Sunday 27 February 2011

சச்சின் "நூறில் "

"ரெண்டு லட்சம்
கோடி ஊழல் "
நாகப்பட்டினம் , வேதாரண்யம்
ராமேஸ்வரம் "37 உயிர்கள்" ,
எல்லாம் மறந்து போனது
சச்சின் "நூறில் "

படத்த படமா பாருங்கப்பா - ஜாக்கி சேகரும் சினிமா விமர்சனங்களும்

படங்கள் பற்றி விமர்சனங்கள் வரும் பொழுது பொதுவாய் படத்தை படமாக பாருங்கள் என்ற விமர்சனம் வருவதுண்டு ."ராவணன் " படம் வந்தபொழுது எழுதிய விமர்சனத்திற்கு அது ஒரு கலை அவ்வளவே பிடித்து இருந்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அது என்ன அரசியல் விமர்சனம் செய்வது என்று வாதம் செய்பவர்கள் உண்டு . ஒரு படம் மொக்கை என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , போர் என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , நாயகி நன்றாக கவர்ச்சியாய் இருக்கிறார் என்று சொல்ல உரிமை உண்டு , ஆனால் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் மட்டும் படத்தை படமாக பார் என்று விமர்சனம் அறிவு ஜீவிகளிடம் இருந்து இயல்பாய் வரத்தான் செய்யும் .

இப்படி தான் பயணம் பார்க்க சென்ற பொழுது என் திரையுலகை சேர்ந்த நண்பரிடம் இது ஹிந்துத்துவா படம் என்று
சொன்னபொழுது அவர் சண்டைக்கு வந்தார் .மோடியை உங்களால் தீவிரவாதியாக சித்தரிக்க முடியுமா என்று நான் கேட்டேன் "மோடி தான் சிறந்த முதல்வர் என்று அவர் வாதிட்டார் " . நீங்கள் எல்லாம் ஹிந்து இல்லை பார்ப்பனர்கள் மட்டுமே ஹிந்து என்று சொன்னேன் , நீங்கள் அவர்களுக்கு வேலை செய்பவர் என்று சொன்னேன் . " எப்படி சொல்கிறீர்கள் நான் ஹிந்து தான் " என்று சொன்னார் .ஹிந்து மதம் உங்களை இழிவு படுத்துகிறது "இந்த ஒரு வீட்டில் மட்டுமே பத்தினி வாழ்கிறார் " என்று பார்ப்பனீயம் சொல்கிறது அதை ஏற்றுகொண்டால் நீங்கள் ஹிந்து தான் என்றேன். இப்படிப்பட்ட யோசிக்காத சமூகத்தில் ஒரு படைப்பு என்பது வரும்பொழுது அரசியல்
விமர்சனம் தேவை என்றே நினைக்கிறேன் .

சினிமாவை மொக்கை என்று விமர்சனம் செய்யலாம் ஆனால் அரசியல் விமர்சனம் கூடாது என்ன ஜனநாயகம் ?
ஆனால் இப்படி அரசியல் விமர்சனம் செய்யாதவர்கள் கூட "நடுநிசி நாய்களில் " வரும் வக்கிரம் என்னும் அரசியல் பற்றி சமூகம் பற்றி கவலை பட்டார்கள் . இது அவர்கள் செய்யும் தவறல்ல , அப்படம் அவர்களை மனதளவில் பாதித்து இருக்கிறது , அதில் அவர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்கிறது . இதே நடுநிசி நாய்களை விமர்சனம் செய்பவரை கூப்பிட்டு "அன்பே சிவம் " பற்றி விமர்சனத்தை சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் "நீ என்ன பெரிய புடிங்கியா , நீ முதல்ல ஒரு படம் எடு" என்பார்கள். தன்னை பாதிக்கிற விடயத்தில் மட்டும் , தன்னில் இருந்து வரும் சமூக அக்கறையை மட்டும் காட்டும் இவர்கள் மற்றபடங்களை அரசியல் விமர்சனம் செய்யும்பொழுது "படத்தை படமாய் பாருங்க பா " என்று சொல்வார்கள் .

பின் குறிப்பு :
இப்பதிவை எழுத்தத்தூண்டியது அண்ணன் ஜாக்கியை பற்றி பதிவுலகில் எழப்பட்டிருக்கும் விமர்சனங்கள் . ஆனால் ஒருவிதத்தில் ஜாக்கி நேர்மையானவர் அவர் சிலபடங்களை மட்டும் அரசியல் பார்வையுடனும் சில படங்களை படங்களாகவும் பார்ப்பதில்லை அனைத்து படங்களையும் படமாகவே தான் பார்க்கிறார் .

Thursday 24 February 2011

வாக்காளர்களே இல்லாத பொழுது எப்படி வாக்கு வங்கி குறையும்


சுட்ட மண்ணிலே
மீனாக மடிந்துகொண்டிருக்கிறான்
எம்மீனவன் ....
அம்மீன்கள் விற்பனைக்கு வைக்க
படுகின்றன வாக்கிற்காக.. !
தேர்தல் வாக்கிற்காக
நக்கும் நாக்குகள் கதைக்கின்றன

மீன்களை ஐந்து நட்சத்திர உணவகத்தில்
மட்டுமே பார்த்த
அரிதாராம் பூசும் நடிகன் ,
மீனவனுக்காக குரல் கொடுக்கிறான் .
தன் இழந்த பிம்பத்தை மீட்க்க
மீனவன் பிம்பம் தேவை !

கனிமொழி உண்ணாவிரதம் ..........
ஆச்சர்யம் அடையவேண்டாம் .
தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்களுக்குமே
பிரச்சனையாம் ,ராணுவத்திற்கு சம்பந்தம் இல்லையாம்
எப்படி மன்மோகனுக்கும் spectrum ஊழலுக்கும்
சம்பந்தம் இல்லை தானே ...!

தந்தி அனுப்புவோம் ........
தந்தி அனுப்புவதற்குள் நான்கு
உயிர் போயிருக்கும் அவ்வளவு
தானே ...............

வாக்காளர்களே இல்லாத பொழுது
எப்படி வாக்கு வங்கி குறையும்

Wednesday 23 February 2011

நடுநிசி நாய்கள்


நடுநிசி நாய்கள் பார்த்தேன் , படம் பார்த்த பின்பு உண்மையிலேயே மன உளைச்சல் ஏற்ப்படுத்தியது , கதையை கூர்ந்து நோக்க தொடங்கினேன் . சமர் என்ற பையன் அவன் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தப்படுகிறான் அதனால் மனச்சிதைவு உள்ளாகிறான் , அவன் வளர்ப்பு தாய் அவரை புணர்கிறான் ,வளர்ப்புத்தையின் கணவரை கொல்கிறான், பின் நிறைய பெண்களை அனுபவித்து கொடுமை செய்கிறான் ,என்று படம் முழுக்க வக்கிரத்தின் உச்சத்தில் செல்கிறது . "ஊரில் நடப்பதை தானே எடுக்கிறோம் " என்று படைப்பாளிகள் எளிதில் சொல்வதுண்டு ,ஆனால் ஏதாவது ஒரு விடயத்தை மட்டும் காட்டிவிட்டு ,சில விடயங்களை மறைப்பதை படைப்பாளிகள் திறம்பட செய்கிறார்கள் .

அந்த சமர் போன்ற குணாதிசியம் மிக்க சிறுவன் எந்த சமூகத்திலே வளர்கிறான் , அவர் தந்தை குரூப் செக்ஸ் வைத்துக்கொள்கிறார் , அது எந்த சமூகத்தில் இருக்கிறது . பணத்திமிருடன் பெண்களை நுகர்வு பொருளாய் பார்த்து பழக்கப்படும் மேட்டுக்குடி பணக்கார சமூகத்தில் இருக்கிறது .அச்சமூகம் நுகர்வு கலாச்சாரம் சீர்கேடு
என்பதை படம் விமர்சனமே செய்யவில்லை .அப்படி விமர்சனம் செய்து அச்சமூகத்தில் இருந்து வளர்க்கப்படும் குழந்தை இப்படி தான் சிதைவுடன் வளரும் என்று சொல்லி இருந்தால் படம் ஒரு சிறந்த படைப்பை வந்திருக்கமுடியும் . அதைவிடுத்து வெறும் வக்கிரத்தை மட்டுமே மூலதனமாய் கொள்கிறது கதை என்பதே பிரச்சனை .

எந்த ஒரு பிரச்சனையையும் சமூகத்துடன் பொருத்திப்பார்க்க வேண்டும் என்பதே சிறந்த ஆய்வு முறை என்று நினைக்கிறேன் . உதாரணமாய் கள்ளக்காதல் பிரச்சனை , அவசர உலகம் ஒரு நாளைக்கு பத்து மணி நேர உழைப்பு கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பு செலுத்த முடியவில்லை அதனால் கள்ளக்காதல் அதிகரிக்கிறது . இது வெறும் ஒழுக்கம் சம்பத்தப்பட்ட பிரச்சனையாக பார்த்தோமானால் நாம் தீர்வு சொல்ல முடியாது ,ஆனால் அதன் ஆணி வேரை பார்க்கவேண்டுமென்றால் , அக்காலகட்ட சமூகத்துடன் இணைத்து
அப்பிரச்சனையை பரிசீலிக்க வேண்டும் . அப்படி பரிசீலிக்காமல் போனால் , ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தீர்வுகளை தேடிக்கொண்டிருக்க வேண்டும் . அப்படி சமூகத்துடன் பிரச்னையை இணைத்து பார்க்காமல் இது ஒரு தனிமனித ஒழுக்க பிரச்சனையாய் செல்கிறது "நாடு நிசி நாய்கள்".

நடுநிசி நாய்கள் என்றாலும் ,நாய்கள் அந்தரத்தில் இல்லை சமூகத்தில் உள்ளது . அந்த நாய் சொறி நாய் ஆனாலும் அந்த நாய் ஏன் சொறிநாய் ஆனது என்ற பின்புலத்துடன் சொல்லப்படாத கதையானதால் நடுநிசி நாய்கள் நாதரி நாய்கள் ஆனது .

பின் குறிப்பு : படத்தை படமாக தான் பார்க்க வேண்டும் என்று சொல்லும் விமர்சகர்கள் , இப்படத்தை மட்டும் படமாய் பார்க்காமல் சமூகம் பாதிப்படையும் என்று பதறுவது ஏன் ,அக்னி பார்வைக்கு எழுந்த கேள்வி எனக்கும் எழுவதை தவிர்க்க முடியவில்லை

Tuesday 22 February 2011

தளபதி(கேப்டன்) இளைய தளபதி(ஸ்மால் கேப்டன்)


நாகை மாவட்டத்தில் பேசிய நடிகர் விஜய் அவரின் அறிய தத்துவமான "மத்திய மாநில அரசுகளுக்கு தந்தி அனுப்புங்கள் " என்று சொல்லி உள்ளார் . அவரை பார்க்க ஒரு கூட்டம் . இந்த நடிகர் யார் என்றால் ஈழத்தில் பிரச்னை உக்கிரமாய் இருக்கும் பொழுது தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தியை சந்தித்தவர் . இந்த நடிகர் யார் என்றால் "கோகோ கோலா " விளம்பரத்தில் பணத்துக்காக நடித்தவர் . இவருக்கு சீனியர் நடிகர் என்ன டா என்றால் சரக்கு அடித்துவிட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறார் . ஒருவர் சினிமா வெளிவர பிரச்சனை என்பதால் அரசியலில் இறங்குகிறார் , இன்னொருவர் கல்யாண மண்டப பிரச்னையை ஏதோ ஈழ பிரச்சனை போல மேடைக்கு மேடை பேசுகிறார் ,இவர்களின் அறஉணர்ச்சி மக்கள் பிரச்சனையில் இருந்து வருவதில்லை , தன் மண்டைக்குள் இருக்கும் பிரச்சனையில் இருந்து வருகிறது . இத்தகைய முட்டாள்களே நம்மை ஏமாற்றுகிறார் என்றால் , நாம் எந்த அளவு இருக்கிறோம் .

சரத்குமார் என்பவர் தனக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை என்று அ தி மு கா சென்ற வரலாற்று காரணம் நாம் அறிந்ததே .விஜய டி ராஜேந்தர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது . பிரச்சாரத்திற்கு போக கூட நேரம் ஒதுக்காத கார்த்திக் தான் ஜாதி என்பதாலேயே தலைவராய் இருக்கிறார் . இப்படி நடிகர்களின் நகைச்சுவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது . இந்த கோமாளிகளுக்கு பின் நின்று நாமும் கோமாளி ஆகப்போகிரோமா ?கேப்டன் தளபதி என்றால் இளைய தளபதி ஸ்மால் கேப்டன் தானே

Monday 21 February 2011

ஷோபா ஷக்தி பெரியார் என்னும் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கவாதி

ஆங்கிலத்தில் "basturd " தமிழில் "தே ம " எந்த தேசமாய் இருந்தாலும் ஒருவனை மிகக்கேவலமாய் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தை அவன் தாயை திட்டுவது .இப்படி ஆணாதிக்கம் கரைபுரளும் உலகில் , பதிவுலகம் மட்டும் விதிவிலக்கா ? கீற்று இணையதளத்தில் தமிழச்சி மற்றும் மினர்வா கட்டுரை படித்தேன் , முற்போக்கு முகமூடி போடும் ஷோபா சக்தியை கிழித்து இருந்தது பதிவு . ஆண்கள் பெண்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை என்றால் கடைசியாய் உபயோகப்படுத்தும் ஆயுதத்தை ஷோபா ஷக்தி உபயோகித்து இருக்கிறார் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது என்ன ஆயுதம் என்று கீற்றில் படித்து தெரிந்து கொள்ளவும் , மறுபடியும் அதே விடயத்தை எழுதி பெண்களை இழிவு படுத்த விரும்பவில்லை இந்த போலி முற்போக்கு ஆசாமிகளின் முகமூடியை கிழிக்க வேண்டும் . பெண்கள் வளர்ந்தது போல தெரிந்தாலும் , நவீன வடிவில் சுரண்டப்படுகிறார்கள் .

இதற்க்கு சம்பந்தமான சுட்டிகள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7741:2011-02-21-121458&catid=343:2011

http://kaargipages.wordpress.com/2011/02/21/therupporukki/

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_18.html

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264

பெரியார் பற்றி பேசும் பெண்ணையே இப்படி இழிவு படுத்துகிறார்கள் என்றால் , சாமனிய பெண்ணின் நிலைமை . இதற்க்கு எதிராய் பதிவுலகம் தன்னுடைய கண்டனத்தை அழுத்தமாய் பதிவு செய்ய வேண்டும்

Sunday 20 February 2011

பிரபல இயக்குனர் மசாலா இயக்குனரான கதை

"சார் opening Scenla ஒரு காட காட்றோம் சார் , அடர்ந்த காடு அந்த காட்டுல உள்ள மக்களை விரட்டப்பாக்குறாங்க பன்னாட்டு முதலாளிக , அந்த மலைஜாதி சமூகத்துல இருந்து ஒரு இளைஞன் நம்ம ஹீரோ மக்களை திரட்டி போராட்டம் நடத்தறான் , புரட்சி வெடிக்கிறது , எப்படி அவங்கள மீடியால தீவிரவாதியா காட்டுறாங்க , எப்படி அரச எதிர்த்து மக்களுக்கான அரசா மாத்தறான் இது தான் சார் லைன் பிடிச்சுருந்தா சீன் by சீனா கதை சொல்றேன் சார் .படத்துல ஐரோம் ஷர்மிலா மாதிரி ஒரு கேரக்டர் , பினாயக் சென் மாதிரி
ஒரு கேரக்டர் , அருந்ததி ராய் மாதிரி ஒரு கேரக்டர் எல்லாம் இருக்கு சார் " என்றான் பத்து வருடமாய் உதவி இயக்குனராய் இருக்கும் வேலவன் . "கதை எல்லாம் சரி பா சென்சார்ல படம் மாட்டிக்கும் , அரசாங்கத்த எதிர்த்து படம் பண்ண முடியாது , அதுவும் நீ அரசியல் அமைப்பே மாறணும்னு கதை சொல்றதலா ,படத்த விட மாட்டாங்க ,நீ வேணும்னா ஒன்னு பண்ணு , அரசாங்கம்னு அரசு நு பேச வேணாம் , ஒரு MLA அவன் தான் வில்லன் சரியா பன்னாட்டு கம்பெனிக்கு விக்கறான் , மக்களை துரத்தரான் , ஹீரோ அவன பழிவான்குரானு கதையா மாத்து ". "சார் இந்த அமைப்பே தாப்பா இருக்குறப்ப , MLA கேட்டவன் அதனால தப்பு பண்ணறான்னு கதையா மாத்தின படத்துல உண்மையான அரசியல எப்படி சார் சொல்ல முடியும் " "சினிமால எல்லாமே காசு தான் பா ? ஏன் நாளைக்கு அதே பன்னாட்டு கம்பெனி உனக்கு FINANCE செய்ய வரலாம் வேண்டான்னு சொல்வாய "
அமைதியாக இருந்தான் வேலவன் .

ஐந்து வருடங்களுக்கு பிறகு
CLIMAX 1 :
கொத்தா யாருடா அது framela . Lightaa கட் பண்ணு , தினேஷ் மாஸ்டர் வந்துட்டாரா ? randy சார் ஓகே வா ? டேக் போலாமா ? "சார் நீங்க நல்ல உரசிக்கிட்டு நிக்குறீங்க ,உதட்ட பாக்குறீங்க டக்குன்னு கடிக்கீறீங்க ,ரெயின் effect , RANDY சார் heroine லிப்சுக்கு closeup வையுங்க " என்று கணீரான குரலில் வேலவன் ........................... "சார் நாளைக்கு fight சீன் , போன படத்துல பத்து பேர் , இந்த படத்துல நூறு பேர பறக்க விடுறீங்க பயப்படதீங்க ரெண்டு பேர தான் அடிக்கிறீங்க ஸ்க்ரீன்ல 100 பேரா கட்டறோம் "

CLIMAX 2 :
சினிமாவில் கதை சொல்ல முடியாது என்று புரிந்து கொண்ட வேலவன் . இன்று கிராமம் கிராமமாய் சென்று கலை நிகழச்சிகள் நடத்துகிறான் , மேடை வேறு தான் புகழ் கூட கம்மி தான் , வசதி கம்மி தான் . கலைஞன் என்றால் சினிமா மட்டுமே எடுக்க வேண்டுமா என்ன , கலைங்கனுக்கு தேவை ஒரு மேடை மட்டுமே .

Friday 18 February 2011

தமிழக மீனவனின் உண்மையான எதிரி

தமிழக மீனவர்கள் கடலிலே கொல்லப்படும் பொழுதெல்லாம் அமைதியை இருந்துவிட்டு , இப்பொழுது மட்டும் கனிமொழி போன்றவர்கள் போராடுகிறார்கள் , மேலும் மத்திய அரசு இதில் இப்பொழுது தலைக்காட்டுகிறது , என்னடா உள்ளர்த்தம் என்று பார்க்கும்பொழுது ஒன்று மட்டும் புரிகிறது , இது வெறும் இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும்
நடக்கும் பிரச்சனையாய் சித்தரிக்கப்படுகிறது , பிரச்னையை எளிதாய் திசைத்திருப்ப பார்க்கிறது .இது போரட்டத்திற்கு நல்லதல்ல ,இலக்கு இலங்கை ராணுவம் , பன்னாட்டு முதலாளிகள் , மத்திய மாநில அரசு என்று இல்லாமல் , இலக்கு வெறும் இடத்திற்காக
மட்டும் சண்டை போடும் ஈழத்து மீனவர்கள் மீது குற்றச்சாட்டை திசைதிருப்புகிறது . நம் உண்மையான எதிரி யார் என்று கண்டுகொள்ள வேண்டும் , இல்லை என்றால் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்பு உள்ளது .

Thursday 17 February 2011

ஏழு தலைமுறைகள் -உழைக்கும் மக்களின் வரலாற்று ஆவணம்


"வெள்ளை என்றால் கௌரவம் கறுப்பர் என்றால் இழிவு " என்ற சிந்தனை முறையில் இருப்பவர்கள் நாம் . தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகள் வரை இந்த வெள்ளை என்ற நிறவெறி நம்மை அறியாமலேயே நம்முள் குடிகொண்டு இருக்கின்றது . ஒரு குழந்தை பிறந்தால் கூட " நல்ல சிகப்புல " அல்லது " கருப்பா இருக்கே " என்று நம் நிறவெறியை காட்டிவிட்டு எளிதாய் கடந்து போகிறோம் .பெண் பார்க்க போகும் சிலர் "பொண்ணு கருப்பா இருந்துச்சு கலையா தான் இருந்துச்சு ஆனா வேணாம்னு சொல்லிட்டேன் கருப்பா இருக்குல்ல எப்படி கட்ட " என்று சொல்வதை கேட்டு இருக்கிறோம் . இது வெறும் நிறவெறி சார்ந்த பிரச்சனை மட்டுமா ? ஒடுக்கப்பட்ட தரம் தாழ்த்தப்பட்ட வரலாறு . வரலாறுகள் எப்பொழுதுமே வாழ்வில் வெற்றிபெற்றவனையே மையமாய் எடுத்துக்கொள்ளும் . அதற்க்கெல்லாம் சாட்டை அடி கொடுப்பது போல் எழுதப்பட்ட புதினமே "ஏழு தலைமுறைகள் ".

கறுப்பர் என்றால் இழிவல்ல , உலகில் சாலைகள் கட்டியவர்கள் , கட்டிடங்கள் கட்டியவர்கள் ஏன் உலகையே கட்டியவர்கள் அவர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் எப்படி அடிமையாய் இருந்தார்கள் , உலகின் வளர்ச்சிக்காய் அவர்கள் சுக துக்கத்தை மட்டும் இழக்கவில்லை , தன் இனத்தையே எப்படி இழந்தார்கள் என்ற வரலாற்று பின்புலத்தில் எழுதப்பட்ட புதினம் அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள் புதினம் ஆங்கிலத்தில் "ரூட்ஸ்" என்று வெளிவந்துள்ளது .


"குண்ட்டா கிண்டே " அவன் பிறப்பில் இருந்து புதினம் தொடங்குகிறது . காம்பியா என்னும் தேசத்தில் ஜப்பூர்
என்னும் ஊரில் குண்ட்டா பிறந்தான் . அவனை எப்படி வளர்த்தார்கள் , அந்த ஊரில் வளர்ப்பு முறை என்ன , சிறுவர்கள் எப்படி பள்ளிக்கு சென்றார்கள் , எப்படி ஆடு மேய்த்தார்கள் , வாலிபர்களுக்கு ஆன பயிற்சி என்ன என்று ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு கிராமத்தை கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர் . குண்ட்டா வெள்ளை அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார் .குண்ட்டா போன்ற பல ஆப்ரிக்கர்கள் கடத்தப்படுகிறார்கள் . கப்பலிலே பலர் இறக்கிறார்கள் அங்கு வெள்ளையர்கள் செய்யும் கொடுமை தாங்காமல் . வலியும் ரணமும் பொருந்திய நாட்கள் . கப்பலிலே அறையிலே கட்டிப்போடப்பட்ட குண்ட்டா தன் இனத்தையே
பார்க்கமுடியாது என்று புரிந்து கொண்டு கதறுகிறார் , மனதில் வலி அதிகமாய் உளைச்சலுக்கு உள்ளாகிறார் . கண்களை மூடினால் தன் கிராமம் , தன் தாய் தந்தை தம்பி அனைவரும் கண்ணுக்குள் நீர்களாக வழிகிறார்கள் .அவனை போன்று ஆப்ரிக்காவில் இருந்து பல அடிமைகள் அந்த கப்பலிலே இருந்தார்கள் தன் இனம் அழிக்கப்பட்டு .

அமெரிக்கா வந்தவுடன் ஒரு முதலாளியிடம் விற்கப்படுகிறார் குண்ட்டா , அதற்க்கு பின் அவர் பரம்பரை எப்படி
வாழ்ந்தார்கள் . குண்ட்டா எத்தனை முறை தப்பினார் , எத்தனை முறை மாட்டிக்கொண்டார் , உள் இருந்து கொண்டே
எப்படி போராடினார் .அவருடைய காதல் , வாழ்வு முறை , மகள் , பேரன் என்று தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்தவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்பதை ஆழ்ந்த வலி மற்றும் மௌனத்துடன் பதிவு செய்கிறது புதினம்.

தன் இனம் வரலாறு தெரியவேண்டும் என்பதற்காய் குண்ட்டா தன் பாட்டன் முப்பாட்டனின் கதைகளை
மகளுக்கு சொல்கிறார் . மகள் தன் மகனுக்கு சொல்ல , இப்படி பரம்பரை பரம்பரையாய் அவர்கள் தன் முன்னோர்களின் வாழ்க்கையை தனது அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

புதினத்தின் சிறப்பியல்பு என்றால் கடைசி தலைமுறையில் ஆசிரியர் தோன்றுகிறார் , அவரின் மூதாதையரே
குண்ட்டா ? அவரின் கதை கேட்டு குண்ட்டா பிறந்த இடத்திற்கு செல்கிறார் ஆசிரியர் . இடத்தை தேடி கண்டுபிடித்து , அம்மக்களை தன் சொந்த மக்களை பார்க்கும் பொழுது ஏற்ப்படும் சிலிர்ப்பு கண்களை நீர் வரவழைக்கும் காட்சியை கண் முன் கொண்டு வருகிறார் ஆசிரியர் .

புதினம் உண்மையிலேயே எழுத்தாளருக்கு ஏற்ப்பட்ட அனுபவம் என்பதால் அது நெகிழ்ச்சியை வரவழைக்கிறது .
தன் ஏழு தலைமுறைக்கு முன்னாள் வாழ்ந்த உறவுகளை அவர்களின் தற்பொழுதைய தலைமுறையை பார்த்த அனுபவம் மிகவும் உணர்சிகரமானது . இதை வெறும் நெகிழ்ச்சி என்று மட்டும் சிறுமை படுத்த முடியாது , ஒரு சமூகத்தின் எழுச்சி விடுதலை உணர்ச்சி என்று நம் சிந்தனைக்கு அப்பால் உணர்ச்சியின் வீரியம் எங்கோ உயரத்தில் செல்கிறது.

அமெரிக்க என்ற வெள்ளைக்கார டாலர் தேசத்தின் ரோட்கள் என் கறுப்பின மக்களால் போடப்பட்டது .
பொருளாதாரத்தில் அதை வல்லரசாய் மாற்றியது என் கறுப்பின மக்கள் . என்று புதினத்தில் இயல்பாய் அம்மக்கள்
நம் மக்கள் நம் உழைக்கும் மக்கள் என்ற மன எழுச்சி நம் மனதிற்குள் வருகிறது .

கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வேன் . படித்து முடித்தவுடன் கழிவுகள் அல்லும் மக்கள் ,
ரோடுகள் போடும் மக்கள் என்று உழைக்கும் மக்களை கவனிக்கும் பொழுது மனது கனக்கத்தான் செய்கிறது.
இப்புதினம் உழைக்கும் மக்களின் வரலாற்று ஆவணம் .

ஆங்கில மூலம் : அலெக்ஸ் ஹேலி


தெலுங்கில் இருந்து தமிழில் : ஏ.ஜி.எத்திராஜீலு

வெளியீடு : சவுத் ஏசியன் புக்ஸ்

விலை : ரூ 50


கிடைக்குமிடம்
****************
கீழைக்காற்று

10,அவுலியா சாகிபு தெரு,

எல்லீசு சாலை,

சென்னை 2.

தொலைபேசி எண் : 044-28412367

Wednesday 16 February 2011

கவின்மலருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவின்மலர் உங்களின் "பத்திரிகை துறைக்கு முன்னும் பின்னும் " என்ற கட்டுரை படித்தேன் . விருப்பப்பட்ட வேலையை தேர்ந்தெடுத்து வேலை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் . ஆனால் உங்களிடம் சில கேள்விகள் இருக்கிறது ? கட்டுரை முடிக்கும் பொழுது "Thanks To Recission " என்று எழுதிருக்கிறீர்கள்? ஒரு பிரச்னையை தன்னை மைய்யப்படுத்தி பார்க்கும் பார்வை இது . என்னுடைய நண்பர்கள் பலர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் மென்பொருள் துறையிலே இன்று வேலை செய்பவர்கள் , அவர்களை
RECISSION பாதித்தது , RECISSION சமயத்தில் தற்கொலை எல்லாம் செய்து கொண்டார்கள் என்று தினசரிகளில் செய்திகள் வந்ததுண்டு . நீங்கள் மார்க்சியம் தெரிந்தவர் , ஒரு பிரச்னையை தனிமனிதனிடம் இருந்து அணுகுவதா ? இல்லை சமூக நிலையில் இருந்து அணுகுவதா ? கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ? ஊரையே பாதித்த RECISSION உங்களை பாதிக்கவில்லை என்றால் , உங்களுக்கு மாற்றிக்கொள்ள வேறு வழி உள்ளது , மாற்றிக்கொள்ள முடியாதவர்களுக்கு ?

ஒரு விவசாயி ஒரு பண்ணையாரின் கீழ் வேலை செய்கிறான் ஆனாலும் அவன் வேலையை ரசித்து செய்கிறான்
இதில் மக்களுக்கு ஏதும் தீங்கு இல்லை , எனக்கு இலக்கியம் தான் பிடிக்கும் என்று அவன் ஓட முடியாது அவனுக்கு வேறு மாற்று இல்லை . சரி நீங்கள் பத்திரிகை துறையை தேர்வு செய்திருக்கிறீர்கள் . ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதை விட இங்கே வளைந்து கொடுத்து போவது அதிகமாய் இருக்கும் . நாடே அறிந்த கேப்பமாரியை நல்லவன் என்று எழுதச்சொல்வார்கள் ?எழுதித்தான் ஆக வேண்டும் இல்லை என்று மறுக்க முடியுமா. இங்கே சுதந்திரமாக தான் செயல்படுகிறீர்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? பொது புத்தியில் என்ன உள்ளதோ, அதை அறுவடை செய்ய வேண்டும் ,ஆள்பவர்களுக்கு முதலாளிகளுக்கு ஆதரவாய் எழுத வேண்டும் ? தான் நிற்க வேண்டும் என்பதற்காய் தன் கொள்களை விட்டுக்கொடுக்க வேண்டும் . இதற்க்கு பெயர் பிழைப்புவாதம் ,இதற்க்கு மென்பொருள் துறையில் இருப்பவர் எவ்வளவோ மேல் .

