Saturday 1 June 2024

கருடன் == விசுவாசம் என்னும் ஊசிப்போன நிலப்பிரபுத்துவ வடை == spoiler alert

 மனித  உணர்ச்சிகளில் துரோகத்துக்கென்று தனிப்பட்ட இடமுண்டு. வேறு எந்த ஒரு உணர்ச்சியையும் விட துரோகத்தை சந்திக்காத மனிதர்களே இருக்க முடியாது. பிறந்தநாள் முதல் மனிதன் அடிக்கடி சந்திக்கும் விடயம் துரோகம். ஒன்று ஏமாறும் ஆளாக நாமிருப்போம் இல்லை நாமே ஏமாற்றும் ஆளாக இருப்போம்.   அந்த துரோகத்துக்கும்  பழிவாங்களுக்கும் சினிமாவில் ஒரு பிரதான இடமுண்டு. உலகின் ஆகச்சிறந்த திரைக்கதைகள் எல்லாமே பொறாமை உணர்ச்சி,   துரோகம்  சார்ந்தவையாக இருக்கவே வாய்ப்புகலுண்டு. 

துரோகத்தால் ஏமாற்றப்பட்டு பழிவாங்கும் கதைகளே மாஸ் சினிமா ஆகின்றன. 

இங்கு துரோகத்தை ஏமாந்ததை அப்படியே கவித்துமாக முடித்தால் உலக சினிமா அதையே அந்த ஏமாற்றப்பட்டவனின்  தரப்பிலிருந்து யாரோ பழி வாங்கினால்   அது மாஸ் சினிமா.  புரூட்டஸ், ஜூலியஸ் சீசர்  கதையும்  சுப்ரமணியபுர கஞ்சா கருப்பு கதையும் வேறு வேறல்ல.  ஏமாற்றப்பட்டு கொல்லப்படுகிறான் அழகர், பரமன்  பெண்ணின் துரோகத்தை உணர்ந்து அவளை கொலை செய்கிறான்.  அந்தக் காதலியே அழகரை  காட்டிக்கொடுக்கிறாள்.  காதல் மூலம் துரோகத்தை உணர்ந்தவர்கள் எல்லாம் அந்தப் பெண்ணின் ரத்தத்தை பரமன்  வெட்டும் போது  முகத்தில் வரும் ரத்தத்தில் தங்கள் துரோகத்தை தங்கள் ஏமாற்றப்பட்டதை ஏமாற்றியதை   கழுவிக்கொள்கிறார்கள்.        அப்படியே வெட்டிய பரமன்  தன்னுடைய  நெருங்கிய  நண்பன் காசியால் காட்டிக்கொடுக்கப்படுகிறான்.   அழகரை வீழ்த்தியது காதலென்றால், பரமனை  வீழ்த்தியது நட்பு.  அந்த நட்பும் காதலும் இணையும் புள்ளி துரோகம்.  

நெருங்கிய நட்போ, காதலோ  துரோகத்தில்  உடையும்போது நமக்குள் சொல்லமுடியாத வலியும் கண்ணீருமே  மிஞ்சும். கண்ணீர் கரைந்துவிட்ட பிறகு கூட அந்த துரோகத்தின் வலி நம் இறப்பு வரை நம்கூட வரக்கூடிய  வலி. கர்ணனை நாம் ஏன் நினைவில் வைத்திருக்கிறோம்  மஹாபாரதத்தில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட  கதாப்பாத்திரம்  கர்ணனின் பாத்திரம்  துரோகத்துக்கும். பழிவாங்களுக்கும் சினிமாவில் என்றுமே  சந்தை  மதிப்புண்டு. 

வடசென்னை,  ஆடுகளம், சுப்ரமணியபுரம் , மெட்ராஸ்  இந்தபடமெல்லாம்  ஒரே கதை தான். பொறாமை, துரோகம், கொலை, பழி வாங்கல்  இந்த ஆதரப்புள்ளிகளிலேயே இந்தக் கதைகள் நகர்வதை பார்க்கமுடியும். 

சொல்லப்போனால் கூர்ந்து கவனித்தால் இது ஒரு template clitche கதையென்று சொல்லலாம்.  அதன் சமீபத்திய பிரதி  தான் "கருடன்". 

"கருடன்" என்பதே ஒரு வைணவ குறியீடு, கருடனை பார்க்காமல் பெருமாளை பார்க்க முடியாதென்பார்கள். கருடன்  சக்திவாய்ந்தவர் என்பார்கள். இந்தப் படத்திலும் கோவிலை காப்பாற்றும் அதிகாரத்திலிருக்கும் குடும்பத்துக்கு" விசுவமாக"  இருக்கிறார்  சொக்கன் அவரே கருடன்.  இந்த விசுவாசமே  கதையின் ஆதாரப்புள்ளி. 

இந்த விசுவாசம்  என்னும் விடயமே நிலப்பிரபுத்துவ விழுமியம். அந்த விசுவாசம் என்பதே சாதிய விழுமியம்,  மேலே  இருக்கும் சாதிக்கு கீழே இருப்பவர்கள் அடிபணிவது.. இந்த கருத்தாக்கம் விசுவாசம் என்னும் வார்த்தையே  அரத பழசான விழுமியம் மற்றும் வார்த்தை.  இந்த அரசியல்ரீதியான புரிதலே படத்துடன்  ஒன்றா முடியாமல்  செய்தது.  ஒரே நேரத்தில் முற்போக்கு விடயங்களை பேசிக்கொண்டே கருடனை  ஆதரிக்கவே முடியாது  அப்படி எதோ ஒரு கோணத்தில் நமக்கு படம் பிடிக்கிறதென்றால்  நம் அரசியலை  எந்த புள்ளியில் நமக்கு  இந்தப் படம் பிடிக்கிறது என்பதை பரிசீலிக்க வேண்டும். 

இந்தப்  படம் விசுவாசத்தை கதாநாயக பிம்பத்துடன்  காட்டுகிறது, அந்த விசுவாசம் இல்லையென்றால் இத்தனை  வெட்டுகுத்துக்களே நடந்திருக்காது. யோசித்து பார்த்தால்   சொக்கன் ரொம்ப அடிமையாக இல்லாமல்  விசுவாசமாக இல்லாமல் இருந்திருந்தாலே  பாதி  விடயங்களை பாதி கொலைகளை தடுத்திருக்க முடியும். சொல்லப்போனால் கதையே நகர்ந்திருக்காது என்பது வேறு விடயம். 

80, 90 களில் இருப்பதைப்போல விசுவாசம் இப்போது உள்ளதா? தமிழகத்தில் சாதி பற்றிய புரிதல்கள் மேம்பாட்டுக்கொண்டே  இருக்கிறது. முற்போக்கு படங்கள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்கிறது. அரசியலில், இலக்கியதில் முன்பை விட  புரிதல் மேம்பட்டிருக்கிறது.  இப்போதெல்லாம் யாருமே கை கட்டி நிற்பதில்லை,   

சின்ன கௌண்டர் நடக்கும்போது குடைபிடிக்கும் வடிவேலுக்கள்  சமூகத்தில்  இல்லை. சாதிய மனநிலை  மாறிக்கொண்டிருக்கிறது,  பட்டியலின மக்கள் படிப்பதால் தான் நாங்குநேரி சம்பவமே நடந்திருக்கிறது.  

அப்படியிருக்க இப்போதும் சோறு போட்டால் விசுவமாக  இருக்கிறார் சொக்கன் என்னும் அரத பழசான   கதையை  நாம் ரசிக்கிறோமென்றால் நம் மனது update ஆகிக்கொண்டிருக்கிறது அதில் பழைய விழுமியங்களை  ரசிக்கிறோமென்றால் நம் மனது பின்னோக்கி இழுக்கப்படுகிறது தானே?

கருடன் படத்தில்  விசுவாசத்தில் தான் சொக்கன் கருணாவின் மச்சான் கையை வெட்டுகிறார். அந்தக் கையை  வெட்டுவதிலிருந்து தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. அதற்கு முன் கருணாவின் பாட்டி கொல்லப்படுகிறாள் அவளே கோவில் நிர்வாகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான்.  எதிரிகள் பிளான் செய்யும்போதே  அந்த பாட்டி அடுத்த காட்சியில் கொல்லப்படுவார் என்று தெரிகிறது.  அந்த நிர்வாகம் சொக்கனிடம்  வருகிறது. சொக்கன் முன்பே ஆதியை எச்சரித்திருந்தால்  இத்தனை பிரச்சினை வந்திருக்கவே வந்திருக்காது.  சொக்கன் கருணாவுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதனால் சில விடயங்களை ஆதியிடம் மறைக்கிறார்   அதுவே கருணாவின் மச்சான் கை உடைவதற்கு காரணமாக  இருக்கிறது. 

இத்தனைக்கும் கருணா  சொக்கனை சாதி பார்க்காமல் பழகுகிறார். அதை ஒரு காட்சியில் சொக்கன் சொல்கிறார். ஆனால் தவறென்று தெரிந்து கூட கருணாவிடம் இருக்கும் பிரச்சினைகளை சொல்லாமலே விட்டதே  படத்தின் பிரச்சினை. அதாவது இவர்கள் சொல்லும் "விசுவாசம்"  கதையின் போக்கிலேயே பல பேரை  காவு வாங்கியிருக்கிறது. கடைசியில் ஆதியாக வந்த சசிகுமாரையும்  இந்த சொக்கனின் விசுவாசமே கொல்கிறது. 

சொக்கனுக்கு தெரியும்   ஆதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறதென்று.    அந்த இடத்தில் ஆதியை போட்டுத்தள்ள   அத்தனை ஆயுதங்களை சொக்கன் பார்க்கிறார் . இருந்தாலும் ஆதியை தனியாக விட்டுவிட்டு போகிறார்.  சொக்கனின் பிரச்சினை தான் ஆதி கொலை செய்யப்படுவதற்கான  காரணம்.   சொக்கன் ஆதியிடம் உண்மையை பேசியிருந்தாலே பாதி பிரச்சினை ஏன் பிரச்சினையே வராமல் ஆதியால்  அந்தப்  பிரச்சினையை solve செய்திருக்க முடியும்.   படத்தின் காட்டப்பட்ட காட்சியின் படி   ஆதி நல்ல சிந்தனையாளராகவும்   கருணா கொஞ்சம் யோசிக்கத்தெரியாதவராகவும்    சொக்கன் அனைத்துமே தெரிந்தும்  அமைதியாக கடந்துபோவதாக  காட்டப்படுகிறது. 

சொக்கன் இரண்டு அண்ணன் போல இருப்பவருக்கும் விசுவாசமாக இருக்கிறார். ஆனால் ஆதியா கருணாவா என்று பார்த்தால்  கருணா பக்கமே நிற்பார். கருணா நிறைய தவறுகள் செய்கிறார் என்று சொக்கனுக்கு தெரியும் . சொக்கன் நல்ல அறிவாளி தான் நியாயமாக யோசிப்பவர் தான், அப்படியிருக்க ஆதியிடம்  சொக்கன்   பல உண்மைகளை பேசியிருந்தாலே  கருணாவையும் காப்பாற்றியிருக்கலாம்,  ஆதியையும்  காப்பாற்றி  இருக்கலாம்.    சொக்கனின் முட்டாள்தனத்தால்  தான் ஒரு சாம்ராஜ்யமே வீழ்கிறது . 

படத்தின்  வில்லனாக கருணா காட்டப்படுகிறார், உண்மையில் வில்லன் கருணா தானா இல்லை சொக்கனின்  விசுவாசமா?  ஆனால் படத்தில் விசுவாசமே கதாநாயக பிம்பத்துடன் காட்டப்படுகிறது.  விசுவாசமென்பது  இலவச உழைப்பு, சாதியால் ஒடுங்கி இருந்தாலும்  நிலப்பிரபுவிடம் பம்மிக்கொண்டே இருப்பது.  அது போலியானது, அரசியல்நீக்கமானது.  ஒரு நவீன சமூகத்தில் இன்னுமா "விசுவாசம" எனும்  ஊசிப்போன  வடை  ஓடுகிறதா?   அந்த விசுவாசம் "சமூக நீதி" பேசும் ஊரில் பெரிய சந்தையை வைத்திருக்கிறதென்றால்  நம் அரசியலை நாம் உரசிப்பார்க்க வேண்டும். 

சரி அந்த விசுவாசமாவது  நேர்மையானதாக இருக்கிறதா?  ஆதி, சொக்கன், கருணா மூன்று பேரையும்  வளர்த்திருக்கிறாள்  பாட்டி.  அந்த பாட்டியை கருணா  கொலை செய்கிறார். இது கடைசி காட்சிக்கு முந்தைய  காட்சியில்  சொக்கனுக்கு தெரிகிறது. கடைசி காட்சியில் அந்தப் பாட்டியை கொலை செய்தது கருணா  அண்ணன்  என்று தெரிந்த பிறகும் , அண்ணே அண்ணே  மதினியை விட்டுரு அண்ணே என்று காலில் விழுகிறார் சொக்கன்.   சொக்கனின் காதலி செங்கல் சூளையில்  அடித்து எரிக்கப்பட்டு கொண்டிருக்கிறாள். இந்தப் பக்கம்   ஆதியின் மனைவியும், குழந்தையும் கருணாவால் அடிக்கப்படுகிறார்கள்.    

ஆதியை கொன்றது  கருணா தான் என்று சொக்கனுக்கு தெரிகிறது. பாட்டியை கொன்றதும் கருணா தான். தன்  காதலியை தன் மதினியை அடிப்பது கருணா தான் என்று சொக்கனுக்கு தெரிகிறது. உடனே நியாயத்தின்  பக்கமெல்லாம் கருணா செல்லவில்லை.  வேறு வழி தெரியாமல் கருணாவை கொலை செய்கிறார் கர்ணன். அந்தக் காதலியை. மதினியை உயிரோடு விட்டிருந்தாலே சொக்கன் நியாயத்தை பேசி இருக்க மாட்டார்.  சொக்கனால்  யாரை வேண்டுமானாலும் அடிக்க முடியும், ஆனா விட்டுடுணே  விட்டுடுன்னு  சொக்கன் கதறுகிறார் இது அவர் விசுவாசம் என்று சொல்கிறார்கள். 

விசுவாசமென்றால்  பாட்டியை கொன்ற கருணாவிடம் எதற்கு கெஞ்சிக்கேட்க வேண்டும்.   கடைசியில் யாரையும் விடாமல் கருணா  கொன்றுவிடுவார் என்ற பயத்தில்தான் சொக்கன் கருணாவை கொல்கிறார்.  

இது விசுவாசம் மட்டும் தானா? உள்ளுக்குள் சாதி இல்லையா? அந்த சோறு போட்ட சாதி அதில் இருக்கும் அண்ணன்  என்ன தப்பு செய்தாலும் காதலியை கொலையே செய்ய துணிந்தாலும்   அவரிடம் கெஞ்சவேண்டுமென்பது   சாதிய கண்ணோட்டமில்லையா?  இதை வெறும் action படமாக பார்க்க முடியுமா? 

விசுவாசம் என்ற சாதிய விழுமியத்தை இயக்குநர் வைக்கிறார்.

இதெல்லாம் இயக்குநருக்கு தெரியாமல் இல்லை,  கருணாவின் வீட்டில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே தான் சொக்கன் தங்க  வைக்கப்பட்டிருக்கிறார். காட்சிகளில் காட்டுகிறார்கள்.  கருணா ஒரு காட்சியில் நாங்க சோறு போட்டோம்  அப்புறம் ஏண்டா  ஆதி குடும்பத்துக்கு உதவி செய்யற என்று கேட்கும்போது,  அதற்கு பதில்  சொல்லும் சொக்கன் அவர்கள் என்னைய குடும்பத்துல ஒருத்தனா நடத்தினாங்க என்கிறார். 

அப்படியிருக்கும் ஆதியை காவு கொடுத்து கருணா பக்கம் நிற்பதென்பது  சாதிய விசுவாசமா?  சோறு போட்ட பாட்டி  கொல்லப்படும்போது கூட  பாட்டி பக்கம் சொக்கன் நிற்கவில்லை கருணா பக்கமே நிற்கிறார்   என்று  கதை காட்டப்பட்டுள்ளது.  

திரைக்கதையை மண், பொன், பெண் என்று இயக்குநர் பிரித்திருக்கிறார். இந்த மூன்றின் மேலே வைக்கும் ஆசையே  துன்பத்துக்கு காரணம் என்பதைப்போல  கருத்தை சொல்ல வருகிறார் இயக்குநர். சினிமா எவ்வளவு மாறிவிட்டது  இன்னுமா பெண்ணை பொருளாக பார்க்கக்கூடிய சிந்தனை. அது சமூகத்தில் இல்லையா என்று  நீங்கள் கேட்கலாம், அந்த பொதுபுத்தியை எடுத்து கதை விமர்சித்திருந்தால் பரவாயில்லை  ஆனால் திரைக்கதையின் ஆதாரப்புள்ளியே  அதுதான. பொதுப்புத்தியில் ஊறிப்போன சாக்கடையான  விழுமியங்களை  இயக்குநர்  கொண்டு வந்துள்ளார்.

ஒரு பெண் உயிருடன் இருப்பவள் அல்ல அவர் பொருளைப்போன்றவள் என்னும் நிலவுடமை ஊசிப்போன இன்னொரு வடை   தான் இந்தத்திரைக்கதை..   இப்படி திரைக்கதையை  நொண்டிப்பார்த்தால்  ஊசிப்போன   வாடை   வருகிறது. 

இப்போது தனிநபர்களை வில்லனாக காட்டுவதை விட ஒரு சிஸ்டம் வில்லனாக காட்டப்படுகிறது. இப்போது jஜெய்பீம் படத்தில்  போலீஸ் கஸ்டடி கொலைகள் தான்  வில்லன். அதேபோன்று  விடுதலை விசாரணை படங்களில் கூட  இதை சொல்லமுடியும். இந்தப் பக்கம் வலதுசாரி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்   போதை  உலகத்தை  வில்லனாக வைக்கிறார். சார்பாட்ட பரம்பரை படத்திலும் இவர் தான் வில்லன் என்று சொல்ல முடியாது. மாநாடு படத்தில்  இசுலாமியரை மோசமாக சித்தரிக்கும் சிஸ்டம் வில்லன். சித்தா படத்தில் pedophile  வில்லன். goodnight படத்தில் குறட்டை வில்லன் என்று திரைக்கதைகள் மாறிக்கொண்டிருக்கிறது. 

breaking bad ,  money heist, squidd games என்று ott க்களில்  வில்லன்கள் சிஸ்டமாக உள்ளார்கள்.  பீகில் படத்தில் வில்லன்  ஸ்போர்ட்ஸ் அரசியல், துணிவு படம் லோக்கல் பேங்க் பிரச்சினைகள்  என்று கதை சொல்லல் முறை  மாறிக்கொண்டிருக்கிறது.  இப்பவும் ஹீரோ வில்லன் விசுவாசம், விவேகம் நட்பு துரோகம் என்று எத்தனை நாளைக்கு வேட்டியை  ஏற்றிக்கட்டிக்கொண்டு  [பழைய நிலப்பிரபுத்துவ விழுமியங்களை பேசிக்கொண்டிருக்க போகிறோம். 

கிராமம் என்றாலே சண்டை வெட்டு குத்து படங்கள் தானா. கிராமத்தில் சொல்லவேண்டிய கதைக்களங்கள்  இல்லவே  இல்லையா?  பாரதிராஜா காட்டாத பிரச்சினைகளா ? பாரதிராஜா படத்தில் சாதி சாதி மறுப்பு மற்றும் காதல்  பிரதான பிரச்சினைகளாக பேசப்பட்டிருக்கும், கள்ளிப்பால்  போட்டு கொலை செய்யப்படும் பெண்  சிசுக்கொலைகளுக்கு எதிராய் எடுத்த படம் தான் கருத்தம்மா? அது கிராமத்துக்கே உண்டான  தனித்துவமான  பிரச்சினை  அந்த இடத்தைப்பற்றிய ஆய்வு. 

தன் கிராமத்தில் இருக்கும் சொந்த சாதி விடயங்களை கூட விமர்சனக் கண்ணோட்டத்துடன்  எடுத்தவர் பாரதி  ராஜா.  கிராமங்களில் அழகான உணர்வுகளே இல்லையா.   நேற்று மதுரை பற்றி எழுதியிருந்த போது  நண்பர்கள்  மதுரையில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று எழுதியிருந்தார்கள், எல்லா ஊரிலும் நடப்பதைப்போல  இங்கும் சில விடயங்கள் நடக்கின்றன,   ஆனால் ஒட்டுமொத்த மதுரையும் மோசமான ஊரா?  இங்கும் எல்லா ஊர்களில் உள்ளவர்களை போல சாதி வெறியர்கள் உள்ளார்கள் , ஆனால் அவர்கள் பெரும்பான்மை  இல்லை.  

சரி இந்தப் [படத்தில் சசிகுமார் சூரிக்கு பின்னால் நிற்கிறார்.    சசிகுமார் மார்க்கெட் இருக்கும் ஹீரோ சூரி காமெடியன்  இந்த ரோலை  சூரிக்கு நெருக்கமாக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் கேட்டிருந்தால் நடித்திருப்பாரா?  ஆனால் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான் சசிகுமார் பின்னாலிருந்து அடக்கி வாசித்திருக்கிறார்.  இந்த துரோகத்தை பற்றிய படத்தில்   நடித்தவர் சசிகுமார் மதுரைக்காரர் தானே?    

மதுரைக்காரர்கள் பற்றி அமீர் பிரச்சினையின் போது  கரு பழனியப்பன் சொல்வார் . அமிருக்காக  அப்போதே கூட  இருந்தவர் சசிகுமார் சசிகுமார் உதவி இயக்குநர் தான். பருத்தி வீரன் படத்துக்கு சசிகுமார் அன்றே  அமீருக்கு ஒரு கோடி கொடுத்துள்ளார்.    அது அண்ணன் தம்பி போன்ற நட்பு தான், அமீர்சொந்த மதமா  இல்லை சசிகுமார் சாதியா? அமீர்  சிவகுமார், சூர்யா பழக்கத்துக்காக  அந்தப் பக்கம் இந்தப் பக்கம்  கடன் வாங்கி பருத்தி வீரனை முடித்திருக்கிறார் அவரும் மதுரைக்காரர்.     

எனக்குத் தெரிந்து சாதி பார்க்காமல் அண்ணன் தம்பியாக  பழகும் மதுரைக்காரர்களை  நிறைய பேர்  எனக்குத்தெரியும். இது துரோகத்தின் ஊருமல்ல,, சாதியின் ஊருமல்ல. இங்கும் சாதி பிரச்சினை தலைவிரித்தாடும்  இடங்கள் உண்டு . ஆனால் முற்போக்கு சக்திகளும் உண்டு.   தனிப்பட்ட முறையில் மதுரையில் மட்டுமே  இதெல்லாம் நடக்கிறதா, அதென்ன இழுத்து இழுத்து பேசினால் மதுரை மொழி என்று  யார்  சொன்னது. வெறும் போறாய்ங்க வராய்ங்க இழுத்து இழுத்து பேசுவது மட்டுமே மதுரை மொழியா? இங்கு  ஆடை என்று எடுக்கும்போது கூட  இங்கு யாரும் pant shirt கூட போடுவதில்லை என்று template மதுரையை  காட்டுகிறார்கள்.   என்றாவது ஒருநாள் ஒரு நல்ல மதுரை படத்தை பார்ப்பேன் என்னும் நம்பிக்கை உள்ளது.

"கருடன்" திரையரங்கில் பெரிய opening, வெற்றிப்படம்   ஆனால் அதில் சொல்லப்பட்டதெல்லாம் சரியா?  சண்டை காட்சிகளை  விடுத்து கதையை நோண்டினாலே அத்த்னை ஓட்டைகள், இன்னொருபக்கம்  அரசியலாக  பார்த்தால் கூட ஊசிப்போன வடையாகவே இருக்கிறது,  மண், பொன்னுடம் பெண்ணை ஒப்பிட  முடியுமா?  ஒரு male gaze  என்ற வார்த்தையை தீபா லட்சுமி தோழர் சொல்வார் அப்படி ஒரு male gaze  மோசமான விடயங்களை   கதாநாயக பிம்பத்துடன் காட்டும்படம்  தான்  "கருடன்"

கடைசியாக  கருடன் , நியாயமில்லை என்றால் சமன்படுத்திவிடும்  என்கிறார்,  அப்படியென்றால் இதற்கு சூத்திரதாரி யான அமைச்சர் உயிருடன் தான் இருக்கிறார். நல்லவர்கள் குடும்பமே நாசமாக்கிருக்கிறதே   அதெல்லாம்  கருடன் கணக்கில் சேராதா?  கருடன் என்ற குறியீடு கூட பலம் பொருந்தியவன், பெருமாளுக்கு பக்கத்திலிருக்கும் பலசாலி  என்னும் வைணவ குறியீடாகவே காட்டப்பட்டிருக்கிறதோ?   இந்த கருடனும்  கோவில்  அதன் நிர்வாகத்தை பார்ப்பவராகவே பலசாலியாகவே இருக்கிறார் அல்லவா?    மொத்தத்தில்  கருடன்  பிற்போக்கின்  கண்ணாடி.



Friday 31 May 2024

MAD COMPANY == தனிமையை நிரப்பும் வியாபாரம் == SPOILER ALERT

 முதலாளித்துவம் வேர்களை பிடுங்கி எரிகிறது.  பணத்தேவைக்கு நம்மை வெளியூருக்கு அடித்து துரத்துகிறது.  நண்பர்களை  வெவ்வேறு சமூக அடுக்குகளில் நிறுத்துகிறது.  ஒன்றாக இருந்த நண்பர்கள் வர்க்கமாக உடைந்து கொண்டே இருக்கிறார்கள் .  கூட்டுகுடும்பங்கள் தனிகுடும்பாகிறது. அண்ணனுக்கு வேலை சென்னை என்றால் தம்பி மதுரை இன்னொரு தம்பி சிங்கப்பூர் என்று குடும்பங்கள் இயல்பிலேயே தனித்தனியாகிறது.    அது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து  கணவன் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் என்று பொருளாதாரம் தேவைகள் எந்த உறவையும்  மாற்றிக்கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் எந்த உறவையும்விட   பொருளாதாரமே முக்கியமானதாக்குகிறது. 

அந்தப் பொருளாதாரம் தனிப்பட்ட உறவுகளை நட்பை, காதலை, திருமணத்தை, உறவுகளை, குடும்பம் என்னும் அமைப்பை அனைத்தையும் மாற்றுகிறது. ஒரு காலத்தில் புனிதமென்றல்லாம்  பார்க்கப்பட்ட உறவு, நட்பு, காதலெல்லாம்  இந்த முதலாளித்துவ தாக்குதல்களால் செயலிழந்து விட்டன. ஈரமிருக்கும் இடங்களில் எல்லாம்   காய்ந்திருக்கிறது.  நம் மனதளவில்  ஈரமே இல்லாத வறண்ட  மனதுடைவராக மாற்றுகிறது முதலாளித்துவம். 

கொஞ்ச நாட்களுக்கு முன்னே "பர்ஹானா " என்றொரு படம் தனிமையில் இருப்பவர்கள் பேசுவதற்கு  ஒரு கம்பெனி  அந்த முகத்தை மறைத்துக்கொண்டு பேசும் நபரைப்பற்றி நமக்கு எந்த தகவலும் இருக்காது, ஆனால்   அந்தத்தனிமைக்கு   ஒரு உறவைபோல போனில் பேசுவதைப்போல ஒரு நிறுவனத்தில்  நாயகி  வேலை  செய்வார்.  அதாவது emotional service என்று சொல்கிறார்கள், அந்த service கொடுக்கும் நிறுவனத்தைப்பற்றி   பர்ஹானா  பேசியிருக்கும். 80 களில்  இப்படி ஒரு கதை சொல்லியிருந்தால் இது எல்லாம்  கதையா என்று சிரித்திருப்பார்கள் சொல்லப்போனால் இப்படி ஒரு சிந்தனைப்போக்கே இயக்குனர்களுக்கு   வந்திருக்காது. 

ஒரு கலை ஏன்  ஒரு கற்பனைகூட    சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்குமல்லவா. பர்ஹானா  படத்தில் போன்  கால்   மூலமாக  emotional service செய்வார்கள்.    அப்படியொரு கதையே "தனிமையை" விலை பொருளாக விளைவிக்கும்  சமூகத்தில் தானே உற்பத்தி செய்ய முடியும் .  அப்படி ஒரு வெப் சீரிஸ்  தான் "MAD  COMPANY ".

ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நடிகர் ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்.  நிறுவனத்தின் நோக்கம் emotional service.  அம்மா, அப்பா, மனைவி, காதலி. மகள் என்று மக்கள் தேவைக்காக  நடிக்க வேண்டும்  அதற்கொரு application.   அந்த நிறுவனம் நடத்தும் போது ஏற்படும் சிக்கல்கள்,  நடிப்பு பற்றிய உரையாடல்,   ஒவ்வொரு கதைக்கு பின்னால் இருக்கும் emotional தேவைகள்  என்று புதிய கதைக்களம்.   தமிழில் crime, அரசியல் என்று   அரைத்த  மாவையே அரைக்காமல்  புதிய கண்ணோட்டத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

எத்தனை விதமான emotion  தேவைகள் உண்டு என்பதை  நல்ல விறுவிறுப்பாக சுவாரசியமாக கொடுத்திருக்கிறார்கள்.   அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.  இந்தக் கதையை விட இந்தக் கதை   உருவான  சமூக பொருளாதார தேவைகளே இந்தக் கதையை முக்கியமான கதையாக மாற்றியிருக்கிறது, குறைந்தபட்சம்  எனக்கு அப்படி ஒரு நவீன கதையாக உளவியல் ரீதியான கதையாகத் தோன்றியது.  

இருந்தாலும் வந்தது ஆஹா ott ,  பிரசன்னா எல்லாம் தமிழக மக்கள் மனதில் பெரிய ஸ்டார் இல்லை என்பதிலேயே   கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சீரிஸ் என்று தோன்றியது. தமிழிலும் புதிய கதை சொல்லல்களும்,  புதிய களங்களுடன் வரும் கதைகளும் இருக்கவே செய்கிறது. மார்க்கெட் பெரிதாக இல்லாததால்  கண்டுகொள்ளப்படாமல் போவதால் மறுபடியம் அரைத்த மாவுக்கு வந்துவிடுகிறோம். 

2024  இல் சட்டென்று யாரிடமாவது பேசவேண்டுமென்று போனை நோண்டுகிறோம்,   போன் பேச முடியாதவர்கள்  whatsapp மட்டும் பண்ணுங்கள் கொஞ்சம் பிஸி என்று சொல்லிவிட்டால்,  ஆவேஷம்  பகத் பாசில்  போல ஆகிறோம். கடைசியில் உணர்ச்சிகளை சினிமா, நாவலில் தேடிக்கொண்டிருக்கிறோம். கடைசியில்  உணர்ச்சிகளுக்கு OTT  யில்  சரணடைகிறோம்.  

ஏன் மஞ்சுமல் பாய்ஸ் படம் ஓடுகிறது,  அப்படி ஒரு நட்பு 2024 இல் இருக்க வாய்ப்பில்லை. முதலாளித்துவத்தில் உணர்ச்சிகளே  உணர்வுகளே  fantasy ஆகிவிட்டது.  அதனால் அப்படி ஒரு நட்பை திரையில் பார்த்தவுடன் இல்லாத ஒன்றை  பார்த்தால்  ஓரு உணர்ச்சி பீறிடும் அல்லவா அது திரையரங்கில் ஏற்பட்டது , முன்பெல்லாம்   

பாட்ஷா படம் போல படம் பார்த்தால் தான் goose bumbs  வரும், இப்போது எல்லாம் எளிய உணர்ச்சிகளை  எதார்த்த  உணர்ச்சிகளை காட்டினால்  கல்லா காட்டுகிறது இயல்பில்  நம் வாழ்வில் வெற்றிடத்தை  சினிமா,  ott  இவை நிரப்புகின்றன.

சொல்லப்போனால் இது தான் "mad company ". உணர்ச்சிகள் இல்லாத இடத்தையெல்லாம் சினிமா ott மூலம்  நிரப்புவது. அப்படி சிலருக்கு குடி mad company ஆகிறது, சிலருக்கு  இளையராஜா இசை mad company ஆகிறது. 

இந்த mad company என்பதே metaphor தான்.  நிஜத்தில் தேட முடியாததை virutual ஆகத் தேடுவது mad company  சொல்லப்போனால்  facebook writeup கூட mad company யாக இருக்கலாம்.



Thursday 30 May 2024

வார்த்தைக்கு நடுவில் 

இருக்கும் இடைவெளியில் 

எழுதப்படாத வார்த்தைகள் 

ஒளிந்துகொள்கின்றன, ....!

ஒவ்வொரு வார்த்தையும் 

இன்னொரு வார்த்தையுடன் 

பிரிந்தே இருக்கிறது. 

ஒவ்வொரு எழுத்தும்  

இன்னொரு எழுத்துடன் பிரிந்தே 

இருக்கிறது.........

பிரசித்திப்பெற்ற  

புதினத்தை படித்துமுடித்த 

பின் மூடியே வைக்கப்படுகிறது.........

நனைத்துவிட்ட 

அருவி ......முதுகுத்தண்டிலோ 

தலையிலோ தங்குவதில்லை....

சிலரின் 

நினைவுத்துளிகள்  மட்டும் 

துடைக்கப்படாத துளியாக


 

Monday 20 May 2024

HOTSPOT == Tamil Movie Review == Spoiler Alert

 நான்கு கதைகள் நான்குமே அரசியல் பேச  முற்பட்டிருக்கிறது.  சமூகத்துக்கு தொடர்பே இல்லாத  கதைகளை விட ஏதோ ஒரு விதத்தில்  சமூகத்துக்கு தொடர்பான கதைகளை அரசியல் கண்ணோட்டத்துடன்   சொல்லியதற்கு  முதலில் வாழ்த்துகள். நான்கில் மூன்று கதைகள் சமகால ஆண், பெண் உறவுச் சிக்கல்களையும்,   ஒரு கதை குழந்தைகள்  சார்ந்த கதையாகவும் உள்ளது.  இந்த நான்கு கதைகளையும் ஒரு உதவி இயக்குநர் தயாரிப்பாளருக்கு சொல்வதைப்போல, அந்த தயாரிப்பாளரின் வாழ்வுடன் ஒத்துவருவதாகவும்   காட்டி  இணைத்தது, இயக்குநரின் திரைக்கதை யுக்தியை க் காட்டுகிறது.  

"Fame Game "  என்ற குழந்தைகளை மையமாக வைத்தெடுக்கப்பட்ட கதை எனக்குப் பிடித்திருந்தது. airtel super singer மாதிரி நிகழ்வுகளில் குழந்தைகள் காதல் பாடல்கள் எல்லாம் பாடும்போது எரிச்சல் வரும். குழந்தைகளை  வைத்து இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கோபம் வரும். குழந்தைகளை வைத்து வேலை வாங்குவது  சட்டப்படி குற்றமென்றால், அதை வைத்து பிசினஸ் செய்யும் தொலைக்காட்சிகள் தண்டிக்கவே பட்டதில்லையே. சொல்லப்போனால்  அனைத்து சேனல்களிலும் குழந்தைகளை மையப்படுத்தும் நிகழ்ச்சிகள்  இருந்துகொண்டு  தான் இருக்கிறது. சரி மணிரத்தினம் "கடல்" என்ற படமெடுக்கும் போது அந்த நாயகிக்கு 15  வயதாம்,    இந்த சினிமாக்காரர்கள் தான் நுட்பமான  உணர்வு  கொண்டவர்களாம். "Ethics " என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள். 

குழந்தைகளை இந்த  மாதிரி நிகழ்வுகள் காவு வாங்குகிறது. கலாச்சார ரீதியாக போலியான மீடியாவுக்கு  இந்தக்  குழந்தைகள்  expose ஆகிறார்கள். மீடியாவுக்கு போன குழந்தையுடன் உரையாடினால் அந்தக்  குழந்தை  எவ்வளவு போலியானதாக மாறியிருக்கிறது என்பதை உணர முடியும்.  சிறுவயதில் சம்பாதிப்பதைத்  தாண்டி போலியாக பிழைப்புவாதியாக எப்படி மாறவேண்டும் என்பதையும் குழந்தை  கற்றுக்கொள்கிறது.  அந்தப் போலித்தனங்களை இந்த "Fame Game " கதை விமர்சனபூர்வமாக  காட்டுகிறது. 

பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் விதத்தில் இது ஆகச்சிறப்பான கதை மாற்றுக்கருத்து இல்லை  ஆனால் பிரச்சினையை  சரியான முறையில் பேசுகிறதா?  நாயகனான கலையரசனுக்கு அவர் பெண்  "எம் ஜி  ஆர் "  ஆக   நடிக்கும் போது பிரச்சினை இல்லை "ரகுவரனாக " நடிக்கும்போது பிரச்சினை இல்லை.  அந்த  மீடியா  எல்லாம்  ஆரம்பத்தில் அந்த நாயகனுக்கு பிரச்சினை இல்லை தான். எப்போது பாலுணர்ச்சி  தூண்டும்படி 

ஸ்கிரிப்ட்டில்  அந்தச் சிறுமி   நடிக்கும்போதே தந்தையாகிய  கலையரசனுக்கு பிரச்சினை என்று தோன்றுகிறது.     

கடைசியாக  அந்தச் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள்.  கதையில்  அந்தச்  சிறுமி பாலியல் ரீதியாக கொல்லப்படவில்லை என்றாலோ,   சிறுமி இரட்டை அர்த்த ஸ்கிட்ட்டில்  நடிக்கவில்லை  என்றாலோ கலையரசனுக்கு கோபமே வந்திருக்காது.   வன்புணர்வுப்பட்டால் தான்  இரட்டை அர்த்தம்  பேசுவது மட்டும் இங்கு பிரச்சினையா?  சிறுவயதிலேயே பெரியவர்கள் போல  குழந்தைகள்  உணர்வு   மாற்றப்படுகிறதே, ஒரு நூறு பேர் கை தட்டுவார்கள் என்பதற்க்காக அந்தக் குழந்தைகளின்   மனநலன்   பாதிக்கப்படுமே அது எல்லாம் பரவாயில்லையா?  

சித்தார்த் நடித்த "Escaype Live " என்றொரு தொடர் உண்டு. அதில் இதே மாதிரி ஒரு பிரபலக்  குழந்தையின் கதை அதில் அந்த குழந்தையின் குணாதிசயம்  சம்பளம்  ஏற  ஏற மாறிக்கொண்டிருப்பதை காட்டியிருப்பார்கள்.  அப்படிக் காட்டியிருந்தால் இது பல குழந்தைகளின் கதையாக மாறியிருக்கும். அங்கு  ஒரு  வன்புணர்வு வந்ததால் தான் பிரச்சினை என்று காட்டும்போது கதை மீடியா குழந்தைகளை abuse  செய்வதை   நோக்கி போகிறதா? இல்லை  குழந்தை abuse உடன் சுருங்கிக்கொள்கிறதா?

இந்தக் கதையை பார்க்கும் பெற்றோர் , child abuse எங்கில்லை ? நாம் good touch bad touch  சொல்லிக்கொடுத்தால்  போதுமானது, மற்றபடி பிரபலமாக இருப்பது, சிறுவயதிலேயே சம்பாதித்து புகழ் வெளிச்சத்தில்  இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குழந்தைகளின் விழுமியங்கள் வீழ்ச்சி  அடைவதெல்லாம்   முக்கியமில்லை என்றாகிவிடுமல்லவா?  இங்கு வன்புணர்வு வலிந்து திணிக்கப்பட்டதாக  உள்ளது.  ஏன் மீடியாவில் மட்டும் தான் குழந்தைகள் abuse செய்யப்படுகிறார்களா? வீட்டில் சித்தப்பா, பெரியப்பா  மாமா ஏன் சொந்த அப்பா என்று abuse கள் அதிகமிருப்பது வீட்டில் தான். அந்த குழந்தையின்  மரணம்    கதை சொல்ல நினைத்ததை மடை மாற்றுகிறது.  அரசியலை இன்னும் கூர்மையாக  பேசவில்லை . 

இருந்தாலும் ஒரு விவாதத்தைத் தூண்டும் கதை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  

காலம்காலமாக திருமணமாகிவிட்டால்  பெண்கள் ஆண் வீட்டுக்கு வருகிறார்கள்.  இது சாதாரண  விடயமாக    

ஆண்களுக்குத் தோன்றலாம், ஆனால் பெண்ணின் கண்ணோட்டத்தில் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி  வேறொரு  தொடர்பே இல்லாத இடத்தில் ஊன்றுவதைப்போன்றது.  அதைப் பற்றி பேசுகிறது "Happy Married Life". ஆண்கள் தாலி கட்டிக்கொள்ள வேண்டும்,  பெண் வீட்டுல் ஒரு மாதமும் ஆண் வீட்டில் ஒரு மாதமும்   இருக்கவேண்டும்  என்று தீர்வை  இயக்குநர்  சொல்கிறார். 

இங்கு ஆண், பெண் உறவில் அவர்கள் வீட்டில் இவர்கள் இருப்பதும், இவர்கள் வீட்டில் அவர் இருப்பதும் மட்டும் பிரச்சினை  அல்ல. ஒரு அம்மா மகனைக் கையாள்வதற்கும்  மகளைக் கையாள்வதற்குமே  நிறைய வித்யாசங்கள் உண்டு தானே. நிலப்பிரபுத்துவ அம்மா தன் மகளை அடிமையாகவும், மருமகனை ராஜகுமாரன் போலவும் நடத்தலாம் அல்லவா?   பெண்ணடிமை  எங்கிருந்து தொடங்குகிறது,  தாய் வழிச்  சமூகமாக  இருந்தபோது  கூட்டமாக இருப்பார்கள், யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் உறவு  வைத்துக்கொள்வார்கள். அந்தக் கூட்டத்துக்கு தலைவி  ஒரு பெண் தான்.   

என்று சொத்துடமை  சமூகம் வருகிறதோ,   அங்கு  இது என் குழந்தை என் விந்துக்களில் பிறந்த குழந்தை   என்றாகிறது.  எப்படி இது என் சொத்து போல, இது என் மனைவி என்றாகிறது. சொட்டுடமையின்  அங்கமாகிறாள்   பெண். ஆணாதிக்கத்தின்  ஊற்றே   சொத்துடமை தான்.  இங்கு மனைவி  மட்டுமே  கருத்தரிக்கிறாள்,   அப்போதே கணவனின் சொத்தாகிறாள்,  அந்த ஆதிகமான மனநிலை எங்கிருந்து கணவனுக்கு  வருகிறதென்றால், சொத்துடமை மூலம் கட்டப்பட்ட குடும்பம் என்ற அமைப்பினுள்  தான்.

"குடும்பம்" என்னும் அமைப்பே சொத்துடமை  அமைப்பு தான்,  இறந்த பிறகு வாரிசு வேண்டாமா என்பதே சொத்துக்களை  காப்பதற்கு தான்.  அப்படியென்றால் யாரு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு  கொள்ளலாம் என்பது அர்த்தமல்ல, அந்த காட்டுக்குள் இருந்த சமூகம் மாறி குடும்பம் என்ற அடுத்த  கட்டத்துக்கு  நகர்வதைப்போல சோசலிசம் கம்யூனிசம் வரும்போது குடும்பம் என்ற  அமைப்பு வேறு வடிவமெடுக்கும். அங்கு சொத்துடமை இருக்காது, அதனால் பெண்களை சொத்தாக கௌரவமாக  பார்க்கும்   பாணி இருக்காது.  பெண்கள் காதலிக்கலாம் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துவிட்டு  இன்னொரு மனம் புரியலாம் அதற்கு குற்ற உணர்ச்சி தேவையல்ல  என்பதைப் போன்ற சமூகம் மாறும்.

"குடும்பம்" எப்போதும் ஒரே போன்று இருந்ததால 1980 களில் இருக்கும் கூட்டுகுடுமபம் இப்போது அல்ல. அண்ணன்  வெளிநாட்டில் இருக்கலாம் தம்பி வெளியூரில் இருக்கலாம், கூட்டுக்குடும்பம் அழிந்து தனியான குடும்பமாக  வடிவம் மாறுகிறதல்லவா அதுவே அடுத்த கட்டத்துக்கு இன்னும் மாறும், அது அப்படிதான்  இருக்க முடியும்.  அப்படியிருக்க வரலாற்று ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினையை வெறும் சடங்குகள்  வைத்தே   தீர்க்க முடியும் என்று இயக்குநர்  தீர்வு சொல்கிறார். 

"தக்காளி சட்னி" உனக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னி  என்று  ஆண் பெண் உறவு உள்ளதென்பதை  சொல்கிறது. இந்தக் கதை முழுவதும் விறுவிறுப்பு  நிறைய ட்விஸ்ட்கள்  உண்டு,  கதை  எதார்த்தத்தை   பிரதிபலிக்கிறதா? என்றால் இல்லை.  software இல் வேலை செய்யும் நாயகன், கம்பெனி  கழிவறையில்   masturbate செய்கிறார்,  அது CCTV யில் பதிவாகி, கம்பெனி குரூப்பில் போட்டுவிடுவதால்    அவர்   பணிநீக்கம்  செய்யப்படுகிறார்.

கம்பெனியில்  எந்த வேலை இருந்தாலும்  cctv யை கழிவறையில் வைப்பார்களா?  software company  எப்படி  இயங்குகிறது , அங்கு கழிவறைகள் எப்படி இருக்கும் என்று புரிதலே இல்லாத காட்சியமைப்பு.    software company யை விடுங்கள் வேறெங்காவது இப்படி ஒரு கழிவறையில் cctv யை மறந்தும் கூட வைப்பார்களா? 

சரி அப்படியே வைத்தாலும், இப்படி ஒரு காட்சி வருகிறதென்றால், அதை பதிவு செய்து whatsapp குழுமத்தில்   பகிர்பவரும்   குற்றவாளிதானே .  இதெல்லாம் தவறென்று தெரியாத தற்குறிகள் தான் software  company  யில்  வேலை  செய்கிறார்களா?

இந்த சினிமா இயக்குநர்களுக்கு   IT துறை மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை, ஆபீஸ் வரும் நாயகன்  அங்கே கழிவறையில்   mastrubrate செய்கிறார், அதை cctv படம் பிடிக்கிறது என்று ஒரு காட்சி.  சரி   அப்படியே   அவர்   ஒன்றுக்கு போகிறார் என்று வைத்துக்கொள்வோம், அதை படம் பிடித்தால் கூட தவறு தானே, இவ்வளவு  மொக்கையாக   எப்படி யோசிக்க முடிகிறது.   அதாவது IT துறை elite என்றாலே ஆபீஸ் என்று கூட பார்க்காமல்    

மோசமாக இருப்பார்கள், அதை பகிரக்கூடாது என்று  கூட தெரியாத நுண்ணுணர்வில்லாதவர்கள் என்பது இயக்குநரின்  பார்வை. 

திரைக்கதை  "அதிர்ச்சி" என்ற விழுமியம் மட்டுமே இருந்தால் சிறந்த கதை என்று யாரோ ஒருவர் சொல்லியிருப்பார்கள்  போல  , அதிர்ச்சி மேலே அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குநர் . விதயசமாக  இருக்கிறது   ஆனால் எதார்த்தமாக இல்லை.   இது வெறும் தொடக்ககாட்சி  மட்டும் தான், அதைத்தாண்டி    

நிறைய அதிரிச்சிகள்  இந்தக் கதையிலுண்டு.. 

நாயகன் lust வேறு love வேறு என்று யோசிக்கும் நாயகனாக காட்டப்படுகிறார். அவர் காதலிப்பது ஒரு பத்திரிகையாளர்  பெண் மணியை. காஜு  பிடித்த காதலன் என்பதை அந்த பத்திரிகையாளர் கண்டுபிடிக்க  மாட்டாரா? காதலன் ஆண் விபச்சாரியாக இருக்கிறார், காதலி ஒரு article எழுதும் போது அதை கண்டுகொள்கிறாள். 

அடுத்த பெண்களிடம்    காசுக்காக உறவு கொள்ளும் ஆண் , அந்த இடத்தில customer ஆக அம்மாவே வந்தால் ?   ஒரு சின்ன புரிதலின்மையில் அம்மாவை தவறாக நினைக்கும் சூழல் நாயகனுக்கு ஏற்படுகிறது.   காதலன் ஆண்  விபச்சாரம் செய்யலாம் ஆனால் அம்மாவை அந்த இடத்தில் பார்த்தால் கலாச்சார காவலனாக   மாறுகிறார் .  ஒரு பெண் love வேறு lust வேறு என்று காதலன் இருக்கும்போதே  அவர் தத்துவத்தை அவரிடமே  பேசிவிட்டு இன்னொருவருடன் உறவு கொள்வேன் என்று சொன்னால் ஆணுக்குள் இருக்கும் கலாச்சார காவலன் என்ன  செய்வார் என்பதை பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது இந்தக் கதை. 

ஆணுக்கு எந்த நீதியோ  பெண்ணுக்கும் அந்த நீதி தான் என்னும் கண்ணோட்டத்தில் இந்தக் கதையை ஏற்றுக்கொள்ளலாம்.    love வேறு lust வேறென்றாலும்   சில விழுமியங்கள், ஒழுக்கவிதிகள்  காதலன், காதலிக்கு  வேண்டுமென்று சொல்கிறது  கதை.   பெண்களுக்கு ஆண்கள் வேறொருவருடன்  உறவு கொள்வது மட்டுமே பிரச்சினையா?   இந்த love, lust என்பதெல்லாம் இயல்பானது, அதை  கட்டமைக்கவெல்லாம்  முடியாது.  அது  இருவருக்கான  அந்தரங்க விடயமென்பதைத்தாண்டி அதில் பெரிதாக சரி தவறென்று சொல்வதே தவறென்று நினைக்கிறன்.  

ஒரு ஆண்  நிறைய பேருடன் உடல் ரீதியாக  போகிற போக்கில் lust வைத்திருக்கிறார் என்று சொன்னால், கதைப்படியே  அந்த பெண் பத்திரிகையாளரை அவர் காதலிக்கவே இல்லை என்று அர்த்தமாகிறது. எப்படி ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டே  நிறைய பேருடன் lust ஆக இருக்க முடியும்,  இதை அந்தக் காதலி  காதலனுக்கு  விளங்க வைக்கிறாள், அப்படி விளங்க வைக்கலாம் ஆனால் மறுபடியும் காதலில் சேர முடியுமா?  அது  அந்த இடத்திலேயே உடைந்து விட்டது, சொல்லப்போனால் காதலிக்கும்போதே தான் அவர் வேறு  பல  உறவுகளில்  இருக்கிறார்  என்பது தானே நிதர்சனம்.  அப்படி open relationship என்கிறார்கள் அப்படி இருக்கும் ஒருவனை  வம்படியாக காதலி என்று சொல்வது டாக்சிக் ஆகாதா? இருவருக்கும் ஒத்து வராது   என்று  விலகுவது தானே  சரி?  அதைத்தாண்டி ஆணாதிக்கமென்றால் என்னவென்று வகுப்பை வேறு  அந்தக்  காதலி  எடுக்க வேண்டியதாக  உள்ளது. 

"கல்லானாலும் கணவன்" என்று காதலன் என்ன தவறு செய்தாலும் ஏற்றுக்கொண்டு,  அவனை திருத்துவது  தான்   வேலையா? சரி இப்போது திருந்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, மறுபடியும் வேறொரு ஆட்களுடன்  உறவு  கொள்ள மாட்டார் என்று என்ன நிச்சயம்?   கலாச்சார ரீதியான விடயங்களை, ஆணாதிக்கத்தை ஒரு  சில  காட்சிகள்  மூலம்  ஆணுக்கு உணர்த்திவிட முடியுமா.ஆணுக்கு 25 வயது என்று வைத்துக்கொள்வோம் , 25 வருடங்களில்  ஆணாதிக்கவாதியாக வாழ்ந்துவிட்டு ஒரு சில தருணங்களில் மாறிவிடுவாரா?    அப்படியிருக்க   இந்தக் காதலி என்பவள் தான் ஏமாந்ததாய் உணர்ந்த பின்பு நடுவிரலைக் காட்டி அல்லவா  வெளியே வந்திருக்க  வேண்டும்.    அதை விடுத்து அந்த டாக்சிக் உறவுக்குள்ளேயே  போய் சிக்கிக்கொள்கிறாள்  பெண் பத்திரிகையாளர்.  

"Golden rules" என்று இன்னொரு கதை  காதலித்த ஆண் தான் பெரியம்மா மகன்  என்று உணரும்போது  ஏற்படும்   கதை தான். காதலிக்கும்போது அண்ணன் தங்கை என்று தெரியாமல் காதலித்தவர்களின்  அதிர்ச்சி  தான்  இந்தக் கதை. சமூகம் சில விழுமியங்களை முன்னே வைத்திருக்கிறது இதெல்லாம் தான் உறவு   என்று  சமூகத்துக்கு  சில விழுமியங்களுண்டு, அது உடைக்கப்படும் போது ஏற்படும் அதிர்ச்சியை  இந்தக்   கதை சொல்கிறது. 

பெரும்பான்மையான ஆண். பெண் பிரச்சினைகளை பேசாமல் எங்கோ ஏதோ ஒரு விதி விளக்காக   அங்கொன்றும்  இங்கொன்றும் நடக்கும் அதிர்ச்சி கதைகளை படமாக செய்திருக்கிறார்கள். படத்தில்  பெரும்பான்மையானவர்களின்  பிரச்சினைகள் பேசப்படாமல், elite வாழ்வியல் பிரச்சினைகள்  பேசப்படுவதால்  படத்தில் ஒரு  ஒட்டாத அந்நியத்தன்மை  உண்டு.    முக்கியமான ஆண், பெண் உறவுச்சிக்கல்களை   படம் பேசியதா என்றால் இல்லை  என்பேன். ஆண்,  பெண் உறவுக்குள் இருக்கும்  மேலோட்டமான  பிரச்சினைகளை அழுத்தமான பிரச்சினைகளை காட்டுவதைப்போல ஒரு பாவனை  படத்திலுண்டு. 

கலையின் வேலை விவாதத்தை  தூண்டுவது, அந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறது.  பொதுபுத்தியிலிருக்கும் மேலோட்டமான   முற்போக்கை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.  இயக்குநரின் நோக்கம் சிறப்பானது தான் ஆனால் மேலோட்டமாக உள்ளது, கொஞ்சம் ஆழ்ந்து எடுத்தால் , நல்ல இயக்குநராகக்கூடிய பார்வை அவரிடம் உள்ளதென்று நினைக்கிறேன்.



Friday 17 May 2024

முற்போக்கு vs பிற்போக்கு தமிழ் சினிமா

 ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மூன்று பேரும் சேர்ந்துதான் தமிழ் சினிமாவை கெடுத்துவிட்டார்கள் என்று பழைய பூமர் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு முதல் இன்றைய பூமர் மோகன்ஜி வரை சொல்கிறார்கள்.   இந்த அரசியலை ஒட்டியே "வள்ளிக்கும்மி " ரஞ்சித், கனல் கண்ணன் போன்றவர்களும் பேசுகிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இவரர்கள் எல்லாருமே சாதியவாதிகளாக இருக்கிறார்கள், சனாதனத்தை தூக்கிப்பிடிப்பவர்களாக  இருக்கிறார்கள். அதே நேரம் இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் பலர் பாஜக  ஆதரவாளராகவும் இருப்பதும் தற்செயலாக நடந்ததல்ல.  இப்போது கடைசியாக வந்த "ரத்னம்" படத்தின் நாயகன் விஷால் பாஜக ஆதரவாளர் மற்றும் சாதியை தூக்கிப்பிடிக்கும்  மீசையை முறுக்கும் படங்களில் நடிப்பவர் தான்  

1983 இல் வந்த "சந்திப்பு " என்ற படம் சிவாஜியும், பிரபுவும் அண்ணன் தம்பியாக  இருப்பார்க;ள். சிவாஜியின் ஜோடி ஸ்ரீதேவி,  பிரபுவின் ஜோடி ராதா.  சிவாஜி படத்தில் வடசென்னையை சேர்ந்த பாக்ஸர் , மனோரமா  சிவாஜிக்கு  சமைத்து போடுபவராக வருவார்.  மனோரமாவிடம் சிவாஜி இப்படிக் கேட்பார் "கறியில் பெரிச சேர்த்துவிடவில்லையே" என்றொரு வசனம் வைத்திருப்பார்.  அதாவது மாட்டுக்கறியை சேர்க்கவில்லையே   

என்பாதைதான் சிவாஜி அப்படி பேசியிருப்பார்.  

சரி அப்படியே  பாலாவின் "அவன் இவன் " படத்துக்கு வருவோம், மாடுகளை  கேரளாவுக்கு அனுப்புவதே  

வில்லத்தனமான காட்டப்பட்டிருக்கும். பாலாவின் சேது படம் கூட ஒரு பார்ப்பன பெண்ணை காதலித்தால்   

பைத்தியம்  ஆவார்கள் என்று காட்டப்பட்டிருக்கும், மனுதர்மத்தின் இன்னொரு version தான் பாலா  எடுப்பது  

அதாவது "பிரதிலோமா"  என்று மனுதர்மத்தில் ஒரு concept உண்டு. பெரிய சாதி பெண்ணை திருமணம் செய்வது  பெரிய குற்றம் என்பது தான் பிரதிலோமா. "அனுலோமா" என்று இன்னொரு concept அதாவது  உயர்ந்த   சாதி ஆண், தாழ்த்தப்பட்ட பெண் என்று  இவர்கள் கூடுவதன் பெயர்  அனுலோமா பிரதிலோமா  அளவு   அனுலோமா  தவறல்ல,   ஒரு பெண்ணே சாதியை தூக்கிப்பிடிக்கிறாள் என்று மனு சொல்வதன்  திரைக்கதை  வடிவம் தான் பாலாவின் சேது. பாலாவின் பெரும்பாலான படங்களில் இந்துத்துவத்தின்   சாயலை   காண முடியும்.

அப்படியே இந்தப் பக்கம்  அடுத்த இயக்குநர்  ஷங்கருக்கு வருவோம், இவர் படங்கள் reservation இடஒதுக்கீட்டுக்கு  எதிராக இருக்கும். பெரும்பாலும் பார்ப்பனீய கருத்துக்கள் உள்ளே ஊறிக்கிடக்கும். சாதி  சான்றிதழ்  கிழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்ற கருத்து "முதல்வன்" படத்தில் வரும். சேரி என்றாலே  மோசமானவர்கள், குடிப்பவர்கள், பெண்களை கேலி செய்பவர்கள்  என்ற படிமம் வந்துகொண்டே இருக்கும். 

எந்திரன் படத்தில் கூட  சேரியில் இருக்கும் அம்மன் கோவில் விழாக்களை கூட சகிக்க முடியாத பாத்திரமாக  நாயகி  இருப்பார்..

அடுத்து   முருகதாஸ் படங்கள் அதே இடஒதுக்கீடு எதிர்ப்பு , மக்கள் நல விடயங்களை இலவசமென்று  கொச்சைப்படுத்துவது , இசுலாமிய வெறுப்பு  என்று இவர் படத்திலும் கொட்டிக்கிடக்கும்  காட்சிகள். 

 இத்தனைக்கும் ஷங்கரும்,  பாலாவும், முருகதாஸ்  இடைநிலை சாதி இயக்குநர்கள். அவர்களை வைத்தே reservation  தவறென்று பேச வைப்பார்கள்.  ஷங்கர் படத்தில் மக்கள் விரோத காட்சிகள் இருந்தால் ரஜினிகாந்த் நடிக்கும்  வரை   கொண்டாடிய பொதுபுத்தியும், மீடியாவும்.  கபாலி வந்தபோது  ரஜினிகாந்தை    

பொது மக்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்று அலறியது.  மீடியாவில் மேலே இப்படி ஒரு கருத்து  வருகிறதென்றால்   அது அப்படியே  பொதுப்புத்தியில்  சிக்குகிறது.   

அப்படியே இந்தப் பக்கம் வருவோம் விசுவின் "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் விசுவின் மகள் கிறுத்துவரை காதலிப்பார். வேறொருவருக்கு நிச்சயம் செய்யும்போது அந்தப்பெண் உண்மையைச்சொல்வவார். அடுத்த காட்சியிலியேயே விசுவின் மகனுக்கு பெண் பார்க்க வந்த வீட்டில்  அந்தப் பெண்ணை விசு தன் மகனுக்கு நிச்சயம் செய்வார்.  விசு " என் பெண்ணை தான் தப்பா வளர்த்துட்டேன், பையனை நல்லாத்தான் வளர்த்துருக்கேன் " என்று சொந்த சாதியில் திருமணம் செய்வதை  நல்ல வளர்ப்பு என்று காட்டியிருப்பார். "67 க்கு பிறகு நான் pant போடல கண்ணா" என்னும் வசனம் திராவிடம் மேலே   இருக்கும் வெறுப்பை காட்டி இருக்கும். 

எத்தனையோ கமல் படங்களில் பார்ப்பனர்கள் வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது, அதைத்தாண்டி ஆச்சாரமான     

குடும்பமென்றே   அறிமுகப்படுத்தப்படும்.  அதைத்தாண்டி கமலின் வைணவ பாசத்தை தசாவதாரம், விஸ்வரூபம்  படமுழுவதும் இருக்கும். குறியீடாக நிறைய விடயங்கள் பெருமாளை முன்னிறுத்துவதை போலவே   இருக்கும்  இதைப்பற்றி தோழர் யமுனா ராஜேந்திரன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார், அதை படித்ததில்லை   கேள்விப்பட்டிருக்கிறேன்.   கமல், மணிரத்தினம் படங்களில் கூடுதலாக  இந்துத்துவா  agenda இசுலாமிய வெறுப்புகள் வந்துகொண்டே இருக்கும்.  விஜயகாந்த் படங்களில் தத்துவ தளத்தில் எல்லாம்   இசுலாமிய  வெறுப்பு இருக்காது, ஹீரோ வில்லன், பாகிஸ்தான் என்று வரும். ஆனால் இசுலாமிய வெறுப்பு  படமென்றால்   ஒரு சில படங்களில் காட்சிகள் வாய்த்த விஜயகாந்த் படங்கள் உதாரணமாக சொல்லப்படும்  ஆனால்  மணி, கமல் போன்றவர்களை விட்டுவிடுவார்கள். 

ரோஜா படம் 1992 ஆகஸ்ட் 15 இல் வருகிறது  இசுலாமியர்களை மோசமாக சித்தரித்தப்படம்.  கொடி எரிக்கப்படும்  போது நமாஸ் செய்துகொண்டிருப்பார்கள் இசுலாமியர்கள். சிறுவயதில் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு   இசுலாமியர் என்றாலே குண்டு வைப்பார்கள் என்று நினைத்ததுண்டு.  என் வாழ்வில்  பெரும்பாலும்  இசுலாமிய நண்பர்கள் நெருக்கமான நண்பர்களாக இருப்பார்கள் என்பது வேறுவிடயம்.

1992 ரோஜா வந்த போது நான் ஐந்தவாது படித்துக்கொண்டிருந்தேன் என் நண்பன் பெயர் ஆஷிக், நம்பர் ஒன மாணவன், பனிரெண்டாம் வகுப்பில் நாலு சப்ஜெக்ட்டிலும் 200, அப்போது entrance இருந்தது  அதிலும் 99.11

தமிழக அளவில் state first cutoff   ஒரு முறை நான் ஆண்டுப்பரிட்சையின் போது  புத்தகத்தை தொலைத்துவிட்டேன், ஆஷிக் வீட்டிற்கு சென்றபோது அவன் எனக்கு புத்தகத்தைக் கொடுத்துவிட்டான், அவன்  படிக்காமலேயே 100 மார்க் வாங்கும் இயல்புடையவன்.  அப்படி நெருக்கமான இருந்த நண்பர்களைக் கூட  வில்லன்  என்று இந்தப் படங்கள் தப்பாக கட்டமைக்கும். நாமும் நம் நண்பர்களுடன் சேர்ந்து டேய் இவன் குண்டு வைப்பாண்டா என்று கிண்டல் அடிப்போம், நான் அப்படி அடித்ததில்லை என்பது வேறு விடயம் ,எனக்கு அப்படித்தோன்றியதில்லை   ஆனாலும் சிறு வயதில் அப்படித்தோன்ற வாய்ப்புகள் உள்ளதல்லவா?

எவ்வளவு பெரிய  பிளவை ஏற்படுத்தும் இயக்குநர்கள் இங்கு லெஜெண்டு என்ற போர்வையில் இருக்கிறார்கள்  என்று சொல்லவருகிறேன்.  ரோஜா 1992 ஆகஸ்டில் ரிலீஸ் அதே வருடம் டிசம்பர் 6 இல் பாபர் மசூதி   இடிக்கப்படுகிறது. படம் வந்ததால் தான் அந்த சம்பவம் நடந்தது என்று சொல்ல மாட்டேன்.  ஆனால்  இசுலாமியர்கள்  மோசமானவர்கள் என்ற படிமத்தை ஆழமாக ஒரு பக்கம் கலையில் வைத்துவிட்டு, அந்தப்  படத்தை  கொண்டாடும் போது.   இந்துக்களில் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு இவங்க மசூதியை உடைத்தால்  பரவாயில்லை இவர்கள் தீவிரவாதி தானே என்று தோன்றாதா?  இங்கு நட்பாய் இருக்கும்  உழைக்கும் மக்கள்  கூட இசுலாமியர்களிடம் பிரிந்திருப்பார்கள் தானே அப்போது இசுலாமியர்கள் தனியாக  விடப்பட்டதை  போல உணர்ந்திருப்பார்கள் தானே.  மணி, கமல் இதை பிளான் செய்து  செய்தார்கள் என்று சொல்லவில்லை , அவர்கள் கலையின் தாக்கம் எந்த வேலையை செய்ததென்பதை சொல்கிறேன். 

இங்கு தென் மாவட்டங்கள் சாதிக் கலவரத்துக்கு  குறிப்பாய் மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களை சொல்கிறார்கள்.  கலவரமென்பதே சாதிய ஒடுக்குமுறை இருக்கும்போது சாதியின் கீழடுக்கில் உள்ளவன் கேள்வி  கேட்பதன் விளைவு தானே.   இங்கு "சாதி" தவறென்று பேசுவதை விட "சாதிக் கலவரம்" தவறென்று  சொல்லப்படுகிறது.  கலவரம் உயிரிழப்பு என்பதெல்லாம் நமக்கும் உடன்பாடில்லை தான். ஆனால் கலவரத்தை  விட சாதி என்பது பிரச்சினை தானே. மேற்கு மாவட்டங்கள் சாதிய பிடி அதிகமிருக்கும் கோவை  போன்ற  பகுதிகளில்  சாதியை ஏற்றுக்கொள்வதால் முரண்பாடுகள் இல்லை அதனால்   கலவரமில்லை   

அந்த சாதி கேள்வி  கேட்கப்படாத அமைதி மோசமான அமைதி. "சாதி " என்னும் கொடுமையை அங்கீகரிப்பது.  பார்ப்பனர்கள் கூட நேரடியாக சாதிய ஒடுக்குமுறைகளில் வருவதில்லை, white color வேலைகள்  செய்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்  ஆனால் பார்ப்பனீயம் தானே இதை எல்லாம் செய்கிறது.  

ஆணவக்கொலைகளை செய்யச்சொல்கிறது. ஆதிக்க சாதிக்கும்,பட்டியலின மக்களுக்கும் இருக்கும்  முரணில்  பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனீயத்துக்கும்  பங்கில்லையா?

சமூகத்திலும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து   குரல் வந்தால் கலவரம் வருகிறதல்லவா? அதே  குரல்  சினிமாவில் வரும்போதும் ஒரு boomer கூட்டம் கொந்தளிக்கிறது.   தமிழ் சினிமா முற்போக்கு  வரலாறு    கலைஞர்  பராசக்தி காலத்திலேயே தொடங்கிவிட்டது,  கலைஞர், என் எஸ் கிருஷ்ணன், ராதா, அண்ணா படங்களில்  தலித் என்ற அடையாளத்துடன் இல்லாமல் இருக்கலாம் சமூக நீதி என்ற அடையாளத்தில் முற்போக்காகவே  இருந்திருக்கிறது .

அதைத்தாண்டி  பாரதிராஜா போன்றவர்களின் படங்கள் தேவர் சாதி வாழ்வியல் காட்டக்கூடிய படங்களாக   இருந்தாலும்  கூட சாதி மறுத்த முற்போக்கு அம்ச படங்களாக இருக்கும்  அவர் வாழ்வியலை காட்டுவது தவறல்ல அதை பெருமித்ததுடன் காட்டினால் தவறு பாரதிராஜா படங்களை வெகுஜனங்கள் தேவர் படமாக  [பார்க்கவில்லை  உலக சினிமாவாக ஒரு லெஜெண்ட் எடுத்த படமாகவே பொது சமூகம் பார்த்தது. 

அதைத்தாண்டி விஜயகாந்த் "அலை ஓசை " போன்ற படங்களில் தலித் அடையாளத்துடன் தான் வருவார். 

இன்றும் " போராடடா " பாடல் கேட்கும்போதும் "நந்தன் இனமே " என்ற வரிகள் வரும்போதும்  விஜயகாந்த் ஒருவரால் தான் அதை  நடிக்க முடிந்திருக்கும் என்றளவில் நடித்திருப்பார்.   தமிழ் சினிமா ஒரு பக்கம் பிற்போக்காக  இருக்கும் இன்னொரு பக்கம் முற்போக்கும் இருக்கும். ஒரு சமூகம் எப்படி இயங்குகிறது  முற்போக்கு  vs பிற்போக்கு என்று இயங்குகிறதோ அதே இயக்கம் சினிமாவிலும் உண்டு  அது அப்படிதான்  இருக்க  முடியும்.  

திருப்பூர் சுப்பிரமணியன்   சாதி எல்லாம் கிராமத்தில் தான் உண்டு என்று பேசியிருந்தார், ரேடியோ மிர்ச்சி  சுச்சி பேச்சைப்பார்த்தாலே  சினிமாவுக்குள் இருக்கும் பார்ப்பனீய லாபியை புரிந்துகொள்ள முடியும்.  கலையின் வேலையே  கேள்வி கேட்பது, சமூகத்தில் ஒரு உரையாடலைத்தூண்டுவது அந்த வேலையை ரஞ்சித், வெற்றி , மாரி செல்வராஜ் சிறப்பாகவே செய்கிறார்கள்.  சமூகத்துக்கு சாதி பொருந்தவில்லை என்றால்  சமூகத்தில் எப்படி சாதி தூக்கி எறியப்படுமோ அதைப்போல boomer இயக்குனர்கள் சமூகத்திலிருந்து  தூக்கி எறியப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.




Monday 13 May 2024

Aavesham == FAFA'S FIFA == SPOILER ALERT


========================================

உலகம் ரொம்ப விசித்திரமானது, அனைத்தும் கூடவே இருப்பதைப் போலத் தோன்றும், திடிரென்று ஒன்றும் இருக்காது, ஒருவரும் பக்கத்திலிருக்க மாட்டார்கள். அனைவரும் இருப்பார்கள் ஆனால் இருக்க மாட்டார்கள். வாழ்வின் ஓட்டத்தில் நாமும் நமக்கு நெருங்கியவர்கள் விலகிப்போவார்கள், புதியவர்கள் நெருங்குவார்கள். ஒரு பக்கம் பழையன கழிதலும் புதியன புகுதலும் நடந்துகொண்டே இருக்கும்.  சட்டென்று ஒரு மௌனமோ யாருமில்லாதா விரக்தியோ ஒட்டிக்கொள்ளும்.  அதைத்தாண்டி புதிய மனிதர்களைத் தேடிப்போய் ஒட்டிக்கொள்பவர்கள் வாழ்வு தினமும் புதிதாய் பிறந்துகொண்டே இருக்கும். மனிதர்களோடு மனிதர்கள் கலந்திருப்பவர்களுக்கு, மக்கள் வேலை செய்பவர்களுக்கு தனிமையிருந்தாலும் மக்களோடு சேர்ந்திருப்பதால் அதன் வலிகளும்,   வடுக்களும் மறைந்து புதிய நம்பிக்கைள் பிறந்துகொண்டே இருக்கும்.  

முதலாளித்துவத்தின் அரசியல் மக்களை வர்க்கங்களாய் பிரிக்கிறது, நண்பர்களை வேறு வேறு பொருளாதார அடுக்குகளில் தனித்தனியே நிறுத்துகிறது. நேற்றைய நட்பு இன்றில்லை. குடும்பகளை தனித்தனியாக  அண்ணன் தனியாக, தம்பி தனியாக பிரிக்கின்றது. மொத்தத்தில் தனிமையென்பது எல்லாருக்குமான பொதுவான விடயமாக மாறிப்போகிறது.  அப்படி ஒரு தனிமையான "டான்" கல்லூரி இளைஞர்களுடன்  நட்பானால் என்பதை ரகளையுடன் சொல்கிறது "aavesham ".  

வெளியில் வீராப்பாய்  இருக்கும் பல பேர் உள்ளுக்குள் கோழையாக இருப்பதைப்பார்க்க முடியும் . இன்னும் சொல்லப்போனால்   நூற்றுக்கு நூறு பேர் வீராப்பாய்  இருப்பவர்கள் கோழையாக இருக்கவே வாய்ப்புண்டு. இயல்பாக  பழக்க முடியாத ஒருவர் ஒன்று குனிந்துகொண்டு இருப்பார் இல்லை கெத்தாக இருப்பார். டான்   என்றால் இரண்டாவது ரகம். வெளியிலிருப்பவர்களுக்கு கெத்தாக  தெரியும் டான்கள் பக்கத்தில்  போய்  பார்த்தால் கொஞ்சம் காமெடிகாகவே  இருப்பார்கள். 

இது வெறும் டான் என்று மட்டுமல்ல, ஒரு சிலரை மிகப்பெரிய intellectual என்று மனதில் நினைத்திருப்போம்  பக்கத்தில் போய்  பார்த்தால் அந்த பிம்பம் உடையும். டான் என்பது வெளியில் தெரியும் பிம்பம்  மட்டுமே  உள்ளே   பக்கத்தில் நெருங்கிப்பார்த்தால்  ஒரு அழுகுணி குமராக இருக்க வாய்ப்புண்டு,  டானும் அந்த டான் உடைந்த  பிம்பத்தையும் ஜிகர்தண்டா சரியாக பதிவு செய்திருக்கும்.   அதை இன்னும் நெருக்கமாக "aavesham"  நம்மை உணர வைக்கிறது. 

பகத் பாசிலை நாம் எந்தப் படத்திலும் பகத்தாக  பார்க்கவே முடியாது, அந்தப் பாத்திரம் என்னவோ அதுவாக மாறிவிடுவார், உடல்மொழி, முகத்தில் expresssion எல்லாம் வெறித்தனம்.  இரண்டு கண்கள், இரண்டு மூக்கு, முகம்,   ஒரு உடல் இதைவைத்துக்கொண்டு பல சித்திரங்களை வரைகிறார் பகத்.  அப்படியே ரங்க சேட்டனாக  வருகிறார் வாழ்கிறார். 

