Tuesday 29 March 2011

பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு சொல்றான் அவன நிக்க வச்சு சுடவேணாம மச்சி

"எனக்கு ரொம்ப tensiona இருக்கு "
"என்ன மச்சி நாகப்பட்டினம் போயிருந்தையா மீனவங்க எல்லாம் செத்துப்போறாங்க அதுக்கா மச்சி "
"இல்ல டா "
"நம்ம பணமெல்லாம் SPECTRUM மாதிரி ஊழலுல போகுதே அதுக்கா "
" மச்சி எனக்கு அரசியல் பிடிக்காது எவன் சம்பாதிச்சா எனக்கென்ன "
" சரி இந்த இலவசம் எல்லாம் தந்து மக்களை கேவலப்படுத்தாரைங்கள அதுக்கா , இல்ல தண்டகாரன்யாலா மக்கள் அடிச்சு விரட்டப்படரான்களே
அதுக்கா , ஒஹ் நீ தான் தண்டயர்ப்பேட்டைல எதாவது நடந்தாலே கவலைப்பட மாட்ட அப்புறம் என்ன டா டென்ஷன் "
"மச்சி இந்திய பாக்கிஸ்தான் மேட்ச் மச்சி , இந்தியா ஜெயிக்கணும் ஆபீஸ்ல ஒருத்தன் பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு சொல்றான் அவன நிக்க வச்சு சுடவேணாம மச்சி "

Tuesday 22 March 2011

பகத் சிங் நினைவு நாள் -வீர வணக்கங்கள்


போலிகளுக்கு நடுவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ."சச்சின்" பிறந்தநாள் நியாபகம் வைத்துகொள்ளும் நாம் , "பகத் சிங் " நினைவு நாளை , உண்மையான களப்போராளியின் நினைவு நாளாய் மறந்து கடந்து விடுகிறோம் . இன்று பகத் தூக்கிலிடப்பட்ட நாள் , வீர வணக்கங்கள் . உலகக்கோப்பையும் , போலி ஜனநாயகம் உருவாக்கும் தேர்தலையும் நம் சிந்தனையிலே ஒதுக்கிவைத்து விட்டு , பகத்திற்கு வீர வணக்கம் செய்வோம். அரைநாள் உண்ணாவிரதமும் , கொடநாட்டில் ஓய்வும் , திருமணமண்டபம் இடிக்கப்பட்டதால் அரசியலுக்கு வந்தவரையும் ,
லட்சம் கோடிகள் அடித்தவரையும் மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டில் , இருபத்தோரு
வாயதே ஆன ஒரு போர் வீரன் தூக்கு மேடையிலே முத்தமிட்ட நாள் . வீர வணக்கங்கள் .

Sunday 20 March 2011

கலைஞரின் "ஒரு ரூபாய்க்கு மது " திட்டம்

மக்களை தன்வச படுத்த எதிரிகளை துவம்ச படுத்த இலவசம் தேவைப்படுகிறது ."குழந்தைகளை சச்சின் ஆக்கும் திட்டம் " என்ற திட்டம் கொண்டுவரப்போகிறோம் , ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச பேட் பந்துகள் கொடுக்கப்படும் , ஒரு தெருவிற்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்கப்படும் , ஒளிவிளக்குகளில் ஆடுவதற்கு பயிற்சி கொடுக்கப்படும் , என் பிறந்த நாள் , தயாளு அம்மாள் பிறந்தநாள் , ராசாத்தி பிறந்தநாள் ,
கயல்விழி பிறந்தநாள் ,ஸ்டாலின் , அழகிரி ,துறைதயாநிதி , உதயநிதி , மாறன் , கயவிழி பிறந்தநாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் . இத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் பெயர் வைத்தால் , சச்சின் நான் ஆட்சியில் அமர்ந்தவுடன் எனக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா வழங்குவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் . நாட்டின் முக்கிய பிரச்சனை கிரிக்கெட் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்துகிறேன் .

இத்தேர்தலில் அடுத்த கதாநாயகி திட்டம் தாய்மார்களுக்காக , கணவர்கள் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு தெரு ஓரங்களில் விழுந்து கிடப்பதுண்டு , பெண்கள் கண்ணீரை பார்க்கமுடியாத நான் , வீட்டிற்கு வரும் மது திட்டத்தை செயல்ப்படுத்த உள்ளேன் .அதுவும் ஒரு ரூபாய்க்கு பீர் , ஐம்பது பைசாவிற்கு quater , தமிழ் நாட்டில் தலையாய பிரச்சனை குடித்து விட்டு ரோட்டில் விழுவது தான் என்று எழுத்துமேதை சாரு கூறி உள்ளார் ,
அதற்க்கு நம் குருஜியும் ஆதரவு தெரிவித்து buzz விட்டதால் , அவர்கள் துயர் துடைக்க வீட்டுக்கு வீடு டாஸ்மாக் திட்டம் , வீடு தேடி வரும் மது , ஒரு ஊறுகாய் பாக்கெட் ஒரு ரூபாய்க்கு வாங்க முடியாத நாட்டில் ஒரு ரூபாய்க்கு மது அதுவும் வீடு தேடி வரும் மதுவினால் அனைவரும் பயன் அடைவர் .
மனைவிமார்களும் கணவன் எந்த ரோட்டில் விழுந்து கிடக்கிறான் என்பதை பற்றி கவலை இல்லாமல் இனி கலைஞர் டிவியில் என்னுடைய பாராட்டு விழா நிகழ்ச்சியை பார்க்கலாம் .

இளைங்ர்களுக்கான திட்டம் வேணாமா என்று பேரன் துறை தயாநிதி கேட்டான் ? இளைஞன் படத்திற்கு வசனம் எழுதியவன் நான் இருக்கிறது பேராண்டி , தமிழகம் முழுவதும் தெருக்கு தெரு குட்டிசுவர்கள் வைக்கப்படும் ,அந்த சுவற்றில் உட்க்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளான கிரிக்கெட் , அசின் , எந்திரன் , முடிந்தால் இளைஞன் படத்தில் கலைஞரின் வசனம் போன்ற முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கலாம் . விவாதிப்பதற்கு அலுப்பு தட்டாமல் இருக்க நாள் ஒன்றிற்கு இரண்டு கிங்க்ஸ் சிகரட் இலவசமாகவும் , சுறுசுறுப்பாய் சுறாவளி
போல செயல்பட ஒரு அரட்டைக்கு இரண்டு கோப்பை தேனீரும் வழக்கப்படும் .

தி மு க ஆட்சியில் ஏரியவுடன் "கலைஞர் வெற்றிக்கு காரணம் இலவசமா சொல்வனமா " என்ற தலைப்பில் ரஜினி கமல் வாலி வைரமுத்து கனிமொழி தமிழச்சி தங்கப்பாண்டியன் நமிதா பிருந்தா ராஜா(spectrum ) ராஜா (பாப்பையா ) உரையாட சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படும் தீபத்திருநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் .

Wednesday 16 March 2011

மாதவராஜிடம் சில கேள்விகள்

"கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள் " என்ற மாதவாஜின் . அவரிடம் ஒரு எளிமையான பாமரனின்
கேள்வி

1 ஒரு திருடன் உங்கள் வீட்டை திருடுகிறான் , அவனை விட இன்னொரு திருடன் கம்மியாக திருடுவான் என்று வைத்துக்கொள்வோம் , இரண்டாம்
திருடனை துணைக்கு அழைத்து முதல் திருடனை ஒழித்துவிட்டு , இரண்டாம் திருடனுக்கு வழி விடுவீர்களா ?
2 communism இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வை காணச்சொல்கிறதா ? இது முதலாளிக்கான ஜனநாயகம் என்று தெரிந்தும் , இந்த அரசியல் முறையிலேயே
தீர்வு காணவேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் இல்லையா ?
3 இந்த வாக்குசீட்டு முறையிலேயே தீர்வு காண முடியும் என்று நம்புகிறீர்களா ?
http://www.mathavaraj.com/2011/03/blog-post_10.html

Sunday 6 March 2011

இதற்கு பின்பும் இரட்டை இலையை ஆதரிப்பாரா சீமான்

இரட்டை இலலைக்கு வாக்களித்தால் தான் காங்கிரஸ் தோற்கும் , என்று "நாம் தமிழர்" இயக்கத்தலைவர் சீமான் ஒரு பேட்டி ஒன்றில் சொல்லிருக்கிறார் ,ஆனால் டாக்டர் புரட்சித்தலைவியோ காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்கிறார் ,சீமான் இப்பொழுது என்ன சொல்வார் ?

படங்கள் நன்றி
"http://www.anburaja.in/"







Thursday 3 March 2011

பழங்குடியினரை பாலியல் வல்லுறவு செய்த தேவாரத்திற்கு வாழ்த்துக்கள்

பழங்குடியினரை பாலியல் வல்லுறவு செய்த தேவாரத்திற்கு வாழ்த்துக்கள்

காவல் நிலையத்தில் பத்மினியை கற்பழித்த சிதம்பரம் காவலர்களுக்கு வாழ்த்துக்கள்

வடகிழக்கில் பழங்குடி பெண்களை பாலியல் வல்லுறவு செய்த ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்

spectrum ராஜாவிற்கு வாழ்த்துக்கள்

காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விஜயகாந்திற்கு வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள் தெரிவிக்கும் பதிவுலகிற்கு வாழ்த்துக்கள்

பச்சையப்பன் கல்லூரி தொப்பி தொப்பியிடம் சில கேள்விகள்

பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களை அடித்து நொறுக்கியதற்க்கு தொப்பி தொப்பி என்னும் பதிவர் வாழ்த்து
தெரிவித்து உள்ளார் .முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் போலீஸ் மக்கள் நலன் என்னும் நோக்கில் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா .அப்படி மக்கள் நலனுக்காக தான் அவர்கள் அடித்தார்கள் என்று தொப்பி தொப்பி உண்மையிலேயே சொல்ல முடியுமா ? பஸ் டே கொண்டாடுவதை பற்றி சொல்கிறீர்கள் , தென் தமிழகத்தில் தேவர் ஜெயந்தி நடக்கும் நாள் அன்று பார்த்து இருக்கிறீர்களா ? மதுரை ராமநாதபுரம் ரெண்டு படும் , மக்கள் அப்பொழுது பாதிக்கப்பட்ட பொழுது இந்த காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது . உள்ளே புகுந்து வக்கீல்கள் நீதிபதிகள் தாக்கப்பட்டரே , அடித்ததே போலீஸ் தானே ? வீரப்பனை பிடிப்பதற்கு சென்ற தமிழக காவல்த்துறை பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை எல்லாம் நினைவில்லையா ? தொப்பி தொப்பி . இத்தேசம் 1 76 000 கோடி திருடிய அம்பானி டாடாவை விட்டுவிட்டு ,பர்ஸ் திருடனை புட்டதிலேயே அடிக்கும் போலீஸ் கொண்ட தேசம் , நீங்கள் பார்த்தது இல்லையா . அப்படிப்பட்ட தேசத்தில் இருந்து வரும் போலீஸ் காவலன் தான் ஆனால் முதலாளிக்கு , ஆளும் வர்கதிற்க்கும் காவலன் . உண்மையிலேயே இவர்கள் ஒருநாள் பஸ் டே கொண்டாடிவிட்டு அமைதி ஆகிவிடுவார்கள் , உள்ளே ஓரசிக்கொண்டிருக்கும் பெருசைவிட படியில் தொங்கிக்கொண்டிருக்கும் கானா பாட்டு
பாடும் பையனால் பெண்களுக்கு தீங்கு கம்மியே . அப்படி இருக்க ஏதொ இது கொலைகுற்றம் போல அவர்களை அடிப்பது எல்லாம் ஜனநாயக படுகொலை , ஏன் இத்தனை வருடமாய் இதை கண்டிக்காமல் இப்பொழுது மட்டும் கண்டிக்கிறார்கள் . நியூ இயர் பொழுது பபுகளில் பெண்கள் சரக்கடித்து விட்டு ஆடுகிறார்கள் , அந்த பப்புகள் பெண்களுக்கு ஆபத்தானது தானே அதை இந்த போலிஸ் கேட்டுள்ளதா ?

போலிஸ் காவலன் தான் முதலாளிகளுக்கு , ஆள்பவர்களுக்கும் .

Wednesday 2 March 2011

அஞ்சா நெஞ்சர் அழகிரியும் அடிபொடிகளும்


மதுரை சுற்றி எங்கு பார்த்தாலும் மதுரை மன்னர் அழகிரியின் படமும், இளவரசர் துரை அவர்கள் தலைமையில் நடைபெறும் ஏதோ ஒரு திருமணம் சம்பந்தமான ப்ளெக்ஸ் நம்மை பார்த்து சிரிக்கும் . அதுவும் ஜனவரி மாதம் அஞ்சா நெஞ்சரின் பிறந்தநாள் வருவதால் கழக கண்மணிகள் இரண்டு அடிக்கு ஒரு ப்ளெக்ஸ் வைப்பர் . இதனால் பல லட்சம் பேருக்கு மறைமுகமாய் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று கலைஞர் சொல்லக்கூடும் . நாடோடிகள் படத்தில் ஒரு காட்சி அப்பொழுது தான் நடந்து முடிந்திருக்கும் அதற்குள் ஒரு ப்ளெக்ஸ் வைத்துவிடுவார்கள் அக்காட்சி அழகிரியை நியாபகப்படுத்தும் .