அந்த கட்டுரையில் ஒரு வரியில் "ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு யாருக்காகவோ டாட் நெட்டையும், ஏ.எஸ்.பி.யையும், ஜாவாஸ்கிரிப்டையும் படிக்க வேண்டியதில்லை" இப்படி யாருக்காகவோ என்று எழுதிருந்தீர்கள் , இப்பொழுது அதே யாருக்காகவோ எந்த முதலாளிக்காகவோ , எந்த கட்சி சார்புடனோ தானே எழுத முடியும் ,மக்களுக்காகவா எழுத முடியும்.


http://kavinmalar.blogspot.com/2011/02/blog-post.html

Monday 14 February 2011

காதல் சில கேள்விகள்


"காதலர் தினம்" நேற்று கொண்டாடப்பட்டது . நானும் காதலிலே கசிந்து உருகியது உண்டு , படங்கள் என்றால் காதல் படங்கள் கவிதை என்றால் காதல் கவிதை வாழ்க்கை என்றால் காதல் வாழ்கை மட்டுமே என்று எண்ணியதுண்டு . வாசிக்க ஆரம்பித்த காலத்தில் என் கல்லூரி வாழ்க்கையில் நான் அதிகம் விரும்பிப்படித்தது தபு சங்கர் . இலக்கிய ரசனையே இல்லாத காலத்தில் தபு சங்கர் கவிதை படித்து அகமகிழ்ந்தது உண்டு . கவிஞர் ஆனால் தபு சங்கர் போல ஆக வேண்டும் என்று எண்ணியதுண்டு . "எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் " போன்ற கவிதைகள் மனப்பாடமாய் இருந்தது உண்டு . அதை போல கவிதைகள் கிறுக்கி நண்பர்களிடம் பாராட்டு வாங்கியது நிறைய முறை . அதுவும் காதலுடன் கவிதை எழுதும் பொழுது , என்னை போன்ற இலக்கணம் தெரியாதவன் , எழுத்துபிழையுடன் எழுதுபவன் கூட கவிஞன் ஆகிறான் .

ஆட்டோகிராப் 7G போன்ற படங்கள் பார்த்து உறங்காமல் இருந்த நாட்கள் உண்டு . கணிப்பொறியில் காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்கிய நாட்கள் மிக அதிகம் . பைத்தியக்காரத்தனமாய் காதலித்து , வாழ்வை தொலைத்த , நேரத்தை வீணடித்த நாட்கள்(வருடங்களை) உண்டு . பதிவு எழுத ஆரம்பித்த பொழுது கூட , காதல் கவிதைகளும் , காதல் கதைகளும் நிறைய எழுதியது உண்டு . ஏக்கங்கள் மட்டுமே படைப்புகள் , NOSTALGIA வே சிறந்த படைப்பு என்று எண்ணிய காலங்கள் , தூக்கம் துலைத்த இரவுகள் . "வெண்ணிற இரவுகள் " புதினத்தின் வரும் கதாநாயகன் என்னை போலவே இருப்பான் என்று என்று நண்பன் சொல்ல , அதை வாங்கிவிட்டு
பாதி கூட படிக்கமால் இந்த தளத்திற்கு வெண்ணிற இரவுகள் என்று பெயர் கூட வைத்து விட்டேன் . காதலும் தனிமையும் அவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்கின .

ஆனால் இப்பொழுது பறந்து விரிந்த பார்வையுடன் காதலை அணுகும் பொழுது காதல் ஒன்று அவ்வளவு புனிதமானதாய் இல்லை என்றே சொல்லுவேன் . என் நண்பர் கேட்ட கேள்வி தான் என் காதுக்குள் ஒலிக்கிறது , ஒரு பெண் மனதுக்கு பிடித்தவளாய் இருக்கிறாள் , ஆனால் அவள் தொழில் சாதாரண தொழில் என்று வைத்துக்கொள்வோமே , நாம் அந்த பெண்ணை SIGHT கூட அடிக்கப்போவதில்லை . நடுத்தர்வர்கத்தில் இருந்து வரும் ஆண்மகனால் ஒரு பணக்காரப்பெண்ணை உற்றுப்பார்க்கலாம் ஆனால் காதல் என்று வரும்பொழுது தன்
வர்க்கத்திற்கு ஏற்ற தன் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை மட்டுமே மனத்தால் கூட நினைக்க முடிகிறது . உதாரணமாய் ஒரு நடுத்தரவர்க்க மென்பொருளில் வேலை செய்பவர் ஒரு மீனவ பெண்ணை நினைப்பது இல்்லை ஏன் பார்ப்பது கூட இல்லை . ஜாதி மறுப்பு திருமணங்கள் நடக்கிறது உண்மை ஆனால் வர்க்க மறுப்பு காதல் சாத்தியமா . இப்படி உளவியல் ரீதியாக நாம் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளோம் அப்படி
இருக்க இச்சமூகத்தில் உண்மையான காதல் எப்படி மலரும் . காதல் செய்ய ஆண் பெண் என்ற தகுதியை தாண்டி வர்கங்கள் முடிவு செய்யப்படும் காதலோ திருமணமோ உண்மையில் எப்படி இருக்கும் . நாம் ஈன்று எடுக்கும் குழந்தைகள் கூட வர்க்க பேதத்துடனே வளரும் .

என்ன டா காதலில் கூட அரசியல் பேசுகிறார்கள் என்று சிலர் சொல்லக்கூடும் . வாழ்க்கை அனைத்திலும் அரசியல்
இருக்கிறது பார்வை இருக்கிறது. நம் நண்பர்கள் , நாம் உடுத்தும் ஆடை , நம் செய்கை அனைத்திலும் அரசியல் உண்டு , அது கண்டிப்பாய் விமர்சனத்துக்கு உட்பட்டது . காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது அமரத்துவம் வாய்ந்தது ,ஆனால் இச்சமூகத்தில் காதல் உண்மையாகா தான் உள்ளதா ? காதலிப்பவர் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டுப்பாருங்கள்

Wednesday 9 February 2011

ஜூனியர் விகடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயத்தில் எப்படி கேட்டு இருக்க வேண்டும்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி ஜூனியர் விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று ஆர் கே சதீஷ் குமார் தளத்தில் ஒரு செய்தி படித்தேன் . ஊடகங்கள் மக்களிடம் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாய் இருக்கிறது அந்த சர்வே .


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா கைது செய்யப்பட்டது?

தாமதமான நடவடிக்கை...

2.ராசாவின் கைது வரும் சட்டமன்ற தேர்தலில் ...

எதிரொலிக்கும்

3.ராசா கைதுக்கு பிறகும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தொடர்வது தார்மீக ரீதியில் சரியா?
-சரியில்லை

4.ராசா கைது நடவடிக்கை பிறகு தி.மு.க -காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் இணைந்து மனம் ஒன்றி பணியாற்றுவார்களா?

--இனி நடக்க போகும் சம்பவங்களை பொறுத்து அமையும்

5.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய குடும்ப ஆதிக்கம் இருந்திருக்குமா?
-நிச்சயம் இருக்கிறது...

6.ராசாவுக்கு ஆதராவக தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் போட்டிருப்பது ,தொண்டர்களை உற்சாகபடுத்துமா,சோர்வடைய வைக்குமா?
-கலவையாக இருக்கும்

7.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கும்...
-இருக்கிறது (அதிகமானோர் இதை குறிப்பிடுகிறார்கள்)

8.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை....

அரசியல் செய்கிறது (அதிகமானோர் கருத்து)


நன்றி ஆர் கே சதீஷ் குமார்


கேள்விகள் எப்படி இருந்து இருக்க வேண்டும்

1 எதற்கு பொது சொத்துக்களை விற்க வேண்டும் ?

2 ஊழலில் ராசாவிற்க்கு மட்டும் தான் பங்கா , ஆதாயம் அடைந்த டாட்டா போன்ற முதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை .

3 நிரா ராடிய ஒலி நாடா சொல்கிறதே இந்த அமைச்சரே முதாலாளிகளின் தயவால் தான் நியமிக்கப்பட்டார் என்று , அப்படி இருக்க அவர்களுக்கு சாதகமாய் தான்
இருப்பார் என்று? இப்படி முதலாளிகள் அமைச்சர்களை முடிவு செய்தால் நம்மை யார் ஆள்கிறார்கள் .