ரங்க சேட்டன் நானாக இருக்கலாம் நீங்களாக இருக்கலாம், உண்மையான உறவைத்தேடுபவராக அதில் விரக்தி  அடைந்தவராக இருக்கலாம். இத்தனை அழுத்தமான தத்துவம் கொண்ட படத்தை காமெடியாக ரகளையாக  எடுத்திருக்கிறார்கள்.  ரங்க சேட்டன், அவர் கூட இருக்கும் அம்பான் நஞ்சப்பா மற்றும் அடியாட்கள். இன்னொரு பக்கம் ரங்க சேட்டன் தம்பியாக நினைக்கும் கல்லூரி மாணவர்கள் என்று கதை நகர்கிறது.

கல்லூரியில் நடக்கும் சிறு பிரச்சினைக்கு கெத்து காட்ட வேண்டுமென்று நினைக்கும் கல்லூரி மாணவர்கள்  ஒரு பெரிய  டானிடம் நட்பாகிறார்கள், அதுவே அவர்கள் வாழ்ககைக்கு படிப்புக்கு எதிராக இருக்கிறது  . ரங்க சேட்டன் , மாணவர்கள் சந்திக்கும் காட்சிகள் அதகளம். குறிப்பாய் அம்பான்  ரங்க சேட்டனை  பற்றி  சொல்லும் கதைகளை மாணவர்களுக்கு நம்புவதா வேண்டாமா வெறும் வெட்டி builld up என்று நமக்கும்  தோன்றுவதைப்  போல நகைச்சுவையாய் எடுத்திருக்கிறார்கள்.  

இங்கு "டான்" என்பதை சமூகத்துடன் விலகி இருக்கும் யாருடனும் பொருத்திப்பார்க்கலாம். நட்பு  வட்டமே  இல்லாமல்  celeberity க்களை  நமக்குத்தெரியும். தனியான ஆட்களாக insecured ஆக இருப்பார்கள், அழுவதைக்கூட  weekness ஐ வெளியில் காட்டாமல் இருப்பார்கள். ஏதோ தனிமையான இரவுகளில்  அவர்களின்  வலிகளை பகிர்வார்கள், அவர்களுக்குள் லேசான பகுதி ஒன்று இருக்கும், அது வெளியில் வராமல்  வெளியில் வேறொரு ஆளாய் தெரிவார்கள். ஐந்தே celeberity கைகளில் கோடிக்கணக்கில்  பணமிருக்கும், புகழுக்கு பஞ்சமில்லை ஆனாலும் வெறுமையாக இருப்பார்கள்.

இவர்கள்   அடைந்த புகழுக்கே இப்படி என்றால் ரஜினி, விஜய், அஜித்  போன்ற செலிபிரிட்டி என்றால்   கண்டிப்பாக   நட்பு வட்டமிருக்காது,  தனிமை அதிகமிருக்கும்,  நட்பாய் பேசுவதென்பது வேறு மனதுக்கு  பிடித்தவர்களுடன்   மனம்விட்டு பேசுவதென்பது வேறல்லவா?  அழுது, சண்டை போட்டு, கெட்ட வார்த்தையில்  திட்டி, வெளியில் ஊர் சுற்றி, நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு  என்று  இயல்பான  மனிதனாக   இருப்பதற்கே  அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். உத்தம வில்லன் படத்தில்  நாயகனுக்கு  வரும் பிரச்சினை இதுதான். 

இந்த  டான்  பிரச்சினை  எல்லாம்  intellectual களுக்கு வரும். வடிவேலு ஏணியில் போவார் அல்லவா அதைப்போல   இந்த intellectual ஏணியில் நின்றுகொண்டு  மக்களுக்கு புரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள் .  

கடைசியில்   intellectual நிறைய இடங்களில் அடி வாங்கிவிட்டு பேச்சைக் குறைத்துக்கொள்வார்.intellectual  படிப்பதால்  கொஞ்சம் perspective மாறிவிடும், நிறைய புரிந்துவிடும்  புரிந்தவுடன் யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும்   என்று போனை  எடுப்பார், அந்தப் பக்கத்திலிருப்பவர்கள் தெறித்து ஓடலாம்,   பகிர்ந்து  கொள்ள  மனிதர்களே இல்லாமல் இருக்கிறவர்கள் கடைசியாக எழுதக்கூட தொடங்கலாம்.    

இந்தப் படத்தில் வரும் தனிமை  

1. டான்களுக்கு  பொருந்தும் 

2.  celeberity க்களுக்கு பொருந்தும் 

3  introvert . intellectual களுக்கு பொருந்தும் 

intellectual  என்பதில் இன்னொரு வகையறா உண்டு, மக்களிடம் வேலை செய்யும் இடது தோழர்கள். ஒரு பக்கம்  அதிகம் படித்திருந்தாலும் இன்னொரு பக்கம்  அதை மக்களுக்கு புரியவைக்க மக்களுடன் இயங்குவது  அவர்கள் சிறப்பு. தொடர்ந்து உரையாடலில் இருந்துகொண்டே மக்களிடம் கற்றுக்கொள்வார்கள்.  வெறும் வாசிப்பு, சினிமா பார்ப்பதை தாண்டி மக்களிடம் நெருக்கமாக  இருப்பார்கள் 

அவர்களுக்கு புதிய புதிய உறவுகள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள், உண்மையான மக்களுக்காக வேலை செய்பவர்கள் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எளிமையாக இருப்பவர்கள் தான் கெத்தானவர்கள்  அவர்கள் தான் டான்கள்  மற்றவர்கள் மக்களுக்கு வெளியே தனித்தனியாக பெயர் வாங்கினாலும் உதிரியாக இருப்பதால் தனிமை வந்து அவர்களை ஆட்கொள்ளும்.  

 '

"aavesham " படம் வன்முறையை normalise செய்கிறது என்று சொல்லிவிட்டார்கள் நானும் திரையரங்கில்  பார்க்காமல்  விட்டுவிட்டேன்.  ஆனால் வன்முறையை எல்லாம் அது  பகடி செய்கிறது, அவர்களது  கோழைத்தனத்தை  காட்டுகிறது. அவர்கள் மொன்னையானவர்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களை   நிர்வாணப்படுத்துகிறது.  வன்முறையை இயக்குநர் கொண்டாடி இருக்கிறாரா? இல்லை   விமர்சனபூர்வமாக    வைக்கிறாரா  என்பதில் இயக்குநர்  எந்தப் பக்கமிருக்கிறார் என்பதை சொல்லிவிட முடியும்.

அந்தக்  கல்லூரி மாணவர்கள் இன்னொரு ரங்கன் சேட்டாவாக  ஆகக்கூடாது என்ற போராட்டமே  படத்தின்  இரண்டாம்  பாதி. பட வன்முறையை விமர்சனமே செய்கிறது. ஆனால் நீதிபோதனையாக  இல்லாமல்  உணர்வுபூர்மாக   காட்டுகிறது.    ரங்கன் சேட்டன் பண்ணும் கோமாளித்தனங்களை, அளப்பறைகளை  ரசித்துக்கொண்டே   பார்த்த மனது,   ரங்கன் சேட்டன் மேல் இருக்கும் கோபத்தில் மாணவர்கள்   எதிரிக்கூட்டத்துக்கு  போட்டுக்கொடுத்ததை நினைத்து ரங்கன் சேட்டன் உடையும் போது, கலங்கும் போது\

 நாமும் கலங்கிப்போவோம்  அதுதான் ரங்கன் சேட்டன்.

எங்க  அம்மா முன்னாடி கூட அழுததில்லை  என்று சொல்லும் ரங்கன் சேட்டன் அதற்கடுத்த காட்சியே  கண்ணாடியை  மாட்டிக்கொண்டு அழும்பாக  நடப்பதெல்லாம்  வேறு ரகம்.  நமக்குள் இருக்கும் குழந்தையை, மீட்டெடுக்கும் ரங்க சேட்டன், நமக்குள் இருக்கும் ஈகோக்களை  அடித்து உடைத்து, ஒரு வேளை  ஈகோ  என்று ஒன்றிருந்தால் நம்மை தனிமையாக வெளியே விடாமல், நமக்குத் தெரிந்தவர்களை நாம் ரொம்ப நாள் பேசத்தவர்களை   கூப்பிட்டு   பேசச்சொல்லும்  "aavesham ".

மொத்தத்தில்  தத்துவ தளத்தில் heavy ஆக சொல்லவேண்டிய கதை களத்தை 2k இளைஞர்களும்  புரியும் வண்ணம்  கொடுத்த படம் aavesham. குறிப்பாக  80 boomer uncle 2k  cringe கிட்சுடன் நட்பாகும் போது ஏற்படும்  ரசவாதம்  "aavesham ".




Wednesday 8 May 2024

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் == RK, மூத்த பத்திரிகையாளர்கள் == கருத்துரிமை == tribes கரிகாலன் == சில புரிதல்கள்

