Wednesday 23 November 2011

தல அமெரிக்காவின் கை கூலியா - நண்பர் பாலவுக்கு எதிர்வினை

"கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!

முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது....."

"தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே."

"கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்"


இது எல்லாம் என் நண்பர் பாலா பக்கங்கள் இணையத்தில் , சமீபத்தில் வந்த தல பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் .முதலில் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் , நான் 'தலையின்' தீவிரமான ரசிகன் ஒரு காலத்தில், தலையும் எனக்கு எதிரி அல்ல நண்பர் பாலாவும் எனக்கு எதிரி அல்ல , என் பதிவுகளை பத்து பேர் மட்டும் பார்த்த காலத்தில் கூட அதில் ஒருவர் பாலாவாக இருப்பார் . தொடர்ந்து மறு மொழி எழுதுவார் . அதனால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது , பாலாவை தூற்றுவதற்கு அல்ல , விமர்சனம் அவ்வளவே .

எனக்கு தலபடத்தில் உதவியாளர்களாய் வேலை செய்தவர்களை தெரியும் . தினமும் நூறு
ரூபாய் பாட்டா கூட கிடைக்காத தொழிலாளி . அனைவருக்கும் பிரியாணி போட்ட தல ,
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் தல , சினிமா உதவி இயக்குனர் அல்ல உதவி கேமரா
மென் என்றால் ,பாட்டா ஒழுங்காய் கிடைக்காது , அதை அவர்களுக்கு தல வாங்கிக்கொடுக்கலாமே அப்படி வாங்கிக்கொடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம் .நடிகருக்கு பதினைத்து கோடி தரும் சினிமா உலகம் , தொழிலாளியின் நூறு ரூபாய் பாட்டவில் தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிக்கும் பொழுது. இத்தனை கோடி ரூபாயில் ஒரு ஒரு லட்சம் செலவு செய்து , நாய்க்கு போடும் பிஸ்கட் போல போடுவதும் , அதை "தல போல வருமா " என்று புகழ்வதும் கண்டிப்பாய் அருவருப்பாய் தானே உள்ளது .

அந்த கட்டுரையில் நுட்பமாய் பார்த்தால் , ஒன்று புலப்படும் , தலையை விமர்சனம் செய்யவில்லை ,அதை மிகையாய் காட்டும் பதிவுலகத்தையும் , அந்த போலி மனிதாபிமானமே சிறந்தது என்று ரசிக்கும் ரசிக மனப்பான்மையே விமர்சிக்கப்பட்டது. நேற்று மாலை மலர் என்று நினைக்கிறேன் , அதில் ஒரு செய்தி 'விமான நிலையத்தில் அனைவரையும் கவர்ந்த தல '. அதாவது கணக்கெடுப்புகள் சொல்கிறது போல்
எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில் . பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் ஒருவர் மட்டுமே படுத்துறங்க முடியும் என்ற தேசத்தில் , ஒருவர் விமானத்தில் போக வசதியுடைய ஒருவர் வருசையில் நிற்கிறார் என்று பாராட்டினால் ,இயல்பாய் இருப்பவருக்கு கோபம் வரத்தான் செய்யும் . இதற்க்கு
முன்பு இப்படி தான் தல வாக்களிக்க வருசையில் நின்றார் . வருசையில் நிற்பது நல்ல விடயம் தான் , அவர் தலையாய் இருந்தால் " SO வாட்" ,அவரும் மனிதர் தானே , அதை வியந்தோதும் ரசிகன் "தலே லால லாலா " என்றும் "தல போல வருமா"
என்றும் கொக்கரிக்கும் பொழுது , அவன் ரசிக மனத்தை விமர்சிக்க வேண்டாமா , இது அஜித் பற்றி விமர்சனம் அல்ல , அந்த ரசிக மனத்தை , போலி மனிதாபிமானத்தை பற்றிய விமர்சனம் அவ்வளவே . அஜித் பற்றிய வினவு கட்டுரையை மீள் வாசிப்பு செய்யவும் .

