Sunday 18 December 2011

ஐயப்பன் முல்லை பெரியார் பிரச்னையை தீர்த்து வைப்பாரா ?

ஊரே பற்றி எரியும் போது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன். ஊரில் ஒரு ஆன்மிக பக்தன் இருந்தானாம் , எப்போது
பார்த்தாலும் பூஜை புனஸ்காரம் தானாம் . ரொம்ப அமைதியாவே இருப்பானாம் . ஊர்ல ஏதாவது பிரச்சனை நடந்தா கூட ,ரோட்ல ரெண்டு பேரு வெட்டிக்கிட்டு செத்தா கூட , அந்த வழில போகாம வேற வழில கோவிலுக்கு போவானாம் . பக்கத்து வீட்டுக்கும் இவங்க வீட்டுக்கும் குழையடி சண்டை வந்துச்சாம் , பக்கத்து வீட்டம்மா இவங்க அம்மாவை தள்ளிவிட்டதுல இவங்க அம்மா மண்டை உடைஞ்சு போச்சு . பையன் வெளில வந்திருக்கான் ,அம்மாக்கு ரத்தம் தலைல வடுஞ்சுக்கிட்டு இருந்துச்சு , அவங்கள பார்த்து "எல்லாம் பகவான் பாத்துக்குவாரு" அப்படின்னு ஒரு அமைதியா ஒரு புன்னைகை புரிந்து , கோவிலுக்கு கிளம்பிட்டான் .கோவில விட்டு வீட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா நாக்கு புடுங்கற மாதிரி ஒரு வார்த்தை கேட்டாங்க "என்ன டா சாமி , நமக்கு வர பிரச்சனைய தீர்க்க போகுதா ?, ஒரு குழாய் அடி பிரச்சனைய கூட தீர்க்க முடியல என்ன டா சாமி ,
அம்மா அடிபட்டா கூட எல்லாம் கடவுள் செயல்னு அமைதியா இருக்கிற பைத்தியங்கள பக்தர்களா வச்சுருக்கிற சாமி என்ன டா சாமி ?" இதை எல்லாம் கேட்டுடிட்டு அவன் மந்திர புன்னகையோட அமைதியா ,தேஜஸா ஒரு வார்த்தை சொன்னானாம் ," அம்மா தேங்கா ஒடைக்கணும் கோவிலுக்கு , காசு இருக்கா " அப்படினானாம் , அம்மா கோவத்தோட "முதல்ல உன் மண்டையை உடைக்கணும்னு "சொன்னாங்களாம் .

தமிழ்நாட்டோட வாழ்வாதார பிரச்சனை முல்லைப்பெரியார் அணையா இல்லை சபரி மலையா ?????'
போர் குணத்தோட சில லட்ச மக்கள் போராடா? சில மக்கள் அடிவாங்கினாலும் பரவா இல்லை நாங்க
ஐய்யப்பன் தரிசனம் பார்க்காம வரமாட்டோம்னு அடம்பிடிக்கிறாங்க . கேரளா பா ஜா கா முல்லைப்பெரியார்
பிரச்சனையில் தமிழர்களை விரட்டும்பொழுது வாய் பேசாத தமிழக பா ஜா கா , சபரி மலையின் உரிமையை
விட்டுக்கொடுக்க முடியாது என்கிறது . ஐயப்ப பக்தர்களிடம் சில கேள்விகள்

1 ஐயப்பன் முல்லை பெரியார் பிரச்னையை தீர்த்து வைப்பாரா ?
2 முல்லை பெரியார் பிரச்னையை கூட தீர்த்து வைக்க வேண்டாம் , தன்னை நாடி வரும் பக்தர்களை
அடிவாங்காமல் வீடு திரும்ப ஏற்பாடு செய்வாரா ?

No comments: