Sunday 13 June 2010

பிரபா அண்ணாவிற்கு

நேற்று இரவு நண்பன் புலிகேசியுடன் பேசிக்கொண்டிருந்தேன் , அப்பொழுது அவன் ஒரு அதிர்ச்சியான விடயத்தை சொன்னான் , பிரபாகர் அண்ணனின் தம்பிதிவாகர் இறந்து விட்டார் என்று கலங்கி போய்விட்டேன் . பிரபாகர் அண்ணா பதிவுலகில் பல பேருடன் நெருக்கமாய் இருப்பவர் . எனக்கு முன்பெல்லாம் அடிக்கடி போன்செய்து
பேசுபவர், தம்பி அப்படி எழுதாத இப்படி எழுது என்று கையை பிடித்து சொல்லிக்கொடுப்பவர் . கடைசியாய் நான் சச்சின் பதிவு போட்டபொழுது கண்டித்துவிட்டு சென்றார் மறுபடியும் நான் ஒரு எதிர்வினை செய்தேன் , அன்று முதல் நானும் அவரும் பேசுவதில்லை . ஆனால் நேற்று இச்செய்தியை கேட்டு அதிர்ந்து தான் போனேன் . எத்தனையோசோகங்கள் இருக்க மரணம் மட்டும் ஏன் இவ்வளவு வலியை கொடுக்கிறது , ஏன் உலகம் இத்தனை சோகங்களை புதைத்து கொண்டுள்ளது . எப்படியும் ஒரு நாள் அனைவரும் போகக்கூடியவரே ,
ஆனால் மரணம் என்று வரும்பொழுது இனிமேல் அந்த நபரை நம்மால் பார்க்கவே முடியாது என்பது மிகப்பெரிய வேதனை .அவரை நம்மால் பார்க்க முடியாது , அவரால் நம்மைபற்றி நினைக்க முடியாது "HE IS NO MORE " என்பது எவ்வளவு வேதனை . அண்ணா உங்கள் வருத்தம் புரிகிறது , நான் இதற்க்கு முன்னால் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் .உங்கள் தம்பியின் இழப்பை ஈடு செய்ய முடியாத தம்பிகளாய் இருக்கிறோம் , ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா.

6 comments:

Unknown said...

ஆழ்ந்த அஞ்சலிகள் ..

அன்புடன் நான் said...

திவாகர் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

பிரபா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கண்ணகி said...

ஆழ்ந்த அஞசலிகள்...

pichaikaaran said...

I understand the pain... no words to express my feeling..

புலவன் புலிகேசி said...

அண்ணனுக்கு அனுதாபங்கள் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன்..

தேசாந்திரி-பழமை விரும்பி said...

எத்தனை ஆறுதல்கள் சொன்னாலும்
இது போன்ற துயரங்கள் உண்டாக்கிய வடுவின் ரணம் அதிகம்தான்... :(