Friday 30 October 2009

சத்யம்,ரோகினி,கிருஷ்ணவேணி


















அமருக்கு கல்யாண நாள். அவன் மென்பொருள் துறையில் ப்ராஜெக்ட் மேனேஜர்.அன்று மனைவியுடன் படம் பார்ப்பதற்கு சத்யம் தியேட்டரில்
மாலை நான்கு மணி காட்சிக்கு புக் செய்து இருந்தான்.மாதம் நான்கு லட்சம் சம்பளம்,நல்ல மனைவி,காதல் திருமணம்,அதுவும் இன்று கல்யாண நாள்.மூன்று மணிக்கு தனது டீமில் உள்ள டீம் தலைவரிடம் அன்று செய்ய வேண்டிய வேலையை சொல்லி விட்டு,டோயோடோ காரிலே சிட்டாக பறந்தான்.

டீம் leader கணேஷ் அமர் சொன்ன வேலையை முடிக்க நான்கு முப்பது
ஆனது.அவனிற்கு வேலை என்று அன்று அவசரமாக வீடு திரும்பினான்.வீடு
வந்து சேரும் போது மணி ஐந்து பதினைந்து.கணேஷ் மனைவி உமா
காத்துக்கொண்டிருந்தாள்.


"என்னங்க கல்யாண நாள்,கொஞ்சம் சீக்கிரம் வந்திர்கலாம்". என்றாள்

"காசில படம் போலாமா" என்றான்.


"என்ன படம்"

"அஜித் படம் கௌதம் மேனன் இயக்குனர்".


"உனக்கு தான் அஜித் பிடிக்குமே" என்றான்.
"ஆனா இன்னிக்கு எப்படி டிக்கெட் கிடைக்கும்" என்றாள்.
"அப்படி இல்லைனா கோயம்பேடு ரோகினி போவோமே ஆறு theatre எல்லா
theatrelayum முதல் நாள் அதனால தல படம் தான் போட்டிருப்பாங்க அங்க
கிடைக்கும்" சரி ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடலாம்.



ஆட்டோ பிடித்தான்,ஆட்டோ ஓட்டுனர் மாரி,அவர்களை

ரோகிணியில் இறக்கி விட்டார்,அதற்க்கு அவருக்கு கிடைத்தது நூறு ருபாய்.

வீட்டிற்கு புயல் வேகத்தில் வந்தார்.அவர் வீடு இருப்பது

கண்ணமாபேட்டை.அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தார் மாரி,மணி
ஆறு பத்து."இன்னிக்கு இன்னா நாலு நம்ப கல்யாண நாலு,கிளம்பு வா டி"


"கிர்ஷ்ணவேணி போகலாம் " என்றான்.


"பதினஞ்சு ரூபா டிக்கெட் நமக்கு தேவையா" .....அவன் மனைவி மல்லி.


"ஒரு நாள் தானே " என்று அவளை பார்த்து சிரித்தான் ........


படங்கள் வேறு இடங்கள் வேறு ........காதல் ஒன்று...

Thursday 29 October 2009

மேகம்,மழை,ரயில்,மேகலா
















ச்சோ என்ற மழையில் ரயில் நகர துடங்கியது.செல்வத்திற்கு மழையும் ரயிலும் அவன் காதலின் குறியீடு.ஒரு மழை நாளில் அவளை சந்தித்தான்.தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் அவன் அவளை பார்த்தது ஒரு மழைகள் நாளில் மின்சார ரயிலில்.ரயில் காதலானது ரயில் பயணம் போல பாதியிலேயே நின்று விட்டது. ஆம் மனித வாழ்க்கையே ரயில் பயணம் தானே என்று மனதிருக்குள் நினைத்துக்கொண்டான். பக்கத்தில் மனைவி குழந்தைகள் இருப்பதால் கண்களில் நீர் வராமல் அழுது கொண்டான்.
ரயில் தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.மதுரை வந்த போது, ஏனோ இனம் புரியாத வலி. மேகலா மதுரையில் அல்லவா இருக்கிறாள். ஒரு மேகம் சூழ்ந்த நாளில் மேகலாவை ரயிலில் பார்த்தேன் சென்னையில். இன்று மழை பெய்கிறது ரயில் மதுரையில் நிற்கிறது. மேகலா வருவாளா மேகங்கள் வந்துவிட்டன மேகலா ஒரு முறை என் வாழ்கையில் வா...இப்பொழுதெல்லாம் சென்னையில் மழை பார்க்க முடிகிறது என் மேகலாவை பார்க்க முடிய வில்லை.....மேகங்கள் இல்லாமல் கண்களில் மழை நீர் சுரந்தன.
மதுரையிலிருந்து ரயில் புறப்பட்டு இருந்தது. கண்ணை திறக்கையில் அவனுக்கு அதிர்ச்சி , மேகலா தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் எதிர் இருக்கையில். இயற்கை என்றும் பொய் சொல்லாது, மேகம்,மழை,ரயில்,மேகலா.

"மேகலா" என்றான் ....

"செல்வம்" என்றாள்.........

