Thursday 31 December 2009

வேட்டைக்காரன்,ஆதவன்,கந்தசாமி ..!


















இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.பண்டிகை நாட்களை தொலைக்காட்சி ஆக்கிரமிக்கின்றன. நமிதாவிற்கும் சுததந்திர தினத்திற்கும் என்ன சம்பந்தம் என்று என் நண்பனிடம் கேட்டேன்.தொலைக்காட்சியில் நமிதா பேட்டி ஓடிக்கொண்டிருந்தது.அவர் ஆடையுடன் இருந்து சுதந்திரம் பெற்றாராம்.என்ன சொல்ல????????குழந்தைகள் தொலைக்காட்சியில் ஒளிந்து கொள்வதும்,தொலைக்காட்சிகள் வக்கிர புத்தியை திணிப்பதும்
நடந்துகொண்டே இருக்கிறது. எங்கள் அறையில் தொலைக்காட்சி இல்லை,நண்பர்களுடம் நன்றாய் கொண்டாடினோம்.


நான் படங்கள் அதிகமாய் பார்ப்பேன் ,பட விநியோகஸ்தர் போல அரங்குகளில் இருக்கைகளை எண்ணுவேன்....ஒரு படம் எங்கு எல்லாம் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது என்று தகவல் சேர்ப்பேன்..இந்த வருடத்தில் போன வருடத்தை போல சிறப்பான படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம்.....திரை துறை பெரிய லாபம் பெற வில்லை. ரஜினி அஜித் படங்கள் வரவில்லை விஜய் படம் வந்தாலும் மாபெரும் தோல்வியை சந்திக்கிறது.விஜய் படம் வெற்றி பெற்றது இல்லை average என்று சொல்கிறார்கள்.........சென்னையில் வேண்டுமானால் அப்படி அரங்கு நிறையலாம் ...சென்னையை தாண்டினால் படம் நன்றாக இல்லை என்றால் மதிய காட்சியே காத்தாடும்......எனக்கு இந்த அனுபவம் ஆழ்வார்,வில்லு,வசீகரா படத்தில் ஏற்பட்டுள்ளது.

எப்படி வேட்டைக்காரன் வெற்றி என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் முப்பது கோடியாவது வியாபாரம் ஆகி இருக்கும்,சென்னையில் இரண்டு கோடி வசூல் என்று காட்டுகிறது இணையதளங்கள்,சென்னையை போல மற்ற ஊர்களில் அனைத்து காட்சிகளும் அரங்கு நிறையாது, என்பது சதவிகிதம் நிறைந்தாலே பெரிய வெற்றி. நான் மதுரையில் நிறைய பெரிய நடிகர்கள் படத்தை வெறும் முப்பது நாற்பது பெயருடன் பார்த்திருக்கிறேன்......முதல் நாள் கூட்டம் இருக்கும்......முதல் காட்சி கூட திரைஅரங்கில் டிக்கெட் வாங்கி பார்க்கலாம் ரஜினி,அஜித் ,விஜய் போன்ற படங்களை தவிர. இரண்டாவது நாள் படம் நன்றாய் இருந்தால் தான் கூட்டம் இருக்கும்.

வேட்டைக்காரன் average வர வேண்டும் என்றாலே முப்பது கோடிக்கு மேல் ஒரு ரூபாயாவது சம்பாதிக்க வேண்டாமா......கேட்டால் வெளி நாடு என்கிறார்கள்.வெளி நாட்டு மக்கள் இணையத்தில் விமர்சனம் படித்து விட்டு நன்றாய் இருந்தால் தான் போகிறார்கள்.அவர்களுக்கு விமர்சனம் உடனுக்குடன் கிடைக்கிறது.எனக்கு தெரிந்து வில்லு opening விட வேட்டைக்காரன் நாற்பது சதவிகிதம் தான் opening இருந்தது UK நாட்டில் . opening இல்லை என்றால் வெளிநாடுகளில் எப்படி சம்பாதிக்கும். www . boxofficemojo .com இதில் படங்கள் எப்படி வெளிநாடுகளில் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்

வெற்றி தோல்வி சகஜம் தான் ..........ஏன் தோல்வி என்று ஒத்துக்கொள்ள வேண்டியது தானே???????நம் மக்கள் இன்னும் நூறு நாள் இருநூறு மோகத்தில் இருக்கிறார்கள்.நீங்கள் அரங்கிற்கு வாடகை கொடுத்தால் எந்த திரையரங்கிலும் உங்கள் படமும் நூறு நாள் ஓடும்....
முன்பெல்லாம் தமிழகத்தில் ஐம்பது பிரிண்ட் போடப்பட்டால் அதிகம் ஆனால் இப்பொழுது மாஸ் ஹீரோ படம் என்றால் தமிழகத்தில் 200 பிரிண்ட் போடப்படுகிறது.

இது எல்லாம் பரவாயில்லை ....கந்தசாமி சிவாஜி வசூலை தாண்டப்பகிறது என்று பித்தலாட்டம் செய்கிறார்கள்......அதுவும் இந்த சூர்யா விக்ரம் போன்ற நடிகர்கள் தோல்வியை ஒத்துக்கொள்வதில்லை.படம் பார்த்து மொக்கை என்று பேசிக்கொண்டிருப்பார்கள்
அப்பொழுது coffe with anu நிகழ்ச்சியில் விக்ரம் தோன்றி படம் நன்றாய் உள்ளது so nice yaa என்பார்.எரிச்சலாய் இருக்கும்......இதை போன்றே ஆதவன் படம் வந்த போது சூர்யா வந்து கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தார். ஏன் உங்களை நம்பும் ரசிகனை இப்படி ஏமாற்றலாமா????????

நண்பர்களே நீங்களே சொல்லுங்கள் .......
1 வேட்டைக்காரன்
2 ஆதவன்
3 கந்தசாமி
வெற்றிப்படமா ....?

7 comments:

Paarvai said...

I have noticed that Vetaikaran didn't do well in canada. Our Eelam people had boycott the Movie except vijay fans

ஸ்ரீராம். said...

ஒரு படத்தில் நடித்து கோடி பணம் பார்த்து விட்ட கதாநாயகனுக்கு அது வெற்றிப் படம்தான்... தலை எழுத்தெல்லாம் ரசிகப் பெருமக்களுக்குதான்...என் மகன்கள் வில்லு படமே சூப்பர் என்று சொல்லக் கூடிய ரசிகக் குஞ்சுகள்...என்ன செய்ய?

angel said...

indru ungaluku nan oru kutty athirchi seithirukiren enavendru kandupidyungal

priyamudanprabu said...

ரசினி ரசிகருக்கு ஏன் விஜய் பிடிப்பதில்லை???


(எனக்கு ரெண்டு மசால்க வியபாரியையும் பிடிக்காது)

CSB said...

aadhavan seems to be a low budget movie but collected more than what is required to be a HIT. Sifi, behindwoods accepted Aadhavan as HIT within 2 weeks.

இனியாள் said...

Nalla ilakkiyangalaiyum cinemavin veru konangalaiyum sollalame thozhar, neengal koori irupathu pola ivai anaithum mattamana padangal thaan athanaal enna ivai anaithum verum poluthu pokku sithirangal. ungalidam innum athigamaga ethirparkiren, ennai kadantha sila pathivugalil ematrukireergal.

thiyaa said...

mm...