Thursday 25 March 2010

உற்று பார்த்துக்கொண்டே இருந்தது


















காரி உமிழ்ந்து
விட்டு போனார் பெரியவர் .......!
மழை வந்து குளிப்பாட்டியது ............
வண்டிகள் ஊர்ந்து சென்றன .......
நேற்று ஒரு காதலனுடன்
பிரிந்த காதலி இன்னொரு காதலனுடன்
நடந்து சென்றாள்............!
பிராத்தல் நின்று கொண்டு கூப்பிட்டு
கொண்டிருந்தாள் ...........!
பார் சென்றனர் A சென்டர் குடிமகன்கள்
டாஸ்மாக் சென்றனர் C சென்டர் .............!
ஒரு குழந்தை பஞ்சு மிட்டாய்க்காக அழுது கொண்டிருந்தது .........
ஆயிரம் ருபாய் பொம்மை வைத்து காருக்குள் சென்றது பணக்கார குழந்தை .......
தோழர்கள் ஏதோ பிரச்சனைக்காக
சுவரொட்டியிலே ஓட்ட ..............பக்கத்திலே
ஷகிலா பட சுவரொட்டி .....................!
துரோகி விரோதி நல்லவன் யாராக இருந்தாலும்
தெருவிற்கு மிதி மட்டுமே ..................
சில நேரம் காரி உமிழ்தல்
சில நேரம் அதன் பெயர் மூத்திர சந்து .............!
இருந்தாலும் அந்த அங்காடி தெரு அனைவரையும்
உற்று பார்த்துக்கொண்டே இருந்தது ....................!

1 comment:

க.பாலாசி said...

மிக சிறப்பான இடுகை... இதுதான் பார்வை...