நண்பர் எப்பூடி அவர்கள் தீவிர தல பேன் என்று நினைக்கிறேன் , அவர் முன்பு அஜித் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் . நானும் அஜித் வெறியனாக இருந்த காலத்தில் நண்பரின் கட்டுரையை AFE (AJITH FANS இயக்கம்) யாஹூ க்ரூப்ஸ் அதில் நண்பர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது நானும் என் நண்பர் ஊடகனும் , ஆனால் காலப்போக்கில் நான்
அரசியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் . நீங்களும் எப்புடியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி வாழ்க்கை வரலாற்றை படித்ததாக சொன்னீர்கள் . மார்க்ஸ் இயல்பிலேயே அனைவரிடமும் விவாதம் செய்யக்கூடியவர் ,எங்கெல்சும் அப்படியே .அவர்கள் நடுத்தர்வர்கத்தை "குட்டி பூஸ்வா" என்கிறார்கள் . இன்று வினவு தளம் அனைவரிடமும் விவாதம் (உங்கள் மொழியில்
சண்டை ) செய்வதை போல அவர்கள் அவர்கள் காலகட்டத்தில் ,நக்கலும் நையாண்டியும் அனைவரையும் விமர்சனமும் செய்தார்கள் .இன்று வினவு தளம் ஆயிரம் பேரிடம் விவாதம் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால் . மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களுக்கு
எதிராய் இருந்த அனைத்து கருத்துக்களுடன் போரிட்டனர் .பிற்போக்கு தனங்களை கடுமையாய் விமர்சனம் செய்தனர் .பெர்க்லி பாதரியாருடன் அவர்கள் விவாதம் செய்கின்றனர் , எனக்கு தெரிந்த உதாரணம் கருத்துமுதல் வாதத்தை விட பொருள் முத வாதமே சிறந்தது என்பதை நிறுவ, கடவுள் இல்லை என்பதை நிறுவ , விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வைத்து , என் பொதுவுடைமை சிறந்தது என்று லெனின் ஒரு புத்தகம் எழுதுகிறார் .

MATERIALISM and EMPIRIO-கிரிட்டிசிசம்இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அனைவரிடமும் விவாதம் செய்கிறது . இது எங்கெல்ஸ் சயின்ஸ் பற்றி எழுதியதன் தொடர்ச்சி .
இவர்கள் எதற்காய் இந்த புத்தகங்களை எழுதுகிறார்கள் , அக்காலத்தில் இருக்கும் மத குருமார்கள் , மக்களை திசை திருப்ப . இவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி , பொதுவுடமையை விஞ்ஞான பூர்வமாய் நிறுவுகிறார்கள் .

அதே மார்க்ஸ் லெனின் மாவோ எங்கெல்ஸ் , அனைவருமே அவர்கள் கால கட்டத்தில் எதிரிகளை விமர்சனம் செய்யும் பொழுது நக்கல் நையாண்டி செய்கிறார்கள் . அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள் . மார்க்சின் குரு ஹெகெல் கூட இதில் இருந்து தப்பவில்லை .
விமர்சனமே செய்யாமல் எப்படி வளர முடியும் நண்பா .

அதில் நண்பர் பாலா கருத்துக்களை சொல்லலாம் ஆனால் கடுமையாக வசை பாடக்கூடாது என்கிறார். ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி பார்ப்பான் , டான்சே ஆடதேரியாது , குரல் நல்ல இருக்காது , நடந்துகிட்டே இருப்பான் , தொப்பை என்பது வசையா . இவ்வளவு மனிதநேயம் என்று சொல்லிக்கொள்ளும் அஜித் ஏன் சமூக பிரச்சனை என்றால் ஒதுங்குகிறார் , தன் படத்தில் வேலை பார்த்த சக ஊழியனுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அந்த கர்ண பிரபு கொதித்து இருக்க வேண்டாமா ????? அப்படி ஒண்ணுக்கும் ஆகாத வாழ்கையில் ,அந்த தொழிலாளியின் சம்பளம் பற்றி கேட்காமல் , பிரியாணி போடுவதை மட்டும் பாராட்டினால் , அந்த பாராட்டையும் , அந்த ரசிப்புத்தன்மையும் மட்டுமே விமர்சிக்கிறோம் .

பொதுவுடமையை எந்த புத்தகத்திலும் கற்க முடியாது , அது களவேலை . அதுவும் நண்பர்கள் இந்த பஸ் விலை ஏறின நேரத்தில் , மாதம் ௨௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ,வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால் நாமே நடுத்தர வர்க்கம்.முரண்பாட்டு தத்துவத்தில் தான் பொது உடமை தத்துவமே இருக்கிறது .

சுரண்டும் வர்க்கம் என்றால் ,சுரண்டப்படும் வர்க்கம் இருக்கும் . அதற்க்கு ஆதரவாய் இருக்கும் நடுத்தரவர்கத்தை வலிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது . நண்பா நான் எந்த கழிவிரக்க வார்த்தைகளையும் பிரயோகம் செய்யவில்லை . இது என் விமர்சனம் அவ்வளவே.
Bala pakkangal
vinavu

16 comments:

sarvan said...

///எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி மாதம் இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில்.///

தவறாக எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். தினக்கூலி என்று குறிப்பிட்டு விட்டு மாதம் இருபது ரூபாய் என்று உள்ளது. அதை கவனிக்கவும்.

கேரளாக்காரன் said...

முட்டாள் தனமான எதிர்வினை

வெண்ணிற இரவுகள்....! said...

வருகைக்கு நன்றி நண்பர்களே

பாலா said...

நண்பரே வெகு நாட்களுக்கு பிறகு எழுத தொடங்கி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக் இருக்கிறது. ஊடகன் அவர்கள் கொடுத்த லிங்கில்தான் இங்கே வந்தேன். என் பதிவியும் மதித்து அதற்கு எதிர்வினை எழுதியதற்கு நன்றி.

பாலா said...

ஒரு தனி மனிதனின் ஒரு நல்ல குணத்தை கூட பாராட்டக்கூடாது அப்படியே பாராட்டினாலும் அதை நாங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்ற எண்ணத்தை சுட்டிக்காட்டத்தான் இதை எழுதினேன். அதே போல அஜீத் வரிசையில் நின்றார், வணக்கம் சொன்னார் என்பதெல்லாம் அதே துறையில் இருக்கும் மற்றவர்கள் செய்யாமல் இருக்கும்போது இவர் மட்டும் செய்கிறாரே என்று சுட்டிக்காட்டுவது தவறு என்கிறீர்களா?

அஜீத் கர்ண பிரபு அல்ல. பிறரை ஒப்பிடும்போது கொஞ்சம் மனிதநேயத்தோடு நடந்து கொள்கிறார். அதையும் ஏளனம் செய்தால் எப்படி?

//வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால்

அவ்ளோ பெரிய கட்டுரையில் தல பற்றி சொன்ன பகுதியை மட்டும் சொல்லி இருக்கிறீர்களே? மற்ற பகுதிகளை ஏன் விட்டு விட்டீர்கள்? முக்கி முக்கி சாதி பிளவை உண்டாக்கி கொண்டிருக்கும் அந்த வலைத்தளத்தை பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு வேளை நீங்களும் அதில் இணைந்திருந்தால் மன்னிக்கவும்.

கொஞ்ச காலத்துக்கு முன்னால் ஸ்ரேயா கோஷல் பற்றி ஜொள்ளு ஒழுக ஒரு கட்டுரை வினவில் வெளிவந்ததே அதை படித்தீர்களா? அம்மணி இப்போது ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

Karthick said...

ஹலோ சார், எதுக்காக அஜித் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம், அஜித் ஒன்றும் பப்ளிசிட்டி தேடும் நடிகர் அல்ல. தன் படம் ஓடவேண்டும் அதற்க்கு ரசிகர்களை அழைத்து, அரசியலுக்கு நாளைக்கு வருவேன், அடுத்த மாசம் வருவேன் என்று சொல்லி பொழைப்பை கெடுத்து வாழும் நடிகர் அல்ல. அவர் உதவி செய்த காரியங்கள் பல. அது பத்திரிக்கைகளுக்கு தெரியாமல் போனது பல. இன்றைக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்கள் தனக்கு கிழே வேலை செய்யும் தொழிலாளியை மதிக்கிரர்களா? பதினைத்து கோடி வாங்கும் மனிதர் சக தொழிலாளியை மதிப்பது போலியா? உங்களுக்கு இது போலி என்று தெரிந்தால் உங்கள் மனநிலை அஜித் மீது இருக்கும் கோபம் தன் இவ்வாறு விமர்சிக்க தூண்டியுள்ளது. அஜித்திற்கு டான்ஸ் ஆட தெரியாது, குரல் சரிஇல்லை, தொப்பை என்பது எல்லாம் சப்பக்கட்டு. இதெல்லாம் ஒரு காரணம் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் இதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு உள்ள தகுதிகள் என்றால் அஜித்தின் சினிமா வாழ்க்கை எப்போதே முடிந்திருக்கும். டான்ஸ், சிக்ஸ் பேக் இவை இருந்தால் எந்த சினிமாவும் நூறு நாட்கள் ஓடி விடுமா? ரஜினி சினிமாவில் பட்ட அவமானங்கள், வேதனைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே இது விமர்சனம் இல்லை உங்கள் தனி மனிதன் கோபம், வெறுப்பு, இவைதான். இதுபோன்ற தனி மனிதனை விமர்சிக்கும் கேவலமான, அருவருப்பு தனமான விமர்சனங்கள் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நன்றி.

Karthick said...

ஹலோ சார், எதுக்காக அஜித் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம், அஜித் ஒன்றும் பப்ளிசிட்டி தேடும் நடிகர் அல்ல. தன் படம் ஓடவேண்டும் அதற்க்கு ரசிகர்களை அழைத்து, அரசியலுக்கு நாளைக்கு வருவேன், அடுத்த மாசம் வருவேன் என்று சொல்லி பொழைப்பை கெடுத்து வாழும் நடிகர் அல்ல. அவர் உதவி செய்த காரியங்கள் பல. அது பத்திரிக்கைகளுக்கு தெரியாமல் போனது பல. இன்றைக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்கள் தனக்கு கிழே வேலை செய்யும் தொழிலாளியை மதிக்கிரர்களா? பதினைத்து கோடி வாங்கும் மனிதர் சக தொழிலாளியை மதிப்பது போலியா? உங்களுக்கு இது போலி என்று தெரிந்தால் உங்கள் மனநிலை அஜித் மீது இருக்கும் கோபம் தன் இவ்வாறு விமர்சிக்க தூண்டியுள்ளது. அஜித்திற்கு டான்ஸ் ஆட தெரியாது, குரல் சரிஇல்லை, தொப்பை என்பது எல்லாம் சப்பக்கட்டு. இதெல்லாம் ஒரு காரணம் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் இதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு உள்ள தகுதிகள் என்றால் அஜித்தின் சினிமா வாழ்க்கை எப்போதே முடிந்திருக்கும். டான்ஸ், சிக்ஸ் பேக் இவை இருந்தால் எந்த சினிமாவும் நூறு நாட்கள் ஓடி விடுமா? ரஜினி சினிமாவில் பட்ட அவமானங்கள், வேதனைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே இது விமர்சனம் இல்லை உங்கள் தனி மனிதன் கோபம், வெறுப்பு, இவைதான். இதுபோன்ற தனி மனிதனை விமர்சிக்கும் கேவலமான, அருவருப்பு தனமான விமர்சனங்கள் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நன்றி.

Karthick said...

ஹலோ சார், எதுக்காக அஜித் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம், அஜித் ஒன்றும் பப்ளிசிட்டி தேடும் நடிகர் அல்ல. தன் படம் ஓடவேண்டும் அதற்க்கு ரசிகர்களை அழைத்து, அரசியலுக்கு நாளைக்கு வருவேன், அடுத்த மாசம் வருவேன் என்று சொல்லி பொழைப்பை கெடுத்து வாழும் நடிகர் அல்ல. அவர் உதவி செய்த காரியங்கள் பல. அது பத்திரிக்கைகளுக்கு தெரியாமல் போனது பல. இன்றைக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்கள் தனக்கு கிழே வேலை செய்யும் தொழிலாளியை மதிக்கிரர்களா? பதினைத்து கோடி வாங்கும் மனிதர் சக தொழிலாளியை மதிப்பது போலியா? உங்களுக்கு இது போலி என்று தெரிந்தால் உங்கள் மனநிலை அஜித் மீது இருக்கும் கோபம் தன் இவ்வாறு விமர்சிக்க தூண்டியுள்ளது. அஜித்திற்கு டான்ஸ் ஆட தெரியாது, குரல் சரிஇல்லை, தொப்பை என்பது எல்லாம் சப்பக்கட்டு. இதெல்லாம் ஒரு காரணம் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் இதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு உள்ள தகுதிகள் என்றால் அஜித்தின் சினிமா வாழ்க்கை எப்போதே முடிந்திருக்கும். டான்ஸ், சிக்ஸ் பேக் இவை இருந்தால் எந்த சினிமாவும் நூறு நாட்கள் ஓடி விடுமா? ரஜினி சினிமாவில் பட்ட அவமானங்கள், வேதனைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே இது விமர்சனம் இல்லை உங்கள் தனி மனிதன் கோபம், வெறுப்பு, இவைதான். இதுபோன்ற தனி மனிதனை விமர்சிக்கும் கேவலமான, அருவருப்பு தனமான விமர்சனங்கள் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நன்றி.

வலிப்போக்கன் said...

தல-ய துாக்கி தலையில வைக்கிறாங்க!

வெண்ணிற இரவுகள்....! said...

@jayakumar
நண்பரே நானும் அதை தான் சொல்லவந்தேன் . நீங்கள் நன்றாக படித்து பாருங்கள் ,ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி
பார்ப்பான் என்பதை தான் தொப்பை ,அது இது என்று சொல்லி இருந்தேன் . கீழே கொடுக்க பட்டிருக்கிற வினவு லிங்கை
பாருங்கள் நண்பரே உங்களுக்கு , அது அஜித் பற்றிய விமர்சனமா இல்லை அதை ரசிக்கும் ரசிகனின் மன நிலை பற்றிய
விமர்சனமா என்று தெரியும் .

வெண்ணிற இரவுகள்....! said...

@valipokkan
நண்பரே தலையை தூக்கி தலையில் எல்லாம் வைக்கவில்லை . விமர்சனமே செய்து இருக்கிறேன் , என்று நினைக்கிறேன் .
அதை கிண்டல் தொனியிலேயே எழுதினேன் . அது புரியவில்லை என்றால் , என் எழுதும் முறையில் பிழை உள்ளது என்று
நினைக்கிறேன் . எனக்கு அந்த கிண்டல் தொனி கூட வரவில்லை என்று நினைக்கிறேன் .

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி சரவன் தவறை திருத்தியாச்சு

வெண்ணிற இரவுகள்....! said...

