Friday 16 December 2011

பால் விலை ஏற்றத்திற்கு பதில் சொல்லுமா லோக்பால்

முல்லைப்பெரியார் மக்கள் எழுச்சி
தமிழகத்தில் இருந்து யாரும் ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று விஜயகாந்த்
சொல்வது தவறு, நமக்குள்ள உரிமையை யாரும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்கிறார் பொன் ராதக்கிருஷ்ணன்.தமிழக விவசாயியின் வாழ்வுரிமை இங்கு பாதிக்கப்பட்டிருக்க, வருடத்திற்கு ஒரு முறை போகும் ஐயப்பன் கோவிலை
பற்றி எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார், அதற்கு இன்னொரு தேசியக்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதே பா ஜா கா போன்ற தேசியக்கட்சிகள் அங்கொரு முடிவும், இங்கே
தமிழகத்தில் ஒரு முடிவும் எடுக்கின்றனர் .ஏன் இடதுசாரிக்கட்சிகள் விடயத்தை விஞ்ஞான பூர்வமாய் பார்க்காமல்,இனத்தின் கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர்,மார்க்சியவாதி
என்பவன் சர்வதேசியவாதி, விஞ்ஞான பூர்வ பார்வை கொண்டவன் , ஆனால் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு,கேரளாவில் ஒரு நிலைப்பாடு என்று எடுக்கிறது போலி இடதுசாரி கட்சிகள். ஒரே ஆறுதலான விடயம், ஏன் மகிழ்ச்சியான விடயம் மக்கள் தன் எழுச்சியாக போராடுவது.


பால் விலை ஏற்றத்திற்கு பதில் சொல்லுமா லோக்பால்
பஸ் பால் விலை ஏற்றியது சரி,அது எல்லாம் நட்டத்தில் ஓடுகிறது என்று சொல்கிற நண்பர்களுக்கு ஒரு செய்தி.ஆவின் பால் ஒன்று இரண்டு ஒன்றியங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் லாபத்திலே தான் செல்கின்றன,இதை ஆவின் பால் உற்பத்தியாளர்களே சொல்கிறார்கள்,கோவையில் வருடத்திற்கு பதினைந்து முதல் பதினேழு கோடிகள்
லாபம் பார்க்கிறது, இப்படி பால் விலை உயர்த்துவதால் யாருக்கு லாபம், தனியாருக்கு
மட்டுமே. இப்படி தனியாருக்கு தாரை வார்ப்பது ஊழலில் சேராதா? இந்த பால் விடயம் எல்லாம் ஊழலிலே லோக்பால் மசோதாவில் வருமா,அண்ணாவின்(அன்னா)
தம்பிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.

No comments: