிரச்னையை அங்கங்கு தொட்டுவிட்டு செல்கிறார் இயக்குனர்,அதனால் இயக்குனரை முற்போக்காய் கருத வேண்டாம்.இலங்கையில் அவ்வசனத்தை வெட்ட வேண்டும் என்று சொன்னவுடனேயே வெட்டி விட்டு தான் ஒட்டி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் நமக்கு கல்லா ஈழ தமிழர்களே என்பதை தெரிந்து வைத்துள்ளார் இயக்குனர்.யாரை கதாநாயகனாய் போட்டு எடுத்துருக்கிறார்,ரத்த சரித்திரம் என்னும் படம் வந்த பொழுது , அதற்க்கு எதிர்ப்பு
கிளம்பிய பொழுது,நிருபர்களின் கேள்விக்கு பதில் சொன்ன விளம்பர விரும்பி சூரியா "ஈழம் அதெல்லாம் முடிந்து போன பிரச்சன "என்று சொன்னவர் வாயினாலே தமிழர்களின் பெருமையை சொல்கிறார் இயக்குனர். இதை தயாரித்தது என்னவோ சோனியா காந்தி கூட்டணியில் இருக்கும் , ஈழ மக்களை கொல்ல தமிழகம் வழியாய் ஆயுதம் கொண்டுபோன
பொழுதும் அறியாத ,இரண்டு மணிநேரம் உண்ணா விரதம் இருந்த கலைஞரின் பேரன் உதய நிதி தயாரிப்பில் படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் .

அப்படத்தை வெளியிட்ட நாள் அதைவிட சிறப்பு ,தீபாவளி பண்டிகையை சமண மத நிறுவுனர் மகாவீரர் நினைவுநாளை வெற்றியாய் கொண்டாடுகிறது இந்து மதம் .சமண மதமும்,புத்த மதமும் மக்களை அறிவுடையவர்களாய் ஆக்கியது,திரும்பவும் பார்ப்பனர்கள் வென்றார்கள் , தீபாவளி ஒரு வெற்றிகொண்டாட்டம் .அவ்வெற்றி கொண்டாட்டத்தில்
ஹாப்பி தீபாவளி என்று சொல்லிக்கொண்டே வந்தது "ஏழாம் அறிவு " தமிழ் மக்களுக்கு "ஐந்து அறிவுதான் இருக்கிறது "கல்லா கட்டி விடலாம் என்று நினைத்து கொண்டே.

பின் குறிப்பு :
இதை இப்ப எழுத காரணம், நண்பர் மதி சுதா பதிவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை முற்போக்கு படம் என்று நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு,என்னாலான ஒரு சிறு பதிவு.

சினிமாவில் ஈழத்திற்காக பேசும் நாயகர்கள்,முல்லைப்பெரியார் பற்றி பேசுவார்களா?கேரளத்தில் தமிழ் படங்கள் கொண்டாடப்படுகிறதே.முருகதாஸ் சூர்யா சத்தத்தையே காணும்

Monday 19 December 2011

பிரபல பதிவர்

பிரபல பதிவர்
பழைய நினைவுகளை
எழுதும் பொழுது ஆட்டோகிராப்
சேரன் ஆனேன் ,
காதல் கவிதை
எழுதும் பொழுது 'தபு ஷங்கர்'
ஆனேன் ,
சமூக படைப்புகள் , விமர்சனங்கள்
எழுதும் பொழுது மார்காசாய் நினைத்துக்கொள்வேன் ,
FACEBOOK ,TWITTER மூலம் புரட்சி
சாத்தியம் என நினைத்துக்கொள்வேன் ,
பஸ்ஸில் இடிப்பவனை எதிர்க்காத நான்
பெண்ணியம் பற்றி எழுதுவேன் ,
ஏன் இப்படி என்று வினவினால் ?
ஒரு எழுத்தாளன் சாட்சி மட்டுமே என்று மழுப்புவேன் ............
தோழர் போராட வாருங்கள் என்றால் ,
"SORRY பாஸ் எனக்கு லீவ் இல்லை என்பேன் " ,
நான் போராட்டத்திற்கு தயார் ,
போராடும் இடம் மெரினாவாக இருக்க வேண்டும் ,
SUNDAY EVENING ஆக இருக்க வேண்டும் ,
மெழுகுவர்த்தி வேண்டும் ,
கண்டிப்பாய் ஊழலை ஒழிக்க முடியும் ,ஈழத்தை
மீட்க முடியும் , மனிதகுல விடுதலை அடைய முடியும் .

Sunday 18 December 2011

ஐயப்பன் முல்லை பெரியார் பிரச்னையை தீர்த்து வைப்பாரா ?

ஊரே பற்றி எரியும் போது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன். ஊரில் ஒரு ஆன்மிக பக்தன் இருந்தானாம் , எப்போது
பார்த்தாலும் பூஜை புனஸ்காரம் தானாம் . ரொம்ப அமைதியாவே இருப்பானாம் . ஊர்ல ஏதாவது பிரச்சனை நடந்தா கூட ,ரோட்ல ரெண்டு பேரு வெட்டிக்கிட்டு செத்தா கூட , அந்த வழில போகாம வேற வழில கோவிலுக்கு போவானாம் . பக்கத்து வீட்டுக்கும் இவங்க வீட்டுக்கும் குழையடி சண்டை வந்துச்சாம் , பக்கத்து வீட்டம்மா இவங்க அம்மாவை தள்ளிவிட்டதுல இவங்க அம்மா மண்டை உடைஞ்சு போச்சு . பையன் வெளில வந்திருக்கான் ,அம்மாக்கு ரத்தம் தலைல வடுஞ்சுக்கிட்டு இருந்துச்சு , அவங்கள பார்த்து "எல்லாம் பகவான் பாத்துக்குவாரு" அப்படின்னு ஒரு அமைதியா ஒரு புன்னைகை புரிந்து , கோவிலுக்கு கிளம்பிட்டான் .கோவில விட்டு வீட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா நாக்கு புடுங்கற மாதிரி ஒரு வார்த்தை கேட்டாங்க "என்ன டா சாமி , நமக்கு வர பிரச்சனைய தீர்க்க போகுதா ?, ஒரு குழாய் அடி பிரச்சனைய கூட தீர்க்க முடியல என்ன டா சாமி ,
அம்மா அடிபட்டா கூட எல்லாம் கடவுள் செயல்னு அமைதியா இருக்கிற பைத்தியங்கள பக்தர்களா வச்சுருக்கிற சாமி என்ன டா சாமி ?" இதை எல்லாம் கேட்டுடிட்டு அவன் மந்திர புன்னகையோட அமைதியா ,தேஜஸா ஒரு வார்த்தை சொன்னானாம் ," அம்மா தேங்கா ஒடைக்கணும் கோவிலுக்கு , காசு இருக்கா " அப்படினானாம் , அம்மா கோவத்தோட "முதல்ல உன் மண்டையை உடைக்கணும்னு "சொன்னாங்களாம் .

தமிழ்நாட்டோட வாழ்வாதார பிரச்சனை முல்லைப்பெரியார் அணையா இல்லை சபரி மலையா ?????'
போர் குணத்தோட சில லட்ச மக்கள் போராடா? சில மக்கள் அடிவாங்கினாலும் பரவா இல்லை நாங்க
ஐய்யப்பன் தரிசனம் பார்க்காம வரமாட்டோம்னு அடம்பிடிக்கிறாங்க . கேரளா பா ஜா கா முல்லைப்பெரியார்
பிரச்சனையில் தமிழர்களை விரட்டும்பொழுது வாய் பேசாத தமிழக பா ஜா கா , சபரி மலையின் உரிமையை
விட்டுக்கொடுக்க முடியாது என்கிறது . ஐயப்ப பக்தர்களிடம் சில கேள்விகள்

1 ஐயப்பன் முல்லை பெரியார் பிரச்னையை தீர்த்து வைப்பாரா ?
2 முல்லை பெரியார் பிரச்னையை கூட தீர்த்து வைக்க வேண்டாம் , தன்னை நாடி வரும் பக்தர்களை
அடிவாங்காமல் வீடு திரும்ப ஏற்பாடு செய்வாரா ?

Friday 16 December 2011

பால் விலை ஏற்றத்திற்கு பதில் சொல்லுமா லோக்பால்

முல்லைப்பெரியார் மக்கள் எழுச்சி
தமிழகத்தில் இருந்து யாரும் ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று விஜயகாந்த்
சொல்வது தவறு, நமக்குள்ள உரிமையை யாரும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்கிறார் பொன் ராதக்கிருஷ்ணன்.தமிழக விவசாயியின் வாழ்வுரிமை இங்கு பாதிக்கப்பட்டிருக்க, வருடத்திற்கு ஒரு முறை போகும் ஐயப்பன் கோவிலை
பற்றி எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார், அதற்கு இன்னொரு தேசியக்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதே பா ஜா கா போன்ற தேசியக்கட்சிகள் அங்கொரு முடிவும், இங்கே
தமிழகத்தில் ஒரு முடிவும் எடுக்கின்றனர் .ஏன் இடதுசாரிக்கட்சிகள் விடயத்தை விஞ்ஞான பூர்வமாய் பார்க்காமல்,இனத்தின் கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர்,மார்க்சியவாதி
என்பவன் சர்வதேசியவாதி, விஞ்ஞான பூர்வ பார்வை கொண்டவன் , ஆனால் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு,கேரளாவில் ஒரு நிலைப்பாடு என்று எடுக்கிறது போலி இடதுசாரி கட்சிகள். ஒரே ஆறுதலான விடயம், ஏன் மகிழ்ச்சியான விடயம் மக்கள் தன் எழுச்சியாக போராடுவது.


பால் விலை ஏற்றத்திற்கு பதில் சொல்லுமா லோக்பால்
பஸ் பால் விலை ஏற்றியது சரி,அது எல்லாம் நட்டத்தில் ஓடுகிறது என்று சொல்கிற நண்பர்களுக்கு ஒரு செய்தி.ஆவின் பால் ஒன்று இரண்டு ஒன்றியங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் லாபத்திலே தான் செல்கின்றன,இதை ஆவின் பால் உற்பத்தியாளர்களே சொல்கிறார்கள்,கோவையில் வருடத்திற்கு பதினைந்து முதல் பதினேழு கோடிகள்
லாபம் பார்க்கிறது, இப்படி பால் விலை உயர்த்துவதால் யாருக்கு லாபம், தனியாருக்கு
மட்டுமே. இப்படி தனியாருக்கு தாரை வார்ப்பது ஊழலில் சேராதா? இந்த பால் விடயம் எல்லாம் ஊழலிலே லோக்பால் மசோதாவில் வருமா,அண்ணாவின்(அன்னா)
தம்பிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.

Wednesday 14 December 2011

அடுத்த முதல்வர் ரஜினிகாந்த்

முல்லைபெரியார் பிரச்சன எல்லாம் ஒரு பிரச்சனையா அதுக்கு போய் இவ்வளவு பேரு கூடிக்கிட்டு .எங்க தானை தலைவன் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழால கூடிச்சே அது கூட்டம் . முல்லை பெரியார் பிரச்சன தீரனும்னா எங்க தலைவன் ரஜினி முத்துராமன் சார் ,தாணு சார் சொன்ன மாதிரி முதல்வர் ஆகணும் , ஏற்க்கனவே ஷங்கர் முதல்வன் படம் நடிக்க கூப்பிடப்ப நடிக்க முடியல , அடுத்த முதல்வர் நு ஒரு படம் ஷங்கர் வச்சு பண்ணலாம் , கேமிராக்கு ரத்னவேலு மியூசிக் ரெஹ்மான் தம்பின்னு போட்டுடுலாம் , ரெலீசுக்கு இமய மல போய்டலாம் . நீயா நானல்ல கூட ஏன் முல்லை பெரியார் பிரச்சன பத்தி பேசாம ரஜினி பத்தி பேசறாங்க , ஏன் நா அடுத்த முதல்வர் தலைவர் தானே .


நாட்ல நடக்குற எந்த பிரச்சனைக்கு தலைவர் குரல் கொடுக்கல சொல்லுங்க . ஈழத்தமிழன்
சோகமா இருக்க கூடாதுன்னு தலைவர் லண்டன் பிரான்ஸ் கனடா எல்லா இடத்துலையும் படத்த ரிலீஸ் பண்ணி மக்களை சந்தோஷ படுத்துவாறு . அதே மாதிரி ஹொகேனக்கல் திட்டம் பிரச்சன வந்தப்ப ஏன் மன்னிப்பு கேட்டாரு , கர்நாடகால இருக்கற தமிழன் படம் பாக்குனும்ல அந்த நல்ல எண்ணத்துக்காக தான் மன்னிப்பு கேட்டாரு . அதே மாதிரி நாட்டுல மற்றம் வரும்னு வோட் போட்டுட்டு பேட்டி கொடுத்தாரு . அவர் வோட் போட்ட அம்மா , மக்களுக்காக பஸ் பால் வில எல்லாம் கூட்டிருக்காங்க , கரண்ட் இல்லாததால வீட்ட்ல எல்லாரும் மனம் விட்டு பேச முடியுது . பஸ் வில னாலா அல்லாரும் நடந்து போறாங்க ஹெல்தியா இருக்காங்க , இந்த மாதிரி அம்மாவ சொல்லிக்கிட்டே போகலாம் , இத அன்னிக்கே கனிச்ச சூப்பர் ஸ்டார் , நாட்ல ஒரு நல்ல மாற்றம் வரும்னார் , வந்திச்சா இல்லையா ? இப்படி அரசியல கனிச்ச சூப்பர் ,"அடுத்த முதல்வர் " படம் நடிச்ச மட்டும் பத்தாது , அடுத்த முதல்வராகவே ஆகணும் . எங்க அண்ணன் இளைய தளபதி எதிர்க்கட்சி தலைவர் ஆகணும் .

டென்னிஸ் போட்டி நடத்தும் ஏழை , WHITE BOARD பஸ்ஸில் பணக்காரன் புரட்சி தலைவியின் புரட்சி பாதை

கலை வேறு
----------------

'"உன் வாழ்கை உன் கையில் " உங்க கவித படிச்சேன் சார் ரொம்ப சூப்பர்
சார் ,ஜோசியம் ஜாதகத்த கிழி கிழின்னு கிழிசுருக்கீங்க சார் , உங்களுக்கு பாரதின்னு
பேர் வச்சது கரெக்ட் தான் சார் ' . என்று தனக்கு வந்த இன்கமிங் காலில் வாசகனின்
பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான் கவிஞன் பாரதி போனை வைத்த உடன் , உள்ளே இருந்து அவன் அம்மா "டேய் அந்த பொண்ணோட ஜாதகம் பக்காவா பொருந்தி இருக்காம் , என்ன டா சொல்ற " என்று கேட்டாள் ."ஜாதகம் பொருந்தி இருந்தா முடிச்சிடலாமா "என்றான் . பக்கத்தில் இருந்த நண்பன் "என்ன மாப்ள கவிதைக்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்ல " என்று கூறிய மறுநொடி "மாப்ள கலைய பாரு கலைங்கன பாக்காத " என்றான் புரட்சி கவி .

காதல் GATE
அவன் கல்லூரியிலேயே சிறந்த PROGRAMMER . ஜாவாவில் எட்டு போட்டு லைசென்ஸ் வைத்து இருந்தவன் ."டேய் பில் கேட்ஸ் எப்படி டா , I LOVE U டா " என்று எப்பொழுதுமே விரட்டிக் கொண்டிருப்பாள் அவன் பணக்கார வீட்டு மாமா பெண் . "FRESHERA இருக்கறப்பவே FIVE LAKH PER ANNUM கலக்கு டா பில் கேட்ஸ் I LOVE U " என்பாள் .