அவள் கணவருக்கும் குழந்தைக்களுக்கும் அறிமுகம் செய்தாள் தன் நண்பன் என்று.
"பார்த்தியா உனக்கும் ஒரு மகன் ஒரு மகள் எனக்கும் ஒரு மகன் ஒரு மகள்" என்று சிரித்தாள்.
"என் மகள் பெயர் கூட மேகலா தான்".அவன் மனைவி கவனித்து இருக்க கூடும்.அவள் மகன் மகள் பெயரை கேட்டேன்.மகன் பெயர் செல்வமாம்,மகள் பெயர் சௌந்தர்யா.அவன் கணவன் இதை கவனித்திருக்க கூடும்.அதை அவன் மனைவியும் அவள் கணவனும் பெருந்தன்மையாக கண்டு கொல்லாமல் இருந்தார்கள்
அவன் மகன் பெயர் தினேஷ் அவன் மனைவியின் பழைய காதலனாய் இருக்குமோ.அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாளே அது அவள் கணவருடைய காதலியாய் இருக்குமோ........மனைவியின் காதலை மதிக்க வேண்டும் .ஒரு நாள் அவள் காதலித்தாளா என்று கேட்க வேண்டும்.
சென்னை ரயில் நிலையம் வந்தது. மழை நின்றது மேகலா சென்றுவிட்டாள்.ரயில் மழை மேகலா மூவரையும் பிரிந்து வந்தேன்

Wednesday 28 October 2009

புகைப்படமும் புகை பிடிப்பவனும்














உனது புகைபடத்தை
வைத்துக்கொண்டு ......
புகை பிடித்து கொண்டு இருந்தேன்...!

காலத்தின் அந்த நொடியை
கவிதையாய் பதிவு செய்திருந்தது
அந்த புகை படம் ...!

அந்த புகைப்படம் எடுக்க பட்டது போல்
நீயும் நானும்
நம் காதலும் இல்லை
இத்தருணத்தில் .......!

என் வீட்டுசாளரங்களில் இருந்து
உள்ளே வருகிறது
உன் நினைவு ..!

சினிமா டிக்கெட் ,
உன் கைக்குட்டை,
போன்ற உயிர் அற்ற பொருட்கள்
உயிர் உள்ளவை ஆகின ......!

உயிர் உள்ள
நானும் நீயும் .....
உயிர் அற்ற பிணம் ஆனோம் ....!

காதலில் நீ பார்த்த பார்வை ...........
இப்போது கிடைக்குமா ...?
ஒரு புகைப்படம் உன்னை பதிவு செய்து வைத்திருக்கிறது .....!
நான் ...?

காலங்கள் நம்மை விழிங்கி கொண்டிருகின்றன .......!
இறந்த பிறகு ......
நம் காதலை
ஒரு திரைப்படம் போல் பார்க்க ஆசை.....!

அதில் மட்டுமே
நீ வெட்கப்பட்டு
என்னை பார்க்கும் தருணம் ......
மீண்டும் மீண்டும் வரும் ...!

ஆம் நான்
அந்த காட்சியை மட்டும்
ஓட்டி விட்டு
மறுபடி மறுபடி பார்ப்பேன் .......!

காலங்கள்
உயிரற்ற புகைப்படத்தை
உயிருள்ளவை ஆக்குகின்றன
உயிருள்ள புகை பிடிபவனை ...
உயிரற்ற புகைப்படம் ஆக்குகின்றன

Tuesday 27 October 2009

வேதம் புதிது













சுப்பு பாட்டி சாப்பிடவில்லை .....தினமும் ராதிகா சீரியல் பார்க்கும் பாட்டி அன்று NDTV பார்த்துக்கொண்டிருந்தாள்."என்னடா சொல்றா சங்கரர விடுவிச்சுருவால..." "இல்லை கேஸ் stronga இருக்கு,கஷ்டம் தான்..,, மேலும் நடிகையோட எல்லாம் தொடர்ப்பு இருக்காம் ...கேவலம் இனிமே நம்மலவால யாரும் மதிக்க மாட்டான் "
சுப்பு பாட்டி இரவு கண்ணீருடன் படுத்துக்கொண்டிருந்தாள்.கடவுள் என்பது உண்மையானால் சங்கரர் என்பது உண்மையானால் எப்படி தரம் கெட்டவர்கள் மடத்தின் அதிபதி ஆகி இருப்பார்கள்.கடவுள் என்பது இல்லையா அவள் மனது அடைத்தது.ஜாதி மதம் தீட்டு மடி என்று நிறைய பேரை தொடாமல் இருந்திருக்கிறோமே,இப்படி நினைத்து போலியாக வாழ்ந்து இருக்கிறோமே நானெல்லாம் ஒரு பிறப்பா??????அந்த ஹரிஜன குழந்தை என்ன செய்தது அதை தூக்க கூட சங்கட பட்டோமே.அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் அவளை துளைத்து எடுத்தன.
கடவுள் என்று ஒன்று இருந்தால் அது எப்படி தப்பு செய்பவனை அவனுடைய மடத்திற்கு அதிபதி ஆக்கும்.நெஞ்சு வெடித்து பாட்டிக்கு.கண்களில் நீர் வழிந்து அவள் பாவங்களை கழுவியது,எந்த பிறப்பும் பிறப்பு மட்டுமே தெய்வ பிறப்பல்ல.அப்படியே கடவுள் இருந்தாலும் நடுவில் எதற்கு ஒருவன் ,நடுவில் எதற்கு மடம்.கடவுளுக்கு ஊடகம் தேவையா என்ன....
அவன் அம்மாவாக இருந்திருந்தால் அனைத்து படைப்புமே ஒன்று தானே எப்படி ஏற்ற தாழ்வுகள்...அவள் மனது வலித்தது.
கடவுள் இல்லையா இல்லை இருக்கிறாரா....பாட்டி மன உளைச்சலுக்கு உள்ளானால்....
அவள் நம்பிக்கை சிதைந்து,உண்மை உணர்ந்து ஒரு ஞான நிலையை எட்டினால்.காலை விடிந்தது சுப்பு பாட்டிக்கும். பாட்டி எழுந்தவுடன், கடவுளை சேவிக்க வில்லை.எதிர் வீடு அரிஜன சென்றால் அது அரிஜன வீடு.கதவை திறந்த எதிர் வீட்டு பெண் அதிர்ச்சி அடைந்தாள்.
"ஏன் டீ மா நான் எல்லாம் உங்க ஆத்துக்கு வரப்டதா ???" "இல்ல பாட்டி வரலாம் ".
"ஒரு காபி தா டீ..." அந்த காபி குடித்த போது அவளுக்கு புனித நீரில் நீராடியதை போல் இருந்தது. அவள் குழந்தைக்கு பாட்டி முத்தம் கொடுத்தாள் .அதில் மனிதன் என்னும் ஈரம் இருந்தது .பாட்டி அன்று குளிக்க வில்லை ஆனாள் சுத்தமாக இருந்தாள்.

Sunday 25 October 2009

நடமாடும் ராணுவமே



நாட்டின் எல்லைக்குள் தீவிரவாதிகள் ,போருக்கு தயாரானான் ராணுவ வீரன் மதுரைக்காரன் மாரி.லே பகுதி லடாக்கின் தலை நகரம் ,வடக்கு காஷ்மீர் .சில பாகிஸ்தானிய வரைபடங்களில் அவர்கள் நாட்டில் அதை சேர்த்து உள்ளதாக தகவல்.மொத்தமாக சொல்ல போனால் POK Pakisthan occupid kashmir.


ஆம் கடும் குளிர் ,நாமெல்லாம் IPL வீரர்களை போர் வீரர்களாக பார்த்து கொண்டிருந்த சமயம்.அவர்கள் battalion சேர்ந்த வீரர்களில் அவனது உயிர் நண்பன் சரண்தீப் சிங்க் தற்போது தான் கல்யாணம் ஆனவன் . M14 ரக கன்னி வெடியில் காலடி வைத்து சிதறி போனான் .குருதி மாரியின் முகத்தில் தெறித்தது.உடல் சிதறி போக மாரியின் மனமும் சிதறியது....சிங் கடைசி நேரத்தில் யாரை நினைத்து இருப்பான் ,மனைவியை அல்லது அம்மாவை.மனது அவனை உலுக்கியது.


எது சண்டை இட சொல்கிறது.எவனுடைய மண்ணாசை??????எதற்கு அதிகாரம்????பல அப்பாவி மக்கள் சாவதை தவிர சண்டையால் எதை சாதித்தோம்.நான் மண் ஆசையோடு இல்லை என்றாலும் .எதிரி நம்மை கொன்று விட்டு மண்ணை பிடிப்பான். மண் தின்னும் உடலுக்குள் மண் திங்க ஆசையோ......இப்படி யோசித்து கொண்டிருக்கும் போதே, அவனை குண்டு ஒன்று துளைத்தது.ஆம் சண்டை முடியாமல் போனால் அவன் உடல் கூட மிஞ்சாது .கழுகிற்கு இரையாக போகிறதா உடல் ?????


ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....அவர்கள் வீரர்கள் ஆச்சே .....................


உள்துறை அமைச்சருக்கு பத்திரிகைகள் பாராட்டு, இந்தியா சண்டையில் வெற்றி பெற்று விட்டதாம் ......"RAW,MOZART போன்ற உளவு அமைப்புகள் ஏற்கனவே ஊடுருவல் பற்றி சொன்னதாமே .நீங்கள் தாமதமாக நடவடிக்கைகள் எடுத்தீர்கலாமே ? " என்று ஒரு பத்திரிகையாளன் ....."அது தான் election வருதே அதை வைத்து தான் வோட்டு வாங்க வேண்டும் " என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார் அமைச்சர் "No questions" என்று கோபமாக கத்தினார் .......


அவர் தமிழகத்தை சேர்ந்தவர் .கட்சி அல்லகைகள் "நடமாடும் ராணுவமே " என்று சுவரொட்டிகள் வைத்தனர் .அடுத்த முறை MP யும் அவரே .ஒரு ராணுவ வீரனின் உயிரின் மதிப்பு அமைச்சரின் வோட்டுக்கள் .


ஒரு தனி மனிதனின் சுயநலம் கோபம் அதிகாரம் மனித படுகொலைகள் செய்கின்றன

Friday 23 October 2009

ஏவுகணை மேல் ஒரு பறவை















போர் நடந்து கொண்டு இருந்தது ,


இந்தியா பாகிஸ்தான் சண்டை இட்டுக்கொண்டனர் .............எல்லை பிரச்சனை


ஏவுகணைகள் வான் நோக்கி பறந்தன ..........................................


அந்த ஏவுகணை மேல் ஒரு பறவை அழகாய் பறந்து கொண்டிருந்தது .......


இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ............
எல்லைகள் இல்லாமல் தொல்லைகள் இல்லாமல் ...........


மனிதன் மட்டுமே மனிதம் பேசி விட்டு .........மனிதனை திண்பவன்


நான் 'இந்தியன்' என்று சொல்வது கூட ஜாதி வெறியே ...........
நான் 'மனிதன்' மட்டுமே


Wednesday 21 October 2009

3

first வரணும்


















"வீட்ல எல்லாம் நல்ல தான் ஒப்பிச்சான் அப்புறம் எப்படி மார்க் கம்மி ஆச்சு "
அம்மா ..........
"ஸ்கூல நல்ல தான் படிச்சான் " டீச்சர் ..........
அம்மா " ஏன் டா மார்க் கம்மியா ஆச்சு "........
என்று கேட்க ..............
"நீ தான first வரணும்னு சொன்ன ..."
அப்பாவியாய் சொன்னது pre KG குழந்தை
அதனால்தான் வேகமாய் பரீட்சை எழுதி முடிததாம் ..........
வேகமாய் போகும் வேகாத வாழ்க்கை

