Thursday 30 May 2024

வார்த்தைக்கு நடுவில் 

இருக்கும் இடைவெளியில் 

எழுதப்படாத வார்த்தைகள் 

ஒளிந்துகொள்கின்றன, ....!

ஒவ்வொரு வார்த்தையும் 

இன்னொரு வார்த்தையுடன் 

பிரிந்தே இருக்கிறது. 

ஒவ்வொரு எழுத்தும்  

இன்னொரு எழுத்துடன் பிரிந்தே 

இருக்கிறது.........

பிரசித்திப்பெற்ற  

புதினத்தை படித்துமுடித்த 

பின் மூடியே வைக்கப்படுகிறது.........

நனைத்துவிட்ட 

அருவி ......முதுகுத்தண்டிலோ 

தலையிலோ தங்குவதில்லை....

சிலரின் 

நினைவுத்துளிகள்  மட்டும் 

துடைக்கப்படாத துளியாக


 

No comments: