Tuesday 10 November 2009

ஒபமாவும் உன் தெரு வார்டு மெம்பரும் ...!





















"அண்ணா" என்றான் ....
வினாடி வினாவில் முதல் மதிப்பெண் ...!
நான் 'சட்டை' என்றேன் ....
'shirt' என்றான் .....!
தெரியாது என்றேன் ....
'shit' என்றான்...!

harry potter தெரியுமாம் .........
ராமகிருஷ்ணனின் யாமம் தெரியாதாம்...!

nostradamus தெரியுமா என்றான் .....
அகத்தியன் தெரியுமா என்றேன் ....!

poem எழுதுவேன் என்றான்
கவிதை எழுதுவேன் என்றேன்...!

cricket ஆடுவானாம் ......
கபடி ஆடுவேன் என்றேன் ...!

OBAMA பற்றி பேசினான் ......
உன் தெரு ward member தெரியுமா என்றேன் ...!

coke குடிப்பேன் என்றான் ..........
வயற்றில் பூச்சி இருக்கிறதா என்றேன் .....!

நான் படித்திருக்கிறேன் என்றான் .......
உங்கள் வேலையை பாருங்கள் என்றான் .....
"எழுத்துக்களுடன் அறிமுகம் மட்டுமே படிப்பு ஆகாது" என்றேன் .....

முறைத்தான் ....
புத்தகங்களை வாசி.......என்றான் ....
மனிதனை நேசி என்றேன் ...!

இதன் பெயர் 'அறிவு' என்றான் .....
நான் 'அடிமை' என்றேன் ....!

'அண்ணா' என்று ஆரம்பித்து ..........
'போடா' என்று முடித்தான் .........!

18 comments:

தேவன் said...

me the first

தேவன் said...

நல்லா இருக்குன்னேன் உங்க கத நான் சத்தியமா படிச்சுட்டுதான் சொல்றேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி கேசவன் வருகைக்கு

அகல்விளக்கு said...

ரைட்டு...

vasu balaji said...

/
இதன் பெயர் 'அறிவு' என்றான் .....
நான் 'அடிமை' என்றேன் ....!

'அண்ணா' என்று ஆரம்பித்து ..........
'போடா' என்று முடித்தான் .........!/

நச்சுன்னு குத்து! சூப்பர்ப்.

இன்றைய கவிதை said...

//நான் 'சட்டை' என்றேன் ....
'shirt' என்றான் .....!
தெரியாது என்றேன் ....
'shit' என்றான்...! //

கலக்குங்க நண்பரே!

-கேயார்

thiyaa said...

poem எழுதுவேன் என்றான்
கவிதை எழுதுவேன் என்றேன்...!

cricket ஆடுவானாம் ......
கபடி ஆடுவேன் என்றேன் ...!

OBAMA பற்றி பேசினான் ......
உன் தெரு ward member தெரியுமா என்றேன் ..

//


கடி ஜோக் போல்
கவிதை அருமை

கலகலப்ரியா said...

:-)... நல்லா இருக்கு..!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல குத்துவிட்ருக்கீங்க...

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் கார்த்திக்..

தோழரே உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி மலிக்கா பெற்றுக்கொள்கிறேன்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி அகல் விளக்கு வானம்பாடிகள் பிரியா தியா வசந்த் இன்றைய கவிதை

புலவன் புலிகேசி said...

//coke குடிப்பேன் என்றான் ..........
வயற்றில் பூச்சி இருக்கிறதா என்றேன் .....!
//

சூப்பரு.......நல்ல பன்ச்...

க.பாலாசி said...

//முறைத்தான் ....
புத்தகங்களை வாசி.......என்றான் ....
மனிதனை நேசி என்றேன் ...!//

சரியான சாட்டையடிகள் நண்பா....உங்களது முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

ஹேமா said...

கவிதையில் வித்தியாசமான முயற்சி.

ஊடகன் said...

//
இதன் பெயர் 'அறிவு' என்றான் .....
நான் 'அடிமை' என்றேன் ....!//

அவன் மட்டுமல்ல இன்னும் எண்ணற்றோர் இதை அடிமையாக எண்ணாமல் அறிவாக எண்ணுகின்றனர்...........

பிரபாகர் said...

நிறைய பன்ச் கார்த்திக், நல்லாருக்கு.

பிரபாகர்.

ஜெனோவா said...

ரசித்தேன் நண்பரே !

வாழ்த்துக்கள்