வாழ்கை சுருக்கம்

















கிராமத்து கிழவி பக்கத்து வீட்டிற்கு சென்றாள் ..........
பக்கத்து வீட்டு கிழவன் ......................அவளிடம்
"இங்க பாரு கிழவி cell phonu.....என் dubai பையன்ட்ட பேசுவேன் "
"இது தான் web camera என் பேரன் விளையாடறத பார்பேன் அவன்ட
பேசலாம் எப்படி இருக்கு???" என்று பந்தாவாக கேட்க ........
"என் பசங்க பேரங்க தான் கூடவே இருக்காங்களே " என்றால் கம்பீரமாக
கிழவன் கண்ணிலே வலி மனதில் ரணம் .........
உலகம் சுருங்கி விட்டதாம் ....தகவல் தொழில் நுட்பம் ...........
கிழவனின் முகத்தில் தெரிந்தது வாழ்கை சுருக்கம்

ஜாதகம்














பள்ளி பற்றி எரிந்தது ..............
37 குழந்தைகள் இறந்து போயினர் ...............
கருகினர் ............
அந்த குழந்தைகள் அனைத்திற்குமே வேறு வேறு பிறந்த தேதி
ஒரே இறந்த தேதி .............................
வேறு வேறு பிறந்த தேதி என்றால் ....ஜாதகம் வேறு தானே ..........
அப்புறம் எப்படி ஒரே மரணம் ..........
இலங்கையில் இறக்கும் தமிழன் எல்லாருமே ஒரே நொடியில் பிறந்தானா??
சுனாமியில் இறப்பவர்கள் ........பூகம்பம் ..................
ஜாதக புலிகளே கொஞ்சம் விளக்குங்கள்

Tuesday 13 October 2009

குருதியால் எழுதுதிறேன் .

















நான் இந்த கவிதை
எழுதி கொண்டிருக்கும் போது........
ஒரு ஈழ குழந்தை இறந்திருக்கும் ........
ஒரு தங்கை கற்பு இழந்திருப்பாள்.......!

எங்களுக்கு வெடி சத்தம்
புதிதல்ல....ஈழ குழந்தை சொல்கிறது ..........
இங்கே வெடிகள் கீழிருந்து மேலே பொய் வெடிக்கும் ...
அங்கே குண்டுகள் மேலிருந்து கீழே வந்து வெடிக்கும் ....!

ஒரு தாயை சிங்களன் சுட்டு விட்டன்
மார்பிலிருந்து குருதி வருகிறது ...
குழந்தைக்கு பசி ................
தவழ்ந்து வந்து அந்த தாயின் முலையிலிருந்து ...
குருதி குடிக்கிறது ..........

ஈழ கவிதை
எழுதும் போது மட்டும் .....
என் சகோதரன் குருதியால்
எழுதுதிறேன் ....!

இங்கே நான் தீபாவளிக்கு
இனிப்பு சாப்பிடும் பொழுது..........
சிங்களன் மனித கரி
சாப்பிட்டு கொண்டிருக்கிறான் ....!

இடி
















2015 தீபாவளி தமிழ் நாடு திரை அரங்குகளில் திருவிழா கோலம்.தல படம் வருகிறது சத்யம் சினிமாவில் ஒரு வாரம் டிக்கெட் இல்லை.கதை திரைக்கதை வசனம் இயக்கம் கார்த்திக்.வெடிகளுடன் முதல் காட்சி ஆரம்பம்.
முதல் காட்சி ஒரு பெரிய உள் அரங்கு இடம் நியயார்க்.ஹெலிகாப்டர் அரங்கிற்குள் வருகிறது.இரவு நேரம் அரங்கமே நிறைந்திருக்கிறது,அழகி போட்டி.
அழகி போட்டிக்கு நடுவராக நம் தல உலகிலேயே மிக பெரிய கோடீஸ்வரன்.ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வரும் போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்திருந்து வரவேற்பு கொடுக்கின்றனர்.

தல cat walk கவனிக்கிறார்.இப்பொழுது கேள்வி நேரம் ரஷ்ய அழகியிடம் கேள்வி கேட்க படுகிறது ....
1 உலகிலேயே ஆண் அழகன் யார்
a) charles son williams
b) thala
c) ronaldo
d) arnold

தல பெயரை சொல்லும் போது பெரிய தொலைக்காட்சியில் முகம் close up shot காண்பிக்க
படுகிறது...புருவத்தை உயர்த்துகிறார்....அந்த அழகி தல பெயரை சொல்கிறாள்

அந்த அழகி தலையை கையை காண்பிக்கிறாள்....எப்படி என்று நடுவர் கேட்க ....வில்லியம்ஸ் சார்லேசின் மகன் தனி அடையாளம் இல்லை.அர்னோல்ட் உடல் அளவில் அழகர்.ronaldinho ஒரு துறையில் மட்டுமே வல்லுநர்.ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்து முப்பது வயதில் உலகின் பணக்காரர்.நாம் உபயோக படுத்தும் ஜட்டியில் இருந்து பெட்ரோல் வரை அவருடையது,பல துறை வல்லுநர் ,அவரே உலக அழகன்......
இந்த பதிலுக்காக அவளுக்கு உலக அழகி பட்டம்.

பெரிய தொலைக்காட்சியில் தல close up.அந்த தொலைக்காட்சி வழியாக காட்சி உள்ளே செல்கிறது....backround மாறுகிறது தல அப்படியே அமர்ந்து கொண்டு இருக்கிறார்.ground அப்படியே பெட் ஆக மாறுகிறது.ஒரு 7 star hotel room no 1.ஒரு நாளைக்கு பல லக்ஷங்கள் வாடகை.

