Monday 28 December 2009

ஓடிப்போலாமா சொல்லித்தரும் காதல்



















காதலன் காதலிக்கிறான் ஓடிப்போகிறார்கள்,இருவரும் ஓடிப்போகிறார்கள்,இருவரும் தனி தனியாக ஓடுகிறார்கள் ,காதலன் காதலியுடன் சேர்ந்தானா என்பதே கதை. கதாநாயகன் முதல் காட்சியில் படித்துக்கொண்டே இருக்கிறான்,விளையாடும் போது கூட படிக்கிறான் என்னடா என்று பார்த்தால் அவன் படிப்பதற்கு காரணம் ஒரு பெண் சந்தியா. எப்பொழுதுமே படிக்காத கதாநாயகன் காதலுக்காக படிக்கிறான்.அவளுக்காக அவள் வீடு பக்கத்திலேயே வீட்டை பார்க்கிறான்.அவளிடம் நட்பை வளர்க்கிறான். பொய் சொல்கிறான் தனக்கு படிப்பு நன்றாய் வருமென்று,ஒரு நாள் அவன் அம்மா இவனுக்கு படிப்பு வரவே வராது என்று சொல்ல??????இவன் அவளிடம் காதலை சொல்ல??அவள் நட்பாய் இருப்போம் உனக்கு படிப்பு வரவில்லை தகுதி இல்லை என்கிறாள்.காதலிக்காக படிக்கிறான், அவள் வேறு வீட்டு பிரச்சனைக்காக வீட்டை விட்டு ஓட,இவன் அதை வேவு பார்த்து பின் தொடர்கிறான். பிளாட்டில் இருவரும் சேர்ந்து ஓடுகிறார்கள் என்றே நம்புகிறார்கள்."

இடைவெளி முன்பாய் ஒரு காட்சி இவள் ஓடும் பேருந்தில் கதாநாயகன் ஏறுகிறான்,
மூஞ்சியை மறைத்துக்கொண்டு,அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.அப்பொழுது ஒருவர் கேட்கிறார் "ஏன் பா அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு இருக்க" அதற்கு இவன் சொல்கிறான் "அவ என் காதலின்னு நாங்க ரெண்டு பேரும் ஒடரோம்னு" "ஏன் சேர்ந்து போலாமேன்னு" அவர் கேட்க. "நான் வர்றது அவளுக்கே தெரியாது" என்கிறான்.திரை அரங்கு கலகலக்கிறது.

படம் ஜனரஞ்சகமாய் நன்றாய் இருக்கிறது.நன்றாய் இருக்கிறது. காதலுக்காய் படிக்கிறான் எல்லாம் சரி.ஆனால் படிப்பதற்காகவே காதலிக்க முடியுமா????????தகுதி இருப்பவன் காதலிக்கலாம் என்ற மேட்டுக்குடி பார்வை படத்தில் உலா வருகிறது........தகுதி முக்கியமே ஆனால் தகுதி மட்டுமே முக்கியம் என்று சொல்வது அபத்தம்.......!!!!நீ படிக்கவே மாட்டிங்கற அதனால உனக்கு என்ன தகுதி இருக்கு நாம நண்பர்களாய் இருப்போம் அப்படின்னு காதலி சொல்றா. அப்ப பொருள் முக்கியத்துவம் பெருது. காதலை
அற்பமாய் சித்தரிக்கும் போக்கு தமிழ் படங்களில் நிறையவே நிரம்பி இருக்கிறது.

இரண்டாவது பாதியில் நாயகன் காதலிக்கிறான் என்று தெரியும் ,இவளுக்கும் அவனை பிடிக்கும். ஆனாலும் அவன் மாமா பையனுக்கு டெஸ்ட் வைப்பாள்,ஐஸ்கிரீம் வைத்து. இருவரையும் ஒப்பிடுவாள் ஒப்பிட்டு இவனே சரி என்று முடிவுக்கு வருவாள். இது எப்படி காதலாகும்.ஐஸ்கிரீம் மாமா மகன் வாங்கித்தந்தால் அவன் பின்னாடி போவாளா...........???????? அப்ப வேறு ஒருவன் இதை விட நன்றாய் வந்தால் அவன் பின் செல்வாளா. தப்பு தப்பான விஷயங்களை காதல் என்று சொல்லும்,அந்த படத்தின் ரசிகனிடம் ஒரு தப்பான பிம்பத்தை உருவாக்குகிறது.

இந்த மாதிரி படங்கள் ஊடகங்கள் தப்பான காதலை சொல்லித்தருகின்றன.....
.படம் ஆனால் பொழுதுப்போக்காக நன்றாகவே உள்ளது.

5 comments:

sarwan said...

super thala

sarwan said...

super thala

பிரபாகர் said...

உனது விமர்சனத்தை படித்து சந்தோசமாயிருக்கு கார்த்தி. இது போல் எழுது!

சந்தோஷமாய்,
அண்ணன்...

ஸ்ரீநி said...

sandhyaa vukku idhu kadaisi padama ???

ஸ்ரீராம். said...

இதுல ஒண்ணும் தப்பு இல்லை...நல்ல வேலை அவள் இங்கி பிங்கி பாங்கி போட்டு முடிவு பண்ணலை...!!