சில நாட்களுக்கு பிறகு
----------------------
"எனக்கு வேல போச்சு டீ , RECISSION அமெரிக்கால CLIENT BANK மூடிட்டாங்க ,வேலைய விட்டு தூக்கிட்டாங்க , கொஞ்சம் ரெண்டு மாசம் பொறு வேற COMPANIYA பாத்துக்கலாம் " என்றான் . அவள் பதில் எதுவும் பேசவில்லை ,வீட்டிற்கு வந்து தன் PROFILAI BHARATH MATRIMONIYIL பதிந்தாள் , குறிப்பாக " SOFTWARE ENGINEERS STRICTLY DONT APPLY " என்ற வாசகத்துடன் . அவன் காதலன் BILL GATESAI வீட்டின் GATE வரை கூட அனுமதிப்பதில்லையாம் .
ஜெய் அம்மா
----------------------------------------------------
அம்மா நட்டத்தில் உள்ளதால் பஸ் பால் விலை ஏறி இருப்பதாய் சொன்னார்கள் . ஆனால் சென்னையில் நடக்கும் டென்னிஸ் போட்டிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி , உலக திரைப்பட விழாவிற்கு இருபத்தி ஐந்து லட்ச நிதி . டென்னிஸ் போட்டி நடத்துபவனும் ,உலக திரைப்பட விழா நடத்துபவனும் மிகவும் ஏழை அதனால் தான் ஏழைகள் மீது பாரத்தை சுமத்தாமல் , பணக்காரர்களாகிய WHITE BOARD பஸ்ஸில் போபவர்களிடம் அம்மா பறிக்கிறார் , "நாலு பேரு நல்லா இருக்கணும்னா நாலு கோடி பேர் நாசமா போனா தப்பில்ல ", என்ன நான் சொல்றது

Thursday 1 December 2011

வால் மார்ட் ,பிணவறையில் உட்க்கார்ந்து சாப்பிட முடியுமா

சில்லறை வணிகத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் , அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .KRP செந்தில் போன்ற படித்தவர்களே , அந்நிய முதலீடு வந்தால் என்ன தவறு அவர்கள் வரி கட்டுவார்கள் , இங்கே சரவணா ஸ்டோர்ஸ் போல சொந்த ஜாதியிலேயே மக்களை வேலைக்கு அமர்த்தி கொத்தடிமை போல நடத்துகிறார்கள் ,இது அன்னியர்கள் முதலீடு செய்வதால் குறையும் என்று சொல்கிறார்கள் .சரி உண்மையில் வால் மார்ட் என்னும் நிறுவனத்தில் என்ன தான் நடக்கிறது . வால் மார்ட் உலகில் உள்ள நாற்பத்து ஆறு நாடுகளின் வறுமையை வைத்து தனது பசியை போக்கிகொள்கிறதாம். உதாரணமாய் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளை அதிக நேரம் வேலை செய்ய வைப்பது , கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் வேலை வாங்குவது , மாசமாய் இருக்கும் பெண்கள் வேலைக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று கருகலைக்க சொல்வது . ஒரு தொழிலாளி அவன் உரிமை வேண்டி எதிர்த்தால் அவனை கட்டம் கட்டுவது இப்படி நாற்பத்தாறு நாடுகளில் தன் கொடுங்கோல் ஆட்சியை நிறுவுகிறது வால் மார்ட் .

வால் மார்ட் மொத்தம் 102 டாலர் மில்லியன் கம்பெனி . அனைத்து பொருட்களையும் நம்ம ஊரு சரவணா ஸ்டோர்ஸ் போல மலிவான விலையில் கிடைக்கும் இடம் ,இது எப்படி சாத்திய படுகிறது , ஊழியர்களின் கடுமையான உழைப்பு , ஒரு நாளில் குறைந்தது பதினான்கு மணி நேர உழைப்பு , சில குழந்தைகள் 18 மணி நேரம் வேலை செய்வதினால் அங்கேயே படுத்து உறங்குகிறார்கள் . இது தான் இவர்கள் தரும் வேலையின் லட்சணம். 48 நாடுகளில் வால் மார்ட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளன . அத்தனை நாடுகளும் ஏழை நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் . அந்நாடுகளில் வறுமை தலைவிரித்து ஆடும் ,வேலை வாய்ப்பு மிகக்குறைவாய் இருக்கும் , அத்தகைய நாடுகளில் புகுந்தால் வேலை தருகிறேன் என்று சொல்லிவிட்டு கம்மியான கூலிக்கு சுரண்ட முடியும் , கம்மியான விலைக்கு விற்க முடியும் , சந்தையை காப்பாற்ற முடியும் இது தான் வால் மார்டின் தாரக மந்திரம் , வெற்றியின் மூலதனம் .

வால் மார்டில் வேலைசெய்வோறது வருட சம்பளம் 400 டாலராம் . அதாவது தோரையமாய் 20000 ரூபாய் . வால் மார்டில் அதிகமாய் பெண்களையும் குழந்தைகளையும் வேலைக்கு வைக்கிறார்கள். அவர்களை தானே மலிவான விலைக்கு வேலை வாங்க முடியும் . குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதில் வால் மார்ட் பங்களாதேஷிலும் , சீனாவிலும் மாட்டி உள்ளது . குற்றசாட்டு என்ன வென்றால் , மற்றவர்கள் வேலை செய்வதை விட அதிக வேலை குறைந்த கூலி கொடுக்கப்பட்டதாம் . சீனாவில் நாள் ஒன்றிற்கு இருபது மணி நேர வேலை , ஏழு நாட்கள் வேலை , குறைந்த கூலி , வேலை செய்தது குழந்தைகள் , கேட்கவே ரணமாய் தான் உள்ளது அல்லவா ????

நாமெல்லாம் அங்காடி தெரு பார்த்து விட்டு சரவணா ஸ்டோர்ஸ் கடையை திட்டிகிறோம் , உண்மையில் வால் மார்ட் கடையில் என்ன நடக்கிறது , சீனாவில் NIKE சூ தயாரிக்க குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் . கண்டிப்பாய் நூறு சூ தயாரிக்க வேண்டும் ,அதில் ஒரு சூ தவறாய் இருந்தாலும் அன்றைய
கூலி குழந்தைகளுக்கு கிடையாது இதுவே வால் மார்ட் நிலை . மூன்றாம் உலக நாடுகளில் வால் மார்ட் தொழிற்சாலைகள் ஆபத்தான தொழில்நுட்பத்துடன் தான் இருக்குமாம் , தண்ணீர் குடிக்க , ஒன்றுக்கு போக , இரண்டுக்கு போக கூட வழி இல்லாமல் தான் தொழிலாளர்கள் , கொத்தடிமையாய் இருப்பார்கள் .
படிக்கும் பொழுதே நம் அங்காடி தெரு போல நூறு மடங்கு பிரச்சனை இருக்கும் என்று தெரிகிறது .

இத்தனை பிரச்சனைகள் வால் மார்ட் என்ற ஒரு நிறுவனத்துக்கே இருக்கிறது , இப்படி சில்லறை வணிகத்தில் ஐம்பத்தி ஒரு சதவிகிதம் வந்தால் , இந்திய மக்கள் தொகை ஐம்பத்தி ஒரு சதவிகிதம் குறையும் என்பதில் ஐயமில்லை .நான் சொல்வதில் பிழை இருந்ததாக நினைத்தால் , WALL MART என்று இணையத்தில் அடித்து தேடிப்பாருங்கள் . நம்மிடம் இன்று பொருட்களை வால் மார்ட் எவ்வளவுக்கு விற்றாலும் காசு கொடுத்து வாங்க கூடிய வசதி இருக்கலாம் . அதனால்
நாம் HIPPY ஆங்கிலம் பேசிவிட்டு "IF FOREIGN INVESTORS COME ,SO வாட்" என்று கேட்கலாம் . பிணங்களின் மீது அமர்ந்து உண்ண முடியுமா???????

சில்லறை வியாபாரமும் , குஸ்புவின் விலைவாசி பற்றிய கூட்டமும்

நேற்று சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடு பற்றி கலைஞர் குறிப்பிடும் பொழுது " பொருளாதாரம் சுனாமீக்குள் சிக்கிக்கொள்ளும் " என்று சொல்லிவிட்டு ,இன்று கூட்டணி கட்சி அதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பேன் என்று தி மு க சொல்லி உள்ளது.அப்படி என்றால் கலைஞர் கூற்றின் படி மக்கள் முக்கியம் அல்ல கூட்டணி கட்சியான காங்கிரஸ் முக்கியம் , தேவை பட்டால் நாட்டையே கூட்டிக்கொடுக்கலாம் .
இப்படி வோட்டு கட்சிகள் மக்கள் முன்பு அம்மனமாய் இருக்கின்றனர் . அதில் இன்று தி நகரில் விலைவாசி உயர்வை பற்றி கூட்டம் போடப்போகிறார்கள் .விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குஷ்பு அதில் வீர உரை ஆற்ற உள்ளார் . இங்கு சிறு வணிகர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு , அங்கே விலைவாசி உயர்வை பற்றி பேசினால் தமிழக மக்களுக்கு புரியவா போகிறது . இருக்கவே இருக்கிறது இலவசங்கள் என்று கலைஞர் நினைத்து இருக்க கூடும் .

சில்லறை வணிகத்தை பற்றி நண்பர்களுடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ,அவர்கள் அதை வரவேற்றார்கள் .இதில் என்ன தவறு உள்ளது , வந்தா நல்லது தானே என்ற தொனியில் பேச்சுக்களை கொடுத்தார்கள் . நான் எனக்கு தெரிந்த அரசியல் மூலமாய் விளக்க முற்ப்பட்டேன் , பெப்சி கோக் இருவரும் எப்படி நாட்டில் உள்ள , பன்னீர் சோடா காளிமார்க் போன்ற வற்றை அழித்தார்கள் என்று விளக்கினேன் . பெப்சி கோக் வைத்து இருக்கும் கடைகளில் ஒரு FRIDGE இருக்கும் அதில் அவர்கள் பொருட்களே விற்பனை செய்யப்படும் , இவர்கள் கடைக்கு கொடுக்கும் பொழுது அந்த குளிரூட்டி இலவசமாய் கொடுக்கப்படும்
பின்பு அவர்கள் கடைக்காரர்களை மிரட்டுவார்கள் , எங்கள் பொருட்களை மட்டுமே விற்க வேண்டுமென்று . அந்த குளிரூட்டியில் பன்னீர் சோடா , போன்ற ஏனைய
பொருட்களை விற்க கூடாது என்று கடைக்காரர்கள் மிரட்டப்படுவார்கள் . அப்படி மற்ற குளிர்பானங்கள் அழிக்கப்படும் . நான் நாகப்பட்டினம் சென்ற பொழுது ஒரு கடையில் பன்னீர் சோடா கேட்டேன் அங்கு இல்லை ஆனால் பெப்சி இருந்தது என்பதே உண்மை நிலை .

மாப்பிளை விநாயகர் திரையரங்கிலே அவர்கள் சோடா விற்க முடியாது இதுவே இன்றைய நிலை , என்பதை விளக்கினேன் . மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் தண்ணீர் இலவசமாய் வழங்கப்படும் இல்லை குறைந்த விலைக்கு கொடுக்கப்படும் , மின்சாரமும் அப்படியே . ஆனால் அச்செலவுகள் சாமனிய மக்களின் சட்டை பையிலிருந்து உருவப்படும் .
இதனால் தான் நடக்கிறது விலைவாசி ஏற்றம் . இப்படி பெப்சி கோக் இவ்வளவு வேலை செய்தால் , வால் மார்ட் நம் சந்தையில் நுழைந்தால் ,சந்தை கைப்பற்றிவிட்டால் , அவர்கள் வைப்பது தான் விலை , அரசும் அவர்களுக்கு துணை புரியும் , விலைவாசி ஏற்றத்தை மக்கள் தலையில் கட்டும் .
இப்படி விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து , அதே நேரத்தில் சில்லறை வியாபாரத்தையும் ஆதரித்து வாக்களிக்க முடியுமா . அதை தான்
தி மு க செய்கிறது . அதிலும் குஷ்பு போன்ற வறுமையில் வாடுபவர் , தி மு க கட்சியில் இருந்து ஆரம்பம் முதல் போஸ்டர் ஒட்டிய தொண்டர் குஷ்பு பேசப்போகிறார் நானும் பார்க்க போகிறேன் .

Monday 28 November 2011

"பிச்சை எடுப்பதில் " அந்நிய முதலீடு


ஒரு ஊரு இருந்துச்சு , அங்க ஒரு சைக்கிள் கடை இருந்துச்சு ,அது ஊருக்காக இருக்கிற பொது மக்களுக்கான சைக்கிள் கடை . சைக்கிள் கடை நட்டத்துல போகுது ,அதனால அத நடத்த முடியலன்னு சொன்னாரு ஊர் பெரியவர்,அதனால ஒரு மணி நேரத்துக்கு சைக்கிள் வாடகையை பத்து மடங்கு ஏத்திட்டாரு. மக்கள் எல்லாம் கொதிச்சு போய் இருந்தாங்க .அந்த நேரத்துல பட்டணத்துல இருந்து ஒரு சைக்கிள் கடை வந்துச்சு ,அதுக்கு மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க .அப்புறம் ஊருக்குள்ள அந்த மக்கள் நிறைய பால் குடிப்பாங்க .பாலும் நட்டத்துல ஓடுதுன்னு பட்டணத்து காரங்கட்ட விட்டாரு . அப்புறம் வெளியூரிலிருந்து ஒரு பேங்க் ,ஊரு முன்னேற்றத்திற்காக கடன் தரேன்னு சொல்றான்னு சொன்னாரு ஊர் பெரியவர் . ஆனா ஒரு கண்டிஷன் போடறான் , ஊர்ல இருக்கற மலிக கடைக்கு போட்டியா மலிக கடை ஓபன் பண்ணனும்னு சொன்னாரு . மக்களும் கொஞ்சம் கடுப்போட ஏத்துக்கிட்டாங்க .
அந்த கோவில இருக்கிற பிச்சக்காரங்க பயத்துல இருந்தாங்க அவங்களுக்குள்ள என்ன பேசிக்கிட்டாங்கனா "ஏதோ பட்டணத்து வங்கி நம்ம ஊரு தலைவருக்கு காசு தருதாம் ,ஆனா இங்க பிச்சை எடுப்பதற்கு , அவங்க ஆளுகள
சேத்துகனுமாம்" அப்படினான் ஒருத்தன் . "அப்படியா இவங்க பேழரதுக்கு கூட போட்டிக்கு வருவாங்களா " அப்படினான் இன்னொருத்தன் .

Wednesday 23 November 2011

தல அமெரிக்காவின் கை கூலியா - நண்பர் பாலவுக்கு எதிர்வினை

"கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!

முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது....."

"தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே."

"கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்"


இது எல்லாம் என் நண்பர் பாலா பக்கங்கள் இணையத்தில் , சமீபத்தில் வந்த தல பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் .முதலில் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் , நான் 'தலையின்' தீவிரமான ரசிகன் ஒரு காலத்தில், தலையும் எனக்கு எதிரி அல்ல நண்பர் பாலாவும் எனக்கு எதிரி அல்ல , என் பதிவுகளை பத்து பேர் மட்டும் பார்த்த காலத்தில் கூட அதில் ஒருவர் பாலாவாக இருப்பார் . தொடர்ந்து மறு மொழி எழுதுவார் . அதனால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது , பாலாவை தூற்றுவதற்கு அல்ல , விமர்சனம் அவ்வளவே .

எனக்கு தலபடத்தில் உதவியாளர்களாய் வேலை செய்தவர்களை தெரியும் . தினமும் நூறு
ரூபாய் பாட்டா கூட கிடைக்காத தொழிலாளி . அனைவருக்கும் பிரியாணி போட்ட தல ,
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் தல , சினிமா உதவி இயக்குனர் அல்ல உதவி கேமரா
மென் என்றால் ,பாட்டா ஒழுங்காய் கிடைக்காது , அதை அவர்களுக்கு தல வாங்கிக்கொடுக்கலாமே அப்படி வாங்கிக்கொடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம் .நடிகருக்கு பதினைத்து கோடி தரும் சினிமா உலகம் , தொழிலாளியின் நூறு ரூபாய் பாட்டவில் தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிக்கும் பொழுது. இத்தனை கோடி ரூபாயில் ஒரு ஒரு லட்சம் செலவு செய்து , நாய்க்கு போடும் பிஸ்கட் போல போடுவதும் , அதை "தல போல வருமா " என்று புகழ்வதும் கண்டிப்பாய் அருவருப்பாய் தானே உள்ளது .

அந்த கட்டுரையில் நுட்பமாய் பார்த்தால் , ஒன்று புலப்படும் , தலையை விமர்சனம் செய்யவில்லை ,அதை மிகையாய் காட்டும் பதிவுலகத்தையும் , அந்த போலி மனிதாபிமானமே சிறந்தது என்று ரசிக்கும் ரசிக மனப்பான்மையே விமர்சிக்கப்பட்டது. நேற்று மாலை மலர் என்று நினைக்கிறேன் , அதில் ஒரு செய்தி 'விமான நிலையத்தில் அனைவரையும் கவர்ந்த தல '. அதாவது கணக்கெடுப்புகள் சொல்கிறது போல்
எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில் . பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் ஒருவர் மட்டுமே படுத்துறங்க முடியும் என்ற தேசத்தில் , ஒருவர் விமானத்தில் போக வசதியுடைய ஒருவர் வருசையில் நிற்கிறார் என்று பாராட்டினால் ,இயல்பாய் இருப்பவருக்கு கோபம் வரத்தான் செய்யும் . இதற்க்கு
முன்பு இப்படி தான் தல வாக்களிக்க வருசையில் நின்றார் . வருசையில் நிற்பது நல்ல விடயம் தான் , அவர் தலையாய் இருந்தால் " SO வாட்" ,அவரும் மனிதர் தானே , அதை வியந்தோதும் ரசிகன் "தலே லால லாலா " என்றும் "தல போல வருமா"
என்றும் கொக்கரிக்கும் பொழுது , அவன் ரசிக மனத்தை விமர்சிக்க வேண்டாமா , இது அஜித் பற்றி விமர்சனம் அல்ல , அந்த ரசிக மனத்தை , போலி மனிதாபிமானத்தை பற்றிய விமர்சனம் அவ்வளவே . அஜித் பற்றிய வினவு கட்டுரையை மீள் வாசிப்பு செய்யவும் .

