Tuesday 30 March 2010

காதலும் கற்று மற

















என் இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர் , ஒருவர் காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி என்று வாதிடுபவர். இன்னொருவர் காதல் என்று ஒன்று உள்ளது அது இந்த மண்ணில் சாத்தியம் இல்லை என்று சொல்பவர் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் .முதல் நண்பர் அவரிடம் "காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி தான் மரினா பீச் சத்யம் திரையரங்கில் எல்லாம் பாருங்கள்" என்றார் அதற்க்கு இரண்டாம் நண்பர் "பால் உணர்ச்சியில் வருவது தவறல்ல ஆனால் வர்க்கம் சார்ந்து தான் காதல் வருகிறது அது காதலே அல்ல
உடன்படிக்கை" என்றார் . எனக்கும் என் நண்பருக்கும் வர்க்கம் என்று எதை சொல்கிறார் என்று புரியவில்லை .

நண்பர் இன்னொரு நண்பரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.கடைசியில் வர்க்கம் என்று விவாதம் செய்த நண்பர் ஒரே ஒரு கேள்வி கேட்டார் இன்னொரு நண்பரால் பதில் சொல்ல முடியவில்லை " அழகா இருக்கு ஒரு பொண்ணு உங்களுக்கும் பிடிச்சிருக்கு அந்த பொண்ணு சித்தாள் வேலை செய்கிறாள் நீங்க காதலிப்பீங்களா" சக நண்பர் சாப்ட்வேர் "அது எப்படி முடியும் " என்றார் . இதன் பெயர் தான் வர்க்கம் கிளாஸ் சார்ந்தே ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்று நண்பர் விளக்கினார்.

வர்க்கம் என்பது இனம் சார்ந்து இருக்கலாம் மதம் ஜாதி சார்ந்து இருக்கும் அது எல்லாம் இல்லாத வகையில் பொருளாதாரம் சார்ந்து இருக்கும். நானும் அந்த நண்பரும் பேசிக்கொள்ளும் பொழுது கூட நிறைய கேள்வி கேட்டு மடக்குவார் பேசிப்பார்க்கும் பொழுது நண்பரிடம் ஒரு ஆழம் இருக்கும் அஜித் பிடிக்கும் என்றால் ஏன் பிடிக்கும் என்பார் . நான் தொழிலாளியுடன் சமமாய் பழகுவார் என்பேன். அப்படி என்றால் அந்த தொழிலாளி வீட்டில் பெண் எடுப்பாரா????? என்பார் நான் முழிப்பேன் அப்புறம் என்ன தொழிலாளி எல்லாம் வர்க்கம் சார்ந்தது கார்த்திக் என்பார்.

நானும் யோசித்து பார்த்தேன் சினிமாவில் காட்டுவதை போல் ஒரு பணக்கார பெண் ஏழை பையனை காதலிப்பது பணக்கார பையன் ஏழை பெண்ணை காதலிப்பது இது எல்லாம் சாத்தியமே இல்லை அப்படி இருந்தாலும் மிக குறைவு. மனிதனின் லெவல் மாற மாற நட்பு வட்டாரம் மாறும் அந்த அளவிலே மட்டுமே யோசிப்பான். காரில் வரும் பெண்கள் காரில் வரும் பையனையே காதலிப்பாள் . ஒரு கல்லூரியில் படிக்கும் இரு பாலார் காதலித்தால் ஏறக்குறைய ஒரே பொருளாதார அமைப்பையே சேர்ந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஜாதி மத ரீதியாகவோ ஒரே வர்க்கம் சார்ந்து இருப்பார்கள்.

அப்படியே ஏழை பையனாய் இருந்தால் கூட அவன் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நன்றாய் படித்து மென்பொருள் நிறுவனம் அல்லது அதை ஒத்த மேட்டுக்குடி வேலை இதை பார்த்தே காதல் வருகிறது . இன்னொரு நண்பரிடம் கேட்டேன் "high கிளாஸ் பொண்ணுகள பார்பீங்களா" அதற்க்கு அவர் சொன்ன பதில் "அழகா இருந்தாலும் லவ் பண்ண தோணாது" " ஏன் " என்று கேட்டேன் . "அந்த பொண்ணெல்லாம் நமக்கு செட் ஆகாது" என்றார் நண்பர் . ஒரு மிடில் கிளாஸ் பையன் காதலிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு
குடும்ப பாங்கான பெண்ணையே பார்ப்பான் ஏன் என்றால் அதை பார்த்தால் தான் இவனுக்கு ஒத்துவரும் என்று இவனுக்கு தெரியும் .

எல்லாமே வர்க்கம் சார்ந்து என்றால் உண்மையான காதல் என்ன என்று நண்பரிடம் கேட்டேன் . எதுவுமே பொருள் வைத்து கொள்ளாமல் பாதுகாப்பு இல்லாமல் அன்றைய நாளுக்கு மட்டும் உழைக்கும் மக்களிடம் இது சாத்தியம் என்றார். எப்படி என்று யோசித்து பார்க்கும் பொழுது சரியாகவே தோன்றியது . ஆம் இவனிடமும் பாதுகாப்பு இல்லை அவளிடமும் பாதுகாப்பு இல்லை சொத்துக்கள் இல்லை இங்கு இருவருக்கும் பிடிக்கும் உயிரை கூட விடுவார்கள் என்பது முன்னிலை படுகிறது , பணம் தேவை ஜாதி வர்க்கம் எல்லாம் பின்னிலை அடைகிறது, அதனால் அந்த இடத்தில் காதல் சாத்தியம்.

இன்னொரு இடத்திலும் காதல் சாத்தியம் எங்கே என்றால் ஒரு போராளி போல இருக்கிறான் , போராட்டங்களில் கலந்து கொள்கிறான், எப்பொழுது ஜெயிலுக்கு போவான் என்று தெரியாது இதை போல் ஒருவன் இருந்தால் எந்த பெண்ணும் நெருங்கி வர மாட்டாள். அவன் வாழ்கையில் பாதுகாப்பு இல்லை அவனையே ஒரு பெண் காதலித்தால் அங்கே உண்மையான காதலுக்கு சாத்தியம் இருக்கிறது ஏன் என்றால் இங்கே பிடிப்பது மட்டுமே பிரதானம் ஆகி விடுகிறது .

நண்பரிடம் பேசிவிட்டு வந்த பொழுது பெசென்ட் நகர் பீச்சில் காருக்குள் மேட்டுக்குடி காதல் நடந்து கொண்டிருந்தது உள்ளே A R ரஹ்மான் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஹோசன்ன" பாடிக்கொண்டிருந்தது. உள்ளே நூறு காதலர்கள் இருப்பார்கள் பீச்சில் அந்த வர்க்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கோ ஒரு இடத்தில் "கண்கள் இரண்டால்" பாடல் ஒலித்து கொண்டிருந்தது எப்பொழுதுமே கிளர்ச்சி ஏற்ப்படுத்தும் அந்த பாடல் இப்பொழுது என்னை ஒன்றும் செய்யவில்லை. என் காதலி என்னை விட்டு போய்விட்டால் என்ற வடு கூட இல்லை கொஞ்சம் சுதந்திரமாய் இருந்தது வெகு நாட்களுக்கு பின்.

Thursday 25 March 2010

உற்று பார்த்துக்கொண்டே இருந்தது


















காரி உமிழ்ந்து
விட்டு போனார் பெரியவர் .......!
மழை வந்து குளிப்பாட்டியது ............
வண்டிகள் ஊர்ந்து சென்றன .......
நேற்று ஒரு காதலனுடன்
பிரிந்த காதலி இன்னொரு காதலனுடன்
நடந்து சென்றாள்............!
பிராத்தல் நின்று கொண்டு கூப்பிட்டு
கொண்டிருந்தாள் ...........!
பார் சென்றனர் A சென்டர் குடிமகன்கள்
டாஸ்மாக் சென்றனர் C சென்டர் .............!
ஒரு குழந்தை பஞ்சு மிட்டாய்க்காக அழுது கொண்டிருந்தது .........
ஆயிரம் ருபாய் பொம்மை வைத்து காருக்குள் சென்றது பணக்கார குழந்தை .......
தோழர்கள் ஏதோ பிரச்சனைக்காக
சுவரொட்டியிலே ஓட்ட ..............பக்கத்திலே
ஷகிலா பட சுவரொட்டி .....................!
துரோகி விரோதி நல்லவன் யாராக இருந்தாலும்
தெருவிற்கு மிதி மட்டுமே ..................
சில நேரம் காரி உமிழ்தல்
சில நேரம் அதன் பெயர் மூத்திர சந்து .............!
இருந்தாலும் அந்த அங்காடி தெரு அனைவரையும்
உற்று பார்த்துக்கொண்டே இருந்தது ....................!

Wednesday 24 March 2010

இந்த பதிவிற்கு யாரும் vote போட வேண்டாம் - பார்ட் இரண்டு

கோகோ கோலா பதிவு பற்றி எழுதினேன் .........கோகோ கோலா குடிப்பவர்கள் அதிகமா இல்லை
நாம் சரியாக சென்றடயவில்லையா என்று தெரியவில்லை ............................!தயவு செய்து போன பதிவிற்கு
வாக்கு அளிக்க கூட வேண்டாம் படித்து விட்டாவது செல்லுங்கள் .....
http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_23.html

Tuesday 23 March 2010

பிணவறை ஆகும் பிளாச்சிமடா - கோகோ கோலா விற்கு எதிரான போர்














"கடவுளின் பூமி" என்று சொல்லப்படும் கேரளா , எங்கே பார்த்தாலும் பச்சை நிறம். நல்ல பசுமையான மாநிலம், சுத்தமான காற்று ,சுத்தமான தண்ணீர்.கேரளத்தின் நெற்களஞ்சியம் பாலக்காடு. பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் தாலுக்காவில் பிளாச்சிமடா என்னும் கிராமம் நெற்களஞ்சியம் மாவட்டத்தின் இதயம் ஒரு காலத்தில். ஒரு
காலத்தில் செழிப்பாய் இருந்தது பிளாச்சிமடா என்னும் கிராமம், தண்ணீர் தனியார் மாயம் ஆகும் வரை. ஒரு மாவட்டத்தின் நெற்களஞ்சியம் இரண்டு ஆண்டுகளில் பாலைவனமாய் போகும் என்றால் நம்புவீர்களா ,இதற்க்கு யார் காரணம் என்றால் விஜய் அமிர்க்ஹான் சூர்யா போன்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு வருவார்களே, நாம் கூட மேட்டுக்குடி என்று நினைத்துக்கொண்டு கோகோ கோலா மற்றும் பெப்சி டின் குடிப்போமே . ஆம் இந்த நிலத்ததடி நீரை சுரண்டியது, மாசு படுத்தியது சுட்ட்ருசுழலை எல்லாமே கோகோ கோலா நிறுவனம் .

2000 ஆம் ஆண்டில் கோகோ கோலா நிறுவனம் ஒரு தொழிற்சாலையை கட்டியது பிளாச்சிமடாவில் .இதன் தண்ணீர் தேவைக்காக பல ஆழ் குழாய் கிணறுகள் போடப்பட்டு தினந்தோறும் 1.5 மிலியன் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீரில் இருந்து உறிஞ்சப்பட்டது. பிளாச்சிமடா மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் 400 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. பெருமாட்டி பஞ்சாயத்திற்கு 6,45,000 ரூபாய் வரியாகவும், உரிமத்தொகையாகவும் கிடைத்தது. முதலில் கிராம மக்கள் இதை வரவேற்றனர்.2002 ஆண்டு முதல் குடிநீரின் அளவு குறைய துடங்கியது . தண்ணீர் எல்லாம் கருப்பாக வரதுடங்கியது .தண்ணீரின் சுவையும் மாறத் துடங்கியது.

நீர்வளமிக்க பிளாச்சிமடாவில் மக்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருக்க துடங்கினார். மக்கள் தெருவில் இறங்கி போராட துடங்கினார் , போராட்டத்தின் ஐம்பதாம் நாளில் மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 7 பெண்கள் காயப்படுத்தப்பட்டனர் . இப்போராட்டம் நாடெங்கும் நடந்தது. "நிலத்தடி நீர் என்பது அப்பகுதி மக்களுக்கு உரிமையானது. மாநில அரசும், அதன் நிர்வாகமும் இந்த அரிய செல்வத்தை பாதுகாப்பதில் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறது. அந்த நிலத்தடி நீரை, அதன் மீது உரிமையற்றோர், அதிகமாக உறிஞ்சுவதையும், அசுத்தமாக்குவதையும் அனுமதிக்க அரசு இடங்கொடுக்காது. அது மக்கள் நலனைக் காக்கும் ' என்றதொரு வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவை கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது. இது இப்போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

2004 ஆம் ஆண்டு பலாக்காடு வறட்சி மாவட்டமாய் அறிவிக்கப்பட்டது . மேலும் கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்பதையும் கேரள அரசாங்கம் அறிவித்தது.ஆனாலும் கோகோ கோலா போன்ற பணமுதலை அதை கேட்பதாய் இல்லை . போராட்டம் நடந்து கொண்டே இருந்தது போராட்டத்தின் 1000 நாளில் மேத்தா பட்கர் கலந்து கொண்டார் . ஒரு நாட்டின் அடி நாதம் விவசாயம் அதன் அரசாங்கம் சொன்ன தீர்ப்பாயே மதிக்க வில்லை என்றால் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது . நாட்டை பணமுதலைகளிடம் விற்றுவிட்டதா.
ஹிந்து நாளிதழ் சொல்வதை போல் கோகோ கோலா நிறுவனம் ஒரு பத்து விதமான சட்டங்களை மீறி உள்ளது

1. Water (Prevention and Control of Pollution) Act, 1974

2. The Environment (Protection) Act, 1986

3. The Factories Act, 1948

4. Hazardous Waste (Management and Handling) Rules, 1989

5. The SC-ST (Prevention of Atrocities) Act 1989

6. Indian Penal Code

7. Land Utilization Order, 1967

8. The Kerala Ground Water (Control & Regulation) Act, 2002 Indian Easement Act, 1882

9. Indian Easement Act, 1882.

தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் ஊராட்சியில் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி. ஒரு காலத்தில் விவசாயம் பார்த்த பூமி இன்று பிளாட் போட்டு விற்கப்பட்டது . அந்த பாலாற்றின் பக்கத்தில் black night பீர் கம்பெனி வேறு . இவர்கள் வெளியிடும் கழிவுகளை பாலற்றிலேயே விடுவது கொடுமை .இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை உறுஞ்சியது .























கோகோ கோலா குடிப்பதை ஒரு மேட்டுக்குடி கலாச்சாரம் என்று நினைத்து குடித்து கொண்டிருக்கிறோம் . நீங்கள் கோகோ கோலா குடிக்கும் நேரத்தில் நம் அன்னை நிலம் கற்பு இழந்து கொண்டிருக்கிறது . இன்னும் நமக்கு தெரியாத எத்தனை பிளாச்சிமாடா என்று தெரியவில்லை ???


எத்தனையோ வரட்சிகளை கண்டுள்ளது இந்தியா, நிலத்ததடி நீர் குறைய வெறும் பருவ மழை காரணம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் . தண்ணீர் தனியார்மயம் ஆகி விட்டது இலவசமாய் தொலைகாட்சி கிடைக்கும் ஆனால் தண்ணீர் கிடைக்காது. நாம் கின்லே இல்லை aqua fina சார்ந்து இருக்கிறோம் . உண்மையிலேயே அது காரணமா , தண்ணீர் பஞ்சம் வரும் பொழுது எப்படி கோகோ கோலா நிறுவனம் தண்ணீர் எடுக்கலாம். மக்கள் உயிரை
குடித்தாவது பாவத்தில் லாபத்தை அடையலாமா??? எப்பொழுதுமே பஞ்சம் இருந்தாலும் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் தினமும் லட்சக்கணக்கான litre தண்ணீர் எடுக்கிறார்கள் . ஒரு வகையில் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் செய்யும் போர் என்று சொல்லலாம் . நிலங்களின் நீர் ஆதாரத்தை குறைப்பது விவசாயின் பையன் நகரத்திற்கு வருவான் ,இவன் கூலியாய் MNC கம்பனிகளில் வேலை செய்வான் .உணவு சம்பளம் போன்ற எல்லா வற்றிக்கும் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் பொருளாதார நெருக்கடி உண்டு. இந்த அரசியல் புரியாமல் டுபாகூர் நடிகர்களும் டுபாகூர் கிரிக்கெட் வீரர்களும் விளம்பரத்தில் தோன்றுவார்கள் . அது என்னமோ கோகோ கோலா என்பது இந்த கலாச்சாரத்தின் தூண் போல பிம்பம் வளர்க்கப்படும்.

இப்பொழுது கிராமத்து விலை நிலங்கள் ப்ளாட்டுகள் ஆகின . என் ஊர் மதுரையை சேர்ந்த கண்மாய்கள் ப்ளாட்டுகள் ஆகி கொண்டிருக்கின்றன. விவசாயி புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறான் என்பது வருத்தமான விடயம். ஊரிற்கு ஊர் wine shop இருக்கிறது தண்ணி இல்லை என்று நண்பர் வருத்தப்பட்டார் . புத்திகள் மழுங்கடிக்க கலைஞர் தொலைக்காட்சி உள்ளது .முன்பெல்லாம் ஒவொவொரு கடைமுன்பும் தண்ணீர் வைத்திருப்பார்கள் , இப்பொழுது எல்லாம் தண்ணீர் காசு குடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது.

நீங்கள் கோகோ கோலா இல்லை பெப்சி faanta mirinda sprite போன்றவைகளை குடித்தால் நீங்கள் ஏதொ ஒரு வகையில் விவசாயிகளை கொன்று கொண்டிருகிறீர்கள்.

Sunday 21 March 2010

இந்த பதிவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம்

இன்று பேருந்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது FM ஓடிக்கொண்டிருந்தது . IPL அணிகள் ஏலம் பற்றி சுலபா என்ற ரேடியோ ஜாக்கி பேசிக்கொண்டிருந்தார். 1500 கோடி ரூபாய் என்று பெருமையாய் பேசிக்கொண்டிருந்தார். இந்தியா எங்கயோ போய்க்கொண்டிருக்கிறது என்று பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ஊடகங்கள் என்ன தான் செய்கின்றன , ஊடகமே உங்களுக்கு சினிமா கிரிக்கெட் தவிர ஒன்றும் தெரியாதா
விதர்பா பற்றி பேசினால் பத்து வாக்கு கூட வரவில்லை . சரி கவர்ச்சிக்காக IPL போட்டி பற்றி அதிலிருந்து
லிங்க் கொடுத்தேன் அப்படியும் வாக்கு விழவில்லை ...........................ஒரு வாக்கிற்கு 1000 2000 எல்லாம் தர முடியாது , ம்ம்ம் நான் சும்மாக எழுதுகிற காதல் பதிவுகள் 15 வாக்கு வாங்குகின்றன ........................................

எனக்கு விதர்பா விடயம் நிறைய பேரிடம் செல்ல வேண்டும் ......நான் யாரிடமும் வாக்கு கேட்க மாட்டேன் .முதன் முதலாய் வாக்கு கேட்கிறேன் தயவு செய்து இந்த பதிவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம் போன பதிவின் முந்தய பதிவின் லிங்க் தருகிறேன் வாக்கு அளியுங்கள் .................................

http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_4213.html

Saturday 20 March 2010

புதிய IPL அணிகள்




"Free டிக்கெட்ஸ்" இந்த லிங்க் free TICKET கொடுக்கப்படும் மேலும் புதிதாய் என்ன என்ன அணிகள் என்பதை பற்றி விவரம் அறிய மேலும் புதிதாய் என்ன என்ன அணிகள் என்பதை பற்றி விவரம் அறிய






New Ipl Teams எந்த நடிகர் வாங்கினார் அமீர் கான் அணியை வாங்குகிறாரா போன்ற செய்திகள்
இடம் பெரும் .படித்து மகிழவும்

Friday 19 March 2010

விதர்பா விவசாய படுகொலைகள்

















போர் முனையை விட பேனா முனை கூரியது. ஆனால் இங்கே பேனா முனை எப்படி உள்ளது ஊடகங்கள் எப்படி உள்ளது .பேனா முனை நடிகைகள் பற்றி எழுதுகிறது.படுக்கை அறை வரை செல்கிறது. கட்டாயம் குமுதம் குங்குமம் ஆனந்த விகடனில் நடிகைகள் படம் இல்லை மாஸ் ஹீரோ படம் மட்டுமே அட்டையில் இருக்கும். நக்கீரன் reportor போன்ற பத்திரிகைகள் அப்பொழுது நடக்கும் செக்ஸ் crime அதாவது நித்யானந்தா, சங்கரர்,தேவநாதன்,ஜெயலக்ஷ்மி போன்றவர்கள் ஆக்கிரமிப்பார்கள். ஊடகங்கள் எதை காட்டுகின்றன அரை குறை ஆட்டங்கள் , கிரிக்கெட் ஆட்டங்கள், கலைஞர் பாராட்டு விழா.

விதர்பா விவசாய தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை ஊடகம் காட்டாமல் சச்சின் 200 அடித்ததை கொண்டாடும் ,அதை பற்றி எழுதினால் அதை தேச பற்று என்று சொல்லி அடிக்க வருவார்கள், எதிர்த்து பதிவெல்லாம் போடுவார்கள். எத்தனை ஊடகங்கள் இந்த விதர்பா விவசாயிகளின் தற்கொலையை பதிவு செய்தன.

விவசாயம் வீழ்ச்சி அடைந்ததால் 1997 முதல் 216000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் மொத்தம் 20000 கிராமங்கள் பஞ்சத்தால் பாதிக்கபட்டுள்ளன.

















1.Gunwant Raut of Dhotra inWashim

2.Vithal Lende of Bishur in nagpur

3,Amol Matharmare of Mahatoli In Yavatmal

4.Kisan Patil of Katpur In Amaravati

5.Sandeepzole of Pahur In Yavatmal

6.Purshottam Dewase of Kakada In Wardha

7.Ankush Narayan Thakray of Nimtalai in Nagpur

8.Suryakant Ganpat Gokare of Aadkoli in Yavatmal

9.Satish Keshav Dhote of Bhabulgoan in Yavatmal

10.Smt.Vimal Abhiman Kowe of Zuli In Yavatmal.

11.Santosh Janardhan Bhisale of Koyali In Washim

12.Prahald Nimba Rathode of Mahagoan in Yavatmal

13.Raobhan Raoji Surpam of Morwa In Yavatmal

14.Praka Bhaukade of Udi In Akola .

15.Balaji Paikine 0f Marsud In Yavatmal

16.Prahal Gawande of Bhadkad In Akola .

இவர்கள் IPL அணியில் எடுக்கப்பட்ட வீரர்கள் அல்ல . தேச பற்று மிக்க சச்சின் டெண்டுல்கரோ அவருக்காக எழுதும் தேசப்பற்று மிக்க பதிவர்களோ அல்ல ,கடந்த வாரம் தற்கொலை செய்த விவசாயிகள்!!!!.கணக்கெடுப்பு சொல்கிறது மொத்தம் 15460 கிராமங்கள் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று, உணவு உடை இருப்பிடம் வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. அரசு அந்த பகுதியில் எந்த வேலையையும் செய்ய வில்லையாம். ஊடகங்களும் அரசும் கவனிக்காததால் நாம் தற்கொலை என்று சொல்வதை விட விவசாய படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும்.

தாஜ் ஹோட்டலுக்கு குண்டு வைத்தால் குரல் கொடுக்கும் சச்சின் அதே மாநிலத்தில் உள்ள விவசாயி தற்கொலைக்கு குரல் கொடுத்தாரா என்ன?????????? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.

விவசாய படுகொலை நடந்துகொண்டிருக்கிறது நாமெல்லாம்
விதர்பாவுக்கு பக்கத்தில் இருக்கும் மும்பையில் நடக்கும் மேட்ச் பார்த்து கை தட்டுகிறோம் என்ன நுகர்வு கலாச்சாரம்.ஆனால் இதை பற்றி சிலர் எழுதி கொண்டு தான் இருக்கிறார்கள்.பேனா முனையை அற்புதமாய் பயன்படுத்தியவர் சாய்நாத் . விதர்பா மக்களுக்காக ஊடகங்களிலே எழுதும் ஒரே ஜீவன். இப்பொழுது ஹிந்து பத்திரிகையிலே ரூரல் பகுதிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் சொல்கிறார் " ஊடகங்கள் மேல வாழும் 5 சதவிகித மக்களை பற்றி தான் எழுதுகிறார்கள், எனக்கு கீழே அடித்தட்டில் வாழும் ஐந்து சதவீகித மக்கள் பற்றி எழுத தான் விருப்பம் " என்று சொல்கிறார் . அவர் எழுத்தால் தான் விதர்பா விடயம் ஒரு அளவிற்கு கவனத்திற்கு வந்தது. இங்கே உள்ள ஊடகங்கள் என்ன காண்பிக்கின்றன நித்யானந்தா, IPL , நீயா நானா, ஊதாரி தனமான நடன போட்டிகள், வன்மம் வளர்க்கும் மெகா தொடர்கள் கொடுமை.

சாய்நாத் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் அதன் பெயர் "Every body loves a good drougt". பஞ்சத்தால் கஷ்டப்படும் மனிதர்கள் பற்றிய உண்மை கதைகள் காட்டாயம் வாங்கி படியுங்கள் .

காதலியின் அம்மா






















உன் பெயரை
சொல்லி ஏதோ குழந்தையை
அவள் பெற்றோர் கூப்பிட்டனர் .........
நான் திரும்பி பார்த்தேன் .............!
அம்மா சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் ....
அவள் அப்பா அவளை கொஞ்சி கொண்டிருந்தாள் ..........!
உனக்கும் அம்மா இருக்கிறாள்
நான் உன்னை பார்க்கும் போதெல்லாம்
அவள் என்னை பார்ப்பாள் .............!
பாவம் பெண் பெற்றவள் ............
பத்து மாதங்கள் சுமந்தவளிடம்
பத்து நொடிகள் பார்த்தவன் போட்டி போட முடியாது ...!
உயிரை கொடுக்கலாம்
நான் ..........!
உனக்கு உயிரை
கொடுத்தவள் அவள் மறந்து விடாதே ...!

Thursday 18 March 2010

முரண்




















"சினிமாவை பார்"
"ஸ்பென்சர் போகலாம்"
"queensland போகலாம் "
என்று நுகர்வு கலாச்சாரத்திலே இருந்தான் நண்பன்.
மார்க்ஸ் படித்தேன் , நுகர்வு கலாச்சாரம் எதிர்த்தேன் நான் ...........
காதல் பதிவுகள் சினிமா பதிவுகள் போட்டான் நண்பன் ................
சமூக பதிவுகள் போட்டேன் நான் ...................
காதலிக்கு பதிவின் மூலம் தூது விட்டான் நண்பன்
"இது உனக்கு தேவையா டா அவ தான் காரி துப்பிட்டால" என்றேன்
சாரு ராமகிருஷ்ணன் படித்தான் நண்பன்
மூலதனம் படி டா உழைக்கும் மக்களுக்கான கலை இருக்கணும்
என்றேன் நான் ...................
படத்தை விமர்சனம் செய்தேன் நான்
ரசித்தான் நண்பன் .....................!
களப்பணி செய்யலாம் என்று தீர்மானித்தேன் ...............
என் நண்பனும் சரி என்றான் .........................!
முதலில் என் களத்தில் இருக்கும் அழுக்குகள்
உடைபட வேண்டும் என்றேன் ........!
அற்பவாதம் கடவுள் நம்பிக்கை ஒழித்தேன்.............
என் நண்பன் நெருங்கி வந்தான் ..................
மக்களுக்காய் படைக்க வேண்டும் என்று நினைத்து
எழுதினேன் இன்னும் கொஞ்சம் அருகில் வந்தான் ..........!
நெருங்கி வர வர தெரிந்தது
என் நண்பனும் நானும் ஒருவனே
என் பெயர் கார்த்திக் என்று ..........!
மார்க்ஸ் சொன்ன முரண் புரிந்தது

காதல் திருவிழா
















போன
திருவிழாவில் விழிகள்
சந்தித்தோம் ..........
முதலில் நீ குனித்து கொண்டு வந்ததாலே
மோதினாய் ....
நீ குனிந்ததால் மட்டுமே நம் விழிகள்
சந்திக்க முடிந்தது ........!
எந்த கதாநாயகன் போல
உரிகள் அடிக்க வில்லை
மாடு பிடிக்கவில்லை .................
இருத்தும் என்னை பார்த்துக்கொண்டிருந்தாய் ........!
கிழவன் வேட்டி கட்டி
"காதலிக்க நேரமில்லை" படம் போட்ட
பொழுது
நமக்கு மட்டும் தனியே "விண்ணைத் தாண்டி வருவாயா" ஓடிக்கொண்டிருந்தது ...!
இந்த திருவிழா வந்துவிட
முதல் வார்த்தை பேசினாய்
"எனக்கு பரிசம் போட்டாச்சு " அப்படின்னு சொன்ன ..........
"அப்ப யாருங்க இது" என்று என் மனைவி கேட்க ..
"தெரிஞ்ச பொண்ணு " என்று மண்டையை சொரிந்தேன் ......!
தூரத்தில் என் தம்பி உன் தங்கையை பார்த்துக்கொண்டிருந்தான்
நான் உன்னை பார்த்து
சிரித்தேன்...!

