Thursday 24 June 2010

ஈழத்தின் செந்நீரிலே எழுதப்பட்ட செம்மொழி






















ஈழ சாகோதரி
சேலைகள் கிழிக்கப்பட்டு
தோரணம் கட்டினர் ........!!!!
முள்வேலிக்குள் தமிழர் இருக்க ....
அதை கொண்டாட மாநாடாம்
மாநாடு நடத்துகிறார்
"மானாட மயிலாட " பெயர் வைத்தவர் ....!
"பெண் சிங்கம்"
சோனியா என்று கர்ஜிக்கிறார்
"செம்மொழி கண்டான் "
ஈழத்தமிழரின்
செந்நீரிலே எழுதப்பட்ட மொழி
கண்ணீரிலே எழுதப்பட்ட மொழி
செம்மொழி

5 comments:

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை....

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

புலவன் புலிகேசி said...

//செந்நீரிலே எழுதப்பட்ட மொழி
கண்ணீரிலே எழுதப்பட்ட மொழி
செம்மொழி //

நண்பா எனக்கு இந்த வரிகளில் உடன் பாடில்லை. இங்கு மொழியைக் குற்றம் கூறத் தேவையில்லை. செம்மொழி மாநாட்டை தி.மு.க மாநாடாக்கிய தமிழ்க் காவலனை குறை கூற வேண்டும். தன் சுய விருப்புக்காக மக்களின் வரிப் பணம் அழிக்கப் பட்டதை எதிர்க்க வேண்டும்.

வெண்ணிற இரவுகள்....! said...

மொழியை குற்றம் சொல்லவில்லை , செம்மொழி மாநாடு தேவை இல்லை
என்பதே சாரம்

அருண்மொழிவர்மன் said...

இது ஈழவிவகாரத்தில் தனது துரோகத்தால் ஏற்பட்ட வடுவை மறைக்க கருணாநிதி ஆடும் நாடகம்...

///செம்மொழி மாநாட்டை தி.மு.க மாநாடாக்கிய தமிழ்க் காவலனை குறை கூற வேண்டும். தன் சுய விருப்புக்காக மக்களின் வரிப் பணம் அழிக்கப் பட்டதை எதிர்க்க வேண்டும்.

24 June 2010 21:19///

///மொழியை குற்றம் சொல்லவில்லை , செம்மொழி மாநாடு தேவை இல்லை
என்பதே சாரம்///

இரண்டுமே உண்மைதான்

Srikanth said...

Good one. Also I liked: http://vizhiyilvizhunthavan.blogspot.com/2009/11/blog-post_12.html