Friday 25 June 2010

பார்த்திருந்தால் ரசித்திருப்பேன்






















பானா காத்தடிக்கும்
அதை பிடித்துக்கொண்டிருப்பவனுக்கும்
உண்டான உறவு காதலுக்கும்
எனக்கும் .........!
காத்தாடி உயரப்பறந்தாலும்
அதன் நூற்கள் நம் கைக்குள்ளே ...........!!!!
காதல் விட்டுசென்றாலும்
பூமராங் போல திரும்ப வந்து ஒட்டிக்கொள்கிறது .........!!!!
எதிர் திசையில் இருக்கும் காந்தம்
போல ஈர்த்துக்கொண்டு வருகிறது ............!!!!!!!
நான் மறக்க நினைக்கும் பொழுது
கண்டிப்பாய் வருகிறாள் ............வேறு நாட்டில் இருந்து ........,
நான் உயிரோடு தான் இருக்கேன் என்று நியாபகப்படுத்துக்கிறாள் ................!!!
சங்கடப்படுவாள் என்று
அவள் வந்த மாதம் சந்துப்பக்கம் அதிகம்
போகவில்லை ..........!!!
"அவ எல்லாம் வாழ்க்கைல இல்ல டா" என்று நண்பர்களிடம்
வீராப்பு பேசிக்கொண்டிருந்தேன் .....................
எனக்கும் அவளுக்கும் தெரிந்த
சிறு பெண்ணிடம்
கேட்டேன் ................!!! "அமெரிகாக்காரங்க போயட்டங்கலானு"
" போய் ஒருவாரம் ஆச்சு நா " என்றாள்
சிறிதாய் வலித்தது ...............
இருக்கும் வரை பார்க்கக்கூடாது என்ற எண்ணம்
போன பிறகு பார்த்திருக்கலாமோ
என்றது

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

"அருமை"

சசிகுமார் said...

கவிதை அருமை நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramesh said...

நன்றாக இருக்கு நண்பா

புலவன் புலிகேசி said...

இது வெறும் கவிதை மட்டுமல்ல என்பது எனக்கு தெரியும் நண்பா. இது உனக்கு உண்மையில் நடந்த சம்பவம். விட்டொழி என ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. இருந்தாலும் விட்டொழி.

Madumitha said...

காதலின் வலி.

Katz said...

உண்மை சம்பவமோ