Wednesday 17 March 2010

தகவல் தொடர்பு

"நான் உன்னை காதலிக்கறேன் "
"முத்தமிட வேண்டும்" என்று காதல்
பரிமாற பட்டன குறுந்தகவல்களில் ............!
புணர்ச்சி ஊடல் காமம்
எல்லாம் காற்றில் கலந்தன குருந்தகவல்களாய் .........!
"தகவல் தொடர்பு" முன்னேறி விட்டது
தொடர்புகள் அறுந்து போயின..............

Tuesday 16 March 2010

அஜித் விஜய் நோட்டு புத்தகம்

முன்பெல்லாம்
எலி பூனை போல இருப்போம் ...............
நான் விஜய் பற்றி திட்டும் போதெல்லாம்
நீ அஜித் பற்றி திட்டுவாய் ............!
நமக்குள் காதலை எப்படி
வெளிபடுத்தலாம் என்ற நாளில்
நான் விஜய் படம் போட்ட நோட்டை
வாங்கி வந்தேன் ..............!
நீ கையில் அஜித் படம்
போட்ட நோட்டை வைத்துக்கொண்டிருந்தாய் ............!
எழுதபடாத காகிதங்களில்
எத்தனையோ கவிதைகள் ஒளிந்து கிடந்தன ...!

Monday 15 March 2010

சத்தியமா நான் இல்லைங்க






















உன்னை ஏற்றுவதற்காகவே
வந்து கொண்டிருந்த
பேருந்து ........!
ஏறியவுடன் 'ஹோசனா" பாட்டு
போட்ட ஓட்டுனர்...!
அவசரத்திலும் 50 பைசா
மிச்சத்தை உனக்கு கொடுத்த நடத்துனர் .........!
உன் அளவு அழகு இல்லை
என்றாலும் உன்னை பார்த்து அழகாய்
சிரித்த குழந்தை .......!
இத்தனை பேருக்கும் உன்னை பிடித்தாலும்
நீ இதயத்தில் அமர்வதர்க்காய்
எப்பொழுதுமே அமர்ந்திருக்கும் ஒருவன் .............
??????????
(சத்தியமா நான் இல்லைங்க )
பேருந்து இருக்கைகள் ...........!

Sunday 14 March 2010

எனக்கு நீ


"பின்னால் அலைபவன்"

"காதலன்"


"முன்னால் காதலன்"


உனக்கு நான்

"காதலி" எப்பொழுதும்
எனக்கு நீ ...!

Saturday 13 March 2010

வினவு வினவு செய்















நான் எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி அமைக்க உதவியது வினவு.எல்லாவற்றையும் பாசிடிவாக பார் என்று சொல்பவர்கள் மத்தியில் உண்மையை உண்மையாக பார் விவாதம் செய் என்று சொல்லும் தளம். என் படம் பார்க்கும் முறை மாறியுள்ளது , முன்பெல்லாம்
அழகியல் சார்ந்த விடயங்களை இலக்கியம் என்று நினைத்து கொண்டிருந்தேன், சாரு ராமகிருஷ்ணன் அதிகம் படித்தேன் , தோழர் ஒருவர் சொன்ன பிறகு வினவு படிக்க ஆரம்பித்தேன். மக்களுக்கு பயன்படாதா இலக்கியம் இலக்கியம் அல்ல. இலக்கு இல்லாத இலக்கியம் இலக்கியம் அல்ல என்று புரிந்தது.

சினிமாவிலே எனக்கென்று ஒரு புரிதல் இருந்தது ."சினிமா திரை விலகும் போது" என்ற புத்தகம் படித்தேன் சினிமா பற்றி அரசியல் விமர்சனங்கள். எதற்கு சினிமா கலை என்று கேள்வி கேட்கலாம். ஒரு கலையில் நாம் எதை ரசிக்கிறோமா அது நம் சமூதாயத்தை வெளிப்படுத்தும். உதாரணமாய் ஆணாதிக்க வசனத்துக்கு கைதட்டும் ரசிகர்கள் ஆணாதிக்க சமூகத்தை
பிரதிபலிக்கிறார்கள். கலை நம் ரத்தத்தில் ஊறி இருப்பது. ஒரு நல்ல ரசனை இல்லாத சமூகத்தை ஏமாற்றி விடலாம். நம் அரசியல் சூழலுக்கு நம் கலை கூட ஒரு காரணம். அதனால் கலை இலக்கியம் சினிமா போன்றவை ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் அதனால் அதை பற்றி விமர்சனங்கள் கட்டாயம் தேவை. அது வினவு ரோம்பத்தெளிவாய் விமர்சனம் செய்கிறது.

அரசியல் நிகழ்வுகளை மூன்றாம் கண் கொண்டு பார்க்கிறது. "நாட்டாமை சொம்ப தூக்கிக்கிட்டு வந்துட்டாரு" என்று கற்கள் விழுந்தால் கூட அவர்களிடம் விவாதம் செய்து அரசியல் என்ன எப்படி பார்க்க வேண்டும் என்று என்னை போன்ற கத்துகுட்டிகளுக்கு கற்று கொடுக்கிறது.
எனக்கு தெரிந்து அவர்கள் "ஆயிரத்தில் ஒருவன்" படம் விமர்சனம் தவிர மற்ற எல்லா கட்டுரைகளும் அருமை என்றே சொல்லுவேன். விமர்சனம் வைத்தால் பதில் சொல்ல வேண்டும்??? அதை விடுத்து பிரபலங்களை எதிர்க்கிறார் எதிர்மறையாய் எழுதுகிறார் என்று சொல்லக்கூடாது. சரி இதே போல் பிரபலங்களை பாராட்டினாலும் மிக சிறந்த இடத்திற்கு வரலாம். எனக்கு தெரிந்து சமீபத்தில் பெரிய பதிவரானவர் அஜித் பற்றி எழுதியாதால்
60 வாக்குகள் வாங்கினார் . கேள்வியில் பிரபல பதிவர்களில் 100 ரேங்க் பின்தங்கி இருந்தவர் இன்று 20 ரேங்க் அருகில் உள்ளார். அவர் என்னை விட பிரபலம்.

ஏன் பிரபலங்களை எதிர்க்கும் போது உங்களுக்கு வரும் கோபம் அவர்களை பாராட்டும் போது வரவில்லை. சரி அப்படியே விமர்சித்தாலும் அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று அதை பற்றி விவாதம் செய்ய வேண்டியது தானே. அரசியல் விமர்சனமோ சினிமா விமர்சனமோ மற்று விமர்சனம் வளர்ச்சிக்கு தேவை. பிரபலங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள்.
நான் தவறு செய்வதை விட கமலஹாசன் ஜாதி வெறியை தூண்டிவிடுவது போல் படம் எடுத்தால் அதற்க்கு தாக்கம் அதிகம்.

ரஜினிகாந்த் இவ்வளவு பேசிவிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யப்படுவார். சச்சின் நாட்டுப்பற்று பற்றி பேசிவிட்டு பூச்சி கொல்லி மருந்துகளான பெப்சி விளம்பரத்திற்கு வந்தால் விமர்சனம் செய்ய தான் படுவார். ஏன் சச்சின் அதே மகாராஷ்ட்ராவில் நடந்த விவசாய படுகொலைகள் பற்றி பேசுவதில்லை, தாஜ் ஹோட்டல் என்றால் வருகிறார். இந்த பார்வை எல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தது வினவு .
நான் சமீப காலமாய் சில காதல் பதிவுகள் போட்டிருந்தேன் எதற்கு என்றால் காதல் எல்லாம் நான் சாதரணமாய் எழுதினாலே வரும் , ஒரு விடயமும் இல்லாமல் நான் குறை சொல்லி பதிவு எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை . நான் எழுதுவது குறை சொல்வதற்கு அல்ல விமர்சனங்கள் , நான் ஜால்ரா அடித்தால் கூட பிரபல பதிவர் ஆகலாம்.

http://www.vinavu.com

நீதிக்கு தண்டனை



















ஜாதிகள் எல்லாம் ஒழிந்து விட்டது என்று நாம் பெயரளவில் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் உண்மையிலேயே ஒழிந்ததா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லத்தோன்றும். உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பே இதற்க்கு சான்று. சுஷ்மா திவாரி ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் பிரபு நொச்சில் என்பவரை காதலித்து கல்யாணம் செய்திருக்கிறார் . பிரபு நொச்சில் கேரளாவை சேர்ந்த எழவா என்னும் பழங்குடியை சேர்ந்தவர்.

