Wednesday 24 February 2010

சச்சின் பதிவும் பிரபாகரின் பின்னூட்டமும்

பிரச்சனைக்குரிய விஷயங்களை எழுதுவது பிரச்சனைக்காக மட்டுமே அன்றி பிரபலமாக அல்ல ,,,, உங்கள் குறுகிய பார்வை வருத்தம் அளிக்கிறது .............................!!!!!
இலக்கியம் என்பதே காலத்தை பிரதிபலிப்பது .....................உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காய் ரோட்டில் போகும் வரும் பெண்ணை கற்பழிக்க முடியுமா ...............!

சரி உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம் .................ஏன் விளம்பரத்திற்கு வருகிறார்கள் ......எத்தனை சூதாட்டம் .....................!

நீங்கள் சொன்ன positive விடயங்களை பார்த்து பார்த்து தான் நாம் தவறுகளை தட்டி கேட்கப்தில்லை ..........தட்டி கேட்டால் ஆதரவு தெரிவியுங்கள் .........................

முடிந்தால் கருத்துடன் மோதுங்கள் .................அது என்ன பிரபலமாய் ஆவதர்க்காய் எழுதுவது .................
எனக்கு புரியவில்லை ........சச்சின் பற்றி புகழ்ந்து எழுதினாலும் பிரபலம் ஆகலாம்....?????

அடுத்தவர்களுக்கு வாக்குகள் போட்டால் நமக்கு வாக்கு போடுவார்கள் ...பின்னூட்டம் இட்டால் பின்னூட்டம் போடுவார்கள் ...................அதனால் நான் யாருக்கும் வாக்கு அளிப்பதில்லை பின்னூட்டம் போடுவதில்லை .......
படிப்பவர்கள் படிக்கட்டும் ....................

தைரியம் இருந்தால் நீங்களும் எழுதுங்கள் ............ஏன் பிரச்னையை கண்டு பயப்பட வேண்டும் .ஐரோம் ஷர்மிளா பிரபலமானவரா................தசரத் மஞ்சித் பிரபலமானவரா............ ஏன் நான் நமீதா .................
நான் கேட்ட A R ரகுமான் இசை, சாப்பிட்ட சாப்பாடு பற்றி எழுதினால் அருமை என்பீர்களா


முடிந்தால் கருத்துக்களுடன் மோதுங்கள் ........உங்கள் கருத்து சரியாக இருந்தால் ஏற்று கொள்கிறேன் .........இங்கே பதிவுகளம் முதலில் வந்த போது சந்தோஷமாய் இருந்தது . நண்பன் அரவிந்த் நண்பன் பாலசி ,ஈரோடு கதிர் வால் பையன் வண்ணத்து பூச்சி கேபிள் சங்கர் அகல் விளக்கு பேனா மூடி .ரோஷ்விக் என்று நிறைய நண்பர்கள் இருந்தார்கள் .....................!

போக போக எனக்கு வெறுப்பு வந்து விட்டது. நாம் படித்து வாக்கு போட்டால் தான் மற்றவர் வாக்களிப்பார் .இங்கே எழுதுவதை விட நண்பர்களை சேர்ப்பது தான் நம்மை பிரபலமாக்கும். நீ வாக்கு அளிக்கிறாயா நான் வாக்களிப்பேன் எனக்கு பிடிக்க வில்லை என்றாலும். இது என்ன கொடுமை. நான் அப்படி எல்லாம் வாக்கு கேட்டு பிரபலமாக வில்லை. என்னை படிப்பவர்கள் படிக்கட்டும் என்று நான் படித்த சில விடயங்கள் பிடித்திருந்தாலும் வாக்கு செலுத்துவதில்லை.

எனக்கு தெரிந்து ஒரு சாதாரண பதிவு பன்னிரண்டு வாக்கு வாங்குகிறது ஐரோம் ஷர்மிளா பதிவு வாங்குவதில்லை. எனக்கு தெரியாதா சச்சின் சாதனை மன்னன், என்று எழுதினால் எனக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்.சினிமாவில் எப்படி விளம்பரம் தேவைப்படுகிறதோ அதை போல பதிவுலகத்திலும் விளம்பரம் தேவை படுகிறது. என்ன சொல்ல?????????????

நம்மை சுற்றி பாசிடிவாக தான் நடக்கிறதா என்ன??????? எந்த பிரச்சனையையும் பற்றி கவலை இல்லை சச்சின் சதம் அடித்தால் போதும் என்பது பாசிடிவான விடயமா சொல்லுங்கள் பிரபாகர்........!!!!!!!!!!!! மயில் ராவணன் சொல்லி இருந்தார் ...தப்பான வார்த்தைகள் என்று ......சச்சின் விளம்பரங்கள் நடிக்காமல் இருப்பாரா?????????????????????சொல்லுங்கள் .....................

சரி யார் சொன்னது எல்லாரையும் மடையர்கள் என்று ...........................???????இதில் சச்சின் விளம்பரத்தை பற்றி தான் சொல்லி உள்ளேன்...............????? நீங்கள் கருத்துடன் மோதவே இல்லையே முடிந்தால் கருத்துடன் மோதுங்கள் .................. நீங்கள் சொல்வது தனி மனித தாக்குதல் கருத்துடன் மோதுங்கள் இல்லை கிரிக்கெட்டில் அரசியல் நடக்கவில்லை என்று சொல்லுங்கள் ....அதை விடுத்து சிறுபிள்ளை தனமாய் பிரபலமாக எழுதுகிறேன் இது எல்லாம் பேச்சே இல்லை.......நீங்கள் இட்ட பின்னூட்டம் பதிவிற்கு இருக்க வேண்டுமே தவிர எனக்கு இருக்க கூடாது . கருத்துடன் மோதாமல் இப்படி தனி மனித தாக்குதலில் நீங்கள் நான் சொல்வதை ஒத்துக்கொள்வதை போல் உள்ளது.....! இப்படி எழுது அப்படி எழுது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.


http://vennirairavugal.blogspot.com/2010/02/blog-post_24.html

சச்சின் இரட்டை சதமும் ஜட்டி விளம்பரமும்
























என் தம்பியிடம் இருந்து ஒரு குறுதகவல் " SACHIN HITS 200 BE PROUD TO BE A இந்தியன்" என்று ஒரு குறுந்தகவல் வந்தது .எனக்கு படிக்கும் போது கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது . எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க சச்சின் ஒரு கடவுள் அளவிற்கு பார்க்கபடுவது ஏன். நான் ஒரு காலத்தில் சச்சினின் தீவிரமான ரசிகன் , இந்த விளையாட்டு எல்லாமே அரசியல் என்று தெரிந்தவுடன் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். முன்பெல்லாம் இருக்கும் ஆர்வம் இப்பொழுது இருப்பதில்லை.

சரி அப்படி என்ன தான் அரசியல் விளாயாட்டு தானே என்று ஒரு சிலர் நினைக்கலாம். இந்த விளையாட்டில் கோடிக்கணக்கான பணம் புரண்டு கொண்டிருக்கிறது. இந்திய கோவிலில் சச்சின் ஒரு கடவுள். கடவுள் விளம்பரம் வரும் பொருட்கள் விற்பனை அதிகம். கடவுள் சொல்லி வாங்கமலா இருக்கப்போகிறார்கள். பெப்சி பூஸ்ட் விக்டர் ரீபோக் என்று சச்சின் வரும் விளம்பரங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

இந்தியா கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிகம் மக்கள் தொகை உள்ள நாடு. அதுவும் கிரிக்கெட் எங்க ஊரு கிராமங்களில் கூட நல்ல ரீச். படம் பார்க்காமல் இருக்கும் பையன் இருப்பான் கிரிக்கெட் விளையாடாத பையன் இருப்பான என்பது சந்தேகமே. இது பெப்சி கோக் போன்ற முதலாளிகளுக்கு நன்றாய் தெரியும். இந்தியா வெற்றி பெற்றால் சச்சின் டோனி அடித்தால் விளம்பரங்கள் கூடும் என்பதே உண்மை. மக்களிடம் தங்கள் பொருட்களை கொண்டு போய் சேர்க்கலாம்.

முன்பொரு காலத்தில் எப்படி அழகி போட்டி இருந்ததோ , அப்படி கிரிக்கெட் ஆகி விட்டது என்றால் மிகை அல்ல .இந்தியாவை சேர்ந்தவருக்கு ஏன் உலக அழகி பட்டம் கொடுக்க வேண்டும் . பொருட்களை விற்பனை செய்யவே. இந்தியா போன்ற மூன்றாம் நாடுகள் வணிகத்திற்காகவே இருக்கின்றன.

இப்பொழுது எல்லாம் வெளியூர்களில் இந்தியா வெல்வதை பார்க்கலாம். முன்பெல்லாம் இந்தியா வெளியூரில் ஆடும் பொழுது ஆடுகளம் எகுரும் சச்சின் தவிர அனைத்து வீரர்களும் திணறுவார். இப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியா போனால் கூட அந்த அளவு எகுரவதில்லை இந்திய விளையாட வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட ஆடுகளங்கள் .ஒரு அளவு வெற்றி பெற்றுவிட்டால் வெளியூரில் ஜெயித்தார்கள் என்ற பேரு வேறு.

எதற்கு இந்த IPL இதுவும் பணம் சம்பாதிக்கவே. இப்பொழுதெல்லாம் படம் பார்ப்பது போல கிரிக்கெட் பார்க்கிறேன்.படத்தில் தோன்றுவது பிம்பமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது, அதை நாம் ரசிக்கிறோம் அதை போல ரசிக்கிறேன்.

இந்த கிரிக்கெட் விளையாட்டு ஒருவனை பித்தனாய் ஆக்குகிறது. டீ கடை முதல் ஆபீஸ் வரை இதே பேச்சு. பேசாதவர்கள் கூட ஸ்கோர் கேட்கிறார்கள். நாமெல்லாம் ஏன் பெரிய பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக்கொள்கிறோம்.நமக்கு கிரிக்கெட் தவிர எந்த பிரச்சனையையும் தெரிவதில்லை.

வெறும் கிரிக்கெட் மற்றும் கலைஞர் இலவசதொலைக்காட்சி நம் புத்தியை மழுங்கடித்துவிடும். ஈழ பிரச்சனை நடக்கும் போது அங்கே போய் சச்சின் அடித்தாலும் நாம் ரசிப்போம். இது உண்மையிலேயே நடந்தது. இலங்கை போர் நடந்த போது
இந்தியா விளையாட அழைக்கப்பட்டது ,இலங்கை பொருளாதரத்தை சரி செய்ய. பொருளாதாரம் வைத்து ஆயுதம் வாங்குவான் நம் குழந்தையை கொள்ளுவான் இந்த அரசியல் ஏன் நமக்கு புரியவில்லை.

பக்கத்துக்கு வீட்டுக்காரன் செத்தாலும் நாம் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்போம். நம் புத்தி மழுங்கடிக்கப்பட்டு விட்டது. கிரிக்கெட் என்ற விளையாட்டில் தான் இந்திய உணர்வு இருக்கிறதா??? நாமெல்லாம் அரசியலை விளையாட்டாய் விளையாட்டை அரசியல் போல முக்கியத்துவம் வாய்ந்ததாய் பார்த்துக்கொண்டிருக்கிறோம் . இந்தியா உலக சந்தைக்கு கோயம்பேடு போல ஆகி கொண்டிருக்கிறது

சச்சின் ரெட்டை சதம் போட்டதால் ஒரு ஜட்டி விளம்பரம் கூட கிடைக்கும்,மற்றபடி வேறு ஒன்றும் பெரிதாய் மாற்றம் ஏற்படபோவதில்லை.

Tuesday 23 February 2010

7G ரெயின்போ காலனி
















அனிதாவின் காதலுக்கு எதிர்ப்பு சொல்லி ஆறு மாதம் ஆகிறது. முதல் மூன்று நாள் சாப்பிடாமல் அடம் பிடித்தாள்.அப்புறம் பரவாயில்லை. இப்பொழுதெல்லாம் வீட்டில் கலகலப்பாய் இருக்கிறாள். ஆனால் மறுபடியும் அவள் செல் போன் நோண்டிக்கொண்டே இருப்பது அவள் அப்பனுக்கு சுத்தமாய் பிடிக்கத்தான் இல்லை. போர்வை மூடிக்கொண்டு இருப்பாள் நம்பர் அமுக்கும் சத்தம் மட்டும் அவருக்கு கேட்கும். குறுந்தகவல்கள் இரண்டு மணி வரை செல்லும். பெண் பெற்றவர் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பார்.

ஆம் ஆறு மாதம் முன்பு வரை கதிர் என்பவனை காதலித்தாள். அவன் பக்கத்துக்கு வீடு. இவள் 7g ரெயின்போ காலனியை சேர்ந்தவள். அவன் 7H . பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு அதனால் காதல் வளர்ந்தது. இது இவள் வீட்டிற்கு தெரிய அவன் வைத்திருந்த புகைப்படங்களை எல்லாம் இவர்கள் வீட்டில் பிடுங்கினார்கள். அவ்வளவு ஆழமாய் தான் இருந்தது இவர்கள் காதல்.

இருவரும் மொட்டை மாடியில் சந்தித்து கொண்டனர். சத்யம் மாயாஜால் சென்றனர். பீச் மணல் கால் தடம் சொன்னது இவர்கள் காதலர் என்று. ஒரு நாள் இவர்கள் இருவரையும் வெளியில் பார்த்த அப்பா கோவிக்க அன்றில் இருந்து இருவரும் பார்க்க கூடாது பேசக்கொடது என்று கட்டளை இட்டார். அப்பொழுதெல்லாம் நான் செத்துருவேன் அனிதா என்ற பாணியில் கதிர் மூஞ்சியை வைத்துக்கொள்வான். அவளும் நானும் சாகத் தான் போகிறேன் என்ற பாணியில் முகம் வைத்துக்கொள்வாள்.

ஆனால் அப்பா பேசக்கூடாது என்று சொன்னவுடன் மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தாள்.அப்புறம் நன்றாய் தான் இருந்தாள். இப்பொழுது மறுபடியும் சில நாட்களாய் குறுந்தகவல்கள். சரி பெண் அவ்வளவு ஆழமாய் காதல் செய்கிறாளா என்று அவர் தந்தை யோசித்தார். பையன் வீட்டில் பேசினார் ,பையன் வீட்டில் எப்பொழுதுமே பச்சை கொடி தான். இவள் தந்தை மனமிரங்கி பெண்ணிற்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டுமென்று பையன் வீட்டில் சம்மந்தம் பேசி விட்டார். பையன்னிர்க்கும் தெரியாது பெண்ணிற்கும் தெரியாது.

அனிதா வீட்டிற்கு வந்தாள். "உனக்கு கதிர் தான் மாப்பிள்ளை" என்று அப்பா சொன்னார் ............அதிர்ந்த அனிதா "அப்பா இப்ப கதிர காதலிக்கல ஷாம் அப்படின்னு ஆபீஸ் ல ஒருத்தன் இருக்கான்" என்று சொல்லிக்கொண்டிருந்த வேலையில் பெசென்ட் நகர் பீச்சில் " நீ இல்லாம இருக்க முடியாது " என்று அனிதாவிடம் சொன்ன அதே வசனத்தை அனிதா என்ற பெயரல்லாத யாரோ ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தான் கதிர்.

Monday 22 February 2010

தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன்























"பாராட்டு விழா எனக்கு வேண்டாம்"
என்று அறிக்கை விட்டார் அரசன்.....!
மந்திரிகள் புரிந்து கொண்டு ...........
நாள் ஒரு துறைக்கு பாராட்டு விழா
நடந்தது ..........!

கொலை கூட செய்தார்
அரசன் .......!
"என்ன அழகாய் கொலை செய்கிறார்"
என்று கவியரங்கம்...........
பாராட்டு .....!

ஒரு கவிஞன்
பாராட்டினான் "நீ கொலை செய்து
எங்களை உயிர்பித்தாய்
என் உயிர் பித்தாய்" என்று
வார்த்தையில் விளையாடினான் ...!

வார்த்தையில் விளையாடிவிட்டு
எனக்கு பணம் வரவில்லை என்று
புலம்பிக்கொண்டு போனான்.........!

"நீ சாப்பிட்டதால் நாங்கள் பசியாறினோம்"
என்று சொன்னான் விவசாயத்துறை
அமைச்சர்....!

"உங்கள் வீடு ஒளிர்கிறது நாடு ஒளிர்கிறது"
என்று சொன்னான் மின்துறை அமைச்சர்....!

"உன் மகள் கவிதை எழுதுகிறாளா
சரி தமிழ் மாநாடு நடத்திவிடலாம் அரசரே" என்றான்
கலைத்துறை மந்திரி....!

கடைசியில் அரசன் சொன்னான்
"நாட்டிற்க்கு உண்டான அனைத்து சாலைகளும்
என் வீட்டிலிருந்தே தொடங்குகிறது,
என் மகளுக்காய் மகளிர் மாநாடு
என் பேரன் தலைமை தாங்க வேண்டுமே இளைஞர் மாநாடு,
ஒரு மகனுக்கு பாண்டிய நாடு,
இன்னொரு மகன் அடுத்த தலைவன் "

"நாடு நன்றாய் இருக்கிறது" என்றான்
மக்கள் அமைச்சர் முழித்தனர் .................!
"எனக்கு நாடு தான் வீடு வீடு தான் நாடு
என் வீடு நன்றாய் இருக்கிறது நாடு நன்றாய் உள்ளது ............
எனக்கு பாராட்டு விழா வேண்டாம் "
என்றான் ..........!"

கலைத்துறை உடனே ஏற்பாடு செய்தது
"வீடை நாடாய் கருதும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்று .......
கலைத்துறையின் ஒரு தலை கொதித்தது ......................
எதற்கு நான் வர வேண்டுமென்று
'தலை' துண்டிக்க ஆணையிடப்பட்டது ...........!

"தமிழ் உணர்வு என்றால் அரசனை பாராட்டுவது ,
அந்த உணர்வு இல்லை நீ தமிழன் இல்லை
என்று அந்த 'தலை' துண்டிக்க பட்டது
தண்டிக்க பட்டது .........!

நூறாம் அகவையில் தனக்கு
தானே சிலை வைத்தான் தானை
தலைவன் ............!
வரலாறு எழுதியது
"தனக்கு தானே சிலை வைத்த தானை தலைவன் என்று"
கலைத்துறை அப்பொழுதும் பாராட்டு விழாவிற்கு
தயாரானது ............!

Sunday 21 February 2010

பாராட்டு விழாக்களும் போராட்டங்களும்

















நம் தமிழகம் கண்ட முதல்வர்களில் எண்பது சதவிகிதம் கலைத்துறையை சேர்ந்தவர்கள். சினிமா நம் மக்களை எவ்வளவு தாக்கி உள்ளது என்பதற்கு இது சான்று. இது நம் மக்களின் சமான மனநிலையை பிரதிபலிக்கிறது.திரையில் நல்ல பிம்பம் என்றால் வெளியிளிலும் நல்லவன் என்ற பிம்பம் இருந்து கொண்டே இருக்கிறது.நன்றாய் தமிழ் தெரிந்திருந்தால் நீங்கள் மாபெரும் தலைவனாகலாம் இங்கே. சமீபத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது போல ஈழ பிரச்சனை ஹொகேனகல் பிரச்சனை காவிரி பிரச்சனை என்று திரை உலகம் திரண்டு வந்துகொண்டிருக்கிறது.

ஒரு மேடையில் சத்யராஜ் ரஜினிகாந்த் அவர்களை தரக்குறைவாய் பேசினார். கன்னட மாநிலத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக. அவரும் ஹொகேனக்கல் பிரச்சனை என்பதற்காய் வந்துள்ளார் மேடையில் அமர்ந்திருக்கிறார். சரி சத்யராஜ் சொல்வதற்கு வருவோம் சரி ரஜினிகாந்த் முதல்வரா , மாண்புமிகு முதல்வர் தமிழர் தானே அவரை கேட்கவேண்டுமா ரஜினியை கேட்கவேண்டுமா. இப்பொழுது அந்த பிரச்சனை என்ன ஆனது என்று ஊடகங்களில் சரியான செய்தி இல்லை. இதை தான் அஜித் அவர்கள் sensitive விஷயங்களை முதல்வரிடம் கேளுங்கள் என்று சொன்னதிலே என்ன தவறு.


















சரி ஈழ பிரச்சனை போது நடிகர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பில் என்ன நடந்தது. ஈழத்துக்கான விடிவு ஏதாவது கிடைத்ததா, அந்த நிகழ்வு நடந்த பொழுது சன் தொலைகாட்சி சிம்பு நயன்தாரா பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்த காட்சிக்கு விளக்கு பிடித்தது. அது ஏதொ கலைநிகழ்ச்சி போல விளம்பரங்கள் வேறு. பாரதிராஜா கொதித்து போய் பேசுகிறார் நடிகர்களுக்கு உணர்வு வேண்டும் என்று உண்மை தான் உணர்வு வேண்டும் ஆனால் தன்னை அரசியல் ஆதாயத்திற்காக உபயோக படுத்தும் போது மானமுள்ள நடிகன் வர தேவை இல்லை.

இந்த மானமுள்ள பாரதிராஜா என்ன செய்கிறார் கலைஞர் தொலைக்காட்சியில் தெற்கத்தி பொண்ணு நாடகம் எடுக்கிறார். என்ன பாரதிராஜா ஈழ பிரச்சனைக்கு சங்கு ஊதியவர்களிடமே சரணாகதி அடைந்தார். அந்த சங்கு ஊதியவர்களே நல்லவர்கள் போல் வேடமிட்டு உணர்வுகளை காட்டுகிறோம் நீங்கள் வரவேண்டும் என்றால் எல்லாரும் வரவேண்டுமா என்ன????????

