Wednesday 30 June 2010

பதிவுலக சந்தேகங்களும் அதற்க்கு உண்டான பதில்களும்

"படைப்புகள் நிரம்பி வழிந்தாலும் குப்பைத்தொட்டி நூலகம் ஆகாது. ஒரு நூலகம் போல ஆக வேண்டும் என்று கண்டதை எல்லாம் நிரப்பி என்மனம் குப்பைதொட்டி ஆனதுதான் மிச்சம். முதலிலேயே கூறிகொள்கிறேன் இவை என் வாதங்கள் அல்ல. சந்தேகங்கள்தான்." இவர் விவாதங்களே வேண்டாம் என்கிறார் விவாதங்களை குப்பத்தொட்டி என்கிறார் . இது தான் திமிர் பிடித்த கருத்து , உங்களுக்கு ஒரு கருத்து பிடிக்கவில்லையா விவாதம் செய்யுங்கள்
விவாதம் செய்ய முடியாமல் குப்பை தொட்டி என்று சொல்கிறீர்கள் ...............சரி விவாதம் இல்லாமல் , மணிரத்தனம் சிறந்தவர் , பார்பனர்கள் நல்லவர்கள் , பெண்கள் அடங்கி தான் இருக்கவேண்டும் . முதலாளிக்கு அடங்கி போக வேண்டும் , கடவுள் இருக்கிறார் , இது எல்லாம் நீங்கள் சொல்ல வரும் கருத்து இதன் பெயரே பார்பனீயம்பாலா


புலிகேசியின் பதிவு படித்தேன் அதில் பால பக்கங்கள் என்பவர் தன் மனக்குமுறலை தெரிவித்து உள்ளார் . சரி அவருக்கு பதில் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .
1 "ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா?" நண்பரே ஆண்கள் தண்ணி அடிக்கும் பொழுது ஏன் பெண்கள் தண்ணி அடிக்கக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார் . பெண்களுக்கு வசதியான உடையை உடுத்துகிறார்கள் ....அதை உடுத்த கூடாது என்றுசொல்வது ஆணாதிக்கம் தானே ,உங்கள் ஆடையை பெண்ணா தெரிவு செய்கிறாள் நீங்கள் தானே தெரிவு செய்கிறீர்கள் நண்பரே .அப்பொழுது பெண்களுக்கும் அவர்களுக்கு பிடித்த உடையை தேர்வு செய்ய முடியும்


























2 " இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? "
பெண்கள் படிப்பை மறுக்கிறீர்களா ......... அது என்ன படித்த பின்பா வேலைக்கு போன பின்பா ................... எத்தனையோ உழைக்கும் பெண்கள் அப்பா அம்மாக்கு சோறுபோடுவது
எனக்கு தெரியும் ......... நீங்கள் தவறை சுட்டிக்காட்டுவது தவறில்லை .........ஆனால் பெண் படித்த திமிர் , வேலைக்கு போகிறாள் அதனால் என்கிறீர்கள் பெண்கள் வேலைக்குபோக கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் படிந்து இருக்கிறது .... இது கூட பார்பநீயமே .........

3 பார்பனீயம் ஏன் கண்டிப்பாய் எதிர்க்க படவேண்டும் . இவர் இவர் இந்த வேலையை தான் செய்ய வேண்டும் என்று பார்பனீயம் சொல்கிறது . உலகத்தில் எந்தமதத்திலும் தன் மதத்தை சேர்ந்தவர்களை தொடக்கூடாது என்று இல்லை , ஆனால் பார்பனீயம் சொல்கிறது தீண்டாமை. அருந்ததி இன மக்கள் தான் இன்றும் மலங்களை எடுக்கிறார்கள் அது ஏன் என்று விளக்கம் சொல்லுங்கள் , பார்பனர்கள் தான் இந்த அமைப்பை கொண்டு வந்ததே . நாங்கள் மட்டுமே இறை தூதர்கள் நீங்கள் எல்லாம் தீண்ட தகாதவர்கள் என்று சொன்னவர்கள் பார்பனர்கள் . தலித் மக்கள் துன்புறும் பொழுது கோபம் கொள்ளாத நீங்கள் , பார்பனரை திட்டும் பொழுது மட்டும் கோபம் கொள்வது கூட பார்பனீயம் பார்பனர்கள் என்றால் ஏன் திட்டுகிறார்கள் என்று நான் விளக்கம் சொல்கிறேன் .

4 ///ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி கொண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா? "மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி." என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா? "நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் /////

ஐயா பாலா அவர்களே மணிரத்னம் சம்பாதிப்பதும் , சாதாரண தொழிலாளி முதலாளியிடம் சம்பாதிப்பதும் ஒண்ணா ???????? சாதாரண தொழிலாளி தன் வாழ்க்கை ஓட்ட முதலாளியிடம் வேலை செய்கிறான் . ஆனால் மணிரத்னம் போல நூறு கோடி சம்பாதிக்க , தாக்ரே அவர்கட்க்கு கூல கும்பிடு போட்டு , வரலாற்றை திரித்து சொல்பவர்கள் இல்லை நாங்கள் . அம்பானி அவர்களால் இறந்த சிறு முதலீட்டளர்கள் உண்டு , முதலாளி அயோக்யனே , அம்பானி அவர்களை பணத்திற்காக திருட்டுதனைத்தை ஹீரோ போல நாங்கள் காட்ட வில்லை . மணிரத்னம் காட்டுகிறார் . நூறு கோடி சம்பாதிப்பதையும் , வேறு வழி இல்லாமல் மாதம் ஐந்து முதல் பத்தாராயம் சம்பாதிப்பதும் ஒன்று அல்ல .

எனக்கு தெரிந்து தோழர்கள் MANAGER பதவி வந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை , நீங்கள் விருப்பப்பட்டால் நன் அவர்களை காண்பிக்கிறேன் , உங்கள் மணிரத்னத்தால் அதுமுடியுமா MANAGER பதிவி என்றால் முதலாளிக்கு ஜால்ரா போட வேண்டியது வரும் என்பதால் . உங்களை போல் அவர்கள் புலம்பவில்லை , களத்திலே மக்களுக்காய் இருக்கிறார்கள் . இது எப்படி தெரியுமா உள்ளது ......தண்ணீர் தனியார் மாயம் ஆகிறது என்றால் , எல்லாரும் KINLEY தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று காலச்சூழல் இருக்கிறது , நீங்கள் தண்ணீர் குடிக்கும் பாமரனையும் , KINLEY கம்பெனி இரண்டையும் ஒரே தராசில் வைப்பது எவ்வளவு அயோக்ய தனமோ அவ்வளவு அயோக்யத்தனம் உங்கள் மணிரத்னத்தையும் தன் குடும்பம் வாழ அதிகம் ஆசை படாமல் சிறு வேலைகள் பார்க்கும் தொழிலாளியையும் compare செய்வது .

5 உங்கள் கடவுள் நம்பிக்கைக்கு நாளை பதில் சொல்கிறேன் ..................
bala pakkangal

4 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

மறுமொழிகளை எதிர்ப்பார்கிறேன் .......... ஆழ்ந்த விவாதம் உண்மையை வெளிக்கொணரும்

வெண்ணிற இரவுகள்....! said...

இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது வரிக்கு வரி சொல்ல முடியும் .ஒரு முதலாளி என்பவனால் நல்லவனாகவே இருக்க முடியாது ........ நல்லவனாய் இருந்தால் அவன் முதலாளியாகவே இருக்க முடியாது என்பதே உண்மை ........... இரண்டாவது காசு கொடுக்கிறான் என்பதற்காய் விமர்சனம் பண்ணக்கூடாதா என்ன இது என்ன விழுமியம் என்றே தெரியவில்லை , உழைப்பிற்கு குறைந்த ஊதியம் தான் தருகிறானே தவிர அவன் அதிகம் தருவதில்லை என்பதே உண்மை நீங்கள் என்னமோ பிச்சை போடுவதை போல சொல்கிறீர்கள் சரி அப்படியே காசு கொடுத்தாலும் தவறு என்றால் சுட்டிக்காட்ட வேண்டாமா

வெண்ணிற இரவுகள்....! said...

விவாதம் செய்வோம் சரி தவறு எது என்பதை பார்ப்போம் கேள்வி கேட்பதே தப்பு
என்று எப்படி சொல்வது

Bala said...

நண்பா... என் கருத்துக்களை பின்னூட்டம் இடமுடியாததால் ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். நேரமிருந்தால் படியுங்கள்.

http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post.html