"கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!
முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது....."
"தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே."
"கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்"இது எல்லாம் என் நண்பர் பாலா பக்கங்கள் இணையத்தில் , சமீபத்தில் வந்த தல பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் .முதலில் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் , நான் 'தலையின்' தீவிரமான ரசிகன் ஒரு காலத்தில், தலையும் எனக்கு எதிரி அல்ல நண்பர் பாலாவும் எனக்கு எதிரி அல்ல , என் பதிவுகளை பத்து பேர் மட்டும் பார்த்த காலத்தில் கூட அதில் ஒருவர் பாலாவாக இருப்பார் . தொடர்ந்து மறு மொழி எழுதுவார் . அதனால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது , பாலாவை தூற்றுவதற்கு அல்ல , விமர்சனம் அவ்வளவே .
எனக்கு தலபடத்தில் உதவியாளர்களாய் வேலை செய்தவர்களை தெரியும் . தினமும் நூறு
ரூபாய் பாட்டா கூட கிடைக்காத தொழிலாளி . அனைவருக்கும் பிரியாணி போட்ட தல ,
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் தல , சினிமா உதவி இயக்குனர் அல்ல உதவி கேமரா
மென் என்றால் ,பாட்டா ஒழுங்காய் கிடைக்காது , அதை அவர்களுக்கு தல வாங்கிக்கொடுக்கலாமே அப்படி வாங்கிக்கொடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம் .நடிகருக்கு பதினைத்து கோடி தரும் சினிமா உலகம் , தொழிலாளியின் நூறு ரூபாய் பாட்டவில் தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிக்கும் பொழுது. இத்தனை கோடி ரூபாயில் ஒரு ஒரு லட்சம் செலவு செய்து , நாய்க்கு போடும் பிஸ்கட் போல போடுவதும் , அதை "தல போல வருமா " என்று புகழ்வதும் கண்டிப்பாய் அருவருப்பாய் தானே உள்ளது .
அந்த கட்டுரையில் நுட்பமாய் பார்த்தால் , ஒன்று புலப்படும் , தலையை விமர்சனம் செய்யவில்லை ,அதை மிகையாய் காட்டும் பதிவுலகத்தையும் , அந்த போலி மனிதாபிமானமே சிறந்தது என்று ரசிக்கும் ரசிக மனப்பான்மையே விமர்சிக்கப்பட்டது. நேற்று மாலை மலர் என்று நினைக்கிறேன் , அதில் ஒரு செய்தி 'விமான நிலையத்தில் அனைவரையும் கவர்ந்த தல '. அதாவது கணக்கெடுப்புகள் சொல்கிறது போல்
எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில் . பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் ஒருவர் மட்டுமே படுத்துறங்க முடியும் என்ற தேசத்தில் , ஒருவர் விமானத்தில் போக வசதியுடைய ஒருவர் வருசையில் நிற்கிறார் என்று பாராட்டினால் ,இயல்பாய் இருப்பவருக்கு கோபம் வரத்தான் செய்யும் . இதற்க்கு
முன்பு இப்படி தான் தல வாக்களிக்க வருசையில் நின்றார் . வருசையில் நிற்பது நல்ல விடயம் தான் , அவர் தலையாய் இருந்தால் " SO வாட்" ,அவரும் மனிதர் தானே , அதை வியந்தோதும் ரசிகன் "தலே லால லாலா " என்றும் "தல போல வருமா"
என்றும் கொக்கரிக்கும் பொழுது , அவன் ரசிக மனத்தை விமர்சிக்க வேண்டாமா , இது அஜித் பற்றி விமர்சனம் அல்ல , அந்த ரசிக மனத்தை , போலி மனிதாபிமானத்தை பற்றிய விமர்சனம் அவ்வளவே . அஜித் பற்றிய வினவு கட்டுரையை மீள் வாசிப்பு செய்யவும் .
நண்பர் எப்பூடி அவர்கள் தீவிர தல பேன் என்று நினைக்கிறேன் , அவர் முன்பு அஜித் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் . நானும் அஜித் வெறியனாக இருந்த காலத்தில் நண்பரின் கட்டுரையை AFE (AJITH FANS இயக்கம்) யாஹூ க்ரூப்ஸ் அதில் நண்பர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது நானும் என் நண்பர் ஊடகனும் , ஆனால் காலப்போக்கில் நான்
அரசியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் . நீங்களும் எப்புடியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி வாழ்க்கை வரலாற்றை படித்ததாக சொன்னீர்கள் . மார்க்ஸ் இயல்பிலேயே அனைவரிடமும் விவாதம் செய்யக்கூடியவர் ,எங்கெல்சும் அப்படியே .அவர்கள் நடுத்தர்வர்கத்தை "குட்டி பூஸ்வா" என்கிறார்கள் . இன்று வினவு தளம் அனைவரிடமும் விவாதம் (உங்கள் மொழியில்
சண்டை ) செய்வதை போல அவர்கள் அவர்கள் காலகட்டத்தில் ,நக்கலும் நையாண்டியும் அனைவரையும் விமர்சனமும் செய்தார்கள் .இன்று வினவு தளம் ஆயிரம் பேரிடம் விவாதம் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால் . மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களுக்கு
எதிராய் இருந்த அனைத்து கருத்துக்களுடன் போரிட்டனர் .பிற்போக்கு தனங்களை கடுமையாய் விமர்சனம் செய்தனர் .பெர்க்லி பாதரியாருடன் அவர்கள் விவாதம் செய்கின்றனர் , எனக்கு தெரிந்த உதாரணம் கருத்துமுதல் வாதத்தை விட பொருள் முத வாதமே சிறந்தது என்பதை நிறுவ, கடவுள் இல்லை என்பதை நிறுவ , விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வைத்து , என் பொதுவுடைமை சிறந்தது என்று லெனின் ஒரு புத்தகம் எழுதுகிறார் .
MATERIALISM and EMPIRIO-கிரிட்டிசிசம்இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அனைவரிடமும் விவாதம் செய்கிறது . இது எங்கெல்ஸ் சயின்ஸ் பற்றி எழுதியதன் தொடர்ச்சி .
இவர்கள் எதற்காய் இந்த புத்தகங்களை எழுதுகிறார்கள் , அக்காலத்தில் இருக்கும் மத குருமார்கள் , மக்களை திசை திருப்ப . இவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி , பொதுவுடமையை விஞ்ஞான பூர்வமாய் நிறுவுகிறார்கள் .
அதே மார்க்ஸ் லெனின் மாவோ எங்கெல்ஸ் , அனைவருமே அவர்கள் கால கட்டத்தில் எதிரிகளை விமர்சனம் செய்யும் பொழுது நக்கல் நையாண்டி செய்கிறார்கள் . அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள் . மார்க்சின் குரு ஹெகெல் கூட இதில் இருந்து தப்பவில்லை .
விமர்சனமே செய்யாமல் எப்படி வளர முடியும் நண்பா .
அதில் நண்பர் பாலா கருத்துக்களை சொல்லலாம் ஆனால் கடுமையாக வசை பாடக்கூடாது என்கிறார். ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி பார்ப்பான் , டான்சே ஆடதேரியாது , குரல் நல்ல இருக்காது , நடந்துகிட்டே இருப்பான் , தொப்பை என்பது வசையா . இவ்வளவு மனிதநேயம் என்று சொல்லிக்கொள்ளும் அஜித் ஏன் சமூக பிரச்சனை என்றால் ஒதுங்குகிறார் , தன் படத்தில் வேலை பார்த்த சக ஊழியனுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அந்த கர்ண பிரபு கொதித்து இருக்க வேண்டாமா ????? அப்படி ஒண்ணுக்கும் ஆகாத வாழ்கையில் ,அந்த தொழிலாளியின் சம்பளம் பற்றி கேட்காமல் , பிரியாணி போடுவதை மட்டும் பாராட்டினால் , அந்த பாராட்டையும் , அந்த ரசிப்புத்தன்மையும் மட்டுமே விமர்சிக்கிறோம் .
பொதுவுடமையை எந்த புத்தகத்திலும் கற்க முடியாது , அது களவேலை . அதுவும் நண்பர்கள் இந்த பஸ் விலை ஏறின நேரத்தில் , மாதம் ௨௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ,வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால் நாமே நடுத்தர வர்க்கம்.முரண்பாட்டு தத்துவத்தில் தான் பொது உடமை தத்துவமே இருக்கிறது .
சுரண்டும் வர்க்கம் என்றால் ,சுரண்டப்படும் வர்க்கம் இருக்கும் . அதற்க்கு ஆதரவாய் இருக்கும் நடுத்தரவர்கத்தை வலிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது . நண்பா நான் எந்த கழிவிரக்க வார்த்தைகளையும் பிரயோகம் செய்யவில்லை . இது என் விமர்சனம் அவ்வளவே.
Bala pakkangalvinavu