நண்பர் எப்பூடி அவர்கள் தீவிர தல பேன் என்று நினைக்கிறேன் , அவர் முன்பு அஜித் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் . நானும் அஜித் வெறியனாக இருந்த காலத்தில் நண்பரின் கட்டுரையை AFE (AJITH FANS இயக்கம்) யாஹூ க்ரூப்ஸ் அதில் நண்பர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது நானும் என் நண்பர் ஊடகனும் , ஆனால் காலப்போக்கில் நான்
அரசியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் . நீங்களும் எப்புடியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி வாழ்க்கை வரலாற்றை படித்ததாக சொன்னீர்கள் . மார்க்ஸ் இயல்பிலேயே அனைவரிடமும் விவாதம் செய்யக்கூடியவர் ,எங்கெல்சும் அப்படியே .அவர்கள் நடுத்தர்வர்கத்தை "குட்டி பூஸ்வா" என்கிறார்கள் . இன்று வினவு தளம் அனைவரிடமும் விவாதம் (உங்கள் மொழியில்
சண்டை ) செய்வதை போல அவர்கள் அவர்கள் காலகட்டத்தில் ,நக்கலும் நையாண்டியும் அனைவரையும் விமர்சனமும் செய்தார்கள் .இன்று வினவு தளம் ஆயிரம் பேரிடம் விவாதம் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால் . மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களுக்கு
எதிராய் இருந்த அனைத்து கருத்துக்களுடன் போரிட்டனர் .பிற்போக்கு தனங்களை கடுமையாய் விமர்சனம் செய்தனர் .பெர்க்லி பாதரியாருடன் அவர்கள் விவாதம் செய்கின்றனர் , எனக்கு தெரிந்த உதாரணம் கருத்துமுதல் வாதத்தை விட பொருள் முத வாதமே சிறந்தது என்பதை நிறுவ, கடவுள் இல்லை என்பதை நிறுவ , விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வைத்து , என் பொதுவுடைமை சிறந்தது என்று லெனின் ஒரு புத்தகம் எழுதுகிறார் .

MATERIALISM and EMPIRIO-கிரிட்டிசிசம்இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அனைவரிடமும் விவாதம் செய்கிறது . இது எங்கெல்ஸ் சயின்ஸ் பற்றி எழுதியதன் தொடர்ச்சி .
இவர்கள் எதற்காய் இந்த புத்தகங்களை எழுதுகிறார்கள் , அக்காலத்தில் இருக்கும் மத குருமார்கள் , மக்களை திசை திருப்ப . இவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி , பொதுவுடமையை விஞ்ஞான பூர்வமாய் நிறுவுகிறார்கள் .

அதே மார்க்ஸ் லெனின் மாவோ எங்கெல்ஸ் , அனைவருமே அவர்கள் கால கட்டத்தில் எதிரிகளை விமர்சனம் செய்யும் பொழுது நக்கல் நையாண்டி செய்கிறார்கள் . அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள் . மார்க்சின் குரு ஹெகெல் கூட இதில் இருந்து தப்பவில்லை .
விமர்சனமே செய்யாமல் எப்படி வளர முடியும் நண்பா .

அதில் நண்பர் பாலா கருத்துக்களை சொல்லலாம் ஆனால் கடுமையாக வசை பாடக்கூடாது என்கிறார். ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி பார்ப்பான் , டான்சே ஆடதேரியாது , குரல் நல்ல இருக்காது , நடந்துகிட்டே இருப்பான் , தொப்பை என்பது வசையா . இவ்வளவு மனிதநேயம் என்று சொல்லிக்கொள்ளும் அஜித் ஏன் சமூக பிரச்சனை என்றால் ஒதுங்குகிறார் , தன் படத்தில் வேலை பார்த்த சக ஊழியனுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அந்த கர்ண பிரபு கொதித்து இருக்க வேண்டாமா ????? அப்படி ஒண்ணுக்கும் ஆகாத வாழ்கையில் ,அந்த தொழிலாளியின் சம்பளம் பற்றி கேட்காமல் , பிரியாணி போடுவதை மட்டும் பாராட்டினால் , அந்த பாராட்டையும் , அந்த ரசிப்புத்தன்மையும் மட்டுமே விமர்சிக்கிறோம் .

பொதுவுடமையை எந்த புத்தகத்திலும் கற்க முடியாது , அது களவேலை . அதுவும் நண்பர்கள் இந்த பஸ் விலை ஏறின நேரத்தில் , மாதம் ௨௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ,வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால் நாமே நடுத்தர வர்க்கம்.முரண்பாட்டு தத்துவத்தில் தான் பொது உடமை தத்துவமே இருக்கிறது .

சுரண்டும் வர்க்கம் என்றால் ,சுரண்டப்படும் வர்க்கம் இருக்கும் . அதற்க்கு ஆதரவாய் இருக்கும் நடுத்தரவர்கத்தை வலிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது . நண்பா நான் எந்த கழிவிரக்க வார்த்தைகளையும் பிரயோகம் செய்யவில்லை . இது என் விமர்சனம் அவ்வளவே.
Bala pakkangal
vinavu

Sunday 20 November 2011

பஸ் பால் விலை ஏற்றம் குறித்து கார்ல் மார்க்ஸ்

இன்று விலைவாசி ஏறி இருக்கிறது . பேருந்துகளில் போக இரண்டு ரூபாய் வர இரண்டு ரூபாய் என்ற காலம் மலை ஏறி விட்டது . குறைந்தது இருபது ரூபாய் இல்லாமல் நாம் பேருந்தில் பயணம் செய்வதை நினைத்து கூட பார்க்க முடியாது . நான் மதுரையில் இருந்த நாட்களில் கூடையில் பழம் காய்கறி விற்கும் கிழவிகள் , LSS பஸ் ரேட் ஐம்பது பைசா கூட என்பதற்காய் , வெள்ளை போர்டு பேருந்துகளுக்கு கால் கடுக்க காத்திருப்பார்கள் .அப்படி இருந்த மதுரையில் இன்று இருப்பது வெறும் கதவு போட்ட வண்டிகளே . வெள்ளை போர்டு வண்டிகள் பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு எப்பொழுதாவது ஒரு பேருந்து வரும் . அடுத்த நிறுத்தத்திற்கு செல்லவேண்டும் என்றாலும் குறைந்த பஸ் கட்டணம் ஐந்து ரூபாய் என்ற நிலைமைக்கு வந்தாயிற்று .

என் தம்பி ஒருவன் வேலை தேடிக்கொண்டிருக்கிறான் , மாதம் 6௦௦ ரூபாய் பாஸ் வைத்துக்கொண்டு , சென்னையை சுற்றிவருவான் . அவனுக்காவது இங்கே வீடு உள்ளது . ஆனால் இங்கே தங்கி வேலை தேடும் எண்ணற்ற கீழ் நடுத்தர குடும்பத்தை
சேர்ந்தவர்கள் , பொருளாதார பின்னணி இல்லாதவர்கள் எப்படி மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்து பாஸ் எடுப்பார்கள் . ஒரு அனுபவதிற்காய் சென்னையில் பட்டினபாக்கத்தை சுற்றி திருந்தேன் , வீடுகள் எல்லாம் குடிசைகள் ,நடுதரகுடும்பங்கள் கோமான்கள் அங்கே சென்று பார்த்தால் உண்மையான வாழ்க்கை புரியவரும் , இந்த பக்கம் மரினா கடற்கரை அங்கு ஒரு விதமான வாழ்க்கை , அப்படியே கொஞ்சம் காலாற நடந்து போனால் வேறு ஒரு உலகம் . அப்படி இருக்கும் பின்னணியில் ஒருவன் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செலவாகிவிடுகிறது .


சரி ரூமில் இருக்கும் நண்பர்கள் இவ்விடயத்தை பற்றி விவாதிக்கும் பொழுது , அம்மா ரசிகர்கள் ஆகிய அவர்களால் அம்மாவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . "மக்கள் கொந்தளிக்கிறார்கள் " என்று கலைஞர் டிவி சொன்ன உடன் , "அப்படி ஒன்னும் வெளில தெரியல , இவங்களா அடிச்சு விடுறாங்க " என்று
சொன்னான் வருடம் லட்சகணக்கில் வாங்கும் கார் வைத்து இருக்கிற நண்பன் . அவன் பேருந்துகளில் செல்வதில்லை .வேறு மாநிலங்களில் விலை ஏற்றி இருக்கிறார்கள் , அவர்களும் அரசை நடத்த வேண்டாமா என்று சொன்னான் மாதம்
அறுபதாயிரம் வாங்கும் நண்பன் . இன்னொரு நண்பர் வருஷத்துக்கு BONUS கேட்கிறீங்க அப்ப போக்குவரத்து துறை நட்டத்தில் தான் போகும் , முதல்ல அதெல்லாம் கட் செய்ய வேண்டும் . என்று அரசியல் விளக்கம் கொடுத்தார் .

அவர்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை ,போக்குவரத்து கழகம் நட்டத்தில் செல்லவில்லை , விசிலடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகும் மாணவர்களே அதற்கு சாட்சி .அதே போல் SEZ சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கீழ் இருக்கும் தொழிற்சாலைகள் பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது ,அதுவும்
அடிமாட்டு விலையில் (எவ்வளவு என்ற புள்ளி விவரம் தெரியாது ) . நோக்கியா FOXCONN அந்த பிளான்டின் மொத்த செலவு 600 கோடி ரூபாய் , அதற்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் 750 கோடிகள். சாதாரண மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுக்கப்படவில்லை ஆனால் இவர்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது மின்சாரமும் தடையின்றி கிடைக்கிறது . இம்முரணை புரிந்து கொண்டால் , அரசு ஏன் இப்படி செய்ய முடிகறது என்பது புரியும் . லாபக்கணக்கை பன்னாட்டு முதலாளிகளிடம் கட்டும் அரசு நட்டக்கணக்கை மக்களின் தலையில் எழுதுகிறது .

சரி ரூம் நண்பர்கள் ஏன் அப்படி சிந்திக்கிறார்கள் , அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் இதை எல்லாம் சமாளித்து விடலாம் அதனால் அவர்களால் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியவில்லை . ஆனால் காலச்சுழற்சியில் நம் நடுத்தர குடும்பங்களும் , ஏழைகள் ஆகும் ,சுரண்டல் அதிகமாய் இருக்கும் ,அடக்குமுறை அதிகமாய் இருக்கும் இன்று பத்தாயிரம் ,இருபது ஆயிரம் வாங்குபவர்களை கூட ஏழை ஆக்கும் அரசு , நாளை அறுபது ஆயிரம்
வாங்குபவனை ஆக்கும் பொழுது , இவர்களால் இதே கருத்தை சொல்ல முடியாது . அமெரிக்காவில் WALL ஸ்ட்ரீட் மக்கள் இறங்கி போராடுகிறார்கள் . இது எப்படி சாத்தியம் ஆயிற்று . புத்தகங்கள் சொல்லிக்கொடுக்காத அரசியலை புறநிலை எதார்த்தம் சொல்லிக்கொடுக்கும் . அதுவே அங்கு நடந்தது .

சரி இம்மாதிரி அனுபவங்கள் நமக்கு சூழல் கற்றுக்கொடுக்கிறது , ஆனால் இதே விடயங்களை ௧௮௪௮
வந்த ஒரு அரசியல் புத்தகம் சொல்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அந்த புத்தகத்தின் பெயர்
மார்க்ஸ் எங்கெல்ஸ் அளித்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை " . அந்த புத்தகத்தில் இருந்து சில வரிகள்

* வரலாற்றில் முந்திய சாகப்தங்களில் அநேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைவு இருக்க காண்கிறோம் (இந்த பன்மடிப்படிநிலை இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பு ,கிராம வாழ்கையில் இருக்கும் அந்தஸ்து , அனைவருக்கும்
மேலே நிலப்பிரபு .முதலில் பார்ப்பனர்கள் ,அதற்கு அடுத்த நிலை ஆதிக்க சாதியினர் , அதற்கு அடுத்த நிலை பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் ,


கிராம வாழ்க்கையிலிருந்து முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறும் பொழுது .
இங்கு சென்னையிலே சாதி என்பதை பார்க்காமல் அனைவரும் ஒரே தொழிற்சாலையில்
வேலை செய்ய வேண்டும் ,சாதியால் பிளவு படும் வர்க்க அமைப்பு , தொழில் முறையால் வாழ்க்கை முறையால் ஒன்று படுகிறது . இன்று அம்மா தனி தனியாய் சாதி பார்த்து வேலை ஏற்றம் செய்ய முடியாது , நாளுக்கு நாளாய் வாழ்க்கை தரம் குறைய குறைய , தொழிலாளி உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் ஒரே விதமான சிக்கல் வருகிறது , விஞ்ஞான ரீதியாகவே அவர்கள் ஒன்று கூடுகிறார்கள் .

வாழ்க்கை முறை மாறும்பொழுது , நடுத்தர வர்க்கம் கூட ஏழை ஆகிறது , ஒரு தொழிலாளி வாழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . பணம் ஒரு பக்கமே குவிகிறது ,அதனால் UPPER MIDDLE CLASS MIDDLE CLASS ஆகிறது middlE CLASS ஏழைகள் ஆகின்றனர் . இப்படி நடக்க நடக்க , அனைவரும் ஒரு சமநிலைக்கு வருகின்றனர் .இதையே தான் மார்க்ஸ்

"ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவெனில் வர்கப்பகமைகளை இது சுருக்கி எளிமையாக்கி உள்ளது .சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாய் ,எதிரும் புதிருமான இரு வர்கங்களாய்- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாய் -பிளவுண்டு வருகிறது "



ஒரு நேரத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில் , அனைவரும் ஏழை ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் சாதிகள் ஒழிக்கப்பட்டு ,அனைவரும் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வார்கள் .

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முத்திரையை கிழிதெறிந்து ,குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுற செய்தது .


எவ்வளவு ஆத்ரசமான வரிகள் . இப்படி அந்தப்புத்தகத்தை சொல்லிக்கொண்டே போகலாம் . கழிசடை புத்தகங்கள் எல்லாம் அதிக விலையில் விற்கும் பொழுது இதன் விலை பதினைந்து ரூபாய் தான் . சென்னையில் கீழை காற்று மட்டும் NCBH இல் கிடைக்கிறது . வரிக்கு வரி இக்கால சூழலோடு பொருத்தி பார்த்து சொல்ல முடிகறது , அது தான் மார்க்ஸ் அவர்களின் பலம் , மார்க்சியத்தின் பலமும் அதுவே .

Saturday 25 June 2011

சாரு ( CHA ரூ )

சாரு இலக்கிய சாரு , சாருவின் அடுத்த அடியாள் என்று எழுதிய நான் அதற்காக வெட்கப்படும் தருணம் இது .ப்ளாக் படிக்கவந்த புதிதில் இலக்கியமே தெரியாத புதிதில் , யாருமே வாசிக்காத புதிதில் ,நான் படித்தது அவர் மட்டுமே .பேருந்தில் நம் வீட்டு பெண்கள் யாரவது இடிபட்டால் , அவர்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் சொல்ல தயங்கி , சொல்லாமல்
இருப்பதால் ,ஐந்து நிமடத்திற்கு பிறகு சொல்லியவுடன் , நாம் நம் வீட்டு பெண்களிடம் " ஏன் தாமதமாய் சொன்னீர்கள் "என்று சொல்வோமா ? இல்லை உடனடியாக அந்த பொறுக்கியை அரைய பார்ப்போமா ? ஆனால் இணையத்தில் ஒரு இலக்கிய பொறுக்கி என்ன வேண்டுமானாலும் செய்வார் , ஆதாரத்துடன் பிடிபட்டுவிட்டார் .என்ன செய்ய முடியும்
அவர் சரி என்று சொல்ல முடியாத சூழல் , அடுத்து என்ன நடக்கும் அவரது ஆதரவாளர்கள் அந்த பெண்ணே அப்படி தான் என்று திசை திருப்புகிறார்கள் . இப்படி பேருந்தில் நம் வீட்டு பெண்களிடம் நடந்தால் நாம் திசை திருப்புவோமா .இல்லை அவர்களுக்கு தான்
சொம்பு தூக்குவோமா ?