@BALA
எனக்கு தெரிந்து அது ஜொள் ஒழுக எழுதிய கட்டுரை அல்ல . அந்த குரல் எப்படி உள்ளது என்பதை பற்றிய கட்டுரை .
மேலும் ஸ்ரேயா கோஷல் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார் என்று கட்டுரை அவர் பின்னால் செல்லவில்லை .
இங்கேயும் அஜித் நல்ல நடிகர் என்று மட்டும் சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை . அந்த OFF SCRENE இமேஜ்
பற்றி சொல்ல பட்டு இருக்கிறது . அது நல்லதா கெட்டதா என்பதே விமர்சனம் , இது அஜித் பற்றி விமர்சனமா இல்லை அதை ரசிக்கும்
ரசிக மனம் பற்றி விமர்சனமா ? சொல்லுங்கள் .........................!!!! இந்த மனிதாபிமானம் போலியாய் இருக்கும் பொழுது , யாருக்கும்
பயன் இல்லாததாய் இருக்கும் பொழுது ,அந்த பாராட்டு எதற்கு , ...................!!!! இந்த பிரியாணியை பார்த்து மனிதாபிமானம்
என்ற விடயமே , அம்மாவோ இல்லை ஐயாவோ கம்ப்யூட்டர் , டிவி கொடுக்கும் பொழுது வாக்களிக்கிறது ...........அதையும்
மனிதாபிமானம் என்று சேர்த்து விடலாமா ..........???? ஒரு IT GUY சக தொழிலாளிகளுக்கு சம்பளம் கேட்பதில்லை , சரி
ஆனால் தொழிற்சாலைகளில் , நிரந்தரமாகாத தொழிலாளிக்காக நிரந்தர தொழிலாளிகள் போராடுகிறார்கள் , பெரும்புதூர்
தொழிற்சாலைகளில் அது வாடிக்கை நண்பரே ............!!!!!! ஒரு it guy அவர்கட்க்கு ஆப் ஸ்க்ரீன் இமேஜ் இல்லை , ஆனால்
தல தல என்று கொண்டாடும் பொழுது, அப்படி கொண்டாட கூடிய செயலா இது என்று யோசிக்கும் பொழுது ????????????
சரி பாலா அவர்களே பரமக்குடி விடயங்கள் நடந்தது தவறா ? அதை பற்றி எழுதுவது தவறா ........... குஜராத் மதக்கலவரங்களை
ஏற்றுக்கொள்கிறீர்களா ??????????????

பாலா said...

இதே கட்டுரையை வேறு யாராவது எழுதி இருந்தால், சம்பந்தப்பட்ட தோழர்களிடம் இருந்து, ஜொள் கட்டுரை என்றுதான் பெயர் கிடைத்திருக்கும். மேலும் நுகர்வு கலாச்சாரம் அது இது என்று கிளப்பி விட்டிருப்பார்கள். எனக்கு பிடித்தது மட்டுமே சிறந்தது. நான் ஒன்றை எப்படி ரசிக்கிறேனோ அப்படியே மற்றவரும் ரசிக்கவேண்டும் என்று முதலில் நினைக்க கூடாது.

அவர் பிரியாணியை காட்டி ஓட்டு கேட்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே போல இந்த பிரியாணியை வைத்து பப்ளிசிட்டி தேடவில்லை. அவரிடம் மற்ற நடிகர்களை விட கொஞ்சம் அதிகமாக சக மனிதர்கள் மீது அன்பு இருக்கிறது. அதை சுட்டிக்காட்டுவது தவறென்று எப்படி சொல்ல முடியும்? உங்களுக்கு ஸ்ரேயா கோஷல் கட்டுரை பற்றி என்ன அபிப்ராயமோ அதேதான் எனக்கு அந்த பிரியாணி கட்டுரையும்.

நடந்த விஷயங்கள் பற்றி கட்டுரை எழுதும்போது, இரண்டு பக்கம் இருக்கும் நிறை குறைகளை எழுத வேண்டும். அதை விடுத்து, கோபமேற்றும் விதமாக எழுதி, கருத்துறைகளில் ஒருவரை ஒருவர் மோத விட்டு வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் நியாயம்? எல்லா கட்டுரைகளிலும் வலிய பார்ப்பன என்ற வார்த்தையை ஏன் சேர்க்கிறார்கள்?

Sathish said...

நான் ப‌திவ‌ர் இல்லை, வெரும் வாசிப்பாள‌ன் ம‌ட்டுமே. பின்னூட்ட‌ம் கூட‌ எப்போவாவ‌துதான் இடுவேன். சென்ற‌ வ‌ருட‌ம் ஒரு முறை இதே போல் வின‌வில் வ‌ந்த‌ ஒரு க‌ட்டுரைக்கு பின்னூட்ட‌ மிட்டேன், மிக‌வும் ம‌ரியாதையாக‌. ஆனால் அத‌ற்கு ப‌தில‌ளித்த‌ ஒரு வின‌வு தோழ‌ர், "உன்னுடைய‌ பெய‌ரே சொல்கிற‌தே நீ ஆரிய‌ன் என்று, நீயெல்லாம் ஏன் க‌ருத்து சொல்ல‌ வ‌ர்ற‌" என்று. என்னால் சிரிப்பை அட‌க்க‌ முடிய‌வில்லை.
நான் ஆரிய‌ன் இல்லை என்றோ, இல்லை த‌மிழ‌ன் என்றோ அவ‌ரிட‌ம் நிரூபிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் என‌க்கு எதுவும் இல்லை. ம‌ற்ற‌ வின‌வு தோழ‌ர்க‌ளும் அதை க‌ண்டிக்க‌வில்லை.

இதே ந‌ம்ம‌ ஊரில் ஸ்டாலின், லெனின் என்றெல்லாம் பேர் வைக்காலாம், ஆனால் ச‌தீஸ் என்ற‌ பெய‌ர் ஆரிய‌ன் ம‌ட்டுமே வைப்பான் என்ற‌ தோழ‌ரின் புரித‌ல் ம‌லைக்க‌ வைக்கிற‌து.

இதே புரித‌லில்தான் (எதையுமே அரை குறையாய்) ம‌ற்ற‌ வின‌வு தோழ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்று நினைக்கிறேன்.

மாற்று க‌ருத்து உடைய‌வ‌ர்க‌ளை கேவ‌ல‌மாக‌ பேசும் இவ‌ர்க‌ளுக்கு பார்ப்ப‌னீய‌த்தை பேசும் யோக்ய‌தை இல்ல‌வே இல்லை, வின‌வும் ஒரு வ‌கையில் அதுதான்.

Sathish said...

நான் ப‌திவ‌ர் இல்லை, வெரும் வாசிப்பாள‌ன் ம‌ட்டுமே. பின்னூட்ட‌ம் கூட‌ எப்போவாவ‌துதான் இடுவேன். சென்ற‌ வ‌ருட‌ம் ஒரு முறை இதே போல் வின‌வில் வ‌ந்த‌ ஒரு க‌ட்டுரைக்கு பின்னூட்ட‌ மிட்டேன், மிக‌வும் ம‌ரியாதையாக‌. ஆனால் அத‌ற்கு ப‌தில‌ளித்த‌ ஒரு வின‌வு தோழ‌ர், "உன்னுடைய‌ பெய‌ரே சொல்கிற‌தே நீ ஆரிய‌ன் என்று, நீயெல்லாம் ஏன் க‌ருத்து சொல்ல‌ வ‌ர்ற‌" என்று. என்னால் சிரிப்பை அட‌க்க‌ முடிய‌வில்லை.
நான் ஆரிய‌ன் இல்லை என்றோ, இல்லை த‌மிழ‌ன் என்றோ அவ‌ரிட‌ம் நிரூபிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் என‌க்கு எதுவும் இல்லை. ம‌ற்ற‌ வின‌வு தோழ‌ர்க‌ளும் அதை க‌ண்டிக்க‌வில்லை.

இதே ந‌ம்ம‌ ஊரில் ஸ்டாலின், லெனின் என்றெல்லாம் பேர் வைக்காலாம், ஆனால் ச‌தீஸ் என்ற‌ பெய‌ர் ஆரிய‌ன் ம‌ட்டுமே வைப்பான் என்ற‌ தோழ‌ரின் புரித‌ல் ம‌லைக்க‌ வைக்கிற‌து.

இதே புரித‌லில்தான் (எதையுமே அரை குறையாய்) ம‌ற்ற‌ வின‌வு தோழ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்று நினைக்கிறேன்.

மாற்று க‌ருத்து உடைய‌வ‌ர்க‌ளை கேவ‌ல‌மாக‌ பேசும் இவ‌ர்க‌ளுக்கு பார்ப்ப‌னீய‌த்தை பேசும் யோக்ய‌தை இல்ல‌வே இல்லை, வின‌வும் ஒரு வ‌கையில் அதுதான்.