அனைத்து பிரபலங்களின் மூஞ்சியை அழகிரி மூஞ்சியாய் மாற்றி ப்ளெக்ஸ் வைப்பது வாடிக்கை . ரஜினி அஜித் விஜய் டோனி சச்சின் உடம்புகள் அழகிரி மூஞ்சிக்குள் சிரிக்கும் .தி மு காவின் "MAN OF THE மேட்ச்" போன்ற வாசகங்கள் அங்கிங்கே கண்ணடிக்கும் . கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் அவர்களுக்கே ப்ளெக்ஸ் வைக்கவில்லை , அண்ணன் துரை தயாநிதி கிரிக்கெட் ஆடுவதற்கு , அவர் மட்டையை வைத்துக்கொண்டு பெவிலியனில் அமர்ந்தது போன்ற ப்ளெக்ஸ் வைத்த ஊர் இது .

கழக கண்மணிகள் வராலாறு தெரியாமல் ப்ளெக்ஸ் வைத்து மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்துவதுண்டு .
சே குவேரா என்னும் மாபெரும் போராளியை அழகிரியுடன் ஒப்பிட்டு ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மதுரையில்
சே குவேரா ஒடுக்கும் மக்களுக்காக போராடினார் , வேறு வேறு தேசம் சென்று போராடினார் , அவரை பற்றி வரலாறு தெரியாமல் கூச்சமே இல்லாமல் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது . நான் மற்ற போஸ்டர்களை நகைச்சுவையாய் கடந்து சென்றதுண்டு , ஆனால் இது மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்தும் விதமாய் உள்ளது . ஒரு தடவை கூட பாராளுமன்றத்தில் பேசாத அழகிரி "அஞ்சா நெஞ்சராம் "கேக்கறவன் கேனப்பயலா இருந்தா எருமைமாடு aeroplane ஓட்டுமாம் "

பின் குறிப்பு :
படம் ஆதிஷ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Tuesday 1 March 2011

காசு வாங்கிய சச்சின் டோனி கதை


"இப்ப பாரு டெண்டுல்கர் எட்டு ரன் அடிச்சிருக்கார் பத்துக்குள்ள அவுட் ஆவார் " என்றான் விஷ்வா
ஓடக்கூடாத ரன்னிற்கு ஓடி அவுட் ஆனார் சச்சின் , "எப்படி டா சொன்ன "என்று அதிர்ந்தான் குமார் .
"டோனி அஞ்சு ரன் தாண்ட மாட்டன் பார் " , மூன்று ரன்களின் போது ஏறி அடிக்க போய் அவுட் ஆனான் டோனி "எப்படி மச்சான் கலாசுற " என்றான் குமார் . "இந்தியா இன்னிக்கு எப்படியும் தோத்துரும் , 150 ரன் தான் அடிசுருக்காங்க " என்றான் விஷ்வா . hundred for நோ லாஸ் என்று தொலைகாட்சி ஸ்கோர் காட்டியது ,திடிரென 102 for Five என்று ஸ்கோரை பார்த்தவுடன் சன் தொலைக்காட்சியில் இருந்த சேனலை உற்சாகத்துடன் திருப்பினான் குமார் ,மட மட என்று விக்கெட் விழுக ஆரம்பித்தது 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா , விஷ்வா முகம் வாடியது ...........................
"என்ன மச்சான் ரெண்டு கோடி போச்சே இந்தியா தோக்கறதுக்கு எவ்வளவு கொடுத்தும் வீண் ஆயுடுச்சே ,
இவங்க காசு வாங்கின மாதிரி ஆடினாங்க ஆஸ்திரேலியா அத விட மட்டமா ஆடிட்டாங்க நம்மள விட எதோ புக்கி விளையாடி இருக்கான் " என்றான் விஷ்வா ..................................................
தண்ணி அடித்து கொண்டிருந்த குமாருக்கு ஒரு போன் வந்தது ...................எழுந்து சென்ற அவன்
"மச்சான் நல்லவேளைக்கு தோத்து போகல இந்தியா ஜெயிச்சுருச்சு , ஆஸ்திரேலியா மேல போட்ட அஞ்சு கோடி வீணா போகல "கலக்கல் மச்சான் என்று போனை வைத்தான்