Wednesday 10 March 2010

மேட்ச்(கிரிக்கெட் பெண்)
















120 கிலோமீட்டர் வேகத்தில் போட பட்ட பந்து தினேஷ்சின் ஹெல்மெட்டை உரசி சென்றது. அடுத்த பந்து outswinger இவன் மட்டையில் edge வாங்கி முதல் ஸ்லிப் நோக்கி சென்றது ஸ்லிப் கைக்குள் எளிதாய் அமர்ந்து அவனுக்கான university டீம் வாய்ப்பை தட்டிப்பறித்து . அவன் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே பெவிலியன் திரும்பினான் .

ஆம் இது final மதுரை கல்லூரிகளுக்குள் நடக்கப்படும் tournament . இதில் நன்றாய் விளையாடுபவன் university ஆட்டத்திலே சேர்த்து கொள்ள படுவான். madura காலேஜ் கிரௌண்ட் , madura காலேஜ் மற்றும் சௌராஷ்டிர கல்லூரி எப்பொழுதுமே final வருவார்கள். சௌராஷ்டிர காலேஜ் சார்பாக ஒன் டௌன் இறங்கினான் கார்த்திக்,அவனுக்கு university வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது, அவன் ஒரு madura காலேஜ்
பெண்ணையும் காதலித்துக்கொண்டிருந்தான். அதே பெண்ணை எதிர் அணியில் இருப்பவனும் காதலித்துக்கொண்டிருந்தான். அவன் அதே கல்லூரி வேறு, அவன் பெயர் ஜோதி. அவனுக்கும் கார்த்திக்கும் university டீம் முதல் பெண் வரை போட்டி.

அந்த பெண் வேறு மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறாள் இருவருமே ஒரு தலை காதல். அவள் முன்னாடி வீரத்தை காட்ட வேண்டும்.இன்று ஜோதி பந்து வீச வந்தால் அடித்து நொறுக்க வேண்டும் என்று இறங்கினான் கார்த்திக். கவனம் முழுவதும் அந்த பெண் பார்கிறாலே நன்றாய் விளையாட வேண்டும் என்பதிலேயே இருந்தது. அழகாய் வந்த புல் டாஸ் பந்து அடிக்க வேண்டும் என்ற பதட்டத்திலேயே குச்சிக்குள் விட்டான் கார்த்திக். கோல்டன் duck , பில்டிங்கில் இருக்கும் ஜோதிக்கு ஒரே சந்தோஷமாய் இருந்தது. கார்த்திக் கோச்சிடம் அதிகம் திட்டு வாங்கினான், "ஒழுங்கா ஆடிருந்த மிட் விக்கெட் ல four " என்று திட்டினார்.

அடுத்து இறங்கினான் அருண் இரண்டு மேட்ச் ஆடி இருப்பன், ஒரு அளவு ஆடுவான். முதல் இருபது பந்துகள் கவனமாய் ஆடினான் , V முறையில் ஆடினான் காலில் விழும் பந்துகளை மட்டும் லாங் ஆன் லாங் ஆப் திசையில் ஆடினான், நல்ல அளவில் எழும்பும் பந்துகளை விட்டு விடுவான் குச்சிக்கு வரும் பந்து defence செய்வான்.

ஜோதி பந்து வீச வந்தான். ஜோதி ஒரு மித வேக பந்து வீச்சாளன். அவன் காதலி பார்த்துக்கொண்டிருக்கிறாள் நன்றாய் வீச வேண்டும். ஜோதியின் பலமே line length பந்து மெதுவாக வரும் ஆனால் ஆட முடியாது ஆனால் லூசாக வந்தால் அடி நொறுக்கி விடலாம் வேகம் கம்மி. ஜோதி அவன் காதலி பார்த்துக்கொண்டிருக்கிறாள் நன்றாய் போட வேண்டும் என்ற நினைப்பிலேயே முதல் பந்தை OP யாக குத்தினான் அருண் முதல் பந்தில் அடித்தது ஆறு ரன்கள். அடுத்த பந்து length குறைவான பந்து மிட் விக்கெட் திசையில் நான்கு ரன்கள். அப்புறம் இரண்டு wide என்று ஜோதி கொடுத்தது 18 ரன்கள். ஜோதி ஒரு ஓவருடன் நிறுத்தப்பட்டான். ஐம்பது ஓவரில் சௌராஷ்டிரா கல்லூரி அடித்த ரன்கள் 287 அருண்
80 ரன்களும் அணித்தலைவர் சந்தோஷ் கோபி 125 சார்லஸ் 35 ரன்களும் எடுத்தனர்.

அந்த university கப் சௌராஷ்டிர காலேஜ் எடுத்தது. அருண் university அணிக்கு தேர்வு செய்யப்பட்டான். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கார்த்திக் ஜோதி இருவரும் முக்கியமான நேரத்தில் விளையாடுவதில்லை என்பதால் தேர்வு செய்யப்படவில்லை. university அணியிலும் அந்த பெயர் தெரியாத காதலியின் காதலனும் ஆனான் அருண் .

2 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மன்னார்குடி said...

கிரிக்கெட் நல்லா விளையாடுற பசங்களா பாத்து தான் பொண்ணுங்க லவ் பண்ணுவாங்களா? சரியாபோச்சு போங்க.