தங்கை காதலித்தாள் கல்யாணம் செய்தாள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை அவள் அண்ணன் கொன்றுள்ளான், இரண்டு பேரை காயபடுத்தயுள்ளான். அந்த நேரத்தில் மாசமாய் இருந்த சுஷ்மா திவாரி வெளியே
போயிருந்ததால் தப்பித்து உள்ளார். இது நடந்தது 2004.அந்த அண்ணன் கொலைகாரன் பெயர் திலிப் திவாரி. மும்பை உயர் நீதி மன்றம் திலிப் திவாரிக்கு மரண தண்டனை
வழங்கியது ஆனால் உச்ச நீதி மன்றம் 2009 தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது . அவர்கள் கொடுத்த தீர்ப்பு ஆச்சர்யம் அளித்தது.

“It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

அதாவது திலிப் திவாரி ஒரு அண்ணன் என்ற முறையில் கலப்புத்திருமணம் நடக்கும் பொழுது செய்தது சரியே என்கிற பாணியில் அதை நியாயபடுத்தியது. ஜாதி பார்ப்பதே தவறு அதுவும் அதை நியாய படுத்துகிறது உச்ச நீதி மன்றம். அதை எதிர்த்து சுஷ்மா போராடிக்கொண்டிருக்கிறார் . இது நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்கிறார். (Prevention of Atrocities) Act, 1989 சட்டம் படி இது எல்லாம் தவறு என்று சொல்கிறார் சுஷ்மா.

சரி நான்கு கொலை செய்திருக்கிறார் திலிப் திவாரி அவர் செய்ததை நியாபடுத்துகிறது உச்ச நீதி மன்றம். சரி மனு தர்மம் என்ன சொல்கிறது ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் நாடு மட்டுமே கடத்த படுவான் தண்டனை மிக குறைவு . இதே போல் மற்றவர்கள் கொலை செய்தால் கொடுக்க படும் தண்டனையே வேறு. மனு தர்மத்தை வழிமொழிகிறதா உச்ச நீதி மன்றம்.

சரி நம் மக்கள் ஏன் இதற்காய் குரல் கொடுக்கவில்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் கூட குரல் கொடுக்கவில்லை. நித்தியானந்தன் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகம் இந்த செய்தியை ஏன் கண்டுகொள்ளவில்லை. இது தலித்தை பற்றி செய்தி என்பதாலா
இதை எல்லாம் போட்டால் யார் பத்திரிகை வாங்குவார் என்பதாலா. தினமும் குமுதம் பத்தரிகையில் இருந்து எனக்கு குறுந்தகவல் வந்து கொண்டிருக்கிறது நித்தியானந்தன் புது வீடியோ பார்க்க சொல்லி என்ன சொல்ல இந்த ஊடகங்களை .

ஏன் மக்கள் இந்த தீர்ப்புக்கு எதிராய் குரல் கொடுக்கவில்லை இன்னும் மக்கள் மனுதர்மத்தை நம்புகிறார்களா இல்லை IPL என்னும் இந்திய தேசப்பற்றில் ஊறி கிடக்கிறார்களா.நான்கு பேரை கொன்றிருக்கிறான் மரண தண்டனை கொடுக்க வேண்டியது தானே. ஒரு விவசாயி ஒரு இளம் பெண்ணை கற்பழித்து இருக்கிறார் மரண தண்டனை அது நியாயம் சரி, அதை போல் இந்த திலீப் திவாரிக்கும் மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டுமே.
ஏன் மக்கள் கூட கேள்வி எழுப்பவில்லை நமக்குள் supreme கோர்ட் ஒளிதிருக்கிறதா இல்லை நாம் மனுதர்மத்தை நம்புகிறோமா இல்லை நமக்கு இதெல்லாம் முக்கியம் இல்லையா????யார் சொன்னது சாதிகள் இல்லை என்று.

Friday 12 March 2010

திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்














வகுப்பறையில் அமர்ந்திருந்தேன்
ஒரு பெண் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்
வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் .........
ஒரு வாரமாக பார்த்துக்கொண்டிருந்தேன் .......................
எழுந்து என்னை நோக்கி வந்தாள்.........................
மனசு படபட என்று அடித்தது ...........
என் பெஞ்ச் தாண்டி பின் பெஞ்சில் அமர்ந்திருந்த
இன்னொரு பையனிடம் சாக்லேட் கொடுத்தாள் .........
நேற்று தான் அவன் காதலை சொன்னானாம்........!
உன்னை ஒரு பெண் பார்த்தால் திரும்பி பார் ..........
வேறு ஒரு பையன் இருக்கிறானா என்று .........!

Thursday 11 March 2010

தலையில் ஒரு கவசம்















விபச்சாரிகள் விற்பனைக்கு...........
எந்த அழகி விலை போவாள் ................
எந்த மாடு சிறந்த மாடு .............
போல் ஏலம் விடப்பட்டனர் வீரர்கள்
என்று சொல்லிக்கொள்கிறவர்கள்
ரெண்டு கோடி மூணு கோடி என்று
விலை போயினர் தேசப்பற்று என்று சொல்லிக்கொள்ளும்
வீரர்கள் .................
பேட்டில் MRF நெஞ்சில் அடிடாஸ்...........
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விளம்பரம்
செய்யும் தேசப்பற்று வீரன் தலை ஹெல்மெட்
கவசத்தில் மட்டும் இந்திய கொடியை வைத்து இருந்தான்....!
விளம்பரத்திற்கு விலைபோகிறாயே...............
என்று கல் எரிபவர்களை சமாளிக்க ......
இந்திய கொடி போட்ட கவசத்தை தலையில் அணிந்து
கொண்டான்..................!
ரிலையன்ஸ் போன்ற முதலாளிகளுக்கு
விற்பனை செய்ய உதவியது விளையாட்டு ........!
ஊடகங்கள் டோனி லக்ஷ்மிராய்
படுக்கை அறை வரை சென்றது ............!
ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்ய
அழகிகள் குத்தாட்டம் போட்டனர் ...........!
இவர்களுக்கு தேசப்பற்று
என்பது தலையில் அடிவிழமால் இருக்க ஒரு
கவசம்..!

பார்வை தீக்குச்சி


"அப்படி பார்க்காதே
தீ குச்சி எல்லாம் பற்றி விட
போகிறது " என்றேன் .....!
கல கல என்று சிரித்தாய் .....
"என்ன மழை பெய்கிறதா??"
என்று கேட்டேன் ....!
அடிக்க வந்தாய் .............
"அணைக்க வரலாமே" என்றேன் ...!
"உனக்கு எப்பவுமே கிண்டல் தானா ???" என்றாய்
நான் உண்மையை சொல்லும்
போதெல்லாம் ஒன்று கிண்டல் என்கிறாய்
இல்லை கவிதை என்கிறாய் ....
நான் கிண்டல் செய்யவில்லை
கவிதையையும் எழுதவில்லை
உன்னை பற்றிய உண்மையை
கொஞ்சம் குறைவாய் சொல்கிறேன் ....!

Wednesday 10 March 2010

மேட்ச்(கிரிக்கெட் பெண்)
















120 கிலோமீட்டர் வேகத்தில் போட பட்ட பந்து தினேஷ்சின் ஹெல்மெட்டை உரசி சென்றது. அடுத்த பந்து outswinger இவன் மட்டையில் edge வாங்கி முதல் ஸ்லிப் நோக்கி சென்றது ஸ்லிப் கைக்குள் எளிதாய் அமர்ந்து அவனுக்கான university டீம் வாய்ப்பை தட்டிப்பறித்து . அவன் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே பெவிலியன் திரும்பினான் .

ஆம் இது final மதுரை கல்லூரிகளுக்குள் நடக்கப்படும் tournament . இதில் நன்றாய் விளையாடுபவன் university ஆட்டத்திலே சேர்த்து கொள்ள படுவான். madura காலேஜ் கிரௌண்ட் , madura காலேஜ் மற்றும் சௌராஷ்டிர கல்லூரி எப்பொழுதுமே final வருவார்கள். சௌராஷ்டிர காலேஜ் சார்பாக ஒன் டௌன் இறங்கினான் கார்த்திக்,அவனுக்கு university வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது, அவன் ஒரு madura காலேஜ்
பெண்ணையும் காதலித்துக்கொண்டிருந்தான். அதே பெண்ணை எதிர் அணியில் இருப்பவனும் காதலித்துக்கொண்டிருந்தான். அவன் அதே கல்லூரி வேறு, அவன் பெயர் ஜோதி. அவனுக்கும் கார்த்திக்கும் university டீம் முதல் பெண் வரை போட்டி.

அந்த பெண் வேறு மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறாள் இருவருமே ஒரு தலை காதல். அவள் முன்னாடி வீரத்தை காட்ட வேண்டும்.இன்று ஜோதி பந்து வீச வந்தால் அடித்து நொறுக்க வேண்டும் என்று இறங்கினான் கார்த்திக். கவனம் முழுவதும் அந்த பெண் பார்கிறாலே நன்றாய் விளையாட வேண்டும் என்பதிலேயே இருந்தது. அழகாய் வந்த புல் டாஸ் பந்து அடிக்க வேண்டும் என்ற பதட்டத்திலேயே குச்சிக்குள் விட்டான் கார்த்திக். கோல்டன் duck , பில்டிங்கில் இருக்கும் ஜோதிக்கு ஒரே சந்தோஷமாய் இருந்தது. கார்த்திக் கோச்சிடம் அதிகம் திட்டு வாங்கினான், "ஒழுங்கா ஆடிருந்த மிட் விக்கெட் ல four " என்று திட்டினார்.

அடுத்து இறங்கினான் அருண் இரண்டு மேட்ச் ஆடி இருப்பன், ஒரு அளவு ஆடுவான். முதல் இருபது பந்துகள் கவனமாய் ஆடினான் , V முறையில் ஆடினான் காலில் விழும் பந்துகளை மட்டும் லாங் ஆன் லாங் ஆப் திசையில் ஆடினான், நல்ல அளவில் எழும்பும் பந்துகளை விட்டு விடுவான் குச்சிக்கு வரும் பந்து defence செய்வான்.

ஜோதி பந்து வீச வந்தான். ஜோதி ஒரு மித வேக பந்து வீச்சாளன். அவன் காதலி பார்த்துக்கொண்டிருக்கிறாள் நன்றாய் வீச வேண்டும். ஜோதியின் பலமே line length பந்து மெதுவாக வரும் ஆனால் ஆட முடியாது ஆனால் லூசாக வந்தால் அடி நொறுக்கி விடலாம் வேகம் கம்மி. ஜோதி அவன் காதலி பார்த்துக்கொண்டிருக்கிறாள் நன்றாய் போட வேண்டும் என்ற நினைப்பிலேயே முதல் பந்தை OP யாக குத்தினான் அருண் முதல் பந்தில் அடித்தது ஆறு ரன்கள். அடுத்த பந்து length குறைவான பந்து மிட் விக்கெட் திசையில் நான்கு ரன்கள். அப்புறம் இரண்டு wide என்று ஜோதி கொடுத்தது 18 ரன்கள். ஜோதி ஒரு ஓவருடன் நிறுத்தப்பட்டான். ஐம்பது ஓவரில் சௌராஷ்டிரா கல்லூரி அடித்த ரன்கள் 287 அருண்
80 ரன்களும் அணித்தலைவர் சந்தோஷ் கோபி 125 சார்லஸ் 35 ரன்களும் எடுத்தனர்.

அந்த university கப் சௌராஷ்டிர காலேஜ் எடுத்தது. அருண் university அணிக்கு தேர்வு செய்யப்பட்டான். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கார்த்திக் ஜோதி இருவரும் முக்கியமான நேரத்தில் விளையாடுவதில்லை என்பதால் தேர்வு செய்யப்படவில்லை. university அணியிலும் அந்த பெயர் தெரியாத காதலியின் காதலனும் ஆனான் அருண் .

ஆடைகள் உன்னை கட்டிக்கொள்கின்றன


வெயில் அதிகாமனவுடன்
வீதியை பார்த்தேன் நீ வந்து கொண்டிருந்தாய் ....
வெயிலையே பிரகாசபடுத்தியவள் நீ ....... !


நீ
குளிக்கும் தண்ணீர் எல்லாம் நரகத்திற்கு சென்றது
குடிக்கும் தண்ணீர் சொர்கத்திற்கு சென்றது ....!


நீ ஆடைகள்
உடுத்துவதில்லை ஆடைகள்
உன்னை கட்டிக்கொள்கின்றன ....!


மழை உன்னை தொட வந்தது ....
குடை உன்னை காத்து காதலை வெளிப்படுத்தியது ...!
உனக்கு இத்தனை காதலர்களா .................
நீ யாரை காதலிக்கிறாய்?????

Tuesday 9 March 2010

என்னோடு வா வீடு வரைக்கும்






















அவ பார்க்கவே இல்ல நான் பார்த்துக்கிட்டே இருந்தேன் . ஒரு கடை அவ ஏதோ வாங்கிகிட்டு இருந்தா. நான் உள்ள நுழைஞ்சேன் "என்ன வேணும் " அப்படி கேட்டான் கடைக்காரன் "வாட்டர் பக்கெட்" அப்படின்னு சொன்னேன்.காச மட்டும் கொடுத்துட்டு வாட்டர் பக்கெட் கூட வாங்காம அவ பின்னாடியே வந்துட்டேன்.கடைசில பார்த்தா நான் வேலை தேடரப்ப இருந்த அதே தெருவுல தான் அவ வீடாம்.

அவ தினமும் காலைல ஒரு கடைல ஏதோ வாங்குவா, நான் அவள பார்க்கிற ஆர்வத்துல என்ன வாங்கறான்னு கவனிச்சதில்லை. நானும் ஒருவா பூத்ல போன் யாருக்காவது செய்வேன். அவ என்னைய மொறச்சு பார்ப்பா. அவ வீட தாண்டி தான் வெளில போனும் நான் போறப்ப எல்லாம் அவ வீட்ல இருக்காளான்னு பார்த்திட்டு போவேன். அது அவளுக்கும் தெரியும். அவளும் அதிகமா பார்ப்பா. பார்க்கிற பொண்ணுகள தான் திருப்பி திருப்பி பார்க்க தோணும். அவ வீடு இருக்கற இடத்துல ஒரு வளைவு இருக்கும் அந்த சந்து திரும்பிய சந்து
அது என்னமோ என் வாழ்க்கைய திருப்பி போட்டுச்சு.

நான் பார்க்கிறது அவங்க அம்மா அண்ணன் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு என்ன பார்த்தாலே மொறைப்பாங்க அவங்க அம்மா. அப்புறம் நம்பர் வாங்கினேன் யாருமே இல்லை என்று தெரிந்தால் பேசுவேன். ப்ரொபோஸ் பண்ணேன் அவளும் பேசிக்கிட்டே இருந்தா. பசங்க சொன்னாங்க அவ மோசாமான பொண்ணுன்னு அவங்க சொன்ன பிறகு அவங்களோட பேசறதில்ல. ஏனோ எனக்கு அப்படி கோவம் வந்திச்சு.

அவ வீடு திருப்பத்துல சில பாச்சுலர் பசங்க இருந்தாங்க ஒருத்தன் தெருவுலே உட்கார்ந்து இருப்பான் எனக்கு அவன பார்த்த எருச்சல் வரும். உங்களுக்கு செல்வராகவன் பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் நா பிரச்சனை இல்ல. எனக்கு என் காதலிய ரொம்ப பிடிக்கும் உனக்கும் பிடிக்கும் நா பிரச்சனை. அவன் ஒரு பஜாஜ் m 80 வண்டில ஏறி உக்காந்து இருப்பான். அவ வீடு முன்னாடி எனக்கா எரிச்சல் வரும்.

ஒரு நாள் குடை பிடிச்சிகிட்டு அவ வீடு முன்னாடி நிக்கற பஜாஜ் m 80 ல உட்கார்ந்து இருக்கான். நான் மழையா இருந்தாலும் நீச்சல் அடுச்சுக்கிட்டாவது அவள பார்க்க போவேன். அவனும் உட்கார்ந்து இருந்தான் கோவம் வந்திச்சு.

அப்புறம் என்னன்னாலாமோ பிரச்சனை வந்திச்சு. அவ பாட்டுக்கு சர்வ சாதாரணமா போய்டா?
அப்புறம் வேலைகிடைக்காமல் சில காலம் அப்புறம் ஒரு வேலை கிடைச்சு ஒரு வழியா வாழ்க்கையை ஓட்டுகிறேன். அவ ஏதோ அமெரிக்காவுல படிக்காறாங்க. என்ன கொடுமைனா அவ படிக்க போன நேரம் வாரணம் ஆயிரம் படம் வந்திச்சு. "அமெரிக்க இங்க தாண்ட இருக்கு" என்று சொன்னவுடனே அதற்காகவே நான் படத்த ஆறு முறை பார்த்தேன். மார்க்ஸ் பிடித்த எனக்கு அமெரிக்கா பிடிக்காது. ஆனா அந்த படம் பார்த்தவுடனே பிடிச்சிருந்தது. நான் கூட போகலாம்னு நினைச்சேன் ஆனா வாழ்கை வேற சினிமா வேற. இருந்தாலும் " அமெரிக்க இங்க தான் இருக்கு" அப்படின்னு வாரணம் ஆயிரம் படத்துல சொன்ன வசனம் என் காதுக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு.


சரி நான் யாரு அப்படின்னு கேட்குறீங்களா ................நான் தான் கார்த்திக் விண்ணை தாண்டி எல்லாம் வர வேண்டாம் வீட்டுக்கு வந்த போதும் அப்படின்னு
சொல்லிருக்கேன்.நான் அதே தெருவுல தான் இருக்கேன் கடைசியா வந்தப்ப அவ பார்த்தா நான் பார்க்கவே இல்ல....!

கவிதைக்கு ஒரு புத்தன்


















கவிதை தொகுப்பு
என்று உன்னிடம் ஒரு நோட்டை
எடுத்துக்கொடுத்தேன் ...!
முதல் பக்கம்
திருப்பினாய் ..............!
நர நர என்று மண்.................
என்ன என்று கேட்டாய் .........
"நீ மிதித்த மண்" என்றேன் .....
"முதன் முதலில் காலில் எழுதிய கவிஞர் நீ தான்" என்றேன் ....

அடுத்த பக்கம் திருப்பினாய்
வாடிய பூ இருந்தது ...............
"என்ன கவிதைகள் அவ்வளவு தானா என்றாய் ............
மேலும் ஒரு கவிதை இருக்கிறது
என்றேன் ....!
பிய்ந்த செருப்பை எடுத்துவிட்டு காண்பித்தேன் .....
சிரித்தாய் .........!
நீ உன் காலில் உதறிய செருப்பை
தலையணையாய் வைத்து தூங்குகிறேன் என்றேன் ...!

நீ பார்த்த முதல் பார்வையை பதிவு செய்ய முடியவில்லை
நீ பேசிய வார்த்தைகள் காற்றில் கவிதையாய் உலாவி கொண்டிருக்கிறது
என்றேன் .....!
புத்தகங்கள் பத்தாது
கவிதைக்கு ஒரு புத்தன் வேண்டுமென்றேன்...!

