Sunday 29 August 2010

இவண் இரண்டாம் பிரட்மன் சச்சின் ரசிகர் மன்றம் நேதாஜி நகர் புளியங்குளம் விளக்கு

"கிரிக்கெட் மதம் சச்சின் அதன் கடவுள் " என்பது மைதானங்களில் அடிக்கடி இருக்கும் வாசகம் . ஆம் இந்தியாவில் மின்சாரம் நுழையாத இடங்களில் கூட மட்டை பந்து நுழைந்துள்ளது . மதுரை மாநகரிலே ஒரு கிராமத்தில் சச்சின் 194 அடித்தபொழுது டிராவிட் declare செய்து விட்டார் , அப்பொழுது ஒரு சுவரொட்டி அதில் "கங்குலி கைக்கூலி திராவிடே பதவி விலகு " கீழே இவண் இரண்டாம் ப்ரட்மான் சச்சின் ரசிகர் மன்றம் புலியான்குலம்விலக்கு நேதாஜி நகர் . இப்படி தினசரி வாழ்வோடு தினசரிக்களுடன் கிரிக்கெட் மரபாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஊருக்குள் விக்கி பந்து tournament நடக்கும் பொழுது கைலிகட்டிக்கொண்டு ஒற்றைக்காலில் pad மாட்டிக்கொண்டு விளையாடும் அளவிற்கு கிரிக்கெட் கிராமங்களை கூட தொட்டு உள்ளது .

இங்கு சென்னையில் கேட்கவே தேவை இல்லை கல்லி கிரிக்கெட் பிரசித்தம் . கலைஞர் முதல் புரட்சிக்கலைஞர் பிறந்த நாள் முதற்கொண்டு கல்லி கிரிக்கெட் tournament நடக்கும் . தெருவில் இருந்து பீச்சில் இருந்து மின்ராசா ரயில் போகும் பாதைகளில் எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் விளையாட்டு கொடி கட்டி பறக்கிறது . உலகக்கோப்பை பொழுது எல்லாம் கிரிக்கெட் ஒரு தேசியத்தை எழுப்பக்கூடிய செயலாய் இருக்கும் . தேனீர் கடை முன்பு நின்று கொண்டு கடைசி ஓவரை மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்துக்கொண்டு பார்ப்பான் ரசிகன் .

இன்று பாக்கிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் மாட்டியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது . கிரிக்கெட் என்பது மதரீதியான வெறி போல் மக்களிடம் இருக்கும் சூழலில் , கொடிக்கட்டி பறக்கும் விளையாட்டு கோடிகளில் புரளும் பொழுது இது தவிர்க்க இயலாதது . இப்பொழுது இந்திய அணிக்கு கோக் sponser செய்வது என்று வைத்துக்கொண்டால் , இந்தியா ஜெயித்தால் தான் அவன் பண்டத்தை விற்க முடியும் , அப்பொழுது எதிர் அணிகளை நாடுவது , பிட்ச் மாற்றுவது , போன்ற முக்கிய வேலைகலை நிறுவனமே பார்த்துக்கொள்ளும் . இப்படி விளையாட்டு என்பதை தாண்டி வணிக பொருளாய் இருக்கும் விளையாட்டு எப்படி விளையாட்டாய் இருக்க முடியும் . இந்தியா இலங்கையில் தோற்றவுடன் , ஒரு பையன்
அழுது கொண்டிருந்தான் , சின்ன வயதில் சச்சின் அவுட் ஆனவுடன் நான் அழுதது நியாபகம் வருகிறது . அன்று எனக்கு விதர்பா விவசாயப்படுகொலைகள் எல்லாம் தெரியாது , கிரிகெட் என்பது வணிகம் என்பது தெரியாது . இப்படி தெரியாமலேயே அடுத்த தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது . விளையாட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து யார் ஜெய்க்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்கள் . ரசனையை பன்னாட்டு நிறுவனங்கள் பணமாக அறுவடை செய்கிறது . ஜெயிப்பது யார் என்று தெரியாது தோற்பது பாமர ரசிகன் .

Thursday 26 August 2010

மொக்கை

பாரதியின் பார்ப்பனீயம்
பற்றி எழுதினேன் மொக்கை என்றார்கள் .
உமாசங்கர் பற்றி
எழுதினேன் மொக்கை என்றார்கள் ...
போபால் பற்றி
அதுவும் மொக்கை .............!!!
கருத்துக்கள் தவறா
வடிவங்கள் தவறா .........!!!!
கருத்துக்கள் தவறு என்றால் விவாதிக்கலாம்
வடிவங்கள் தவறு என்றால் ...
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும்
சுரண்டல் பற்றி எழுதினேன்
மொக்கை
சொல்லும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் ........
எது மொக்கை ?????

Monday 23 August 2010

நான் மாகான் அல்ல

நான்கு ஏழை பசங்க கால்பந்து ஆக்ரோஷமா விளையாடறாங்க , ஒருவன் ஆவேசமா பீலே போல கோல் அடிக்கிறான் , அடுத்த காட்சியில் கஞ்சா அடிக்கிறாங்க அப்புறம் பீச் ஓரம் போற காதலர்கள மடக்கி பொண்ண கற்பழிக்கிறாங்க , இப்படி பண்றவங்கள தட்டி கேக்குறாரு கார்த்தி இது தான் நான் மகான் அல்ல . பார்ட்டி கலாச்சாரம் , weekend டேடிங் பப் போன்ற சமாச்சாரங்களில் ஈடுபட்டு ,பீச்சுக்கு தள்ளிட்டு வந்து உக்காந்து
தடவிக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் நல்லவங்க .ஆனா அந்த சேரி பசங்க கெட்டவங்க , அவங்க இந்தியால பணக்கார ,நடுத்தரவர்க்க மக்கள் விளையாடுற கிரிக்கெட் கூட விளயாடரதில்ல விளையாடறது கால் பந்து தான் . மேலும் அவங்களோட மாமன் ஆட்டோ ஓட்டும் ஒரு தொழிலாளி அவரு கொலை பண்ண ஸ்கெட்ச் போடுவாரு , கத்தி எல்லாம் வச்சுருப்பாரு . ஏழை மக்கள் மீது இயக்குனரோட வன்மமே இதுல தெரியுது . பொதுவா
காதலர்களுக்கு அவர்கள கூட்டிட்டு வர மேட்டுக்குடி பையனைவிட , அங்க இருக்கிற ஏழை உழைக்கும் மக்கள் , மீனவ நாண்பர்கள் தான் பாதுகாப்பு . அதுல ஒரு நண்பர் கொள்ளப்படறான் ,அவன் முஸ்லிமாக காட்டப்படரான் , இவங்க எல்லாம் இருக்கிற ஏரியா மேட்டுக்குடி மாம்பலம் மயிலாப்பூர் அல்ல அவங்க எல்லாம் இருக்கிற இடம் சைதாபேட்டை . அவங்க கலைக்கலூரியில் தான் படிக்கிறாங்க ஏன் நா மேட்டுக்குடி மக்கள் எல்லாம் நல்லவங்க
பாருங்க , அதனால தான் ஒரு கால் செண்டர்ல அத்தனை காண்டம் எடுத்தாங்களாம் ????மேலும் பீச்ல லவ் பண்றேன்னு அசிங்கம் பண்றது யாரு . நாயகன் "இவங்கள எல்லாம் சுட்டுக்கொல்லன்னும்னு " சொல்றான் கை தட்டறாங்க அடித்தட்டு மக்கள் அரசியல் புரியாம ???? இது எல்லாம் பாராட்ட "நான் மாகான் அல்ல " ,அழாகான தமிழுல எழுத தெரியாத சாமனியன் .

Friday 20 August 2010

அது சரி, முகிலனை காணவில்லை























இணையம் முழுவது புரட்சியை பற்றியே சிந்தித்து, புரட்சிக்குள்ளாகவே வாழும், புரட்சியை பாடமாக ஆன்-லைனில் நடத்தும் புரட்சிகர பேராசிரியரை காணவில்லை. கண்டுபிடிப்பவர்கள் பின்னூட்டத்தில் வந்து தெரிவிக்கவும். புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் மனித‌ இனத்தை தாங்கள் உடனடியாக வந்து காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

பி.கு. - அது சரி, முகிலன் சரியாக தெரியாதத‍ற்கு நான் காரணமில்லை. தன்னைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்து தனக்காகவே வாழ்ந்து தனது சிந்தனைகளையே மோகித்து, தனக்கு மாத்திரமே (சுயமோக) புரட்சி செய்பவர்கள் இப்படித்தான் தெரிவார்கள். இல்லை என மறுப்பவர்கள் கண்ணாடியில் பாருங்கள்.

Thursday 19 August 2010

மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன்

"மாமன் மாற்றங்களை விரும்பாத மாமன் " என்று இருபத்தி மூணாம் புலிகேசியில் ஒரு வசனம் வரும் , அப்படி இருக்கிறது பதிவர்கள் எந்திரன் பற்றி எழுதியவுடன் எதிர்வினை ஆற்றியது . மாற்றம் என்பது தவறா என்ன ????????ஒருவனுக்கு துன்பம் வருகிறது கோவிலுக்கு போகிறான் , துன்பம் தீர்கிறதா என்ன ???? கோவில் என்ன செய்கிறது மூளை சலவை செய்து அவன் துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும்வகையில் செய்கிறது ....அதனால் கோவில் சரியா என்ன .......சரி ஒருவன் TASMAC செல்கிறான் TASAMAC அதே வேலையை செய்கிறது . அப்படி தான் எந்திரன் போன்ற படங்கள் ஏற்ப்படுத்தும் தாக்கம் மக்களை மூளை சலவை செய்வதால் ,
கடுமையாக மக்களை பாதிப்பதால் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும் .சரி மக்களின் பொது புத்தி எப்படி உள்ளது NO BALL விடயம் பெரிய விடயமாய் போயிற்ரு ............பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டபொழுது தமிழனுக்கு வராத கோபம் , இனப்படுகொலை செய்த பொழுது வராத கோபம் , போபால் விட வாயு தீர்ப்பை கேட்டு வராத கோபம், எந்திரனை எதிர்த்து போட்ட பொழுது வருகிறது . இதை புரிந்து கொள்ள தோழராய்
இருப்பது அவசியம் அல்ல , சாதாரண மனநிலையில் இருந்து யோசித்தாலே போதும் . இரண்டாவது தோழர் என்ற வார்த்தையை கண்டவர்கள் கண்டவர்களுக்கும் உபயோக படுத்தகூடாது . உதாரணமாய் கொஞ்சம் உண்மையை
எழுதினால் தோழர் என்கிறார்கள் ...........தோழர் என்பது சமூகத்திற்கான வேலையை செய்பவர்கள் .........அந்த தகுதி எனக்கு வந்ததா என்பது தெரியவில்லை .. இரும்புத்திரை போன்றவர்கள் தோழர் , புரட்சி வார்த்தைகளை அவ்வளவு எளிமையாய் உபயோகம் செய்கிறார்கள் அது கொச்சையாக இல்லையா ???? எங்களை பற்றி எழுதினால் எங்களை பற்றி எழுதுங்கள் ஏன் புரட்சி தோழர் என்ற வார்த்தையை தவறாய் பிரயோகம் செய்ய வேண்டும் ....முகிலன் போன்றவர்கள் ஹிட்ஸ் பற்றி எழுதி இருந்தார்கள் . தமிளிஷ் தளத்தில் ரஜினி ,அஜித் , விஜய் படங்கள் வந்தால் தனியாய் ஒரு COLUMN ஒதுக்குவார்கள் போபால் ,ஈழ பிரச்சனைக்கு தனியாக ஒதுக்கினார்களா ????? வினவு தோழர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் ....களப்பணி செய்பவர்கள் அவர்களின் alexa ரேங்க் பாருங்கள் கேபிள் சங்கர் alexa ரேங்க் பாருங்கள் ..............எதை பற்றி எழுதும் பொழுது ஹிட்ஸ் ஆதரவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும் ............ ????நான் புலிகேசி எல்லாம் புரட்சி என்று சொல்லும் அளவில் இருந்து எல்லாம் எழுதுவதில்லை முதலில் எங்களை பக்குவபடுத்துககொள்கிறோம் , ஆனால் நீங்கள் எங்களை பார்த்து என்ன சொல்கிறீர்கள் "மாற்றங்களை விரும்பாத மாமன் " என்கிறீர்கள் .............

Tuesday 17 August 2010

உமா சங்கருக்காக ஒரு கண்டனம்













உமாசங்கர் ஒரு நேர்மையான அதிகாரி . போன ஆட்சியில் சுடுக்காட்டு கூரை ஊழலில் சிக்கியவர்களுக்கெல்லாம் MP பதவி ..............அதை சட்டம் முன் கொண்டுவந்த உமா சங்கருக்கு தண்டனை வேதனையான விடயம் .........என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்

Monday 16 August 2010

காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்



















Commen Wealth விளையாட்டுகளுக்கு ரெஹ்மான் சொம்பு தூக்கி உள்ளார் , எதிர்மறையான செய்திகளை மீடியா தவிர்க்க வேண்டும் என்ற மாபெரும் கருத்தை உதிர்த்து உள்ளார் .அதாவது ஊழல் பற்றி பேசக்கூடாது , மேலும் இந்திய இவ்வளவு ஏழ்மையாக இருக்கும் பொழுது இப்போட்டிகள் எல்லாம் தேவையா என்று யாரும் கேள்விக்கேட்க கூடாது ????? ஏழை மக்களை துரத்தி டெல்லியை அழகுப்படுத்தும் வேலையை செய்கிறார்களே அதை பற்றி யாரும் வாயை திறக்க கூடாது என்று சொல்கிறார் இந்த தேசபக்தியாளர் ????? அமெரிக்கனை நல்லவனாய் காண்பித்து அவனை வள்ளலாய் காண்பித்து இந்தியனை திருடனாய் காட்டி "this is india " என்று சொன்ன "SLUM DOG MILLIANORE " படத்தில் வராத தேசபக்தி இப்பொழுது வந்துள்ளது .ஒரு வேலை அப்படி அந்த படம் காட்டியதால் தான் ஆஸ்கார் கிடைத்ததோ .

ஒரு ஏழை தேசத்தில் மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்க படவேண்டுமா என்ன ????? இந்த மாதிரி போட்டிகள் நடத்துவதால் சாமனியன் வீட்டில் அடுப்பு எரியுமா , ஊரில் ஒரு பழமொழி உண்டு "பெருமைக்கு எருமை மேய்ப்பது " அதை போல தான் உள்ளது ???சாமனிய திரைப்பட தயாரிப்பாளர்களே அணுக முடியாத ரெஹ்மான் , எப்படி சாமனிய மக்கள் பற்றி யோசிப்பார் ??? அவர் வேலை செய்யும் படங்களை பாருங்கள் "ராவணன்" "எந்திரன்" . 180 கோடி படத்தில் வேலை செய்யும் ஆஸ்கார் நாயகன் எப்படி தெருக்கோடியில் இருப்பவனை ஆதரிப்பார் .

தண்டக்காரன்யாவில் மலை வாழ் மக்கள் துரத்தப்படும் பொழுது அவர்களை கேவலப்படுத்தும் விதமாய் வந்த "ராவணன் " படம் ரெஹ்மானுக்கு அவப்பெயராய் தெரியவில்லை ??? எத்தனையோ சிறு முதலீட்டாளர்களை அழித்து பங்கு சந்தையை கைக்குள் வைத்து இருந்த அம்பானியை கதாநாயகனாய் ஆக்கி வெளிவந்த "குரு" படத்திற்கு இசை அமைத்தது அவப்பெயராய் தெரியவில்லை .இந்தியாவை கேவலமாய் சித்தரித்த "SLUM DOG " படம் அவப்பெயராய் தெரியவில்லை???? தமிழ் மொழியில் வழக்காட முடியாது , அங்கே ஈழத்தமிழன் செத்துக்கொண்டு இருந்தபொழுது , நம் சாகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்த பட்ட பொழுது செம்மொழி மாநாடு நடந்தது அதற்க்கு
அடித்தொண்டையில் இருந்து பாடிய ரெஹ்மான் ,அது எல்லாம் அவப்பெயராய் தெரியவில்லை . ஆனால் ஊடகங்கள் COMMEN WEALTH விளையாட்டு பற்றி வெளி வந்த செய்திகளால் வருத்தப்படுகிறார் ஆஸ்கார் நாயகன் .முதலாளிகளின் குரலுக்கு பின்னணி இசை அமைக்கும் ரெஹ்மான் அடுத்த ஆஸ்கார் உங்களுக்கு தான் ,
காமன் வெல்த் முக்கியமா காமன் மேன் வெல்த் முக்கியமா ரெஹ்மான்???

Sunday 15 August 2010

சுதந்திரம்

22000 மக்களை
"சுதந்திரமாய் " பிணம் தின்ற
அன்டேர்சன் ..............!!!
நம் தண்ணீர்
எடுத்து நமக்கே "சுதந்திரமாய் "
தண்ணீர் காட்டும் கோக் .......!!!!
மலை காடுகள்
கணிமவலங்களுக்காய் "சுதந்திரமாய்"
மக்களை விரட்டும் வேதாந்தா .......!!!!
சுதந்திரம்
தரகு முதலாளிக்கு மட்டும் .........!

Saturday 14 August 2010

அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தினமாம் சொல்றைங்க .......கலைஞர் TVLA , கலைஞர் கொடுத்த டிவி ல "தமிழ் படம்" போட்ரைங்க ....... நம்ம தல சிவா நடிச்சது .......அந்த படத்த சுதந்திரமா பாக்குரோம்ல அப்பா சுதந்திர நாடு தானே ..........................!!! சரி அங்கன தண்டக்காரன்யாள வேந்தாந்தா கம்பனி சுதந்திரமா இருக்க ............பா சிதம்பரம் அண்ணாச்சி ரொம்ப பாடுபடராராம் ....ஏன் நா சுதந்திரம் முக்கியமல அதனால சுதந்திரதிற்க்காக அங்க பிரச்சனையா இருக்கிற மக்களை விரட்டி பாடுபடரைங்க ................ஆமா முதலாளி பெரிய மனுசங்க சுதந்திரமா இருக்கணும்லா .....சரி தானே ........ இப்படி பல பேர் யார் ஆட்சிக்கு வந்தாலும் சுதந்திரத்த கட்டி காப்பாதுரைங்க ??????அந்த அன்டேர்சன் பாவம்
பா போபால இருபத்தி ரெண்டைய்ரம் பேர் தான் செத்தாங்க , லட்சக்கணக்கு மக்கள் தான் பாதிக்கப்பட்டாங்க ஆனா அதுக்கு இந்த தீவிரவாதிக்க ஆவூனு குதிக்கறாங்க ,அன்டேர்சன் எப்படி சுதந்திரமா இருப்பாரு , நம்ம ராஜீவ் ஒன்னு
பான்னாரு நாம எல்லாரும் சிலுத்து போறமாதிரி ஒரு விஷயம் பண்ணாரு ..........அவர் சுதந்திரமா இருக்க சொகுசா FLIGHT ஏத்தி விட்டாரு .............எப்படி இருந்தாலும் சுதந்திரம் முக்கியமல CAPTAIN சொல்லற மாதிரி இந்த தீவிரவாதிகள ஒழிச்சா தானே நாடு உருப்படும் ..........................அப்புறம் இப்ப கூட FOXCONNLA விஷவாயு தான்பா லீக் ஆச்சு 100 பேர் மட்டுமே மயக்கம் ஆனாங்க ????????அதுக்கு போய் போஸ்டர் போராட்டம்னு இந்த தோழர்னு சொல்றவங்களே இப்படி தான் ...........இப்படி இருந்த முதலாளி எப்படி சுதந்திரமா இருக்க முடியும் ..........................................நாம தாகம் தீரனும்னா கோக் குடிக்கிறோம் ,சந்தோஷமா இருக்கோம் , உலகமே சந்தோஷமா இருக்கறப்ப ஒரு ஊரு அழிஞ்சா தப்பு இல்ல சரி தானே பிளாச்சிமடா அப்படின்னு ஒரு ஊரு பாழ் ஆயய்டுசாம் அந்த கோக் கம்பெனி வெளிய போகணுமாம் . இப்படியே இருந்தா கோக் எப்படி சுதந்திரமா தொழில் நடத்த சொல்லுங்க ???????அதுக்காக அந்த சுதந்தர்த்திர்க்காக தான் அரசாங்கம் போராடுது ,,,,,,, அரசாங்கத்த அடிச்சுக்க முடியாதுள்ள ..........

விஜய் சூர்யா எல்லாம் விளம்பரத்துல நடிக்காறாங்க , அவங்க என்ன தப்பாவா நடிப்பாங்க சொல்லுங்க ????மக்களுக்காக எவ்வளவு நடிக்கறாங்க சே பஞ்ச் எல்லாம் பெசராங்காபா ??????????அவங்க சொன்ன கோக் குடிக்கனும்ல அப்புறம் எப்படி சுதந்திர நாடுன்னு சொல்ல முடியும் , எல்லாத்துக்கும் கொடி ஆர்ப்பாட்டம் வேற வேலையே இல்ல சரிதானே ????

இந்து மதம் தெய்வீக மதம் லா ...பாவம் அந்த ஜெயந்திர சாமி ஒரு கொலை தான் பண்ணாரு .............நாம கூட கொசுவ கொல்றதில்ல சரிதானே .....ஆனா அவங்க சுதந்திரமா இருந்தா தானே நாடு நல்ல இருக்கும் அப்புறம் பார்த்தீங்கன பங்காரு பாவம் என்ன தப்பு பண்ணாரு சொல்லுங்க , நித்யா எந்த வித்யா கிடைப்பாலானு பாப்பாரு , கால் வலிக்குதுனு ரஞ்சிதா மேல கால் போட்டாரு ???? உடனே ஆ வூ நு எழுதரைங்க இப்படி இருந்தா
எப்படி ஆன்மீகத்த வளர்க்க முடியும் . அதனாலதான் இவங்க எல்லாத்தையும் வெளிய விட்டு ஆன்மீகத்த காப்பாத்துது அரசாங்கம் சரி தானே ......சுதந்திரம் முக்கியமல .........முக்கியமா இத பத்தி எழுதற வால் பையன உள்ள வைக்க பேசிக்கிறாங்களாம் ????சும்மா சும்மா சாமி தப்புங்கராறு வால் பைய்யன் ......சாமி ஒருநாள் கண் குத்த போகுது ஏன் நா சுதந்திரம் முக்கியமல ???????????சரி தானே ..........

அப்புறம் விதர்பால ரெண்டு லட்சம் விவசாயி தான் செத்தாங்க பா ?????? ஆனா மும்பைல பக்கத்து ஊர்ல IPL சுதந்திரமா விளயாடரோம்ல ???? இப்ப கூட COMMEN WEALTH கேம்ஸ் எல்லாம் விளையாடி இந்தியா வளர்ந்த நாடு ஆயக்கிட்டு இருக்கு .............என்ன பா நூறுல 95 பேர் தானே கஷ்டப்படறாங்க அஞ்சு பேர் சுதந்திரமா இருக்காங்களா ???சுதந்திரம் முக்கியமல .......அந்த 95 பேர் கஷ்டப்படமா இருக்கணும்னு மானாட மயிலாட நிகழ்ச்சி போடறாங்க wine ஷாப் இருக்கு , கிரிக்கெட் இருக்கு , கோவில் எல்லாம் திறந்து வச்சுருக்காங்க யாருக்கு என்ன விருப்பமோ அங்க போய்டா கஷ்டம் தீருது ..............இந்தியா சுதந்திர நாடு பா நம்ம நண்டு சொல்றாரு ...நம்ம சீனா அண்ணா கூட அத சொல்றாரு ..........................?????சுதந்திரமா தானே இருக்கோம்
அஞ்சு பேர் நல்லவாழனும்னா 95 பேர் செத்தா பரவா இல்ல

Thursday 12 August 2010

மகிழ்ச்சியின் தருணங்கள்

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரிடம் போபால் தீர்ப்பை பற்றி பேசி இருக்கிறார் , மேலும் உலகமயமாக்கலின் தாக்கங்களை எடுத்து சொல்லி இருக்கிறார் .அதற்க்கு இன்னொரு நண்பர் " சமூகத்துக்கு நீ என்ன பண்ண ????" என்று கேட்டு இருக்கிறார் . "உன்னால ஒன்னும் பண்ண முடியாதுள்ள , யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது இப்படி வெட்டித்தனமா பேசாம பொழப்ப பாரு " என்று இன்னொரு நண்பர் இவரை கடித்து இருக்கிறார் .இருவரின் பொழப்பு திரைத்துறை , பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் . சரி அப்படி கடித்த நண்பர் போல தான் பொது புத்தி உள்ளது , எடுத்துவுடனே பிள்ளை பெற முடியுமா என்ன ????? அந்த உதவி ஒளிப்பதிவாளர் முதலில் தரமணி கல்லூரியில் படித்து இருக்கிறார் , பின்பு இப்பொழுது ஒரு பெரிய ஒளிப்பதிவாளரிடம் உதவி ஒளிப்பதிவாளர் , பின்பு ஒரு ஐந்து வருடம் கிடைத்து ஒரு படம் கிடைக்கும் , இப்படி படிப்படியாக தானே செய்ய முடியும் .தனக்கு என்று வரும்பொழுது அக்கறையாய் செய்யும் மக்கள் , சமூகம் என்று வரும்பொழுது ஒதுங்கிக்கொள்கின்றனர்.ஒதுங்குவதற்கு சாக்காய் நம்மால் எதுவும் பண்ண முடியாது என்ன பண்ண முடியும் என்று சொல்கின்றனர் .

ஒரு குழந்தை எழுந்து நடக்கிறது தட்டு தடுமாறி விழுகிறது மறுபடியும் எழுந்து நடக்கிறது . இப்படி தான் ஒவ்வொரு செயலிலும் இருக்க முடியும் ,முதலில் படிக்கும் பொழுது புரியாது படிக்க படிக்க மட்டுமே புரியும் . முதலில் ஒரு பெண் பார்க்க மாட்டாள் மூன்று நாட்கள் நாம் பின்தொடர்ந்தால் யாரோ ஒருவன் பார்க்கிறானே என்று திரும்பி பார்ப்பாள் . மேலும் அரை கூட விழுக வாய்ப்பு உள்ளது , அதற்காய் காதாலிக்காமல் இருப்போமா
என்ன ???? ஒரு வேலைக்கு INTERVIEW செல்கிறோம் கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடுவோமா ????? ஒரு மகன் படிக்கவில்லை என்றாலும் அப்பா படிக்க வைக்கத்தான் செய்வார் . இப்படி தனித்தனியாய் நம் வாழ்க்கைக்கு போராடும் நாம் , சமூகம் என்று வரும்பொழுது "அது எல்லாம் வேலைக்கு ஆகாது வெட்டி வேல " என்று சொல்கிறோம் . மேலும் பொதுஉடைமை என்றால் "ரஷ்ய சீனா தோற்றுவிட்டதே " என்கிறோம் , ஆனால் பரிட்சையில் தோற்றுவிட்டோம் என்பதற்காய் நாம் மறுபடியும் எழுதாமல் இருக்கிறோமா என்ன ??????

சரி சமூகத்திற்கான போராட்டங்களில் இறங்க வேண்டும் என்று நினைக்கும் பலர் , அதை நடைமுறைபடுத்தும் பொழுது பாதியிலேயே வேண்டாம் இது நம்மால் முடியாது என்று விலகுகிறார்கள் . மேலும் இவரை போன்றவர்களை பார்த்தால் இது நடைமுறையில் சாத்தியம் அல்ல , என்று தனக்கு நடந்த விடயங்களை வைத்து விளக்குகிறார்கள் . இவர்களால் மட்டுமே தனக்கு நடந்ததை வைத்து சமூக சிந்தனை வேண்டாம் என்று மற்றவர்களுக்கு
விளக்க முடியும் . ஆனால் இவர்கள் குடும்பம் என்றால் , இவர்கள் வேலை என்றால் தோல்வி கண்டாலும் விடுவதில்லை . தன் தங்கையை கிண்டல் செய்யும் ஒருவனை முறைக்கும் அண்ணன் தான் , இலங்கையில் சகோதரிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பொழுதும் கூட , அதே நேரத்தில் நடந்த மட்டை பந்து விளையாட்டை அவனால் ரசிக்க முடிகிறது . தான் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் ,சமூகம் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் .

சமூக அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டிய கட்டுரை தோழர் மருதையனின் "மகிழ்ச்சியின் தருணங்கள் " சமூக செயல்களால் உந்தப்பட்டாலும், நடைமுறை படுத்தமுடியாமல் இருக்கும் தவித்து போய் இதெல்லாம் சாத்தியம் அல்ல என்று மனம் வெதும்பி பாதியிலேயே திரும்பும் மக்களுக்காய் எழுதப்பட்ட கட்டுரை . ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் உற்சாகமாய் மாற்றக்கூடிய கட்டுரை என்றே சொல்வேன் . ஒரு செய்ய முடியாத செயலை செய்து அடுத்த கட்டத்திற்கு போவது , சமூக வேலைகள் செய்யும் பொழுது தன் மனதிற்குள் ஏற்ப்படும் முரண்பாடு , குடும்பத்திற்குள் ஏற்ப்படும் முரண்பாடு இதை எல்லாம் தாண்டி தன் சொல்லிற்கும் செயலிற்கும் இடைவெளி இல்லாமல் போராடும் தருணங்களே "மகிழ்ச்சியின் தருணங்கள் " என்று சொல்வார் . "போராட்டமே மகிழ்ச்சி " என்பது காதில் ஒளித்து கொண்டே இருக்கிறது .கட்டுரையை படிக்க நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும் .
http://www.vinavu.com/2010/07/30/momemts-of-joy/

Tuesday 10 August 2010

டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை

ஏகதிபத்தியம் ஆட்சி செய்கிறது , உயிர்கள் மயிர்களை போல மதிக்கபடுகின்றன ???? போபால் விடயம் நமக்கு உரைக்கும் உண்மை என்ன . நாம் சுதந்திரம் அடையவில்லை , ஏகாதிபத்தியங்களும் உலக வங்கியும் ஆட்சி செய்கிறது இந்தியாவை , இந்நிலையில் சுதந்திர தினம் வருகிறது , நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா என்ன ????? சுதந்திரதினத்தன்று போபால் விடயத்திற்காக டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை நடைபெற போகிறது அனைவரும் வருக .மேலும் தெரிந்து கொள்ள இதை சொடுக்கவும் .

http://www.vinavu.com/2010/08/11/dow-blockade/

Thursday 5 August 2010

போபால் படுகொலையும் ஒரு விவாகரத்தும்

சம்பவம் 1 :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடக்கிறது ,ஹிந்து முறைப்படி நடக்கிறது , மனைவி இந்தியாவில் விவாகரத்து கேட்கிறாள் .திருமணம் அமெரிக்காவில் நடந்ததால் விவாகரத்து வழக்கை இந்திய நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது என்கிறார் கணவர் , ஆனால் திருமணத்தில் எப்பொழுது தாலி கட்டப்பட்டதோ அப்பொழுதே அது ஹிந்து திருமணம் என்று சொல்கிறது நீதிமன்றம் . விவாகரத்து கேட்டவர் நடிகை சுகன்யா , சரி ஒரு திருமணம் இந்திய முறைப்படி நடந்ததால் மட்டுமே இந்திய சட்டத்திற்குள் வரும் என்று நீதிமன்றம் சொல்கிறது .

சம்பவம் 2 :
1969 ஒரு நிறுவனத்திற்கு அனுமதி கேட்கிறார்கள் , அந்த நிறுவனம் வந்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் . சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் , அந்த நிறுவனம் உபயோக படுத்துவது பழைய ஆபத்தான தொழிற் நுட்பம் . சில திருகுதாளங்கள் செய்து அந்த நிறுவனம் அனுமதி வாங்குகிறது . 1975 முதல் இயங்குகிறது , பல சின்ன சின்ன விபத்துக்கள் நடக்கிறது . அந்த விடத்தால்
பிரச்சனை என்பது தெரியும் , ஆனாலும் இயங்குகிறது . சின்ன சின்ன விபத்துகளுக்கு பிறகு , நிபுணர் குழு வருகிறது , முப்பது மாற்றங்கள் செய்ய சொல்கிறது அதையும் அவர்கள் செய்யவில்லை . 1984 விட வாயு கசிகிறது ஆயிற கணக்கான பேரை விழுங்குகிறது , இந்த முதலாளித்துவம் அதன் இரைக்காக ஒரு ஊரையே சாப்பிடுகிறது . விபத்து என்று முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் கூற்று , ஆனால் அது படுகொலை .
நூறு பேரை கொலை செய்த காசாபை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று சொல்வார்கள் , வெளிநாட்டுகாரனை தண்டிக்க முடியாது என்றால் , காசபை விட்டுவிடலாமே . கசாபிற்கு ஒரு நீதி முதலாளி என்று வந்தால் ஒரு நீதியா .. ஆனால் இன்னும் போபாலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பொழுது , இருபது ஆயிரம் மக்கள் இறந்த பொழுதும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்டேர்சன் கைது செய்யப்படாமல் பத்திரபடுத்தி விமானத்தில் அனுப்பினர். இது துரோக வரலாறு .

முரண் :
ஒரு திருமணம் அமெரிக்காவில் நடந்தால் கூட இந்திய சட்டத்திற்கு உட்ப்பட்டதாம் . ஆனால் ஒரு அமெரிக்கன் இந்திய மக்களை சேரி போல உபயோகம் செய்து . கழிவு நிறுவனத்தை , கம்மியான கூலியுடன் இந்தியாவில் பெற்று . பல லட்சம் உயிரை தன் லாப நோக்கத்திற்கு கொலை செய்த அன்டேர்சன்னை விசாரிக்க கூட முடியாதாம். இதுவல்லவா முரண் . இம்முரண்ணுக்கு சட்டம் மட்டும் காரணமா . மக்கள் அதிகம் பாதிக்கபட்டாலும் அதை பற்றி எழுதாமல் "போபால் என்றால் சரோஜா தேவி சொல்கிற மாதிரி கோபால் கோபால் " என்றிருக்கிறது என்று சொல்பவர்களும் . மேலும் இந்த விடயம் மக்களிடம் செல்ல நிறைய பேரை எழுத கேட்டு இருந்தேன் அவர்கள் நன்றாய் எழுதிவிட்டனர் .அந்த நண்பர்களும் இத்தகைய முரண்களுக்கு காரணம்.

Wednesday 4 August 2010

மந்திரனும் அப்பாவி ரசிகனும்






















மந்திரன் ஒரு படம் வெளிவருதாம் , மலேசியலா தான் தமிழர்கள் அதிகம் இருக்காங்காலாம் அதனால்
அங்க தான் விழா எடுத்தாங்கலாம். இங்க ரசிகனுக ஒரே ஆர்ப்பாட்டமாம் , ஏன் நா தமிழ்நாட்டுல தலைவிதியே (தலைவிதி) இந்த சூப்பர் (தாத்தாவாம்) ச்டாராம் . வேற வேல வெட்டி இல்லாததாலா பாடல் வெளியீட்டு விழாவிற்கே CUT OUT எல்லாம் வச்சுருக்காங்க . இந்த தீபாவளிக்கு படம் வரலைனா துக்க தீபாவளி என்று போஸ்டர் வொட்டுவோம்னு மதுரை ரசிகர்கள் சொல்றாங்களாம் . ஏன் அப்படி சொல்றாங்கனா சும்மா இல்ல , தலைவர் நடிக்கற படத்துல லாபத்துல பங்கு கொடுக்கற மாதிரி சின்ன விஷயம் எல்லாம் பண்றதில்ல மாறா , தன் படத்திற்கு நூறு ரூபா ticketnaa 1000 ரூபாய்க்கு விக்க சொல்லி ரசிகர்கள குஷி படுத்தராராம் தலைவர் . ஆனா படத்துல லஞ்சத்த ஒழிக்கரது என்ன , கருப்பு பணம் பத்தி பேசறது என்ன ???? கௌண்டர் சொல்ற மாதரி ஒரே டகால்ட்டி தான் .மேலும் படம் வந்தா , இப்படி பணம் செலவழித்த பேரன்களின் தாத்தா வாழ்கன்னு பாராட்டுவிழா
அமெரிக்கால நடக்க போகுதாம் . ஏன் அமெரிக்கால தமில்நாடவிட மூன்று மடங்கு தமிழர்கள் இருக்காங்கனு ஆய்வு சொல்லுதாம்.படம் வெளிவரப்ப பால் , பீர் எல்லாம் நல்லா விற்பனை ஆகுமாம் ??? கடன் வாங்கி தண்ணி அடிக்கறவன் ஒரு மாற்றா கடன் வாங்கி படம் பார்ப்பானாம் , என்ன முன்னேற்றம் அன்னிக்கு தான் தண்ணி அடிக்கலையே . எப்பொழுதுமே பேரன் பேத்திகள் ஆட தாத்தா பாட்டி ரசிப்பாங்க . ஆனா மந்திரன் படம் வரப்ப தாத்தா பாட்டி ஆட பேரன் பேத்திகள் எல்லாம் கை தட்டறாங்க பிரபு சொல்ற மாதிரி என்ன கொடுமை சரவணன் .

Tuesday 3 August 2010

நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ????

என் பெயர் பெயாரா முக்கியம் , நான் மாவட்ட ஆட்சியாளர் இப்போ எதோ கௌரவமா இருக்கேன் , ஆனா நான் பிறந்தது ஆதி திராவிட வகுப்பு , சின்ன வயசில் இருந்து தீண்டாமை , நான் ஒரு பொண்ண காதலிச்சேன் , அந்த பொண்ணு வீட்ல எதிர்ப்பு அடிச்சு ஊர விட்டே துரத்திடாங்க . சரி IAS படிச்சேன் மாவட்ட ஆட்சியாளர் ஆனேன் , ஆனா கூட மேல் சாதி வீட்ல தண்ணி கொடுக்க யோசிப்பாங்க , இப்ப மதம் மாறினேன் , ஆனாலும் கேவலமா தான் பார்க்குறாங்க , அரசாங்கம் மதம் மாறினதால் IAS செல்லாதுன்னு சொல்லுது . மதம் மாறினா சமூகத்துல என் அந்தஸ்த்து உயர்ந்துச்சா . சில பிரபலங்கள் கேக்குறாங்க , ஜாதி இல்லாத மதங்கள்ல ஜாதி பாக்குறது தவறுன்னு , மத ரீதியா ஒதுக்கீடு கொடுக்கணும்னு . அப்படினா நாடார் ஜாதியில் இருந்து மதம் மாறினவனும், தேவரில் இருந்து மதம் மாறினவனும் , மீனவனை இருந்து மதம் மாறரவனும் ஒண்ணா ?????? எல்லாரும் கேக்கலாம் மதம் தான்
மாறியாச்சே அப்புறம் என்ன ஜாதின்னு ????? நான் ஜாதி பாக்கள சாமி ஆனா என்னைய கேவலமா தானே பாக்குறாங்க சரி தானே ????? அப்ப இட ஒதுக்கேடு வேணும்ல ????மதம் மாறிட்டேன் என்பதற்காய் நான் கேவலப்பட்டது இல்லாமல் போய்டுமா என்ன ?????இடஒதுக்கீடு தேவை ஆனா அது அனைத்து மதத்திலும் இருக்கும் தலித்துக்களுக்கு மட்டுமே .சரி மதத்தினால அந்தஸ்த்து உயர்ந்து இருக்குனு சொல்றாங்க , அது மட்டும் உண்மைனா நான் அன்னிக்கே மதம் மாறி காதலிய கை பிடுச்சு இருப்பேன்ல????

