Tuesday 21 December 2010

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா

இலக்கியம் என்றால் ஏதோ விட்டத்தை பார்த்து கொண்டு தோன்றுவதை எல்லாம் எழுதுவது என்று வெகு காலம் நினைத்துக்கொண்டிருந்தேன் .
நான் படித்த தமிழ் இலக்கியம் அனைத்தும் தனிமை , வெறுமை , சமூகத்தால் பாதிக்கப்படும் தனிமனித வாழ்க்கை போன்றவற்றை பிரதிபலித்தன .
மனிதனை தனித்தனியாய் பிரிக்கும் வேலையை அவை செவ்வென செய்தன . இலக்கியம் என்றால் இயலாமையை எழுதுவது என்று நினைத்துக்கொண்டேன் .
என் வாசிப்பு எஸ் ரா இருந்து தொடங்கியது "துணை எழுத்து" வாசித்து பிரமித்து போனேன் , அப்புறம் கதா விலாசம் , விழித்திருப்பவனின் இரவு
என்று வாசிப்பு தொடர்ந்தது , இவை எல்லாம் என்னை நகரசெய்யாமல் பழமையை நோக்கி பின்னுக்கு அழைத்தன , ஒரு எழுத்தாளன் என்றால் சமூகத்தை வெளியில்
இருந்து பார்த்து இயலாமையை பதிவு செய்ய வேண்டும் போல என்று நினைத்துக்கொண்டேன் , அப்பொழுது "நினைவுநதி கனவு குட்டை " படிக்க நேர்ந்தது,
எனக்குள் இருக்கும் அற்பவாத சிந்தனை எல்லாவற்றையும் தவிடுபொடி ஆக்கியது . இலக்கியம் என்பது மக்களுக்கானது மக்களை பிரதிபலிக்க வேண்டும் ,
மக்கள் அந்த புத்தகம் படித்து ஒரு அடியாவது நகர வேண்டும் என்று என் மனதில் ஆணியாய் படிந்தது . அது இந்த புரிதல் அனைவருக்கும் செல்லவேண்டும்
என்று நினைக்கிறேன் . வினவு தளம் இத்தகைய மக்களுக்கான இலக்கியத்தை தருகிறது . அவர்களின் புத்தக வெளியீடு வரும் ஞாயிறு அன்று நடக்கிறது ,

புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிமனிதனுடைய வலிகளை , எழுத்தாளனது வலிகளை பதிவு செய்யும் இயல்பாய் . ஆணால் மனிதன் என்ற ஒட்டுமொத்த சமூகமாய்
பார்க்கும் இலக்கியம் நமக்கு அவசியம் உதாரணமாய் "தாய்" புதினம் , அப்படிப்பட்ட மாற்றம் தேவை என்று நினைக்கிறேன் .



கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!




கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.

1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்
விலை ரூ. 40.00
2. ஈராக்: வரலாறும் அரசியலும்
- பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 15.00
3. அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்
- வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
விலை ரூ. 10.00
4. விடுதலைப் போரின் வீர மரபு
- புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
விலை ரூ. 65
5. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
- உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
விலை ரூ. 55.00
6. நினைவின் குட்டை கனவு நதி
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
-சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும்
நூல்,புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 70.00
7. மீண்டும் தொழிலாளி வர்க்கம்

- வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 80.00
8.
நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

- வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 110.00

_____________________________________________________

நூல் வெளியீட்டு விழா
நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!


(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

___________________________________________________

No comments: