Friday 25 September 2009

துர்கனவு

"அண்ணாதுரை அப்பா மலம் அல்லரப்ப மூச்சு முட்டி போய்ட்டாரு டா"

ஓடி வந்து சொன்னாள் எதிர் வீட்டு ஆயா.என் அப்பனின் பெயர் மதியழகன்,மலம் அள்ளுபவர், திராவிட கொள்கைகள் உடையவர்.


அதனால் என் பெயர் அண்ணாதுரை என்றும், அக்காவின் பெயர் கண்ணகி என்று வைத்தார்,ஆளும் கட்சிகாரர் .

அம்மாவின் இறந்த நாள் எனக்கு பிறந்த நாள். நான் ஒன்பதாவது படிக்கிறேன், என் அக்கா +2.

அப்பா ஒருவரே சம்பாதிப்பவர் ."பொணத்த பத்தி கவலைப்படாத, என் கையில காசு இருக்கு டா" என்றான் ஏரியா வட்ட செயலாளர்.

பொணத்தை எரித்து விட்டு வரும் போதே என் அக்காவை படுக்கைக்கு அழைத்தான்."காசு நிறைய தரேன் பாப்பா" என்றான்.

என் அக்காவும் கதறினாள்."இல்லை என்றால் நாளைக்கே துட்ட வை" என்றான்.பொணத்தை வைத்து அரசியல் பண்ணும் பொணம் தின்னி அவன் ஒரு சுன்......................! என் அக்காவும் அவன் காமத்திற்கு பலி ஆனாள்.

பள்ளி சென்றேன்,எனக்கும் ஒருவனுக்கும் பிரச்சனை ஏற்பட அவன் "உங்க அக்கா தேவடியா தான டா".......என்று சொல்ல அவன் மண்டையை உடைத்து, இனி வீட்டில் இருக்க கூடாது என்று கிளம்பினேன்.

பசித்தது பசிக்கும் போது பகுத்தறிவாவது மயிராவது....பகுத்தறிவு பேசியவன் எனக்கு சோறு போடவில்லை,அவன் தமிழ் நாட்டின் முதல்வன், அவர் மகன்கள் அமைச்சர்கள்.


அவர் பொண்ணு MP,என் அக்கா தேவடியா....கதறினேன் அழுதேன்...யாரோ கடபாறையை நெஞ்சில் குத்தியது போல வலித்தது . பாவம் என் அக்கா அவளை விட்டுவிட்டு வந்திருக்க கூடாது.


இந்த சமுதாயம் என் மேல் காறி உமிழ்ந்தது.எனக்கு சோறு போட்டது ஒரு
purse,பகுத்தறிவல்ல.


பிச்சை எடுத்தேன், T nagar madley subway நான் படுத்து கொண்டிருக்கும் இடம்.


ஒரு பிச்சை காரன் என் பக்கத்தில் படுத்தான்

எனக்கு கூசியது .அவன் காமத்திற்கு

வடிகால் ஆனேன்.நாங்கள் எல்லாம் அழுகி

போனவர்கள்.


மறு நாள் காலையில் ahobali madam பள்ளியில் abdul kalaam பேசி கொண்டிருந்தது கேட்டது.

"கனவு காணுங்கள்" கூட்டத்தில் கர ஒலி "எனக்கு வாழ்கையே கனவாகி விட்டது.அவர் கூட உயர் தர பள்ளிக்கு செல்கிறார் ,நான் படித்த காசிமேடு பள்ளிக்கு வந்ததில்லை.

அவர் car என்னை கடந்து போனது "கனவு கூட உயர் ஜாதி குழந்தைகளுக்கே சொந்தமா".

பக்கத்தில் சிலர் வேதம் சொல்லி கொண்டிருந்தனர். யார் எப்படி போனாலும் நான் வேதம் சொல்வேன்???

அந்தப் பக்கம் கட்சி மாநாடு "கடவுள் இருக்கிறாரா?" என்று speaker அலறிகொண்டிருந்தது முதலில் மனிதன்
இருக்கிறானா ....?

8 comments:

ஊடகன் said...

//மறு நாள் காலையில் ahobali madam பள்ளியில் abdul kalaam பேசி கொண்டிருந்தது கேட்டது."கனவு காணுங்கள்" கூட்டத்தில் கர ஒலி "எனக்கு வாழ்கையே கனவாகி
விட்டது.அவர் கூட உயர் தர பள்ளிக்கு செல்கிறார் ,நான் படித்த காசிமேடு பள்ளிக்கு
வந்ததில்லை//

அருமையான கருத்து...........

கடல் அலைகள்... said...

//பசித்தது பசிக்கும் போது பகுத்தறிவாவது மயிராவது....பகுத்தறிவு பேசியவன் எனக்கு சோறு போடவில்லை,அவன் தமிழ் நாட்டின் முதல்வன், அவர் மகன்கள் அமைச்சர்கள்.//

உன்ன்மையின் பிரதிபலிப்பு.......

தொடருங்கள் தோழரே........

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி maximumus

Ashok D said...

அடிச்சி நொறிக்கிட்டீங்க...

தமிழ் அஞ்சல் said...

அவர் car என்னை கடந்து போனது "கனவு கூட உயர் ஜாதி குழந்தைகளுக்கே சொந்தமா".

பக்கத்தில் சிலர் வேதம் சொல்லி கொண்டிருந்தனர். யார் எப்படி போனாலும் நான் வேதம் சொல்வேன்???

அந்தப் பக்கம் கட்சி மாநாடு "கடவுள் இருக்கிறாரா?" என்று speaker அலறிகொண்டிருந்தது முதலில் மனிதன்
இருக்கிறானா ....?

semA PUNCH...

rajeshkannan said...

Super Karthi.........

kannan said...

அந்தப் பக்கம் கட்சி மாநாடு "கடவுள் இருக்கிறாரா?" என்று speaker அலறிகொண்டிருந்தது முதலில் மனிதன்
இருக்கிறானா ....?

beautiful da....

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ashok mani kannan