நடைமுறை என்ன , ஒரு தலித்த் மதம் மாறறாரு அதுக்காகவே சமூக அந்தஸ்த்து உதவுமா ??????அவர் BC அதற்காய் மற்ற BC அவரை சமமா நினைச்சு பொண்ணு தருவாங்களா ??? அதனால சமூக அந்தஸ்த்து உயருமா ?? இல்லைல , அதனால இடஒதுக்கீடு ஒரு அளவிற்கு வேணும்னா உபயோகப்படும் சமூக நீதி எல்லாம் அதுல இல்லை??? தர்க்காலிக தீர்வு நிரந்தர தீர்வு ஆகாது .


இப்போ உங்களுக்கு உடம்பு சரி இல்ல டாக்டர்ட போறீங்க , தல வலி தானு வச்சுக்குவோம் , டாக்டர் ஒரு மருந்து தராரு , நாமளும் சாபிட்றோம் அது தலைவலியா நிக்க வைக்குது வயத்த வலி வருத்துன்னு வச்சுக்குவோம் , அந்த மருந்து நமக்கு சேரல ??? அதனால தலைவலி நின்னுடுச்சு அப்படின்னு அந்த மருந்த உபயோகபடுத்த முடியுமா ????? அப்ப டாக்டர் எப்படி இருக்கணும் அந்த மருந்து நமக்கு சேருமா இல்லையா , அந்த தலைவலி எங்கிருந்து தோணிச்சுன்னு ஆராய்ச்சி பண்ணி தான் மருந்து கொடுக்கணும்ல , அது தானே நிரந்தர தீர்வு . எந்த ஒரு பிரச்சனைக்குமே நிரந்தர தீர்வு தான் இருக்கணும் , இல்லேன்னா எப்பவுமே தலைவலி தான் . அப்படி பார்த்தா நிரந்தர தீர்வு எப்ப வரும்னா ???புரட்சி செய்யறதுல தான் வரும் . புரட்சினா உடனே துப்பாக்கி அது இதுன்னு நினைக்க வேணாம் , ஒரு மற்றம் வரணும் . அதாவது சொத்த வச்சுதான் கிராமங்கள்ல ஜாதி நிர்ணயிக்கபடுது அந்த சொத்துடமைய ஒழிக்கறது மூலமா தான் சாதியின் வேர்கள புடுங்கலாம் . அப்புறம் அகமண முறை ஒழிக்க படனும் , யாரும் யாரையும் கல்யாணம் செய்யலாம் , அப்படி பெற்றோகள் ஜாதிக்காரர்கள் தடுத்தால் அவர்களை உள்ளே வைக்க சட்டம் போடலாம் . இப்படி நிறையா இருக்கு , அது எல்லாம் விவாதத்தின் மூலமா பல கருத்துகள கேட்கலாம்.சரி முதலாளித்துவ உற்பத்தி முறை இருக்குனு சொல்றாங்க சில முற்ப்போக்காளர்கள், ஆனா பிற்ப்போக்கா தான் இருக்காங்க மக்கள்

சரி முற்ப்போக்கு சிந்தனையாளருக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? இப்ப நான் மதம் மாறிட்டேன் , அப்புறம் நாத்திகம் ஆகறேன் . நாத்திகனா இருக்கறேன் அதுக்காக எங்க அப்பா அம்மாவெல்லாம் பள்ளில படிக்க அனுமதிசாங்களா இல்லை அவங்க குடிக்கற க்ளாஸ் நாங்க குடிக்க முடியுமா , இன்னும் கிராமத்துல ரெட்டை கப் முறை இருக்குலா ???? நாத்திகனு சொன்னா எல்லா மக்களும் எனக்கு மரியாதையை தந்துட போறாங்களா ??? ஐயா நான் ஜாதி பாக்கல ஒக்காளி ஊருக்குள்ள அப்படி பாக்குரைங்க சரி தானே . நாத்திகனுக்கு இடஒதுக்கீடு இருக்கா ???? அப்ப மதம் இருந்தா தான் ஒதுக்கீடா ???? அப்ப மதத்தை கட்டிக்காக்குதா இப்ப உள்ள இடஒதுக்கீடு , இடஒதுக்கீடு மதத்தை ஜாதியை ஒழிக்கவேண்டுமே தவிர கட்டிக்காக்க கூடாது .

Monday 2 August 2010

அது இன்னா பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா -2

நேற்று இடஒதுக்கீடு பற்றி பதிவு போட்டு இருந்தேன் .அதில் கிறுத்துவ மதத்தில் சாதி இல்லை எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் , இந்து மதத்திலே தான் சாதி உள்ளது அதனால் அவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்று சிலர் விவாதம் செய்தனர் . இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் அப்பிரிவினர் எப்படி பார்க்க படுகிறார்கள் அவர்கள் அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா என்பதை வைத்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . இப்பொழுது ஒருவன் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த தலித்தாய் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் ,மதம் மாறுகிறான் அதனால் அவன் சமூகத்தில் அந்தஸ்த்து அடைவானா ??????? என்பதற்கு இல்லை என்ற பதிலே சரியாக இருக்கும் . அப்படி மதம் மாறினால் சமூக விடுதலை அடையும் என்பது சாத்தியம் ஆனால் , இப்படி இடஒதுக்கீடு எல்லாம் தேவை இல்லை அனைவரும் மதம் மாறியே சமூக விடுதலை அடைவார்களே , ஏன் அப்படி செய்வதில்லை ஏன் என்றால் மதம் மாறினால் மட்டும் சமூக விடுதலை அடைய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாய் தெரியும் .

சரி கிறுத்துவர்களில் சாதி இல்லை என்கிறார்கள் . அப்படி என்றால் நாடார் கிறுத்துவர் , தேவர் கிறுத்துவர் எல்லாம் எங்கு இருந்து வந்தார்கள் .ஒரு தேவர் கிறுத்துவராய் மாறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் , ஒரு தலித்தும் கிறுத்துவராய் இரண்டு பெரும் கிறுத்துவர் தானே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பார்களா ???? IAS கூட படித்து இருக்கட்டுமே , தலித்த் என்ற ஒற்றை காரணம் கொண்டு பெண் தர மறுப்பார்கள் , அப்பொழுது நடைமுறையில் சாதி என்பது இருக்கிறாது. அப்படி சமூக ரீதியாய் ஒடுக்கப்படும் பொழுது ஏன் இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க கூடாது இது மேல்சாதியின் குரலை போல அல்லவா இருக்கிறது . நடைமுறையில் சமூக அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா இல்லையா என்பது தான் கேள்வி ??????அதை பொறுத்தே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தானே நியாயம் .

இந்து மதமே சாதி என்ற அமைப்பை கட்டிக்காக்கிறது என்பது பெரியார் அவர்கள் சொல்கிறார் , அப்படி ஒடுக்குமுறையை தாண்டி வரவேண்டும் என்று நினைப்பவர்களை இல்லை நீ இந்து மதத்தின் அடிமை என்று சொல்வது போல் உள்ளது இந்த இடஒதுக்கீடு . இது இந்து மதத்தை மறைமுகமாய் கட்டிக்காக்கிறது , இப்படி ஒரு அரசியல் சட்டம் இருக்க எப்படி பெரியார் அவர்களும் , பார்ப்பன எதிர்ப்பாளர்களும் குரல் கொடுக்காமல் இருந்தார்கள்
என்பது வருத்தமாய் தான் உள்ளது .அம்மையார் மதம் மாற்று தடை சட்டம் கொண்டு வந்தாரே அதை போல அல்லவா இருக்கிறது மதம் மாறக்கூடாது ,நீ இந்துக்களின் அடிமை அப்படி மாறினால் உன் IAS பட்டம் கூட செல்லாது என்று தலித்த்களின் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கும் .IAS ஆனால் என்ன ??? அடிமை அடிமை தான் என்று சொல்வது வெட்கப்பட வேண்டிய விடயம் அல்லவா??

இந்த இடஒதுக்கீடு சாதி என்பதை ஒழிக்காமல், இந்து மதம் என்பதை கட்டிக்காக்கிறது ???? இடஒதுக்கீடு ஒரு அளவிற்குஉபயோகப்படுமே அன்றி , சமூக விடுதலைக்கு இது தீர்வு அல்ல .

Sunday 1 August 2010

அது என்ன பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா ?????














அதாவது நைனா உமாசங்கர் உமாசங்கர் ஒருத்தர் இருந்தாரு அவர் ஆதி திராவிடர் இல்லைன்னு ஒரு உலக உண்மைய கண்டுபிடுசுட்டாங்க பா . அந்த அதிகாரிய தண்டிக்கனும்ல , அது தான் தருமம்ல அதனால பதவி நீக்கம் செஞ்சுட்டான்கலாம் . அதுக்கு என்ன சொல்றைங்கா நா அவரு கிறுத்துவராம் அந்த சான்றிதழ் செல்லாதுன்னு சொல்ற்ரைங்க . அது அவர் இன்னா சொல்றாரு நா , எங்க அப்பா அம்மா காதல் கல்யாணம் அம்மா கிறுத்துவர் அப்பா இந்து , சட்டப்படி நான் இந்துன்னு சொல்றாரு . சொல்றது கரக்ட்டு தானே தலிவா . ஆமாம் அரசும் என்ன பண்ணும் எதாவது சொல்லி பதவி நீக்கம் செய்யணும்ல இல்லைனா பேரன் கோவிப்பானே தாத்தா என்ன பண்ணுவாரு , ஒரு தாத்த ஸ்தானத்துல இருந்து யோசிக்கனும்ல . இப்ப பேரன் மிட்டாய் கேட்டால் தாத்தா வாங்கித்தருவார்ல , பேரனுக்கு வேலைக்காரன் பிடிக்கலைனா தாத்தா அவர நீக்கனும்ல அது தானே நியாயம் , தாத்தா அத தான் செஞ்சாரு . தமிழ் மக்கள் என்பது பேரன் பேத்தி மகன் மகள் தானே . இந்த உமா சங்கர நீக்கினதுக்கு சமூக நீதி கொண்டான் என்று தாத்தாவிற்கு பேரன்கள் பாராட்டு விழா நடத்துவாங்களாம் ஆனா எந்த சேனல் போடறது பேரன்க சேனலா அல்லது பிள்ளைங்க சேனலா அப்படின்னு போட்டில விழா கொஞ்சம் தள்ளி போயிருக்காம் .

சரி மெயின் மேட்டருக்கு வருவோம் . இந்த இட ஒதுக்கீடு பத்தி ஆ வூ நு பேசறவைங்களுக்கு ஒரு கேள்வி .??? ஏன் கிறுத்துவனா இல்ல முஸ்லிமா மாறினா இட ஒதுக்கீடு இல்லையா ???? அப்ப இட ஒதுக்கீடு மெய்யாலுமே இந்துவாவே இருக்க தான் சொல்லுதா . யாரோ ஒரு முஸ்லிம் அவருக்கு இதே மாதிரி பிரச்சன வந்தப்ப
ஆதீனத்துட்ட போய் சான்றிதழ் வாங்கினாராமே????? அப்ப நித்தி இல்ல ஜெயேந்திர சாமிட்டா உமா ஷங்கர் போய் சான்றிதழ் வாங்க சொல்லிடுவோமா ??? ஏனா ஆதி திராவிடர்னாளும் இந்து ஆதி திராவிடர்லா என்ன நான் சொல்றது ???? இடஒதுக்கீடு பேர கூட இந்து மத ஒதுக்கீடுனு மாத்திடலாம்னு நினைக்கறேன் .ஒரு பிற்படுத்த பட்டவன் முன்னேற வாய்ப்பாய் இருக்கணும் அது தானே ஒதுக்கீடு , அது என்ன கிறுத்துவனா மாறிட்டாலே அவன் முன்னேறியவனா ஆகா முடியுமா நைனா ???? இத ஏன் பெரியார் பேரன்களும் உடன் பிறப்புக்களும் கேக்க மாட்டாங்கள ?????அது என்ன பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா ?????