ஒரு call ding dong ....

"come in" என்கிறார் தல.......
உலக அழகி ....தல கூப்பிட்டால் வந்து தானே ஆக வேண்டும்....

எல்லாத்தையும் முடித்து விட்டு "in the eve u r miss world,but now onwards u r misses world because i am Mr,world" தல சொல்கிறார் ......முதல் பாடல் ....

ஆம் பணத்துக்காக எதையும் செய்யும் குணம் ,உலகிலேயே முதல் பணக்காரன் ஏன் இப்படி இருக்கிறான்......என்று கதை நகரும் போது ஒரு முக்கிய திருப்பம்......தல உலகிலேயே தீவிரவாத குழுவால் கொல்ல கூடிய அளவிற்கு அனைவரையும் சுரண்டும் முதலாளி.....

தீவிரவாதிகள் அவரை கொல்ல பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்........ inter pol அதன் தலைவனை தேடுகின்றது.அதன் தலைவன் யார் அவன் அவர்கள் கூட்டத்துக்கு முன்னால் தோன்றுகின்றான் .........................அவன் நோக்கம் என்ன அது யார் .......அவன் சே போல கூட்டத்தில் பேசுகிறான்....ஒரு உலக தலைவனுக்கு உண்டான கம்பீரம் .....அவன் இடி முழ்க்கம் செய்கிறான்......அவன் யார் அதுவும் தல.......அப்பொழுது இடைவெளி.....

che guvera தான் bill gates என்றால் உங்களால் நம்ப முடியுமா

ஆம் ஒரே ஆள் சே உள்ளத்தில் பில் கேட்ஸ் வெளி உலகத்தில்.....முதலாளியாக ஒரு போராளி....அவன் போராளியாக இருந்தால் கொன்று விடுவார்கள்.....அவன் மக்களோடு மக்கலாக இருந்தாலும் கண்டுபிடுத்து விடுவார்கள்.....முதலாளியாக இருந்தால் எவன் கேட்பான்....ஒரு முதலாளியை யாரும் போராளி என்று சந்தேக படுவார்களா.

che guvera மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை சாதித்து இருப்பான்......அவன் உயிர் அவன் உயிர் விலை மதிப்பற்றது..... எத்தனை சாதித்து இருப்பான் ...பில் கேட்ஸ் போராளி என்றால் நம்ப முடியுமா ...?????அதனால் சாதிக்க முதலாளி ஆனான் ......உலகில் முதல் பணக்காரன் உலகமே காரி துப்பியது, தப்பானவன் என்று .......

அனைவருக்கும் உணவு அவன் இலக்கு.......ஒரு பக்கம் பணம் இன்னொரு பக்கம் பிணம் ஏற்கவில்லை????
சம்பாதித்த பணத்தை இயக்கத்திற்கு கொடுத்தான்..........யாருக்கும் தெரியாது...........நினைத்ததை சாதித்தான் ..............
முதலாளி ஆகினான் சாதித்தான்................................................பணம் போராளி இயக்கங்களுக்கு
போனது .......

கிளைமாக்ஸ்:
அவன் பாதி இலக்கை அடைந்து விட்டான் ..........சென்னைக்கு வந்திருக்கிறான் கதாநாயகன்....
கார் சென்று கொண்டிருக்கிறது சிக்னல் .......கண்ணாடியை எறக்கி விடுகிறான் .......ஒரு பெரியவர் பக்கத்து வண்டியில் இருந்து உலகமே மாறிக்கொண்டிருக்கிறது இவனுக்கு சாவு வராதா???????என்கிறார் .. ......இந்த மாற்றத்திற்கு தல தான் காரணம் என்று தெரியாமலேயே ..
தல புன்முறுவலுடன் சிரித்து கொண்டே கதவை மூடுகிறார் .......................
"நல்லது செய்தால் தெரிய வேண்டுமா என்ன ?????"

A FILM BY KARTHICK


போராளி உயிர் விலை மதிபற்றது ..............அவன் உயிருடன் இருக்க வேண்டும் .தவறு செய்தாவது தன் விஷயத்தை சாதிக்க வேண்டும்


அரங்கில் வெடி சத்தத்துடன் "இந்த தீபாவளி தல தீபாவளி தல " என்கிறான் ஆல்பர்ட் முதல் மதுரை வரை .............

Monday 12 October 2009

யார் சொன்னது கடவுள் இல்லை என்று ?



















சின்ன வயதிலிருந்து நான் நட்பால் ஆசிர்வதிக்க பட்டேன்.என்னுடைய முதல் நண்பன்

குருவஜித் ஐந்தாம் வகுப்பில் இருந்து எனக்கு தெரியும்.இப்பொழுதும் அவன் என்னுடன்

தொடர்பில் இருக்கிறான்.அஷிக் முஹம்மத் அப்புறம் கார்த்திக்.அனைவருக்கும் நான்

எவ்வளவோ கடமை பட்டிருக்கிறேன் .

என் எழுத்தை செதுக்கியது என் நண்பர்கள்.எனது B.sc நண்பர்கள் நான் எழுதிய

அரைவேக்காடுகளை எல்லாம் வைரமுத்துவுடன் ஒப்பிட்டு பேசினார்கள்.நான் என்ன தான்

கிரிக்கினாலும் அதை இலக்கியம் என்றனர் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து.

என்னுடைய வாழ்கையில் எனக்கு முக்கியமான நண்பன் லக்ஷ்மணன்.நானும் அவனும்

பேசினால் மூன்று அல்லது நான்கு மணி நேரம் பேசுவோம்.Dostoveskiyai பற்றி பேசுவோம்.

