Friday 26 November 2010

அலசல்

ராஜாவுக்கு பதில் யார் ?

ராஜாவின் மீதான ஊழல் நிரூபிக்கப்படவில்லை அதனால் இது ஊழல் இல்லை என்கிறார்கள்.
BSNL தொழிலாளர்கள் தங்கள் உழைப்பால் உருவான தகவல் தொடர்புதுறையை நட்டப்படுத்தியது எப்படி ஊழலாகும் என்கிறார்கள் . அரபிக் கடல் ஓரத்தில் இருக்கும் பண்ணா , முக்தா என்ற எண்ணை வயல்களின் மதிப்பு 2000 கோடி , அப்பொதுத்துறையை கட்டியாமைத்தவர்கள் தொழிலாளர்கள் .அதை அரசு வெறும் பனிரெண்டு கோடிக்கு அம்பானியிடம் விற்றது அது ஊழல் , அதை போன்ற ஊழலே ராஜாவின் ஊழல் . இவ்வரசு தனியார் பன்னாட்டு முதலாளிகளுக்கும் , தரகு முதலாளிகளுக்கும் உண்டான அரசு . இந்த நட்டம் எல்லாம் எப்படி சரிகட்டப்படும் நம் வரிப்பணத்தில் இருந்து தான் .

BSNL அலைவருசையை ரிலையன்ஸ் கலவாடியத்தில் 1500 கோடி நட்டம் , அதற்க்கு
நட்ட ஈடு வெறும் 90 லட்சம் . ஊழல் செய்த ராஜா பதவி விலகிவிட்டாராம் , அப்பா பெரிய தண்டனை . உலக வங்கியும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆளும் வரை ராஜா என்பவரை தூக்கிவிட்டு வேறு யார் இருந்தாலும் இந்த ஊழல் தொடரும்.


கிகுஜிரோ அட்டை டு அட்டை

நந்தலாலா படம் கிகுஜிரோவின் அப்பட்டமான காப்பி . காட்சிக்கு காட்சி திருடிவிட்டு அவரே
அனுபவித்தமாறு பேசுகிறார் . ஏன் தமிழகத்தில் சொல்லப்படவேண்டிய கதைகளே இல்லையா ??? காப்பி அடிக்கவேண்டியது தான் அதற்காக அங்கு காட்டப்படும் குறியீடு பாம்பு , ஒரு புழு , பனையோலை சொருகி கொள்ளும் மிஸ்கின் சிறுவன் என்று காட்சிக்கு காட்சியா பிட் அடிப்பது .கோணங்கள் முதல்கொண்டு காப்பி செய்யப்பட்டுள்ளது , உதாரணமாய் மிஸ்கின் பையனின் அம்மாவிடம் பேசும் காட்சி .

இதில் லட்சியத்துடன் ஊரில் இருந்து வரும் உதவி இயக்குனர்களை காயப்படுத்துவதை போல பேசுவது . இரண்டரை லட்சத்திற்கு புக் வாங்கி உள்ளாராம் ??? வாழ்க்கையை உலக சினிமாவிலும் , புத்தகங்களிலும் தேடாதீர்கள் மிஸ்கின். கண் திறந்து பாருங்கள் காட்சிகள் கொட்டிக்கிடக்கிறது .

1 comment:

pichaikaaran said...

சினிமா அலசலும், அரசியல் அலசும் தெளிவான பார்வையுடன் இருக்கிறது..
நிறைய எழுதுங்கள்