Thursday 29 December 2011

பச்சை மஞ்ச வைட் தமிழன் டா

"தமிழா தமிழா நாளை நம் நாளே " ,
"தமிழ் என்றால் நானொரு தமிழன் டா "
"அழகிய தமிழ்மகன் நீ தானே "
என்னும் சொல்லும் பச்சை மஞ்ச வைட் தமிழர்கள் நிஜத்தில் அட்டை கத்தி வீரர்களாகவே இருக்கிறார்கள் .
முல்லைப்பெரியார் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள விவசாய வாழ்வாதாரமே அழிந்து கொண்டிருக்கிறது அதற்கு குரல் கொடுக்காத தலைவர்,
இப்பொழுது முற்ப்போக்கு முகமுடிக்கு சூப்பர் ஸ்டார் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறார் .
தேனீ, மதுரை பக்கம் தலைக்கு ரசிகர்கள் அதிகம், மக்கள் பணம் மட்டுமே முக்கியம் எக்கேடு கேட்டால் என்ன என்று தல சிங்கபூர் சென்றுள்ளார்
புத்தாண்டு கொண்டாட.விளம்பர வியாபாரி சூர்யா, அன்னா ஹசாரே அவர்கட்கு ஆதரவு தெரிவிக்கும் சூர்யா ,"உலக தமிழர்களின் வெற்றி" என்று ஆர்பரிக்கும் சூர்யா , இதற்கு குரல் கொடுக்கவில்லை. நாளைய முதலவர் விஜய் அவர்கட்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் அவர் வாய் திறக்க மாட்டார்
கொஞ்சம் மேலோட்டமாய் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தமிழர்கள் வெளிநாட்டிலே பார்த்தால் மட்டுமே படம் ஓடும் , அதனால் அங்கே தமிழனுக்கு ஆதரவு , இங்கு கேரளாவில் படம் ஓட வேண்டும் , கேரளா ரசிகனை பகைத்து கொள்ள முடியாது அதனால் இங்கே வாய் திறக்க கூடாது.இப்படி
பிழைப்புவாதியாய் இருக்கும் நடிகர்களுக்கு CUT OUT தோரணம் , பால் அபிஷேகம் .நீங்க கேட்கலாம்
அவங்க அவங்க வேலைய பார்க்குறாங்க படத்த மட்டும் பாருங்கன்னு ?
கலைத்துறை என்பது வியாபாரம் சார்ந்ததல்ல மக்கள் சார்ந்தது,மக்களின் பிரச்னையை மைய்யபடுத்தி பேசுவதே
கலை, அவனே கலைஞன்.

1 comment:

IlayaDhasan said...

விட்டுப்போனவர்கள்:
தவிர்க்க முயலுகிறேன் என்று சொன்ன இளையராசா , அல்வா கொடுத்துவிட்டார்...அதையும் இளிச்சவா தமிழ் மக்கள் கூட்டமாக போய் கேட்டுவிட்டு, 'ஆகா சூப்பர்' என்று எழுதுகிறார்கள் , அதை புறக்கணிக்க வேண்டும் என்று கூடத் தோணவில்லை...ஏன்ன அது தென் தமிழக பிரச்சன சென்னைக்கு என்ன வந்தது என்று ...

இசைப்புயல் 'அருமையான படம்' என்று சொல்லிவிட்டு , நான் அமெரிக்காவில் இருந்ததால் பிரச்சினையின் ஆழம் தெரியவில்லை என்று பல்ட்டி அடித்துவிட்டார்...

காலம் இதையெல்லாம் மறக்கடித்துவிட்டு , ஜனங்கள் இந்த சூப்பர் வி ஐ பி களின் பின்னால் வழக்கம் போல் வால் பிடிக்கத்தான் போகிறார்கள்...