கார்க்கி பேசுவோம் ,யார் சிறந்தவர் என்று சண்டை போடுவோம்.

சினிமா பேசுவோம் கமலகாசன் உன்னை போல் ஒருவனில் இலை மறையாக

ஒளித்திருக்கும் பார்பனியம் பற்றி பேசுவோம்.கலைஞர் அரசியலில் எதிர்க்க நான் தான்

சரியான ஆள் என்பேன்.கம்யூனிசம் பற்றி பேசுவோம்.பழகும் போது நுட்பமான அரசியல்

இருந்தால் கூட என்னால் கண்டுபுடிக்க முடியும் என்றால் அவன் கற்று கொடுத்தது.

என் நண்பர்கள் என்னை ரசிக்கிறார்கள். நான் காதலில் தொலைந்த நாட்கள் உள்ளன.

நான் தற்கொலைக்கு முயன்றது உண்டு.என்னை வாழ்கையில் காப்பற்றியது நான்

இப்பொழுது இருக்கும் ஏரி கரை சாலை தோழர்கள்.


அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு புதினம் தேவை அந்த எண்ணமும்

உள்ளது.இப்பொழுது கூட என் அலுவுகத்தில் நல்ல நண்பர்கள் இம்ரான் பாஸ்கர் முருகுவேல்

சுப்பு......நான் கிழே விழும் போதெல்லாம் அவர்கள் தாங்கி பிடிகிறார்கள்

இப்பொழுது நான் வலை பூவிற்கு புதிது.....நான் எதோ கத்து குட்டி போல் எழுதி

கொண்டிருக்கிறேன்.இங்கே என்னை படித்தான் ஒரு நண்பன்,அவன் பதிவுலகிலே ஒரு முக்கிய

புள்ளி அவனுக்கு என்னை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. படித்தாலும்

அறிமுகப்படுத்த வேண்டுமே....என் நண்பன் செய்தான் ஈகோ மறந்து வலை பூவில்

குழந்தை போல் இருக்கும் என்னை அறிமுகம் செய்தான்.என் முகத்தை அவன் முகத்தில்

அறிமுகம் செய்தான் .அவன் வலை பூவிலே என்னை அறிமுகம் செய்தான்....நண்பா உன்


காலுக்கு முன்னால் என் படைப்புகள் தூசு........

http://irumbuthirai.blogspot.com/2009/10/blog-post_12.html

அரவிந்த் நீயும் எனது உயிர் நண்பன்

நான் நண்பர்களால் ஆசிர்வதிக்க பட்ட குழந்தை..................

யார் சொன்னது கடவுள் இல்லை என்று ?

Friday 9 October 2009

காதல்(1982 a love story)

















என் மகன் காதலை என்னிடம் சொல்லியது எனக்கு என்னுடைய பழைய காதலை கிளறி
விட்டது போல் இருந்தது.1980 இளையராஜா கொடி கட்டி பறந்த நேரம்.ராஜாவின் பாடல்
கேட்டாலே காதல் செய்ய தோன்றும்.!


















gramaphonil இளையராஜா ஒலித்துக்கொண்டே இருப்பார்."இளமை என்னும்
பூங்காற்று" கேட்டுக்கொண்டே கட்டிலில் புரளுவேன் தலைகாணியை என் அவளாக........!
"கண்ணே கலை மானே" ஒலித்துக்கொண்டிருக்கும் எப்பொழுதும்.பாலு மகேந்திர ஆதர்ஷ
கலைஞன்.உற்சாகமாக இருக்கும் போது "மடை திறந்து" பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.சில
நேரம் "உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான்" முதல் மரியாதை
பாடல் என் அப்பா கேட்டு கொண்டிருப்பார்.பக்கத்துக்கு வீட்டில் புதிதாக ஒரு குடும்பம்
குடியேறியது.

அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்.வசதி இல்ல வீடு.நான் போடும் பாடலை அந்த பெண் கேட்டு
கொண்டிருப்பாள் அவள் வீட்டிலிருந்து.நான் சத்தத்தை அவளுக்காகவே அதிகமாக
வைப்பேன்."இதயம் ஒரு கோவில்""பூ மலையே தோள் சேரவா" "மன்றம் வந்த
தென்றலுக்கு" "என்ன சத்தம் இந்த நேரம்..."


மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டால்....! அவளும் காதலிக்கிறாள் .....

"ஒரு கோலமே

கோலம் போடுகிறதே.....!"


நாங்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டோம்."அந்த நிலவா தான் நான் கைல
பிடிச்சேன்".இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் .காதலை வெளி படுத்தவும் பாடல் ,தோல்வி அடைந்தாலும் பாடல்.

நாங்கள் பல படங்கள் பார்த்தோம்.அப்பொழுதெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம்..
இப்பொழுது இருக்கும் அமெரிக்க மாப்பிளை போல அப்பொழுது எல்லாம் வில்லனாக
வருவார் Bank officer.


"உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே"......அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.அவள் இரவு தூங்கும் போது அழுது
இருப்பாள்.அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆனது ஒரு பையன் அவன் இப்பொழுது காதலில்.
ஆம் அவனுக்காவது காதல் வாய்க்க வேண்டும்."சரி டா பொண்ணு வீட்ல பேசலாம்"
என்றவுடன் அவன் கண்களில் சிரித்து நன்றி சொன்னான்

பெண் வீட்டிற்கு சென்றால் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா என் காதலி.இருவரும்
மௌனமாய் பேசிக்கொண்டோம்.
அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் "நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்"

Thursday 8 October 2009

எனக்கு 5 உனக்கு 3......!

சென்னையில் ஒரு மழைக்காலம்

2.எனக்கு 5 உனக்கு 3......!





















ஐந்தில் விளையாதது
ஐம்பதில் விளையாது ............
நான் காதலிக்க ஆரம்பித்த வயது ஐந்து ....!

நாம் சிறுவயிதிலிருந்தே
ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருக்கிறோம் ....!
உன்னை கண்டுபிடித்தாலும் காட்டிக்கொடுக்காமல்
இருப்பதில் ஒளிந்து கொண்டிருந்தது என் காதல்....!

என் அம்மா நிலவை பார்த்து சோறு ஊட்டாமல்
பக்கத்து வீட்டு உன்னை பார்த்து சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள்....!
"அங்க பாரு தங்கச்சி பாப்பா" என்றால் ........
"அப்பாக்கு நீ தங்கச்சி வேணுமா மா" என்றேன்
அப்பாவியாய் ........
"அடப்பாவி" என்றால் அம்மா

காதல் வயதுக்கோளாறு .....
என்பதை நான் ஏற்றுகொள்ளமட்டேன் .......
காதலிக்க ஆரம்பித்த போது
எனக்கு 5 உனக்கு 3 .....!

ராஜா ராணி
விளையாடும் போது எனக்கு ராஜா வர
உனக்கு ராணி வர .....!
நான் உன்னை பார்த்து 32 பல் தெரிய சிரிக்க..
அந்த பற்களின் இடுக்கில் ஒளிந்திருந்தது காதல்..!

நாம் அப்ப அம்மா விளையாட்டு விளையாடுவோம் ....
"ஒழுங்கா seriela பார்க்காம சோத்த போடு டி" என்பேன் ......
"சரிங்க" என்பாய் ................
ஒரு நாள் நீ உன் மாமா பையனிடம் அப்பா அம்மா
விளையாட்டு விளையாட .........
நான் "என்னுடன் தான் விளையாட வேண்டும் "
என்று உன்னை அடித்தேன் ....................
அந்த அடியில் அதற்கடியில் காதல் ஒட்டிக்கொண்டிருந்தது .......!


























பள்ளி செல்லும் பேருந்தில் ......
நாம் இருவரும் இடைவெளி இல்லாமல்
அமர்ந்து கொண்டிருப்போம் .....
இடைவெளி இல்லாத இடைவெளியில்
அமர்ந்து கொண்டது காதல் ...!

அப்பொழுதெல்லாம் என் காதலை
வெளிப்படுத்த ரோஜா பூ கொடுக்க தெரியாது....!
ஜவ்வு மிட்டாய் வாங்கி கொடுத்தேன்.....

பள்ளி ஆண்டு விழாவில்
நாம் நடனம் ஆடினோமே.........நியாபகம்
இருக்கிறதா .....?
நான் அஜித் நீ ஜோதிகா ....

கத்தும் speakaril நானும் கத்தினேன் ......
"ஓ சோனா i love u da"
பக்கத்தில் ஜோடியாக ஆடிய உனக்கு
கேட்டதா....?
"நன்றாக நடித்தாய்" ஆசிரியர் சொன்னார் .........
நடித்தேனா?????

அந்த வயதுலேயே இருந்திருக்கலாம் ...........
நான் நீ நமக்கு குழந்தையாக நாய் குட்டி ............
பால் உணர்வில்லா காதல் ...................
கறந்த பால்

Tuesday 6 October 2009

சென்னையில் ஒரு மழைக்காலம்




















வறண்ட நாட்களில் சென்னையில்

எப்போதாவது பெய்யும் மழை

போல....!

என் வறண்ட வாழ்வின் ஈரமான நாட்கள்.....

"சென்னையில் ஒரு மழைக்காலம்"

கவிதை வடிவில் ஒரு புதினம் ....

புதினம் வடிவில் சில கவிதைகள்
!



1.ரங்கநாதன் தெரு மிக மிக அருகில்

"உலகின் அனைத்து பாதைகளும் என் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன"

"ஒரு புளிய மரத்தின் கதையின்" தொடக்க வரிகள்...........!

எனது அனைத்து பாதைகளும்

என் காதலியின் வீட்டை நோக்கியே

முடிகின்றன




ஆம் ரங்கநாதன் தெரு

மிக மிக அருகில் என் காதலியின்

வீடு...!

நான் அவள் வீட்டருகே நடந்ததை ...

மேல் நோக்கி நடந்திருந்தால் ....

சந்திர மண்டலம் தாண்டி இருப்பேன்...

தரையில் நடந்திருந்தால் அமெரிக்க கூட சென்று இருப்பேன்




இந்த கவிதை

எழுதிகொண்டிருக்கும் போது.....

என் காதலி வேறு தேசத்தில்....

அவளின் நினைவுகளை கவிதைகளாக

மீட்டுக்கொண்டிருகிறேன்
























அவள் பார்த்த பார்வை

இன்றும் அவள் வீட்டு ஜன்னல் அருகே

ஊர்ந்து கொண்டிருக்கின்றன .......!

அவள் ஒட்டிய வண்டி ....

தூசி படிந்து வீட்டு வாசலில் நின்று

என்னை பார்க்கும் ...........

அந்த தூசியை தட்டுவேன் அதில் ஒளிந்திருக்கிறது

என் காதல் ....!




காதலி இல்லை ....

என் காதலை அவள் வீட்டு வண்டியிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறேன் ..!

அவள் இல்லாத வீட்டை நான்

பார்த்துக்கொண்டிருப்பதை வீடும் ....!