சாரு பற்றி புரியாதவர்கள் இந்த கட்டுரைகளை படியுங்கள்

vinavu

agnipaarvai

tamilachi

Thursday 23 June 2011

ஒரு காதலி

ஒரு காதலி
எத்தனை காதல்

Sunday 24 April 2011

கோ

சனிக்கிழமை மதியம் "கோ" படம் பார்க்க நேர்ந்தது , படம் அரசியல் ரீதியான படம் , பத்திரகையாளர்கள் கதை இவை எல்லாம் படத்தை பார்க்க தூண்டியது . படத்தில் முதல் காட்சியிலேயே வெறுத்து போனேன் , நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடிக்கிறார்கள் , அதை பறந்து பறந்து போட்டோ எடுக்கிறார் நாயகன் , எனக்கு தெரிந்து நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடித்தது போன்று தெரியவில்லை , அவர்கள் மக்களை கொள்ளை அடிக்கிற பன்னாட்டு நிறுவனங்களையும் , அரசாங்கத்தயுமே எதிர்க்கிறார்கள் , எதோ வங்கி கொள்ளை பற்றி உலக சினிமாவை பார்த்து விட்டு இயக்குனர் அந்த காட்சியை சேர்த்து இருப்பாரோ என்று எண்ண தூண்டியது .பின்வரும் காட்சிகளில் போட்டோவை எடுத்து குமிக்கிறார்நாயகன் அது அரசியலையே புரட்டி போடுகிறது என்பது தான் கதை.

இது ஆகா சிறந்த அரசியல் படம் என்று சிலர் சொல்கின்றனர் உண்மையில் அப்படி தான் உள்ளதா .
முதலில் எதிர்க்கட்சி தலைவரின் பிம்பத்தை நாயகன் உடைக்கிறார் எப்படி உடைக்கிறார் நீங்கள் ஈழத்தமிழனை
காப்பற்றவில்லை , முல்லை பெரியாறு பிரச்னையை பேசவில்லை , அலைகற்றை ஊழல் பற்றி வாய் திறக்கவில்லை ,விலைவாசி உயர்வு பற்றி பேசவில்லை என்பது போல நினைத்தால் ஏமாற்றம் வரும் .அந்த தலைவர் ஜோசியத்தை
நம்பி ஒரு சிறு பெண்ணை மணமுடிக்க செல்கிறார் , அதை போட்டோ பிடித்து அவர் பிம்பத்தை உடைக்கிராராம் .
நாயகனுக்கு அந்த தலைவரை எதிர்க்க வலுவான கொள்கை காரணங்களே இல்லை , இப்படி போகிறது மக்கள் கொண்டாடும் ஆக சிறந்த அரசியல் படம் .


சரி அடுத்து முதல்வரின் பிம்பத்தை உடைக்க நினைத்த கதாநாயகன் , என்ன செய்கிறார் ஒரு நிருபரை முதல்வர்
செருப்பால் அடிக்கிறார் , அதை மட்டுமே படம் பிடித்துவிட்டு அவரின் அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு அடிக்கிறார் நாயகன் .மற்றபடி கொள்கை கத்திரிக்காய் எல்லாம் நாயகனுக்கு ஒரு பொருட்டே அல்ல . சரி இவர்கள் சொல்லும் வணிக ரீதியானநடுநிலை நாளிதழ் எங்கே உள்ளது , அதுவும் நாயகன் என்ன படம் எடுத்தாலும் , ஆளுங்கட்சியை எதிர்கட்சியை எதிர்த்தும் கட்டுரைகள் வருகின்றன , இது தமிழக சூழலில் எப்படி சாத்தியம் .

படத்தின் இறுதியில் நாயகன் நக்க்சல் இயக்க தலைவரிடம் "எல்லாரும் ஒன்னு வச்சுருப்பாங்க , அதே போல நீங்க எத கேட்டாலும் "ஒடுக்கப்பட்டவங்க " அப்படின்னு காரணம் சொல்வீங்க " என்பார் . இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களே இல்லையா என்ன ? சத்தீஸ்கர் தண்டகாரண்யா காஷ்மீர் வரலாறுகள் இயக்குனருக்கு தெரியாது போலும் . "எத்தன பேர உருவாகுறீங்க , காலேஜுல " என்று ஜீவா கேட்கிறார் . அதவாது மாணவர்கள் pub போவதோ , தண்ணி அடிப்பதோ பிரச்சனைகள் அல்ல , அரசியல் படிப்பது தவறு என்பதை போல காட்சி அமைந்துள்ளது . KV ஆனந்த் அவர்களே நீங்கள் சத்யம் theatre மக்களுக்காக படம் எடுப்பது தவறல்ல ,
ஆனால் நீங்கள் சம்பாதிக்க நக்சல் தான் கிடைத்தார்களா ?


சமகால அரசியல் படம் என்று ச்லகிப்பவர்கள் , அப்படி என்ன அரசியல் தான் பேசினார்கள் என்பதை தெளிவு படுத்த முடியுமா ? ஏன் முதல்வரை எதிர்க்கும் பொழுது கூட கொள்கை ரீதியாய் எதிர்ப்பு காட்டாமல் , கிள்ளிட்டான் அடுசுட்டான் என்பது போன்ற மொக்கை காரணங்களே காட்டப்படுகின்றன . "கோ" பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்லலாம் , ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய , ஊடக பத்திரிகை சுதந்திரத்தை பற்றி கூட பேசலாம் , ஒடுக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தலாம் .

Tuesday 29 March 2011

பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு சொல்றான் அவன நிக்க வச்சு சுடவேணாம மச்சி

"எனக்கு ரொம்ப tensiona இருக்கு "
"என்ன மச்சி நாகப்பட்டினம் போயிருந்தையா மீனவங்க எல்லாம் செத்துப்போறாங்க அதுக்கா மச்சி "
"இல்ல டா "
"நம்ம பணமெல்லாம் SPECTRUM மாதிரி ஊழலுல போகுதே அதுக்கா "
" மச்சி எனக்கு அரசியல் பிடிக்காது எவன் சம்பாதிச்சா எனக்கென்ன "
" சரி இந்த இலவசம் எல்லாம் தந்து மக்களை கேவலப்படுத்தாரைங்கள அதுக்கா , இல்ல தண்டகாரன்யாலா மக்கள் அடிச்சு விரட்டப்படரான்களே
அதுக்கா , ஒஹ் நீ தான் தண்டயர்ப்பேட்டைல எதாவது நடந்தாலே கவலைப்பட மாட்ட அப்புறம் என்ன டா டென்ஷன் "
"மச்சி இந்திய பாக்கிஸ்தான் மேட்ச் மச்சி , இந்தியா ஜெயிக்கணும் ஆபீஸ்ல ஒருத்தன் பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு சொல்றான் அவன நிக்க வச்சு சுடவேணாம மச்சி "

Tuesday 22 March 2011

பகத் சிங் நினைவு நாள் -வீர வணக்கங்கள்


போலிகளுக்கு நடுவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ."சச்சின்" பிறந்தநாள் நியாபகம் வைத்துகொள்ளும் நாம் , "பகத் சிங் " நினைவு நாளை , உண்மையான களப்போராளியின் நினைவு நாளாய் மறந்து கடந்து விடுகிறோம் . இன்று பகத் தூக்கிலிடப்பட்ட நாள் , வீர வணக்கங்கள் . உலகக்கோப்பையும் , போலி ஜனநாயகம் உருவாக்கும் தேர்தலையும் நம் சிந்தனையிலே ஒதுக்கிவைத்து விட்டு , பகத்திற்கு வீர வணக்கம் செய்வோம். அரைநாள் உண்ணாவிரதமும் , கொடநாட்டில் ஓய்வும் , திருமணமண்டபம் இடிக்கப்பட்டதால் அரசியலுக்கு வந்தவரையும் ,
லட்சம் கோடிகள் அடித்தவரையும் மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டில் , இருபத்தோரு
வாயதே ஆன ஒரு போர் வீரன் தூக்கு மேடையிலே முத்தமிட்ட நாள் . வீர வணக்கங்கள் .

Sunday 20 March 2011

கலைஞரின் "ஒரு ரூபாய்க்கு மது " திட்டம்

மக்களை தன்வச படுத்த எதிரிகளை துவம்ச படுத்த இலவசம் தேவைப்படுகிறது ."குழந்தைகளை சச்சின் ஆக்கும் திட்டம் " என்ற திட்டம் கொண்டுவரப்போகிறோம் , ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச பேட் பந்துகள் கொடுக்கப்படும் , ஒரு தெருவிற்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்கப்படும் , ஒளிவிளக்குகளில் ஆடுவதற்கு பயிற்சி கொடுக்கப்படும் , என் பிறந்த நாள் , தயாளு அம்மாள் பிறந்தநாள் , ராசாத்தி பிறந்தநாள் ,
கயல்விழி பிறந்தநாள் ,ஸ்டாலின் , அழகிரி ,துறைதயாநிதி , உதயநிதி , மாறன் , கயவிழி பிறந்தநாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் . இத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் பெயர் வைத்தால் , சச்சின் நான் ஆட்சியில் அமர்ந்தவுடன் எனக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா வழங்குவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் . நாட்டின் முக்கிய பிரச்சனை கிரிக்கெட் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்துகிறேன் .

இத்தேர்தலில் அடுத்த கதாநாயகி திட்டம் தாய்மார்களுக்காக , கணவர்கள் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு தெரு ஓரங்களில் விழுந்து கிடப்பதுண்டு , பெண்கள் கண்ணீரை பார்க்கமுடியாத நான் , வீட்டிற்கு வரும் மது திட்டத்தை செயல்ப்படுத்த உள்ளேன் .அதுவும் ஒரு ரூபாய்க்கு பீர் , ஐம்பது பைசாவிற்கு quater , தமிழ் நாட்டில் தலையாய பிரச்சனை குடித்து விட்டு ரோட்டில் விழுவது தான் என்று எழுத்துமேதை சாரு கூறி உள்ளார் ,
அதற்க்கு நம் குருஜியும் ஆதரவு தெரிவித்து buzz விட்டதால் , அவர்கள் துயர் துடைக்க வீட்டுக்கு வீடு டாஸ்மாக் திட்டம் , வீடு தேடி வரும் மது , ஒரு ஊறுகாய் பாக்கெட் ஒரு ரூபாய்க்கு வாங்க முடியாத நாட்டில் ஒரு ரூபாய்க்கு மது அதுவும் வீடு தேடி வரும் மதுவினால் அனைவரும் பயன் அடைவர் .
மனைவிமார்களும் கணவன் எந்த ரோட்டில் விழுந்து கிடக்கிறான் என்பதை பற்றி கவலை இல்லாமல் இனி கலைஞர் டிவியில் என்னுடைய பாராட்டு விழா நிகழ்ச்சியை பார்க்கலாம் .

இளைங்ர்களுக்கான திட்டம் வேணாமா என்று பேரன் துறை தயாநிதி கேட்டான் ? இளைஞன் படத்திற்கு வசனம் எழுதியவன் நான் இருக்கிறது பேராண்டி , தமிழகம் முழுவதும் தெருக்கு தெரு குட்டிசுவர்கள் வைக்கப்படும் ,அந்த சுவற்றில் உட்க்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளான கிரிக்கெட் , அசின் , எந்திரன் , முடிந்தால் இளைஞன் படத்தில் கலைஞரின் வசனம் போன்ற முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கலாம் . விவாதிப்பதற்கு அலுப்பு தட்டாமல் இருக்க நாள் ஒன்றிற்கு இரண்டு கிங்க்ஸ் சிகரட் இலவசமாகவும் , சுறுசுறுப்பாய் சுறாவளி
போல செயல்பட ஒரு அரட்டைக்கு இரண்டு கோப்பை தேனீரும் வழக்கப்படும் .

தி மு க ஆட்சியில் ஏரியவுடன் "கலைஞர் வெற்றிக்கு காரணம் இலவசமா சொல்வனமா " என்ற தலைப்பில் ரஜினி கமல் வாலி வைரமுத்து கனிமொழி தமிழச்சி தங்கப்பாண்டியன் நமிதா பிருந்தா ராஜா(spectrum ) ராஜா (பாப்பையா ) உரையாட சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படும் தீபத்திருநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் .

Wednesday 16 March 2011

மாதவராஜிடம் சில கேள்விகள்

"கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள் " என்ற மாதவாஜின் . அவரிடம் ஒரு எளிமையான பாமரனின்
கேள்வி

1 ஒரு திருடன் உங்கள் வீட்டை திருடுகிறான் , அவனை விட இன்னொரு திருடன் கம்மியாக திருடுவான் என்று வைத்துக்கொள்வோம் , இரண்டாம்
திருடனை துணைக்கு அழைத்து முதல் திருடனை ஒழித்துவிட்டு , இரண்டாம் திருடனுக்கு வழி விடுவீர்களா ?
2 communism இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வை காணச்சொல்கிறதா ? இது முதலாளிக்கான ஜனநாயகம் என்று தெரிந்தும் , இந்த அரசியல் முறையிலேயே
தீர்வு காணவேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் இல்லையா ?
3 இந்த வாக்குசீட்டு முறையிலேயே தீர்வு காண முடியும் என்று நம்புகிறீர்களா ?
http://www.mathavaraj.com/2011/03/blog-post_10.html

Sunday 6 March 2011

இதற்கு பின்பும் இரட்டை இலையை ஆதரிப்பாரா சீமான்

இரட்டை இலலைக்கு வாக்களித்தால் தான் காங்கிரஸ் தோற்கும் , என்று "நாம் தமிழர்" இயக்கத்தலைவர் சீமான் ஒரு பேட்டி ஒன்றில் சொல்லிருக்கிறார் ,ஆனால் டாக்டர் புரட்சித்தலைவியோ காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்கிறார் ,சீமான் இப்பொழுது என்ன சொல்வார் ?

படங்கள் நன்றி
"http://www.anburaja.in/"







Thursday 3 March 2011

பழங்குடியினரை பாலியல் வல்லுறவு செய்த தேவாரத்திற்கு வாழ்த்துக்கள்

பழங்குடியினரை பாலியல் வல்லுறவு செய்த தேவாரத்திற்கு வாழ்த்துக்கள்

காவல் நிலையத்தில் பத்மினியை கற்பழித்த சிதம்பரம் காவலர்களுக்கு வாழ்த்துக்கள்

வடகிழக்கில் பழங்குடி பெண்களை பாலியல் வல்லுறவு செய்த ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்

spectrum ராஜாவிற்கு வாழ்த்துக்கள்

காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விஜயகாந்திற்கு வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள் தெரிவிக்கும் பதிவுலகிற்கு வாழ்த்துக்கள்

பச்சையப்பன் கல்லூரி தொப்பி தொப்பியிடம் சில கேள்விகள்

பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களை அடித்து நொறுக்கியதற்க்கு தொப்பி தொப்பி என்னும் பதிவர் வாழ்த்து
தெரிவித்து உள்ளார் .முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் போலீஸ் மக்கள் நலன் என்னும் நோக்கில் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா .அப்படி மக்கள் நலனுக்காக தான் அவர்கள் அடித்தார்கள் என்று தொப்பி தொப்பி உண்மையிலேயே சொல்ல முடியுமா ? பஸ் டே கொண்டாடுவதை பற்றி சொல்கிறீர்கள் , தென் தமிழகத்தில் தேவர் ஜெயந்தி நடக்கும் நாள் அன்று பார்த்து இருக்கிறீர்களா ? மதுரை ராமநாதபுரம் ரெண்டு படும் , மக்கள் அப்பொழுது பாதிக்கப்பட்ட பொழுது இந்த காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது . உள்ளே புகுந்து வக்கீல்கள் நீதிபதிகள் தாக்கப்பட்டரே , அடித்ததே போலீஸ் தானே ? வீரப்பனை பிடிப்பதற்கு சென்ற தமிழக காவல்த்துறை பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை எல்லாம் நினைவில்லையா ? தொப்பி தொப்பி . இத்தேசம் 1 76 000 கோடி திருடிய அம்பானி டாடாவை விட்டுவிட்டு ,பர்ஸ் திருடனை புட்டதிலேயே அடிக்கும் போலீஸ் கொண்ட தேசம் , நீங்கள் பார்த்தது இல்லையா . அப்படிப்பட்ட தேசத்தில் இருந்து வரும் போலீஸ் காவலன் தான் ஆனால் முதலாளிக்கு , ஆளும் வர்கதிற்க்கும் காவலன் . உண்மையிலேயே இவர்கள் ஒருநாள் பஸ் டே கொண்டாடிவிட்டு அமைதி ஆகிவிடுவார்கள் , உள்ளே ஓரசிக்கொண்டிருக்கும் பெருசைவிட படியில் தொங்கிக்கொண்டிருக்கும் கானா பாட்டு
பாடும் பையனால் பெண்களுக்கு தீங்கு கம்மியே . அப்படி இருக்க ஏதொ இது கொலைகுற்றம் போல அவர்களை அடிப்பது எல்லாம் ஜனநாயக படுகொலை , ஏன் இத்தனை வருடமாய் இதை கண்டிக்காமல் இப்பொழுது மட்டும் கண்டிக்கிறார்கள் . நியூ இயர் பொழுது பபுகளில் பெண்கள் சரக்கடித்து விட்டு ஆடுகிறார்கள் , அந்த பப்புகள் பெண்களுக்கு ஆபத்தானது தானே அதை இந்த போலிஸ் கேட்டுள்ளதா ?

