Thursday 1 December 2011

வால் மார்ட் ,பிணவறையில் உட்க்கார்ந்து சாப்பிட முடியுமா

சில்லறை வணிகத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் , அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .KRP செந்தில் போன்ற படித்தவர்களே , அந்நிய முதலீடு வந்தால் என்ன தவறு அவர்கள் வரி கட்டுவார்கள் , இங்கே சரவணா ஸ்டோர்ஸ் போல சொந்த ஜாதியிலேயே மக்களை வேலைக்கு அமர்த்தி கொத்தடிமை போல நடத்துகிறார்கள் ,இது அன்னியர்கள் முதலீடு செய்வதால் குறையும் என்று சொல்கிறார்கள் .சரி உண்மையில் வால் மார்ட் என்னும் நிறுவனத்தில் என்ன தான் நடக்கிறது . வால் மார்ட் உலகில் உள்ள நாற்பத்து ஆறு நாடுகளின் வறுமையை வைத்து தனது பசியை போக்கிகொள்கிறதாம். உதாரணமாய் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளை அதிக நேரம் வேலை செய்ய வைப்பது , கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் வேலை வாங்குவது , மாசமாய் இருக்கும் பெண்கள் வேலைக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று கருகலைக்க சொல்வது . ஒரு தொழிலாளி அவன் உரிமை வேண்டி எதிர்த்தால் அவனை கட்டம் கட்டுவது இப்படி நாற்பத்தாறு நாடுகளில் தன் கொடுங்கோல் ஆட்சியை நிறுவுகிறது வால் மார்ட் .

வால் மார்ட் மொத்தம் 102 டாலர் மில்லியன் கம்பெனி . அனைத்து பொருட்களையும் நம்ம ஊரு சரவணா ஸ்டோர்ஸ் போல மலிவான விலையில் கிடைக்கும் இடம் ,இது எப்படி சாத்திய படுகிறது , ஊழியர்களின் கடுமையான உழைப்பு , ஒரு நாளில் குறைந்தது பதினான்கு மணி நேர உழைப்பு , சில குழந்தைகள் 18 மணி நேரம் வேலை செய்வதினால் அங்கேயே படுத்து உறங்குகிறார்கள் . இது தான் இவர்கள் தரும் வேலையின் லட்சணம். 48 நாடுகளில் வால் மார்ட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளன . அத்தனை நாடுகளும் ஏழை நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் . அந்நாடுகளில் வறுமை தலைவிரித்து ஆடும் ,வேலை வாய்ப்பு மிகக்குறைவாய் இருக்கும் , அத்தகைய நாடுகளில் புகுந்தால் வேலை தருகிறேன் என்று சொல்லிவிட்டு கம்மியான கூலிக்கு சுரண்ட முடியும் , கம்மியான விலைக்கு விற்க முடியும் , சந்தையை காப்பாற்ற முடியும் இது தான் வால் மார்டின் தாரக மந்திரம் , வெற்றியின் மூலதனம் .

வால் மார்டில் வேலைசெய்வோறது வருட சம்பளம் 400 டாலராம் . அதாவது தோரையமாய் 20000 ரூபாய் . வால் மார்டில் அதிகமாய் பெண்களையும் குழந்தைகளையும் வேலைக்கு வைக்கிறார்கள். அவர்களை தானே மலிவான விலைக்கு வேலை வாங்க முடியும் . குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதில் வால் மார்ட் பங்களாதேஷிலும் , சீனாவிலும் மாட்டி உள்ளது . குற்றசாட்டு என்ன வென்றால் , மற்றவர்கள் வேலை செய்வதை விட அதிக வேலை குறைந்த கூலி கொடுக்கப்பட்டதாம் . சீனாவில் நாள் ஒன்றிற்கு இருபது மணி நேர வேலை , ஏழு நாட்கள் வேலை , குறைந்த கூலி , வேலை செய்தது குழந்தைகள் , கேட்கவே ரணமாய் தான் உள்ளது அல்லவா ????

நாமெல்லாம் அங்காடி தெரு பார்த்து விட்டு சரவணா ஸ்டோர்ஸ் கடையை திட்டிகிறோம் , உண்மையில் வால் மார்ட் கடையில் என்ன நடக்கிறது , சீனாவில் NIKE சூ தயாரிக்க குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் . கண்டிப்பாய் நூறு சூ தயாரிக்க வேண்டும் ,அதில் ஒரு சூ தவறாய் இருந்தாலும் அன்றைய
கூலி குழந்தைகளுக்கு கிடையாது இதுவே வால் மார்ட் நிலை . மூன்றாம் உலக நாடுகளில் வால் மார்ட் தொழிற்சாலைகள் ஆபத்தான தொழில்நுட்பத்துடன் தான் இருக்குமாம் , தண்ணீர் குடிக்க , ஒன்றுக்கு போக , இரண்டுக்கு போக கூட வழி இல்லாமல் தான் தொழிலாளர்கள் , கொத்தடிமையாய் இருப்பார்கள் .
படிக்கும் பொழுதே நம் அங்காடி தெரு போல நூறு மடங்கு பிரச்சனை இருக்கும் என்று தெரிகிறது .

இத்தனை பிரச்சனைகள் வால் மார்ட் என்ற ஒரு நிறுவனத்துக்கே இருக்கிறது , இப்படி சில்லறை வணிகத்தில் ஐம்பத்தி ஒரு சதவிகிதம் வந்தால் , இந்திய மக்கள் தொகை ஐம்பத்தி ஒரு சதவிகிதம் குறையும் என்பதில் ஐயமில்லை .நான் சொல்வதில் பிழை இருந்ததாக நினைத்தால் , WALL MART என்று இணையத்தில் அடித்து தேடிப்பாருங்கள் . நம்மிடம் இன்று பொருட்களை வால் மார்ட் எவ்வளவுக்கு விற்றாலும் காசு கொடுத்து வாங்க கூடிய வசதி இருக்கலாம் . அதனால்
நாம் HIPPY ஆங்கிலம் பேசிவிட்டு "IF FOREIGN INVESTORS COME ,SO வாட்" என்று கேட்கலாம் . பிணங்களின் மீது அமர்ந்து உண்ண முடியுமா???????

6 comments:

பாலா said...

கண்டிப்பாக இது ஆபத்தான விஷயம்தான்.

Unknown said...

நல்ல விளக்கம்.
நான் எழுத நேரமும் அதற்கான விபரத்தை ஆய்வதற்கான நேரமும் இன்றி ஒரே ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறேன்.
அந்தக் கேள்விகளின் நீட்சியாக இக்கட்டுரை இருக்கிறது.
நன்றி.

முடியுமெனில் இங்கேயும் வாருங்கள்....

http://unmayapoyya.blogspot.com/2011/12/blog-post.html

வலிப்போக்கன் said...

மேட்டுக்குடி மக்கள் கதவ சாத்திவிட்டு
ஏ.சியில சாப்பிடுவாங்க, அதனாலதான் அன்னிய மூரதனத்தை கைகூப்பி அழைக்குறாங்க.

துரைடேனியல் said...

Arumai.

துரைடேனியல் said...

Tamilmanam vote 3.

Pradhip said...

If Walmart will not be accepted in India for above reason, I think it is not appropriate. The reasons mentioned above happens when the government is not responsible enough. I completely accept that Indian government doesn't take care of its people as expected. But the situation is similar and employees are treated in the same line as above in Indian retail stores or small shops. If Walmart comes to India, it may affect our domestic shop owners and they may bring products from other country like China which may affect Indian manufacturing.