சவுக்கு சங்கரை கைது செய்து "கருத்து சுதந்திரம்" ஒடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். சவுக்கு சங்கர் பேசுவதெல்லாம் "கருத்தா ", கருதுக்குத்தான் சுதந்திரம் இருக்க முடியும். எதெல்லாம் கருத்தின் கீழே வரும்.
உதாரணம்
1. திமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்கிறது, பெண்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை உரிமைத்தொகையாக கொடுத்திருக்கிறார்கள், பெண்களுக்கு பேருந்து வசதி, இல்லம் தேடி வரும் மருத்துவம், எளிய வணிகர்களுக்கு service tax நிலுவையில் இருப்பதை தள்ளுபடி செய்தது மக்கள் கொண்டாடும் நூலகங்கள், குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பள்ளிக்கல்வித்துறை, ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் இலக்கிய விழாக்கள், புத்தக கண்காட்சிகள், எழுத்தாளர்களுக்கு விருது, எழுவர் விடுதலை, மோடியிடம் GST பற்றி கேள்வி எழுப்பியது,
பாஜகவை அம்பலப்படுத்தும் அரசியல் இதெல்லாம் பாசிட்டிவ் கருத்து.
2.இப்போது நெகடிவ் கருத்துக்கு வருவோம் நீட் தேர்வு இன்னும் ரத்து செய்யப்படாமல் இருப்பது, ஊர் பகுதிகளில் இருக்கும் மின்வெட்டு. தனியார் பேருந்துகளில் கட்டணக்கொள்ளை. தனியார் கடைகளில் chair போடும் உட்காரும் உரிமை சட்டம் போட்டும் அதை கவனிக்காமல் இருப்பது. இப்படி நெகடிவ் கருத்துக்களும் உண்டு.
இப்படித்தான் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்க முடியும், மாற்றுக்கருத்து என்பது கூட இப்படி இருந்துவிட்டால் மட்டுமே மாற்றுக்கருத்து. சவுக்கு சங்கர் கருத்துக்கள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
முதலில் நீதிபதி வீடுகளில் இருக்கும் பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசினார். குறிப்பாக விதவைகள் வேலை செய்யாமலேயே சம்பாதிக்கலாம் , நீதிபதிகளை adjust செய்தால் அனைத்தும் நடக்கும் என்னும் கண்ணோட்டத்தில் கருத்தை தெரிவிக்கிறார்.
அப்படி அங்கு வேலை செய்பவர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் கூட இல்லை, காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று கருத்தை முன்வைக்கிறார். உண்மையில் அங்கு யாரோ ஒருவர் இன்னொருவரை சுரண்டலாம், ஆனால் அதை பொதுபடுத்த முடியுமா? இல்லையென்றால் அந்தத்துறையில் இருப்பவர்கள் எல்லாருமே accused ஆகிவிட மாட்டார்களா? குறிப்பு என்னவென்றால்
கிசுகிசு பாணியைத்தாண்டி இவர் கருத்து செல்லவே செல்லாது, இவர் கருத்து எல்லாமே below the belt என்பார்களே அந்த வகையைச் சார்ந்தது. இதன் பெயர் கருத்து அல்ல, அவதூறு.
அவதூறாக பேசும்போது சம்பந்தப்பட்ட நபர் இவர் மேலே வழக்குகளை போடவே செய்யவார்கள் அல்லவா?
அப்போது நீதிபதிகள் இப்போது காவல்துறை பெண்களைச் சொல்கிறார். எனக்குத்தெரிந்து நிறைய அக்காக்கள் காவத்துறையில் வேலை செய்கிறார்கள் பெரும்பாலும் அவர்களுக்கு குடும்பக் கஷ்டங்கள் நிறையவே உண்டு. காவல்துறையில் வேலை பளுவும் இருக்கவே செய்யுமல்லவா? மொத்தமாக அந்தத் துறை பெண்களை அவதூறு பரப்பும் போது அதையெல்லாம் கருத்து என்று எடுத்துக்கொள்ள முடியுமா?
ஸ்வாதி, ராம்குமார் வழக்கை எடுத்துக்கொள்வோம், ராம்குமார் ஜாமினில் வெளிவருவதாய் இருந்தார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூட படவில்லை. ஆனால் சிறைச்சாலையில் wire கடித்து இறந்து போனார் என்று வெளியில் செய்தி வந்தது. அதை நியாயப்படுத்தினார் சவுக்கு, இவரே வீடியோவில் பார்த்ததாகவும் அது ராம் குமார் தான் என்றும் அழுத்தமாக பேசினார். அந்தப் பையன் பட்டியலின பையன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவிடாமல் வேறொரு கருத்துருவாக்கம் செய்வது சவுக்கின் வாடிக்கை.
அப்படியே இந்தப்பக்கம் ஒரு பள்ளி மாணவி பிரச்சினையில், அந்தப் பெண் காதலித்திருக்கிறாள் அதுதான் காரணம் என்று கூச்சப்படாமல் பேசினார். அந்தப் பள்ளி நிர்வாகிகள் rss பின்புலத்தில் இருப்பவர்கள். அதெப்படி உலகில் உள்ள அனைத்து விடயங்களும் சவுக்குக்கு தெரிந்துவிடுமா? ஒரு மாணவி கொலை வழக்கில் கூட இவர் கருத்துருவாக்கம் செய்யவேண்டிய தேவை என்ன? போலீஸ் விசாரணை செய்யும் முன் youtube இல் பக்கத்திலிருந்து பார்த்த படியே ஒரு கருத்தை உருவாக்குவதன் நோக்கமென்ன? பள்ளி சவுக்குக்கு நெருக்கம் அதனால் இப்படி ஒரு கருத்தை உருவாக்குகிறார்.
சவுக்கின் "கருத்துக்கள்" எல்லாவற்றையும் ஒற்றைப்புள்ளியில் "அவதூறுகள்" என்று சொல்லலலாம். ராம்குமார் அல்லது அந்த பள்ளி மாணவிகள் அல்லது நீதிபதிகள் அல்லது காவல்துறை இதில் எந்த விடயத்தில் ஆதாரத்துடன் பேசியிருக்கிறார். ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது ஆதாரம் தேவை இல்லை குற்றத்தை மறுப்பதற்கும் ஆதாரம் தேவை. ஆதாரம் இல்லாமல் வெறும் அவதூறுகள் வதந்திகள் இதைப்பரப்புவது தான் சவுக்கின் வேலை. வதந்திகள் பரப்புவதும் சட்டப்படி தவறு தான் அல்லவா?
அவருடைய வரலாற்று பேட்டியான sterlite விவகாரம், முழுப்பூசணிகாயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்தார் சவுக்கு. ஊருக்கே தெரியும் அனைவரும் குறிவைத்தே கொல்லப்பட்டார்கள் என்று, ஆனால் சவுக்கு சுடும்போது நடுவில் வந்தார்கள் என்பதைப்போல ஒரு திரைக்கதையை உருவாக்குகிறார்.
அதெப்படி போராட்ட களத்தில் முன்னணியில் இருப்பவர்களை எல்லாம் தேடித்தேடி சுட்டிருக்கிறார்கள்.
அருணா ஜெகதீசன் அறிக்கையில் இதைப்பற்றி எல்லாம் விரிவாக அம்பலப்படுத்தியிருக்கும் போது.
என்னமோ சவுக்கு சங்கரை கேட்டுத்தான் தமிழ்நாடே இயங்கிக்கொண்டிருப்பதைப்போல , அனைத்தையும் பக்கத்திலிருந்து பார்த்ததை போல வாயைத்திறந்தாலே பொய் ,அவதூறு, வதந்தி.
வதந்திகள் மோசமானது இல்லையா? சில வதந்திகள் கலவரங்களுக்குக் கூட காரணமாக இருந்தால், அந்தக் கலவரம் நடந்தபின்பு ஒரு சில உயிர்கள் பறிபோனால் பரவாயில்லையா? வதந்திகள் எப்போதுமே ஆபத்தானது, இவர் habitual offender போலவே தோன்றுகிறார்.
அதைத்தாண்டி அவருக்கு சிறப்பு ஒளிவட்டம் கொடுக்கப்படுகிறது. அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கும் 15 முதல் 20 வயதிருக்கும் சிறுவர்கள் இவரை role model என்று நினைத்துக்கொண்டு, அதே உடல்மொழியோடு பேசவதைப் பார்த்திருக்கிறேன். ஆதாரமே இல்லையென்றாலும் சப்தமாக "அப்படித்தாங்க பேசுவோம்" என்பதைப்போன்ற உடல் மொழிகள் விடலை இளைஞர்களுக்கு ஆபத்து. விடலைகளுக்கு இயல்பாக சீமான், அண்ணாமலை, சவுக்கு போன்றவர்களை பிடிக்கும் ஒரு லாஜிக் இல்லாத பன்ச் வசனங்கள் அவர்களை ஈர்க்கவே செய்யும் எப்படி விஜய், அஜித்துக்கு இவ்வளவு கூட்டம் கூடுகிறது லாஜிக்கோடு அவர்கள் படம் வந்தால் இளைஞர்களே பார்க்க மாட்டார்கள் அல்லவா? அந்த விடலைகள் தான் இவர்கள் டார்கெட்.
சவுக்கு போன்ற்வர்கள் வதந்திகளை தில்லாக பேச முடியும் , அவர் இளைஞர் ரோல் மாடல் ஆகிவிட்டால் இன்னும் பல சவுக்கு சங்கர்கள் உருவாவார்கள், அதாவது ஆதாரமில்லாமல் வதந்தியை பரப்பும் ஆட்கள் அதிகாமாகிவிடுவார்கள். இவர் ஹீரோ எல்லாம் இல்லை ஊருக்குள் பொய்ச்சொல்லிக்கொண்டு, அமைதியை குலைக்கும் habitual offender, இந்த முறை தவறு என்று இளைஞர் சமூகத்துக்கு தெரியவேண்டும் அதற்காகவாவது தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்.
கருத்து வேறு, அவதூறு வேறு, திமுகவுக்கு எதிராக அரசியல் களத்தில் பேசும் அதிமுககாரர்களை பாஜக காரர்களை அனைவரையும் இப்படியா கேஸ் போட்டு உள்ளே வைக்கிறார்கள். சவுக்கு சங்கருக்கு மக்கள் செல்வாக்கு கூட கிடையாது அங்கொன்றும் இங்கொன்றும் சில விடலை சிறுவர்கள் அவர் பக்கம் உண்டு அவ்வளவே.
மனித உரிமைகள் மீறி சவுக்கு தாக்கப்பட்டார் என்று செய்திகளை காவல்துறை மறுத்துள்ளது. high profile வழக்கு அதிமுக, பாஜக என்று influence இருக்கும்போது அப்படி எல்லாம் கைவைக்க மாட்டார்கள். அப்படி அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால் அது தவறு தான் கண்டிக்கத்தக்கது தான். ஆனால் விடயம் தெரியாமல் ஒருபக்கம் கிடைக்கும் செய்திகளை மட்டும் வைத்துவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.
கறுப்பர் கூட்டம் விடயம் நடந்தபோது கைது செய்யவேண்டும் என்று போட்ட மூத்த பத்திரிகையாளர் rk சவுக்குக்காக பேசுகிறார். கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர் கரிகாலன் அதை விமர்சித்து ட்வீட் போட்டபோது அவரை பிளாக் செய்கிறார். இவர்கள் கருத்து சுதந்திரத்தின் லட்சணம் இதுதான்.
tribes சேனலே முடக்கப்பட்டபோது சவுக்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக பேசினார்களா?
பெலிக்ஸ் கிருத்துவராம் தலித்துகளுக்கு மட்டுமே விரோதியிலல்லாமல் ஒட்டுமொத்த சிறுபான்மையனரின் எதிரியாம் திமுக அரசு என்று சொல்கிறார் ஷாலின் மரியா , அவர் டிவீட்க்கு பதில் போட்ட இன்னொரு தோழர் இந்த அடையாளத்துக்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டு கேள்வி எழுப்பும் கரிகாலன் தோழரே பட்டியலின தோழர் தானே என்கிறார், அதற்கு ஷாலின் கரிகாலன் திமுக ஆள் என்பதுபோல பதில் சொல்கிறார்.
சேலத்தில் விவாசாயிகள் நிலம் கையகப்படுத்தும்போது அங்கு களத்தில் வேலை செய்தவர் தோழர் கரிகாலன். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான அழுத்தமான குரல் என்பதாலேயே அவர் சேனல் முடக்கப்பட்டது. வெறும் மேடையில் மட்டுமே பேசிவிட்டு ஆளும்வர்க்க குரலாக இருப்பவரல்ல கரிகாலன். ஒரு youtube தனியார் youtube என்றாலும் நேர்மையாக நடத்தி உழைக்கும் மக்கள் பக்கம் நிற்கும் தோழர்.
இவர்களுக்கு தலித், கிருத்துவம் எல்லாம் பிரச்சினை அல்ல, வலதுசாரி கருத்துக்கள் இருப்பவர்கள் என்றால் ஷாலின் மரியா போன்றவர்கள் அவர்கள் பக்கமே நிற்பார்கள். உதாரணம் இளையராஜா மோடியும் அம்பேத்கரும் ஒன்று என்பார். ஆனால் அம்பேத்கர் பக்கம் நிற்க மாட்டார்கள் தலித் அரசியலென்ற போர்வையில் இளையராஜா என்ற ஆளும் வர்க்க மோடியின் பக்கம் நிற்பார்கள். இதை விமர்சித்து கேள்வி கேட்டுவிட்டால் மற்றவர்கள் எல்லாம் தலித் அல்ல, எங்கள் வலி எங்களுக்கே புரியும் என்று உருட்டி அந்த மக்களையும் குழப்பிவிடுவார்கள். சொல்லப்போனால் அம்பேத்கரியர்களுக்கே எதிரியாக இருப்பவர்கள் இவர்கள் தான்.
ஸ்வாதி ராம்குமார் வழக்கில் , ராம்குமார் கொலை செய்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, ஆனால் படுகொலை செய்யப்பட்டார், அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். ஆனால் ஷாலின் போன்றவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்கு எதிராக கருத்துருவாக்கம் வைக்கும் சவுக்கு மற்றும் பெலிக்ஸ் பக்கம் நிற்பார்கள். ஆளும் வர்க்க கருத்துக்களை அம்பேத்கரியம் என்னும் பெயரில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
சவுக்கு மேலே போலியாக கஞ்சா வழக்கு போடப்பட்டதாக சொல்கிறார்கள். அது இப்போது காவல்துறை கைது செய்யும்போது பிடித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பே மதன் போன்றவர்கள் அந்தச் சேனலில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்தே இந்தக் குற்றசாட்டை வைத்தார்களே, அதற்கு சவுக்கு போன்றவர்கள் பதிலேதும் சொல்லவில்லையே? இத்தனைக்கும் அவர்கள் சேனலிலிருந்தே footage எடுக்கப்பட்டிருக்கிறது, மதன் அவதூறு பரப்புகிறார் இதற்க்கெல்லாம் ஆதாரமில்லை என்று ஒரு மானநஷ்ட வழக்கு போட்டிருக்கலாமே. ஏனென்றால் இது மிகப்பெரிய அவதூறு அல்லவா? அதை ஏன் சவுக்கு செய்யவில்லை. அவர்கள் விடீயோக்களை திருடி எடுத்துவிட்டார்கள் என்றாவது ஒரு வழக்கு போட்டிருக்கலாமே? இவரே ஒரு புலனாய்வு புலி தானே. அதனால் அந்த கஞ்சா வழக்கை எல்லாம் முற்றிலும் புறம் தள்ளிவிட முடியாதென்று நினைக்கிறேன். இருந்தாலும் விசாரணையில் உள்ளது கஞ்சா உண்மையில் வைக்கவில்லை என்றால் நாம் சவுக்கு மீது வைத்திருக்கும் கருத்தை மாற்றிக்கொள்வதில் பிரச்சினை இல்லை ஆனால் அவர் செய்த அவதூறுகளுக்கு அவர் மேலே வழக்கு பதிவு செய்யப்படவே வேண்டும், உப்பை தின்றவர்கள் தண்ணிக்குடிக்க வேண்டுமல்லவா?
, ’に駅 OF SPEECH FREEDOM’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்