போலிஸ் காவலன் தான் முதலாளிகளுக்கு , ஆள்பவர்களுக்கும் .

Wednesday 2 March 2011

அஞ்சா நெஞ்சர் அழகிரியும் அடிபொடிகளும்


மதுரை சுற்றி எங்கு பார்த்தாலும் மதுரை மன்னர் அழகிரியின் படமும், இளவரசர் துரை அவர்கள் தலைமையில் நடைபெறும் ஏதோ ஒரு திருமணம் சம்பந்தமான ப்ளெக்ஸ் நம்மை பார்த்து சிரிக்கும் . அதுவும் ஜனவரி மாதம் அஞ்சா நெஞ்சரின் பிறந்தநாள் வருவதால் கழக கண்மணிகள் இரண்டு அடிக்கு ஒரு ப்ளெக்ஸ் வைப்பர் . இதனால் பல லட்சம் பேருக்கு மறைமுகமாய் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று கலைஞர் சொல்லக்கூடும் . நாடோடிகள் படத்தில் ஒரு காட்சி அப்பொழுது தான் நடந்து முடிந்திருக்கும் அதற்குள் ஒரு ப்ளெக்ஸ் வைத்துவிடுவார்கள் அக்காட்சி அழகிரியை நியாபகப்படுத்தும் .

அனைத்து பிரபலங்களின் மூஞ்சியை அழகிரி மூஞ்சியாய் மாற்றி ப்ளெக்ஸ் வைப்பது வாடிக்கை . ரஜினி அஜித் விஜய் டோனி சச்சின் உடம்புகள் அழகிரி மூஞ்சிக்குள் சிரிக்கும் .தி மு காவின் "MAN OF THE மேட்ச்" போன்ற வாசகங்கள் அங்கிங்கே கண்ணடிக்கும் . கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் அவர்களுக்கே ப்ளெக்ஸ் வைக்கவில்லை , அண்ணன் துரை தயாநிதி கிரிக்கெட் ஆடுவதற்கு , அவர் மட்டையை வைத்துக்கொண்டு பெவிலியனில் அமர்ந்தது போன்ற ப்ளெக்ஸ் வைத்த ஊர் இது .

கழக கண்மணிகள் வராலாறு தெரியாமல் ப்ளெக்ஸ் வைத்து மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்துவதுண்டு .
சே குவேரா என்னும் மாபெரும் போராளியை அழகிரியுடன் ஒப்பிட்டு ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மதுரையில்
சே குவேரா ஒடுக்கும் மக்களுக்காக போராடினார் , வேறு வேறு தேசம் சென்று போராடினார் , அவரை பற்றி வரலாறு தெரியாமல் கூச்சமே இல்லாமல் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது . நான் மற்ற போஸ்டர்களை நகைச்சுவையாய் கடந்து சென்றதுண்டு , ஆனால் இது மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்தும் விதமாய் உள்ளது . ஒரு தடவை கூட பாராளுமன்றத்தில் பேசாத அழகிரி "அஞ்சா நெஞ்சராம் "கேக்கறவன் கேனப்பயலா இருந்தா எருமைமாடு aeroplane ஓட்டுமாம் "

பின் குறிப்பு :
படம் ஆதிஷ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Tuesday 1 March 2011

காசு வாங்கிய சச்சின் டோனி கதை


"இப்ப பாரு டெண்டுல்கர் எட்டு ரன் அடிச்சிருக்கார் பத்துக்குள்ள அவுட் ஆவார் " என்றான் விஷ்வா
ஓடக்கூடாத ரன்னிற்கு ஓடி அவுட் ஆனார் சச்சின் , "எப்படி டா சொன்ன "என்று அதிர்ந்தான் குமார் .
"டோனி அஞ்சு ரன் தாண்ட மாட்டன் பார் " , மூன்று ரன்களின் போது ஏறி அடிக்க போய் அவுட் ஆனான் டோனி "எப்படி மச்சான் கலாசுற " என்றான் குமார் . "இந்தியா இன்னிக்கு எப்படியும் தோத்துரும் , 150 ரன் தான் அடிசுருக்காங்க " என்றான் விஷ்வா . hundred for நோ லாஸ் என்று தொலைகாட்சி ஸ்கோர் காட்டியது ,திடிரென 102 for Five என்று ஸ்கோரை பார்த்தவுடன் சன் தொலைக்காட்சியில் இருந்த சேனலை உற்சாகத்துடன் திருப்பினான் குமார் ,மட மட என்று விக்கெட் விழுக ஆரம்பித்தது 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா , விஷ்வா முகம் வாடியது ...........................
"என்ன மச்சான் ரெண்டு கோடி போச்சே இந்தியா தோக்கறதுக்கு எவ்வளவு கொடுத்தும் வீண் ஆயுடுச்சே ,
இவங்க காசு வாங்கின மாதிரி ஆடினாங்க ஆஸ்திரேலியா அத விட மட்டமா ஆடிட்டாங்க நம்மள விட எதோ புக்கி விளையாடி இருக்கான் " என்றான் விஷ்வா ..................................................
தண்ணி அடித்து கொண்டிருந்த குமாருக்கு ஒரு போன் வந்தது ...................எழுந்து சென்ற அவன்
"மச்சான் நல்லவேளைக்கு தோத்து போகல இந்தியா ஜெயிச்சுருச்சு , ஆஸ்திரேலியா மேல போட்ட அஞ்சு கோடி வீணா போகல "கலக்கல் மச்சான் என்று போனை வைத்தான்

Sunday 27 February 2011

சச்சின் "நூறில் "

"ரெண்டு லட்சம்
கோடி ஊழல் "
நாகப்பட்டினம் , வேதாரண்யம்
ராமேஸ்வரம் "37 உயிர்கள்" ,
எல்லாம் மறந்து போனது
சச்சின் "நூறில் "

படத்த படமா பாருங்கப்பா - ஜாக்கி சேகரும் சினிமா விமர்சனங்களும்

படங்கள் பற்றி விமர்சனங்கள் வரும் பொழுது பொதுவாய் படத்தை படமாக பாருங்கள் என்ற விமர்சனம் வருவதுண்டு ."ராவணன் " படம் வந்தபொழுது எழுதிய விமர்சனத்திற்கு அது ஒரு கலை அவ்வளவே பிடித்து இருந்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அது என்ன அரசியல் விமர்சனம் செய்வது என்று வாதம் செய்பவர்கள் உண்டு . ஒரு படம் மொக்கை என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , போர் என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , நாயகி நன்றாக கவர்ச்சியாய் இருக்கிறார் என்று சொல்ல உரிமை உண்டு , ஆனால் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் மட்டும் படத்தை படமாக பார் என்று விமர்சனம் அறிவு ஜீவிகளிடம் இருந்து இயல்பாய் வரத்தான் செய்யும் .

இப்படி தான் பயணம் பார்க்க சென்ற பொழுது என் திரையுலகை சேர்ந்த நண்பரிடம் இது ஹிந்துத்துவா படம் என்று
சொன்னபொழுது அவர் சண்டைக்கு வந்தார் .மோடியை உங்களால் தீவிரவாதியாக சித்தரிக்க முடியுமா என்று நான் கேட்டேன் "மோடி தான் சிறந்த முதல்வர் என்று அவர் வாதிட்டார் " . நீங்கள் எல்லாம் ஹிந்து இல்லை பார்ப்பனர்கள் மட்டுமே ஹிந்து என்று சொன்னேன் , நீங்கள் அவர்களுக்கு வேலை செய்பவர் என்று சொன்னேன் . " எப்படி சொல்கிறீர்கள் நான் ஹிந்து தான் " என்று சொன்னார் .ஹிந்து மதம் உங்களை இழிவு படுத்துகிறது "இந்த ஒரு வீட்டில் மட்டுமே பத்தினி வாழ்கிறார் " என்று பார்ப்பனீயம் சொல்கிறது அதை ஏற்றுகொண்டால் நீங்கள் ஹிந்து தான் என்றேன். இப்படிப்பட்ட யோசிக்காத சமூகத்தில் ஒரு படைப்பு என்பது வரும்பொழுது அரசியல்
விமர்சனம் தேவை என்றே நினைக்கிறேன் .

சினிமாவை மொக்கை என்று விமர்சனம் செய்யலாம் ஆனால் அரசியல் விமர்சனம் கூடாது என்ன ஜனநாயகம் ?
ஆனால் இப்படி அரசியல் விமர்சனம் செய்யாதவர்கள் கூட "நடுநிசி நாய்களில் " வரும் வக்கிரம் என்னும் அரசியல் பற்றி சமூகம் பற்றி கவலை பட்டார்கள் . இது அவர்கள் செய்யும் தவறல்ல , அப்படம் அவர்களை மனதளவில் பாதித்து இருக்கிறது , அதில் அவர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்கிறது . இதே நடுநிசி நாய்களை விமர்சனம் செய்பவரை கூப்பிட்டு "அன்பே சிவம் " பற்றி விமர்சனத்தை சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் "நீ என்ன பெரிய புடிங்கியா , நீ முதல்ல ஒரு படம் எடு" என்பார்கள். தன்னை பாதிக்கிற விடயத்தில் மட்டும் , தன்னில் இருந்து வரும் சமூக அக்கறையை மட்டும் காட்டும் இவர்கள் மற்றபடங்களை அரசியல் விமர்சனம் செய்யும்பொழுது "படத்தை படமாய் பாருங்க பா " என்று சொல்வார்கள் .

பின் குறிப்பு :
இப்பதிவை எழுத்தத்தூண்டியது அண்ணன் ஜாக்கியை பற்றி பதிவுலகில் எழப்பட்டிருக்கும் விமர்சனங்கள் . ஆனால் ஒருவிதத்தில் ஜாக்கி நேர்மையானவர் அவர் சிலபடங்களை மட்டும் அரசியல் பார்வையுடனும் சில படங்களை படங்களாகவும் பார்ப்பதில்லை அனைத்து படங்களையும் படமாகவே தான் பார்க்கிறார் .

Thursday 24 February 2011

வாக்காளர்களே இல்லாத பொழுது எப்படி வாக்கு வங்கி குறையும்


சுட்ட மண்ணிலே
மீனாக மடிந்துகொண்டிருக்கிறான்
எம்மீனவன் ....
அம்மீன்கள் விற்பனைக்கு வைக்க
படுகின்றன வாக்கிற்காக.. !
தேர்தல் வாக்கிற்காக
நக்கும் நாக்குகள் கதைக்கின்றன

மீன்களை ஐந்து நட்சத்திர உணவகத்தில்
மட்டுமே பார்த்த
அரிதாராம் பூசும் நடிகன் ,
மீனவனுக்காக குரல் கொடுக்கிறான் .
தன் இழந்த பிம்பத்தை மீட்க்க
மீனவன் பிம்பம் தேவை !

கனிமொழி உண்ணாவிரதம் ..........
ஆச்சர்யம் அடையவேண்டாம் .
தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்களுக்குமே
பிரச்சனையாம் ,ராணுவத்திற்கு சம்பந்தம் இல்லையாம்
எப்படி மன்மோகனுக்கும் spectrum ஊழலுக்கும்
சம்பந்தம் இல்லை தானே ...!

தந்தி அனுப்புவோம் ........
தந்தி அனுப்புவதற்குள் நான்கு
உயிர் போயிருக்கும் அவ்வளவு
தானே ...............

வாக்காளர்களே இல்லாத பொழுது
எப்படி வாக்கு வங்கி குறையும்

Wednesday 23 February 2011

நடுநிசி நாய்கள்


நடுநிசி நாய்கள் பார்த்தேன் , படம் பார்த்த பின்பு உண்மையிலேயே மன உளைச்சல் ஏற்ப்படுத்தியது , கதையை கூர்ந்து நோக்க தொடங்கினேன் . சமர் என்ற பையன் அவன் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தப்படுகிறான் அதனால் மனச்சிதைவு உள்ளாகிறான் , அவன் வளர்ப்பு தாய் அவரை புணர்கிறான் ,வளர்ப்புத்தையின் கணவரை கொல்கிறான், பின் நிறைய பெண்களை அனுபவித்து கொடுமை செய்கிறான் ,என்று படம் முழுக்க வக்கிரத்தின் உச்சத்தில் செல்கிறது . "ஊரில் நடப்பதை தானே எடுக்கிறோம் " என்று படைப்பாளிகள் எளிதில் சொல்வதுண்டு ,ஆனால் ஏதாவது ஒரு விடயத்தை மட்டும் காட்டிவிட்டு ,சில விடயங்களை மறைப்பதை படைப்பாளிகள் திறம்பட செய்கிறார்கள் .

அந்த சமர் போன்ற குணாதிசியம் மிக்க சிறுவன் எந்த சமூகத்திலே வளர்கிறான் , அவர் தந்தை குரூப் செக்ஸ் வைத்துக்கொள்கிறார் , அது எந்த சமூகத்தில் இருக்கிறது . பணத்திமிருடன் பெண்களை நுகர்வு பொருளாய் பார்த்து பழக்கப்படும் மேட்டுக்குடி பணக்கார சமூகத்தில் இருக்கிறது .அச்சமூகம் நுகர்வு கலாச்சாரம் சீர்கேடு
என்பதை படம் விமர்சனமே செய்யவில்லை .அப்படி விமர்சனம் செய்து அச்சமூகத்தில் இருந்து வளர்க்கப்படும் குழந்தை இப்படி தான் சிதைவுடன் வளரும் என்று சொல்லி இருந்தால் படம் ஒரு சிறந்த படைப்பை வந்திருக்கமுடியும் . அதைவிடுத்து வெறும் வக்கிரத்தை மட்டுமே மூலதனமாய் கொள்கிறது கதை என்பதே பிரச்சனை .

எந்த ஒரு பிரச்சனையையும் சமூகத்துடன் பொருத்திப்பார்க்க வேண்டும் என்பதே சிறந்த ஆய்வு முறை என்று நினைக்கிறேன் . உதாரணமாய் கள்ளக்காதல் பிரச்சனை , அவசர உலகம் ஒரு நாளைக்கு பத்து மணி நேர உழைப்பு கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பு செலுத்த முடியவில்லை அதனால் கள்ளக்காதல் அதிகரிக்கிறது . இது வெறும் ஒழுக்கம் சம்பத்தப்பட்ட பிரச்சனையாக பார்த்தோமானால் நாம் தீர்வு சொல்ல முடியாது ,ஆனால் அதன் ஆணி வேரை பார்க்கவேண்டுமென்றால் , அக்காலகட்ட சமூகத்துடன் இணைத்து
அப்பிரச்சனையை பரிசீலிக்க வேண்டும் . அப்படி பரிசீலிக்காமல் போனால் , ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தீர்வுகளை தேடிக்கொண்டிருக்க வேண்டும் . அப்படி சமூகத்துடன் பிரச்னையை இணைத்து பார்க்காமல் இது ஒரு தனிமனித ஒழுக்க பிரச்சனையாய் செல்கிறது "நாடு நிசி நாய்கள்".

நடுநிசி நாய்கள் என்றாலும் ,நாய்கள் அந்தரத்தில் இல்லை சமூகத்தில் உள்ளது . அந்த நாய் சொறி நாய் ஆனாலும் அந்த நாய் ஏன் சொறிநாய் ஆனது என்ற பின்புலத்துடன் சொல்லப்படாத கதையானதால் நடுநிசி நாய்கள் நாதரி நாய்கள் ஆனது .

பின் குறிப்பு : படத்தை படமாக தான் பார்க்க வேண்டும் என்று சொல்லும் விமர்சகர்கள் , இப்படத்தை மட்டும் படமாய் பார்க்காமல் சமூகம் பாதிப்படையும் என்று பதறுவது ஏன் ,அக்னி பார்வைக்கு எழுந்த கேள்வி எனக்கும் எழுவதை தவிர்க்க முடியவில்லை

Tuesday 22 February 2011

தளபதி(கேப்டன்) இளைய தளபதி(ஸ்மால் கேப்டன்)


நாகை மாவட்டத்தில் பேசிய நடிகர் விஜய் அவரின் அறிய தத்துவமான "மத்திய மாநில அரசுகளுக்கு தந்தி அனுப்புங்கள் " என்று சொல்லி உள்ளார் . அவரை பார்க்க ஒரு கூட்டம் . இந்த நடிகர் யார் என்றால் ஈழத்தில் பிரச்னை உக்கிரமாய் இருக்கும் பொழுது தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தியை சந்தித்தவர் . இந்த நடிகர் யார் என்றால் "கோகோ கோலா " விளம்பரத்தில் பணத்துக்காக நடித்தவர் . இவருக்கு சீனியர் நடிகர் என்ன டா என்றால் சரக்கு அடித்துவிட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறார் . ஒருவர் சினிமா வெளிவர பிரச்சனை என்பதால் அரசியலில் இறங்குகிறார் , இன்னொருவர் கல்யாண மண்டப பிரச்னையை ஏதோ ஈழ பிரச்சனை போல மேடைக்கு மேடை பேசுகிறார் ,இவர்களின் அறஉணர்ச்சி மக்கள் பிரச்சனையில் இருந்து வருவதில்லை , தன் மண்டைக்குள் இருக்கும் பிரச்சனையில் இருந்து வருகிறது . இத்தகைய முட்டாள்களே நம்மை ஏமாற்றுகிறார் என்றால் , நாம் எந்த அளவு இருக்கிறோம் .