இவ்வளவு உணர்வுள்ளவர்கள் போராடுவதை விட முதல்வரிடம் கேட்கலாமே.இல்லை அன்னை சோனியாவிடம் கேட்கலாமே. எதிர்ப்பு காட்டுகிறேன் என்று கூறுவது. சன் தொலைக்காட்சியோ கலைஞர் தொலைக்காட்சியோ படம் பிடிப்பார்கள். விளம்பரம் வேறு போடுவார்கள் . என்ன கொடுமை உண்மையான போராட்டம் என்றால் ஆதரவு தரலாம் ஆனால் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் போராட்டத்திற்கு எதற்கு வரவேண்டும். என்னை பொறுத்த வரை அஜித் ஒரு மானமுள்ள நடிகன்.

அஜித் முதல்வரிடம் கோரிக்கை தானே வைத்தார். அவர் சொன்னது Sensitive விசயங்களை
முதல்வரிடம் கேளுங்கள் என்று. இதில் என்ன தவறு, அவர் திரைத்துறையினரை கேவலப்படுத்தி விட்டார் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை??? ஏன் என்றால் அவர் தெளிவாய் சொல்லி இருக்கிறார் இந்த விழாவிற்கு நான் விருப்பபட்டு தான் வந்துள்ளேன், சென்சிடிவ் விஷயங்கள் அதாவது காவேரி பிரச்சனை போன்ற விஷயங்களை மட்டும் தானே சொன்னார். அந்த சென்சிடிவ் என்பதிலேயே அவர் சினிமா சம்மந்தமாய்
சொல்லவில்லை என்று தெரிகிறதே???

திருமாவளவன் தமிழ் உணர்வு என்று சொல்கிறார். ராஜபக்ஷே நகைச்சுவைக்கு அங்கே சிரித்து விட்டு வந்தார். MP பதிவி அதற்காய் சோனியாவிடம் மண்டியிடுகிறார் . இன்று ரஜினி அஜித்திற்கு தமிழ் உணர்வு இல்லை என்கிறார். தமிழ் பேசத் தெரிந்து தமிழ் நாட்டில் இருந்தால் மட்டும் தமிழன் இல்லை.

என்னை பொறுத்தவரை களத்தில் இறங்கினால் மட்டுமே போராட்டமே தவிர மேடையில் பேசுவது ஆ ஊ என்றால் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது என்றால் பிரச்சனை தீராது. முதல்வர் என்பதே மக்களுக்கு பணி செய்யத்தானே. என்று நடிகர்களை கேட்க்காமல் முதல்வரை கேட்க்கிரோமோ அன்று தான் நம் தமிழகம் முன்னேறிய சமூகம்.

Thursday 18 February 2010

ஆணாதிக்கவாதிகளும் அவர்களை ரசிக்கும் கூட்டங்களும்














சமீபத்தில் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படம் பார்த்தேன் . மூன்று காதல் செய்வாராம் அதையும் நியாயப்படுத்துகிறார் கதாநாயகன். மூன்று பெண்களை பார்ப்பாராம் அதில் எது சிறந்தது என்று செலக்ட் செய்வாராம். ஒரு நாயகிக்கு தெரிந்து விட அவள் கேட்கும் போது "என்ன இருந்தாலும் நீ பொம்பள நான் ஆம்பள " என்ற வசனம் வேறு. "நீ டம்மி பிசு" என்ற வசனம் இதற்க்கு எல்லாம் திரையரங்கில் விசில் பறக்கிறது . அந்த படத்தில் ஒரு காட்சி உருப்படியாய் இல்லை பெண்கள் டம்மி பீஸ் என்று டம்மி பீஸ் விஷால் சொல்கிறார்.

விஷால் பேசிய வசனம் இங்கு முக்கியம் இல்லை. அப்படி வசனம் வரும் பொழுது ஆரவாரம் செய்கிறானே அவன் கட்டாயம் ஆணாதிக்க வாதி .அந்த ரசனை வெறும் கேடுகெட்ட ரசனை. இதை முதலில் தோற்றுவித்தவர் ரஜினிகாந்த் விஜயகாந்த். பணக்கார திமிர் பிடித்த பெண் இருப்பாள் அவளை அடக்குவார் ரஜினியோ விஜயகாந்தோ. இவர்கள் வீரம் எல்லாம் பெண்களிடம் தான். அஜித் பேசும் போது உணர்ச்சிவச பட்டு கை தட்டுவார் அப்புறம் படம் ஓட வேண்டுமே " அப்படி எல்லாம் யாரும் மிரட்டல" என்று காலில்
விழுவார். ஆனால் "just a MINUTE MADAM " என்று பஞ்ச் டயலாக் பேசுவார்.

இவர் பேசும் ஒரு வசனம் "தேடி செல்லும் காதல் காதல் இல்லை நண்பா, உண்மை காதல் என்பது தேடி வந்த காதலே" ........இதையே அந்த பெண்ணின் சார்பாய் எடுத்தோம் என்றால் அவளுக்கு அது தேடி போன காதல் தானே. அப்ப ரஜினி என்ன சொல்கிறார் பெண்ணாய் வரவேண்டும் ஆண் தேடி போக கூடாது இது ஒரு ஆணாதிக்கத்தின் உச்சம்.

சம்பந்தம் இல்லாமல் "நீ விரும்பிற பொண்ண விட உன்ன விரும்பிற பொண்ண காதலிச்சா வாழ்கை சந்தோசமா இருக்கும் என்பார்" . பெண் காதல் தனக்கு வேண்டும் அவளுக்கு தன் காதல் வேண்டாம்????பெண்களை அடக்குவது என்ற பாணியில் எடுக்க படும் படங்கள் மாபெரும் வெற்றி பெறுகின்றன." பெண் ஊரு சுத்தின கெட்டு போய்டுவா ஆம்பள வீட்ல இருந்த கெட்டு போய்டுவான்" என்ற வசனங்களை மட்டுமே பேசி சூப்பர் ஸ்டார் ஆனவர்.
சரி ரஜினியாவது படத்தில் திமிர் பிடித்த பெண்ணை அடக்கினார். விஷால் நான் ஆம்பள அப்படி தான் இருப்பேன் என்கிறார் என்ன சொல்ல???? படங்களில் பெண்களை திட்டினால் கை தட்டுகிறோம் நம் ரசனை கேடுக்கெட்ட ரசனை என்ன சொல்கிறது நாம் ஆணாதிக்கவாதி என்று. நாம் மாறினால் மட்டுமே நம் ரசனை மேம்படும்

என்கௌண்டர்

இங்கு கொலை செய்தவனுக்கு
தண்டனை இரண்டு...........
பணம் பின்புலம் என்றால் அமைச்சராகலாம் .....
இல்லை காவல் துறை துப்பாக்கிக்கு
இரையாகலாம் .....
இரட்டை குவளை முறை போல் ,
எல்லாமே இரண்டு .........!
யார் கொடுத்தது இவர்களுக்கு மரண
தண்டனை கொடுக்கும் உரிமையை ....
நாளிதழ் அடித்து நொறுக்க படலாம்
அமைச்சர் கொலை வழக்குகளில் ஈடு படலாம்
அமைச்சர் ஆகலாம் .......!
ஆளுனராய் இருந்தால் காம விளையாட்டில்
ஈடுபடலாம் ............!
சாமியாரை இருக்கலாம் கொலை செய்யலாம்
காமத்தில் ஊறலாம் ....!
அங்கு எல்லாம் என்கௌண்டர் இல்லை .....!
காசு வாங்கி கொலை செய்தால் ................
செய்தவனுக்கு மட்டும் என்கௌண்டர் ....!

Wednesday 17 February 2010

நன்றி கெட்டது நாயா


அம்மா கூட
தூங்கி இருப்பாள்
அவனுக்காய் காத்துக்கொண்டிருக்கும்
நாய்.....!

தாவி கட்டி
அணைக்கும் காதலி கூட
அப்படி செய்ய மாட்டாள் ....!

ஆனாலும்
நன்றி கெட்டவனை "நாயே"
என்று திட்டத்தான் செய்கிறான் ....
நன்றி கெட்டது நாயா????

Tuesday 16 February 2010

பசி - உலகின் பொது மொழி

பசி மனிதனின் ஆதார உணர்ச்சி.உணவை நோக்கியே மனிதனின் வளர்ச்சி இருந்தது. காட்டுக்குள் இருந்த பொழுது மிருகத்தை அடித்து சாப்பிட்டவன் , பின்பு தனது முதல் கண்டுபிடிப்பான நெருப்பு மூலம் உணவை செம்மை படுத்தினான். உழவு என்ற கண்டுபிடிப்பு கூட உணவு நோக்கியே.

ஆனால் இந்த உணவு எல்லாருக்கும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி???? ஏன் உணவு அனைவருக்கும் கிடைக்க படுவதில்லை.ஒரு சிலருக்கு உணவுகள் கிடைக்க ஒரு சிலருக்கு உணவுகள் கிடைப்பதில்லை. குறிப்பாக ஐந்து நட்சத்திர ஹோடேலில் வேஸ்ட் செய்யப்படும்
உணவுகளில் தெரிவது பணத்திமிர். உலகிலேயே அருவருப்பான செயல் என்றால் உணவை பாதியிலேயே தூக்கி எறிவது என்பேன். உலகில் பாதிக்கு பாதி மக்கள் உணவு பஞ்சத்தில் இருக்கும் பொழுது பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக உணவுகளை தூக்கி போடலாமா???

ஐந்து நட்சத்திர ஹோடேலில் ஒரு உணவின் விலை பல ஆயிரங்களை தொடும். பப்பே சிஸ்டம் என்று கொழுத்து போய் உணவிலே விதவிதமாய் சாப்பிடுகின்றனர். பாதி உணவுகள் குப்பையில் போகின்றன. அதுவும் பார்ட்டி என்றால் நிறைய உணவுகள் மிச்சம் இருக்கும் அனைத்தும் குப்பை தொட்டிக்கே . ஒரு ஆய்வு சொல்கிறது உலகில் இரண்டு அல்லது மூன்று சதவிகித குடி தண்ணீர் அமெரிக்காவில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோடேல்களுக்கு பயன்படுத்த படுகிறதாம்.

தண்ணீருக்கு இப்படி என்றால் உணவிற்கு என்ன சொல்ல??? உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்றாலே தரமான உணவு தான் இருக்கும். மனிதம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. காசு இருப்பவன் சாப்பாடு வாங்கி கூட கொட்டலாம்
ஆனால் உணவில்லாதவனுக்கு தரக்கூடாது இது என்ன வன்முறை . இந்த பார்ட்டி கேளிக்கைகள் என்றாலே எனக்கு வாந்தி தான் வருகிறது . அடுத்தவனுக்கு உணவு இல்லாத பொழுது எப்படி குப்பையில் போடுகின்றனர் இந்த உணவுகளை .உணவுகளை குப்பையில் போடுபவன் குப்பை .ஐந்து நட்சத்திர ஹோடேலிலே சாப்பிடலாம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசலாம் ஆனால் குப்பை குப்பையே.

