Monday 28 November 2011

"பிச்சை எடுப்பதில் " அந்நிய முதலீடு


ஒரு ஊரு இருந்துச்சு , அங்க ஒரு சைக்கிள் கடை இருந்துச்சு ,அது ஊருக்காக இருக்கிற பொது மக்களுக்கான சைக்கிள் கடை . சைக்கிள் கடை நட்டத்துல போகுது ,அதனால அத நடத்த முடியலன்னு சொன்னாரு ஊர் பெரியவர்,அதனால ஒரு மணி நேரத்துக்கு சைக்கிள் வாடகையை பத்து மடங்கு ஏத்திட்டாரு. மக்கள் எல்லாம் கொதிச்சு போய் இருந்தாங்க .அந்த நேரத்துல பட்டணத்துல இருந்து ஒரு சைக்கிள் கடை வந்துச்சு ,அதுக்கு மக்கள் ஆதரவு தெரிவிச்சாங்க .அப்புறம் ஊருக்குள்ள அந்த மக்கள் நிறைய பால் குடிப்பாங்க .பாலும் நட்டத்துல ஓடுதுன்னு பட்டணத்து காரங்கட்ட விட்டாரு . அப்புறம் வெளியூரிலிருந்து ஒரு பேங்க் ,ஊரு முன்னேற்றத்திற்காக கடன் தரேன்னு சொல்றான்னு சொன்னாரு ஊர் பெரியவர் . ஆனா ஒரு கண்டிஷன் போடறான் , ஊர்ல இருக்கற மலிக கடைக்கு போட்டியா மலிக கடை ஓபன் பண்ணனும்னு சொன்னாரு . மக்களும் கொஞ்சம் கடுப்போட ஏத்துக்கிட்டாங்க .
அந்த கோவில இருக்கிற பிச்சக்காரங்க பயத்துல இருந்தாங்க அவங்களுக்குள்ள என்ன பேசிக்கிட்டாங்கனா "ஏதோ பட்டணத்து வங்கி நம்ம ஊரு தலைவருக்கு காசு தருதாம் ,ஆனா இங்க பிச்சை எடுப்பதற்கு , அவங்க ஆளுகள
சேத்துகனுமாம்" அப்படினான் ஒருத்தன் . "அப்படியா இவங்க பேழரதுக்கு கூட போட்டிக்கு வருவாங்களா " அப்படினான் இன்னொருத்தன் .

1 comment:

Unknown said...

good..
http://mydreamonhome.blogspot.com/