4 இந்த ஊழலில் மக்கள் பணம் உள்ளதா ? யாருடைய பணம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது ?

5 ராஜா இல்லாமல் வேறு யாரவது அமைச்சராக இருந்திருந்தால் இந்த ஊழல் நடைபெறாது என்கிறீர்களா ?


இப்படி கேள்விகளை ஏன் விகடன் கேட்கவில்லை . தனியார்மயம் தான் ஊழலின் ஊற்றுக்கண் என்று
அவர்களுக்கு தெரியாதா ? ஊழலில் அரசியல்வாதிகள் பங்கு மட்டும் இருக்கா முதலாளிகள் பங்கு இல்லையா ?
அது விகடனுக்கு தெரியாது . ஏன் இந்த முற்ப்போக்கு முகமூடி ? மக்கள் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற கேள்வியை விட்டு விட்டு , இது தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற மொன்னையான கேள்விகளை கேட்பதன் உள்ளர்த்தம் என்ன , மறைந்திருக்கும் அரசியல் என்ன ? இந்த ஊடகங்கள் முதலாளித்துவ ஊடகங்கள் முதலாளிகளை காட்டிக்கொடுக்காது .

Wednesday 2 February 2011

பலி ஆடு - spectrum ஊழல் ராசா

ராஜா கைது செய்யப்பட்டு இருக்கிறார் . ஊழலின் ஆதாயங்கள் முதலாளிகள் பெற்றுக்கொள்ளும் பொழுது ராஜா
மட்டும் கைது செய்யப்பட்டது ஏன் ? ஆரம்பத்தில் இருந்தே ராஜா மீது ராஜாவை குறிவைத்து மட்டும் இந்த ஊழல்
வழக்கு கொண்டுசெல்லப்பட்டது . சோ போன்ற ஜாம்பவான்கள் கூட முதலாளித்துவம் தான் ஊழலின் ஊற்றுக்கண்
என்பதை எளிமையாய் மறந்துவிட்டார்கள் . சரி மக்களிடம் இவ்விடயம் எப்படி போய் சேர்ந்து இருக்கிறது , எப்படி
விடயத்தை சேர்த்து இருக்கிறார்கள் ஊடகங்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு மாதம் முன்பு எடுக்கப்பட்ட ரிப்போர்ட் . ராஜாவை மட்டும் கைது செய்து இருக்கிறார்களே ? அவர் மட்டும் குற்றவாளியா ? அதனால் புரிதலுக்கு இத்தருணத்தில் பதிவு செய்கிறேன் .



முதலில் ஒரு வயதான பெரியவரிடம் ஸ்பெக்ட்ரெம் ஊழல் என்றால் என்ன என்று
கேட்டபொழுது , சொல்வதற்கு
விருப்பம் இல்லாதவராய் கையை அசைத்தார் . அவர் உடுத்தி இருக்கும் வேட்டி
சட்டையை பார்த்தால் நடுத்தரவர்க்கம் என்று தெரிந்தது .

வயதானவருக்கு பின் அமர்ந்து இருந்த ஒரு 35 முதல் நாற்பது வயது இளைஞரை
அணுகினேன் .
விகடன் பதிப்பகத்தில் வேலை செய்பவர் , அறிவுத்துறை சாராமல் உடலுழைப்பு
செய்பவர் ,மதுரைக்காரர் . அவரிடம் கொஞ்சம் கேள்வி கேட்க வேண்டும் என்று
சொன்ன பொழுது ரொம்ப அடக்கமாய் " சரி கேளுங்க " என்றார் . "ஸ்பெக்ட்ரெம்
அலைக்கற்றை ஊழல் அத பத்தி என்ன நினைக்குறீங்க " என்றேன் , " சார் அது
தப்பு தான் சார் " என்றார் ."தப்புதான் யார் யாரெல்லாம் தப்பு
செஞ்சுருக்காங்க " என்று கேட்ட பொழுது " ராஜான்னு சொல்லிக்கிறாங்க ,
ஆனா மத்தவங்களுக்கும் தொடர்பு இருக்கும் சார் " . " மத்தவங்கனா ?" என்று
வினவிய பொழுது " காங்கிரஸ் , பெரிய தலைங்க நிறைய பேருக்கு சம்மந்தம்
இருக்கும்
சார் " . சரி "இந்த பணம் யாரோட பணம் யார்ட்ட இருக்கு " என்ற கேள்விக்கு
சட்டென " இது நம்ம பணம் தான் சார் , ஆனா அரசியல்வாதீட்ட இருக்கு சார் "
என்றார் . அப்ப வோட்டு மாத்தி போட்டா சரியாடுமா அப்புறம் ஏன் எல்லா
ஆட்சிலயும் ஊழல் நடக்குது என்று கேள்விகேட்டுவிட்டு , இதில் ஆதாயம்
அடைந்தது முதலாளிகள் என்று அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டபின் "ஆமாம்
சார் நீங்க சொன்னவுடனே தான் சார் தெரியுது " என்றார் .இது மக்களுக்கான
அரசு அல்ல முதலாளிகளுக்கான அரசு என்று சிறிது விளக்கம் கொடுத்த பின்
புரிந்து கொண்டார் ."ஏன் டாட்டா வீட்ல எல்லாம் ரைட் நடக்கல , ராஜா வீட்ல
மட்டும் நடக்குது " என்று கேட்டவுடன் பணிவாய் சிரித்தார் "தெரியலைங்க "
என்றார் .

அடுத்து 28 வயதை ஒட்டிய இருவரை சந்தித்தேன் . அதில் ஒருவர் ராமேஸ்வரம்
இன்னொருவர் கடையநல்லூர் .
கடையநல்லூரை சேர்ந்தவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் , குரூப்
ஒன்ணிற்கு தன்னை தயார் படுத்திவருகிறார் .
இன்னொருவர் TVS BPO அதில் வேலை செய்பவர் . இருவரும் மதுரையில் ஒன்றாய்
கல்லூரியில் படித்தவர்கள் .
குரூப் ஒன் படிப்பவர் ஆர்வமாய் பதில் அளித்தார் , அவருக்கு புள்ளி
விவரங்கள் எல்லாம் தெரிந்து இருந்தது .
ஆனால் பொதுபுத்தி ஏற்ப்படுத்தி இருக்கும் தாக்கங்களால் "ஊழலுக்கு
காரணம் அரசியல்வாதி தான் சார் " என்றார் .நான் எளிமையான கேள்வி கேட்டேன்
" இந்த பணம் எல்லாம் யார்ட்ட இருக்கு ,ராஜா மட்டும் சட்ட பாக்கெட்ல
போட்டுக்கிட்டார " "இல்ல நிறைய பேருக்கு பங்கு கண்டிப்பா இருக்கும் சார்
,சரிங்களா " என்றார் . புள்ளி விவரங்களை வைத்து அவருக்கு இந்த பணம்
எல்லாம் முதலாளிட்ட இருக்கு " ஏன் டாட்டா வீட்ல எல்லாம் ரைட் நடக்கல ,
ராஜா வீட்ல மட்டும் நடக்குது " . என்று கேட்டவுடன் "கண்டிப்பா நடத்தனும்
சார் " என்றார் . "நிரா ராடியா டேப் கேட்டா , அமைச்சர டாடா முடிவு
பண்றாரு எப்படி அவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்புறீங்க சார் "
என்றவுடன் சிரித்து விட்டு "பெரிய இடத்து விஷயம் சார் புரியுது , ஆனா
நாம என்ன பண்ண முடியும் " விடயத்தை புரிந்து கொண்டார் இப்படி
விரக்க்த்தியாய் பதில் சொன்னார் .

அடுத்து TVS அதில் வேலை செய்யும் அவர் நண்பரிடம் "இதெல்லாம் பற்றி
உங்களுக்கு ஐடியா இல்லையா?"
என்று கேட்ட பொழுது " எனக்கு பொலிடிக்ஸ் எல்லாம் intrest இல்ல சார் ,
தெரியாத விசயத்துல என்ன பேச "
என்றார் , நடுத்தரவர்க்கம் பார்ப்பதற்கு மாடர்ன் இளைஞர் போல இருந்தார்
."சரி இந்த ஊழலில் நீங்கள்
பாதிக்கபடவில்லைன்னு நினைக்குறீங்களா " என்று சொன்னவுடன் தோளை
குளிக்கினார் . மடைதிறந்த வெள்ளம் போல் பதில் சொல்லாமல் மணிரத்தின படம்
போல் ரத்தின சுருக்கமாய் " நோ ஐடியா " என்றார் .

அடுத்தது ஒரு இன்போசிஸ் இளைஞர் , மைசூரில் வேலை செய்கிறார் .
ஸ்பெக்ட்ரெம் ஊழல் என்று சொன்னவுடன்
மடைதிறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார் . இதுல முதலாளிகளுக்கு எல்லாம்
சம்மந்தம் இருக்கு என்றார் ஆணித்தனமாய் . கரெக்ட்டான புள்ளி விவரங்கள்
சரியான பார்வை . சரி இது எல்லாம் எப்ப மாறும்னு நினைக்கிறீங்க " என்று
கேட்டவுடன் நம்ம அரசியல் அமைப்பையே மாத்தனும் சார் , இந்த அமைப்புல
இருந்தா யார் வந்தாலும் ஊழல் தான் நடக்கும் சார் என்றார் . ஆச்சர்யமாய்
இருந்தது இன்போசிசில் வேலை , ஆனால் ஆழமான பார்வை என்று அவர் பூர்வீகத்தை
கேட்டபொழுது , அவர் ஈரோட்டுக்காரர் . விசைத்தறியில் வேலை பார்த்து
சேலை நெய்யும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் . முதலாளிகளுக்கு
கரண்ட் இலவசமாய் கொடுக்கிறார்கள் , இங்கே ஈரோட்டிலே விசைத்தறி வைத்து
இருக்கும் சிறுமுதலாளிகள் தமிழ்நாட்டில் மின்சார
பற்றாகுறையால் பாதிப்பு அடைகிறார்கள் என்றார். அவர் நண்பரின் வாழ்கையை
சொன்னார் , நண்பர் சொந்தமாய் விசைத்தறி வைத்து இருப்பவர் , முன்பு
கூலிக்கு வேறொரு இடத்தில் வேலை செய்தவர் . ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி
நேரம் வேலை செய்தால் இரு சேலைகளை நெய்ய முடியும் , ஒரு சேலைக்கு அறுபது
ருபாய் போல இரண்டு சேலைக்கு 120 ரூபாய் கூலிக்கு வேலை செய்து
கொண்டிருந்தார் நண்பர் . பின்பு கடன் வாங்கி 25000 ரூபாய்க்கு
சொந்தமாய் விசைத்தறி வாங்கி இருக்கிறார் , அப்பொழுது தமிழக சூழலில்
மின்சார பற்றாக்குறை , அதனால் இரவெல்லாம் விசைதரியை இயக்குகிறாராம்
நண்பர் , அதனால் அவர் குழந்தைகளால்
தூங்க முடியவில்லையாம் . சொல்லும் பொழுது அழுது விட்டார் . இயல்பான
மனிதர்கள் எவ்வளவு நேர்மையாய் இருக்கிறார்கள் , மென்பொருள் துறையில்
வேலை செய்தால் கூட ?முதலாளிகளால் ஈரோட்டில் ஒரு சிருமுதலாளி எப்படி
பாதிக்கபடுகிறான் , எப்படி முதலாளிகளுக்கு அரசு சலுகை அளிக்கிறது வரி
விளக்கு அவர்களுக்கு எப்படி இருக்கிறது , அதனால் பாதிக்கபடுவது யார்
என்று அழுத்தமாய் பதிவு செய்தார் நண்பர் .அவருடைய அழுத்தமான பதில் " இந்த
அரசியல் அமைப்பையே மாத்தனும் சார் "

அடுத்தது ஒரு mechaanical engineer ,திருச்சிக்காரர் ஆர்வமாய் பதில்
சொன்னார் . "இந்திய GDP அதுல ரிலையன்ஸ் கம்பெனியோட பங்கு அஞ்சு
percentage அது நமக்கு கேவலம் சார் " என்றார் . இந்த ஊழலுக்கு யார்
காரணம்னு நினைக்கிறீங்க என்று கேட்டபொழுது , "இருபது வருடங்களுக்கு
முன்னாடி வந்த தனியார்மயம் தான் " என்றார் .சுக்ராமில் இருந்து ராஜா வரை
செய்த ஊழலை பட்டியலிட்டார் .ரிலையன்ஸ் வெளிநாட்டின் கால்களை உள்நாட்டு
கால் போல காட்டி ஊழல் செய்ததை எல்லாம் அழகாக விளக்கினார் ."ஊழலுக்கு
காரணம் தனியார்மயம் " என்றார் . "இதை எல்லாம் பகிர்ந்துகொள்ள ஆட்கள்
இல்லை என்றார் " . "டாட்டாவும் மற்ற முதலாளிகளும் தான் பிரதான
குற்றவாளிகள் சார் " என்றார் .முதலாளித்துவம் தன்னை எப்படி சுரண்டுகிறது
என்று வாழ்வியல் அனுபவம் கொண்டும் விளக்கினார் . இந்த அமைப்பு மாற
வேண்டும் என்பதில் ஆணித்தனமாய் இருந்தார் .

அடுத்து பார்த்தவர் ஒரு பத்திரிகை நிருபர் , அவரிடம் ஊழலுக்கு காரணம்
யார் , யாருடைய பணம் என்று கேள்விகள் வினவிய பொழுது "முதலில் அத்தனை
கோடிகளுக்கு எத்தனை ஜீரோ என்று சொல்லுங்கள் " என்று அறிவாளித்தனமாய்
கேட்டார் . எவ்வளவு கேட்டும் கலாய்க்கும் நோக்கத்திலேயே இருந்தார் .
"சரி ஜீரோ தெரியாத
பாமரன் ஊரில் இவ்வளவு ஊழல் தேவையா ?" என்று கேட்டதற்கு பான்பராக் மென்ற
வாயுடன் " முதல எத்தன ஜீரோ சொல்லுங்க சார் " என்று ஏளனமாய் சிரித்தார் .
மனிதர் உலக நாவல் எல்லாம் படித்து இருக்கிறாராம் என்ன பிரயோஜனம் ,
உள்ளூரில் கொள்ளை அடிப்பது யார் என்று தெரியவில்லை .

அடுத்து பார்த்தது ஒரு போக்குவரத்து ஊழியர் " யார் சார் ஊழல் பண்ணல நான்
பண்றேன் நீங்க பண்றீங்க TV இருந்தாலும் ஓசி TV வாங்குறோம் , காசு
வாங்கிட்டு வோட்டு போடறோம் , அதனால இது எல்லாம் தடுக்க முடியாது சார் "
என்றார் . உடனே நான் எல்லாம் ஊழலும் ஒன்றா என்று கேட்டவுடன் , "ஆம் ஒன்று
தான் " என்றார் . "இந்த ஊழலில் ராஜா மட்டுமே குற்றவாளியா என்று
கேட்டதற்கு "அதெப்படி இதுல டாட்டா அம்பானி எல்லாருக்கும் பங்கு இருக்கு
சார் " என்றார். ஆனால் மக்களும் ஊழல் செய்கிறார்கள் என்றும் சொன்னார் .
தனியார்மயம் ஊழல் மிகுந்தது என்பதை புரிந்துகொள்ளும் அவர் அனைத்து ஊழலும்
ஒன்றானதே என்ற கருத்தையும் வைத்து இருந்தார்.