ஐந்து நட்சத்திர பாரிலே தண்ணி அடித்து இலக்கியம் பேசாதீர்கள் முடித்தால் எவனோ ஒருவனுக்கு ஒரு இருபது ரூபாயில் நான்கு இட்லி வாங்கி கொடுங்கள் . உணவுகளை வீணாக்காதீர்கள் அந்த உணவு ஒருவனுக்கு இருக்கட்டும் பகிர்ந்து உண்ணுங்கள். உணவு வியாபார பொருள் அல்ல ஐந்து நட்சத்திர ஹோடேல்களை தவிருங்கள் . என்னை உலுக்கிய மினஞ்சலில் இருந்த படங்கள். நான் சரியாக எழுதினேனா என்று எனக்கு தெரியாது , ஆனால் கலங்கித்தான் போனேன் .






















என்ன பணத்திமிர்


















ஐநூறு பேர் சாப்பிடலாம் வெறும் பத்து பேருக்கு உணவு



















கீழே கொட்டப்பட்ட உணவு






































பால் வற்றி போன தாய்
அவள் பார்த்த பின்பு
என் கண்ணீர் வற்றவில்லை

























மனித சடலங்கள் ஒரு
பக்கம் குப்பையாய் உணவில்லாமல்
இன்னொரு பக்கம் உணவு
குப்பையாய் .....
குப்பையாய் போய்விட்டான் மனிதன்

















ஏய் குழந்தையே
உன் உணவை காசு கொடுத்து
வாங்கி கீழே கொட்டிவிட்டார்கள்
நாக்கை நீட்டாதே

























இங்கு மானிட
கரி சாப்பிட கிடைக்கும்
























மண்ணோடு மண்ணை மக்கி போய்விட்டேன்
என்னை தோண்டி எடுக்க வேண்டாம்
மானிடனை பார்த்தாலே அருவருப்பாய்
இருக்கிறது ....!





















பசி அனைவருக்கும்
தெரிந்த மொழி .............................
பசி என்று ஒருவன் பேசினால்
உணவால் உணர்வால் பதில் அளிப்போம்

தே மகன்
















சிறுவன்
ரோட்டில் அழுது கொண்டிருந்தான்
நீ யாருடா என்று கேட்டேன் ....
தமிழில் ஒரு வார்த்தை ,
ஹிந்தியில் ஒரு வார்த்தை ,
தெலுங்கில் ஒரு வார்த்தை ,
என்று சேர்ந்த கவிதை நான் என்றான்,
மதம் ஜாதி
சேரும் இடம் என்றான் ,
எல்லா வர்க்கமும் சேரும் இடம்
என்றான் .........!
அப்படி யாருடா நீ என்று கேட்டேன் ......
அவன் அம்மா கண்ணை காட்டி என்னை கூப்பிட்டாள் ......
என்னை தே மகன் என்பார்கள் என்று அவன் கண் சொன்னது ....

Monday 15 February 2010

சுர்ரென்று ஒரு காதல்



















"என்னங்க valentine டே எங்கயாவது போவோம்" என்று தன் செல் போனில் இருந்து குறுந்தகவல் அனுப்பினால் ஸ்னேஹா."வீட்ல யாரும் இல்லையே அப்ப கிளம்பி வரேன் ரெண்டு பேரும் ஊர் சுத்தொவோம்" என்றான் ராமன். வண்டி சீறி பாய்ந்தது besentnagar நோக்கி. பகல் நிலா சூரியனில் காய்ந்து கொண்டு சுடிதார் குடைக்குள் ஒளிந்து கொண்டனர். சுண்டல் விற்பவனுக்கு அன்று நல்ல லாபம். காதல் ஜோடிகள் ரோஜாக்களை விட முத்தங்களை பகிர்ந்து கொண்டனர். பச்சை நீல நிறங்கள் ஆடைகள் அதிகம் இருந்தன. கருப்பு சட்டை போட்ட பையன்கள் காதல் ஜோடிகளை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இருவரும் மதியம் கிளம்பி ஒரு அசைவ உணவகத்தில் சாப்பிட்டனர். A /C ஹோட்டல் இவளுக்கு குளிரியது . அவன் ஜாடை செய்தான் இவள் வெட்கத்தால் சிரித்தாள். இருவரும் ஒரு கிளப் சென்றனர் அதில் ராம் ஆண்டு உறுப்பினர் அதனால் அவனுக்கு எளிதாய் ரூம் கிடைத்தது. இருவரும் உள்ளுக்குள் சென்றனர் மணி இரண்டு அப்பொழுது .

கடிகாரம் ஐந்து மணியை காட்டியது ராமின் வண்டி அவளையும் ஏற்றி கொண்டு மாயாஜால் நோக்கி சென்றது. எல்லாம் காதல் ஜோடிகள் ஆறரை காட்சி இருவரும் உள்ளே சென்றனர். இருட்டு வேறு, திரை அரங்கில் மற்ற காதல் ஜோடி எப்படி காதல் செய்ததோ அப்படியே இவர்களும் காதல் செய்தனர். இடைவெளி வந்தது அனைத்து காதலர்களும் இடைவெளி விட்டு அமர்ந்தனர்.

ஸ்னேஹா பக்கத்தில் எங்கயோ பார்த்த முகமாய் இருக்கிறதே என்று ராமன் பார்த்தான் ஆம் அது அவன் மனைவி ஆம் இடைவெளி என்றாலே ட்விஸ்ட் இருக்க வேண்டுமே. அவள் யாருடன் வந்திருக்கிறாள் என்று பார்த்தால் இவன் நண்பானான சினேகாவின் கணவனுடன் வந்திருக்கிறாள். நான்கு பேருமே அதிர்ந்தனர்.

மறுநாள் காலை தினதந்தி நாளிதழில் தலைப்பு செய்தியில் இரண்டு பேர் வெட்டி கொலை இருவர் தற்கொலை என்ற செய்தியில் இவர்கள் நால்வரின் பெயர் வந்தது .

Sunday 14 February 2010

நான் கடவுள்






















சரவண பொய்கையில் நீராடி விட்டு நேற்று வசூலான காசை வைத்துக்கொண்டு சாப்பிட தயாரானார் காவி வேட்டி போட்டவர் . முதலில் டீ கடையில் டீ குடித்து தினத்தந்தி படித்தார். அப்படியே திருபரங்குன்றம் கோவில் அருகே வந்தார், ஒரு கடையில் பொங்கல் வடை சாப்பிட்டார் .அவர் வாடிக்கியாய் வருபவர் போல அங்கே இருந்த முருகன் அவரை நலம் விசாரித்தான்.

கோவிலுக்கு வெளியே அவர் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்தார். அன்று திருமண நாள் வேறு நிறைய இடங்களில் ஸ்பீக்கர் ஒலித்துக்கொண்டிருந்தது. ரஜினி பாடல்கள் அஜித் பாடல்கள் விஜய் பாடல்கள் இளையராஜா மோகன் ராமராஜன் பாடல்கள் கேப்டன் பாடல்கள் என்று மாறி மாறி ஒலித்தன. காவி உடை போட்டவர் தன் கல்யாண நாளை நினைத்து பார்த்தார் சிரிப்பு வந்தது, அவர் துபாய் சென்றதை நினைத்து பார்த்தார் . அவர் துபாய் சென்ற வேளையில் அவர் மனைவி கள்ளகாதலிலே ஈடுபட மனம் வெறுத்து போய்
ஆன்மீகத்திற்கு செல்வதாய் நினைத்துக்கொண்டு வந்தமர்ந்தவர்.

இப்பொழுது பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் பிச்சைக்காரன் என்று வெளியில் காட்டிக்கொள்ள கூச்சம் அதனால் காவி உடை. வேலை செய்யலாம் என்றால் வேலையில் மனது லயிக்க வில்லை . கலையில் இருந்து இரவு வரை கோவில் பிச்சை. இரவு சரவண பொய்கை மண்டபம் என்று தீர்மானம் செய்து நான்கு வருடங்கள் ஓடி விட்டது.

அமர்ந்த பின்பு சில நாட்களுக்கு பின்னர் தானும் மனைவியிடம் அன்பு செலுத்த வில்லை என்பதை உணர்ந்தார் மனது வலிக்கத்தான் செய்தது. ஆம் வலிக்கும் போதெல்லாம் கஞ்சா அடித்தார். எப்பொழுதும் வலித்தது. சரவண பொய்கை மலையை ஒட்டி இருந்தது அங்கே அமர்ந்து கொள்வார் குளிக்கும் பெண்களை பார்ப்பார் அவர் காமத்திற்கு வடிகாலாய் இருந்தது. சில நேரம் பொழுது போகவில்லை என்றால் லட்சுமி திரைஅரங்கில் படத்தை பார்ப்பார்.

அன்றும் காலை கோவிலுக்கு வெளியில் வந்து அமர்ந்தார். ஒரு ஹிந்திகாரான் நூறு ரூபாய் போட்டுவிட்டு ஆசி வாங்கிக்கொண்டான். ஏதோ இவரை பார்த்து கைடிடம் ஏதோ சொன்னான். கைட் இவரை பார்த்து
"நீங்க சிவன் போலவே இருக்கீங்களாம்" என்றார். மனதிற்குள் நினைத்துக்கொண்டார் கஞ்சா அடிச்சா சாமியாரா என்று நினைத்துக்கொண்டார்.
வாழவே வழி தெரியாதவன் வாழ்கை இழந்தவன் நம்பிக்கை இல்லாதவன் மனதிற்குள் உள்ளே போய் ஏதோ கடவுள் இருக்கிறது என்கிறான் என்று நினைத்துக்கொண்டார். புற உடல் இருக்கும் பொழுது எதற்கு அகம் நோக்கி போக வேண்டும் என்று விசாரணை செய்துகொண்டார். கடவுள் என்பது ஏதோ ஒரு பிடிப்பு கடவுள் இருக்கிறார் என்றால் நீ உயிருடன் இல்லை என்று நினைத்துக்கொண்டார்.எதுவுமே செய்யாதவனே கடவுள் என்று சொல்லிக்கொண்டிருப்பான் என்று நினைத்துக்கொண்டார்

ஏதோ உழைக்க வேண்டும் யாரையாவது கல்யாணம் செய்யவேண்டும் போல் இருந்தது. ஒரு டீ கடை ஆரம்பித்தார், பிச்சை எடுத்ததில் சேர்த்த பணத்தில். நன்றாய் ஓடியது .இப்பொழுது வயது அவருக்கு முப்பது தான். கல்யாணம் செய்ய பெண்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். டீ கடை முன் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்கு வரும் பெண் இப்பொழுது தான் அவரை பார்க்க துவங்கி உள்ளது. ஒலிபெருக்கியில் அவளுக்காகவே "இந்த காதல் சொல்ல நேரம் இல்லை" என்ற பாடலை அலற விட்டுருக்கிறார்

Saturday 13 February 2010

விண்ணை தாண்டி வருவாயா














ஆதாம் ஏவாள் காதல் உலக இயக்கம், காதல் ஆதார புள்ளி............மார்க்ஸ் தெரியும் ,மார்க்ஸ் பின்னால் இருந்த ஜென்னி ஜென்னி காதல், மார்க்ஸ் மானுடத்தின் மேல் வைத்திருந்த காதல் மூலதனத்தை கொடுத்தது. கொடுங்கோலன் ஹிட்லரிடம் கூட, காதல் இருந்தது ஹிட்லர் தோல்வி என்று தெரிந்தவுடன் காதலியை கொலை செய்தானாம், தன் காதலியின் சடலம் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதிலே குறியாய் இருந்தானாம். ஏன் கிடைத்தால் ஹிட்லர் காதலி என்றே நாசம் பண்ணி விடுவர் அந்த கொடுன்கோலனுக்கும் காதல் இருந்தது. காதல் ஒரு அழகிய கவிதை. கவிதை என்பது பொய்யின் வடிவம், அதைப்போல காதல் பொய் என்றாலும் அழகாய் தான் இருக்கிறது.


காதல் அழகாய் தான் இருந்தது எனக்கும் அற்பவாதமாய் மாறாத வரை. காதலி இருக்கும் தெரு மிகவும் விசித்ரமானது பல கிலோமீட்டர்கள் ஒரே தெருவில் நடந்து இருக்கிறேன், காதலியை பார்க்க முடிய வில்லை என்றாலும் அவள் வீடு பார்க்கும் போது மனசு சிறகடித்து பறக்கிறது. நடந்து கொண்டே பறக்க வேண்டுமா காதலியின் வீடு முன்பி நடங்கள் .
ஒரு சந்து திரும்பும் போது காதலியின் வீடு இருக்கும் அது எனக்கு திருப்பத்தை ஏற்படுத்திய திருப்பம்.

காதலிக்கும் போது கேட்கும் காதல் பாடல்கள் மிக அழகானது. சாதாரண வரிகள் கூட மிக கவிதையாய் தெரியும். அப்பொழுதெல்லாம் சச்சின் படத்தில் வரும் கண்மூடி திறக்கும் போது பாடல் கேட்பேன் .............................................
அதில் ஒரு வரி வரும் " தெரு முனையை தாண்டும் வரையில் வெறும் நாள் தான் என்றிருந்தேன் தேவதையை காணும் போது திருநாள் என்கின்றேன்" என்ற பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் ..................................என்ற வரிகள்
மிகவும் பிடிக்கும் ஏன் பிடிக்கும் தெரு முனை என்ற வார்த்தை மிகவும் பிடித்தது .

"நினைத்து நினைத்து பார்த்தேன் " பாடல் பிடிக்கும் . சேரன் படங்கள் மிகவும் பிடிக்கும் ........குறிப்பாக " சேது" படத்தில் வரும் " நினைச்சு நினச்சு" பாடல் பிடிக்கும் ..........செல்வராகவன் படம் என்றால் மிகவும் பிடிக்கும். "காதல்" படம் பிடிக்கும் அதில் சந்த்யா பரத்தை "தடியா" என்று சொல்வது போல என் காதலியும் சொல்லீருக்கிறாள். "தொட்டு தொட்டு என்னை" பாடல் என்னை தொட்டு விட்டு போகும் ..................அற்பவாததில் ஊறி கிடந்த நாட்கள் ..........
ஊர் பிரச்சனை தெரியாது. சிலபேருக்கு அந்த உலகத்தில் தெரு உள்ளது எனக்கு மட்டும் அந்த தெருவிலே உலகம் இருந்தது .

காதல் உயிர் குடிக்க கூடியது .நீங்கள் பழயதை நினைத்து பார்த்தால் இறந்து விட்டீர்கள் என்று அர்த்தம் . அற்பவாததிலே மூழ்க வேண்டாம் . காதலியின் தெருவை விட்டு வெளியே வாருங்கள் ........ தெரு உலகம் அல்ல உலகமே தெரு. இப்பொழுது காதல் வெறும் ஜாதி பார்த்து மதம் பார்த்து ஆண் வேலை பார்த்து வருகிறது . இந்த காதலை விட விடலை பருவ காதல் ஒரு அளவிற்கு நெருக்கமாய் உள்ளது இயற்கையாய் ஏற்படும் ஈர்ப்பு . என்னை பொறுத்த வரை முதல் காதலை தவிர வரும் காதல்கள் கூட்டணி ஆட்சி போன்று . இவனுக்கு நல்ல வேலை இருக்கிறதா நல்லவனா இவள் நமக்கு ஒத்து வருவாளா என்று பார்க்கும் காதல் பக்குவபட்ட காதல் என்கின்றனர். பக்குவம் என்றாலே அது காதல் இல்லை நம் வாழ்க்கைக்கு ஒத்து வருவாள் என்பது நம் வாழ்க்கைக்கு ஒத்து வரும் என்று வேலை தேடுவோம் அதை போன்றது .

சரி காதலியுங்கள் ஆனால் அற்பவாதி ஆகா வேண்டாம் காதலி இல்லை என்றாலும் உலகம் இயங்கும் . நாம் சேதுவாக மாற வேண்டாம் மார்க்ஸ் போல இருப்போம். லைலா போல ஆகா வேண்டாம் ஐரோம் ஷர்மிளா போல இருப்போம் .ஷாஜஹானாய் இருக்க வேண்டாம் தசரத் மஞ்சித் போல இருப்போம்.காதலி பார்க்கவில்லை என்றால் என்ன உலகத்தை அன்பால் ஜெயிப்போம் மார்க்ஸ் போல காதலி கண் தெரியாத இடத்தில் இருந்து காதலிக்க ஆரம்பித்து இருப்பாள் . "அடியே கொல்லுதே" என்ற வாரணம் ஆயிரம் பாடல் கிடார் சத்தத்துடன் கேட்கிறது . தாமரையின் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .காதலியை பிரிந்தால் என்ன நீங்களும் அவரும் ஒரே வானத்து அடியில் தான் இருகிறீர்கள் . வான் அளவு உயருங்கள் உன் காதலி உங்களை
கீழ் இருந்து பார்த்து ரசிப்பாள் அவ்வளவு தானே. விண்ணை தாண்டி வளருங்கள் அவள் விண்ணை தாண்டி வர தான் செய்வாள்

Wednesday 10 February 2010

பெண் என்ன நுகர்பொருளா??
























இக்கட்டுரை இரும்பு நங்கை ஐரோம் ஷர்மிளா. என் அன்னை . என் உயிர் தங்கை . என் அக்காக்கள் என் தங்கைகள் என் தோழிகள் என் பாட்டிகள் குப்பம்மாள் மற்றும் ஜெயா அனைவருக்கும் சமர்ப்பணம்
நானும் என் அன்னை என்று தான் ஒய்வு எடுப்பாள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இருபத்தி ஐந்து வயதிலிருந்து அவள் வீட்டில் இருந்து
வந்தவள். பெண் என்ற ஒரே குற்றம் தான், பெண்ணாய் பிறந்து விட்டால் கட்டாயம் புருஷன் வீட்டில் தான் இருக்க வேண்டுமாம். என் அன்னை குடும்பம் தன் கணவர் குடும்பம் என்று தன் ஆசைகளை துறந்தவள் . நான் அடிக்கடி நினைப்பேன்
நாமெல்லாம் நன்றாய் எழுத வேண்டும் என்று நினைக்கிறோம் அம்மாவுக்கு என்று ஆசைகள் இருக்காதா என்று ??? பிறந்தவுடன் தந்தை, அப்புறம் என் தந்தை, அப்புறம் நான் . இப்பொழுது எங்கள் பாட்டியை என் அன்னை தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
என் பாட்டிக்கு நடக்க முடியாது, குழந்தையை போல பார்த்துக்கொண்டிருக்கிறாள். என்ன சொல்ல?? அவ்வளவு அற்பணிப்பு? என் அக்கா என் அம்மா ரோட்டில் போகும் எத்தனனயோ பெண்களை பார்த்திருக்கிறேன் என்ன கொடுமை.ஐம்பது சதவிகிதம் முன்னேறி விட்டனர் என்று பேச்சு வேறு என்ன கொடுமை ??? வேலை பார்க்கிறார்கள் அது மட்டுமே முன்னேற்றமா என்ன??

சரி சமீபத்தில் என் தம்பி படிக்கும் கல்லூரியில் campus interview வந்தது அந்த கல்லூரியில் சுமாராய் படிக்கும் பெண்கள் அழகாய் இருக்கும் பெண்களுக்கு வேலை கொடுக்கபட்டது. பெண் என்பவள் ஒரு அழகு பொருள் மட்டுமா இல்லை பெண் என்பவள் நுகர் பொருளா என்ன??? எந்த நோக்கில் வேலை கொடுக்க பட்டது . இது தான் முன்னேற்றமா என்ன??
பெண் என்பவள் ஒரு நுகர்வு பொருளாகவே பார்க்க படுகிறாள். இந்தியாவில் மட்டுமா?? உலக அளவிலும் இது தான் நிலைமை??

உலக அழகி போட்டிகள் ஏன் விமர்சையாக இருக்கின்றன . ஏன் ஆண் அழகன் போட்டி அந்த அளவு கண்டுகொள்ள படவில்லை??பெண் என்றால் நுகர் பொருள். அவள் நீச்சல் உடையில் வந்தால் உலகமே ரசிக்கிறது.மிஸ் மதுரை மிஸ் தேனீ முதல் மிஸ் வேர்ல்ட்
மிஸ் இந்தியா வரை அழகி போட்டிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் விஜய் மல்லையா வருடத்திற்கு ஒரு முறை ஒரு காலேண்டர் அடிப்பாராம் சில பேருக்கு மட்டுமே அந்த காலண்டராம் அதில் முழுவதுமாய் கவர்ச்சி படங்கள் அத்தனையும் பெண்கள்.

இந்த IPL குப்பையிலே ரசிகர்களை குஷிப்படுத்த பெண்கள் அரை நிர்வாணமாய் ஆடவிட படுகின்றனர் . இதை பார்த்த ஒரு பெருசு இந்தியா முன்னேறி விட்டது என்கிறார். பெண்கள் என்ன பீர் பாட்டில் போல நுகர்வு பொருளா??? இது எப்படி சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள??? சுதந்திரம் என்ற பெயரிலே பெண்கள் நுகர் பொருள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

குமுதம் புத்தகத்தில் நடு பக்கத்தில் எப்பொழுதுமே ஒரு கவர்ச்சி படம் இருக்கும்.அனைத்து பத்திரிகைகளிலும் இதே நிலைமை தான்."தீராத விளையாட்டு பிள்ளை" என்று படம் பெயர் வைக்கலாம் " தீராத விளையாட்டு பெண்" என்று பெயர் வைத்தால் வேற படம் என்று நினைத்துக்கொள்வார்கள் என்ன ஆண் ஆதிக்கமான மன நிலை???? ஒரு பத்திரிகைகள் கூட
பெண் கவர்ச்சி படம் இல்லாமல் வருவதில்லை.