அத்தெருவும் பார்த்து கொண்டே இருந்தன ......

சூன்யம் ஆட்கொண்டது அத்தெருவை ..!


மழை மன அழுத்தத்தில்

கதறி அழுதது ...........

சென்னையில் மழைகாலம் தான் ...................

ஆனால் மனம் ஏனோ வறண்டு கிடக்கிறது ......!


ஆம் என் வாழ்வு புதைந்த இடம் ....

நான் உயிரோடு இருந்த நாட்கள்

2005 ............

இருந்த இடம் No 111 lake view road west mambalam.......

என் காதலி இருந்த அதே தெரு........

இருந்த இடம் No 103 அதே தெரு ...........

புதினம் புதிர்களுடன் தொடரும் .......



இந்த முதல் தலைப்பு

முடியும் போது என் மனஅழுத்தம் தொடங்கி விட்டது.....


என்னுடைய வெண்ணிற இரவுகள் தூங்கா இரவுகள்

தொடரும் .....!

Monday 5 October 2009

சிங்கம் புலி














ஆண்டு 2010 கலைஞர் தலைமையில் தமிழ் மாநாடு.இங்கே மாநாடாக தமிழர்கள் முள் வேலியில்.....................!முள் வேலி,முகாம் அதிலே சோகமான முகம்கள்.கட்டைகளுக்கு சேலை கட்டினாலே தூக்கிக்கொண்டு புணர்ந்துவிடும் சிங்கள சிங்கங்கள்.கிருஷாந்தினி பார்ப்பதற்கு அழகாக வேறு இருப்பாள்,விடுவார்களா.கட்டம் போட்ட சட்டை மற்றும் பாவாடை அணிந்து கொண்டு இருந்தாள் யாழினி
.மார்பு வேறு மேடாக இருந்தது.அவளின் தாத்தா தமிழ் தந்தை செல்வநாயகம் வழியில் சென்றவர்கள்.அப்பா பிரபாகரன் வழியில் சென்றவர்.இவள் கூட சில காலம் பெண் புலியாக இருந்திருக்கிறாள்.சிங்கள வீரன் ஒருவனுக்கு இவள் மீது ரொம்ப நாளாக கண்.
ஒரு நாள் இரவு சிங்கள சிங்கம் அவளை புணர்வதற்கு தூக்கி கொண்டு இருட்டு பகுதிக்குள் சென்றான்..முதலில் check செய்கிறேன் என்று அவளது மார்பு பகுதியை தொட்டான்.நிலைமை புரிந்தது இவளுக்கு.......................!சிங்கம் என்றால் வேட்டை ஆட வேண்டுமே வேட்டைக்கு தயாரானான்....!அவள் அவனை பார்த்து நாக்கை நீட்டி செய்கை காட்டினாள்.அவன் ஒத்துழைப்பதாக நினைத்தான்.அவள் கிழே அமர்ந்து கொண்டு இருந்தாள், நாக்கையும் நீட்டி கொண்டிருந்தாள்...
அவன் சந்தோஷத்தில் நின்று கொண்டே தன் மறைவு பகுதியை ........ஆ ஆ ஆ ..................!அலறினான் சிங்கத்தின் கொட்டையை பெண் புலி கடித்து துப்பியது......சிங்கம் அலறியது புலி உறுமியது .........


உனக்கு அவலத்தை கொடுத்தவனுக்கு அதையே திருப்பி கொடு

Saturday 3 October 2009

அம்பானியும் அம்பத்தூர் மணியும்

இந்த கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனை அல்ல.
















சென்னை காலை பொழுது மணி எட்டு,வாகனங்கள் traffic ஜாம் இல் சிக்கும் நேரம்.47A சைதாபேட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது.பஸ் நிறுத்தத்தில் ஏறினான் மணி.சுற்றி முற்றி பார்த்தான்,
" ஒரு அடையார் "
"மூணு ரூபா சில்லர கொடு. பா "
அவன் கண்கள் மக்களின் பர்சுகளை ஊடுருவின...
ஒருவனது பழைய பர்ஸ் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது......
அவன் கால்களை பார்த்தான் மணி.....ரப்பர் செருப்பு
"பாவம் இவனிட ம் கை வைக்கக்கூடாது...!"மனதில் நினைத்துக்கொண்டான்....
பக்கத்துக்கு சீட்டில் அமர்த்திருந்த ஒருவன் கையிலே coke மற்றும் ஆங்கில நாளிதழ் ....
TCS ID-கார்டு.....ரீபோக் சூ......"இவனிடம் கை வைத்தால் தப்பில்லை" யோசித்தான் மணி.
பர்சில் கை வைக்கும போது மாட்டிக்கொண்டான் ................
"திருடன் திருடன் ....."தர்ம அடி வாங்கினான்...........
"police stationuku விடுங்கப்பா......."கத்தினார் சென்னை நாட்டாமை...............
காவல் நிலையத்தில் மணியின் மணியிலேயே மிதித்தனர் .................அவன் எதற்கு திருடினான் என்று யாரும் கேட்கவில்லை ............????????
அப்பொழுது ஒரு செய்தி ஓடி கொண்டிருந்தது காவல் துறை தொலைகாட்சியில் ..........
"BSNL networkai........தவறாக பயன்படுத்திய reliance குழுமத்தால் 3000 கோடி
மோசடி......Supreme court தொண்ணுறு லட்சம் அபராதம் .........."
அம்பானி அபராதம் கட்டி விட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தார் ..............
வெளியில் செய்தியாளர்கள் அவரை மொய்த்தனர் .....
"பசிக்காக திருடுபவன் திருடன் ......"
மணி திருடன் .......
அம்பானி businessman .............சரிதானே