சரத்குமார் என்பவர் தனக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை என்று அ தி மு கா சென்ற வரலாற்று காரணம் நாம் அறிந்ததே .விஜய டி ராஜேந்தர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது . பிரச்சாரத்திற்கு போக கூட நேரம் ஒதுக்காத கார்த்திக் தான் ஜாதி என்பதாலேயே தலைவராய் இருக்கிறார் . இப்படி நடிகர்களின் நகைச்சுவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது . இந்த கோமாளிகளுக்கு பின் நின்று நாமும் கோமாளி ஆகப்போகிரோமா ?கேப்டன் தளபதி என்றால் இளைய தளபதி ஸ்மால் கேப்டன் தானே

Monday 21 February 2011

ஷோபா ஷக்தி பெரியார் என்னும் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கவாதி

ஆங்கிலத்தில் "basturd " தமிழில் "தே ம " எந்த தேசமாய் இருந்தாலும் ஒருவனை மிகக்கேவலமாய் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தை அவன் தாயை திட்டுவது .இப்படி ஆணாதிக்கம் கரைபுரளும் உலகில் , பதிவுலகம் மட்டும் விதிவிலக்கா ? கீற்று இணையதளத்தில் தமிழச்சி மற்றும் மினர்வா கட்டுரை படித்தேன் , முற்போக்கு முகமூடி போடும் ஷோபா சக்தியை கிழித்து இருந்தது பதிவு . ஆண்கள் பெண்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை என்றால் கடைசியாய் உபயோகப்படுத்தும் ஆயுதத்தை ஷோபா ஷக்தி உபயோகித்து இருக்கிறார் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது என்ன ஆயுதம் என்று கீற்றில் படித்து தெரிந்து கொள்ளவும் , மறுபடியும் அதே விடயத்தை எழுதி பெண்களை இழிவு படுத்த விரும்பவில்லை இந்த போலி முற்போக்கு ஆசாமிகளின் முகமூடியை கிழிக்க வேண்டும் . பெண்கள் வளர்ந்தது போல தெரிந்தாலும் , நவீன வடிவில் சுரண்டப்படுகிறார்கள் .

இதற்க்கு சம்பந்தமான சுட்டிகள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7741:2011-02-21-121458&catid=343:2011

http://kaargipages.wordpress.com/2011/02/21/therupporukki/

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_18.html

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264

பெரியார் பற்றி பேசும் பெண்ணையே இப்படி இழிவு படுத்துகிறார்கள் என்றால் , சாமனிய பெண்ணின் நிலைமை . இதற்க்கு எதிராய் பதிவுலகம் தன்னுடைய கண்டனத்தை அழுத்தமாய் பதிவு செய்ய வேண்டும்

Sunday 20 February 2011

பிரபல இயக்குனர் மசாலா இயக்குனரான கதை

"சார் opening Scenla ஒரு காட காட்றோம் சார் , அடர்ந்த காடு அந்த காட்டுல உள்ள மக்களை விரட்டப்பாக்குறாங்க பன்னாட்டு முதலாளிக , அந்த மலைஜாதி சமூகத்துல இருந்து ஒரு இளைஞன் நம்ம ஹீரோ மக்களை திரட்டி போராட்டம் நடத்தறான் , புரட்சி வெடிக்கிறது , எப்படி அவங்கள மீடியால தீவிரவாதியா காட்டுறாங்க , எப்படி அரச எதிர்த்து மக்களுக்கான அரசா மாத்தறான் இது தான் சார் லைன் பிடிச்சுருந்தா சீன் by சீனா கதை சொல்றேன் சார் .படத்துல ஐரோம் ஷர்மிலா மாதிரி ஒரு கேரக்டர் , பினாயக் சென் மாதிரி
ஒரு கேரக்டர் , அருந்ததி ராய் மாதிரி ஒரு கேரக்டர் எல்லாம் இருக்கு சார் " என்றான் பத்து வருடமாய் உதவி இயக்குனராய் இருக்கும் வேலவன் . "கதை எல்லாம் சரி பா சென்சார்ல படம் மாட்டிக்கும் , அரசாங்கத்த எதிர்த்து படம் பண்ண முடியாது , அதுவும் நீ அரசியல் அமைப்பே மாறணும்னு கதை சொல்றதலா ,படத்த விட மாட்டாங்க ,நீ வேணும்னா ஒன்னு பண்ணு , அரசாங்கம்னு அரசு நு பேச வேணாம் , ஒரு MLA அவன் தான் வில்லன் சரியா பன்னாட்டு கம்பெனிக்கு விக்கறான் , மக்களை துரத்தரான் , ஹீரோ அவன பழிவான்குரானு கதையா மாத்து ". "சார் இந்த அமைப்பே தாப்பா இருக்குறப்ப , MLA கேட்டவன் அதனால தப்பு பண்ணறான்னு கதையா மாத்தின படத்துல உண்மையான அரசியல எப்படி சார் சொல்ல முடியும் " "சினிமால எல்லாமே காசு தான் பா ? ஏன் நாளைக்கு அதே பன்னாட்டு கம்பெனி உனக்கு FINANCE செய்ய வரலாம் வேண்டான்னு சொல்வாய "
அமைதியாக இருந்தான் வேலவன் .

ஐந்து வருடங்களுக்கு பிறகு
CLIMAX 1 :
கொத்தா யாருடா அது framela . Lightaa கட் பண்ணு , தினேஷ் மாஸ்டர் வந்துட்டாரா ? randy சார் ஓகே வா ? டேக் போலாமா ? "சார் நீங்க நல்ல உரசிக்கிட்டு நிக்குறீங்க ,உதட்ட பாக்குறீங்க டக்குன்னு கடிக்கீறீங்க ,ரெயின் effect , RANDY சார் heroine லிப்சுக்கு closeup வையுங்க " என்று கணீரான குரலில் வேலவன் ........................... "சார் நாளைக்கு fight சீன் , போன படத்துல பத்து பேர் , இந்த படத்துல நூறு பேர பறக்க விடுறீங்க பயப்படதீங்க ரெண்டு பேர தான் அடிக்கிறீங்க ஸ்க்ரீன்ல 100 பேரா கட்டறோம் "

CLIMAX 2 :
சினிமாவில் கதை சொல்ல முடியாது என்று புரிந்து கொண்ட வேலவன் . இன்று கிராமம் கிராமமாய் சென்று கலை நிகழச்சிகள் நடத்துகிறான் , மேடை வேறு தான் புகழ் கூட கம்மி தான் , வசதி கம்மி தான் . கலைஞன் என்றால் சினிமா மட்டுமே எடுக்க வேண்டுமா என்ன , கலைங்கனுக்கு தேவை ஒரு மேடை மட்டுமே .

Friday 18 February 2011

தமிழக மீனவனின் உண்மையான எதிரி

தமிழக மீனவர்கள் கடலிலே கொல்லப்படும் பொழுதெல்லாம் அமைதியை இருந்துவிட்டு , இப்பொழுது மட்டும் கனிமொழி போன்றவர்கள் போராடுகிறார்கள் , மேலும் மத்திய அரசு இதில் இப்பொழுது தலைக்காட்டுகிறது , என்னடா உள்ளர்த்தம் என்று பார்க்கும்பொழுது ஒன்று மட்டும் புரிகிறது , இது வெறும் இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும்
நடக்கும் பிரச்சனையாய் சித்தரிக்கப்படுகிறது , பிரச்னையை எளிதாய் திசைத்திருப்ப பார்க்கிறது .இது போரட்டத்திற்கு நல்லதல்ல ,இலக்கு இலங்கை ராணுவம் , பன்னாட்டு முதலாளிகள் , மத்திய மாநில அரசு என்று இல்லாமல் , இலக்கு வெறும் இடத்திற்காக
மட்டும் சண்டை போடும் ஈழத்து மீனவர்கள் மீது குற்றச்சாட்டை திசைதிருப்புகிறது . நம் உண்மையான எதிரி யார் என்று கண்டுகொள்ள வேண்டும் , இல்லை என்றால் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்பு உள்ளது .

Thursday 17 February 2011

ஏழு தலைமுறைகள் -உழைக்கும் மக்களின் வரலாற்று ஆவணம்


"வெள்ளை என்றால் கௌரவம் கறுப்பர் என்றால் இழிவு " என்ற சிந்தனை முறையில் இருப்பவர்கள் நாம் . தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகள் வரை இந்த வெள்ளை என்ற நிறவெறி நம்மை அறியாமலேயே நம்முள் குடிகொண்டு இருக்கின்றது . ஒரு குழந்தை பிறந்தால் கூட " நல்ல சிகப்புல " அல்லது " கருப்பா இருக்கே " என்று நம் நிறவெறியை காட்டிவிட்டு எளிதாய் கடந்து போகிறோம் .பெண் பார்க்க போகும் சிலர் "பொண்ணு கருப்பா இருந்துச்சு கலையா தான் இருந்துச்சு ஆனா வேணாம்னு சொல்லிட்டேன் கருப்பா இருக்குல்ல எப்படி கட்ட " என்று சொல்வதை கேட்டு இருக்கிறோம் . இது வெறும் நிறவெறி சார்ந்த பிரச்சனை மட்டுமா ? ஒடுக்கப்பட்ட தரம் தாழ்த்தப்பட்ட வரலாறு . வரலாறுகள் எப்பொழுதுமே வாழ்வில் வெற்றிபெற்றவனையே மையமாய் எடுத்துக்கொள்ளும் . அதற்க்கெல்லாம் சாட்டை அடி கொடுப்பது போல் எழுதப்பட்ட புதினமே "ஏழு தலைமுறைகள் ".

கறுப்பர் என்றால் இழிவல்ல , உலகில் சாலைகள் கட்டியவர்கள் , கட்டிடங்கள் கட்டியவர்கள் ஏன் உலகையே கட்டியவர்கள் அவர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் எப்படி அடிமையாய் இருந்தார்கள் , உலகின் வளர்ச்சிக்காய் அவர்கள் சுக துக்கத்தை மட்டும் இழக்கவில்லை , தன் இனத்தையே எப்படி இழந்தார்கள் என்ற வரலாற்று பின்புலத்தில் எழுதப்பட்ட புதினம் அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள் புதினம் ஆங்கிலத்தில் "ரூட்ஸ்" என்று வெளிவந்துள்ளது .


"குண்ட்டா கிண்டே " அவன் பிறப்பில் இருந்து புதினம் தொடங்குகிறது . காம்பியா என்னும் தேசத்தில் ஜப்பூர்
என்னும் ஊரில் குண்ட்டா பிறந்தான் . அவனை எப்படி வளர்த்தார்கள் , அந்த ஊரில் வளர்ப்பு முறை என்ன , சிறுவர்கள் எப்படி பள்ளிக்கு சென்றார்கள் , எப்படி ஆடு மேய்த்தார்கள் , வாலிபர்களுக்கு ஆன பயிற்சி என்ன என்று ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு கிராமத்தை கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர் . குண்ட்டா வெள்ளை அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார் .குண்ட்டா போன்ற பல ஆப்ரிக்கர்கள் கடத்தப்படுகிறார்கள் . கப்பலிலே பலர் இறக்கிறார்கள் அங்கு வெள்ளையர்கள் செய்யும் கொடுமை தாங்காமல் . வலியும் ரணமும் பொருந்திய நாட்கள் . கப்பலிலே அறையிலே கட்டிப்போடப்பட்ட குண்ட்டா தன் இனத்தையே
பார்க்கமுடியாது என்று புரிந்து கொண்டு கதறுகிறார் , மனதில் வலி அதிகமாய் உளைச்சலுக்கு உள்ளாகிறார் . கண்களை மூடினால் தன் கிராமம் , தன் தாய் தந்தை தம்பி அனைவரும் கண்ணுக்குள் நீர்களாக வழிகிறார்கள் .அவனை போன்று ஆப்ரிக்காவில் இருந்து பல அடிமைகள் அந்த கப்பலிலே இருந்தார்கள் தன் இனம் அழிக்கப்பட்டு .

அமெரிக்கா வந்தவுடன் ஒரு முதலாளியிடம் விற்கப்படுகிறார் குண்ட்டா , அதற்க்கு பின் அவர் பரம்பரை எப்படி
வாழ்ந்தார்கள் . குண்ட்டா எத்தனை முறை தப்பினார் , எத்தனை முறை மாட்டிக்கொண்டார் , உள் இருந்து கொண்டே
எப்படி போராடினார் .அவருடைய காதல் , வாழ்வு முறை , மகள் , பேரன் என்று தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்தவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்பதை ஆழ்ந்த வலி மற்றும் மௌனத்துடன் பதிவு செய்கிறது புதினம்.

தன் இனம் வரலாறு தெரியவேண்டும் என்பதற்காய் குண்ட்டா தன் பாட்டன் முப்பாட்டனின் கதைகளை
மகளுக்கு சொல்கிறார் . மகள் தன் மகனுக்கு சொல்ல , இப்படி பரம்பரை பரம்பரையாய் அவர்கள் தன் முன்னோர்களின் வாழ்க்கையை தனது அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

புதினத்தின் சிறப்பியல்பு என்றால் கடைசி தலைமுறையில் ஆசிரியர் தோன்றுகிறார் , அவரின் மூதாதையரே
குண்ட்டா ? அவரின் கதை கேட்டு குண்ட்டா பிறந்த இடத்திற்கு செல்கிறார் ஆசிரியர் . இடத்தை தேடி கண்டுபிடித்து , அம்மக்களை தன் சொந்த மக்களை பார்க்கும் பொழுது ஏற்ப்படும் சிலிர்ப்பு கண்களை நீர் வரவழைக்கும் காட்சியை கண் முன் கொண்டு வருகிறார் ஆசிரியர் .

புதினம் உண்மையிலேயே எழுத்தாளருக்கு ஏற்ப்பட்ட அனுபவம் என்பதால் அது நெகிழ்ச்சியை வரவழைக்கிறது .
தன் ஏழு தலைமுறைக்கு முன்னாள் வாழ்ந்த உறவுகளை அவர்களின் தற்பொழுதைய தலைமுறையை பார்த்த அனுபவம் மிகவும் உணர்சிகரமானது . இதை வெறும் நெகிழ்ச்சி என்று மட்டும் சிறுமை படுத்த முடியாது , ஒரு சமூகத்தின் எழுச்சி விடுதலை உணர்ச்சி என்று நம் சிந்தனைக்கு அப்பால் உணர்ச்சியின் வீரியம் எங்கோ உயரத்தில் செல்கிறது.

அமெரிக்க என்ற வெள்ளைக்கார டாலர் தேசத்தின் ரோட்கள் என் கறுப்பின மக்களால் போடப்பட்டது .
பொருளாதாரத்தில் அதை வல்லரசாய் மாற்றியது என் கறுப்பின மக்கள் . என்று புதினத்தில் இயல்பாய் அம்மக்கள்
நம் மக்கள் நம் உழைக்கும் மக்கள் என்ற மன எழுச்சி நம் மனதிற்குள் வருகிறது .

கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வேன் . படித்து முடித்தவுடன் கழிவுகள் அல்லும் மக்கள் ,
ரோடுகள் போடும் மக்கள் என்று உழைக்கும் மக்களை கவனிக்கும் பொழுது மனது கனக்கத்தான் செய்கிறது.
இப்புதினம் உழைக்கும் மக்களின் வரலாற்று ஆவணம் .

ஆங்கில மூலம் : அலெக்ஸ் ஹேலி


தெலுங்கில் இருந்து தமிழில் : ஏ.ஜி.எத்திராஜீலு

வெளியீடு : சவுத் ஏசியன் புக்ஸ்

விலை : ரூ 50


கிடைக்குமிடம்
****************
கீழைக்காற்று

10,அவுலியா சாகிபு தெரு,

எல்லீசு சாலை,

சென்னை 2.