Monday 8 March 2010

நகரத்து மக்கள் நடிகர்கள்















சொக்கா போட்டு
கொழாய் போட்டு .....
அரிதாரம் பூசி நடிகன் போலவே
இருக்கிறான் என்றாள் கிராமத்து கிழவி .......
என்னை பார்த்து ...!
அவளுக்கு என்ன தெரியும்
நகரத்து மக்கள் நடிகர்கள் என்று ...!

Sunday 7 March 2010

உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்






















இன்று
உலக உழைக்கும் மகளிர் தினம். உருவாக்குவது கடவுள் என்றால் நம் கடவுள் நம் அன்னையே. பெண்கள் எப்பொழுதுமே உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் வெளியில் வேலை பார்க்காத பெண்கள் கூட வீட்டில் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது வேலைக்கு போகிறார்கள் படிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லி விட முடியாது.

பெண் எப்பொழுதுமே ஆண் சார்ந்தவளாகவே இருக்கிறாள். ஒரு ஆண் சம்பாதித்து தன் பணத்தை தன் தாயிடன் கொடுக்கலாம் ஆனால் ஒரு பெண் சம்பாதித்து தன் தாயிடன் கொடுக்க முடியுமா ஏன் ஒரு 1000 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றாலும் 1000 காரணம் சொல்லி ஆக வேண்டும். பெண்ணின் உழைப்பு எப்பொழுதுமே சுரண்டப்பட்டுகொண்டிருக்கிறது. இது சித்தாள் வேலை செய்யும் பெண் முதல் மென்பொருள் வேலை செய்யும் பெண் வரை பொருந்தும்.

ஒரு ஆட்டோகிராப் படம் எடுத்து ஒரு ஆண் நான்கு காதலிகளை காதலிக்கலாம் படம் வெற்றி பெரும். ஒரு பெண் அப்படி செய்ததை எடுத்தால் வெற்றி பெறுமா. ஏன் பெண் நான்கு ஆண்களை காதலிக்க கூடாதா ஏன் அவளுக்கும் சூழ்நிலை இல்லையா?????? இது வெறும் படம் என்று சொல்லவில்லை நம் சமூகம் அப்படி இருக்கிறது நம் சமூகத்தை படம் பிரதிபலிக்கிறது.

படங்களில் பெண்களை கேலி செய்யும் காட்சிகள் அல்லது அவர்களுக்கு எதிரான வசனங்கள் உள்ள காட்சிகள் மிகுந்த கை தட்டு வாங்கும் ஏன் கை தட்டு வாங்குகிறது ஆண் ஆதிக்க சமூகம். சரி எங்க ஊரிலே பாட்டாய அம்மா என்று ஒரு பாட்டி இருந்தாள் சாகும் வரை உழைத்தாள். காலையில் கூடையை எடுத்துக்கொண்டு காய்கறி விற்க செல்வாள் இத்தனைக்கும் பாட்டிக்கு சொத்துக்கள் அதிகம் காது பாரதிராஜா படத்தில் வருவது போல தொங்கட்டம் தொங்கும். தொங்கிய காது, ஏதாவது இழவு வீடு என்றால் அந்த அம்மாவை தான் ஒப்பாரி பாடல் பாட கூப்பிடுவார்கள். சாகும் வரை உழைத்தாள்.

எங்கள் வீட்டிற்க்கு முருங்கக்காய் பாட்டி ஒருவர் வாருவார், பாட்டிக்கு 75 வயது தொடும். பாட்டி முருங்கைக்காய் பறித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு மட்டும் வருவாள் . காசு எதுவும் வாங்க மாட்டாள் நன்றாக எங்கள் வீட்டில் அந்த பாட்டி சாப்பிட்டு விட்டு போவாள். இங்கே சென்னையில் பழைய ரூம் இருக்கும் இடத்தில் ஒரு பால் போடும் பாட்டி இருப்பாள் வேளச்சேரியில் இருந்து வருவாள் நான்கு மணிக்கு பால் போடுவாள் பின்பு பத்து பாத்திரம் தேய்ப்பாள் பாட்டிக்கு 70 வயது இருக்கும்.

பெண்கள் எங்கு பார்த்தாலும் உழைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். பெண் சுதந்திரத்தை ஆண் நிர்ணயம் செய்யக்கூடாது. பெண்கள் உழைப்பை நாம் அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கவில்லை என்றாலும் சுரண்டாமல் இருக்க முயற்சி செய்வோம்.

பெண்கள் பற்றி ஒரு தளம் யாரவது பதிவர் எழுதினால் அறிமுகப்படுத்துகிறது http://www.penniyam.com/
அந்தத் தளத்தில் நான் எழுதிய நூறாவது பதிவு வெளிவந்தது http://www.penniyam.com/2010/02/blog-post_14.html

எங்காவது பெண்ணிற்கான கட்டுரை வந்தால் இந்த பெண்ணியம் தளம் அதை வெளியிடுகிறது. பெண்கள் பற்றிய தெளிவான பார்வை இந்த தளத்திலே கிடைக்கிறது. படிப்பதற்கு பயனுள்ள தளம் உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

விண்ணைத் தாண்டிய பிறந்த நாள் வாழ்த்து















மார்ச் 8 உலக மகளிர் தினம் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. மார்ச் 8 2001 என் கல்லூரி ஆண்டு விழாவில் நான் நிரூபித்த நாள் நான் எதவாது செய்தால் பத்து பேர் எனக்கு கை தட்டுவார்கள் என்று நிரூபித்த நாள். வெறும் ஒரே நாள் regursal பார்த்துவிட்டு அடுத்த நாள் போட்ட நிகழ்ச்சி மிக பெரிய வெற்றி பெற்றது என்னால் அந்த நாளை மறக்கவே முடியாது .அன்று என் நண்பன் ஒருவனுக்கும் என் தோழி ஒருத்திக்கும் பிறந்த நாள் வேறு . அன்றில் இருந்து அந்த நாள் வந்தால் என்னால் மறக்கவே முடியாது.















எனக்கும் அந்த தினத்திற்கும் தொடர்புகள் அதிகம் உண்டு. ஆண்டு 2005 பிறகு ஒரு பெண் என் வாழ்கையில் வந்தாள் அவளின் பிறந்த நாள் கூட அதே நாள் தான்.மகளிர் தினம் எனக்கு மட்டும் காதலர் தினமாய் இருந்தது. தெருவை விட்டு வெளியே வராத நாட்கள் .
இப்பொழுது அமெரிக்காவில் இருப்பாள் படித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
.

மகளிர் என்றாலே எனக்கு மரியாதை அதிகம் உண்டு அதற்க்கு காரணம் என் அன்னை . எனக்கு சகோதரிகள் அதிகம். எனக்கு உயிர் தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ஐரோம் ஷர்மிளா பற்றி கேட்டப்பிறகு தனி மரியாதையே வந்தது. என்ன பெண்மணி அவர்கள். ஆண்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் ஒரு பெண் மட்டுமே தாயாக
முடியும். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். என் காதலிக்கு மட்டும் விண்ணைத் தாண்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Saturday 6 March 2010

பிரபலத்திற்கு கை தட்டுவோம்






















சச்சின் விளம்பரத்தில் நடிப்பதில்லை
சச்சினை ஆதரித்தால் தேசப்பற்று .....................
உதிரம் கொதிக்கும் .....!
நித்யானந்தர் கதவை திற என்பது உண்மை
தான் ....எந்த கதவு என்று அவர் சொல்லவில்லையே
அவர் சாமியார் தான் அவரை பற்றி எழுதினால் தப்பு....!
2012 சிறந்த படம் ஆம் உலகம்
அழியும் நான்கு பேரு தப்பிப்பார்கள் நாங்கள் கை தட்டுவோம் ........!
ரஜினி திருட்டு cd பற்றி கேட்டால் ..........................
கை தட்டுவோம் ...ஆனால் அவர் படம் ப்ளாக்கில் பார்ப்போம் .....!
ஈழம் பிரச்சனை பேசுவோம்
அங்கே நடக்கும் கிரிக்கெட் பார்ப்போம் வேட்டைக்காரன் பார்ப்போம் ....!
" சச்சினை திட்டிய சாரு ரசிகர் " என்று எழுதியவருக்கு
நான் சாரு படிப்பதில்லை என்று தெரியும் எதற்கு சாரு பெயர் ....!
கமல் ஜாதி ரீதியாக கருத்து சொல்வார் .....
அதை திட்டினால் பிரபலத்தை திட்டிகிரோமாம் ...................!
பாம்பே படம் ஹிந்துத்துவா படம் ...............
அதை விமர்சனம் செய்தால் திட்டுவார்கள் .....!
அரசியல் விமர்சனம் இருக்கவே கூடாது ....
அவர்கள் பிரபலங்கள் நாம் அடிமைகள் ....
கை தட்டிக்கொண்டே இருப்போம் ..................!
இப்படி தான் நித்தியானந்தனும் பிரபலம் ..................
இன்று மட்டும் ஏன் அவனை திட்டுகிறீர்கள் ...
இன்றும் கை தட்டலாமே ...........

Friday 5 March 2010

மண்ணும் மண் சார்ந்த பதிவர்களும்

















மண்ணோடு சம்பந்த பட்டவனே மனிதன். எப்படி ஒரு குழந்தைக்கு உண்டான உணவு தாய் பால் தாயிடமே இருக்கிறதோ அதைபோல் மனிதனின் உணவு உலகத்திலேயே எடுக்கப்படுகிறது. மண் ஒரு விதத்தில் மனிதனின் தாய். தாய் கூட பத்து மாதங்கள் தான் உணவளிபாள் மண் பிறந்தது முதல் நமக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.

மண் சார்ந்த பதிவர்களை தேடிக்கொண்டிருந்தேன். மண் என்றால் மண்ணை பற்றி எழுதுபவர்களை தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது மூலிகை பற்றி எழுதும் குப்புசாமி கண்ணில் பட்டார். மூலிகை என்றால் மருத்துவ குணம் உள்ளது. எனக்கு தெரிந்து சிறுவயதில் எனக்கு வயத்து வலி என்றால் வீட்டில் உள்ள ஓம செடியை பிய்த்து திண்பேன். அப்புறம் வீட்டில் துளசி இருந்தது, அம்மா துளசி கசாயம் போடுவார்கள்.எனக்கு தெரிந்த மூலிகை வைத்தியம் அவ்வளவே, ஆனால் குப்புசாமியை படிக்கும் பொழுது மூலிகை வைத்தியம் மிக விரிந்தது என்பது தெரிகிறது. மனிதர் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் எழுதி உள்ளார். படிக்கும் போதே மூலிகை விவசாயத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று தெரிகிறது.

இத்தனை செடிகள் உள்ளதா என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது . அதுவும் இத்தனை மருத்துவ குணங்களுடன். அவரின் வலைப்பூ முகவரி


http://mooligaivazam-kuppusamy.blogspot.com/

குப்புசாமியின் சுட்டியை நான் மரவளம் என்னும் ப்ளோகில் இருந்து எடுத்தேன். இவர் கவனிக்க படவேண்டிய பதிவர். மரவளம் பற்றி எழுதுவதோடு மட்டும் அல்லாமல் நீர்வளம் நீர்மேலன்மை போன்றவற்றையும் எழுதுகிறார் . மேலும் வெட்டிவேரை எப்படி வளர்ப்பது அதன் பயன்கள் பற்றி எழுதி உள்ளார். கட்டாயம் படிக்கப்பட வேண்டிய பதிவுகள் விவசாயம் சம்பந்தமான அமைச்சகம் உதவிகள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் எழுதி உள்ளார். மரம் விவசாயம் சம்பதமான அனைத்து விடயங்களையும் எழுதி உள்ளார்.
விவசாய வலைத்தளங்கள் அறிமுகம் செய்து உள்ளார். உலக விவசாயம் பற்றிய அறிமுகம் கூட அந்த வலைதளங்களில் இருக்கும்.

http://maravalam.blogspot.com/


நாம் மண்ணிற்கு என்ன செய்து விட்டோம் குளோபல் வார்மிங்கை குறைக்க மரமாவது வைக்கலாமே. அன்னைக்கு கூட சம்பாதித்து கொடுக்கிறோம் உணவளித்த மண்ணிற்கு என்ன செய்ய போகிறோம். உண்மையிலேயே விடயம் உள்ள பதிவுகள். இந்த பதிவால் ஒரு விதை மண்ணில் பதிந்தாலும் வெற்றியே.

Thursday 4 March 2010

நித்தியானந்தரும் கடவுளை தேடும் நாமும்


















நானும் என் நண்பனும் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டு " உழைக்காமல் உன்ன வேண்டும் என்றால் கோவில் கட்ட வேண்டும் என்று ".எனக்கு தெரிந்து மனிதனின் அவநம்பிக்கை மற்றும் சோகங்களுக்கு வடிகாலாய் இருக்கின்றன கோவில்களும் மடங்களும். மனிதனின் நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதாலோ மடங்கள் புற்றீசல் போல தோன்றுகின்றன. தெருவிற்க்கொரு சாமியார் தோன்றுகிறார்.

சாமியார் என்று அறிவித்து விட்டால் போதும் எத்தனை எத்தனை பக்தர்கள் பணம் கொட்ட துடங்கும். ஆனந்த விகடன் ,குமுதம் போன்றவைகள் கவர்ச்சி படங்களுடன் இணைத்து அடுத்த பக்கத்தில் ஆன்மிக கட்டுரை எழுத அழைக்கும். ஒரு நட்சத்திரம் போல் அந்த சாமியார் பார்க்கபடுவார். நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் அவர்கள் பின்னால் ஓடுவார்கள். லிங்கம் வரவைப்பார் சாமியார்,வெளி நாட்டு பக்தர்கள் அதிகம் இருப்பார்கள். ஒரு ஊரையே வளைத்து போட்டிருப்பார் சாமியார்.

இந்த மடங்கள் தோன்றுவதற்கு மனிதன் ஒரு காரணம். இவனின் அவநம்பிக்கை வாழ்கையில் போராடமுடியவில்லை உடனே கடவுளிடம் செல்கிறான் இல்லை மடத்திடம் செல்கிறான். மனதில் தியானம் என்ற பெயரில் மனதில் அந்த சாமியாருடன் மானசீகமாய் பேசுகிறான் உடனே அவன் மனது அமைதி அடைகிறது, அவன் மனது அமைதி அடைந்தவுடன் அதை அவன் சாமியார் செய்தார் என்று நினைக்கிறான். சாமியார் மீது பைத்தியமாய் இருக்கிறான்.

சிலர் தன் மனதை அடக்க வேண்டும் என்று கடவுளிடம் செல்கின்றனராம். அவர்கள் பாதி பேர் போராட தைரியம் இல்லாமல் இருப்பவர்கள். "உள் கட" என்றால் கடவுளாம். எதற்கு உள்ளே கடக்க வேண்டும். எதற்கு உறுப்புக்களை அடக்க வேண்டும். ஆண் என்றால் பெண் மீது மோகம் கொள்வான் அதுவே இயற்க்கை. உடல் உறுப்புக்களும் ஆண் என்றால் பெண் மீதும் பெண் என்றால் ஆண் மீதும் மோகம் கொள்வதை போலவே உடல் அமைப்புகளும் இருக்கின்றன அதுவே இயற்க்கை.

இத்தகைய மனம் உள்ளவர்கள் அதிகம் இருப்பதினாலே மடங்கள் அதிகரிக்கின்றன . மடங்களும் போலிசாமீயார்களும் உருவாக அவர்கள் மட்டும் காரணம் இல்லை, காரணம் இல்லாமல் அவர்களை ஆதரிக்கும் மக்கள். இவர்களுக்கு நம்பிக்கை இல்லை கட்டயாம் கடவுள் என்று ஒருவர் வேண்டும்.

கடவுள் என்ற ஒருவர் அரசர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். மக்கள் குறை தீர்ப்பவன் அரசன். மக்கள் குறையுடன் இருந்தால் புரட்சி வெடிக்கும். அரசனின் சொத்துக்கள் பிடுங்கப்படும். இப்பொழுது கடவுள் என்று ஒருவர் இருந்து விட்டால்,மக்கள் கடவுளிடம் முறையிடுவார்கள். புரட்சி வெடிக்காது,போராட்ட குணம் நீர்த்துப்போகும் அரசன் மக்களை நன்றாய் சுரண்டலாம்.

கடவுள் ஒருவர் இருந்துவிட்டால் அரசன் எவ்வளவு சுரண்டினாலும் மக்களுக்கு தெரிந்தாலும் "மேல ஒருத்தன் இருக்கான் பாத்துக்கிட்டே இருக்கான்" என்று மக்கள் புலம்புவார்களே தவிர, அரசினிடம் சண்டையிட மாட்டார்கள். இது அரசனுக்கு நல்லது, மக்கள் புரட்சி என்றுமே இருக்காது கோவில்கள் மடங்கள் அதிகம் இருக்கும் நாட்டில். இந்தியாவில் கோவில்கள் மடங்கள் அதிகம் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்பிவிட்டால் நாம் என்ன சொன்னாலும் நம்புவோம் நம்மை எளிதாய் ஏமாற்றிவிடலாம். கடவுள் பற்றி படம் மூட நம்பிக்கைகள் வளர்க்கும் படம் என்றால் தேசிய விருது கொடுக்கும் நாடு இது. இங்கே கஞ்சா அடித்தால் அவன் கடவுள். போதையில் அவன் உளறினால் அது வேதம்.

நித்யானந்தர்கள் உருவாக நாமும் ஒரு காரணம். இந்தியாவில் அதிக கோவில் இருப்பதால் இது புண்ணியபூமி அல்ல, உலகத்திலேயே அதிகமாய் ஏமாற்றப்பட்டவர்கள் இந்தியர்கள். கடவுள் என்ற பெயரை வைத்து சுரண்டப்பட்ட நாடு. மனதளவிலே வலிமை குறைந்ததால் மட்டுமே கடவுளிடம் செல்கிறோம்.

ஏன் இந்த நித்யானந்தர்களும் பாபாக்களும் சுனாமி என்றால் சொல்வதில்லை பூகம்பம் என்றால் சொல்வதில்லை. ஏன் புத்தன் கடவுள் தானே அவனுக்கு ஈழம் பற்றி தெரிந்துருக்கும் ஏன் அவன் தடுப்பதில்லை. ஏன் வெங்கட் தெலுங்கானா பிரச்னையை தீர்ப்பதில்லை. இமய மலை ஆன்மீக மலை என்கிறார்கள் ஏன் இமைய மலையில் இருக்கும் பாபாக்கள் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டியது தானே.

போராடத் தெரியாதவனே கடவுளிடமும் மடத்திடமும் செல்வான். இந்தியாவில் கோவில்கள் அதிகமாய் இருப்பதால் தான் ஊழல்களும் அதிகமாய் இருக்கிறது. மக்கள் என்று குறைகளுக்கு போராடாமல் கோவில்களுக்கு செல்கிறாரோ அந்த சமூகம் உருப்படாமல் போகும். எங்கு கோவில்களும் மடங்களும் உள்ளதோ அங்கு ஏமாற்றப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் , ஒரு வகையில் நித்யானந்தர் போன்ற சாமியார்கள் உருவாக நாமும் ஒரு காரணம்.