நாமெல்லாம் தவறுகள் செய்வதில் அளவுகள் வைத்துக்கொண்டிருக்கிறோம் தேவநாதன் பல பெண்களுடன் உறவு கொள்வது தவறு ஆனால் அதை செல் போன் மற்றும் கணினியில் பார்ப்பது தவறு இல்லை.இரண்டு செயலிலும் வக்கிரம் ஒன்றே??? பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை ஏற இறங்க பார்த்தால் தவறு இல்லை , ஆனால் இடித்தால் தப்பு. SJ சூரிய ஒரு படத்தில் சொல்வார் "அடுத்தவன் பொருள் இல்லையா கை வைக்க கூடாது...." பெண் என்ன பொருளா அவளுக்கென்று சுயமரியாதை இல்லையா என்ன???

சன் தொலைக்காட்சியை பார்த்தோமானால் பெண்கள் வாசகம் அணிந்த சட்டையை போட்டுக்கொண்டு வருவார்கள் .அப்படி வந்தால் தான் பாடல் இல்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி பார்க்கப்படும். இது அத்தனை தொலைக்காட்சிக்கும் பொருந்தும். அவள் என்ன பொருளா????? ஏன் அப்படி வருகிறாள் என்று கேட்கலாம்???? ஆனால் அது நுகர்பொருளாய் பார்க்க பட்டு பழக்கி வைத்து இருக்கிறோம்...வேசி மகனே என்று தான் ஒருவன் திட்ட படுவான் வேசன் மகன் என்ற கெட்ட வார்த்தையாவது இருக்கிறதா.

சின்ன வயதில் இருந்து நான் பெண்களுடன் அதிகம் பழகி உள்ளேன் என் அம்மா என் அக்காக்கள் என் தங்கைகள் என் தோழிகள், காதல் சொல்லாமல் விட்ட தோழிகள், காதலித்த காதலி எல்லாரையும் விட என் உயிர் தங்கை இவர்களிடம் பழகும் போது ஒவோவோருவரும் தனி இயல்பு தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஆனால் வாழ்கை ஏனோ அவர்களை சுருட்டி போட்டுக்கொண்டு விட்டது.


















"பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்"

இந்த குரலில் வள்ளுவர் சொல்லும் பொருளின் பெயர் பெண்மை . வள்ளுவர் காலம் முதல் பெண்கள் ஏன் பொருளாய் பார்க்கப்பட வேண்டும்.
அந்த பொருளுக்கு உயிர் இல்லையா என்ன????


பெண் விடுதலை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். எங்கள் ஊரில் கிராமத்தில் எத்தனையோ உழைக்கும் கிழவிகளை பார்த்திருக்கிறேன் கையில் கூடை வைத்துக்கொண்டு காலையிலேயே வியாபாரத்திற்கு செல்வார்கள் நல்ல புத்தி கூர்மை இருக்கும் இருந்தாலும் வாழ்க்கையை துலைத்து இருப்பார்கள் அவர்கள் கண் ஓரம் பார்த்தால் ஒரு
மெல்லிய சோகம் இருக்கும் . நாம் கவர்ச்சி பொருளாய் பார்க்கும் யாரோ கூட நம் அன்னையை போன்ற பெண் தானே????

Monday 8 February 2010

24 வயது கிழவன் 70 வயது இளைஞர்


















"கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்" " எறும்பு ஊற மலை தேய்ந்தது" போன்ற பழமொழிகள் கேள்விப்பட்டது உண்டு அதை பார்த்தது உண்டா. மலைகளை தனி ஒரு ஆளாக சென்று உடைக்க முடியுமா செய்தான் ஒரு கிழவன் அவன் பெயர் தசரத் மான்ஜி. மலையை அவன் நோக்கத்திற்க்காகவும் இல்லை பணம் செய்யவும் உடைக்க வில்லை. மக்கள் பயன்பட வேண்டும் ஒரு சாலை வேண்டும் பயண நேரம் குறைய வேண்டும் என்பதற்காய் உடைத்தான். அவன் அதற்காய் செலவழித்த வருடங்கள் மொத்தம் இருபத்தி இரண்டு.

ரோட்டில் விபத்து என்றால் கூட திரும்பி பார்க்காமல் போகும் உலகத்தில். மக்கள் நடக்க
வேண்டும் என்பதற்காய் மலையை குடைந்து சாலை போட்டான் இந்த கிழவன். அவன் சாலை போட்டதை விட மக்களை நேசிக்கும் ஒருவனால் தான் இத்தகைய பெரிய விடயம் செய்ய முடியும்.

கயா மாவட்டம் பீகாரை சேர்ந்த மாவட்டம் அதில் கெலார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தசரத்.நிலமில்லாத விவசாய கூலி.முசாக்கர் என்னும் கடை நிலை ஜாதியை சேர்ந்தவர் தசரத். 1959 ஆம் ஆண்டு ஒரு நாள் கூலி வேலை செய்துகொண்டிருந்த தசரத் மான்ஜிக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற மனைவி மலையில் இருந்து இடறி விழுந்து படுகாயம் அடைந்தாள். மருத்துவமனை பக்கத்தில் இல்லாத கிராமம். மலையை சுற்றி செல்லும் வழியில் அவர் மனைவி இறந்து விட்டாள்.

ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்??? என்று யோசித்தார் மான்ஜி போடுகிறேன் வழி என்றார்.
அவர் மலையை உடைக்க போறேன் என்றவுடம் நகைச்சுவையாய் பார்த்தனர் எள்ளி நகையாடினர்.ஆனால் மான்ஜி கலங்கவில்லை. மலைகளுடன் பேசத் துவங்கினார், அவர் உறுதி மலை போல இருந்தது மலை மடு போல இருந்தது அவர் முன்பு. மனிதர்களிடம் பேசுவதில்லை சாப்பிட கூட மறந்தார் சில நேரம்.மலை அவர் சொல்ல சொல்ல கேட்க ஆரம்பித்தது.

25 அடி உயரம் 30 அடி அகலம் 360 அடி பாதை போட்டார் தனி ஒரு மனிதனாய் . இது தாஜ் மகாலை விட சிறந்த காதல் சின்னம் ஒவொவொரு அடியும் அவர் போட்டது . முதல் பத்து வருடம் பைத்தியம் என்று நினைத்தவர்கள் கொண்டாடினார்கள். பெண்கள் அவர் காதலை கண்டு மெய் சிலிர்த்து போய் பழங்கள் கொடுத்தனர். உளிகள் கொடுத்தனர் உணவுகள் கொடுத்தனர்.

அந்த மலையை குடைந்தது ஒரு மாபெரும் சிற்பம் . மான்ஜி உலகிலேயே அருமையான சிற்பி. ஆனால் மான்ஜி அதை வெறும் காதல் மட்டும் அல்ல என்று சொல்கிறார். காதலை விட அவர் மக்கள் மீது கொண்ட நேசம் ஒரு சாலையை பெற்று தந்தது. 22 கால அற்பணிப்பு 1981 அந்த சாலை முடிக்கப்பட்டது. 2007 அந்த இளைஞர் அமரர் ஆனார். 1981 முதல் 2007 வரை கூலி வேலை செய்தே காலத்தை ஓட்டினார். அவர் பெரிதாய் அங்கிஹாரம் எதிர்பார்கவில்லை. 24 வயதில் யோசித்தால் கிழவானான மான்ஜி 68 வயதில் இறக்கும் வரை உழைத்ததால் இளைஞர் ஆனார்

Saturday 6 February 2010

அசல் - சுய விமர்சனம்






















நான் சின்ன வயதில் இருந்தே சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறேன். நம் இந்திய இளைஞனின் வாழ்வில் சினிமா ஒரு அங்கமாய் இருக்கிறது. அன்று MGR சிவாஜி காலம் முதல் இன்று அஜித் விஜய் காலம் வரை. சினிமாவும் கிரிக்கெட்டும் நம் சமூகத்தில் ஒரு அங்கமாய் இருக்கிறது. நம் மக்கள் எவ்வளவு சினிமா பைத்தியம் என்பதற்கு நான் ஒரு உதாரணம்.
சமீபத்தில் 'அசல்' என்ற திரைப்படம் வந்தது. திரை அரங்கில் திருவிழா கூட்டம். இத்தனைக்கும் ஒரு விளம்பரம் இல்லை."வா டா " என்று கூவி கூவி விற்க நட்சத்திர சேனல் இல்லை . ஆனால் எங்கு இருந்து தான் இந்த ரசிகன் வருகிறான் என்று தெரியவில்லை . படம் வரும் முதல் நாள் வரை ஒரு போஸ்டர் இல்லை. ஆனால் திருவிழா கூட்டம் .

நானும் அஜித் படங்கள் என்றால் பத்து முறை பார்த்திருக்கிறேன் . ஆனால் இது சரியா, சமூகத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கிறது??? அது எல்லாம் நம் கண்களுக்கு ஏன் தெரியவில்லை . ஐரோம் ஷர்மிளா தெரியாமல் அஜித் குமார் தெரிகிறாரே நமக்கு. சரி பதிவுலத்தில் வருவோம் அசல் வேட்டைக்காரன் என்றால் ஹிட் எகுருகிறது ஐரோம் ஷர்மிளா முத்துக்குமரன் என்றால் யாருமே வருவதில்லை. நம் பதிவுலகமும் குப்பை நாளிதழ் வார இதழ் போல போய் கொண்டிருக்கிறதா. ஏன் தமிளிஷ் போன்ற தளங்களில் வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவன் என்று தனியாய் ஒதுக்க வேண்டும் . ஏன் ஐரோம் ஷர்மிளாவுக்கு
ஒதுக்கலாமே.

நானும் அசல் பார்த்தேன் ரசிகன் ஒவ்வொரு முறையும் எழுந்து கைதட்டுகிறான். எங்கே சமூகம் போய்கொண்டிருக்கிறது.நடிகர்களால் சமூகத்திற்கு என்ன பயன். நான் விஜய் ரசிகர் என்று நினைக்க வேண்டாம் என் நண்பர்களுக்கு நான் தீவிர தல ரசிகன் என்று நன்றாய் தெரியும் .இருந்தாலும் நான் என்னை சுயவிமர்சனம் செய்துகொண்டேன். ஐரோம் ஷர்மிளா செய்யாததை என்ன அஜித் செய்து விட்டார். நல்ல நடிகர் மணல்ல மனிதர் அது மட்டுமே போதாது சமூக மதிப்பீடு என்ன???? ஒன்றும் இல்லை.....நாம் ஏன் கொடி பிடிக்க வேண்டும்..பொது பிரச்சனை என்றால் நாம் விவாதிக்கிரோமா??? அஜித்தா விஜயா என்று கல்லூரி முதல் அலுவல் வரை ஒரே விவாதம். சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.