தொலைபேசி எண் : 044-28412367

Wednesday 16 February 2011

கவின்மலருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவின்மலர் உங்களின் "பத்திரிகை துறைக்கு முன்னும் பின்னும் " என்ற கட்டுரை படித்தேன் . விருப்பப்பட்ட வேலையை தேர்ந்தெடுத்து வேலை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் . ஆனால் உங்களிடம் சில கேள்விகள் இருக்கிறது ? கட்டுரை முடிக்கும் பொழுது "Thanks To Recission " என்று எழுதிருக்கிறீர்கள்? ஒரு பிரச்னையை தன்னை மைய்யப்படுத்தி பார்க்கும் பார்வை இது . என்னுடைய நண்பர்கள் பலர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் மென்பொருள் துறையிலே இன்று வேலை செய்பவர்கள் , அவர்களை
RECISSION பாதித்தது , RECISSION சமயத்தில் தற்கொலை எல்லாம் செய்து கொண்டார்கள் என்று தினசரிகளில் செய்திகள் வந்ததுண்டு . நீங்கள் மார்க்சியம் தெரிந்தவர் , ஒரு பிரச்னையை தனிமனிதனிடம் இருந்து அணுகுவதா ? இல்லை சமூக நிலையில் இருந்து அணுகுவதா ? கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ? ஊரையே பாதித்த RECISSION உங்களை பாதிக்கவில்லை என்றால் , உங்களுக்கு மாற்றிக்கொள்ள வேறு வழி உள்ளது , மாற்றிக்கொள்ள முடியாதவர்களுக்கு ?

ஒரு விவசாயி ஒரு பண்ணையாரின் கீழ் வேலை செய்கிறான் ஆனாலும் அவன் வேலையை ரசித்து செய்கிறான்
இதில் மக்களுக்கு ஏதும் தீங்கு இல்லை , எனக்கு இலக்கியம் தான் பிடிக்கும் என்று அவன் ஓட முடியாது அவனுக்கு வேறு மாற்று இல்லை . சரி நீங்கள் பத்திரிகை துறையை தேர்வு செய்திருக்கிறீர்கள் . ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதை விட இங்கே வளைந்து கொடுத்து போவது அதிகமாய் இருக்கும் . நாடே அறிந்த கேப்பமாரியை நல்லவன் என்று எழுதச்சொல்வார்கள் ?எழுதித்தான் ஆக வேண்டும் இல்லை என்று மறுக்க முடியுமா. இங்கே சுதந்திரமாக தான் செயல்படுகிறீர்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? பொது புத்தியில் என்ன உள்ளதோ, அதை அறுவடை செய்ய வேண்டும் ,ஆள்பவர்களுக்கு முதலாளிகளுக்கு ஆதரவாய் எழுத வேண்டும் ? தான் நிற்க வேண்டும் என்பதற்காய் தன் கொள்களை விட்டுக்கொடுக்க வேண்டும் . இதற்க்கு பெயர் பிழைப்புவாதம் ,இதற்க்கு மென்பொருள் துறையில் இருப்பவர் எவ்வளவோ மேல் .

அந்த கட்டுரையில் ஒரு வரியில் "ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு யாருக்காகவோ டாட் நெட்டையும், ஏ.எஸ்.பி.யையும், ஜாவாஸ்கிரிப்டையும் படிக்க வேண்டியதில்லை" இப்படி யாருக்காகவோ என்று எழுதிருந்தீர்கள் , இப்பொழுது அதே யாருக்காகவோ எந்த முதலாளிக்காகவோ , எந்த கட்சி சார்புடனோ தானே எழுத முடியும் ,மக்களுக்காகவா எழுத முடியும்.


http://kavinmalar.blogspot.com/2011/02/blog-post.html

Monday 14 February 2011

காதல் சில கேள்விகள்


"காதலர் தினம்" நேற்று கொண்டாடப்பட்டது . நானும் காதலிலே கசிந்து உருகியது உண்டு , படங்கள் என்றால் காதல் படங்கள் கவிதை என்றால் காதல் கவிதை வாழ்க்கை என்றால் காதல் வாழ்கை மட்டுமே என்று எண்ணியதுண்டு . வாசிக்க ஆரம்பித்த காலத்தில் என் கல்லூரி வாழ்க்கையில் நான் அதிகம் விரும்பிப்படித்தது தபு சங்கர் . இலக்கிய ரசனையே இல்லாத காலத்தில் தபு சங்கர் கவிதை படித்து அகமகிழ்ந்தது உண்டு . கவிஞர் ஆனால் தபு சங்கர் போல ஆக வேண்டும் என்று எண்ணியதுண்டு . "எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் " போன்ற கவிதைகள் மனப்பாடமாய் இருந்தது உண்டு . அதை போல கவிதைகள் கிறுக்கி நண்பர்களிடம் பாராட்டு வாங்கியது நிறைய முறை . அதுவும் காதலுடன் கவிதை எழுதும் பொழுது , என்னை போன்ற இலக்கணம் தெரியாதவன் , எழுத்துபிழையுடன் எழுதுபவன் கூட கவிஞன் ஆகிறான் .

ஆட்டோகிராப் 7G போன்ற படங்கள் பார்த்து உறங்காமல் இருந்த நாட்கள் உண்டு . கணிப்பொறியில் காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்கிய நாட்கள் மிக அதிகம் . பைத்தியக்காரத்தனமாய் காதலித்து , வாழ்வை தொலைத்த , நேரத்தை வீணடித்த நாட்கள்(வருடங்களை) உண்டு . பதிவு எழுத ஆரம்பித்த பொழுது கூட , காதல் கவிதைகளும் , காதல் கதைகளும் நிறைய எழுதியது உண்டு . ஏக்கங்கள் மட்டுமே படைப்புகள் , NOSTALGIA வே சிறந்த படைப்பு என்று எண்ணிய காலங்கள் , தூக்கம் துலைத்த இரவுகள் . "வெண்ணிற இரவுகள் " புதினத்தின் வரும் கதாநாயகன் என்னை போலவே இருப்பான் என்று என்று நண்பன் சொல்ல , அதை வாங்கிவிட்டு
பாதி கூட படிக்கமால் இந்த தளத்திற்கு வெண்ணிற இரவுகள் என்று பெயர் கூட வைத்து விட்டேன் . காதலும் தனிமையும் அவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்கின .

ஆனால் இப்பொழுது பறந்து விரிந்த பார்வையுடன் காதலை அணுகும் பொழுது காதல் ஒன்று அவ்வளவு புனிதமானதாய் இல்லை என்றே சொல்லுவேன் . என் நண்பர் கேட்ட கேள்வி தான் என் காதுக்குள் ஒலிக்கிறது , ஒரு பெண் மனதுக்கு பிடித்தவளாய் இருக்கிறாள் , ஆனால் அவள் தொழில் சாதாரண தொழில் என்று வைத்துக்கொள்வோமே , நாம் அந்த பெண்ணை SIGHT கூட அடிக்கப்போவதில்லை . நடுத்தர்வர்கத்தில் இருந்து வரும் ஆண்மகனால் ஒரு பணக்காரப்பெண்ணை உற்றுப்பார்க்கலாம் ஆனால் காதல் என்று வரும்பொழுது தன்
வர்க்கத்திற்கு ஏற்ற தன் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை மட்டுமே மனத்தால் கூட நினைக்க முடிகிறது . உதாரணமாய் ஒரு நடுத்தரவர்க்க மென்பொருளில் வேலை செய்பவர் ஒரு மீனவ பெண்ணை நினைப்பது இல்்லை ஏன் பார்ப்பது கூட இல்லை . ஜாதி மறுப்பு திருமணங்கள் நடக்கிறது உண்மை ஆனால் வர்க்க மறுப்பு காதல் சாத்தியமா . இப்படி உளவியல் ரீதியாக நாம் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளோம் அப்படி
இருக்க இச்சமூகத்தில் உண்மையான காதல் எப்படி மலரும் . காதல் செய்ய ஆண் பெண் என்ற தகுதியை தாண்டி வர்கங்கள் முடிவு செய்யப்படும் காதலோ திருமணமோ உண்மையில் எப்படி இருக்கும் . நாம் ஈன்று எடுக்கும் குழந்தைகள் கூட வர்க்க பேதத்துடனே வளரும் .

என்ன டா காதலில் கூட அரசியல் பேசுகிறார்கள் என்று சிலர் சொல்லக்கூடும் . வாழ்க்கை அனைத்திலும் அரசியல்
இருக்கிறது பார்வை இருக்கிறது. நம் நண்பர்கள் , நாம் உடுத்தும் ஆடை , நம் செய்கை அனைத்திலும் அரசியல் உண்டு , அது கண்டிப்பாய் விமர்சனத்துக்கு உட்பட்டது . காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது அமரத்துவம் வாய்ந்தது ,ஆனால் இச்சமூகத்தில் காதல் உண்மையாகா தான் உள்ளதா ? காதலிப்பவர் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டுப்பாருங்கள்

Wednesday 9 February 2011

ஜூனியர் விகடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயத்தில் எப்படி கேட்டு இருக்க வேண்டும்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி ஜூனியர் விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று ஆர் கே சதீஷ் குமார் தளத்தில் ஒரு செய்தி படித்தேன் . ஊடகங்கள் மக்களிடம் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாய் இருக்கிறது அந்த சர்வே .


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா கைது செய்யப்பட்டது?

தாமதமான நடவடிக்கை...

2.ராசாவின் கைது வரும் சட்டமன்ற தேர்தலில் ...

எதிரொலிக்கும்

3.ராசா கைதுக்கு பிறகும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தொடர்வது தார்மீக ரீதியில் சரியா?
-சரியில்லை

4.ராசா கைது நடவடிக்கை பிறகு தி.மு.க -காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் இணைந்து மனம் ஒன்றி பணியாற்றுவார்களா?

--இனி நடக்க போகும் சம்பவங்களை பொறுத்து அமையும்

5.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய குடும்ப ஆதிக்கம் இருந்திருக்குமா?
-நிச்சயம் இருக்கிறது...

6.ராசாவுக்கு ஆதராவக தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் போட்டிருப்பது ,தொண்டர்களை உற்சாகபடுத்துமா,சோர்வடைய வைக்குமா?
-கலவையாக இருக்கும்

7.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கும்...
-இருக்கிறது (அதிகமானோர் இதை குறிப்பிடுகிறார்கள்)

8.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை....

அரசியல் செய்கிறது (அதிகமானோர் கருத்து)


நன்றி ஆர் கே சதீஷ் குமார்


கேள்விகள் எப்படி இருந்து இருக்க வேண்டும்

1 எதற்கு பொது சொத்துக்களை விற்க வேண்டும் ?

2 ஊழலில் ராசாவிற்க்கு மட்டும் தான் பங்கா , ஆதாயம் அடைந்த டாட்டா போன்ற முதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை .

3 நிரா ராடிய ஒலி நாடா சொல்கிறதே இந்த அமைச்சரே முதாலாளிகளின் தயவால் தான் நியமிக்கப்பட்டார் என்று , அப்படி இருக்க அவர்களுக்கு சாதகமாய் தான்
இருப்பார் என்று? இப்படி முதலாளிகள் அமைச்சர்களை முடிவு செய்தால் நம்மை யார் ஆள்கிறார்கள் .

4 இந்த ஊழலில் மக்கள் பணம் உள்ளதா ? யாருடைய பணம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது ?

5 ராஜா இல்லாமல் வேறு யாரவது அமைச்சராக இருந்திருந்தால் இந்த ஊழல் நடைபெறாது என்கிறீர்களா ?


இப்படி கேள்விகளை ஏன் விகடன் கேட்கவில்லை . தனியார்மயம் தான் ஊழலின் ஊற்றுக்கண் என்று
அவர்களுக்கு தெரியாதா ? ஊழலில் அரசியல்வாதிகள் பங்கு மட்டும் இருக்கா முதலாளிகள் பங்கு இல்லையா ?
அது விகடனுக்கு தெரியாது . ஏன் இந்த முற்ப்போக்கு முகமூடி ? மக்கள் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற கேள்வியை விட்டு விட்டு , இது தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற மொன்னையான கேள்விகளை கேட்பதன் உள்ளர்த்தம் என்ன , மறைந்திருக்கும் அரசியல் என்ன ? இந்த ஊடகங்கள் முதலாளித்துவ ஊடகங்கள் முதலாளிகளை காட்டிக்கொடுக்காது .

Wednesday 2 February 2011

பலி ஆடு - spectrum ஊழல் ராசா

ராஜா கைது செய்யப்பட்டு இருக்கிறார் . ஊழலின் ஆதாயங்கள் முதலாளிகள் பெற்றுக்கொள்ளும் பொழுது ராஜா
மட்டும் கைது செய்யப்பட்டது ஏன் ? ஆரம்பத்தில் இருந்தே ராஜா மீது ராஜாவை குறிவைத்து மட்டும் இந்த ஊழல்
வழக்கு கொண்டுசெல்லப்பட்டது . சோ போன்ற ஜாம்பவான்கள் கூட முதலாளித்துவம் தான் ஊழலின் ஊற்றுக்கண்
என்பதை எளிமையாய் மறந்துவிட்டார்கள் . சரி மக்களிடம் இவ்விடயம் எப்படி போய் சேர்ந்து இருக்கிறது , எப்படி
விடயத்தை சேர்த்து இருக்கிறார்கள் ஊடகங்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு மாதம் முன்பு எடுக்கப்பட்ட ரிப்போர்ட் . ராஜாவை மட்டும் கைது செய்து இருக்கிறார்களே ? அவர் மட்டும் குற்றவாளியா ? அதனால் புரிதலுக்கு இத்தருணத்தில் பதிவு செய்கிறேன் .



முதலில் ஒரு வயதான பெரியவரிடம் ஸ்பெக்ட்ரெம் ஊழல் என்றால் என்ன என்று
கேட்டபொழுது , சொல்வதற்கு
விருப்பம் இல்லாதவராய் கையை அசைத்தார் . அவர் உடுத்தி இருக்கும் வேட்டி
சட்டையை பார்த்தால் நடுத்தரவர்க்கம் என்று தெரிந்தது .

வயதானவருக்கு பின் அமர்ந்து இருந்த ஒரு 35 முதல் நாற்பது வயது இளைஞரை
அணுகினேன் .
விகடன் பதிப்பகத்தில் வேலை செய்பவர் , அறிவுத்துறை சாராமல் உடலுழைப்பு
செய்பவர் ,மதுரைக்காரர் . அவரிடம் கொஞ்சம் கேள்வி கேட்க வேண்டும் என்று
சொன்ன பொழுது ரொம்ப அடக்கமாய் " சரி கேளுங்க " என்றார் . "ஸ்பெக்ட்ரெம்
அலைக்கற்றை ஊழல் அத பத்தி என்ன நினைக்குறீங்க " என்றேன் , " சார் அது
தப்பு தான் சார் " என்றார் ."தப்புதான் யார் யாரெல்லாம் தப்பு
செஞ்சுருக்காங்க " என்று கேட்ட பொழுது " ராஜான்னு சொல்லிக்கிறாங்க ,
ஆனா மத்தவங்களுக்கும் தொடர்பு இருக்கும் சார் " . " மத்தவங்கனா ?" என்று
வினவிய பொழுது " காங்கிரஸ் , பெரிய தலைங்க நிறைய பேருக்கு சம்மந்தம்
இருக்கும்
சார் " . சரி "இந்த பணம் யாரோட பணம் யார்ட்ட இருக்கு " என்ற கேள்விக்கு
சட்டென " இது நம்ம பணம் தான் சார் , ஆனா அரசியல்வாதீட்ட இருக்கு சார் "
என்றார் . அப்ப வோட்டு மாத்தி போட்டா சரியாடுமா அப்புறம் ஏன் எல்லா
ஆட்சிலயும் ஊழல் நடக்குது என்று கேள்விகேட்டுவிட்டு , இதில் ஆதாயம்
அடைந்தது முதலாளிகள் என்று அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டபின் "ஆமாம்
சார் நீங்க சொன்னவுடனே தான் சார் தெரியுது " என்றார் .இது மக்களுக்கான
அரசு அல்ல முதலாளிகளுக்கான அரசு என்று சிறிது விளக்கம் கொடுத்த பின்
புரிந்து கொண்டார் ."ஏன் டாட்டா வீட்ல எல்லாம் ரைட் நடக்கல , ராஜா வீட்ல
மட்டும் நடக்குது " என்று கேட்டவுடன் பணிவாய் சிரித்தார் "தெரியலைங்க "
என்றார் .

