Sunday 20 February 2011

பிரபல இயக்குனர் மசாலா இயக்குனரான கதை

"சார் opening Scenla ஒரு காட காட்றோம் சார் , அடர்ந்த காடு அந்த காட்டுல உள்ள மக்களை விரட்டப்பாக்குறாங்க பன்னாட்டு முதலாளிக , அந்த மலைஜாதி சமூகத்துல இருந்து ஒரு இளைஞன் நம்ம ஹீரோ மக்களை திரட்டி போராட்டம் நடத்தறான் , புரட்சி வெடிக்கிறது , எப்படி அவங்கள மீடியால தீவிரவாதியா காட்டுறாங்க , எப்படி அரச எதிர்த்து மக்களுக்கான அரசா மாத்தறான் இது தான் சார் லைன் பிடிச்சுருந்தா சீன் by சீனா கதை சொல்றேன் சார் .படத்துல ஐரோம் ஷர்மிலா மாதிரி ஒரு கேரக்டர் , பினாயக் சென் மாதிரி
ஒரு கேரக்டர் , அருந்ததி ராய் மாதிரி ஒரு கேரக்டர் எல்லாம் இருக்கு சார் " என்றான் பத்து வருடமாய் உதவி இயக்குனராய் இருக்கும் வேலவன் . "கதை எல்லாம் சரி பா சென்சார்ல படம் மாட்டிக்கும் , அரசாங்கத்த எதிர்த்து படம் பண்ண முடியாது , அதுவும் நீ அரசியல் அமைப்பே மாறணும்னு கதை சொல்றதலா ,படத்த விட மாட்டாங்க ,நீ வேணும்னா ஒன்னு பண்ணு , அரசாங்கம்னு அரசு நு பேச வேணாம் , ஒரு MLA அவன் தான் வில்லன் சரியா பன்னாட்டு கம்பெனிக்கு விக்கறான் , மக்களை துரத்தரான் , ஹீரோ அவன பழிவான்குரானு கதையா மாத்து ". "சார் இந்த அமைப்பே தாப்பா இருக்குறப்ப , MLA கேட்டவன் அதனால தப்பு பண்ணறான்னு கதையா மாத்தின படத்துல உண்மையான அரசியல எப்படி சார் சொல்ல முடியும் " "சினிமால எல்லாமே காசு தான் பா ? ஏன் நாளைக்கு அதே பன்னாட்டு கம்பெனி உனக்கு FINANCE செய்ய வரலாம் வேண்டான்னு சொல்வாய "
அமைதியாக இருந்தான் வேலவன் .

ஐந்து வருடங்களுக்கு பிறகு
CLIMAX 1 :
கொத்தா யாருடா அது framela . Lightaa கட் பண்ணு , தினேஷ் மாஸ்டர் வந்துட்டாரா ? randy சார் ஓகே வா ? டேக் போலாமா ? "சார் நீங்க நல்ல உரசிக்கிட்டு நிக்குறீங்க ,உதட்ட பாக்குறீங்க டக்குன்னு கடிக்கீறீங்க ,ரெயின் effect , RANDY சார் heroine லிப்சுக்கு closeup வையுங்க " என்று கணீரான குரலில் வேலவன் ........................... "சார் நாளைக்கு fight சீன் , போன படத்துல பத்து பேர் , இந்த படத்துல நூறு பேர பறக்க விடுறீங்க பயப்படதீங்க ரெண்டு பேர தான் அடிக்கிறீங்க ஸ்க்ரீன்ல 100 பேரா கட்டறோம் "

CLIMAX 2 :
சினிமாவில் கதை சொல்ல முடியாது என்று புரிந்து கொண்ட வேலவன் . இன்று கிராமம் கிராமமாய் சென்று கலை நிகழச்சிகள் நடத்துகிறான் , மேடை வேறு தான் புகழ் கூட கம்மி தான் , வசதி கம்மி தான் . கலைஞன் என்றால் சினிமா மட்டுமே எடுக்க வேண்டுமா என்ன , கலைங்கனுக்கு தேவை ஒரு மேடை மட்டுமே .

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

:))

ம.தி.சுதா said...

அடடா வித்தியாசமாயிருக்கே.... கலக்கல் தான்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

குறையொன்றுமில்லை. said...

ஆஹா வித்யாசமானபதிவுதான்.

குறையொன்றுமில்லை. said...

ஆஹா, வித்யாசமானபதிவுதான்.