நானும் அப்படி தான் இருந்தேன் ஐரோம் ஷர்மிளா என்ற வார்த்தை கேட்கும் முன். "எனக்கு அமைதியான வாழ்கை போதும்" என்கிறார் தல சரி அப்படி என்றால் " வம்பு வழக்கு வேண்டாம் ஆளை விடு" என்று அர்த்தம். வெறும் நல்ல மனிதர் வம்பு வழக்கிற்கு போக மாட்டார் என்பதே அவர் தவறுகளை கண்டு கொள்ள மாட்டார் என்பதாகும். சரி அது அவர் விருப்பம். ஆனால் ரசிகன் ஏன் காலத்தை விரயம் செய்கிறான் கால விரயம் பொருள் விரயம் எல்லாமே விரயம்.

தீபாவளி என்றால் படங்கள் பொங்கல் என்றால் படங்கள், ஒரே கேளிக்கைகள் கலைஞர் வேறு தொலைக்காட்சி தருகிறார் அதில் அவர் குடும்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போம். பிறகு ஒரே சினிமா. அப்புறம் கலைங்கருக்கு யாரவது பாராட்டு விழா நடத்துவார்கள் அதில் ரஜினி கமல் கட்டாயம் இருப்பார்கள் ஒருவர் அறிவு ஜீவி போல உளறுவார், ஒருவர் ஞாநி போல பேசுவார். என்ன நடக்கிறது இங்கே.

சரி இது எல்லாம் பொழுதுபோக்கு ஆரம்பிச்சுட்டான் டா என்று சொல்லலாம். இந்த கேளிக்கைகளால் உங்கள் சமூக கோபம் வடிந்துகொண்டிருக்கிறது . இந்த வேலையே சினிமா சீரியல் கடவுள் மற்றும் டாஸ்மாக் பார்த்துக்கொண்டிருக்கிறது.கலை உன் கோபத்தை தூண்ட வேண்டும், இந்த கலை உன் கோபத்தை நீர்த்து போக விடுகிறது. சரி ரசிகன் எதற்கு கை தட்டுகிறான் பாவனா குனிகிறாள் உள்ளே தெரிகிறது திரை அரங்கம் அதிர்கிறது . சமீரா ரெட்டி பாவனாவிடம் சொல்கிறாள் " உன் சைஸ் என் சைஸ் ஒண்ணா" என்று கேட்கிறாள் உடனே திரை அரங்கம் அதிர்கிறது. என்ன கொடுமை?

நாம் அனைத்தையும் நகைச்சுவையாகவே எடுத்து பழக்கப்பட்டுவிட்டோம். நமக்கு ஏன் கோபம் வருவதில்லை,நாம் எல்லாம் குறைக்காத நாய்கள் ஆகி விட்டோம். ஏன் நீர்த்து போகிறது எண்ணங்கள் "easia எடுத்துக்கோ" அப்படின்னு சொல்றாங்க "எதை".
குமுதம் ஆனந்த விகடன் எல்லாமே சினிமா........தொலைக்காட்சி என்றால் சினிமா.....முதல்வரை பார்க்க நீங்கள் திரைதுரையினறாய் இருக்க வேண்டும். ஏன் அவர்கள் மட்டுமா இருக்கிறார்கள் . இந்த பதிவு போட்ட பிறகு தமிளிஷ் போன்ற தளங்களில் புது படம் வந்தால் அதற்க்கு தனியாய் column ஒதுக்காமல் இருந்தால் அது என் பதிவினுடைய சின்ன வெற்றி .என்று ஒரு சினிமா நடிகர் சமூக பிரச்னையை விட அதிகமாய் தெரியப்படுகிராரோ அந்த சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது ஜாக்கிரதை.

பின்குறிப்பு:
நண்பர்களே நானும் உங்களை போல் தான் ஆனால் இப்பொழுது மாற முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் இது ஒரு வகையில் என் சுய விமர்சனம்.நம் குழந்தைகளுக்கு சமூக பிரச்சனை தெரியவில்லை ஆனால் நடிகரை தெரிந்து இருக்கிறது. ஏன் குழந்தைகளை விடுங்கள் நமக்கு எத்தனை பேருக்கு ஐரோம் ஷர்மிளா தெரியும். சமகால வரலாறு கூட தெரியாமல் இருக்கிறோம்.வரலாறு தெரியாத சமூகம் சிரழிந்து போகும் . நமக்கு தெரிகிற வரலாறு சினிமா மட்டுமே ?????

Friday 5 February 2010

மூன்று குரங்குகள்








எந்திரிக்கிறேன் எந்திரமாய்,
சமூக கோபம் இருக்கிறது ,
படம் பார்க்கும் நீட்சியாய் நீர்த்துபோகிறது கோபம்,
சாமி கும்பிடும் நீட்சியாய் நீர்த்துபோகிறது கோபம்,
காதலிக்கும் நீட்சியாய் நீர்த்துபோகிறது கோபம்,
நல்லதை மட்டுமே பார் என்பதால் நீர்த்துபோகிறது கோபம்,
நல்லதை பார்
நல்லதை கேள்
நல்லதை பேசு
என்னும் குரங்கு .............
என்னிடம் சொல்கிறது கெட்டதை கண்டுக்காதேனு...

Thursday 4 February 2010

நூறாவது பதிவு - ஐரோம் ஷர்மிளா

















இது என்னுடைய நூறாவது பதிவு. இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது . நான் இதை தன்னடக்கத்துடன் சொல்லவில்லை இதுவே உண்மை. நம் எல்லாருக்கும் நூறு படம் நடித்த ரஜினி விஜயகாந்த் போன்றவர்கள் தெரியும். நூறு ரன் அடிக்கும் சச்சின் என்றால் தெரியும்.பத்து வருடம் சாப்பிடாமல் கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்தவரை தெரியுமா. நமக்கு தெரிந்தது பத்தரை முதல் பன்னிரெண்டரை மணி வரை உண்ணாவிரதம் கண்ட தமிழினத் தலைவரை தெரியும்.

எனக்கு நேற்று ஒரு தோழர் மூலமாய் அவரை பற்றி தெரிந்தது. வெட்கமாய் இருந்தது நமக்கு அவரை பற்றி தெரியவில்லை .பதிவு போடும் நாம் செயலிலே என்ன செய்துவிட்டோம். நூறு பதிவுகளும் அந்த பெண் தோழருக்கு தூசுக்கு சமம்.

ஐரோம் சர்மிளா ஆம் அந்த தோழரின் பெயர். அவர்கள் பத்து வருடமாய் சாப்பிடமால் இருக்கிறாள். வெறும் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். சர்மிளா ஒரு கவிஞர் மற்றும் செயல் வீரர். அப்படி எந்த கொள்கைக்காக அவர் இவ்வளவு நாள் சாபிடாமல் இருக்கிறாள். 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்.














இந்த சட்டத்தினால் அப்பாவி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பெண்கள் பாலியல் வல்லுறவுகள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபடுகின்றனர். ஆம் ஆண்டு பெண்கள் ARMY RAPE US என்று படத்துடன் ராணுவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர் பெண்கள் இதை நன்றாக பயன்படுத்தி மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றது ராணுவம். பல கொலைகள் செய்யப்பட்டன. நவம்பர் 2 2000 மணிப்பூர் மாலோம் என்னும் இடத்தில் பத்து குடிமக்களை இந்திய ராணுவம் கொலை செய்ததை கண்டித்து ஐரோம் சர்மிளா அவர்கள் உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்தார் இன்னும் அவர் சாப்பிடவில்லை திரவ உணவையே அருந்துகிறார்.














அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தண்ணீர் கூட உண்ணாமல் இருந்தார் . அவர் உடல் மோசமடையவே அன்றில் இருந்து மூக்கு வழியாக பிளாஸ்டிக் குழாய் கொண்டு திரவ உணவு செலுத்த படுகிறது. அரசாங்கம் அமைத்த ஜீவன் ரெட்டி கமிசன் கூட இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது.

சரி ஏன் இந்த சட்டம் போட்டது இந்தியா உண்மையிலேயே சுதந்திர நாடா. வட கிழக்கில் உள்ளவர்கள் ஏன் ஒதுக்க படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட ஏன் பறிக்க படவேண்டும். ஏன் நம்முடைய ஆதிக்கத்தை காட்ட வேண்டும்.இப்படி கட்டி காத்து தான் வல்லரசு என்று காட்ட வேண்டுமா .அந்த மக்களுக்கு உண்மையிலேயே இந்தியாவில் இருக்க பிடித்து இருக்கிறதா. நாம் எல்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் அது உருவாக்க படுவது யாரால்????நம் அரசால்??? அந்த அரசை ஆதரித்து காசு வாங்கி வாக்கு செலுத்துகிறோம்?? அப்பொழுது நமக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்கிறது தானே....???


நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுகிறோம் ஆனால் அதன் ஆணி வேர் அரசிடம் உள்ளது . ஏன் வடகிழக்கு மக்கள் கண்டுகொள்ள படவில்லை . நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுவது உண்மையிலேயே மணிரத்தனம் ரோஜா படம் போல அரை வேக்காட்டு தனம். நமக்கு உண்மையிலேயே தெரியுமா அந்த மக்களுக்கு இங்கே வாழத்தான் பிடிக்கிறது என்று????




















ஐரோம் சர்மிளா உனக்கு தலை வணங்குகிறேன். என்ன சொல்ல இளமையை அடக்கி பெண்டீருக்கு உள்ளான ஆசையை அடக்கி, நாவை அடக்கி, ஒரு சமூகத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறாய். நாமெல்லாம் பதிவுகள் போட்டுக்கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறோம், ஏன் சிறு பிரச்சனை என்றால் கூட திரும்பி பார்க்காமல் வருகிறோம். ஐரோம் சர்மிளாவும் கவிஞர் நானும் கவிஞரே ஆனால் அதற்கு வித்யாசம் உண்டு. இலக்கிலாமல் இருப்பது இலக்கியாமா என்ன. நோபல் பரிசு கொடுக்க வேண்டாம்
அவரை தெரிந்தாவது வைத்திருக்கலாமே. ஐரோம் சர்மிளா உங்களால் என் நூறாவது பதிவு அர்த்தப்படுகிறது.

பின்குறிப்பு
நாம் நல்லது மட்டுமே செய்வோம் ஏன் கெட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட ஒருவித கெடுதலே. ஏன் நல்லது மட்டுமே செய்கிறோம் சுயநலம். ஏன் தவறுகளை தட்டி கேட்பதில்லை கேட்டால் நமக்கு ஏன் வம்பு ....."நல்லதை மட்டும் பாருங்கள்" என்கிறார்கள் நாம் அப்படி சொல்லித்தான் வளர்க்கபட்டுள்ளோம். " ஏன் சரியாக பாருங்கள்
என்று யாரும் சொல்வதில்லை" . "பாசிடிவாக பாருங்கள்" "கனவு காணுங்கள்" என்பதெல்லாம் "தவறை தட்டிக்கேட்கதே என்பதன் உள் அர்த்தமே". கண் முன்னே ஒரு கொலை நடக்கிறது "பாசிடிவாக பாருங்கள் " என்பது "உனக்கு எதற்கு வம்பு ஒதுங்கி போ என்பது " போல இல்லையா .

நம் இலக்கியங்களில் கூட நல்லவன் என்றால் நல்லது மட்டுமே தெரியும் என்று ஊட்டப்பட்டிருக்கிறது. ஏன் மகாபாரதத்தில் தர்மன் நல்லதையே பார்ப்பான் நாரதன் சொல்லும்போது எல்லாரும் நல்லவர்களாம்....துரியோதனன் எல்லாரும் கெட்டவர்கள் என்று
சொல்வான், உடனே அவன் கெட்டவனாம். உண்மையான கோபம் இருப்பவனால் மட்டுமே கேட்க முடியும். அன்று ஐரோம் ஷர்மிளா கெட்டதை பார்க்காமல் இருந்திருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளரோ நோபல் பரிசு கூட வாங்கி இருப்பார். ஐரோம் ஷர்மிளா ஏன்
பாசிடிவாக பார்க்கவில்லை அவள் நம்மைப்போல சாக்கு சொல்லும் பெருச்சாளி அல்ல களப் போராளி.

Wednesday 3 February 2010

பூவும் ஸ்பென்சர் பிளாசாவும்



















காட்சி 1

"ஒரு முழம் பூ எவளவ் மா" என்றான் வெங்கட்
" பத்து ரூபா"
"ஏன் மா ஏமாத்துற இந்த இதை பிடி" என்று ஏழு ரூபாயை நீட்டினான்.........
"இவங்க எல்லாம் கொஞ்சம் விட்டா ஏமாத்திடுவாங்க பா" என்றான் தன் நண்பனிடம் .............

காட்சி 2 ஸ்பென்சர்

"டேய் சட்ட வாங்கணும்னா ஸ்பென்சர் தான்"
"அதுவும் நான் LOUIE PHILIP ALLEN SOLLY தான் போடுவேன் தரமா உழைக்கும்" என்றான் வெங்கட்
"சார் சாம்பிள் sizekku அங்க இருக்கு அத போட்டு பாத்தாலே போதும் சார் சைஸ் கரெக்டா இருக்கும்" என்றான் கடைக்காரன்.
" 1600 பக்ஸ் கூல்" என்றான் வெங்கட்.......
வெறும் 2000 ருபாய் பனியன் போட்ட பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தான்
பனியனிலே வாசகம் வேறு கை இல்லாத பனியன் 2000 ருபாய்
"இந்தியா முன்னேறி விட்டது பா" என்று சொன்னான் நண்பனிடம்

காட்சி 3 :

அந்த சட்டையை வீட்டில் வந்து போட்ட போது
அவன் மனைவி சொன்னால் "இந்த சட்ட சரவணாவுல பார்த்தேன் நூற்று ஐம்பது ருபாய்" என்றாள்
கரெக்டா என்றாள் ......................
"இது 1600 " என்றான்.....
"உங்க காதுல யாரோ பூ சுத்தி இருக்காங்க இப்படியா நீங்க ஒரு பேக்கு" என்றாள்
இவனுக்கு பூ காரியிடன் மட்டும் பேரம் பேசியது நியாபகம் வந்தது

Tuesday 2 February 2010

மதுவிலக்கு டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டே

ஒரு கவிதை

மது விலக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தேன்....
ஏன் குடிக்கிறாய் என்று நண்பன் கேட்டான் ............
குடித்தால் தானே விலக்கி வைக்க முடியும்
என்று அவனுக்கு விளக்கி வைத்தேன்



















இடம் டாஸ்மாக் கடை :
"கத்தாழை கண்ணால குத்தாத" பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.......
"என்ன மாப்ள இன்னிக்கு இவ்வளவ் கூட்டம்" என்றான் சத்யா
" மது விலக்கு மாநாடாம் அந்த கட்சி கூட்டமாம்" என்றான் துரை.
"மது விலக்கு நா அது இல்லையே மாப்ள" சத்யா சிரித்தான்
" மது விலக்கு ஊருக்கு மாப்ள தமிழ் ஊருக்கு மாப்ள எல்லாமே ஊருக்கு" என்றான் துரை.....
இது இன்றைய நிலைமை ...இது உண்மையில் நடந்த சம்பவம்.பல்லாவரம் டாஸ்மாக்கில் நடந்த நிகழ்வு...
நடிகர்கள் படம் என்றால் புகை பிடிப்பதை காட்டக்கூடாது என்று சொல்லும் கட்சிக்கு சில வேண்டுகோள்.
















இன்றைய நிலைமையில் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் நூற்றிற்கு எண்பது பேர் பீர் அடிக்கிறார்கள்.இதற்க்கு காரணம் என்ன சினிமா மட்டுமா ஏன் தெருவிற்கு தெரு பள்ளிகள் இருக்கிறதோ டாஸ்மாக் இருக்கிறதே ....ஏன் உங்கள் கட்சி டாஸ்மாக் உள்ளுக்குள் புகுந்து அனைவரையும் விரட்டி போராட்டம் செய்ய வேண்டியது தானே.ஏன் சென்னையில் பார் புப் இல்லையா அது மாணவனை கெடுக்காதா. அங்கே உள்ளே போய் டிஸ்கோதே தடுத்து நிறுத்த வேண்டியதுதானே.



















அமைச்சரவை கையில் இருந்த போது ஏன் புகை இலை கம்பனிகளை தடை செய்து இருக்கலாமே? ஏன் புகை பிடிப்பதை திரையில் எதிர்க்கும் கட்சி புகை பிடிப்பதை தடை செய்ய சட்டம் போட்டிருக்கலாமே. புகை பிடிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட்டிருக்கலாமே.










புகை இலை பொருட்களை தடை செய்து இருக்கலாமே "சைனி கைநி" "பாண் பராக் " "ஹன்ஸ் " என்று எக்கச்சக்கமாய் போதை பொருட்கள் அதை எல்லாம் ஏன் தடை செய்யவில்லை. ஏன் cigeratte இதை போல பெரிய கம்பனிகள் எல்லாம் முதலாளிகளா?
ஏன் தடை செய்யவில்லை .




















நடிகர்கள் பிம்பம் கொண்டவர்கள் அவர்கள் இந்த மாதிரி நடிப்பது தவறு தான் . ஆனால் நீங்கள் எதிர்ப்பதிலே உள்குத்து இருக்கிறது ஏன் நாடோடிகள் படத்திலிருந்து எல்லா படத்திலும் சரக்கு அடிப்பது காண்பிக்கபடுகிறது. வக்கிராமான காட்சிகள் இளம் பருவத்தினர்
பாதை மாறும் காட்சிகள் காட்டப்படுகிறது அதை எல்லாம் ஏன் எதிர்க்க வில்லை.

வெறும் விளம்பரதிற்க்காக மட்டுமே எதிர்க்காமல் சமூக அக்கறையோடு எதிர்க்கலாமே???????????பெரிய நடிகர் எதிர்ப்பை பதிவு செய்தால் ஒரு விளம்பரம் ..................கௌண்டமணி சொல்வது போல " என்ன டா விளம்பரம்" " டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் எப்படி எப்படி type typaa முழிய மாத்துவானு எனக்கு தெரியும்"



பின் குறிப்பு:
நாம் என்றால் சமூக அக்கறை என்றால் ஓடி விடுகிறோம் அதற்கு உதாரணம் என் பதிவில் அரசியல் ஏற ஏற பின்னூட்டம் குறைத்து கொண்டே இருக்கிறது.
ரொம்ப சாதாரண பதிவுகளுக்கு அருமை நண்பரே என்று சொல்பவர்கள் வருவதில்லை. ஏன் பிரச்சனை வராத பிரச்சனைகளை மட்டும் எழுதி பிரபல பதிவர் ஆகலாம். காதல் கவிதை என்றால் பின்னூட்டம் போடுகிறீர்களே .....எனக்கு தெரிந்து முத்துக்குமரன் பதிவுகள் இரண்டுமே இரண்டாம் நாள் மூணாம் நாள் பிரபலம்
அடைந்தது ...........................தமிழ் படம் பற்றி எழுதி இருந்தேன் எனக்கு தெரியும் வாக்குகள் விழாது பிரபல படுத்த மாட்டார்கள் என்று. நாம் ஜனநாயக நாட்டிலா
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சினிமா விமர்சனங்கள் சினிமா பற்றி கிசு கிசு போன்ற தினதந்தி தர பதிவுகள் பிரபலமாய் இருக்கிறது. ஏன் தமிளிஷ் தளத்தில் கூட
வேட்டைக்காரனுக்கு தனியாய் ஓதிக்கினார்கள் . முத்துக்குமரன் அஞ்சலிக்கு தனியாய் ஒதுக்க வில்லை ..இப்படி தைரியமாய் கேட்டால் நான் ஒதுக்க படுவேன் என்று தெரியும்.............இருந்தாலும் கேட்பேன்..............................?????? இந்தியா ஜனநாயக நாடு தானே.......ஏன் "தமிழ் படம்" விமர்சனம் படிக்கும் அளவு கூட என்
முத்துக்குமரனை படிக்கவில்லை....என் கவிதை கவிதை போல் இல்லை எனக்கு தெரியும் ஆனால் முத்துக்குமரனை பற்றி அதற்க்கு மரியாதை தந்திருக்கலாம்

Monday 1 February 2010

தமிழன் உன்னை மறக்கப்போவதில்லை

வீரத்திருமகன் படத்தை
போட்டு பதிவு செய்தேன் ..............
அந்த படம் யாரு உன் நண்பனா என்று
அலுவல் நண்பன் கேட்டான்................
இவர பார்த்த மாதிரி இல்லையே
என்று என் தம்பி சொன்னான்.............
"ஒபாமா tax தெரிந்து இருக்கிறது"
"சத்யமில் என்ன படம் ஓடுகிறது என்று தெரிந்து இருக்கிறது"
"உள்ளூரு ரஞ்சி ஸ்கோர் தெரிந்திருக்கிறது"
கருகி போன வீரனின் பெயர் தெரியவில்லை.
அந்த வீரத்திருமகன் பெயர் முத்துக்குமரன் ............
முத்துக்குமரனே நீ தெரிந்து கொள்ள ஷ்ராயவின் தொப்புளா
இல்லை அறுபது வயது கிழவன் ரஜினியுடன் ஆட்டம் போடும் அமிதாப்
மருமகளா ...
இல்லை நாட்டை காப்பாற்றும் தோனியா
முத்துக்குமரனே இங்கு உள்ள தமிழன் உன்னை மறக்கப்போவதில்லை
ஏன் என்றால் இவனுக்கு உன்னை தெரியவே தெரியாது ...!