அடுத்து 28 வயதை ஒட்டிய இருவரை சந்தித்தேன் . அதில் ஒருவர் ராமேஸ்வரம்
இன்னொருவர் கடையநல்லூர் .
கடையநல்லூரை சேர்ந்தவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் , குரூப்
ஒன்ணிற்கு தன்னை தயார் படுத்திவருகிறார் .
இன்னொருவர் TVS BPO அதில் வேலை செய்பவர் . இருவரும் மதுரையில் ஒன்றாய்
கல்லூரியில் படித்தவர்கள் .
குரூப் ஒன் படிப்பவர் ஆர்வமாய் பதில் அளித்தார் , அவருக்கு புள்ளி
விவரங்கள் எல்லாம் தெரிந்து இருந்தது .
ஆனால் பொதுபுத்தி ஏற்ப்படுத்தி இருக்கும் தாக்கங்களால் "ஊழலுக்கு
காரணம் அரசியல்வாதி தான் சார் " என்றார் .நான் எளிமையான கேள்வி கேட்டேன்
" இந்த பணம் எல்லாம் யார்ட்ட இருக்கு ,ராஜா மட்டும் சட்ட பாக்கெட்ல
போட்டுக்கிட்டார " "இல்ல நிறைய பேருக்கு பங்கு கண்டிப்பா இருக்கும் சார்
,சரிங்களா " என்றார் . புள்ளி விவரங்களை வைத்து அவருக்கு இந்த பணம்
எல்லாம் முதலாளிட்ட இருக்கு " ஏன் டாட்டா வீட்ல எல்லாம் ரைட் நடக்கல ,
ராஜா வீட்ல மட்டும் நடக்குது " . என்று கேட்டவுடன் "கண்டிப்பா நடத்தனும்
சார் " என்றார் . "நிரா ராடியா டேப் கேட்டா , அமைச்சர டாடா முடிவு
பண்றாரு எப்படி அவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்புறீங்க சார் "
என்றவுடன் சிரித்து விட்டு "பெரிய இடத்து விஷயம் சார் புரியுது , ஆனா
நாம என்ன பண்ண முடியும் " விடயத்தை புரிந்து கொண்டார் இப்படி
விரக்க்த்தியாய் பதில் சொன்னார் .

அடுத்து TVS அதில் வேலை செய்யும் அவர் நண்பரிடம் "இதெல்லாம் பற்றி
உங்களுக்கு ஐடியா இல்லையா?"
என்று கேட்ட பொழுது " எனக்கு பொலிடிக்ஸ் எல்லாம் intrest இல்ல சார் ,
தெரியாத விசயத்துல என்ன பேச "
என்றார் , நடுத்தரவர்க்கம் பார்ப்பதற்கு மாடர்ன் இளைஞர் போல இருந்தார்
."சரி இந்த ஊழலில் நீங்கள்
பாதிக்கபடவில்லைன்னு நினைக்குறீங்களா " என்று சொன்னவுடன் தோளை
குளிக்கினார் . மடைதிறந்த வெள்ளம் போல் பதில் சொல்லாமல் மணிரத்தின படம்
போல் ரத்தின சுருக்கமாய் " நோ ஐடியா " என்றார் .

அடுத்தது ஒரு இன்போசிஸ் இளைஞர் , மைசூரில் வேலை செய்கிறார் .
ஸ்பெக்ட்ரெம் ஊழல் என்று சொன்னவுடன்
மடைதிறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார் . இதுல முதலாளிகளுக்கு எல்லாம்
சம்மந்தம் இருக்கு என்றார் ஆணித்தனமாய் . கரெக்ட்டான புள்ளி விவரங்கள்
சரியான பார்வை . சரி இது எல்லாம் எப்ப மாறும்னு நினைக்கிறீங்க " என்று
கேட்டவுடன் நம்ம அரசியல் அமைப்பையே மாத்தனும் சார் , இந்த அமைப்புல
இருந்தா யார் வந்தாலும் ஊழல் தான் நடக்கும் சார் என்றார் . ஆச்சர்யமாய்
இருந்தது இன்போசிசில் வேலை , ஆனால் ஆழமான பார்வை என்று அவர் பூர்வீகத்தை
கேட்டபொழுது , அவர் ஈரோட்டுக்காரர் . விசைத்தறியில் வேலை பார்த்து
சேலை நெய்யும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் . முதலாளிகளுக்கு
கரண்ட் இலவசமாய் கொடுக்கிறார்கள் , இங்கே ஈரோட்டிலே விசைத்தறி வைத்து
இருக்கும் சிறுமுதலாளிகள் தமிழ்நாட்டில் மின்சார
பற்றாகுறையால் பாதிப்பு அடைகிறார்கள் என்றார். அவர் நண்பரின் வாழ்கையை
சொன்னார் , நண்பர் சொந்தமாய் விசைத்தறி வைத்து இருப்பவர் , முன்பு
கூலிக்கு வேறொரு இடத்தில் வேலை செய்தவர் . ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி
நேரம் வேலை செய்தால் இரு சேலைகளை நெய்ய முடியும் , ஒரு சேலைக்கு அறுபது
ருபாய் போல இரண்டு சேலைக்கு 120 ரூபாய் கூலிக்கு வேலை செய்து
கொண்டிருந்தார் நண்பர் . பின்பு கடன் வாங்கி 25000 ரூபாய்க்கு
சொந்தமாய் விசைத்தறி வாங்கி இருக்கிறார் , அப்பொழுது தமிழக சூழலில்
மின்சார பற்றாக்குறை , அதனால் இரவெல்லாம் விசைதரியை இயக்குகிறாராம்
நண்பர் , அதனால் அவர் குழந்தைகளால்
தூங்க முடியவில்லையாம் . சொல்லும் பொழுது அழுது விட்டார் . இயல்பான
மனிதர்கள் எவ்வளவு நேர்மையாய் இருக்கிறார்கள் , மென்பொருள் துறையில்
வேலை செய்தால் கூட ?முதலாளிகளால் ஈரோட்டில் ஒரு சிருமுதலாளி எப்படி
பாதிக்கபடுகிறான் , எப்படி முதலாளிகளுக்கு அரசு சலுகை அளிக்கிறது வரி
விளக்கு அவர்களுக்கு எப்படி இருக்கிறது , அதனால் பாதிக்கபடுவது யார்
என்று அழுத்தமாய் பதிவு செய்தார் நண்பர் .அவருடைய அழுத்தமான பதில் " இந்த
அரசியல் அமைப்பையே மாத்தனும் சார் "

அடுத்தது ஒரு mechaanical engineer ,திருச்சிக்காரர் ஆர்வமாய் பதில்
சொன்னார் . "இந்திய GDP அதுல ரிலையன்ஸ் கம்பெனியோட பங்கு அஞ்சு
percentage அது நமக்கு கேவலம் சார் " என்றார் . இந்த ஊழலுக்கு யார்
காரணம்னு நினைக்கிறீங்க என்று கேட்டபொழுது , "இருபது வருடங்களுக்கு
முன்னாடி வந்த தனியார்மயம் தான் " என்றார் .சுக்ராமில் இருந்து ராஜா வரை
செய்த ஊழலை பட்டியலிட்டார் .ரிலையன்ஸ் வெளிநாட்டின் கால்களை உள்நாட்டு
கால் போல காட்டி ஊழல் செய்ததை எல்லாம் அழகாக விளக்கினார் ."ஊழலுக்கு
காரணம் தனியார்மயம் " என்றார் . "இதை எல்லாம் பகிர்ந்துகொள்ள ஆட்கள்
இல்லை என்றார் " . "டாட்டாவும் மற்ற முதலாளிகளும் தான் பிரதான
குற்றவாளிகள் சார் " என்றார் .முதலாளித்துவம் தன்னை எப்படி சுரண்டுகிறது
என்று வாழ்வியல் அனுபவம் கொண்டும் விளக்கினார் . இந்த அமைப்பு மாற
வேண்டும் என்பதில் ஆணித்தனமாய் இருந்தார் .

அடுத்து பார்த்தவர் ஒரு பத்திரிகை நிருபர் , அவரிடம் ஊழலுக்கு காரணம்
யார் , யாருடைய பணம் என்று கேள்விகள் வினவிய பொழுது "முதலில் அத்தனை
கோடிகளுக்கு எத்தனை ஜீரோ என்று சொல்லுங்கள் " என்று அறிவாளித்தனமாய்
கேட்டார் . எவ்வளவு கேட்டும் கலாய்க்கும் நோக்கத்திலேயே இருந்தார் .
"சரி ஜீரோ தெரியாத
பாமரன் ஊரில் இவ்வளவு ஊழல் தேவையா ?" என்று கேட்டதற்கு பான்பராக் மென்ற
வாயுடன் " முதல எத்தன ஜீரோ சொல்லுங்க சார் " என்று ஏளனமாய் சிரித்தார் .
மனிதர் உலக நாவல் எல்லாம் படித்து இருக்கிறாராம் என்ன பிரயோஜனம் ,
உள்ளூரில் கொள்ளை அடிப்பது யார் என்று தெரியவில்லை .

அடுத்து பார்த்தது ஒரு போக்குவரத்து ஊழியர் " யார் சார் ஊழல் பண்ணல நான்
பண்றேன் நீங்க பண்றீங்க TV இருந்தாலும் ஓசி TV வாங்குறோம் , காசு
வாங்கிட்டு வோட்டு போடறோம் , அதனால இது எல்லாம் தடுக்க முடியாது சார் "
என்றார் . உடனே நான் எல்லாம் ஊழலும் ஒன்றா என்று கேட்டவுடன் , "ஆம் ஒன்று
தான் " என்றார் . "இந்த ஊழலில் ராஜா மட்டுமே குற்றவாளியா என்று
கேட்டதற்கு "அதெப்படி இதுல டாட்டா அம்பானி எல்லாருக்கும் பங்கு இருக்கு
சார் " என்றார். ஆனால் மக்களும் ஊழல் செய்கிறார்கள் என்றும் சொன்னார் .
தனியார்மயம் ஊழல் மிகுந்தது என்பதை புரிந்துகொள்ளும் அவர் அனைத்து ஊழலும்
ஒன்றானதே என்ற கருத்தையும் வைத்து இருந்தார்.

அடுத்து பார்த்தது ஒரு engineer நடுத்தர வர்க்கம் "இது எல்லாம் பெரிய
இடத்து சமாசாரம் சார் என்றார் " சரிங்க அதுல இருக்கறது நம்ம பணம் தானே
என்று சொன்னவுடன் . "அரசியல்வாதிகளுக்கு தான் சார் இதுல பங்கு இருக்கு "
என்றார் . "இதுல ஆதாயம் அடைஞ்சது யார் "என்று கேள்வி மேல் கேள்வி
போட்டவுடன் "
அதெப்படி தப்பாகும் இவங்க நினைச்சா கை எழுத்து போடாமே இருக்கலாமே
தப்பு வந்து அரசியல் வாதி மேல தான் சார் " என்றார் . அப்பா இதையெல்லாம்
சட்டமாக்கிட்டா ஏத்துக்குவீங்க பொது சொத்த யார் வேணாலும் விற்கலாம்
என்று சொன்னபொழுது " சார் அவங்களால முடியுது வாங்கறான் சட்டப்படி தானே
சார் முதலாளி வாங்குறான் " என்றார் . அவர் மனைவி கேள்வி கேட்க
ஆரம்பித்தவுடனேயே ஒதுங்கி நின்று கொண்டார் . அவர் மனைவி சைகை காட்ட
அவரை நோக்கி நடந்துகொண்டே "வரேன் சார்" என்றார் .


அடுத்து வெளியில் ஒரு ஆட்டோக்காரர் MGR படம் போட்ட ஆட்டோ . "ஊழலுக்கு
ராஜா மட்டுமே காரணமா " என்று கேட்டபொழுது இல்ல சார் "கனிமொழி தயாளு
அம்மாள் இவங்களும் தான் சார் என்றார் " . "இந்த தபா அம்மா ஆட்சி வருது ,
எல்லாருக்கும் encounter தான் சார் " என்றார் . கொஞ்சம் விளக்கமாய்
அவரிடம் இதற்க்கு காரணம்
முதலாளி தான் என்று சொன்னபொழுது அவரால் புரிந்துகொள்ள முடிந்தது .இந்த
முதலாளிகளும் அடங்க டெல்லீலா அம்மா போல யாரவுது இருக்கணும் என்றார்
ஆடோக்காரர்

அடுத்து சென்னை கடல்க்கரையில் காலன் விற்பவரிடம் . spectrum ஊழல்னு
சொல்றாங்களே அதைபத்தி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது ,
குறுக்கிட்ட அவர் மகள் "அதெல்லாம் அதுக்கு ஒன்னும் தெரியாது சார் அது
எழுத படிக்கல " என்றால் . உடனே கேள்விகளை அவளிடம் கேட்டபொழுது "
நல்லதும் செய்யரானங்க TV எல்லாம் தராங்க , ஊழலும் பண்றாங்க சார் , அவங்க
என்ன பன்றான்கனே தெரியல , ஒவ்வொருத்தரும் ஒவ்வரு மாத்ரி சொல்றாங்க சார்
". சரி "ஊழல்ல
ராஜாவுக்கு மட்டும் தான் பங்கா" என்று கேட்டபொழுது "தெரில சார் ,
அப்படி தான் சொல்றாங்க ஆனா அப்படி எப்படி இருக்க முடியும் எல்லார்க்கும்
பங்கு இருக்கும் , எப்படி அத்தன பணத்த வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்க
முடியுதுன்னு தெரியல சார் " என்றார் . சரி "இந்த கடலை வித்துடுராங்கனு
வச்சுக்குவோம் " அப்படின்னு விளக்கத்தை ஆரம்பிக்கும் பொழுது "ஏற்க்கனவே
2000 கோடி ரூபாய் கொடுத்து வித்துட்டான்கலாம் சார்
சொல்லிக்கிறாங்க ஆனா யாருக்கும் நல்லது செய்யணும்னு மனசு இல்ல சார் ".
ஊழலுக்கு தனியார்மயம் காரணம் என்று விளக்கிய பொழுது புரிந்து கொண்டார்
மேலும் " என்னமோ நாடு முன்னேரிடுசுனு சொல்றாங்க , ஏழைங்க ஏழைங்களா தான்
இருக்காங்க பணக்காரங்க பணக்காரங்களா தான் இருக்காங்க , அம்பானி பலகோடி
ரூபாய்ல வீடு கட்டி இருக்காராம் , இந்த பீச்ல எத்தன பேர் வீடில்லமா
இருக்காங்க , விலைவாசி வேற ஏறுது சார் , ஏழைங்க
என்ன பண்ணும் " என்றார் .

அடுத்து கடற்கரையில் இட்லிக்கடைக்காரர் ஆறுமுகத்திடம் கேட்டபொழுது "இதுக்கு தான்
சார் கேப்டன் வரனும் , சேலத்துல இன்னா ஜனம் சார் பாத்தீங்களா " என்றார்
வெள்ளந்தி மனிதர் . ஊழலுக்கு யார் காரணம் என்று கேட்டபொழுது " இராசா
தான் சார் " என்றார் . "நாட ஒண்டி ஆளுக்கே கொடுக்ககூடாது சார் அதனால
கேப்டன் தான் சார் வரணும் " . அவரிடம் எவ்வளவு பேசியும் முதாலளிகளுக்கு
ஊழலில் பங்கு என்று விளக்க முடியவில்லை " சார் அவங்க அவங்க வியபாரத்த
பாக்குறாங்க , இந்த அரசியல்
நாய்ங்க தான் சார் காரணம் " என்றார் அயோத்திக்குப்பத்துக்காரர் .

அடுத்து அதே கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐயப்பன்
நொச்சிக்குப்பத்துக்காரர், BHEL நிறுவனத்தில் மாதம் 7000 ரூபாய்
சம்பாதிப்பவர் . அவரிடம் ஊழலை பற்றி கேட்டப்பொழுது " ஏஏஎராஸா தான்
காரணம் சார் " என்றார் சரி அப்படியானால் டாட்டவிர்க்கு சம்பந்தம்
இல்லையா என்று கேட்டபொழுது "இன்னா சார் படிச்சவன்
மாதிரி கீரா ? ஈஎராசா தானே sign போடணும் இது தெரியமா கீரையே சார் "
என்றார் . மேலும் "போதைல பேசுறேன்னு நினைக்காத சார் இந்த அரசியல்வாதிட்ட
துட்ட புடிங்கிட்டா ? எங்க குப்பத்துல இருக்குறவங்க ஏன் இந்தியாவே
சாப்பிடலாம் சார் , அமெரிக்கால ஏன் உசந்த கட்டடமா இருக்கு , அங்க டாலர
சுத்த விடறான் சார் இங்க துட்ட பதுக்குறான் சார் " என்றார் .

"இல்லா துட்டும் ச்விச்ஸ்ல இருக்காம் சார் இவன் நினச்சா விசாரிச்சு
மக்களுக்கு தரலாம்ல சார் " என்றார் . மேலும் "அந்த துட்ட எடுத்தா ,
இந்தியா அமெரிக்காக்கு கடன் தர அளவு இருக்காம் சார் " . "துட்ட அடி
வேனம்கள , மக்களுக்கும் செய் இந்த MGR அதத்தான் பண்ணாரு , ஆனா ஏஏஏஎராஸா
அடிச்சதுல மன்மோகன் சிங் பாவம் தலைல கைய வச்சுட்டாராம் " "நான் இந்திய
டுடே படிப்பேன் சார் என்றார் ". முதலாளிகள் சட்டப்படி செய்கிறார்கள் அது
வியாபாரம் , ஆனால் கையெழுத்து போட்ட ராசா மற்ற அரசியல்வாதிகள் செய்வது
தான் தவறு என்ற கருத்தில் ஆணித்தனமாய் இருந்தார் .