அடுத்து பார்த்தது ஒரு engineer நடுத்தர வர்க்கம் "இது எல்லாம் பெரிய
இடத்து சமாசாரம் சார் என்றார் " சரிங்க அதுல இருக்கறது நம்ம பணம் தானே
என்று சொன்னவுடன் . "அரசியல்வாதிகளுக்கு தான் சார் இதுல பங்கு இருக்கு "
என்றார் . "இதுல ஆதாயம் அடைஞ்சது யார் "என்று கேள்வி மேல் கேள்வி
போட்டவுடன் "
அதெப்படி தப்பாகும் இவங்க நினைச்சா கை எழுத்து போடாமே இருக்கலாமே
தப்பு வந்து அரசியல் வாதி மேல தான் சார் " என்றார் . அப்பா இதையெல்லாம்
சட்டமாக்கிட்டா ஏத்துக்குவீங்க பொது சொத்த யார் வேணாலும் விற்கலாம்
என்று சொன்னபொழுது " சார் அவங்களால முடியுது வாங்கறான் சட்டப்படி தானே
சார் முதலாளி வாங்குறான் " என்றார் . அவர் மனைவி கேள்வி கேட்க
ஆரம்பித்தவுடனேயே ஒதுங்கி நின்று கொண்டார் . அவர் மனைவி சைகை காட்ட
அவரை நோக்கி நடந்துகொண்டே "வரேன் சார்" என்றார் .


அடுத்து வெளியில் ஒரு ஆட்டோக்காரர் MGR படம் போட்ட ஆட்டோ . "ஊழலுக்கு
ராஜா மட்டுமே காரணமா " என்று கேட்டபொழுது இல்ல சார் "கனிமொழி தயாளு
அம்மாள் இவங்களும் தான் சார் என்றார் " . "இந்த தபா அம்மா ஆட்சி வருது ,
எல்லாருக்கும் encounter தான் சார் " என்றார் . கொஞ்சம் விளக்கமாய்
அவரிடம் இதற்க்கு காரணம்
முதலாளி தான் என்று சொன்னபொழுது அவரால் புரிந்துகொள்ள முடிந்தது .இந்த
முதலாளிகளும் அடங்க டெல்லீலா அம்மா போல யாரவுது இருக்கணும் என்றார்
ஆடோக்காரர்

அடுத்து சென்னை கடல்க்கரையில் காலன் விற்பவரிடம் . spectrum ஊழல்னு
சொல்றாங்களே அதைபத்தி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது ,
குறுக்கிட்ட அவர் மகள் "அதெல்லாம் அதுக்கு ஒன்னும் தெரியாது சார் அது
எழுத படிக்கல " என்றால் . உடனே கேள்விகளை அவளிடம் கேட்டபொழுது "
நல்லதும் செய்யரானங்க TV எல்லாம் தராங்க , ஊழலும் பண்றாங்க சார் , அவங்க
என்ன பன்றான்கனே தெரியல , ஒவ்வொருத்தரும் ஒவ்வரு மாத்ரி சொல்றாங்க சார்
". சரி "ஊழல்ல
ராஜாவுக்கு மட்டும் தான் பங்கா" என்று கேட்டபொழுது "தெரில சார் ,
அப்படி தான் சொல்றாங்க ஆனா அப்படி எப்படி இருக்க முடியும் எல்லார்க்கும்
பங்கு இருக்கும் , எப்படி அத்தன பணத்த வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்க
முடியுதுன்னு தெரியல சார் " என்றார் . சரி "இந்த கடலை வித்துடுராங்கனு
வச்சுக்குவோம் " அப்படின்னு விளக்கத்தை ஆரம்பிக்கும் பொழுது "ஏற்க்கனவே
2000 கோடி ரூபாய் கொடுத்து வித்துட்டான்கலாம் சார்
சொல்லிக்கிறாங்க ஆனா யாருக்கும் நல்லது செய்யணும்னு மனசு இல்ல சார் ".
ஊழலுக்கு தனியார்மயம் காரணம் என்று விளக்கிய பொழுது புரிந்து கொண்டார்
மேலும் " என்னமோ நாடு முன்னேரிடுசுனு சொல்றாங்க , ஏழைங்க ஏழைங்களா தான்
இருக்காங்க பணக்காரங்க பணக்காரங்களா தான் இருக்காங்க , அம்பானி பலகோடி
ரூபாய்ல வீடு கட்டி இருக்காராம் , இந்த பீச்ல எத்தன பேர் வீடில்லமா
இருக்காங்க , விலைவாசி வேற ஏறுது சார் , ஏழைங்க
என்ன பண்ணும் " என்றார் .

அடுத்து கடற்கரையில் இட்லிக்கடைக்காரர் ஆறுமுகத்திடம் கேட்டபொழுது "இதுக்கு தான்
சார் கேப்டன் வரனும் , சேலத்துல இன்னா ஜனம் சார் பாத்தீங்களா " என்றார்
வெள்ளந்தி மனிதர் . ஊழலுக்கு யார் காரணம் என்று கேட்டபொழுது " இராசா
தான் சார் " என்றார் . "நாட ஒண்டி ஆளுக்கே கொடுக்ககூடாது சார் அதனால
கேப்டன் தான் சார் வரணும் " . அவரிடம் எவ்வளவு பேசியும் முதாலளிகளுக்கு
ஊழலில் பங்கு என்று விளக்க முடியவில்லை " சார் அவங்க அவங்க வியபாரத்த
பாக்குறாங்க , இந்த அரசியல்
நாய்ங்க தான் சார் காரணம் " என்றார் அயோத்திக்குப்பத்துக்காரர் .

அடுத்து அதே கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐயப்பன்
நொச்சிக்குப்பத்துக்காரர், BHEL நிறுவனத்தில் மாதம் 7000 ரூபாய்
சம்பாதிப்பவர் . அவரிடம் ஊழலை பற்றி கேட்டப்பொழுது " ஏஏஎராஸா தான்
காரணம் சார் " என்றார் சரி அப்படியானால் டாட்டவிர்க்கு சம்பந்தம்
இல்லையா என்று கேட்டபொழுது "இன்னா சார் படிச்சவன்
மாதிரி கீரா ? ஈஎராசா தானே sign போடணும் இது தெரியமா கீரையே சார் "
என்றார் . மேலும் "போதைல பேசுறேன்னு நினைக்காத சார் இந்த அரசியல்வாதிட்ட
துட்ட புடிங்கிட்டா ? எங்க குப்பத்துல இருக்குறவங்க ஏன் இந்தியாவே
சாப்பிடலாம் சார் , அமெரிக்கால ஏன் உசந்த கட்டடமா இருக்கு , அங்க டாலர
சுத்த விடறான் சார் இங்க துட்ட பதுக்குறான் சார் " என்றார் .

"இல்லா துட்டும் ச்விச்ஸ்ல இருக்காம் சார் இவன் நினச்சா விசாரிச்சு
மக்களுக்கு தரலாம்ல சார் " என்றார் . மேலும் "அந்த துட்ட எடுத்தா ,
இந்தியா அமெரிக்காக்கு கடன் தர அளவு இருக்காம் சார் " . "துட்ட அடி
வேனம்கள , மக்களுக்கும் செய் இந்த MGR அதத்தான் பண்ணாரு , ஆனா ஏஏஏஎராஸா
அடிச்சதுல மன்மோகன் சிங் பாவம் தலைல கைய வச்சுட்டாராம் " "நான் இந்திய
டுடே படிப்பேன் சார் என்றார் ". முதலாளிகள் சட்டப்படி செய்கிறார்கள் அது
வியாபாரம் , ஆனால் கையெழுத்து போட்ட ராசா மற்ற அரசியல்வாதிகள் செய்வது
தான் தவறு என்ற கருத்தில் ஆணித்தனமாய் இருந்தார் .