Friday 18 February 2011

தமிழக மீனவனின் உண்மையான எதிரி

தமிழக மீனவர்கள் கடலிலே கொல்லப்படும் பொழுதெல்லாம் அமைதியை இருந்துவிட்டு , இப்பொழுது மட்டும் கனிமொழி போன்றவர்கள் போராடுகிறார்கள் , மேலும் மத்திய அரசு இதில் இப்பொழுது தலைக்காட்டுகிறது , என்னடா உள்ளர்த்தம் என்று பார்க்கும்பொழுது ஒன்று மட்டும் புரிகிறது , இது வெறும் இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும்
நடக்கும் பிரச்சனையாய் சித்தரிக்கப்படுகிறது , பிரச்னையை எளிதாய் திசைத்திருப்ப பார்க்கிறது .இது போரட்டத்திற்கு நல்லதல்ல ,இலக்கு இலங்கை ராணுவம் , பன்னாட்டு முதலாளிகள் , மத்திய மாநில அரசு என்று இல்லாமல் , இலக்கு வெறும் இடத்திற்காக
மட்டும் சண்டை போடும் ஈழத்து மீனவர்கள் மீது குற்றச்சாட்டை திசைதிருப்புகிறது . நம் உண்மையான எதிரி யார் என்று கண்டுகொள்ள வேண்டும் , இல்லை என்றால் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்பு உள்ளது .

No comments: